Wednesday, November 25, 2009

நம் கையில் என்ன இருக்கிறது?


நம்ம தமிழ் படத்தின் ஹீரோக்கள் வில்லனிடம், 'இனிமே என் வாய் பேசாது என் கை தான் பேசும்..' என்று மிரட்டுவார்கள்

ஒரு ஹிந்தி படத்தில் சன்னி தியோல் சொல்வார், 'ஏ ஹாத் தாயி கேஜி ஹேய்ன்.. அகர் முக்கா படேகா தோ.. உட் நஹி.. ஜாவோகே.. ' (தவறிருக்கலாம்)
அதாவது இந்த கை இரண்டரை கிலோ இருக்கும், ஒரு குத்து உட்டேன்னா எந்திருக்க மாட்டே அப்படியே (இறந்து) போயிடுவே" (அதாவது நான் அடிச்சா நீ செத்துடுவே.. அந்த கான்செப்ட்)

வெண்ணிற ஆடை மூர்த்தியின் கையை (ஜோசியம்) பார்த்து சுஹாசினி 'உங்களுக்கு நல்லது நடக்க போகிறது' என்கிற ரீதியில் சொல்ல 'அப்படியா?' என்று ஆச்சர்யமாக கேட்பவரிடம், சுஹாசினி சொல்வார், 'கை பேசுதே..' என்று

அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படி பதில் சொல்வார், 'அது பேசுதுங்க, ஆனா காதுல தான் விழ மாட்டேங்குது..' என்று

- மகேந்திரன் இயக்கத்தில் மோகன் சுஹாசினி பிரதாப் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே என்ற அருமையான படத்தில் வரும் வசனம் தான் மேற்கண்டது.

நம்ம கை ரொம்ப ஆச்சர்யமான விஷயம், மனுஷனை தவிர எந்த இனத்துக்கும் கைகள் என்பதே இல்லை என்று தான் நினைக்கிறேன்.

உங்க கையை அப்படியே எடுத்து செத்த நேரம் பாருங்க.. ஒரு கையை மட்டும் வீசி பாருங்க.. ரெண்டு கையும் ரொம்ப முக்கியம், கை தட்ட மட்டுமல்ல.. வாழ்க்கையை ஓட்டவும்..

ஊர்ல ஆட்டோவில், 'உன் வாழ்க்கை உன் கையில்' என்று எழுதி வைத்திருப்பார்கள்.

இந்தியாவில் காங்கிரஸின் தேர்தல் சின்னம் கை தான்

'உழைக்கும் கைகளே..' என்ற எம்ஜிஆர் நடித்து வாயசைத்த பிரபலமான பாடலும் உண்டு

சின்னப்பூவே மெல்லபேசு படத்தில் காலேஜ் காட்சியில் பேராசிரியர் 'கை.. கை' என்று நிறைய கையை பத்தி பேசுவார், அதை பார்த்து சின்னி ஜெயந்த அழுவார்.

அதற்கு அந்த பேராசிரியர், 'ஆனந்த கண்ணீரா.. என் கிட்ட இந்த மாதிரி கை கைன்னு நிறைய கை இருக்கிறது.. எதுகை.." என்பார்

சின்னி ஜெயந்த், 'நீங்க வேற சார்.. எங்க பிரண்ட் ராஜாவ ரௌடி பசங்க அடிச்சு போட்டதால .. இப்ப ஆஸ்பத்திரில இருக்கான்.. டாக்டர் கைய எடுக்கணும்னு சொல்லிட்டார்.." என்பார்

பேராசிரியர், 'எக்கையை..?' என்று கேட்பார்

'வலக்கையை..' என்பார் சின்னி..

'உலக்கை போல் வலக்கை..' என்று 'உச்..' கொட்டிவிட்டு 'இது தான் வாழ்க்கை..' என்பார் பேரா..

இப்படி சுவாரஸ்யமான வசனம மறைந்த பிரபல வசனகர்த்தா பிரச்சன்னகுமாருடையது

கை சம்மந்தமான முல்லா கதை கூட ஒன்றுள்ளது..

முல்லா மீது 'அவர் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி விடுகிறாரே.. அவரை மட்டம் தட்ட வேண்டும்..' என்ற பொறாமை எண்ணம் கொண்ட சிலர் ஒரு பறவையை புடிச்சு கையில பின்னாடி கட்டி மறைச்சி வைத்து கொண்டு முல்லாவிடம் வந்தார்கள்

வந்தவர்கள், 'முல்லாவே.. என் கையில் ஒரு பறவை இருக்கிறது, அது உயிரோடு இருக்கிறதா? இல்லை செத்து போய் விட்டதா?' என்று கேட்டார்கள்.

அதாவது அவர்களது திட்டம் என்ன என்றால், முல்லா பறவை உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அந்த பறவையில் கழுத்தை நெறித்து கொன்று விட வேண்டியது.

அந்த பறவை இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விட்டு விட வேண்டியது, இது தான் திட்டம்

இதனை விளங்கி கொண்ட சூஃபி முல்லா, 'அந்த பறவை உயிரோடு இருப்பதும் இறந்து போறதும் உன் கையில் தான் இருக்கிறது'  என்று சொன்னாராம்.

0 comments:

web counter web counter