பேச முடிந்தவர்கள் அனைவருக்கும் குரல் இருக்கிறது. சில குரல்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. காதால் கேட்டால் செவிக்கு போதை வரும். இதயத்தால் கேட்டால் இதயம் நழுவி போகும். அத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றால் அது ரஃபி சாஹேப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட முஹம்மது ரஃபி அவர்களையே சாரும்.
1940 லிருந்து 1980 வரை - கனீர் குரலோன் முகேஷ் அவர்களிடமிருந்து இளமையான குரலுக்கு சொந்தக்காரரான கிஷோர் குமார் வரை - சங்கர் ஜெய்கிஷனிலிருந்து லக்ஸ்மிகாந்தி பியாரிலால் வரை - ஓ.பி. நய்யாரிலிருந்து ஆர்.டி.பர்மன் வரை - திலீப் குமாரிலிருந்து ஷம்மி கபூர் வரை - ராஜேந்திர குமாரிலிருந்து ஜானி வாக்கர் வரை - அனைத்து கால கட்டத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர இடத்தையும் பெற்ற பாடகர் ரஃபி சாஹேப் அவர்கள்.
அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.
1924ம் வருடம் டிசம்பர் மாதம் 24ந் தேதி பிறந்த அவர் தனது 13 வது வயதிலேயே அரேங்கற்றம். அவ்ர் பாடலை மிகவும் ரசித்த அவரது மச்சான் ஹமீது அவர்கள் ரஃபி சாஹேப் அவர்களை ஊக்கப்படுத்தினார். ரஃபி சாஹேப் அவர்கள் உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வாஹித் கான், பண்டிட் ஜிவான்லால் மிட்டோ மற்றும் பிரோஜ் நிஜாமி போன்ற சகாப்தங்களிடம் இசை பயின்றார். அதன் பிறகு ஹமீது அவர்கள் ரஃபியை அழைத்துக் கொண்டு பாம்பே சென்று பிரபல இந்தி இசையமைப்பாளரான நவ்ஷாத் சாபின் தந்தையாரிடம் சிபாரிசு கடிதத்தை வாங்கி கொண்டு நவ்ஷாத் சாபிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.
இதற்கிடையே ரஃபி சாஹேப் அவர்களை லாஹுர் வானொலி நிலையம் அழைத்து தங்களின் நிகழ்ச்சிக்காக பாடுமாறு கேட்டுக் கொண்டது. அவர் முதன் முதலில் பாடிய பாடல் 1944 ஆம் ஆண்டு “சோனியே..” என தொடங்கும் ஒரு பஞ்சாபிய பாடலை தான். இந்த பாடலை ஜீனத் பேகம் என்பவருடன் சேர்ந்து பாடினார். இதற்கெல்லாம் பிறகு தான் பாம்பே வந்து நவ்ஷாத் சாப் இசையில் பாடியது எல்லாம்.
கொயா கொயா சாந்த் குலா ஆஸ்மான்
மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ரே
கியா ஹுவா தேரா வாதா
ஜோ வாதா கியா ஹே
சூலேனே ஜோ நா சுக் ஹோத்தோ
பஹாரோ பூல் பர்சாவோ மெரா மெஹபூப் ஆயா ஹெய்ன்
சாந்த் மேரா தில்
தர்தே தில் தர்தே ஜிகர்
ரங் அவுர் ரூப் கி பாராத்
தேரே மெரே சப்னே
தும் பின் ஜாவு கஹா
தேகா ஹெ தேரி ஆகோன் மேன்
தில் தோனே செஹெககா சங்கே யாரே தில்
சௌதவி கா சாந்த்
அபி நா சாவோன் சோடு கர்
தில்கா பன்வர் கானே புகார்
தெரி பியாரி பியாரி சூரத் கோ
ஆஜ் மாசம் ஹே படா பெய்மான் ஹே படா
ஜான் ஜானி ஜனார்த்தன்
சுராலியா ஹே தும்னே
ஹம் கிஸிஸே கம் நஹி
தீவானா ஹுவா பாதல்
சலோ தில் சார் சலோ
தேரே பிந்தியா ரே
எஹே சான் தெரா ஹோ கா முஜ்பர்
- இப்படி எத்தனை பாடல்களில் இதயங்கள் கனிந்திருக்கின்றன
ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது, ஒரு வக்த் தொழுகையை விட்டது கிடையாது, அதை விட முக்கியம் ஒரு படம் கூட பார்த்தது கிடையாது, தன் குரலுக்கு எப்படி நடிகர்கள் வாயை அசைக்கிறார்கள் என்பது கூட தெரியாது என்றாலும், லைலா மஜ்னு என்ற படத்தில் இவர் தோன்றி ஒரு பாடலுக்கு வாயசைத்தும் இருக்கிறார்.
லதா மங்கேஷ்கர் இவரை பற்றி சொல்லும் போது, “இறைவனின் பரிசு” என்றார். இவர் இறந்த போது ஷம்மி கபூரிடம் “உங்களின் குரல் போய் விட்டது..” என்றார்களாம், அதற்கு ஷம்மி கபூர், “ரஃபி இறந்து விட்டாரா?” என்று அழுதாராம்.
இவர் ஒரே ஒரு முறை நாகூருக்கும் வருகை தந்திருக்கிறார். இவருக்கு நெருக்கமான நாகூராரில் ஒருவர் “ஷேக் அலாவுதீன் நானா” என்பவர். இவர் தமிழ் சினிமா கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளருமான (வைதேகி காத்திருந்தாள்) தூயவன் என்ற அக்பரின் உறவினர். சில்லடியில் ரஃபி சாஹேபுடன் சந்தித்த அனுபவங்களை பலரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர் கடைசியாக லக்ஸிமிகாந்த் பியாரிலால் இசையில் “ஆஸ் பாஸ்” என்ற படத்துக்காக பாடியது தான். அவர் கடைசியாக பாடி கொடுத்து விட்டு எப்போதும் போல் அல்லாமல் “நான் போவா..?” என்று இரண்டு முறை கேட்டிருக்கிறார். அதே நாளில் தான் இறந்தும் போனார்.
இவரின் மறைவிற்கு பிறகும் கூட அன்வர், முஹம்மது அஜிஜ், சுரேஷ் வாட்கர், சோனு நிகம் யாவரும் இவருடைய ஸ்டைலையே பின்பற்றுகிறார்கள்.
2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டாவும் ஸ்டார் பத்திரிக்கையும் ரஃபி சாஹேப் அவர்களை “இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
1948 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பரிசை வழங்கி கௌரவித்தார்
1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பத்மசிரி விருது வழங்கப்பட்டது
இரண்டு முறை தேசிய விருதும் (நீல் கமல் படத்திற்காகவும் ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம் பெற்ற கியா ஹுவா பாடலுக்காகவும்) ஆறு முறை பிலிம் பேர் விருதும் பெற்றிருக்கிறார்.
5000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவரின் பெயரை தான் மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு சாலைக்கு “பத்மசிரி முஹம்மது ரஃபி சௌக்” என்று இவரின் நினைவாக பெயரிடப்பட்டது.
என் காதுகளிலும் நாவுகளிலும் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் “எஹே சான் தெரா..” என்ற பாடல் தான்.
அதில் வரும் வரிகள்..
எனக்கு சிரிக்க கத்துக் கொடுத்தாய்
இப்போது அழ கத்துக் கொடுக்கிறாய்
அழுது விடுவேன்
அது உன்னை பாதிக்கும் என்ற போது தான்
அழ மறுக்கிறேன்
- என்பது போல் வரும்
கீழே வரும் இந்த பாடலை கேட்டீர்கள் என்றால் எவ்வளவு கஷ்டமான பாடலை எவ்வளவு ஸ்டைலாக பாடியிருப்பார் என்று தெரியும்
அந்த பாடல்..
Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin
Abhi abhi to aayi ho
Bahaar ban ke chhayi ho
Hawa zara mehak to le
Nazar zara behak to le
Ye shaam dhal to le zara
Ye dil sambhal to le zara
Main thodi der ji to loon, nashe ke ghoont pi to loon
Abhi to kuch kaha nahi, Abhi to kuch suna nahi
Abhi na jao chhod kar ki dil abhi bhara nahin
-
உங்கள் இசையோடு வாழ்கிறேன்
0 comments:
Post a Comment