Monday, January 22, 2007

அறிமுகம் - முடிவு


திண்ணையில் நான் எழுதிய முதல் கதை "வாப்பாக்காக" கதை தான். எனது "பொன்னாச்சிமா" என்ற கதையை படித்து விட்டு அது உண்மையில் எனது பாட்டியாரின் வாழ்க்கையை தான் கதை போல் எழுதியிருந்தேன் - இந்த கதையை படித்து விட்டு தட்ஸ்தமிழில் துணை ஆசிரியராக இருந்த ரமேஷ் என்ற நண்பர் தட்ஸ்தமிழுக்காக கதை எழுதுமாறு கேட்டார், "தேவை இந்த மனங்கள்" என்று எழுதி அனுப்பினேன் - தற்சமயம் ரமேஷ் என்ற நண்பர் கீற்று இணைய தளத்தில் பணி புரிவதாக அறிகிறேன் -தமிழ் மணத்தில் பின்னூட்டம் மட்டுமே எழுதியிருக்கிறேன் - கதை எழுத காரணமாக இருந்த கதைகள் என்றால் நாகூர் ரூமியின் , "குட்டியப்பா"வும் ஆபிதீன் அவர்களின் "குழந்தை"யையும் சொல்லலாம்.
நாகூர் இஸ்மாயில்

அறிமுகம் - தொடர்ச்சி


ஊரில் இருக்கும் போது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க 'புவன் ஒரு கேள்விக்குறி" , "மர்மம்", "எங்க வீட்டு திருடன்" போன்ற வேடிக்கை படங்களை குடும்பத்தார்களே நடித்து அதை வீடியோ கேமராவில் காட்சி பிடித்து ஒலிஒளி நாடாவில் மாற்றம் செய்து குடும்பத்தார்கள், தெருவாசிகள் மட்டுமே பார்த்து ரசித்து இருக்கிறோம், கதை வசனம் என்னவோ நான் எழுதி தந்து விடுவேன், என் மச்சான் ஒருத்தர் இயக்குவார், இதன் தொடர்ச்சியாக திண்ணையிலும், தட்ஸ்தமிழ் டாட் காமிலும் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன் - நாகூர் இஸ்மாயில்

அறிமுகம்


எனது பெயர் முஹம்மது இஸ்மாயில், நாகூரில் பிறந்து நாகூர், காரைக்கால், நாகப்பட்டினம் என அருகாமையில் உள்ள ஊர்களில் படித்து புருணை சென்று வேலை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஊர் திரும்பும் வழியில் சிங்கை வந்து மனித வள அமைச்சில் வேலை கிடைத்து 8 வருடங்களாக வேலை பார்த்து தற்சமயம் தேசிய தொழிற் சங்க காங்கிரஸில் பயிற்றுவிப்பாளராக பணி புரிந்து வருகிறேன்.
நாகூர் இஸ்மாயில்