Sufism Related Quotes

Narrated 'Abis bin Rabia: Umar came near the Black Stone and kissed it and said, "No doubt, I know that you are a stone and can neither benefit anyone nor harm anyone. Had I not seen God's Apostle kissing you, I would not have kissed you."

“I pass by these walls, the walls of Layla

And I kiss this wall and that wall
It’s not Love of the houses that has taken my heart
But of the One who dwells in those houses
- Majnun

(From the classical Arab story (master piece) by Nizami Ganjavi)

"The Kaaba is in the middle of the world.
All faces turn toward it.
Take it away. See!
each is worshiping the soul of each." - Shams of Tabriz

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Sunday, February 05, 2012

மவ்லித் - மீலாதுந் நபி - நினைவு கூறல்




(Sister of Islam "Hooriya Rafeeq" from Pakistan)

மவ்லித், மீலாதுந்நபி இன்றைக்கு ஒரு விவாததற்குறிய பொருளாகி விட்டது

‘நபி வழி நடக்காத இவர்களுக்கு விழா என்ன ஒரு கேடு..”

 “நபி பிறந்த தினமும் மறைந்த தினமும் ஒரே நாள் தான். இவர்கள் பிறந்ததற்காக கொண்டாடுவது முரணாக இருக்கிறது”

”கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை”

“எந்த நபியிடத்திலும் வேற்றுமை பாராட்டக் கூடாது என்று குரானில் வரும் போது இவர்கள் இந்த நபிக்கு மட்டும் எப்படி விழா எடுக்கலாம்”

“இது பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத ஒரு புதுமை - பித் அத்”

- இப்படியாக இவர்களின் பிறந்த தினத்திலிருந்து இதே பல்லவியை தான் (”ஷிர்க்”கை விட்டுட்டேனே - இது ஷிர்க்) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி அறியாத நிலையிலிருந்து கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

இவர்கள் எந்த காரணம் கொண்டும் இந்த மாதத்தை நபி பிறந்த தினத்தை அனுசரிக்காமல் போகட்டும்.. அதை பற்றி தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை..

ஆனால் ‘மவ்லித்’ என்று வரும் போது எங்களின் அதாவது இதனை அணுசரிக்கும் என் போன்றோரின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று விளக்குவதில் வார்த்தைகள் தட்டுபாடு ஏற்படுவது உண்டு.

உணர்வுகளை எந்த வார்த்தையில் சொல்லி அடைத்து போட முடியும்?

மீலாத் என்றமுஸ்லீம்கள் கூடும் ஒரு நிகழ்வை குறிக்கும்  வார்த்தையை புரிந்து கொள்வதற்கு இதையொத்த வேறு வார்த்தைகளை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்படலாம்.

பள்ளிகூடத்தில் பரீட்சைக்கு படிக்கும் போது மாணவர்கள் குரூப்பாக சேர்ந்து படிப்பதுண்டு. (படிக்காமல் குறட்டை விட்டு பரீட்சையில் கோட்டையும் விடுவதுமுண்டு - அது வேறு விஷயம்) குரூப் ஸடடி என்று சொல்வோம்.

இதையே முஸ்லீம்கள் கூடி இஸ்லாம் சார்ந்த செய்திகளை பேசினால் ’மஜ்லிஸ்’ அல்லது ‘ஹலகா’ என்று சொல்வதுண்டு.

மீலாத் என்பதன் விளக்கம் அதன் பெயரில் இல்லை... இந்த தினத்தை ஒரு reference point ஆக வைத்து கூடுகின்ற மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது, இந்த தினத்தில் கலந்து கொள்பவர்களின் உணர்வுகள் எங்கனம் இருக்கின்றது என்பதில் தான் இருக்கிறது.


இறைவன் வந்து உங்கள் செயல்களையோ அல்லது சொற்களையோ பார்ப்பதில்லை. அவன் உங்களின் உள்ளங்களை தான் பார்க்கின்றான். 


நாங்கள் ஹிஜ்ரி ஆண்டை ஒரு ஆண்டு கனக்காக நபிகள் நாயகம் அனுசரிக்காத போதும் ஏற்றுக் கொண்டு தானிருக்கிறோம்.


இதனால் அவர்களுக்கு மாறு செய்கிறோம், இல்லாத புதுமையை செய்து விட்டோம் என்றும் அர்த்தமாகாது. இது ஒன்றும் வெறுக்கத்தக்கதோ மார்க்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் செயலோ அல்ல.


மீலாதும் இதே போல் தான் எங்களுக்கு - நாங்கள் ஒன்றும் அருவருக்கத்தக்க காரியங்களை செய்யவில்லை. மற்ற நாட்களில் கூடாமல் போவதற்கு எங்களுக்கு ஏதேதோ உலக excuseகள் உள்ளன. 


இந்த நாளில் நாங்கள் இத்தகைய excuseகளை தூக்கி வைத்து விட்டு ஒன்று கூடுகிறோம். 


உவைஸ் கர்னி (றலி) என்பவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் பல் உடைந்து விட்டது என்று கேள்விபட்டவுடன் எந்த பல் என்று தெரியாததால் தனது அத்தனை பல்லையும் உடைத்து கொண்டார்களாம்.


இது போன்ற அன்பு எல்லாம் சொல்லி கொடுத்தெல்லாம் வராது. கிதாபுல படிச்சும் வராது. அல்லாஹ் எந்த உள்ளத்தை பார்ப்பதாக சொல்கிறானோ அந்த உள்ளத்தில் கருவுற்று பிறந்து வளரனும். அப்படி வருவதற்கும் இறைவனின் அருள் வேண்டும்.



பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீன நகருக்கு சென்று ஆறு ஆண்டுகள் கழித்து மக்கா நோக்கி திரும்புகிறார்கள்.


அவ்வாறு ஆயிரத்து நானூறு பேருடன் வந்த போது ஹுதைபியா என்ற இடத்தில் இறைநாட்டப்படிகூடாரமடித்து தங்கினார்கள் என்பது நமக்கு தெரிந்த செய்தி தான்.

அப்போது மக்கத்துகுறைஷி தரப்புகளிடமிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் உள்ளே வர அனுமதிக்க கூடாது என்று சொல்லி திருப்பி அனுப்ப பல பேர் வந்து பேசினார்கள். அதில் பேசிவிட்டு சென்ற ஒருவர் குறைஷிகளிடம் திரும்பி பெருமானார் (ஸல்) அவர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த அன்பை இவ்வாறு விளக்கினார்...

“கண்டேன், கண்டேன், ரோமானிய மன்னாதி மன்னன் கெய்ஸரின் அரசவையையும் கண்டேன்.
கண்டேன், கண்டேன் பாரசீகப் பேரரசன் கிஸ்ராவின் பாராளுமன்றத்தையும் கண்டேஎன்
அங்கு கூட அவர்களின் ஏவலர்கள் கூட இரு கை ஒடுக்கி வாயைக் கையில் புகைத்து நின்ற காட்சியை காணவில்லை
முஹம்மதின் (ஸல்) முன்னிலையில் தான் நான் அக்காட்சிகளைக் கண்டேன்..

- என்று சொல்லி விட்டு தொடர்கிறார்...

“அவர்களின் உமிழ் நீரைக் கையிலேந்தி உடலிலே பூசிக்கொள்பவர் எத்தனை பேர்?
அவர்களின் உளு செய்யும் நீர் தரையிலே துளிகூட விழாது கையிலே தாங்கித் தங்களின் உடலிலே தடவிக் கொள்பவர் எத்தனை பேர்? என்று வாயார்ந்தார் அவர்.”

இந்த பிரியமெல்லாம் கிதாபை பார்த்து தான் வருமா? இல்லை பெருமானார் (சல்) அவர்கள் தான் அப்படி செய்ய சொல்லி தான் வந்ததா?

அருமை சஹாபாக்களை பற்றி “அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்..” என்று இப்லீஸை விட அறிவு கேள்விகள் தொடுக்கும் இப்லீஸின் அண்ணன்மார்களுக்கும் தம்பிமார்களுக்கும் அன்பு பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. புரிய வைக்க முற்படுவதிலும் அர்த்தமில்லை..


மீலாது என்பது ‘ஹல்கா”வை போல் கூட அல்ல... உதாரணமாக ஹல்காவுக்கு தேவைப்படுவது போல் pre-requisite இதற்கு தேவை இல்லை.. குறிப்பிட்ட படிப்பு, குறிப்பிட்ட அறிவு இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை.


மீலாதில் கலந்து கொள்ள ஒரே ஒரு Criteria மட்டுமே உண்டு...  ஒரே ஒரு அடிப்படை காரணம் மட்டுமே உண்டு.. அது பெருமானார் (சல்) அவர்களின் மீதுள்ள அளவு கடந்த அன்பு மட்டுமே... அன்பு மட்டுமே.. அன்பு மட்டுமே.. (ஆதாரம் அல்ல)


பின் குறிப்பு:


நாகூர் தர்ஹாவில் நடந்த மீலாது விழா குரான் ஷரீஃப் ஸூரா மனப்பாடமாக கிராஅத்தாக ஓதும் போட்டியில் எனது தங்கையின் மகனார் ஷகீல் அஹ்மதுக்கு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது... அல்ஹம்துலில்லாஹ்...

இணைப்பு:

http://www.mysticsaint.info/2012/01/message-rabiul-awwal-milad-nabi.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+mysticsaint+%28Inspirations+and+Creative+Thoughts%29

Saturday, January 07, 2012

திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ் 2


இணைப்பு: திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ் 1


அம்மா, அண்ணன், சொந்தங்கள், நண்பர்கள் என்று யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து வெற்றி கொடியை பறக்க விட்டவர் யாரென்று கேட்டால் எல்லோருக்கும் நடிகர் அஜித்தின் ஞாபகம் வரலாம், ஆனால் எனக்கு கே.பாக்யராஜ் அவர்களின் ஞாபகம் தான் வரும்.

சாதாரண நிலையிலிருந்து யாருடைய தயையும் இல்லாமல்  தனது தனிப்பெரும் திறமையினால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மாபெரும் கலைஞர் இவர். 

இவருடைய படங்களை கேள்வி - பதில் பகுதிகளாக அதாவது இடைவேளை வரை கேள்வி பகுதியாகவும் இடைவேளைக்கு பின்பு அந்த கேள்விகளுக்குறிய பதில் பகுதியாகவும் என்னால் பார்க்க முடிகிறது. 

சிறப்பான கேள்விகளை தேர்ந்தெடுத்து நகைச்சுவை, குடும்ப உறவுகள், இனிய பாடல்கள் கலந்து கேள்விகளை அடுக்கி கொண்டே வருவார், பிறகு அழுத்தமான, ஆழமான, நெகிழ வைக்கும் காட்சிகளை கொண்டு அந்த கேள்விகளுக்கான விடையை தெளிவாக சொல்லி முடிப்பார்.

தமிழ் சினிமாவில் வந்த காதல் படங்களில் அது கல்லூரி காதலாகட்டும், அலுவலக காதலாகட்டும், ஏழை - பணக்காரன், வெவ்வேறு மதங்கள், ஜாதிகள், இப்படி எத்தனை எத்தனையோ வந்து குவிந்து கொண்டிருக்கும் காதல் படங்களிலேயே இது வரை நான் பார்த்த படங்களில் சிறந்த படம் என்று ஒரு காதல் படத்தை கேட்டால் அது இவர் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை தான் சொல்வேன்.

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்

அந்த ஏழு நாட்கள் படத்தில் ராஜேஷ் ஒரு வசனம் சொல்வார், “பிஞ்சு மனசுல எதுவும் ஆழமா பதிஞ்சிடும்...” என்று. அது போல் வாட்ச்மேன் மகனான ராஜா தன்னுடைய முதலாளி மகளான ராதாவோடு சிறு வயதில் பள்ளிகூடத்தில் ஒன்றாக படித்த போது ஏற்பட்ட பழக்கத்தை பெரியவனான பின்பும் காதல் என்று கற்பனை வளர்த்து கொண்டு வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய அப்பாவாக வருபவர் கல்லாபெட்டி சிங்காரம். என்ன நடிகர் சார் இவர்? - இவரின் முதல் அறிமுக காட்சியில் இவர் தான் முதலாளி என்பது போல் காட்டப்படும் பாருங்கள்.. நகைச்சுவைக்கு நான் கியாரண்டி கையெழுத்து போட்டு தர்ரேன்.

பழகியவை ஆழமாக பதிவதற்கு அதே ஊரில் தொடர்ந்து வளர்ந்து வரும் சூழலும் காரணமாக அமைந்திருக்கிறது,ஆனால் ராதாவோ சிறு வயதிலேயே வெளியூருக்கு படிக்க சென்று விட்டு பெரியவளானதும் திரும்ப அந்த ஊருக்கு வருகிறாள். 

ராஜா தனது காதலியாக தான் ராதா தன்னை காண வருகிறாள் என்று எண்ணிக் கொண்டு பந்தாவாக டிரஸ், கேப் எல்லாம் போட்டுக் கொண்டு இரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அவரிடம், “ஐயம் ராஜா.. வாட்ச்மேன் சன் ராஜா..” என்று பஞ்ச் டயலாக் பேச - அவரோ, “பெட்டியெல்லாம் எடுத்துக்குங்க..” என்று சொல்கிறார்.

ராதா எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்பதை எவ்வளவு அழுத்தமாக சொல்லியிருப்பார். இவரின் காட்சிஅமைப்பில் ஒன்றை கவனிக்கலாம், ஒரு அழுத்தமான காட்சியை சொல்வதற்கு முன்பு அதற்கு முந்தைய லீட் காட்சியில் நகைச்சுவையை வைத்திருப்பார் - அதெல்லாம் பார்த்து அனுபவிக்கணும்.

உள்ள கதவை நீ மெல்ல திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் 
                                                   - என்று ஏங்கியபடி கவிபாடுகிறான் ராஜா.

ஒரு கட்டத்தில் ராதாவுக்கு ராஜா தன்னை தான் காதலிக்கிறார் என்று தெரிய வரும் போது, “உங்களோட லவ் எவ்வளவு சின்சியரானது, டீப்பானதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, ஆனால் உங்க முட்டாள்தனத்தை தான் என்னால ஜூரணிக்க முடியல.. Let's forget the past..... எனக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. எனக்கு ஃபிக்ஸ் பண்ண மாப்பிள்ளை நாளைக்கி வரப் போறார்..” என்று கேள்வி பகுதியை நிறைவு செய்கிறார். 
(இப்போது பாக்யராஜ் தன்னை காதலிக்க சொல்லி கொஞ்சம் டிரை பண்ணி பாருங்களேன் என்றெல்லாம் சொல்லி பரிதாபப்பட வைப்பார்.)

கேள்வி என்னவென்றால் என்ன காரணம் இருந்தால் ராதாவுக்கு ராஜா மீது காதல் வரும் என்பதே அந்த கேள்வி.

இப்பொழுது ராதாவுக்கு நிச்சயம் செய்திருப்பவரும் அந்த ஊருக்கு வருகிறார். இவர் பணக்காரர், மெத்த படித்தவர், இப்படிபட்டவர்களுக்கு பணக்காரர்களோடு பழகும் முறையை பற்றி மட்டுமே தெரியும் அதுமட்டுமல்லாமல் நாகரீகம் என்ற பெயரில் எளியவர்களை அவமானப்படுத்துவதும் மட்டுமே அடையாளமாக கொண்ட பணத்தோடு திமிரும் படைத்த கூட்டத்தை சார்ந்தவர்களில் இவரும் ஒருவர். 

திரைக்கதை வைத்தியர் தன் வித்தையை காட்டும் நேரம்...

அதில் முக்கியமாக..

மழை கொட்டிக் கொண்டிருக்கும் இரவு பொழுதில் ஒரு ரிசப்சனுக்கு போயிட்டு ராதாவும் அவரது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் காரில் திரும்பி வருவார்கள். காரை ராஜா தான் ஓட்டி வருவார். வரும் வழியில் கார் பழுதாகி நின்று விடும். அதை தொடர்ந்து ராதாவும் அந்த நிச்சயித்தவரும் டிராவலர்ஸ் பங்களாவிற்கு செல்வார்கள்.

அங்கே டிரஸ் சேஞ்ச் பண்ண அறைக்குள் ராதா செல்ல அதை நிச்சயித்தவர் சாவி இடுக்கில் எட்டி பார்க்கிறார். அவருடைய நிழல் வெளிச்சத்துக்கு வந்ததை நிழலை வைத்து கண்டு கொண்ட ராதா சட்டென்று தனது ஆடையை சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறார்.

காரை பழுது செய்து கொண்டிருக்கும் ராஜாவிடம் வீட்டிற்கு போகலாம் என்று சைக்கிளில் வரும் போது மழையிருட்டில் சைக்கிள் கீழே விழுந்து புடவை சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது.

ராஜா புடவையை எடுக்க முயற்சிக்கும் போது இன்னொரு காரின் விளக்கு வெளிச்சம் புடவை இல்லாமல் ரவிக்கையோடு நனைந்து இருக்கும் ராதா மீது அடிக்கிறது. ராஜா கோபப்பட்டு கல்லெடுத்து அடிக்க வர கார் பின்வாங்குகிறது.

அதை தொடர்ந்து.. சின்ன வயதில் ராஜாவும் ராதாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை டிரஸர் பண்ணி வைத்திருந்த ராஜாவிடமிருந்து ராதா வாங்கி, ராதா அவரை மட்டும் தனியாக வெட்டி பிரித்து வைத்திருந்திருப்பார். இப்போது பழுதாகி நின்ற காரை நிச்சயிக்கப்பட்டவர் சரி செய்து எடுத்து வரும் போது டேஷ் போர்டில் ராஜாவின் போட்டோ இருப்பதை பார்த்து எடுத்து வந்து இரண்டையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து பார்ப்பார்.

நிச்சயிக்கப்பட்ட அவர் ராதாவிடம் சராமரியாக கேள்விகள் கேட்கிறார், இறுதியாக, “... ஆஸ்திக்கு என்னையும் ஆசைக்கு அவனையும் செட் அப் பண்ற உன்னோட ஸ்டைல இன்னையோட விட்டுடு..” என்று சொல்லி விட்டு போட்டோ ஆல்பத்தை விட்டு எரிகிறார்.

போட்டோக்கள் கீழே சிதறி கிடக்கிறது. அதில் ஒரு போட்டோ ராதா சிறு வயதில் எடுத்த போட்டோ, அதை பற்றி முன்பு ராஜாவிடம் காட்டி, “இது என்ன டிரஸ் ஒரு மாதிரியா இருக்கு..” என்று கேட்க..

ராஜா பதிலளிப்பார், “ஐயையோ, அது டிரஸ் இல்லீங்க... சின்ன வயசுல நீங்க டிரஸ் இல்லாம எடுத்த போட்டோ.. இப்ப நீங்க பெரிய பொன்னாயிட்டீங்க.. அத அப்படியே பாத்தா நல்லாயிருக்காதுண்ணு நான் தான் இங்க்லேயே டிரஸ் பண்ணி விட்டேன்..”

- வேறு என்ன வேணுங்கறீங்க... ”ஐ லவ் யு ராஜா..” - ராஜாவின் அந்த நாள் பொன்னான நாள் தான்.

இதற்கிடையே பலவித காரணங்களால் தனது காதலை தனது தந்தையிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள் ராதா. ஆனால் ராதாவுக்கு நிச்சயிக்கப்பட்டவரின் தந்தையான அந்த பணக்கார ஜெண்டில்மேனோ ராதாவின் டைரியை படித்து படத்தோட மொத்த கதை திரைக்கதையையும் தெரிந்து கொள்கிறார்.

அவர் ராதாவின் காதலை கைகூட வைக்க நினைக்கும் போது அவரது மகன் குறிக்கிடுகிறார், “பத்திரிக்கை கொடுத்துட்டு இப்ப இப்படி முடிவெடுத்தா நம்ம ஃபேமிலி ஸ்டேட்டஸ் என்னாவுறது..” என்கிறார்

அதற்கு அந்த ஜெண்டில்மேன், “......... நானும் உங்க அம்மாவும் 40 இயர்ஸுக்கு மேலா தாம்பத்யம் நடத்தியிருக்கிறோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒரு நாள் கூட லைட் எறிஞ்சதேயில்லை.. அப்படிப்பட்ட எங்களுக்கு பொறந்த நீ.. ஒரு பொண்ணு பாத்ரூம்ல குளிக்கும் போது எட்டி பார்த்திருக்கிறியே.. அதுல போகாத பிரஸ்டிஜா இதுல போவ போவுது... ...... 

கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்..”  என்று பதில் சொல்கிறார் திரைக்கதை வைத்தியர்.

பிறந்த நாள் வாழ்த்துகள், சார்..

Wednesday, January 04, 2012

சூஃபி பாடல் - அல்லாஹ் கே பந்தே - கைலாஷ் கெர் பாடிய பாடல்

படம்: வைசா பி ஹோதா ஹெய்ன் (பார்ட் 2) (அர்த்தம்: அப்படியும் நடப்பதுண்டு!)

பாடல்: விஷால் தத்லானி

இசை: விஷால் - சேகர்

பாடகர்: கைலாஷ் கெர்



Toota toota ek parinda aise toota
Ke phir jud naa paaya
Loota loota kisne usko aise loota
Ke phir ud naa paaya
Girta hua woh asma se
Aakar gira zameen par
Khwabon mein phir bhi badal hi the
Woh kehta raha magar
Ke allah ke bande hasde allah ke bande
Allah ke bande hasde jo bhi ho kal phir aayega

உடைந்து நொறுங்கியது
உடைந்து நொறுங்கியது
ஒரு பறவை..!


ஆறாத காயங்களால்
நிலை குலைந்தது
அந்த பறவை


பறிபோனது
பறிபோனது
அதன் சிறகுகள்..!


பறந்து திரியும் 
தன்மை இழந்தது
அந்த பறவை


வானத்தின்
உச்சியிலிருந்து
பூமியின்
பள்ளத்தாக்கிற்கு
விழுந்து கிடக்கின்றது
இப்போது


ஆயினும்
கனவுகளின் வழியே
நம்பிக்கை மேகமாய் 
பறக்கின்றது


ஆகையினால்
அது 
தொடர்ந்து
சொல்லிக் கொண்டே
இருந்தது


”அல்லாஹ்வின் பந்துக்கள்
நீங்கள்
எனவே
மகிழ்வாய் இருங்கள்
எதுநடந்த போதிலும்
நாளை 
நமக்காகவே உள்ளது”


Kho ke aapne par hi to usne tha ud naa sikha
Gham ko aapne saath mein lele dard bhi tere kaam aayega
Allah ke bande hasde allah ke bande
Allah ke bande hasde jo bhi ho kal phir aayega

உண்மையில்
சிறகுகளை இழந்த 
பின்பு 
தான்
அது
பறக்கவே 
கற்றுக் கொண்டிருக்கிறது


உங்கள்
வலிகளை 
துயரங்களை
உங்களோடு
எப்போதும்
சேமித்து வைத்திருங்கள்


அது
உங்களுக்கு
நிறைய
கற்றுக் கொடுக்கும்



”அல்லாஹ்வின் பந்துக்கள்
நீங்கள்
எனவே
மகிழ்வாய் இருங்கள்
எதுநடந்த போதிலும்
நாளை 
நமக்காகவே உள்ளது”

Tukde tuke ho gaya tha har sapna jab woh toota
Bhikre tukdon mein allah ki marzi ka manzar paayega
Allah ke bande hasde allah ke bande
Allah ke bande hasde jo bhi ho kal phir aayega



சிறகுகளோடு 
சேர்ந்து
அதன்
கனவுகளும்
சிதறுண்டு போனது


தவிர்க்க முடியாத
இழப்புகள்
அல்லாஹ்வின் 
முடிவுகள்
ஆதலால்
அது 
அவன் முடிவை
மனதார
ஏற்றுக் கொண்டது



”அல்லாஹ்வின் பந்துக்கள்
நீங்கள் -
எனவே
மகிழ்வாய் இருங்கள்
எதுநடந்த போதிலும்
நாளை 
நமக்காகவே உள்ளது”

Wednesday, December 21, 2011

சிராதுல் முஸ்தகீன் - நேரான பாதை - Straight Path

இணைப்பு:

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=10407083&format=print&edition_id=20040708

http://nagoreismail786.blogspot.com/search/label/1%20%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE

http://www.altafsir.com/
----------------------------------------------------------------------------

நீங்க கொஞ்சமா சம்பாதிக்கணும்னா ஒரு புஸ்தகம் எழுதுங்க,  நிறைய சம்பாதிக்கணும்னா ஒரு மதத்தை உருவாக்குன்னு ஒரு அறிஞர் சொன்னாராம்

சரியாத்தான் இருக்கும் போல..

எத்தனையோ பாதைகள் இருப்பினும் ‘நேரான பாதை’ என்று குரான் ஷரீஃப் ஒரு பாதையில் செல்ல நம்மை அழைக்கிறது.

அதனை பற்றி நான் படித்தது... கேட்டது...

ஸூரத்துல் அன் ஆம் (6) - ஆடு, மாடு, ஒட்டகம்


வாக்கியம்: 151, 152, 153


151


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; 


’வாருங்கள்’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை அரபியில் ”த ஆலவ்” என்ற வார்த்தையிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


இதற்கு ‘எழுச்சி பெறுங்கள்’ என்பது போன்று அர்த்தம் கொண்டது.


அதாவது, இப்படி படிக்க வேண்டும் இதை, “வாருங்கள்.. எழுச்சி பெறுங்கள் (அடுத்த நிலைக்கு உயருதல், கம்.. ரெய்ஸ் யுவர் லெவல்), நான் ஓதிக் காண்பிக்கின்றேன்....”


அதே போல ”ஹர்ரம” என்ற வார்த்தையை தான் மேலே  ‘விலக்கியிருப்பவற்றையும்..” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

”ஹர்ரம” என்ற வார்த்தைக்கு “புனிதம்” என்பது தான் சரியான அர்த்தம் என்பது எனது கருத்தாகும்.

அதாவது, இப்படி படியுங்கள், “வாருங்கள், உங்கள் நிலைகளை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்கள் இறைவன் உங்கள் மீது விதித்திருக்கும் புனிதமான கடமைகளை நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றேன்...”

அதாவது புனிதமான அந்த கடமைகளை நான் அனுசரித்தும் வாழ்வில் பின்பற்றியும் வந்தால் நம் நிலைகளை உயர்ந்து விடும்.

அது என்ன, புனிதமான கடமைகள்...?

(1) எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; 


இணை வைத்தல் (ஷிர்க்) என்பது பங்கு போடுவது, கூட்டு சேர்ப்பது, பங்காளியாக்குவது இப்படியாக பொருள்படும்.


இதுக்கு நேரெதிரான வார்த்தை என்னவென்றால் ‘தவ்ஹீது’ - இதற்கு ‘பங்குகள் ஏதுமில்லாத’ ஏகத்தை குறிக்கும் சொல்.


முஸ்லீமான ஒவ்வொருவரும் முதன் முதலில் ‘தவ்ஹீதை’ தான் சாட்சி சொல்ல வேண்டும்.


ஆனால் இங்கே இறைவன் சாட்சி கூட சொல்ல சொல்லவில்லை, ஷிர்க்கை விட்டு விலகி விடுங்கள் என்கிறான்.

ஏனெனில் ‘தவ்ஹீது’ என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரிடத்திலும் இயற்கையாகவே இருக்கும். 

பின் வரும் வசனத்தை கவனியுங்கள்...


- ஸூரத்துல் அஃராஃப் (7) - சிகரங்கள்


172 வது வாக்கியம்


உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.


ஆக, நாம் இந்த உலகிற்கு வருமுன்னரே நாம் தவ்ஹீதை இறைவனை ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் இங்கே வந்த பிறகு அதற்கு மாறு செய்கிறோம்.

அதனால் தான் நீங்கள் தான் ஒத்துக் கொண்டீர்கள் அல்லவா? அதற்கு மாற்றமாக ஷிர்க் வைக்காதீர்கள் என்கிறான் இறைவன்.

இஜட்.ஜபருல்லாஹ் நானா சொல்வாஹா, ‘மொதல்ல கெட்டதை நீக்கணும், அப்புறம் நல்லதை நிரப்பினால் தான் நல்லது நல்லதா இருக்கும்’ என்று. உதாராணமாக, ’ஒரு அழுக்கான கிளாஸ் இருக்கு, அதில் சுத்தமான பாலை ஊத்தினால் பால் சுத்தமானதாக இருக்காது - அதனால மொதல்ல கிளாஸை சுத்தம் பண்ணனும் அப்புறமா தான் பாலை ஊத்தணும்’ என்று உதாரணம் கொடுப்பார்கள்.

அதனால மொதலில் ஷிர்க்கை விட்டு ஒழிக்கணும், இது வந்து கிளாஸை சுத்தமாக்குற மாதிரி.

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், இணை வைத்தல் என்றால் மனிதர்களை இணையாக்குவது மட்டும் தான் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.


சிலவங்க இருப்பாங்க, அவங்க ரொம்ப திமிரா எல்லாம் தெரியும் என்பது போல் பெருமானாரையும் இன்னும் ஏனைய பெரியோர்களை எல்லாம் கூட்டாளி மாதிரி பேசுகின்ற தொனி அவங்களிடத்திலே இருக்கும்.


இவர்கள் எதை தெரியுமா இறைவனுக்கு இணையாக்குகிறார்கள்..? படியுங்கள்..


- ஸூரத்துல் ஃபுர்கான் (25) - பிரித்தறிவித்தல்


43 & 44 வது வாக்கியம்


தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?


அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள். 


மன இச்சைகளை இணைவைக்கும் அவர்களுக்கு பெருமானார் எப்படி பாதுகாவலராக இருப்பார்கள்..?


அவர்கள் கால்நடைகளை விட வழி கெட்டவர்கள்.


மரியாதை தெரியாத அவர்களின் தொழுகையையோ நோன்பையோ பார்த்து ஏமாந்து விடக் கூடாது.


(2) பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; 


நன்மை என்ற தமிழ் வார்த்தை ‘இஹ்ஸான்’ என்ற அரபி வார்த்தைக்கு மொழி பெயர்ப்பாக வந்துள்ளது.

’இஹ்ஸான்’ என்றால் ‘அழகு’ என்று ஒரு அர்த்தம் உள்ளது.

அதாவது இப்படி படியுங்கள், “பெற்றோர்களுக்கு அழகானதை செய்யுங்கள்” அல்லது “பெற்றோர்களிடம் அழகாக நடந்து கொள்ளுங்கள்”

நம்ம பொறந்த ஒடனே நமக்க நாம யாரென்றே தெரியாது.பேர் கூட தெரியாது.
பசிச்சா ‘பசிக்கிது’ன்னு சொல்ல தெரியாது. அழுவ (அழுகை) தான் தெரியும்
சாப்ட வொடனே வயித்த பெறட்டுனுச்சுன்னா ‘பீ வருது’ன்னு கூட சொல்ல தெரியாது.

எல்லாத்தையும் யார் பார்த்துகிட்டா? - பெற்றோர்கள் தான். ம்மா வாப்பா தான்.

ஆனா இப்ப நாம் அப்படி இல்லை.. (இல்லை இல்லை நான் அப்டி தான், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

’நான் யார் தெரியுமா?’ - ‘என்னை பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்” என்று கர்வமாக கேட்கிறோம் - ஒரு கட்டத்தில் நமக்கு யாரென்று நமக்கே தெரியாமல் இருந்தது.

‘பசிக்குதுன்னா’ ஒடனே நல்ல ரெஸ்டாரண்ட் உள்ளே போய் வாயையும் வயிறையும் அவுத்து வுட்டுடறோம்.

தின்னது செறிச்சு வெளியே வருதுண்ணா கொள்ளைக்கு போறோம்.

எல்லாத்தையும் நாமளே செய்ய முடியிது.

- ஆனா இப்போ என்ன கவனிக்கணும்னா, 
இப்போ பெற்றோர்களை பார்த்தாக்கா, அவங்க.. வயசாயிருப்பாங்க... முதுமை அடைஞ்சி இருப்பாங்க.. இப்போ நமக்கு அவங்க குழந்தை மாதிரி.. நம்ம பொறந்த வொடனே எவ்வளவு பிரியமா அழகா பார்த்துகிட்டாங்க... அதே மாதிரி இப்போ நம்ம அந்த குழந்தைகளை அழகா பார்த்துகிடணும். கீழே படியுங்கள்..

ஸூரத்து பனீ இஸ்ராயீல் (17) - இஸ்ராயீலின் (யாகூப் நபி (அலை) அவர்களின்) சந்ததிகள்

வாக்கியம் 23 & 24

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!


இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!


பெற்றோர்களை ‘சீ’ன்னு சொல்றது பெரும் பாவம். கனிவான கண்ணியமான வார்த்தைகளை ரொம்ப மரியாதையா பேசணும். பணிவு என்னும் இறக்கையை அவர்களுக்காக தாழ்த்த வேண்டும். சின்ன வயதில் என் மீது எவ்வளவு பரிவோடு என்னை வளர்த்தார்களோ அபப்டி இறைவனே நீ அவர்கள் மீது கிருபை செய் என்று இறைஞ்ச வேண்டும்.


(3) வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; 


இந்த உலகத்துல எல்லோருக்கும் எல்லாமே நேரடியா கிடைக்காது. உங்களுக்கு கிடைப்பது எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடையாது. உங்கள் மூலமாக இன்னொருத்தருக்கு கிடைக்க வேண்டியது, உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான்.


வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொலை செய்ற அளவுக்கு போய் விடக் கூடாது. நம்பிக்கை கொள்ளணும். நாம ஹஜ்ஜுக்கு போறோம். அங்கே ‘ஸஃபா’ ‘மர்வா’ன்னு ரெண்டு மலைகள் இருக்கு.  அந்த மலைகளை பற்றி குரான் ஷரீஃபில் இப்படி வருது.


- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு

158 வது வாக்கியம்

”நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; ..............”


’ஸஃபா’ ‘மர்வா’ல என்ன விசேஷம் அது ஏன் இறைவனின் அடையாளமாவுது என்றால். அங்கே தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் மனைவி ஹாஜிரா (அலை) தாகம் வந்து அழுது துடித்த தனது குழந்தைக்கு தண்ணீர் தேடி ஓடி அலைந்தார்கள்.


தண்ணீர் மருந்துக்கும் இல்லாத பாலைவனமது. அங்கே பிள்ளை தண்ணீருக்கு அழுகின்றது. நீங்க தண்ணீரை தான் தேட வேண்டுமே தவிர குழந்தையை கொல்ல நினைக்க கூடாது.

அப்படி தேடினால்..?

அது பாலைவனமாக இருந்தாலும் தண்ணீர் ஊற்றெடுக்க தான் செய்யும். போதும் போதுங்கற அளவுக்கு அது ஊற்றெடுக்க தான் செய்யும். இது தான் இறைவனின் அடையாளம்.

இது மாதிரி எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்தி செய்ய முயல வேண்டும். கொஞ்ச நேரத்தில் அல்லது கொஞ்ச நாளில் இறைவன் உங்களுக்கு வழிகாட்டுவான். அதில் சந்தேகமேயில்லை.


(4) வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; 


இன்றைக்கு மானக்கேடானது எது என்று கண்டுபிடிப்பதே கஷ்டமாகி விட்டது.


ஆனால், இறைவன் சொல்கிறான், ”வெளிப்படையான இரகசியமான மானக்கேடான...” என்று. அதாவது என்ன அர்த்தம் என்றால், மானக்கேடானதை நீங்கள் வெளிப்படையாக செய்தாலும் சரி, இரகசியமாக அறைக்குள்ளே செய்தாலும் சரி மானக்கேடானது மானக்கேடானது தான்.

நாம் மேலே கண்டோம், இறைவன் பெற்றோர்களிடம் அழகான முறையில் நடந்து கொள்ள சொன்னதை பற்றி.

இறைவனுக்கு ‘அழகு’ தான் பிடிக்கும். அழகு என்றால் முக அழகு அல்ல. அக அழகு.

ஷைத்தானுக்கு தான் அசிங்கம் பிடிக்கும். அவன் தான் அசிங்கத்தை ஏவுவான்.

- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு

169 வது வாக்கியம்

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.


(5) அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - 


மனிதன் அறியாமல் தனது சக மனிதனுக்கு (ஓர் ஆத்மாவுக்கு அது எந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் சரியே!) தீங்கு செய்பவனாக இருக்கின்றான்.


இறைவன் ஒரு பிரதிநிதியை படைக்க போகிறேன் என்று சொன்ன போதே மலக்குகள் கேட்கிறார்கள், ‘இரத்தம் சிந்துவோரையா நீ அமைக்கப் போகிறாய்?” என்று. படியுங்கள்...



- ஸூரத்துல் பகரா (2) - பசு மாடு

30 வது வாக்கியம்


(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.


31 வது வாக்கியம்


இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.




32 வது வாக்கியம்


அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.


குரான் ஷரீஃபிலே எச்சரிக்கின்றான், ‘நியாயமானதற்கு அல்லாமல் எந்த உயிரையும் கொல்லக் கூடாது” என்று.

இன்றைக்கு கொலைகள் கேவலம் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், நிலத்துக்காகவும், அரசியலுக்காகவும், மதத்தின் பெயரை சொல்லியும் ( கொன்று விட்டு ‘அல்லஹ் அக்பர்’ என்று சொன்னாலும் நிச்சயமாக இதிலும் நியாயம் கிடையவே கிடையாது), நாட்டுக்காகவும் அல்லவா நடக்கிறது.

அலி (றலி) அவர்கள் ஒரு யுத்தத்தில்ல் ஒருவரை கொலை செய்ய வாலை ஓங்கி விட்டார்கள். அவர் தூய்மையான அலி(றலி) அவர்களது முகத்தில் எச்சில் துப்பி விட்டார்.

உடனே வீரர் அலி (றலி) அவர்கள் வாளை தூக்கி போட்டு விட்டு எழுந்து விட்டார்கள்.

அவர் ஆச்சர்யம் தாங்காது, ‘ஏன் இப்படி? - கோவம் இல்லையா? - எது என்னை வெட்ட விடாமல் தடுத்தது?’ என்று காரணம் வேண்டுகிறார்.

அலி (றலி) அவர்கள் விளக்கம் தந்தார்கள், “நீ என் முகத்தில் எச்சில் துப்பிய போது நான் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டேன், எனக்கு கோவம் வந்தது, நான் ஓங்கிய வாளில் பாதி இறைவனுக்காகவும் பாதி எனக்காகவும் இருந்தது. இறைவனுடைய அலுவல்களில் பங்காளிகள் ஏது?” என்று கேட்டார்கள்.

அவர் இதயத்தில் ஈமான் குடி கொண்டது என்பது இஸ்லாமிய வரலாறு. அலி (றலி) அவர்கள் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் தான் குரான் ஷரீஃபின் மேற்படி வசனத்திற்கு சிறந்த தப்ஸீர்.

நியாயம் இல்லை என்றால் உயிரை பறிப்பது என்பது நமக்கு துளி கூட உரிமை இல்லாத செயல். பாவத்திலேயே பெரிய பாவம்.


இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


போதனை என்று சொன்னால் அது ஒரு வகையில் மேலே கண்டதை எல்லாம் செய்ய சொல்லி கட்டளையிடுகிறான் என்று அர்த்தம். இப்படியும் இருக்கலாம் என்ற பல வழிகளில் இருக்கும் ஒரு வழி அல்ல.. இது தான் இருக்கவே இருக்கும் ஒரே நேரான வழி.


இத்தோடு முடியவில்லை...

152 வது வாக்கியம்


(6) அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; 


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அனாதைகளை ஆதரிக்கும் வீடே ஆசீர்வதிக்கப்பட்ட வீடு என்று.


தாய் தந்தையை இழந்தவர்களான இவர்கள் இவர்களாக விரும்பி  அப்ளிகேஷன் போட்டு அனாதையாகி விடவில்லை. 

அவர்களுக்கு யாருமில்லை அவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்து விடலாம் என்று யாரும் தைரியமாக நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு அல்லாஹ் இருக்கின்றான். 

முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறான், அவர்களுக்கு ஏதேனும் சொத்து இருந்தால் அதை அழகான முறையிலன்றி அதாவது அதை பெருக்குவதற்காகவேயன்றி அதை நீங்கள் எடுக்க கூடாது.

குரான் ஷரீஃபின் இன்னொரு வசனம் அனாதைகளின் சொத்தை உண்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. படியுங்கள்...

- ஸூரத்துன்னிஸாவு (4) - பெண்கள்

10வது வாக்கியம்

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான்


(7) அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; 


பெருமானார் (ஸல்) அவர்கள் ஏதாவது வாங்கினால், “ஒழுங்காக நிறுத்துப் போடுங்கள்!” என்று கடைக்காரரிடம் சொல்லுவாஹலாம்.

புலைல் என்பவர்கள் தனது மகனாரை கவனிக்கிறாங்க.. மகனார் ஒரு தங்க நாணயத்தைத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்தாஹா. விற்பனைக்கு உள்ள அந்த தங்க நாணயம் அழுக்கினாலும் கறையினாலும் அதன் நிறை உயரக் கூடாதுங்குறதுக்காக..

புலைல் ங்குறவங்க பார்த்துட்டு சொன்னாஹலாம், “மகனே! நீ செய்யும் காரியம், இரு பத்திரண்டு தடவைகள் இறையில்ல தரிசனம் செய்வதை விடச் சிறப்பு வாய்ந்தது!”

நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; 


மனிதன் என்பவன் களிமண்ணினால் படைக்கப்பட்டவன். களிமண் என்பது படைக்கப்பட்ட ஒரு பொருள். படைக்கப்பட்ட ஒரு மூலப் பொருளிலிருந்து இன்னொரு பொருளை உருவத்தை மனிதனாக படைக்கிறான் இறைவன். 


படைத்த இறைவன் தனது ரூஹை மனிதனில் ஊதுகிறான். இப்போ என்ன ஆச்சுன்னா, லேசான ஒரு பொருள் புனிதமான ஒரு உயிராக உருவெடுத்து விட்டது.

இப்படி வச்சுக்குங்களேன்... புனிதமும் அற்பமும் கலந்த கலவை மனிதன் என்று.

குரான் ஷரீஃபில் ஸூரத்து கஹ்ஃபு எனும் அத்தியாயத்தில் “இரண்டு கடல்கள் ஒன்று சேரும் இடம்..” (60 வது வாக்கியம்) என்று வரும். 

ஸூரத்துல் ஃபுர்ஃகான் - பிரித்தறிவித்தல்

53, 54 வது வாக்கியம்


அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.


இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.


இரு கடல் என்பதை சூஃபியாக்கள் களிமண்ணையும் இறைவனுடைய ரூஹையும் என்று ஆழ்ந்த அர்த்தமுள்ள விளக்கம் கொடுக்கிறார்கள்.


சரி, இதில் நஃப்ஸ் எங்கே வருகிறது என்று கேட்டால், அது தான் இரு கடல்களையும் ஒன்று சேர்க்கும் பகுதி. 
(கணிதத்தில் ‘இண்டர்செக்ஸன்’ என்று படித்திருக்கிறோமே, அதை நினைத்து கொள்ளவும்)


அப்படி பார்த்தால் நப்ஸில் இறைவனின் ரூஹில் உள்ள இறைத்தன்மைகளும் இருக்கும், களிமண்ணில் உள்ள அதாவது உலகத் தன்மைகளும் இருக்கும்.
சுருக்கமாக சொன்னால் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். 


குரான் ஷரீஃப் என்பதே நப்ஷுக்கு நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிவிக்க கூடியது தான்.


இந்த நப்ஷ் கெட்டதிலிருந்து விலகி இறைத் தன்மையின் பக்கம் வரவழைத்து விட்டால் அது தாங்கிக் கொள்ளாத ஒரு கஷ்டமும் இல்லை. எதுவெல்லாம் கஷ்டம் என்று நினைத்து வருந்துகிறோமோ அந்த கஷ்டம் வந்ததற்காக சூஃபியாக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக இருந்தார்கள் என்பது இதை தான் உணர்த்துகிறது.

(8) நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; 


இது ஒரு குவாலிட்டி ஆஃப் பிஹேவியரின் உச்சம் என்பேன். 

இது வந்து சாதாரணமா பேசும் போது கூட என்று வருகிறது. பெரிதாக ஒரு கேஸில் தீர்ப்பு எழுதும் போது என்றெல்லாம் இல்லை, வக்கீலாக நின்று நீதிமன்றத்தில் வாதிடும் போது என்று கூட இல்லை, நாம சும்மா பேசிகிட்டு இருக்கோம்ல அப்போ கூட ஒரு ஃபேவரிட்டிஸம் இருக்க கூடாது, நியாயமானதை மட்டும் தான் பேச வேண்டும்.

யார் பாதிக்கப்பட்டாலும் சரியே.


(9) அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.


நம்ம வாழ்க்கையின் ரீவைண்ட் பட்டனை தட்டி விட்டால், நேற்று , முந்தா நாள் என்று பின்னோக்கி சென்று கொண்டே இருந்தால் கல்லூரி, பள்ளிகூடம், இன்னும் பின்னே போய் பால்குடி மாறாமல் தாயின் மடியில், இன்னும் தாயின் வயிற்றில் அப்படியே இன்னும் பின்னே போனால்... ஒரு கட்டத்தில்...


ஸூரத்துல் அஹ்ஜாப் (33) - சதிகார அணியினர்


32 வது வாக்கியம்


நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.


மேலே படித்த அத்தனை பொறுப்புகளையும் செவ்வனே செய்வேன் என்று  உறுதி மொழி கொடுத்து விட்டு தான் இங்கே வந்திருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டும்.


நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.

இறைவன் காட்டியதும் பெருமானார் (ஸல்) அவர்களும் பெரியோர்களும் சென்றதுமான நேரான பாதையில் நடைபோட இறையருள் வேண்டியவனாக.. 

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

Tuesday, December 20, 2011

சிங்கப்பூர் எம.ஆர்.டியில் ஏற்பட்ட தடை

”சுத்தம் சோறு போடும்” என்று எதை வைத்து சொன்னார்களோ எனக்கு தெரியாது. ஆனால் சுத்தமான சிங்கப்பூர் நாடு தான் எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் என்றாலே பெரிய கட்டடங்கள், சுத்தமான சாலைகள், சுகாதாரமான உணவங்காடிகள், குற்றங்கள் மிக குறைவான நிலை, அரசியல் நிலைத்தன்மை, சரியான வழிகாட்டக் கூடிய தலைவர்கள், அத்தோடு முக்கியமாக அதிக அபராதம் விதிக்கப்படும் நாடு இவையெல்லாம் நினைவுக்கு வரக்கூடும்.

சிங்கப்பூர் இஸ் எ ஃபைன் சிட்டி என்று சொல்வார்கள்.

இதில் ”ஃபைன்” என்றால் “ஹவ் ஆர் யு?” - “அயம் ஃபைன்” அந்த “ஃபைன்” அல்ல - அபராதம் விதிப்பதற்கு ஃபைன் அடிப்பார்கள் அல்லவா அந்த “ஃபைன்” என்று இங்கே சொல்வது உண்டு.

உதாரணமாக,

குடியிருப்பு பகுதியில் புறாவுக்கு தீனி போடக் கூடாது - மீறி போட்டால் $1,000 வெள்ளி ஃபைன். அதாவது ஊரு காசுக்கு 39,000 ரூபாய்.

ரோட்டில் டிராஃபிக் லைட்டில் பச்சை விளக்கு எரியாத போது சாலையை கடக்கக் கூடாது. மீறி கடந்தால் (Jay Walking) 1000 வெள்ளி அபராதம்.

இப்படி ஏராளமான சட்ட திட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் இந்த நாட்டுடைய பொருளாதார வளர்ச்சிக்கே உதவியாக இருந்து வருகிறது.

சவுத் பிரிட்ஜ் ரோடு என்று ஒரு சாலை உள்ளது. மஸ்ஜித் ஜாமியா சூலியா என்றொரு இந்திய முஸ்லீம்கள் நிர்வகிக்கும் ஒரு பள்ளிவாசல் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. இவை இரண்டும் எங்கே உள்ளது தெரியுமா? சைனா டவுன் என்ற இடத்தில்.

இந்த குறிப்பு ஒன்று போதும் இங்கே எப்படி பல இனத்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கு.

சிங்கப்பூரின் இன்னொரு சிறப்பு இதன் போக்குவரத்து வசதிகள்.

சாலை விதிகளை பற்றி சொல்லி மாளாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய வேகத் தடை இருக்கும் அல்லவா? 90 கி.மீ வேகத்திற்கு மேல் போகக் கூடாது என்றெல்லாம். அப்படி மீறி வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.

அதுவும் எப்படி என்றால் சர்பிரைஸிங்ஙாக வந்து அல்ல, சாலையிலேயே தகவல் பலகை இருக்கும், பக்கத்தில் கேமரா உள்ளது, மெதுவாக செல்லவும் என்று.  அதாவது கேமராவை ஒலித்து வைத்து படமெடுத்து ஃபைன் அடிப்பது எல்லாம் கிடையாது.

‘இங்கே கேமரா இருக்கு’ என்று சொல்லி விட்டு மீறி வேகமாக போகிறவர்களை தான் ஃபைன் அடிப்பார்கள்.

சாலை வசதிகள் எல்லாமே யூசர் பிரண்ட்லி என்று சொல்வோமே அந்த வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். எங்கு நோக்கினும் தகவல்கள், தகவல்கள், தகவல்கள்.

இங்கே ‘யு-டர்ன்’ செய்யக் கூடாது என்பதற்கு மட்டுமல்ல, இங்கே ‘யு-டர்ன்’ வசதி உண்டு என்று சொல்வதற்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.

வாழைப்பழத்தை உரிச்சு வாயில் திணித்ததோடு மட்டுமல்லாமல் வாயை புடித்து அழுத்தி கடிக்கவும் வைத்தால் எப்படி இருக்கும்..? - அப்படி தான் இங்கே தகவல்கள் இருக்கும்.

சிங்கப்பூர் மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் என்ற அமைப்பு 1987 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் தனது சேவையை தொடங்கியது. அதாவது எம்.ஆர்.டி. என்றழைக்கப்படும் இரயில் சேவை தான் அது.

அது இப்போது படிப்படியாக வளர்ச்சிகள் கண்டு இன்றைக்கு மிகப்பரந்த அமைப்பாக உருப்பெற்று உள்ளது.

இதில் நான்கு வழிதடங்களில் செயல்பட்டு வருகிறது

1. 

நார்த் - சவுத் லைன்: 

இது ஜூரோங் ஈஸ்ட் எனும் நிலையத்திலிருந்து புறப்பட்டு யிஷுன், உட்லண்ட்ஸ் வழியாக சென்று மெரினா பே வரை செல்லும்.

இதில் மொத்தம் 25 நிறுத்தங்கள் உள்ளன.

44 கி.மீ தூர அளவை உடையது.

2.

ஈஸ்ட் - வெஸ்ட் லைன்:

இது ஜூ கூன்  எனும் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜுரோங்க் ஈஸ்ட்,   புவனா விஸ்தா, யுனூஸ், தானா மேரா வழியாக பாஸிர் ரிஸ் வரை செல்லும்.

இதில் மொத்தம் 29 நிறுத்தங்கள் இடையில் உள்ளன.

இதில் இன்னொரு சேவையும் இணைக்கப்பட்டிருக்கும். சாங்கி விமானம் நிலையம் வரை செல்லும் சேவை தான் அது.

இதில் மொத்தம் 2 நிறுத்தங்கள் மட்டுமே இருக்கும். 

சாங்கி விமான நிலையம் செல்ல வேண்டுமானால் ஈஸ்ட்-வெஸ்ட் லைனில் வரும் தானா மேரா நிறுத்தத்தில் இறங்கி பக்கத்திலேயே இருக்கும் நடு பிளாட்பார்முக்கு மாறி இடையில் வரும் ஒரே ஒரு நிறுத்தமான எக்ஸ்போவை கடந்தால் சாங்கி விமான நிலையம் தான்.

எல்லாம் சேர்த்து 49.2 கி.மீ தூர அளவை உடையது.

3.

நார்த் - ஈஸ்ட் லைன்

இது ஹார்பர் பிராண்ட் எனும் நிறுத்தத்தில் தொடங்கி சைனா டவுன், லிட்டில் இந்தியா வழியாக புங்கோல் வரை செல்லும்.

இதில் மொத்தம் 16 நிறுத்தங்கள் இருக்கும்

20 கி.மீ தூர அளவை உடையது.

4.

சர்க்கிள் லைன்

டோபி காட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றி நிகல் ஹைவே, ஸ்டேடியம், மெக் பெர்ஸன், சிராங்கூன், பொட்டானிக் கார்டன், தெலுக் பிளாங்கா வழியாக ஹார்பர் பிராண்ட் வரை செல்லும் இந்த சேவை.

இதில் மொத்தம் 28 நிறுத்தங்கள் இருக்கும்.

33.3 கி.மீ தூர அளவை உடையது.

இப்பொழுது டவுன்டவ்ன் லைன் (Downtown Line), தாம்ஸன் லைன் என்று இன்னும் பல லைன்கள் கட்டுமான பணியில் உள்ளன.


இந்த சேவைகள் யாவும் பொதுவாக காலை 5 30 மணிக்கு தொடங்கி விடும். இப்படி ஆரம்பிக்கப்படும் இந்த சேவை இரவு 12 மணிக்கு மேல் தான் நிறுத்தப்படும்.

இடையில் வழிதடங்களை ஆய்வு செய்ய, பராமரிக்க, புதுப்பிக்க என குறைவான கால அளவே உள்ளது. இந்த கால அளவு பத்தாது என்பதே என் கணிப்பு.

இது அல்லாமல் வேறு என்ன காரணமோ தெரியவில்லை, சென்ற வாரம் 15 ந்தேதி வியாழக்கிழமை நார்த்-சவுத் வழி தடத்தில் தடை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று வரை நீடித்திருக்கும் இந்த தடையும் தடங்களும் மக்களிடையே பெரும் பாதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.

(இப்பொழுது இயங்க ஆரம்பித்து விட்டதாக தகவல்)

இது போல் தடைகள் ஏற்படாமல் எம்.ஆர்.டி. நிறுவனம் பார்த்துக் கொள்ள தான் வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் இது போல் தடங்கள் ஏற்பட்டால் சரி செய்யும் வரை வரும் அசௌகரியங்களை பொறுத்துக் கொண்டு மக்கள் வாழ தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்.

இது போல் தடங்கள்கள் எல்லா நாடுகளிலும் ஏற்படத் தான் செய்கிறது. எனது நண்பர் ஜப்பானில் ஒரு வருடம் வசித்து இருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், ‘ஜப்பானிலும் இது போல் தடைபடுவதுண்டு..” என்று.

எம்.ஆர்.டி நிறுவனமும் சும்மா சொல்லக் கூடாது, இது போன்ற நேரத்தில் அவர்களால் என்ன சேவையை வழங்க முடியுமோ உதாரணமாக, தகவல் தருவது, ஷட்டுல் பஸ் ஏற்பாடு செய்தது என்று அவர்களால் இயன்றதை உடனடியாக செய்தார்கள்.

பராமரிப்பு என்பது ஒன்று. அதே சமயத்தில் தொடர்ந்து பராமரித்து கொண்டே இருக்க உ முடியாது. ஆங்கிலத்தில் "Predictive Maintenance" என்று ஒன்று உள்ளது. அதாவது பராமரித்து வரும் தளவாடங்களுக்கு எப்பொழுது மாற்று தேவைப்படும் என்று முன்கூட்டியே தெரிந்து வைத்து அது முற்றிலுமாக பழுதாகி நிற்கும் வரை காத்திராமல் மாற்றுவது.

சிங்கப்பூர் பிரதமர் ஃபுல் பப்ளிக் இன்குய்ரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். ரூட் காஸ் என்ன என்று கண்டு பிடித்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட பாதிப்பா அல்லது சிஸ்டமிக் எஃபெக்டா (மொத்த வழி தடங்களிலும் ஏற்பட இருக்கும் முன்னறிவிப்பா இது என்று) ஆய்வு செய்து சரி செய்து விடுவார்கள்.

இது போன்ற தடைகளை எல்லாம் மீறி மக்கள் ஒத்துழைப்புடன் தனது பாதையில் உலகிற்கு வழிகாட்டியாக சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறி செல்லும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை.