எனக்கு பசி எடுத்த போது சாயங்காலம் மணி 5. நான் அன்று மதியாணம் சாப்பிட வில்லை. ஏனென்றால் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, ஆயிடுச்சு என்பதை விட ஆக்கி விட்டேன் என்பது தான் பொருந்தும்,
மேலாளருக்கு என் மீது ஏற்கனவே காண்டு, நான் எப்போ தப்பு செய்வேன் என்று தான் காத்துக் கொண்டிருந்தார், அவருக்கு நானே ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டேன். கேட்கவா வேணும்,
எல்லோருக்கும் முன்னாடி கேட்டே விட்டார், சோறு திங்குறியா? இல்லை வேற ஏதாவதா? என்று வேற ஏதாவதா என்றால் வேறு என்ன பீ தான். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ‘சோறு திங்குறீயா..?’ என்று அவர் என்னை கேட்ட 2 மணிக்கு கூட எனக்கு சாப்பாடு ஞாபகம் வரவில்லை என்பது தான். இத்தனைக்கு காலையிலே காலம் கடந்து விட்டது என்பதற்காக பசியாறாமல் அவசரமாக புறப்பட்டு வந்தேன்.
எல்லாத்தையும் உட்கார்ந்து சரி பார்த்து என் தவறுகளள சரி செய்த போது மணி 4. நண்பர்கள் இடையில் தேநீர் அருந்த அழைத்தார்கள், உணவு உண்ண போனார்கள், சாயங்காலம் மீண்டும் தேநீர் அருந்த கூப்பிட்டார்கள், வாங்கி வரவா என்று கூட கேட்டார்கள். ம்கூம்.. போக வில்லை. பசி நினைப்பு கூட இல்லை. ஐந்து மணி இருக்கும், வேலை பலு குறைந்த போது தான் அதை உணர்ந்தேன். வயிறு குழந்தையாய் அழுதது.
அடடே நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, என்று ஞாபகப் படுத்திக் கொண்டு உடனே வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தேன், எடுத்தது அவளே தான்.
‘யாரு?’ - குழலினிது யாழினிது என்பர் தம் மனைவி சொல் கேளாதார் - வள்ளுவர் பெருந்தகை மன்னிப்பாராக - அவர் மன்னிக்கா விட்டால் கூட பராவாயில்லை, நான் இப்படி சொல்ல வில்லை என்றால் என் மனைவி என்னை மன்னிக்க மாட்டள், எனக்கு வேறு நல்ல பசி..
‘கண்மனி (இது அவள் பேரல்ல.. நான் கொஞ்சுகிறேனாம்) ராத்திரிக்கு என்ன சாப்பாடு’
‘உங்களுக்கு என்னா வேணும் சொல்லுங்க?’ -
‘தாழிச்ச சோறு’
‘அப்புறம்’
‘தாழிச்சா’
‘அப்புறம்’
‘கோழி பொறிச்சிடு’
‘அப்புறம்’
‘அப்பளம் பொறிக்க முடியுமா?’
‘ஓ..!’
யோசித்தேன்..
‘அவ்வளவு தானா..?, போதுமா..? என்னங்க இது இப்படி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும், ஒரு காய்கறியாவது..’
‘காலி பிளவர் எனக்கு புடிக்கும்.. எல்லாம் முடியுமா?’
‘கண்டிப்பா முடியும்.. காலி பிளவரும்.. உருளை கிழங்கு பொறியலும் செஞ்சு வைக்கிறேனே.. சரியா?’
தொலைபேசி துண்டிக்கப்பட்டது
மக்களே, நான் சொல்றத கேளுங்க.. நீங்கள் நல்ல சாப்பாட்டுக்காகவாவது கல்யாணம் பண்ணிக்கனும்,.. பாருங்க பேசிக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி மணி அடிக்கிறது, கொஞ்சம் இருங்க’
‘ஹலோ’ - நான்
‘என்னங்க.. (என் மனைவி தான்) வீட்ல எண்ணெய் இல்ல.. நீங்க போய் கடைல சாப்டுட்டு வரும் போது எனக்கும் சாப்பாடு வாங்கிட்டு எண்ணெயும் வாங்கிட்டு வந்துடுங்க..’
0 comments:
Post a Comment