இந்த பதிவுக்கு போறதுக்கு முன்னாடி மூன்று செய்திகள்
1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
2. ஒரு பின்னூட்டத்தில் "இஸ்லாத்தின் மீது மரியாதை உள்ளது" என்று எழுதிய தோழர் சுகுணா திவாகருக்கு கோடி நன்றிகள்.
3. இஸ்லாமியர்களும் பெரியாரிஸ்டுகளும் இணையும் புள்ளி - என்ற ஒரு பதிவு கூட எழுத வேண்டி உள்ளது, இன்ஷா அல்லாஹ் வரும்..
---------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சாயங்காலம் வேலையிடத்தில் என்னால் ஒரு தேர்வு நடத்த முடியாமல் அதாவது exam invigilation செய்ய முடியாமல் போனது. என் வீட்டில் ஒரு அவசர தேவை இருந்ததால் தான் நான் அவ்வாற தேர்வு நடத்தாமல் வீட்டிற்கு அவசரமாக போக வேண்டியிருந்தது.
ஆகையால், அன்றைய தினம் விடுப்பிலிருந்த எனது சக-ஊழியரை தொலைபேசியில் அழைத்து எனது பணியை அவர் ஏற்று நடத்தும் படி (take over) சொல்லி விட்டு நிர்வாக ஊழியர்களிடமும் நான் இன்னவரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தெரிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
அப்போது வேலையாக வெளியிலிருந்து அப்படியே அலுவலகத்துக்கு தேர்வு நடத்த வந்த அந்த சக-ஊழியர் காலில் சப்பாத்து போடாமல் செருப்பு அணிந்தவாறே வந்து விட்டார். அதை பார்த்த எங்களது மேலதிகாரி கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அதெப்படி நீ செருப்பு போட்டுட்டு வரலாம்? ஒரு நன்னெறி (ethics) இல்லையா, ஒழுக்கம் (discipline) வேண்டாமா? என்று இன்னும் என்னென்னவோ சொல்லி சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அவர் சத்தம் போட்டது சரியா? தவறா? என்று வாதிப்பதற்கு அல்ல இந்த பதிவு.
அது மட்டுமல்லாமல் செருப்பு போட்டு கொண்டு வந்து விட்டதால் இவர் எப்படி ஒழுக்கம் தவறி விட்டார், அப்போ செருப்பு போட்டுட்டு வர்ரவங்க எல்லாம் ஒழுக்க கேடானவர்களா என்று அவரை சண்டை பிடிப்பதற்கு அல்லது தாழிக்கும் கவிதை எழுதுவதற்கு கூட அல்ல இந்த பதிவு.
அப்புறம் வேறு எதற்காம்? - நியாயமான கேள்வி -
ஒவ்வொரு இடத்திற்கும் அந்தந்த இடத்திற்கு என்று உடுத்த தகுந்த ஆடை உள்ளது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்பதை சொல்லவே இந்த பதிவு.
பள்ளிகூடத்துல படிக்கும் போது யுனிஃபார்ம் எனப்படும் சமச்சீர் சீருடை கொடுப்பார்கள், அதை அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) கூட எடுப்பதுண்டு.
அதை எல்லாம் தவறு என்று சொல்லி விட முடியுமா?
அல்லது யுனிஃபார்ம் போடாதவர்கள் எல்லாம் ஒழுக்க கேடானவர்கள் இல்லை என்று பள்ளிகூட நிர்வாகத்திடம் சண்டை தான் போட முடியுமா?
கட்டுமான தல வேலை, கப்பல் பட்டறை வேலை, உற்பத்தி துறை, பெட்ரோல் இரசாயன துறை வேலைகளுக்கு கூட பார்த்தீர்கள் என்றால் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்தந்த வேலைக்கு என தகுந்த ஆடைகள் என்று உள்ளது, அதை மட்டுமே அணிய வேண்டும்.
உதாரணமாக, பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி இவைகளை எல்லாம் கட்டாயமாக (mandatory) அணிய தான் வேண்டும்.
அப்படி பாதுகாப்பு உடைகளை போட்டு கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு அசௌகரிய குறைச்சலாக இருக்கலாம்,
அதை போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களவர்களது விருப்பம் என்று கூட விட்டு விடலாம். ஆனால் அரசாங்கம் இத்தகைய ஆடை கட்டுப்பாட்டை விதியாக்கி உள்ளது. ஏன்..?
உதாரணமாக இரசாயன உற்பத்தி துறையில் வேலை செய்பவர்கள் ஒரு வகை தீ தடுப்பு (fire retardant - அந்த ஆடையில் தீச்சுடரின் படம் கூட போட்டிருக்கும்) ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும்.
வேலையிடம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் இந்த தீ தடுப்பு ஆடை பற்றிய விதிகளே தேவை இல்லை என்று விட்டு விட முடியாது. உலகத்திலேயே மிக சிறந்த பாதுகாப்பான இடமாக இரசாயன தொழிற்சாலை அமைந்து இருந்தாலும் நாம் இத்தகைய தற்காப்பு ஆடைகளை அணிவதை தவறு என்று வாதிட முடியாது.
இந்த ஆடை கட்டுப்பாடு வேண்டுமானால் ஆபத்துகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கை வரிசைகளில் (hierarchy of control) கடைசி தடுப்பாக (last line of defence ஆக) இருக்கலாம், ஆனால் இதுவும் அவசியம் தான் என்பதை மறுக்க முடியாது.
இன்னும் மருத்துவர்களை பார்த்தீர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்யும் போது உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து இருப்பார்கள், தலைமுடியையும் மறைத்திருப்பார்கள், இதெல்லாம் சுகாதாரம் (hygiene) என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
இல்லை, இந்த மருத்துவச்சி ஹிஜாப் அணிந்திருக்கிறார், நான் இவரிடம் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று சொன்னால் ஒருத்தரிடமும் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே முடியாது.
இன்னும் கறி, மீன் வெட்டுபவர்கள், பெரிய பெரிய ஹோட்டலில் சமைப்பவர்கள் எல்லாம் கூட உடலை மூடும் மேலங்கிகளும் தலை மூடிகளும் அணிந்திருப்பார்கள். எல்லாம் சுகாதாரம் தான்.
அதே போல தான் இஸ்லாம் இந்த சமுதாயத்தோடு கலந்த வாழ்க்கை வாழும் போது இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வேண்டுமென்றால் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்சாக இருக்கலாம், ஆனால் இதுவும் நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அம்சம் தான், நல்ல சுகாதாரமான ஆடை தான்.
ஆண்களுக்கு காம வெறி வந்தால் இந்த இடம் (சமீபத்திய கருவறை உதாரணங்களை பொருத்தி பார்த்து கொள்ளவும்) என்று கிடையாது, பெண்களின் சம்மதம் தேவை என்ற விதிகள் கூட கிடையாது அவளின் சம்மதமின்றி கூட பலாத்காரம் செய்து கூட அவனது கீழான இச்சையை அல்லது வெறியை தீர்த்துக் கொள்ள முடியும். இதை எழுதுவதற்கே கஷ்டமாக தான் உள்ளது, ஆனால் அது தான் நிதர்சனம்.
இன்னும் நாட்டில் எத்தனை கற்பழிப்புகள், ஈவ் டீசிங்குகள் எத்தனை எத்தனை பிரச்சினைகள். இத்தனை பிரச்சினைகளுக்கு நவநாகரீக ஆடை முறையா தீர்வென்று சொல்கிறீர்கள்?
மரியாதைக்குறிய சகோதரி காயத்ரி சித்தார்த் அவர்களின் கவிதை ஒன்றை வாசித்த ஞாபகம் கூட வருகிறது, அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார், ஒரு ஆண் அல்லது காதலன் "நேர்மையாக முகம் பார்த்து" பேசியதாக எழுதியிருப்பார்.
எங்க ஹஜ்ரத் கூட என்கிட்டே சொன்னார்கள், 'பொம்பள புள்ளைங்க கிட்ட நீ பேசுனா முகத்த தவிர வேற எங்கேயும் ஒன் கண்ணு ஓட கூடாது.." என்று.
ஆனால் வேலையிடம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் பாதுகாப்பு ஆடை அவசியம் என்று எப்படி நான் சொன்னேனோ அதே நியாயம் தான் ஆண்கள் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக உத்தமாமானவர்களாக இருந்தாலும் (ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும்) இந்த மறைப்பு ஆடை (பர்தா) மிகவும் அவசியம். அது தான் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ்.
சட்டம் என்ற படத்தில் அறை குறை ஆடையில் இருக்கும் மாதவியிடம் கமல்ஹாசன் சொல்வார் "பொருளை தொறந்து வச்சிருந்தா திருடன் வரத்தான் செய்வன்" என்று.
அதுவும் தவிர, உடலை, தலை முடியை மறைத்து ஆடை அணிந்தால் இந்த கவுரவமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையாவது இருக்கிறதா?
ஈரான் நாட்டில் பெண்கள் மறைக்கும் ஆடை அணிந்து தீயணைப்பு படையினராக இருக்கிறார்கள், பத்திரிக்கை காரர்களாக இருக்கிறார்கள், கடைகளில் பணிபுரிகிறார்கள், மருத்துவர்களாக, வக்கீல்களாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ஜெமிமா என்பவர் கூட "பர்தா அணிந்தவர்களே உண்மையான விடுதலைவாதிகள். பர்தா மூலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை" என்று சொன்னதை படித்தது நினைவிற்கு வருகிறது.
நான் எனது வகுப்பில் வேலையிட பாதுகாப்பை பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஆடைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
வேலைக்கு போகும் போது எப்படி உடுப்புகள் அணிந்து கொண்டு போக வேண்டும் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை போன்று வேலையிடத்தில் அணியக் கூடாது என்பதை புரிய வைக்கலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன்.
அதாவது, 'பொண்ணு பாக்க போவும் போது எப்படி போவணும்?' என்று கேட்டேன்.
என் வகுப்பில் இருந்த ஒரு குசும்பன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம இப்படி சொன்னார், "சார், நான் பொண்ணு பாக்க போவும் போது பொண்டாட்டியோட தான் போவேன்.." என்று
இவரை என்ன செய்யலாம்..?
நான் சொன்னேன், "நான் உங்க புள்ளைக்கு கேக்கல... உங்களுக்கு கேக்குறேன்.." என்று
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Sufism Related Quotes
"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)
“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)
Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63
"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)
Thursday, December 31, 2009
Wednesday, December 23, 2009
எத்திராஜ் காலேஜை தெரியுமா? - இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் கேள்வி
ஆபிதீன் நானா அவர்கள் இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் எஸ்.எம்.எஸ். ஐ பதிவாக எழுதியிருந்தார்கள். அதில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்க்ள் 'அல்லா என்று உனக்கு பெயரிட்டது யார்?' என்று கவிதை எழுதியிருந்தார்கள்.
அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள்.
அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.
எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.
இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது.
என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான்.
ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.
ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள்.
ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.
ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.
வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.
1. http://abedheen.googlepages.com/zafarulla.html
2. http://nagoori.wordpress.com/category/கவிஞரà¯-ஜபரà¯à®²à¯à®²à®¾/
3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1
இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..
நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை.
அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.
அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..
இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?
நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு
இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே,
நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது
இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?
எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.
"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த
எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.
இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.
'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.
ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை.
'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.
'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.
'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்
'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா
அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள்.
அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.
எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.
இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது.
என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான்.
ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.
ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள்.
ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.
ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.
வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.
1. http://abedheen.googlepages.com/zafarulla.html
2. http://nagoori.wordpress.com/category/கவிஞரà¯-ஜபரà¯à®²à¯à®²à®¾/
3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1
இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..
நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை.
அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.
அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..
இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?
நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு
இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே,
நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது
இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?
எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.
"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த
எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.
இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.
'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.
ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை.
'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.
'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.
'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்
'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா
Labels:
இஜட்.ஜபருல்லாஹ்,
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Tuesday, December 22, 2009
சில டைரி குறிப்புகள்...
புதுசா படம் ரிலீசானா இந்த நாகூர் ஜமாக்கு (கூட்டத்துக்கு) ஹல்பெல்லாம் (மனசெல்லாம்) குளுந்த மண்டபமா (குளிர்ந்த மண்டம் - நாகூர் தர்காவில் உள்ள ஒரு இடம் - கோடையில் கூட குளிராய் இருக்கும்) மாறிடும்.
ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு.
ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.
அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை.
பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் எங்களை திரும்பி பார்த்தார்.
நான் அவரை கவனித்தேன், என்னா இவர் நம்மளை ஏன் திரும்பி பார்க்கிறார் என்று நினைக்கும் போதே முறைப்பது போல் தெரிந்தது. என்னா இவர் நம்மள பார்த்து முறைக்கிறார் என்று நினைக்கும் போதே எழுந்து விட்டார். என்னா எழுந்திருக்கிறார் என்று ..... எங்கள் குரூப்பை நோக்கி வந்தார்.
வந்தவர் கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, 'சார், படம் எப்ப போடுவாங்க.." என்ற கேள்வி தான் அது.
என் மச்சான், 'ஓய்..! படம் ஆரம்பிச்சு இடைவேளை உட போறான், படம் எப்ப போடுவானா..?' என்று கேட்க
'சூரியன்னு.. (சூரியன் படம் - சரத்குமார் நடித்தது - சூரியன யாரும் சுட முடியாது சார் - சூரியன் வெப்பம் தான் நம்மள சுடும் என்ற கவுண்டமனி காமெடி) போஸ்டர்ல பாத்தோமே ! அந்த படம் கிடையாதா சார்..!' என்று அப்பாவியாக கேக்க
'சூரியன் படம் ஆனந்த் தியேட்டர்ல..! இது லிட்டில் ஆனந்த்' என்றதும் அவர் மொகத்துல இருந்த லிட்டில் ஆனந்தமும் மறைஞ்சு போச்சு.
என் மச்சான் ஜாபர் சுல்தான் சிரித்து கொண்டே சொன்னான், 'இவர் வந்து சூரியன் படத்த பத்தி கேக்கலைன்னா கொடுத்த காசு தெண்டமா போயிருக்கும்.'
(இந்த டைரி குறிப்புல நிறைய 'take away' இருக்கு)
ரிலீசான படங்களை பார்க்குறதுக்காக காரை புடிச்சிகிட்டு மாயவரம் என்னா?, திருவாரூர் என்னா?, தஞ்சாவூர், திருச்சி, ஏன் சென்னைக்கு கூட போய் தங்கி படம் பார்த்துட்டு வருவதுண்டு.
ஒரு சமூக நீதியோட தான் படம் பார்ப்போம், பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்று கிடையாது, அது அட்ரஸே இல்லாத படமாக இருந்தாலும் சரி, ஒரு முறையேனும் பார்த்துவிடுவது என்று கோடம்பாக்கத்துக்கும் நாகூருக்கும் ஒரு psychological contract கூட இருக்கிறது.
அப்படி ஒரு முறை 'மங்கள நாயகன்' என்ற ஒரு படத்தை சென்னை லிட்டில் ஆனந்த் எனும் திரையரங்கத்தில் நான் உறவினர்கள் சகிதமாக பார்த்து கொண்டிருந்தேன். படம் பெரும் குப்பை என்பதை தவிர படத்தை பற்றிய செய்திகள் வேறு எதுவும் நினைவிலில்லை.
பால்கனியில் எங்க ஜமா அல்லாமல் ஒரு இரண்டு நண்பர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து கிட்டதட்ட இடைவேளை விடப் போற நேரம், அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் எங்களை திரும்பி பார்த்தார்.
நான் அவரை கவனித்தேன், என்னா இவர் நம்மளை ஏன் திரும்பி பார்க்கிறார் என்று நினைக்கும் போதே முறைப்பது போல் தெரிந்தது. என்னா இவர் நம்மள பார்த்து முறைக்கிறார் என்று நினைக்கும் போதே எழுந்து விட்டார். என்னா எழுந்திருக்கிறார் என்று ..... எங்கள் குரூப்பை நோக்கி வந்தார்.
வந்தவர் கேட்ட கேள்வி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, 'சார், படம் எப்ப போடுவாங்க.." என்ற கேள்வி தான் அது.
என் மச்சான், 'ஓய்..! படம் ஆரம்பிச்சு இடைவேளை உட போறான், படம் எப்ப போடுவானா..?' என்று கேட்க
'சூரியன்னு.. (சூரியன் படம் - சரத்குமார் நடித்தது - சூரியன யாரும் சுட முடியாது சார் - சூரியன் வெப்பம் தான் நம்மள சுடும் என்ற கவுண்டமனி காமெடி) போஸ்டர்ல பாத்தோமே ! அந்த படம் கிடையாதா சார்..!' என்று அப்பாவியாக கேக்க
'சூரியன் படம் ஆனந்த் தியேட்டர்ல..! இது லிட்டில் ஆனந்த்' என்றதும் அவர் மொகத்துல இருந்த லிட்டில் ஆனந்தமும் மறைஞ்சு போச்சு.
என் மச்சான் ஜாபர் சுல்தான் சிரித்து கொண்டே சொன்னான், 'இவர் வந்து சூரியன் படத்த பத்தி கேக்கலைன்னா கொடுத்த காசு தெண்டமா போயிருக்கும்.'
(இந்த டைரி குறிப்புல நிறைய 'take away' இருக்கு)
Friday, December 18, 2009
மாச்சிஸ் (- தீக்குச்சி) இந்தி பட விமர்சனம்
சீக்கியர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் குறுந்தகவல்களையும் இணைய அஞ்சல்களையும் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தவர்களுக்கு அவர்களின் கடந்த கால வேதனைகளை பற்றியும் 80களில் அவர்கள் அனுபவித்த துன்பங்களை பற்றியும் படித்து மனம் குமுறியதுண்டா என்று தெரியவில்லை.
இன்றைக்கு ஒரு சமூகத்தில் புள்ளையாண்டான் படித்து விட்டு அமெரிக்காவில் நன்ன உத்தியோகத்துல இருந்தா தான் பெருமை. வேறொரு சமூகத்தில் வாப்பா பயணத்துல இருக்காஹா என்றால் தான் பெருமை.
ஆனால் ராணுவத்தில் இன்ன ரேங்கில் இருக்கிறான் என்று பெருமைபடும் ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது சீக்கிய சமூகமாகத் தான் இருக்கும்.
அந்த சமூகத்தின் புனித தலமான பஞ்சாப் கோவிலில் புளு ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவம் (எந்த ராணுவத்தில் பணியாற்றுவதை பெருமை என்று கருதினார்களோ அதே ராணுவம் தான்) உள்ளே புகுந்ததை தொடர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தமும் நினைத்து பார்க்கையில் அல்லது படித்து பார்க்கையில் ரத்தம் உறைய வைப்பவையாகவே இருக்கிறது.
தீவிரவாதிகளை பந்தாடும் விஜயகாந்துகளும் அர்ஜுன்களும் ஸ்டார்களாக வேண்டுமென்றால் மின்னியிருக்கலாம், ஆனால் சமுதாய அக்கறை உள்ள கதாபாத்திரங்களாக நம்முடன் வாழவிலை என்பது தான் உண்மை.
இளைஞர்கள் என்பவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சின்ன உரசலிலும் தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படி தீ பற்றிக் கொண்ட தீக்குச்சிகளின் கதை தான் மாச்சிஸ். அதுமட்டுமல்ல அப்படி உரசுவதற்கு காரணமாக காவல் துறையினரின் வழக்கமான விருந்தோம்பல்களும் அரசியல்வாதியின் அரசியல் இயல்புகளுமே காரணம் என்பதையும் இந்த படம் சுட்டிக் காட்ட தவறவில்லை.
ஒரு அரசியல்வாதியை சுட்டதற்காக 'ஜிம்மி' என்ற தீவிரவாதியை தேடி அலையும் இன்ஸ்பெக்டர் 'வொஹ்ரா' 'ஜஸ்வந்த் சிங்'கின் வீட்டில் ஜிம்மி ஆயுதங்களுடன் மறைந்து இருப்பதாக கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு போலிஸ் படைகளுடன் விரைகிறார்.
ஜஸ்வந்த் சிங் வீட்டில் அவரின் தங்கை வீரன் என்கிற வீரேந்திரா (தபு), மற்றும் அவரின் தாயார் இவர்களுடன் தான் குடி இருக்கிறார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பன் பாலி என்கிற கிரிபால் சிங்குக்கும் வீரனுக்கும் திருமணம் செய்வது பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது தான் போலீஸ் படை உள்ளே நுழைகிறது.
ஜஸ்வந்த் சிங்கிடம், 'மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதியையும் அயுதங்களையும் மரியாதையாக ஒப்படைத்து விடும் படி' கேட்கிறது.
'அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் போகவே 'அந்த தீவிரவாதி பேரு என்னா?' என்று கேட்கிறார் ஜஸ்வந்த் சிங்
'ஜிம்மி' என்ற பெயரை சொன்னவுடன் சிரித்துக் கொண்டே 'எனக்கு ஜிம்மியை தெரியும்' என்று வீட்டுக்கு பின்புறம் அவ்வளவு போலீஸையும் கூட்டிக் கொண்டு போய் 'ஜிம்மி..' என்று கூப்பிட ஜிம்மி வருகிறது. ஜிம்மி அவர் வீட்டு நாய்.
ஜஸ்வந்த் சிங் அந்த நாயை காட்டி, 'இது தான் எனக்கு தெரிந்த ஜிம்மி, இதுக்கு துப்பாக்கி எல்லாம் பிடிக்க தெரியாதே..' என்றதும் வெந்து போகிறார் வெஹ்ரா.
விசாரணைக்கு வரவேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்கை போலீஸ் கையோடு அழைத்து கொண்டு போகிறது. 'உடனே விட்டுவிடுவோம்' என்று அழைத்து செல்கிறது போலீஸ். வீரனின் அழுகை தாங்க முடியாமல் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஸ்டேஷனாக ஏறி இறங்கி பார்த்தும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
போலீஸ்காரர்கள் இது மாதிரி தான் யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், எவன் கிடைக்கிறானோ அவனை அழைத்து கொண்டு போய் மூன்றாம் தர டிரீட்மெண்ட் கொடுத்து 'இது தாண்டா போலீஸ்' என்று படம் காட்டுவார்கள்.
15 நாட்களுக்கு பிறகு படுகாயமடைந்த நிலையில் வந்து சேருகிறான் ஜஸ்வந்த் சிங். கொதித்து போகிறான் நண்பன் பாலி. தன்னுடைய உறவினன் ஒருவன் தீவிரவாதியாக இருக்கிறான் என்பதால் அவனை கண்டு அந்த போலீஸை தண்டிக்க உதவி கிடைக்கும் என்று அவனை காண புறப்படுகிறான்.
பஞ்சாபில் சிங் அதிகம் பயணிக்கும் பஸ்ஸில் சிங் அல்லாத ஒருவர் கேமராவுடன் ஏறுகிறார். ஒரு பேருந்து நிறுத்தம் வருகிறது. பாலியுடன் அந்த கேமரா மேனும் இறங்கி வருகிறான், ஆனால் அவனிடத்தில் கேமரா இல்லை.
பாலி சொல்கிறான், 'பாய் சாப், உங்க கேமரா.." என்று -
அந்த கேமரா பார்ட்டி விழிக்கிறான், திடீரென்று கார் வருகிறது, தட்டு தடுமாறி காரின் உள்ளே புகுந்து பறந்து மறைகிறான்.
பஸ் வெடித்து சிதறுகிறது.
இந்நிலையில் தான் குண்டு தயாரிக்கும் சனாதானையும் தீவிரவாதிகளின் தலைவன் சந்திக்கிறான், (நான் இங்கே தீவிரவாதிகள் என்று எழுதுகிறேன், ஆனால் தீவிரவாதிக்கான சரியான அர்த்தம் (recognised definition) என்ன என்று எனக்கு தெரியவில்லை). இவனுடைய உறவினன் இறந்து விட்டது தெரிய வருகிறது.
ஆனால் சனாதனிடம் துணையாக சேர்ந்து கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் வொஹ்ரா என்ற இன்ஸ்பெக்டருடன் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரை (இவர் தான் நண்பனை காட்டடி அடித்திருப்பார்) மார்க்கெட்டில் வைத்து சுட்டு விட போலீஸ் அவனை தேடி மீண்டும் ஜஸ்வந்த் சிங் வீட்டிற்கு செல்கிறது.
அங்கே என்ன நடக்கிறது, வீரன் என்ன ஆனாள், பாலியும் வீரனும் சந்தித்தார்களா?, பாலியால் வொஹ்ராவை தண்டிக்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு மாச்சிஸ் விடை சொல்கிறது.
குல்ஜார் சாப் படம் என்றால் பிளேஷ் பேக் இல்லாமலா? படம் ஆரம்பித்த சில காட்சிகளுக்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவனாக பாலி இருக்கிறான். அப்போது அவர்கள் பாடும் 'சோட் ஆயே ஹம்..' 'சப்பா சப்பா..' பாடல்களும் அருமை. பானி பானி பாடல் தென்றல். இசை விஷால் பரத்வாஜ். (அப்பாஸ் மஸ்தான் தயாரிப்பில் வந்த கமினே என்ற இந்தி படத்தின் இயக்குனர்)
ஒரு கட்டத்தில் எந்த ஜிம்மியை தேடி போலீஸ் ஜஸ்வந்த் வீட்டிற்கு வந்ததோ அந்த ஜிம்மியை பாலி சந்திக்கும் போது ஜிம்மி தான் எப்படி இந்த போராளியானேன் என்று தெரிவிப்பார்.
தனது தந்தையை அவரது டர்பனை கழட்டி அந்த டர்பனாலேயே கைகளை பின்னால் கட்டி டயரில் நெருப்பை வைத்து கழுத்தில் மாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லி அழுவார்.
இப்படி ஒவ்வொருவர் தீவிரவாதியாகவோ அல்லது போராளியாகவோ மாற ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றது. அதைப் பற்றி யாராவது அக்கறையோடு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை.
இந்த படம் ரிலீசான போது கஷ்மீரிலும், பஞ்சாபிலும் தடை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றியை தடை செய்ய முடியவில்லை.
தீவிரவாதிகள் படம் என்றதும் ஒரு மணிரத்னம் படமாகவோ அல்லது விஜய்காந்த் படமாகவோ நினனத்து கொண்டு பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் 'சோட் ஆயே ஹம்..' பாடல்
'சப்பா சப்பா' பாடல்
சில நியாயங்கள் காயங்களால் விளைகிறது. அது நியாயமா இல்லையா என்று வாதிப்பதை விட காயங்களுக்கு மருந்து அல்லது காயங்களுக்கு காரணமானவைகளை அடியோடு ஒழிப்பது (apply to the source) இது ஒன்றே சிறந்த வைத்தியமாக இருக்க முடியும்.
இன்றைக்கு ஒரு சமூகத்தில் புள்ளையாண்டான் படித்து விட்டு அமெரிக்காவில் நன்ன உத்தியோகத்துல இருந்தா தான் பெருமை. வேறொரு சமூகத்தில் வாப்பா பயணத்துல இருக்காஹா என்றால் தான் பெருமை.
ஆனால் ராணுவத்தில் இன்ன ரேங்கில் இருக்கிறான் என்று பெருமைபடும் ஒரு சமூகம் இருக்கிறதென்றால் அது சீக்கிய சமூகமாகத் தான் இருக்கும்.
அந்த சமூகத்தின் புனித தலமான பஞ்சாப் கோவிலில் புளு ஸ்டார் ஆபரேஷன் என்ற பெயரில் ராணுவம் (எந்த ராணுவத்தில் பணியாற்றுவதை பெருமை என்று கருதினார்களோ அதே ராணுவம் தான்) உள்ளே புகுந்ததை தொடர்ந்து இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் காரணத்தால் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தமும் நினைத்து பார்க்கையில் அல்லது படித்து பார்க்கையில் ரத்தம் உறைய வைப்பவையாகவே இருக்கிறது.
தீவிரவாதிகளை பந்தாடும் விஜயகாந்துகளும் அர்ஜுன்களும் ஸ்டார்களாக வேண்டுமென்றால் மின்னியிருக்கலாம், ஆனால் சமுதாய அக்கறை உள்ள கதாபாத்திரங்களாக நம்முடன் வாழவிலை என்பது தான் உண்மை.
இளைஞர்கள் என்பவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சின்ன உரசலிலும் தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படி தீ பற்றிக் கொண்ட தீக்குச்சிகளின் கதை தான் மாச்சிஸ். அதுமட்டுமல்ல அப்படி உரசுவதற்கு காரணமாக காவல் துறையினரின் வழக்கமான விருந்தோம்பல்களும் அரசியல்வாதியின் அரசியல் இயல்புகளுமே காரணம் என்பதையும் இந்த படம் சுட்டிக் காட்ட தவறவில்லை.
ஒரு அரசியல்வாதியை சுட்டதற்காக 'ஜிம்மி' என்ற தீவிரவாதியை தேடி அலையும் இன்ஸ்பெக்டர் 'வொஹ்ரா' 'ஜஸ்வந்த் சிங்'கின் வீட்டில் ஜிம்மி ஆயுதங்களுடன் மறைந்து இருப்பதாக கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு போலிஸ் படைகளுடன் விரைகிறார்.
ஜஸ்வந்த் சிங் வீட்டில் அவரின் தங்கை வீரன் என்கிற வீரேந்திரா (தபு), மற்றும் அவரின் தாயார் இவர்களுடன் தான் குடி இருக்கிறார். ஜஸ்வந்த் சிங்கின் நண்பன் பாலி என்கிற கிரிபால் சிங்குக்கும் வீரனுக்கும் திருமணம் செய்வது பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது தான் போலீஸ் படை உள்ளே நுழைகிறது.
ஜஸ்வந்த் சிங்கிடம், 'மறைத்து வைத்திருக்கும் தீவிரவாதியையும் அயுதங்களையும் மரியாதையாக ஒப்படைத்து விடும் படி' கேட்கிறது.
'அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் போகவே 'அந்த தீவிரவாதி பேரு என்னா?' என்று கேட்கிறார் ஜஸ்வந்த் சிங்
'ஜிம்மி' என்ற பெயரை சொன்னவுடன் சிரித்துக் கொண்டே 'எனக்கு ஜிம்மியை தெரியும்' என்று வீட்டுக்கு பின்புறம் அவ்வளவு போலீஸையும் கூட்டிக் கொண்டு போய் 'ஜிம்மி..' என்று கூப்பிட ஜிம்மி வருகிறது. ஜிம்மி அவர் வீட்டு நாய்.
ஜஸ்வந்த் சிங் அந்த நாயை காட்டி, 'இது தான் எனக்கு தெரிந்த ஜிம்மி, இதுக்கு துப்பாக்கி எல்லாம் பிடிக்க தெரியாதே..' என்றதும் வெந்து போகிறார் வெஹ்ரா.
விசாரணைக்கு வரவேண்டும் என்று ஜஸ்வந்த் சிங்கை போலீஸ் கையோடு அழைத்து கொண்டு போகிறது. 'உடனே விட்டுவிடுவோம்' என்று அழைத்து செல்கிறது போலீஸ். வீரனின் அழுகை தாங்க முடியாமல் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஸ்டேஷனாக ஏறி இறங்கி பார்த்தும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
போலீஸ்காரர்கள் இது மாதிரி தான் யார் எவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள், சரியான ஆதாரம் கிடைக்க வில்லையென்றால் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள், எவன் கிடைக்கிறானோ அவனை அழைத்து கொண்டு போய் மூன்றாம் தர டிரீட்மெண்ட் கொடுத்து 'இது தாண்டா போலீஸ்' என்று படம் காட்டுவார்கள்.
15 நாட்களுக்கு பிறகு படுகாயமடைந்த நிலையில் வந்து சேருகிறான் ஜஸ்வந்த் சிங். கொதித்து போகிறான் நண்பன் பாலி. தன்னுடைய உறவினன் ஒருவன் தீவிரவாதியாக இருக்கிறான் என்பதால் அவனை கண்டு அந்த போலீஸை தண்டிக்க உதவி கிடைக்கும் என்று அவனை காண புறப்படுகிறான்.
பஞ்சாபில் சிங் அதிகம் பயணிக்கும் பஸ்ஸில் சிங் அல்லாத ஒருவர் கேமராவுடன் ஏறுகிறார். ஒரு பேருந்து நிறுத்தம் வருகிறது. பாலியுடன் அந்த கேமரா மேனும் இறங்கி வருகிறான், ஆனால் அவனிடத்தில் கேமரா இல்லை.
பாலி சொல்கிறான், 'பாய் சாப், உங்க கேமரா.." என்று -
அந்த கேமரா பார்ட்டி விழிக்கிறான், திடீரென்று கார் வருகிறது, தட்டு தடுமாறி காரின் உள்ளே புகுந்து பறந்து மறைகிறான்.
பஸ் வெடித்து சிதறுகிறது.
இந்நிலையில் தான் குண்டு தயாரிக்கும் சனாதானையும் தீவிரவாதிகளின் தலைவன் சந்திக்கிறான், (நான் இங்கே தீவிரவாதிகள் என்று எழுதுகிறேன், ஆனால் தீவிரவாதிக்கான சரியான அர்த்தம் (recognised definition) என்ன என்று எனக்கு தெரியவில்லை). இவனுடைய உறவினன் இறந்து விட்டது தெரிய வருகிறது.
ஆனால் சனாதனிடம் துணையாக சேர்ந்து கொள்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் வொஹ்ரா என்ற இன்ஸ்பெக்டருடன் வந்த இன்னொரு இன்ஸ்பெக்டரை (இவர் தான் நண்பனை காட்டடி அடித்திருப்பார்) மார்க்கெட்டில் வைத்து சுட்டு விட போலீஸ் அவனை தேடி மீண்டும் ஜஸ்வந்த் சிங் வீட்டிற்கு செல்கிறது.
அங்கே என்ன நடக்கிறது, வீரன் என்ன ஆனாள், பாலியும் வீரனும் சந்தித்தார்களா?, பாலியால் வொஹ்ராவை தண்டிக்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு மாச்சிஸ் விடை சொல்கிறது.
குல்ஜார் சாப் படம் என்றால் பிளேஷ் பேக் இல்லாமலா? படம் ஆரம்பித்த சில காட்சிகளுக்கு பிறகு தீவிரவாதிகளில் ஒருவனாக பாலி இருக்கிறான். அப்போது அவர்கள் பாடும் 'சோட் ஆயே ஹம்..' 'சப்பா சப்பா..' பாடல்களும் அருமை. பானி பானி பாடல் தென்றல். இசை விஷால் பரத்வாஜ். (அப்பாஸ் மஸ்தான் தயாரிப்பில் வந்த கமினே என்ற இந்தி படத்தின் இயக்குனர்)
ஒரு கட்டத்தில் எந்த ஜிம்மியை தேடி போலீஸ் ஜஸ்வந்த் வீட்டிற்கு வந்ததோ அந்த ஜிம்மியை பாலி சந்திக்கும் போது ஜிம்மி தான் எப்படி இந்த போராளியானேன் என்று தெரிவிப்பார்.
தனது தந்தையை அவரது டர்பனை கழட்டி அந்த டர்பனாலேயே கைகளை பின்னால் கட்டி டயரில் நெருப்பை வைத்து கழுத்தில் மாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லி அழுவார்.
இப்படி ஒவ்வொருவர் தீவிரவாதியாகவோ அல்லது போராளியாகவோ மாற ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றது. அதைப் பற்றி யாராவது அக்கறையோடு பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை.
இந்த படம் ரிலீசான போது கஷ்மீரிலும், பஞ்சாபிலும் தடை செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றியை தடை செய்ய முடியவில்லை.
தீவிரவாதிகள் படம் என்றதும் ஒரு மணிரத்னம் படமாகவோ அல்லது விஜய்காந்த் படமாகவோ நினனத்து கொண்டு பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் 'சோட் ஆயே ஹம்..' பாடல்
'சப்பா சப்பா' பாடல்
சில நியாயங்கள் காயங்களால் விளைகிறது. அது நியாயமா இல்லையா என்று வாதிப்பதை விட காயங்களுக்கு மருந்து அல்லது காயங்களுக்கு காரணமானவைகளை அடியோடு ஒழிப்பது (apply to the source) இது ஒன்றே சிறந்த வைத்தியமாக இருக்க முடியும்.
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Thursday, December 17, 2009
ஜட்ஜப்பா - பகுதி 3
ஜட்ஜப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்
ஜட்ஜப்பா - பகுதி 2 ஐ இங்கே படிக்கலாம்
முதன் முதலாக சிகரெட் குடிக்கும் போது இருமல் வருகிறதல்லவா? அது வெறும் இருமல் அல்ல - உடல் நம்மிடம் சொல்கிறது, அதாவது ”ஏதோ ஒரு அந்நிய உடலுக்கு ஒவ்வாத பொருளை உள்ளே இழுக்கிறாய்” என்று.
நாம் இதற்கெல்லாம் அசராமல் “எங்களுக்கு தெரியும், நான் சொல்றதை நீங்க செய்யுங்க, பேசாம நான் பிடிக்கிற புகையை நீங்க உள்ளே அனுப்புங்க..” என்பது போல் தொடர்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கவும் அது ஒரு பேச்சு பேசாமல் நாம் அனுப்புகிற கேடான புகையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
இப்படி நம் உடல் பல இடங்களில் முன்கூட்டியே நமக்கு வர இருக்கும் நல்லதையோ கெட்டதையோ சரியாக சொல்லி விடும்.
இதே போல் தான் நம் வாழ்க்கையும், சிலரது வாழ்க்கையை பார்த்தால் அவர்களது சிறு வயது வாழ்க்கையிலேயே சில சம்பவங்கள் அவர்கள் யாராக வருவார்கள் என்று சொல்லி விடும்.
இது ஒரு வகை ஜோசியம் மாதிரி, முன் கூட்டியே அறிவிக்கக் கூடியது, முன்னறிவிப்பு செய்வதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது பாவம் என்று வகைப்படுத்துவது சரியல்ல, இஸ்லாத்தை பொறுத்த வரை மறுமை வாழ்க்கை உள்பட முன்னறிவிக்கப்பட்ட விஷயங்கள் நிறையவே உள்ளன.
முன்னர் சொன்ன செய்திக்கு வருகிறேன், நம் வாழ்க்கையில் கூட சிறு வயதில் நடந்த சில சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான அஸ்திவார கம்பிகளையும் கற்களையும் காண முடியும். அது நல்லதை குறித்தாலும் சரி, அல்லதை குறித்தாலும் சரியே.
வக்த் என்ற இந்தி படத்தில் ஜோசியக்காரர் ஒருவர் பால்ராஜ் சாஹ்னியின் (பழைய இந்தி நடிகர்) கையை பார்த்து “நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்” என்பார்.
அதற்கு பால்ராஜ், “அதை ஏன் கையை பார்த்து சொல்றீங்க..? அதை விட என் முதுகை பார்த்தா இன்னும் தெளிவா சொல்லலாம்” என்று சட்டையை உயர்த்தி முதுகை காட்டுவார், அதில் அவர் மூட்டைகளை தூக்கி சுமந்ததற்கான வடுக்கள் இருக்கும்.
அதே போல் ஜட்ஜப்பாவின் வாழ்க்கையிலும் இரண்டு சம்பவங்கள் அவர்கள் யாரென்று முன்னரே ஜோசியம் சொல்லுகிறது.
முதல் சம்பவம்:
ஜட்ஜப்பாவின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவராக சீயத்துக்கு சென்று விட்ட படியால் எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்த வீட்டு வேலைகளை அவர்கள் மட்டுமே தனியாக பார்க்கும் படி ஆனது.
அத்தகைய வேலைகளில் ஒன்று கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து மாடுகளை குளிப்பாட்டுவது, மாட்டு கொட்டிலை துப்புரவு செய்வது, பால் கறப்பது என இப்படி எல்லா வேலைகளையும் வெட்கப் படாமல் செய்ய வேண்டும்.
அப்படி ஒருமுறை ஜட்ஜப்பா பசுமாட்டை குளிக்க வைத்து கொண்டிருந்த போது மாடு முட்டி விட்டது. இதனால் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் ஒரு கம்பை எடுத்து மாட்டை அடிஅடியென்று அடித்து விடுகிறார்கள்.
அதோடு விட்டுட்டு போக வேண்டியது தானே, அவர்கள் யோசித்து பார்க்கிறார்கள், ”மாட்டை போய் அடிக்கிறோமே, அதுக்கு என்ன பகுத்தறிவா இருக்கிறது” என்று - அந்த யோசனையின் முடிவாக அதே கம்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்கிறார்கள்.
இது யாருமே பொதுவாக செய்யாதது. யார் மீதும் கோபம் வந்தால் ஏசுவோம், அடிப்போம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து விட்ட பிறகு நம்மை நாமே ஏசிக் கொள்வதோ அல்லது அடித்து கொள்வதோ கிடையாது.
இவர்கள் என்னடா என்றால் யோசித்து பார்க்கிறார்கள், தவறை உணர்கிறார்கள், அத்தோடு நிற்காமல் தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்கிறார்கள்.
சிறு வயதிலேயே அவர்களிடம் இருந்த தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருந்த இத்தகைய குணம் தான் பிற்காலத்தில் அவர்கள் நீதி தவறாதவர் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.
இரண்டவது சம்பவம்:
நாகூர் மியா தெருவும் குஞ்சாலி மரைக்காயர் தெருவும் தைரியமாக சந்தித்து கொள்ளும் தெரு முனையில் இருந்த “நாகூர் முனிசிபல் முகம்மடன் பாய்ஸ் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்ற பள்ளிகூடத்தில் தான் அவர்களது நா அனா ஆவன்னா பழகியது.
அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் சென்னை ராஜதானி கவர்னராக இருந்த வெள்ளைக்கார துரை அப்போதைய வழக்கப்படி பதவிக்காலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் நாகூரின் மியா தெரு வழியாக போக போகிறார் என்றதும் பள்ளிகூடத்தில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் எதிரே இருந்த ஒரு வீட்டின் திண்ணை மீதேற்றி அந்த வழியாக போக இருக்கும் கவர்னரை பார்க்க காத்திருக்க வைத்தனர் ஆசிரியர்கள்.
அப்போது ஒரு ஆசிரியர் ஜட்ஜப்பாவை பார்த்து, ‘இப்படி தான் இஸ்மாயிலும் ஒரு நாள் கவர்னராகி பெரும் புகழ் அடைவான்” என்று கூறியிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே இல்லை இல்லை அவர் கற்பனை செய்த மாதிரியே 1980ம் வருடம் அக்டோபர் மாசம் ஜட்ஜப்பா தற்காலிக கவர்னராக பொறுப்பேற்கிறார்கள்.
அப்போது நாகூரில் எங்க வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஜட்ஜப்பாவுக்கு வந்தது.
அவ்வளவு தான், என்னுடைய தாயாரின் தந்தை சேத்தப்பா (கவுஸ் சேட் என்ற பெயருடைய இவர்களும் ஜட்ஜப்பாவும் தான் வீட்டு வேலைகளை ஒன்றாக பார்த்தது அதுவும் தவிர இவர்களின் தந்தையின் பூர்வீக சொத்தை தான் அப்துல் அஜீஸ் நிர்வகித்து வந்தது) எங்களது வீட்டிலிருந்து மியா தெரு பள்ளிகூடம் வரைக்கும் பந்தல் போட்டார்கள். வருகின்ற அத்தனை பேருக்கும் தங்க உண்ண குடிக்க என்று அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
அந்த வழியாக ஜட்ஜப்பா வருகிறார்கள், அவர்கள் படித்த பள்ளிகூடத்தை கார் கடக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் நின்ற திண்ணையை பார்க்கிறார்கள். அவர்கள் கண் முன் சிறிய வயதில் அவர்கள் நின்ற காட்சி கண்ணுக்கு தெரிகிறது.
அவர்களின் ஆசிரியர் சொன்னதை நன்றியுடனும் இறைவனின் அருளை எண்ணித் தாழ்மையுடனும் நினைத்துக் கொண்டதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
மேலே நான் சொல்லும் போது ஆசிரியர் சொன்ன மாதிரி இல்லை கற்பனை செய்த மாதிரி என்று எழுதியிருந்தேன். பேசிய ஆயிரம் மொழிகளை விட பேசாத நினைவுகளுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல பேசுகின்ற மொழியில் உணர்வுகளும் கற்பனைகளும் கலந்திருந்தால் பேசாத மொழிகளை போன்றே சக்தி உண்டு என்றும் நான் நம்புவதால் தான் அப்படி சொன்னேன்.
-------------------------------------------------------------------------------
நான் பாட்டுக்கு வூட்டு வாசல்ல ஒக்காந்து இருந்தேன், ஜட்ஜப்பா உள்ளக்கேயிருந்து வாசலுக்கு வந்தாஹா, கார்ல ஏறுனாஹா, ‘நீயும் ஏறிக்க’ன்னு எண்ட்ட சொன்னாஹா.
நான் மறு பேச்சு பேசாம ஏறி ஒக்காந்த ஒடனே, ‘சுல்தான் தைக்காவுக்கு போவணும். வழி சொல்லு” என்று என்னிடம் சொல்ல அவர்களின் மகனார் காசிம் காரை தெரு முனைக்கு கொண்டு வந்து விட்டார்.
எனக்கு ஒரே குழப்பம் “எந்த சுல்தான் தக்கா..? தெரியாதுன்னு சொன்னாக்கா ஏச்சு உழுவுமோ” என்று பேய் முழி முழித்துக் கொண்டு எச்சில் முழுங்கினேன்....
பகுதி 4 ல் தொடரும்
ஜட்ஜப்பா - பகுதி 2 ஐ இங்கே படிக்கலாம்
முதன் முதலாக சிகரெட் குடிக்கும் போது இருமல் வருகிறதல்லவா? அது வெறும் இருமல் அல்ல - உடல் நம்மிடம் சொல்கிறது, அதாவது ”ஏதோ ஒரு அந்நிய உடலுக்கு ஒவ்வாத பொருளை உள்ளே இழுக்கிறாய்” என்று.
நாம் இதற்கெல்லாம் அசராமல் “எங்களுக்கு தெரியும், நான் சொல்றதை நீங்க செய்யுங்க, பேசாம நான் பிடிக்கிற புகையை நீங்க உள்ளே அனுப்புங்க..” என்பது போல் தொடர்ந்து புகை பிடிக்க ஆரம்பிக்கவும் அது ஒரு பேச்சு பேசாமல் நாம் அனுப்புகிற கேடான புகையை உள்ளே இழுத்துக் கொள்கிறது.
இப்படி நம் உடல் பல இடங்களில் முன்கூட்டியே நமக்கு வர இருக்கும் நல்லதையோ கெட்டதையோ சரியாக சொல்லி விடும்.
இதே போல் தான் நம் வாழ்க்கையும், சிலரது வாழ்க்கையை பார்த்தால் அவர்களது சிறு வயது வாழ்க்கையிலேயே சில சம்பவங்கள் அவர்கள் யாராக வருவார்கள் என்று சொல்லி விடும்.
இது ஒரு வகை ஜோசியம் மாதிரி, முன் கூட்டியே அறிவிக்கக் கூடியது, முன்னறிவிப்பு செய்வதெல்லாம் மூடநம்பிக்கை அல்லது பாவம் என்று வகைப்படுத்துவது சரியல்ல, இஸ்லாத்தை பொறுத்த வரை மறுமை வாழ்க்கை உள்பட முன்னறிவிக்கப்பட்ட விஷயங்கள் நிறையவே உள்ளன.
முன்னர் சொன்ன செய்திக்கு வருகிறேன், நம் வாழ்க்கையில் கூட சிறு வயதில் நடந்த சில சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கான அஸ்திவார கம்பிகளையும் கற்களையும் காண முடியும். அது நல்லதை குறித்தாலும் சரி, அல்லதை குறித்தாலும் சரியே.
வக்த் என்ற இந்தி படத்தில் ஜோசியக்காரர் ஒருவர் பால்ராஜ் சாஹ்னியின் (பழைய இந்தி நடிகர்) கையை பார்த்து “நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்” என்பார்.
அதற்கு பால்ராஜ், “அதை ஏன் கையை பார்த்து சொல்றீங்க..? அதை விட என் முதுகை பார்த்தா இன்னும் தெளிவா சொல்லலாம்” என்று சட்டையை உயர்த்தி முதுகை காட்டுவார், அதில் அவர் மூட்டைகளை தூக்கி சுமந்ததற்கான வடுக்கள் இருக்கும்.
அதே போல் ஜட்ஜப்பாவின் வாழ்க்கையிலும் இரண்டு சம்பவங்கள் அவர்கள் யாரென்று முன்னரே ஜோசியம் சொல்லுகிறது.
முதல் சம்பவம்:
ஜட்ஜப்பாவின் சொந்தங்கள் ஒருவர் பின் ஒருவராக சீயத்துக்கு சென்று விட்ட படியால் எல்லோரும் பகிர்ந்து கொண்டு செய்த வீட்டு வேலைகளை அவர்கள் மட்டுமே தனியாக பார்க்கும் படி ஆனது.
அத்தகைய வேலைகளில் ஒன்று கிணத்திலிருந்து தண்ணீர் இறைத்து மாடுகளை குளிப்பாட்டுவது, மாட்டு கொட்டிலை துப்புரவு செய்வது, பால் கறப்பது என இப்படி எல்லா வேலைகளையும் வெட்கப் படாமல் செய்ய வேண்டும்.
அப்படி ஒருமுறை ஜட்ஜப்பா பசுமாட்டை குளிக்க வைத்து கொண்டிருந்த போது மாடு முட்டி விட்டது. இதனால் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் ஒரு கம்பை எடுத்து மாட்டை அடிஅடியென்று அடித்து விடுகிறார்கள்.
அதோடு விட்டுட்டு போக வேண்டியது தானே, அவர்கள் யோசித்து பார்க்கிறார்கள், ”மாட்டை போய் அடிக்கிறோமே, அதுக்கு என்ன பகுத்தறிவா இருக்கிறது” என்று - அந்த யோசனையின் முடிவாக அதே கம்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்கிறார்கள்.
இது யாருமே பொதுவாக செய்யாதது. யார் மீதும் கோபம் வந்தால் ஏசுவோம், அடிப்போம். ஆனால் அது தவறு என்று உணர்ந்து விட்ட பிறகு நம்மை நாமே ஏசிக் கொள்வதோ அல்லது அடித்து கொள்வதோ கிடையாது.
இவர்கள் என்னடா என்றால் யோசித்து பார்க்கிறார்கள், தவறை உணர்கிறார்கள், அத்தோடு நிற்காமல் தனக்கு தானே தண்டனையும் கொடுத்து கொள்கிறார்கள்.
சிறு வயதிலேயே அவர்களிடம் இருந்த தவறுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இருந்த இத்தகைய குணம் தான் பிற்காலத்தில் அவர்கள் நீதி தவறாதவர் என்ற அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்தது.
இரண்டவது சம்பவம்:
நாகூர் மியா தெருவும் குஞ்சாலி மரைக்காயர் தெருவும் தைரியமாக சந்தித்து கொள்ளும் தெரு முனையில் இருந்த “நாகூர் முனிசிபல் முகம்மடன் பாய்ஸ் ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்ற பள்ளிகூடத்தில் தான் அவர்களது நா அனா ஆவன்னா பழகியது.
அப்போது அவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் சென்னை ராஜதானி கவர்னராக இருந்த வெள்ளைக்கார துரை அப்போதைய வழக்கப்படி பதவிக்காலம் முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் நாகூரின் மியா தெரு வழியாக போக போகிறார் என்றதும் பள்ளிகூடத்தில் இருந்த அத்தனை பிள்ளைகளையும் எதிரே இருந்த ஒரு வீட்டின் திண்ணை மீதேற்றி அந்த வழியாக போக இருக்கும் கவர்னரை பார்க்க காத்திருக்க வைத்தனர் ஆசிரியர்கள்.
அப்போது ஒரு ஆசிரியர் ஜட்ஜப்பாவை பார்த்து, ‘இப்படி தான் இஸ்மாயிலும் ஒரு நாள் கவர்னராகி பெரும் புகழ் அடைவான்” என்று கூறியிருக்கிறார்.
அவர் சொன்ன மாதிரியே இல்லை இல்லை அவர் கற்பனை செய்த மாதிரியே 1980ம் வருடம் அக்டோபர் மாசம் ஜட்ஜப்பா தற்காலிக கவர்னராக பொறுப்பேற்கிறார்கள்.
அப்போது நாகூரில் எங்க வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வுக்கு வர வேண்டிய கட்டாயம் ஜட்ஜப்பாவுக்கு வந்தது.
அவ்வளவு தான், என்னுடைய தாயாரின் தந்தை சேத்தப்பா (கவுஸ் சேட் என்ற பெயருடைய இவர்களும் ஜட்ஜப்பாவும் தான் வீட்டு வேலைகளை ஒன்றாக பார்த்தது அதுவும் தவிர இவர்களின் தந்தையின் பூர்வீக சொத்தை தான் அப்துல் அஜீஸ் நிர்வகித்து வந்தது) எங்களது வீட்டிலிருந்து மியா தெரு பள்ளிகூடம் வரைக்கும் பந்தல் போட்டார்கள். வருகின்ற அத்தனை பேருக்கும் தங்க உண்ண குடிக்க என்று அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
அந்த வழியாக ஜட்ஜப்பா வருகிறார்கள், அவர்கள் படித்த பள்ளிகூடத்தை கார் கடக்கிறது, பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் நின்ற திண்ணையை பார்க்கிறார்கள். அவர்கள் கண் முன் சிறிய வயதில் அவர்கள் நின்ற காட்சி கண்ணுக்கு தெரிகிறது.
அவர்களின் ஆசிரியர் சொன்னதை நன்றியுடனும் இறைவனின் அருளை எண்ணித் தாழ்மையுடனும் நினைத்துக் கொண்டதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
மேலே நான் சொல்லும் போது ஆசிரியர் சொன்ன மாதிரி இல்லை கற்பனை செய்த மாதிரி என்று எழுதியிருந்தேன். பேசிய ஆயிரம் மொழிகளை விட பேசாத நினைவுகளுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல பேசுகின்ற மொழியில் உணர்வுகளும் கற்பனைகளும் கலந்திருந்தால் பேசாத மொழிகளை போன்றே சக்தி உண்டு என்றும் நான் நம்புவதால் தான் அப்படி சொன்னேன்.
-------------------------------------------------------------------------------
நான் பாட்டுக்கு வூட்டு வாசல்ல ஒக்காந்து இருந்தேன், ஜட்ஜப்பா உள்ளக்கேயிருந்து வாசலுக்கு வந்தாஹா, கார்ல ஏறுனாஹா, ‘நீயும் ஏறிக்க’ன்னு எண்ட்ட சொன்னாஹா.
நான் மறு பேச்சு பேசாம ஏறி ஒக்காந்த ஒடனே, ‘சுல்தான் தைக்காவுக்கு போவணும். வழி சொல்லு” என்று என்னிடம் சொல்ல அவர்களின் மகனார் காசிம் காரை தெரு முனைக்கு கொண்டு வந்து விட்டார்.
எனக்கு ஒரே குழப்பம் “எந்த சுல்தான் தக்கா..? தெரியாதுன்னு சொன்னாக்கா ஏச்சு உழுவுமோ” என்று பேய் முழி முழித்துக் கொண்டு எச்சில் முழுங்கினேன்....
பகுதி 4 ல் தொடரும்
Friday, December 11, 2009
குரான் ஷரீஃபின் சவால்
இந்த பதிவு மரியாதைக்குரிய திரு கோ.வி.கண்ணனின் குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல் என்ற எனது பதிவில் பின்னூட்ட கேள்விகளுக்கு பதில் எழுதும் முயற்சியாக எழுதப்படுகிறது.
கேள்வி 1.
குரான் ஷரீஃபில் வரும் ‘இது போல் இன்னொரு குரான் ஷரீஃபை கொண்டு வருவது’ என்ற சவால் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமிய அன்பர்கள் (பிறரை) ஏளனம் செய்வது பற்றிய என் கருத்து என்ன?
கேள்வி 2
குரான் ஷரீஃபில் வரும் மேலே கூறப்பட்ட அந்த சவால்கள் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுவதை பற்றி நான் என்ன நினைக்கிறேன்.
கேள்வி 3
அளவற்று (அல்லது எக்ஸ்ட்ராவாக) என்னை புகழுங்கள் என்று அல்லா கூறியதாக குரான் ஷரீஃபில் எங்காவது வசனம் உள்ளதா?
-----------------------------------------------------------------
இந்த பதிவில் முதல் இரண்டு கேள்விகளும் ஒரே திசையில் பயணிப்பதால் அதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன்,
அதுவும் தவிர முதல் இரண்டு கேள்வியில் எனக்கு பிடித்த விஷயம் நான் என்ன நினைக்கிறேன் என்று என் கருத்தை கேட்டது, இது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்னை போய் கருத்து கேட்கிறீர்களே நான் பெரிய ஆளாயிட்டேன் என்ற பெருமிதத்தால் நிச்சயமாக அல்ல,
மாறாக, குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போது கூட ‘குரான் ஷரீஃப் இப்படி சொல்கிறது அப்படி சொல்கிறது’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ’தோராயமாக குரான் ஷரீஃப் என்ன சொல்கிறது என்றால்’ 'an approximation of the meaning of what the Quran says is ..' என்று தான் ஆரம்பிப்பார்கள்,
அதாவது நான் புரிந்து கொண்டதை என் கருத்தாக எழுதுகிறேன், ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் என் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல - மற்றவை உங்கள் கருத்து.
-------------------------------------------------------------------------
முதல் இரண்டு கேள்விகளிலும் ஒரு விஷயம் பிராதனமாக சொல்லப்படுவது என்னவென்றால் குரான் ஷரீஃபில் வரும் சவால் பற்றியது.
அந்த சவால் என்ன என்று விபரமாக அறிவதுடன் அது எந்த கட்டத்தில் வருகிறது என்பதையும் அலசுவது அவசியமாகிறது.
அரபுக்காரர்கள் சிலைகளை வணங்கினார்கள், செத்ததை தின்று கொண்டிருந்தார்கள், உறவுகளை துண்டித்தார்கள், அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தினார்கள், பலவான்கள் பலவீனமானவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த காலகட்டத்தில் 40 வயதை கடந்த ஒருவர், எழுத படிக்க தெரியாதவர், ஒரு கவிதை கூட எழுதாதவர், ஒரு சொற்பொழிவை கூட ஆற்றாதவர், அல்-அமீன் (நேர்மையின் இருப்பிடம்), ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) (-முஹம்மது நபிகளை வசைக் கவிதைகள் இயற்றும் போது கூட அல்-அமீன் என்றே இயற்றினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) என்ற பெயருடைய ஒருவர் தன்னை இறைவனின் தூதர் எனவும் தனக்கு இறைவனால் வேத வசனங்கள் இறங்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.
தேவ தூதர் என்றால் அது யூத குலத்தில் தான் பிறக்கும் என்றும் யூதர்கள் மட்டும் தான் அறிஞர்கள் என்றும் (நம் நாட்டு கதை மாதிரி இருக்குல்ல..! உயர் ஜாதியிலிருந்து பெரியார் வரைக்கும் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்களே..!) மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்கள் வேத வசனங்கள் என்று சொல்லுகின்றவற்றை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்தது.
அப்படி என்ன சொன்னார்கள் என்றால் சிலை வணக்கத்தை கைவிட சொன்னார்கள், பேச்சில் உண்மை, வாக்கை காப்பாற்றுவது, வர்க்க வேறுபாடுகளை கலைவது, அமானித பொருள்களுக்கு (நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்) துரோகம் செய்யாமல் இருப்பது இப்படி பலவற்றை எடுத்து கூறினார்கள்.
இதை எல்லாம் எந்த கூட்டத்திடம் சொல்கிறார்கள் தெரியுமா..?, உதாரணமாக ஒரு சம்பவம் சொல்கிறேன், இம்ரவுல் கைஸ் என்று ஒருவன் இருந்தான், அவனது தந்தையை இன்னொருவன் கொன்று விட்டான். பழிக்கு பழி வாங்க (இந்தி, தமிழ் சினிமாவை போல்) அந்த கால வழக்கப்படி கடவுள் சிலையின் முன்னர் மூன்று அம்புகளை போட்டான், அதில் ஒன்றில் ‘சரி’ (-அதாவது கொல்லவும்) என்றும், இன்னொன்றில் ‘வேண்டாம்’ என்றும், மூன்றாவதில் எதுவும் எழுதாமலும் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு மூன்று முறை எடுத்தும் ‘வேண்டாம்’ என்று வரவே கடவுள் சிலையை பார்த்து, ‘உங்க அப்பனை கொன்னிருந்தால் இப்படி தான் வேண்டாம்னு சொல்லுவியா?’ என்று கேட்டுவிட்டு அம்புகளை உடைத்து அந்த கல்லுருவத்தின் முகத்தில் எறிந்து விட்டு சென்றான்.
சமூக வாழ்க்கை இன்னும் மோசம், இஸ்லாம் அந்த மக்களிடையே தோன்றியதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகளில் நூற்று முப்பத்திரெண்டு போர்கள் நடந்து ரத்தம் சிந்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் போய் ஒருத்தர் இதெல்லாம் கூடாது நான் தான் இறைவனின் தூதர் என்று சொல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய சுமையை இறைவன் முஹம்மது நபிகளின் மீது இறைவன் விதித்தான்.
இத்தனை காலம் கஃபாவில் இருக்கும் கடவுள் சிலையால் இருந்த மதிப்பும், கடவுள் குடும்பத்தினர் என்ற மரியாதையும் போய் விடுமோ என்ற பயமும் (நம்ம ஊர் கதை தான்) பணக்காரன் ஏழை என்ற வர்க்க பேதங்களை ஒழிந்து போவதையும் அந்த அரபுகள் விரும்பவில்லை.
இதன் காரணத்தால் நபிகள் நாயகம் போகும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து சென்று வசைக் கவிதைகள் பாடுவது, பைத்தியக்காரன், பிசாசு பிடித்திருக்கிறது என்பது அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சு யார் காதிலும் விழாமல் இருக்க கத்தி கூச்சலிடுவார்கள். கல்லால் அடித்தார்கள், குப்பைகளை கொட்டினார்கள்.
அவர்கள் செய்த இன்னொரு முயற்சி பதவி தருகிறேன், அதிகாரம் தருகிறேன், அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறேன் இப்படி ஆசை வார்த்தை காட்டியது.
முஹம்மது நபிகள் திடமாக நின்றார்கள், ‘ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் சேர்த்து தந்தாலும் என்னுடைய கொள்கையை விடமாட்டேன்..’ என்று அந்த கொள்கை பிடிப்போடு பிடி கொடுக்காமல் இருந்தார்கள்.
அவர்களை தொல்லைகள் கொடுத்து பார்த்து எதுவும் சரிபட்டு வராமல் போகவே, அரேபியர்களின் அடுத்த கட்ட முயற்சியாக ‘அவர் சொல்வது எல்லாம் அவரே சொல்வது தான்’ என்றும் ‘அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என்றும் குற்றம் சுமத்தி தோற்கடிக்க பார்த்தது தான்.
இப்போது தான் வருகிறது அந்த சவால் செய்தி, இப்படி சவால் விடுவது வழக்கமாக நபிமார்களுக்கு வரும் பிரச்சினை தான்.
உதாரணமாக மூஸா நபி காலத்தில் தந்திரங்கள் செய்வது பிரபலமாக இருந்தது (excelled at magical trickery). மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் நடந்த சவாலை பற்றி டென் கமாண்ட்மேண்ட்ஸ் படங்களை பார்த்திருக்கலாம். அதுவும் இறைவனால் அந்த கால மக்களுக்கு விடப்பட்ட சவால் தான்.
மூஸா நபியவர்களுடன் போட்டியிட்ட அந்த மந்திரவாதிகள் கட்டையை தூக்கி எறியும் போதும் பாம்பு வரத்தான் செய்தது, ஆனால் என்ன மூஸா நபி எறிந்த கட்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த பாம்பு மந்திரவாதிகளின் பாம்பையே விழுங்கி விட்டது.
அதே போல் ஜீஸஸ் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஈஸா நபியவர்களின் கால கட்டத்தில் மருத்துவம் பிராதனமாக இருந்தது (excelled at matters of medicine). அதனால் தான் எல்லோரையும் மிகைக்க கூடிய அளவுக்கு அவர்கள் இறந்தவர்களை உயிர்பிப்பது வரை செய்து காட்டினார்கள்.
இதன் அடிப்படையில் முஹம்மது நபிகளின் கால கட்டத்தில் இலக்கியம் பெரிதும் மதிக்கப்பட்டது. ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அவரால் கவிதைகள் படைக்க முடியுமா என்று பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களிடம் தான் இறைவன் மற்ற நபிமார்களின் கால கட்டத்தில் அந்த காலத்துக்கு தேவையான சவால்கள் உருவானதோ அதே மாதிரி தான் இலக்கியத்திலேயே சவாலை விடுத்தான்.
அந்த சவால் நியாயமானது தான், உதாரணமா ஒரு கம்ப்யூட்டர் புரொகிரமர் கிட்டே போய் இந்தாப்பா உலகத்துல இல்லாத ஒரு புது கெமிக்கல் பார்முலா எழுதி கொண்டு வா என்று கெமிஸ்ட் கிட்டே வைக்க வேண்டிய சவாலை அது வைக்கவில்லை.
கவிதையில் சிறந்தவர்களிடம், இலக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டதற்காக தங்களை தாங்களே கௌரவப் படுத்தி கொண்டவர்களிடம் அந்த சவாலை வைத்தது. அதுவும் தவிர, அப்படி சவாலை வைத்ததும் முஹம்மது நபியல்ல, இறைவன் தான்.
முதல் சவால்:
ஆகவே (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்... நேரான வழியை அறிவிக்கக் கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என்று நீர் கூறும்
சூரா கஸஸ் 28:49
இது அல்லாஹ் கிட்டேயிருந்து வரவில்லை, அவரே தான் சொல்கிறார் என்று சொன்னார்களா..? அதற்காக அப்படி உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வேதத்தை கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது.
இந்த வசனத்தில் இருக்கும் அழகு சும்மா எதையாவது கொண்டு வந்து இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி விட கூடாது என்பதற்காக நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்ற அந்த வார்த்தை. எப்படி..?
இரண்டாவது சவால்:
நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும்: இதைப்போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான யாவரையும் (இதற்காக) அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். (மெய்யாகவே இது கற்பனையென்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!)
சூரா ஹூது 11:13
இந்த இரண்டாவது சவாலில் கற்பனை செய்து பார்த்து பத்தே பத்து அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் என்கிறது.
மூன்றாவது சவால்
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்களும்) அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (உங்களுக்கு உதவியாக) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க் கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள்
சூரா பகரா 02:23
அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பொய்யென புரட்டென கூறி ஒழித்து கட்ட துடித்து வாய்ப்பை எண்ணி காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பல்லவா இது..?
வலிய வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முயற்சி செய்தும் பார்த்தார்கள்.. முந்தைய நபிமார்களிடத்திலே அவர்களின் எதிரிகள் எவ்வாறு படுதோல்வி அடைந்தார்களோ அதே போல் தான் இவர்களும் படுதோல்வி அடைந்தார்கள். இது நபிமார்களின் வரலாறுகளில் காணப்படாத செய்தி அல்ல.
நான் என்னா சொல்றேன், அதுவும் தவிர, இன்றைக்கு அரபிங்கறது செத்த மொழி அல்ல, வாழும் மொழி தான், இன்னமுமா அந்த சவால் இருக்கிறது என்ற கேள்வியை விடுத்து இதோ இருக்கிறதே என்று ஒரு அத்தியாயத்தையேனும் காட்டுவது அல்லது புதிதாக எழுதி கொண்டு வந்து வாதிடுவது தான் அறிவுடைமை என்கிறேன்.
எப்படி கொண்டுட்டு வரணும் தெரியுமா..?
இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்!
சூரா அல்கவ்ஸர் 108: 1-3
இப்படிப்பட்ட அழகும் ஆழமும் எழிலும் கருத்தேற்றமும் மிக்க வசனத்திற்கொப்ப அரபிப் பெரும் புலவர்களை எல்லாம் துணையாக அழைத்துக் கொண்டு உண்மையாளர்களாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று நான் அல்ல இறைவன் சவால் விடுகிறான்.
அது முஸ்லீம்கள் ஏளனமாக கேட்பதாக கூறுகிறீர்கள்? முதலில் இது முஸ்லீம்களின் சவாலே அல்ல, இது இறைவனின் சவால், அதுவும் தவிர, இது இறைவேதம் அல்ல என்று ஏளனம் செய்தார்களே அவர்களுக்காக சொல்லப்பட்டது.
என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.
------------------------------------------------------------------------
உங்களின் மூன்றாவது கேள்வி அதாங்க உருவகம், உருவம், இணைவைத்தல், பாவம், அப்புறம் எக்ஸ்ட்ரா புகழ்ச்சி இதெல்லாம் தனிப் பதிவு.
-----------------------------------------------------------------------
ஒரு கேள்வி கேட்டா ஆதம் காலத்து கதைலேந்து ஆரம்பிப்பான் என்று இந்த கொடுமையே போதும் என்று நீங்கள் சொன்னாலும் சரியே!
-------------------------------------------------------------------------
கேள்வி 1.
குரான் ஷரீஃபில் வரும் ‘இது போல் இன்னொரு குரான் ஷரீஃபை கொண்டு வருவது’ என்ற சவால் இன்னமும் அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமிய அன்பர்கள் (பிறரை) ஏளனம் செய்வது பற்றிய என் கருத்து என்ன?
கேள்வி 2
குரான் ஷரீஃபில் வரும் மேலே கூறப்பட்ட அந்த சவால்கள் பதினான்கு நூற்றாண்டுகளாகியும் யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்படுவதை பற்றி நான் என்ன நினைக்கிறேன்.
கேள்வி 3
அளவற்று (அல்லது எக்ஸ்ட்ராவாக) என்னை புகழுங்கள் என்று அல்லா கூறியதாக குரான் ஷரீஃபில் எங்காவது வசனம் உள்ளதா?
-----------------------------------------------------------------
இந்த பதிவில் முதல் இரண்டு கேள்விகளும் ஒரே திசையில் பயணிப்பதால் அதற்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கிறேன்,
அதுவும் தவிர முதல் இரண்டு கேள்வியில் எனக்கு பிடித்த விஷயம் நான் என்ன நினைக்கிறேன் என்று என் கருத்தை கேட்டது, இது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்னை போய் கருத்து கேட்கிறீர்களே நான் பெரிய ஆளாயிட்டேன் என்ற பெருமிதத்தால் நிச்சயமாக அல்ல,
மாறாக, குரான் ஷரீஃபை மொழி பெயர்க்கும் போது கூட ‘குரான் ஷரீஃப் இப்படி சொல்கிறது அப்படி சொல்கிறது’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ’தோராயமாக குரான் ஷரீஃப் என்ன சொல்கிறது என்றால்’ 'an approximation of the meaning of what the Quran says is ..' என்று தான் ஆரம்பிப்பார்கள்,
அதாவது நான் புரிந்து கொண்டதை என் கருத்தாக எழுதுகிறேன், ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவது போல் என் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல - மற்றவை உங்கள் கருத்து.
-------------------------------------------------------------------------
முதல் இரண்டு கேள்விகளிலும் ஒரு விஷயம் பிராதனமாக சொல்லப்படுவது என்னவென்றால் குரான் ஷரீஃபில் வரும் சவால் பற்றியது.
அந்த சவால் என்ன என்று விபரமாக அறிவதுடன் அது எந்த கட்டத்தில் வருகிறது என்பதையும் அலசுவது அவசியமாகிறது.
அரபுக்காரர்கள் சிலைகளை வணங்கினார்கள், செத்ததை தின்று கொண்டிருந்தார்கள், உறவுகளை துண்டித்தார்கள், அண்டை வீட்டுக்காரரை துன்புறுத்தினார்கள், பலவான்கள் பலவீனமானவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த காலகட்டத்தில் 40 வயதை கடந்த ஒருவர், எழுத படிக்க தெரியாதவர், ஒரு கவிதை கூட எழுதாதவர், ஒரு சொற்பொழிவை கூட ஆற்றாதவர், அல்-அமீன் (நேர்மையின் இருப்பிடம்), ஸாதிக் (உண்மையின் உறைவிடம்) (-முஹம்மது நபிகளை வசைக் கவிதைகள் இயற்றும் போது கூட அல்-அமீன் என்றே இயற்றினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) என்ற பெயருடைய ஒருவர் தன்னை இறைவனின் தூதர் எனவும் தனக்கு இறைவனால் வேத வசனங்கள் இறங்கப்படுகிறது எனவும் கூறுகிறார்.
தேவ தூதர் என்றால் அது யூத குலத்தில் தான் பிறக்கும் என்றும் யூதர்கள் மட்டும் தான் அறிஞர்கள் என்றும் (நம் நாட்டு கதை மாதிரி இருக்குல்ல..! உயர் ஜாதியிலிருந்து பெரியார் வரைக்கும் எல்லோரும் ஞாபகத்துக்கு வருவார்களே..!) மூட நம்பிக்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் அவர்கள் வேத வசனங்கள் என்று சொல்லுகின்றவற்றை பின்பற்றுவதில் பிரச்சினை இருந்தது.
அப்படி என்ன சொன்னார்கள் என்றால் சிலை வணக்கத்தை கைவிட சொன்னார்கள், பேச்சில் உண்மை, வாக்கை காப்பாற்றுவது, வர்க்க வேறுபாடுகளை கலைவது, அமானித பொருள்களுக்கு (நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்) துரோகம் செய்யாமல் இருப்பது இப்படி பலவற்றை எடுத்து கூறினார்கள்.
இதை எல்லாம் எந்த கூட்டத்திடம் சொல்கிறார்கள் தெரியுமா..?, உதாரணமாக ஒரு சம்பவம் சொல்கிறேன், இம்ரவுல் கைஸ் என்று ஒருவன் இருந்தான், அவனது தந்தையை இன்னொருவன் கொன்று விட்டான். பழிக்கு பழி வாங்க (இந்தி, தமிழ் சினிமாவை போல்) அந்த கால வழக்கப்படி கடவுள் சிலையின் முன்னர் மூன்று அம்புகளை போட்டான், அதில் ஒன்றில் ‘சரி’ (-அதாவது கொல்லவும்) என்றும், இன்னொன்றில் ‘வேண்டாம்’ என்றும், மூன்றாவதில் எதுவும் எழுதாமலும் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு மூன்று முறை எடுத்தும் ‘வேண்டாம்’ என்று வரவே கடவுள் சிலையை பார்த்து, ‘உங்க அப்பனை கொன்னிருந்தால் இப்படி தான் வேண்டாம்னு சொல்லுவியா?’ என்று கேட்டுவிட்டு அம்புகளை உடைத்து அந்த கல்லுருவத்தின் முகத்தில் எறிந்து விட்டு சென்றான்.
சமூக வாழ்க்கை இன்னும் மோசம், இஸ்லாம் அந்த மக்களிடையே தோன்றியதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகளில் நூற்று முப்பத்திரெண்டு போர்கள் நடந்து ரத்தம் சிந்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் போய் ஒருத்தர் இதெல்லாம் கூடாது நான் தான் இறைவனின் தூதர் என்று சொல்வதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு பெரிய சுமையை இறைவன் முஹம்மது நபிகளின் மீது இறைவன் விதித்தான்.
இத்தனை காலம் கஃபாவில் இருக்கும் கடவுள் சிலையால் இருந்த மதிப்பும், கடவுள் குடும்பத்தினர் என்ற மரியாதையும் போய் விடுமோ என்ற பயமும் (நம்ம ஊர் கதை தான்) பணக்காரன் ஏழை என்ற வர்க்க பேதங்களை ஒழிந்து போவதையும் அந்த அரபுகள் விரும்பவில்லை.
இதன் காரணத்தால் நபிகள் நாயகம் போகும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து சென்று வசைக் கவிதைகள் பாடுவது, பைத்தியக்காரன், பிசாசு பிடித்திருக்கிறது என்பது அவர்கள் ஏதாவது பேச ஆரம்பித்தால் அவர்கள் பேச்சு யார் காதிலும் விழாமல் இருக்க கத்தி கூச்சலிடுவார்கள். கல்லால் அடித்தார்கள், குப்பைகளை கொட்டினார்கள்.
அவர்கள் செய்த இன்னொரு முயற்சி பதவி தருகிறேன், அதிகாரம் தருகிறேன், அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறேன் இப்படி ஆசை வார்த்தை காட்டியது.
முஹம்மது நபிகள் திடமாக நின்றார்கள், ‘ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் சேர்த்து தந்தாலும் என்னுடைய கொள்கையை விடமாட்டேன்..’ என்று அந்த கொள்கை பிடிப்போடு பிடி கொடுக்காமல் இருந்தார்கள்.
அவர்களை தொல்லைகள் கொடுத்து பார்த்து எதுவும் சரிபட்டு வராமல் போகவே, அரேபியர்களின் அடுத்த கட்ட முயற்சியாக ‘அவர் சொல்வது எல்லாம் அவரே சொல்வது தான்’ என்றும் ‘அங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது’ என்றும் குற்றம் சுமத்தி தோற்கடிக்க பார்த்தது தான்.
இப்போது தான் வருகிறது அந்த சவால் செய்தி, இப்படி சவால் விடுவது வழக்கமாக நபிமார்களுக்கு வரும் பிரச்சினை தான்.
உதாரணமாக மூஸா நபி காலத்தில் தந்திரங்கள் செய்வது பிரபலமாக இருந்தது (excelled at magical trickery). மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் நடந்த சவாலை பற்றி டென் கமாண்ட்மேண்ட்ஸ் படங்களை பார்த்திருக்கலாம். அதுவும் இறைவனால் அந்த கால மக்களுக்கு விடப்பட்ட சவால் தான்.
மூஸா நபியவர்களுடன் போட்டியிட்ட அந்த மந்திரவாதிகள் கட்டையை தூக்கி எறியும் போதும் பாம்பு வரத்தான் செய்தது, ஆனால் என்ன மூஸா நபி எறிந்த கட்டையிலிருந்து வெளிப்பட்ட அந்த பாம்பு மந்திரவாதிகளின் பாம்பையே விழுங்கி விட்டது.
அதே போல் ஜீஸஸ் என்று கிறிஸ்தவர்களால் வணங்கப்படும் ஈஸா நபியவர்களின் கால கட்டத்தில் மருத்துவம் பிராதனமாக இருந்தது (excelled at matters of medicine). அதனால் தான் எல்லோரையும் மிகைக்க கூடிய அளவுக்கு அவர்கள் இறந்தவர்களை உயிர்பிப்பது வரை செய்து காட்டினார்கள்.
இதன் அடிப்படையில் முஹம்மது நபிகளின் கால கட்டத்தில் இலக்கியம் பெரிதும் மதிக்கப்பட்டது. ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் போது அவரால் கவிதைகள் படைக்க முடியுமா என்று பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களிடம் தான் இறைவன் மற்ற நபிமார்களின் கால கட்டத்தில் அந்த காலத்துக்கு தேவையான சவால்கள் உருவானதோ அதே மாதிரி தான் இலக்கியத்திலேயே சவாலை விடுத்தான்.
அந்த சவால் நியாயமானது தான், உதாரணமா ஒரு கம்ப்யூட்டர் புரொகிரமர் கிட்டே போய் இந்தாப்பா உலகத்துல இல்லாத ஒரு புது கெமிக்கல் பார்முலா எழுதி கொண்டு வா என்று கெமிஸ்ட் கிட்டே வைக்க வேண்டிய சவாலை அது வைக்கவில்லை.
கவிதையில் சிறந்தவர்களிடம், இலக்கியத்தில் பழம் தின்று கொட்டை போட்டதற்காக தங்களை தாங்களே கௌரவப் படுத்தி கொண்டவர்களிடம் அந்த சவாலை வைத்தது. அதுவும் தவிர, அப்படி சவாலை வைத்ததும் முஹம்மது நபியல்ல, இறைவன் தான்.
முதல் சவால்:
ஆகவே (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்... நேரான வழியை அறிவிக்கக் கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என்று நீர் கூறும்
சூரா கஸஸ் 28:49
இது அல்லாஹ் கிட்டேயிருந்து வரவில்லை, அவரே தான் சொல்கிறார் என்று சொன்னார்களா..? அதற்காக அப்படி உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து வேதத்தை கொண்டு வாருங்கள் என்று சவால் விடுகிறது.
இந்த வசனத்தில் இருக்கும் அழகு சும்மா எதையாவது கொண்டு வந்து இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறி விட கூடாது என்பதற்காக நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்ற அந்த வார்த்தை. எப்படி..?
இரண்டாவது சவால்:
நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும்: இதைப்போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு சாத்தியமான யாவரையும் (இதற்காக) அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். (மெய்யாகவே இது கற்பனையென்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!)
சூரா ஹூது 11:13
இந்த இரண்டாவது சவாலில் கற்பனை செய்து பார்த்து பத்தே பத்து அத்தியாயத்தை கொண்டு வாருங்கள் என்கிறது.
மூன்றாவது சவால்
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்களும்) அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (உங்களுக்கு உதவியாக) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க் கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை அமைத்துக் கொண்டு வாருங்கள்
சூரா பகரா 02:23
அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை பொய்யென புரட்டென கூறி ஒழித்து கட்ட துடித்து வாய்ப்பை எண்ணி காத்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பல்லவா இது..?
வலிய வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முயற்சி செய்தும் பார்த்தார்கள்.. முந்தைய நபிமார்களிடத்திலே அவர்களின் எதிரிகள் எவ்வாறு படுதோல்வி அடைந்தார்களோ அதே போல் தான் இவர்களும் படுதோல்வி அடைந்தார்கள். இது நபிமார்களின் வரலாறுகளில் காணப்படாத செய்தி அல்ல.
நான் என்னா சொல்றேன், அதுவும் தவிர, இன்றைக்கு அரபிங்கறது செத்த மொழி அல்ல, வாழும் மொழி தான், இன்னமுமா அந்த சவால் இருக்கிறது என்ற கேள்வியை விடுத்து இதோ இருக்கிறதே என்று ஒரு அத்தியாயத்தையேனும் காட்டுவது அல்லது புதிதாக எழுதி கொண்டு வந்து வாதிடுவது தான் அறிவுடைமை என்கிறேன்.
எப்படி கொண்டுட்டு வரணும் தெரியுமா..?
இன்னா அஃதய்னா கல் கவ்ஸர்!
ஃப ஸல்லி லி ரப்பிக்க வன்ஹர்!
இன்ன ஷானி அக ஹுவல் அப்தர்!
சூரா அல்கவ்ஸர் 108: 1-3
இப்படிப்பட்ட அழகும் ஆழமும் எழிலும் கருத்தேற்றமும் மிக்க வசனத்திற்கொப்ப அரபிப் பெரும் புலவர்களை எல்லாம் துணையாக அழைத்துக் கொண்டு உண்மையாளர்களாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று நான் அல்ல இறைவன் சவால் விடுகிறான்.
அது முஸ்லீம்கள் ஏளனமாக கேட்பதாக கூறுகிறீர்கள்? முதலில் இது முஸ்லீம்களின் சவாலே அல்ல, இது இறைவனின் சவால், அதுவும் தவிர, இது இறைவேதம் அல்ல என்று ஏளனம் செய்தார்களே அவர்களுக்காக சொல்லப்பட்டது.
என் பார்வைக்கு உட்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கிறேன். உங்களின் கேள்விக்கு ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓரளவுக்கு பதில் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்.
------------------------------------------------------------------------
உங்களின் மூன்றாவது கேள்வி அதாங்க உருவகம், உருவம், இணைவைத்தல், பாவம், அப்புறம் எக்ஸ்ட்ரா புகழ்ச்சி இதெல்லாம் தனிப் பதிவு.
-----------------------------------------------------------------------
ஒரு கேள்வி கேட்டா ஆதம் காலத்து கதைலேந்து ஆரம்பிப்பான் என்று இந்த கொடுமையே போதும் என்று நீங்கள் சொன்னாலும் சரியே!
-------------------------------------------------------------------------
Thursday, December 10, 2009
சில டைரி குறிப்புகள்..
செப்டம்பர் 11 சம்பவத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பட்ட அவமானங்கள் சொல்லில் அடங்காது.
ஒரு முறை என் அலுவலக மேசை மேலே ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஒருவர் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் காணப்பட்டார்.
அதை கண்ணுற்ற எனது நண்பர் ஒருவரின் வாயில் அவரையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தை, 'டெரரிஸ்ட் குரூப்பா.. பள்ளிவாசல்ல கொடுத்தாங்களா..?' என்று
எனக்கு எரிச்சலாய் இருந்தது, 'நல்லா பாருங்களேன்..' என்றேன்
கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு (என்னமோ கண்ணாடியில் மட்டும் தான் அழுக்கு என்று நினைத்து கொண்டு) உற்றுப் பார்த்தார், அது ஒரு மருத்துவரின் படம்.
இனி அவர் துடைக்க வேண்டியது 'மனதை' தான் - என்று தோன்றியது.
நான் உடனே எனது நோட்டில் இப்படி எழுதினேன்..
ஷஹாதா
சொன்னால் கூட
ஜிஹாதா
என்று கேட்கிறார்கள் -
(குறிப்பு: ஷஹாதா என்றால் 'அல்லாஹ் (இறைவன்) ஒருவன்' என்று சாட்சியம் கூறுவதை குறிக்கும்)
---------------------------------------------------------------------------------
ஏற்கனவே அரியர் வைத்த பரீட்சையை இன்று தான் எழுத போகிறேன்.
வாப்பா, ‘நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா..?’
நான் பயந்து கொண்டே, ‘ம்.. பண்ணியிருக்கேன்..’ பரீட்சையை விட வாப்பாவின் பயம் அதிகம்
‘பாஸ்ட் கொஸ்டின்ஸ் கிடைச்சுடுச்சா..’ விடுற மாதிரி இல்லை
‘ம்.. கிடைச்சிடுச்சு..’ ஒன் வேர்ட் ஆன்சர்ஸ் தான்
‘ஒரு கேள்வியை கூட விட்டுடாதே.. ஒழுங்கா எழுது..’ - வாழ்த்து
‘சரி எழுதிடுறேன்..’
‘டைம் ரொம்ப முக்கியம்.. கடைசில டைம் இல்லைன்னா.. பாய்ண்ட் ஃபார்ம்ல எழுதிடு’ - எக்ஸாம் டிப்ஸ் அல்லது டெக்னிக்ஸ்
‘சரி..’
‘ஹால் டிக்கெட் எடுத்துக்க.. நல்ல பேனா.. நான் கொடுத்தேன்ல.. அது எழுதுதுல்ல..’ - கவலை
‘நல்லா எழுதுது..’
’சரி.. அல்லா தவக்கல்..’
சைக்கிளை மிதித்து பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன்.. இதைவிட சோர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
விறுவிறு என்று நோட்டீஸ் போர்ட் பக்கம் போய் எங்கே பரீட்சை ஹால் என்று பாக்கலாம்னு பாத்தா பேரதிர்ச்சி
நான் எழுத வேண்டிய பரீட்சையை பற்றிய தகவலே இல்லை.
சம்மந்தப்பட்ட நபரிடம் போய் விபரம் சொல்லி கேட்டதற்கு அவர் அலட்சியமாக சொன்னார்,
‘அந்த பரீட்சை நேத்தைக்கே முடிஞ்சிடுச்சே..’
எங்க வாப்பா ஏசவே இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க
----------------------------------------------------------------------------------
நான் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ரசிகன். இங்கே சிங்கப்பூரில் ஒரு முறை பாகிஸ்தான் நியுசிலேந்துடன் நடந்த ஆட்டத்தை நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.
அதிலும் அஃப்ரிடி என்ற அதிரடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது இந்திய நண்பர் ஒருவர், 'அதெப்படி நீங்கள் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாம்..?' என்று கேட்டார்
அத்தோடு நிற்காமல், 'இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை வந்தால் நீங்க எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க' என்றும் கேட்டார்
எனக்கு அவரின் இரண்டாவது கேள்வி சன் டிவி பழைய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் அருமையாக கேள்விகள் கேட்டு அசத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சீதர் என்று நினைக்கிறேன் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சீதர் என்பவர் ரபி பெர்னாட்டிடம், 'இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் யாருக்கு சப்போர்ட் பண்ணுவீர்கள்' என்ற சுழலுகிற நாற்காலியில் சுற்றிக் கொண்டே கேட்டார்.
ரபி பெர்னாட், 'என்ன ஒரு அபத்தமான கேள்வி' என்பது போல் பதில் சொன்னார்.
என் ஞாபகங்களை வாங்கி கொண்டு நான் எனது நண்பருக்கு இப்படி பதில் சொன்னேன், 'பங்களாதேஷ் நாடு கிரிக்கெட் டீமுக்கு கோச்சாக மொஹிந்தர் அமர்நாத் என்ற இந்தியரை நியமித்தார்கள், அப்போது இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்று வையுங்கள், மொஹிந்தர் அமர்நாத் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..' என்று கேட்டேன்.
----------------------------------------------------------------------------
ஒரு முறை என் அலுவலக மேசை மேலே ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஒருவர் முகமூடி அணிந்து கையில் கத்தியுடன் காணப்பட்டார்.
அதை கண்ணுற்ற எனது நண்பர் ஒருவரின் வாயில் அவரையும் அறியாமல் வந்து விழுந்த வார்த்தை, 'டெரரிஸ்ட் குரூப்பா.. பள்ளிவாசல்ல கொடுத்தாங்களா..?' என்று
எனக்கு எரிச்சலாய் இருந்தது, 'நல்லா பாருங்களேன்..' என்றேன்
கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு (என்னமோ கண்ணாடியில் மட்டும் தான் அழுக்கு என்று நினைத்து கொண்டு) உற்றுப் பார்த்தார், அது ஒரு மருத்துவரின் படம்.
இனி அவர் துடைக்க வேண்டியது 'மனதை' தான் - என்று தோன்றியது.
நான் உடனே எனது நோட்டில் இப்படி எழுதினேன்..
ஷஹாதா
சொன்னால் கூட
ஜிஹாதா
என்று கேட்கிறார்கள் -
(குறிப்பு: ஷஹாதா என்றால் 'அல்லாஹ் (இறைவன்) ஒருவன்' என்று சாட்சியம் கூறுவதை குறிக்கும்)
---------------------------------------------------------------------------------
ஏற்கனவே அரியர் வைத்த பரீட்சையை இன்று தான் எழுத போகிறேன்.
வாப்பா, ‘நல்லா பிரிப்பேர் பண்ணியிருக்கியா..?’
நான் பயந்து கொண்டே, ‘ம்.. பண்ணியிருக்கேன்..’ பரீட்சையை விட வாப்பாவின் பயம் அதிகம்
‘பாஸ்ட் கொஸ்டின்ஸ் கிடைச்சுடுச்சா..’ விடுற மாதிரி இல்லை
‘ம்.. கிடைச்சிடுச்சு..’ ஒன் வேர்ட் ஆன்சர்ஸ் தான்
‘ஒரு கேள்வியை கூட விட்டுடாதே.. ஒழுங்கா எழுது..’ - வாழ்த்து
‘சரி எழுதிடுறேன்..’
‘டைம் ரொம்ப முக்கியம்.. கடைசில டைம் இல்லைன்னா.. பாய்ண்ட் ஃபார்ம்ல எழுதிடு’ - எக்ஸாம் டிப்ஸ் அல்லது டெக்னிக்ஸ்
‘சரி..’
‘ஹால் டிக்கெட் எடுத்துக்க.. நல்ல பேனா.. நான் கொடுத்தேன்ல.. அது எழுதுதுல்ல..’ - கவலை
‘நல்லா எழுதுது..’
’சரி.. அல்லா தவக்கல்..’
சைக்கிளை மிதித்து பாலிடெக்னிக் வந்து சேர்ந்தேன்.. இதைவிட சோர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
விறுவிறு என்று நோட்டீஸ் போர்ட் பக்கம் போய் எங்கே பரீட்சை ஹால் என்று பாக்கலாம்னு பாத்தா பேரதிர்ச்சி
நான் எழுத வேண்டிய பரீட்சையை பற்றிய தகவலே இல்லை.
சம்மந்தப்பட்ட நபரிடம் போய் விபரம் சொல்லி கேட்டதற்கு அவர் அலட்சியமாக சொன்னார்,
‘அந்த பரீட்சை நேத்தைக்கே முடிஞ்சிடுச்சே..’
எங்க வாப்பா ஏசவே இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க
----------------------------------------------------------------------------------
நான் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் ரசிகன். இங்கே சிங்கப்பூரில் ஒரு முறை பாகிஸ்தான் நியுசிலேந்துடன் நடந்த ஆட்டத்தை நேரில் சென்று ரசித்திருக்கிறேன்.
அதிலும் அஃப்ரிடி என்ற அதிரடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனது இந்திய நண்பர் ஒருவர், 'அதெப்படி நீங்கள் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாம்..?' என்று கேட்டார்
அத்தோடு நிற்காமல், 'இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை வந்தால் நீங்க எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவீங்க' என்றும் கேட்டார்
எனக்கு அவரின் இரண்டாவது கேள்வி சன் டிவி பழைய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் அருமையாக கேள்விகள் கேட்டு அசத்தி கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை ஞாபகப் படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் ரபி பெர்னாட் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த சீதர் என்று நினைக்கிறேன் அவரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது சீதர் என்பவர் ரபி பெர்னாட்டிடம், 'இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் யாருக்கு சப்போர்ட் பண்ணுவீர்கள்' என்ற சுழலுகிற நாற்காலியில் சுற்றிக் கொண்டே கேட்டார்.
ரபி பெர்னாட், 'என்ன ஒரு அபத்தமான கேள்வி' என்பது போல் பதில் சொன்னார்.
என் ஞாபகங்களை வாங்கி கொண்டு நான் எனது நண்பருக்கு இப்படி பதில் சொன்னேன், 'பங்களாதேஷ் நாடு கிரிக்கெட் டீமுக்கு கோச்சாக மொஹிந்தர் அமர்நாத் என்ற இந்தியரை நியமித்தார்கள், அப்போது இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்று வையுங்கள், மொஹிந்தர் அமர்நாத் யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்..' என்று கேட்டேன்.
----------------------------------------------------------------------------
குரான் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்
1
முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மேலும், முஹம்மது நபிகளை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள்.
அதே போல், குரான் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிகளுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.
இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குரான் ஷரீஃபே சொல்கிறது.
ஆனால், குரான் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குரான் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குரான் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு 'இது அறிவியல் பூர்வமானதா?' என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------
2
அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குரான் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குரான் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
குரான் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், 'அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..' என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.
குரான் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.
ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குரான் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை 'வாயே இல்லாதவர்கள்' என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குரானின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு 'இது மனிதனின் சொல்லன்று' என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
3
மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
குரான் ஷரீஃபின் 'ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)' என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்
86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்
86:6 - குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்
86:7 - முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது
86:8 - இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்
மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
------------------------------------------------------------------------------------
4
அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிகள் சொல்கிறார்கள், 'நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.
அதற்கு அந்த கால அரேபியர்கள், 'அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?' என்று கேட்கிறார்கள்.
அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான்,
மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல் முதுகு தண்டிற்கும் விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்' என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.
------------------------------------------------------------------------------------------
5
ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன
1. அந்த கால அரேபியர்களுக்கு 'இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.
2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல
3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான 'இறைவனால் இது சாத்தியமாகுமா..?' என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், 'மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.' என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான்.
4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக 'இங்கிருந்து' வெளியாகும் 'விந்து' என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
A. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், 'ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை - இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே' என்று நீங்கள் கேக்க கூடாது? -
B. அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.
முதலாவது 'குமரி முதல் இமயம் வரை' என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும்
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது
ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.
5. அதுவும் தவிர, 'இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்' என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.
குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம்
'அல்-மும்தஹினா' வின் 12வது வசனத்தில் '... தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ.." என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.
குரான் ஷரீஃபுக்கு குரான் ஷரீபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
-----------------------------------------------------------------------------
கடைசியாக குரான் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான் என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு மட்டும் தான் நேர்வழி காட்டும்.
முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மேலும், முஹம்மது நபிகளை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள்.
அதே போல், குரான் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிகளுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.
இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.
ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குரான் ஷரீஃபே சொல்கிறது.
ஆனால், குரான் ஷரீஃபை ஆராய்வதற்காகவோ அல்லது இஸ்லாத்தின் மீது தாம் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவோ அல்லது குரான் ஷரீஃப் இறைவனின் வேதமே அல்ல என்று எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ அது நல்லதோ கெட்டதோ குரான் ஷரீஃபுடைய பல வசனங்களை எடுத்து கொண்டு 'இது அறிவியல் பூர்வமானதா?' என்ற கேள்விக் கனைகளை தொடுத்து வருகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------
2
அத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு முன்னர் அவர்கள் குரான் ஷரீஃபை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு குரான் ஷரீஃப் எப்படி அதன் முதன்மையான பெறுநர்களை (இங்கே முதன்மையான பெறுநர்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த கால அரேபிய மக்களை) அணுகியது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
குரான் ஷரீஃப் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப அருளப்பட்டது. சில வாசகங்களை கவனித்தீர்கள் என்றால், 'அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்..' என்று ஆரம்பிப்பதை கவனித்திருக்கலாம்.
குரான் ஷரீஃபானது அந்த கால அரேபியர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்து கொண்டிருக்கவில்லை, அது விஞ்ஞான புத்தகமுமன்று. ஆனால் அந்த கால அரேபியர்களின் கேள்விகளுக்கோ அல்லது அவர்களின் வாதங்களுக்கோ பதிலளிக்குமுகமாக சில வசனங்களை சொல்லும் போது விஞ்ஞான செய்திகள் கலந்திருக்கலாம்.
ஆனால் அந்த வசனங்களில் விஞ்ஞானம் பிரதானமாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
அடுத்து, அப்படி கூறப்படும் விஞ்ஞான செய்திகளில் தற்போதைய கண்டுபிடிப்புகளை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது தவறுதலாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், குரான் ஷரீஃப் இறங்கிய காலகட்டத்தில் அரேபியர்கள் இலக்கியத்தை பெரிதாக மதித்தார்கள். அரேபிய மொழியை பேசாதவர்களை 'வாயே இல்லாதவர்கள்' என்று ஏளனமாக பார்த்தார்கள். அவர்களின் குரானின் சொல்நயம் பொருள்நயத்தையும் பார்த்து விட்டு 'இது மனிதனின் சொல்லன்று' என்று சரண்டர் ஆகுமளவுக்கு அதன் இலக்கிய இலக்கண தன்மை அமையப் பெற்றிருந்தது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------
3
மேலே நான் சொன்ன கருத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.
குரான் ஷரீஃபின் 'ஸூரத்துத் தாரிக் (விடிவெள்ளி)' என்ற 86 வது அத்தியாயத்தின் 5, 6, 7, 8 வசனங்களை பார்ப்போம்
86:5 - மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்
86:6 - குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்பட்டான்
86:7 - முதுகுத் தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது
86:8 - இறைவன் மீட்டும் (restore) சக்தியுடையவன்
மேலே காணப்படும் வசனத்தில் விஞ்ஞான செய்திகள் அதாவது மனிதன் எதிலிருந்து உருவாகிறான் என்பது இருந்தாலும் இங்கே அதன் முதன்மையான பெறுநர்களுக்கு சொல்ல நினைப்பது விஞ்ஞானத்தை பற்றிய உண்மையை அல்ல. மாறாக, இறைவன் கூற நினைப்பது இறந்து மண்ணோடு மண்ணாகி போன மனிதனை இறைவன் மீண்டும் படைக்க சக்தியுடையவன் என்பதை தான்.
------------------------------------------------------------------------------------
4
அந்த கால அரேபியர்களிடம் முஹம்மது நபிகள் சொல்கிறார்கள், 'நியாய தீர்ப்பு நாள் ஒன்று இருக்கிறது, அது வந்தே தீரும், அப்போது இறைவன் முன்னே மக்கள் அனைவரும் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு கொண்டு வரப்படுவார்கள், அவர்கள் செய்த நல்லவை தீயவை யாவும் நேரான நீதியான தராசில் அளக்கப் பட்டு அவர்கள் செய்ததற்குறிய பிரதிபலனை பெற்று கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.
அதற்கு அந்த கால அரேபியர்கள், 'அதெப்படி, நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கி போன பிறகு எங்களை இறைவன் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்..?' என்று கேட்கிறார்கள்.
அதற்கு இறைவன் பதிலளிக்கும் போது தான்,
மனிதன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவன் கவனிக்கட்டும், அப்படி கவனித்தான் என்றால் அவன் ஒண்ணுமே இல்லாமல் முதுகு தண்டிற்கும் விலா எலும்பிற்கும் நடுவிலிருந்து குதித்து வெளிப்படும் நீரிலிருந்து தான் அவன் படைக்கப்பட்டிருக்கிறான், அப்படியிருக்க மண்ணோடு மண்ணாகி போனவனை உயிர்ப்பிக்க இறைவனால முடியாதா..? அவ்வாறு மீட்டெடுக்க இறைவன் சக்தியுடையவன் தான்' என்பது போல் அமைகிறது அந்த இறை வாக்கியம்.
------------------------------------------------------------------------------------------
5
ஆக, இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன
1. அந்த கால அரேபியர்களுக்கு 'இறந்த பிறகு மீண்டும் படைக்க முடியுமா' என்ற கேள்விக்கு பதிலாக அமைந்தது தான் அந்த வசனம்.
2. விஞ்ஞான உண்மையை அதாவது விந்து எங்கிருந்து உருவாகிறது என்ற விபரத்தை அந்த முதன்மையான பெறுநர்களுக்கு எடுத்து கூற அல்ல
3. அதுமட்டுமல்லாமல், அந்த கால அரேபியர்களின் சந்தேகமான 'இறைவனால் இது சாத்தியமாகுமா..?' என்ற சந்தேகத்துக்கு பதிலளிக்கும் விதமாக தான், 'மனிதர்கள் அவர்களை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் என்ன வெறும் அற்பமான குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து வெளிப்பட்டவர்கள் தானே, ஒண்ணுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து அவர்களை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனை மறுபடியும் உருவாக்குவதில் என்ன சிரமம் வந்து விடப் போகிறது.' என்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது கூடவே தாம் எவ்வாறு படைக்கப்பட்டோம் என்பதை மறந்த மனிதர்களின் திமிரான வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவ்விதம் கூறுகிறான்.
4. அப்போது இறைவன் குறிப்பிடுகையில் முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையில் என்று ஏன் குறிப்பிட வேண்டும், குழப்பமாக இருக்கிறதே, நேரடியாக 'இங்கிருந்து' வெளியாகும் 'விந்து' என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழலாம், இங்கே நீங்கள் அரேபிய இலக்கியத்தை பத்தி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
A. உதாரணமாக, குமரி முதல் இமயம் வரை என எழுதுகிறார்கள் என்று வையுங்கள், 'ஏன் அது என்னா குமரி முதல் இமயம் வரை - இந்தியான்னு சொல்ல வேண்டியது தானே' என்று நீங்கள் கேக்க கூடாது? -
B. அதுவும் தவிர, குமரியிலிருந்து இமயத்திற்கு ஹைவேல நேர்கோடு ஒன்றை வரைந்து இந்த பகுதியை மட்டும் தான் குறிக்கும், இந்த கோட்டில் அடங்காத ஊர்களெல்லாம் அடங்காது என்று சொல்லக் கூடாது.
முதலாவது 'குமரி முதல் இமயம் வரை' என்பது இந்தியா முழுவதையுமே குறிக்கும்
இரண்டாவது குமரியிலிருந்து நேர் கோட்டில் எந்த ஊர்கள் வருகிறதோ அந்த ஊரை மட்டும் அது குறிக்காது
ஆக, இங்கே இறைவன் குறிப்பிட விரும்புவது முதுகுத் தண்டிற்கும் விலா எலும்பிற்கும் இடையே என்று குறிப்பிடுவது அந்த இரண்டிற்கும் நேர் கோடு ஒன்றை வரைந்து அங்கிருந்தா விந்து வெளியாகிறது என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது, ஏனெனில் அது (பேர் சொல்லகூட அருகதையில்லாத) உடலிலிருந்து குதித்து வெளியாகும் தண்ணீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதை குறிக்கிறது.
5. அதுவும் தவிர, 'இந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நடுவில்' என்பதை அப்படியே நேராக நீங்கள் பார்க்க கூடாது. அதற்கு காரணம் இன்னொரு குரான் ஷரீஃபின் வசனத்தையே நீங்கள் கவனிக்கலாம்.
குரான் ஷரீஃபின் 60வது அத்தியாயம்
'அல்-மும்தஹினா' வின் 12வது வசனத்தில் '... தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் அவர்கள் எதனை கற்பனை செய்கிறார்களோ.." என்று வரும் வாக்கியத்தில் கைகளுக்கும் கால்களுக்கும் நடுவே உள்ள உறுப்பை பற்றி குறிப்பிடவில்லை என்பது அந்த வசனத்தை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு விளங்கும்.
குரான் ஷரீஃபுக்கு குரான் ஷரீபே விளக்கம் கொடுத்துள்ளதை நாம் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
-----------------------------------------------------------------------------
கடைசியாக குரான் ஷரீஃப் மனித குலம் முழுமைக்குமான் வேதம் தான் என்றாலும் அது பயபக்தியுடையவர்களுக்கு மட்டும் தான் நேர்வழி காட்டும்.
Thursday, December 03, 2009
போபால் விபரீதம் - ஒரு தொழிற்சாலை பேரழிவு
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ந் தேதிக்குள் 3ந் தேதி புகுந்து கொண்டிருந்த நேரம். அன்று இரவு எப்போதும் உறங்க போன அந்த அப்பாவி பொதுமக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், 3ந் தேதி காலையிலே நாம் அனைவரும் குடும்பம் குடும்பமாக, ஆமாம் ஒரு வீட்டின் அறையின் உள்ளே அம்மா, அப்பா இருவரும் இறந்து கிடக்க ஹாலில் பிள்ளைகள் இறந்து கிடக்க, அதாவது பிள்ளைகள் இறந்தது பெற்றோர்களுக்கு தெரியாது, பெற்றோர்கள் இறந்தது பிள்ளைகளுக்கு தெரியாது, இப்படி உடனடியாக இறந்த ஆயிரக்கணக்கான பேரையும் சேர்த்து 3000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து கிடந்தனர்.
இவ்வளவு பெரிய பாதக செயலுக்கு காரணமாக எந்த வகையிலாவது பெரியண்ணன் (நன்றி: ஆபிதீன் நானா) சம்மந்தப்பட்டிருக்கணுமே என்ற கணிப்பை ஏமாற்றாமல் யுனியன் கார்பைட் என்ற அமெரிக்க நிறுவனத்திலிருந்து கசிந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் என்ற இரசாயனமே அந்த பேரழிவுக்கு காரணமானது.
யுனியன் கார்பைட் என்பது அமெரிக்க இரசாயன தயாரிப்பு ஆலை, இது பலவேறுபட்ட இந்திய முதலீட்டாளர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டு மெதில் ஐசோ சயனைட் எனும் பூச்சி கொல்லி மருந்தை தயாரித்து வந்தது.
இரசாயனங்கள் பொதுவாகவே பல்வேறு தேவைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் அது மனிதனின் உடலுள்ளே சென்று விட்டால் நமக்கு ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்தும்
இரசாயனமானது மனிதனின் உடலின் உள்ளே மூன்று வழிகளில் உள்ளே செல்கிறது
1. வாய் வழியாக
நம்முடைய உடலை ஒரு வீடு என்று வைத்து கொண்டால் வாயை வாச கதவு என்று சொல்லலாம் மருத்துவர்கள் கூட இதனை gate way of the body என்று தான் சொல்வார்கள்.
யாரும் வேண்டுமென்றே இரசாயனத்தை வாயில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை, தெரியாமல் உள்ளே போய் விடும், சில தொழிற்சாலை ஊழியர்கள் தண்ணீர் குடிக்கிற பாட்டிலில் தின்னரை (- இது ஒரு பெட்ரோ இரசாயனம்) ஊற்றி வைக்கிறார்கள், அப்போது தெரியாமல் தண்ணீர் என நினைத்து வாயில் ஊற்றி கொண்ட சம்பவங்கள் உண்டு.
இது தவிர, வேலை பார்த்து விட்டு முறையாக கை கழுவாமல் சாப்பிட்டாலும் வாய் வழியாக உள்ளே நுழைந்து விடும்
2. தோல் வழி
இரசாயனங்கள் தோலில் பட்டால் நம் தோலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத வியர்வை துவாரங்கள் வழியாக உள்ளே நுழைந்து விடும், சாயம் அடிக்கிற வேலை பார்த்து விட்டு கையில் சாயம் இருந்தால் தின்னரை வைத்து துடைப்பதை பார்த்திருக்க்கிறேன். தின்னரானது மேற்கூறிய துவாரம் வழியாக உள்ளே நுழைந்து விடும்
3. சுவாச வழி
இது ரொம்ப ஆபத்தானது, தொழிற்சாலையிலேயே வேலை பார்க்காத போபால் வாசிகள் சுவாசம் வழியாக தான் இரசாயனத்தை உள்ளே இழுத்தார்கள் அதுவும் தூங்கி கொண்டிருக்கும் போது.
அப்படி உள்ளே இழுக்கப்பட்ட அந்த இரசாயனமான மெதில் ஐசோ சயனைட் என்பது நச்சுத்தன்மையுடைய வாயு. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு தண்ணீரோடு கலந்தால் அது எதிர்வினை (reactive) தரக்கூடியதுமாகும்
பேரழிவு சம்பவம் நடந்த தினத்தன்று அப்படி தான் அந்த மெதில் ஐசோ சயனைட் சேமித்து வைக்கும் தொட்டியில் தண்ணீர் தவறுதலாக கலந்து விட்டது. அந்த தொட்டியில் அனுமதிக்கப்பட்ட சேமிப்பு கொள்ளளவை விட அதிகமான அளவில் அந்த இரசாயனம் இருந்ததால் பாதுகாப்பு மூடியை உடைத்து கொண்டு வெளியே வந்து ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.
டைட்டானிக் சம்பவம் நடந்த போது கப்பலை உடைத்து கொண்டு தண்ணீர் உள்ளே புகுந்தது தெரிந்தும் முதல் இருபது நிமிடத்திற்கு ஆட்டமும் பாட்டமுமாய் தான் இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன், ஆனால் போபால் சம்பவத்தில் ஊர் அபாய எச்சரிக்கை ஒலியே ஒரு மணி நேரம் கழித்து தான் ஒலித்ததாம்.
ஹென்றிக் என்பவர் 1950ல் ஒரு தியரியை அறிமுகப்படுத்தினார், அதற்கு பெயர் ஹென்றிக் டொமினோ தியரி என்று பெயர். அந்த தியரியில் விபத்துகளின் அடிப்படை காரணம் - basic cause (முதல் மூலக் காரணம் - root cause அல்ல) என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார்.
1. பாதுகாப்பற்ற செயல்
2. பாதுகாப்பற்ற சூழல்
ஆனால் பொதுவாக எல்லா பாதுகாப்பற்ற சூழலும் பாதுகாப்பற்ற செயல்களினாலேயே விளைகிறது. அதாவது மனித தவறுகளே - human failing காரணமாக இருக்கிறது.
இந்த மனித தவறுகளுக்கும் காரணமாக மூன்று சொல்லப்படுக்கிறது
1. அலட்சியம் - carelessness
2. திறனின்மை - incompetence
3. அறியாமை - ignorance
ஆனால் ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பவர்களுக்கு அறம் சார்ந்த, மனித நேய மிக்க சமூக பொறுப்புகள் உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி தனக்கு பொறுப்பு இல்லை என்று தன்னை சட்டப்பூர்வமாக விடுவித்து கொண்டார் என்று அறியும் போது என்ன தான் முடிவு?
படிக்க: http://www.bookrags.com/research/bhopal-case-este-0001_0001_0/
நேற்றோடு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
மனதில் பதிந்து விட்ட அவர்களின் நினைவாக இந்த பதிவு
இவ்வளவு பெரிய பாதக செயலுக்கு காரணமாக எந்த வகையிலாவது பெரியண்ணன் (நன்றி: ஆபிதீன் நானா) சம்மந்தப்பட்டிருக்கணுமே என்ற கணிப்பை ஏமாற்றாமல் யுனியன் கார்பைட் என்ற அமெரிக்க நிறுவனத்திலிருந்து கசிந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் என்ற இரசாயனமே அந்த பேரழிவுக்கு காரணமானது.
யுனியன் கார்பைட் என்பது அமெரிக்க இரசாயன தயாரிப்பு ஆலை, இது பலவேறுபட்ட இந்திய முதலீட்டாளர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டு மெதில் ஐசோ சயனைட் எனும் பூச்சி கொல்லி மருந்தை தயாரித்து வந்தது.
இரசாயனங்கள் பொதுவாகவே பல்வேறு தேவைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் அது மனிதனின் உடலுள்ளே சென்று விட்டால் நமக்கு ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்தும்
இரசாயனமானது மனிதனின் உடலின் உள்ளே மூன்று வழிகளில் உள்ளே செல்கிறது
1. வாய் வழியாக
நம்முடைய உடலை ஒரு வீடு என்று வைத்து கொண்டால் வாயை வாச கதவு என்று சொல்லலாம் மருத்துவர்கள் கூட இதனை gate way of the body என்று தான் சொல்வார்கள்.
யாரும் வேண்டுமென்றே இரசாயனத்தை வாயில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை, தெரியாமல் உள்ளே போய் விடும், சில தொழிற்சாலை ஊழியர்கள் தண்ணீர் குடிக்கிற பாட்டிலில் தின்னரை (- இது ஒரு பெட்ரோ இரசாயனம்) ஊற்றி வைக்கிறார்கள், அப்போது தெரியாமல் தண்ணீர் என நினைத்து வாயில் ஊற்றி கொண்ட சம்பவங்கள் உண்டு.
இது தவிர, வேலை பார்த்து விட்டு முறையாக கை கழுவாமல் சாப்பிட்டாலும் வாய் வழியாக உள்ளே நுழைந்து விடும்
2. தோல் வழி
இரசாயனங்கள் தோலில் பட்டால் நம் தோலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத வியர்வை துவாரங்கள் வழியாக உள்ளே நுழைந்து விடும், சாயம் அடிக்கிற வேலை பார்த்து விட்டு கையில் சாயம் இருந்தால் தின்னரை வைத்து துடைப்பதை பார்த்திருக்க்கிறேன். தின்னரானது மேற்கூறிய துவாரம் வழியாக உள்ளே நுழைந்து விடும்
3. சுவாச வழி
இது ரொம்ப ஆபத்தானது, தொழிற்சாலையிலேயே வேலை பார்க்காத போபால் வாசிகள் சுவாசம் வழியாக தான் இரசாயனத்தை உள்ளே இழுத்தார்கள் அதுவும் தூங்கி கொண்டிருக்கும் போது.
அப்படி உள்ளே இழுக்கப்பட்ட அந்த இரசாயனமான மெதில் ஐசோ சயனைட் என்பது நச்சுத்தன்மையுடைய வாயு. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு தண்ணீரோடு கலந்தால் அது எதிர்வினை (reactive) தரக்கூடியதுமாகும்
பேரழிவு சம்பவம் நடந்த தினத்தன்று அப்படி தான் அந்த மெதில் ஐசோ சயனைட் சேமித்து வைக்கும் தொட்டியில் தண்ணீர் தவறுதலாக கலந்து விட்டது. அந்த தொட்டியில் அனுமதிக்கப்பட்ட சேமிப்பு கொள்ளளவை விட அதிகமான அளவில் அந்த இரசாயனம் இருந்ததால் பாதுகாப்பு மூடியை உடைத்து கொண்டு வெளியே வந்து ஊர் முழுவதும் பரவ தொடங்கியது.
டைட்டானிக் சம்பவம் நடந்த போது கப்பலை உடைத்து கொண்டு தண்ணீர் உள்ளே புகுந்தது தெரிந்தும் முதல் இருபது நிமிடத்திற்கு ஆட்டமும் பாட்டமுமாய் தான் இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன், ஆனால் போபால் சம்பவத்தில் ஊர் அபாய எச்சரிக்கை ஒலியே ஒரு மணி நேரம் கழித்து தான் ஒலித்ததாம்.
ஹென்றிக் என்பவர் 1950ல் ஒரு தியரியை அறிமுகப்படுத்தினார், அதற்கு பெயர் ஹென்றிக் டொமினோ தியரி என்று பெயர். அந்த தியரியில் விபத்துகளின் அடிப்படை காரணம் - basic cause (முதல் மூலக் காரணம் - root cause அல்ல) என்பதை இரண்டு வகையாக பிரிக்கிறார்.
1. பாதுகாப்பற்ற செயல்
2. பாதுகாப்பற்ற சூழல்
ஆனால் பொதுவாக எல்லா பாதுகாப்பற்ற சூழலும் பாதுகாப்பற்ற செயல்களினாலேயே விளைகிறது. அதாவது மனித தவறுகளே - human failing காரணமாக இருக்கிறது.
இந்த மனித தவறுகளுக்கும் காரணமாக மூன்று சொல்லப்படுக்கிறது
1. அலட்சியம் - carelessness
2. திறனின்மை - incompetence
3. அறியாமை - ignorance
ஆனால் ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பவர்களுக்கு அறம் சார்ந்த, மனித நேய மிக்க சமூக பொறுப்புகள் உள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி தனக்கு பொறுப்பு இல்லை என்று தன்னை சட்டப்பூர்வமாக விடுவித்து கொண்டார் என்று அறியும் போது என்ன தான் முடிவு?
படிக்க: http://www.bookrags.com/research/bhopal-case-este-0001_0001_0/
நேற்றோடு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
மனதில் பதிந்து விட்ட அவர்களின் நினைவாக இந்த பதிவு
Labels:
நியாயம் வேண்டி,
வேலையிட விபத்துகள்
Wednesday, December 02, 2009
பரிச்சே - பழைய இந்தி பட விமர்சனம்
பரிச்சே - அடையாளம் அல்லது அறிமுகப்படுத்துதல் என்று அர்த்தம் - ராய் சாஹேப் என்பவரின் கதை. ராய் சாஹேப் கண்டிப்பும் அன்பும் சம அளவில் கலந்த உருவம்.
அவருக்கு ஒரே மகன் நீலேஷ். நீலேஷ் இசையில் அதீத ஆர்வம் உடையவர். நீலேஷுக்கு அவர் வீட்டில் வேலை பார்க்கும் நாராயணன் மூலமாக பெண் பார்க்க போக இருப்பது தெரிய வருகிறது.
பெண் பார்க்க புறப்பட இருக்கும் சரியான நேரத்தில் ராய் சாஹேப் நீலேஷின் அறைக்கு வருகிறார், நீலேஷ் இன்னமும் தயாராகாமல் இருப்பதை கண்டு, 'நாராயணன் உன்னிடம் சொல்லவில்லையா..?' என்று வினவுகிறார்.
'இல்ல பாபுஜி.. நான் என்னுடைய குருநாதரோடு இன்றைக்கு கச்சேரி பண்ண இருக்கிறேன்.. இப்ப கிளம்பி விடுவேன்.." என்கிறார்
ராய் சாஹேபுக்கு கடும் கோபம் வருகிறது, 'நான் அங்கே முதலில் செல்கிறேன், நீ சரியாக வந்து விட வேண்டும்..' என்று கூறி விட்டு கோபமாக சென்று விடுகிறார்
அப்பாவை போலவே பிடிவாதமுடைய நீலேஷ் வீட்டை விட்டு வெளியேறி கச்சேரிக்கு செல்வதோடு தன்னுடைய குருநாதரின் மகளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ராய் சாஹேபின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மருமகளுக்கு ஆசி வழங்கி விட்டு நீலேஷிடம் 'உள்ளே அழைத்து கொண்டு போ" என்கிறார்
ராய் சாஹேபை சந்திக்க நீலேஷ் வருகிறார், 'பாபுஜி.. கூப்பிட்டீங்களா..?' என்று கேட்கிறார்
'சாப்டியா." - அப்பா
'ம்' - மகன்
'பஹூ..' என்று மருமகள் சாப்பிட்டாச்சா என்று கேட்கிறார்
'ம்..' என்று சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார் மகன்
'அவங்க அவங்க வாழ்க்கைய அமைச்சுக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு..' என்பதோடு இரும்பு பெட்டியின் சாவியை கொடுத்து, 'எனக்கு பெத்த கடமை இருக்கு.. இதுல எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்க.. நான் எப்படி என் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டேனோ.. அதே மாதிரி நீயும் வெளியே போய்.. உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க..' என்கிறார்
தன்மானமும் பிடிவாதமும் நீலேஷுக்கு பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடவே தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்
2 பெண் பிள்ளைகள் 3 ஆண் பிள்ளைகள் என்று வரிசையாக பெற்று மனைவி இழந்த நிலையில் கடும் வறுமையில் வாடுகிறார். வறுமையோடு அதன் கூட பிறந்த சகோதரரான வியாதியும் ஒட்டிக் கொள்ளவே தனது முடிவு நெருங்குவதை உணர்கிறார்.
தனது அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறார், 'பாபுஜி, நீங்கள் சொன்ன மாதிரியே என் வாழ்க்கையை நான் அமைத்து கொண்டேன், இப்ப கூட நான் எனக்காக இந்த கடிதத்தை எழுத வில்லை, எனக்கு முடிவு நெருங்கி விட்டதாக உணர்கிறேன், உங்களை விட்டால் என் குழந்தைகளுக்கு ஆதரவில்லை..' என்று
கடிதம் வந்த போது ஊரில் இல்லாமல் கடிதம் பார்த்ததும் உடனே கிளம்பி சென்று 5 பேர பிள்ளைகளையும் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், பிடிவாதத்திலே ராய் சாஹேப் கூட இந்த 5 குழந்தைகளுக்கு பேரன் தான், அவ்வளவு கோபம் ராய் சாஹேப் மீது, அதாவது ராய் சாஹேப் தான் தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணம் என்று நம்பும் குழந்தைகள் ராய் சாஹேபுக்கும் அவரின் தங்கை சாதி தேவிக்கும் அடங்காமல் தொல்லைகள் கொடுத்து கொண்டும் கொடுக்கும் தண்டனைகளை 'சாப்பாடு கிடையாது', 'இங்கேயே ராத்திரி முழுக்க தூங்காமல் நிக்க வேண்டும்' என்று அனுபவித்து கொண்டும் வருகிறார்கள்.
இந்த 5 பிள்ளைகளில் மூத்தவளான ரமா தான் வழிகாட்டி. அவளுக்கு கட்டுப்பட்டு தான் அத்தனை பிள்ளைகளும் ராய் சாஹேபின் கடும் டிசிபிளினுக்கு வளையாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரவி என்பவர் வேலையில்லாத பட்டதாரி, ஒரு வேலைக்கு இண்டர்வியு செல்வார், அங்கே இவருக்கு ஒரு வயதான நபரை கூப்பிட்டு ரவிக்கு என்னென்ன வேலை என்று சொல்லி கொடுக்கும்படி முதலாளி கூறுவார்.
அந்த வயதான நபர் ரவியை அழைத்து சென்று, வேலையை பத்தி சொல்லி கொடுத்து விட்டு, 'முதலாளி ரொம்ப நல்லவர், என் மகள் கல்யாணத்துக்கு நான் கேக்காமலே பணமெல்லாம் கொடுத்தார், இப்ப அவர் என்ன ஒண்ணும் சொல்லல.. நான் தான் போறேன்னு சொல்றேன்.. எனக்கு வயசாயிடுச்சு.. கண்ணு சரியா தெரியலை.." என்று கண்கலங்க அந்த வேலையை ஒத்துக் கொள்ள ஏனோ மனமில்லாமல் வந்து விடுகிறார்.
இப்படி வேலையில்லாமல் இருக்கும் ரவி தன்னுடைய மாமா வீட்டிற்கு வருகிறார். அவர் ராய் சாஹேபிடம் அந்த 5 பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறார்.
அந்த குழந்தைகளுக்கு பாடமும் புத்தியும் சொல்லி கொடுக்க வந்தவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தால் 'பேய் போல் வருவது..', 'ஆமை முதுகில் மெழுகுவர்த்தி கொளுத்து இருட்டில் வாத்தியார் ரூமுக்கு போக விடுவது' இப்படியாக செய்ய போக துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட ஆரம்பிப்பார்கள்.
அந்த வேலைக்கு ரவி வருகிறார், ரவியிடமும் குழந்தைகள் குறும்பு தனங்கள் செய்ய ரவிக்கு நெற்றியில் அடிபட்டு விடுகிறது, இதை சாதி தேவி கண்டுகொண்டு, 'இது குழந்தைகளின் வேலை தான்..' என்று கூறும் போது, 'இது குதிரை வண்டியில் அடிபட்டது..' என்று பொய் சொல்லி குழந்தைகளை அன்றைய தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார்.
ராய் சாஹேபுக்கு ரவி மீது நம்பிக்கை வருகிறது, 'குழந்தைகள் செய்திருந்தாலும் அதை குழந்தைகளை காட்டி கொடுக்காமல் இருந்தீர்களே..' என்று ரவியிடமே சொல்கிறார்.
இந்த சூழலில் குழந்தைகளில் குறும்புதனமும் நின்றபாடிலை, ராய் சாஹேபும் சாதி தேவியும் வெளியூர் கிளம்புகிறார்கள்.
ரவி எப்படி குழந்தைகளை திருத்தி அவர்களது தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளுக்கு தாத்தாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார் (பரிச்சே) என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பார் குல்ஜார் சாப் இதற்கிடையே ரமா, ரவியின் கவித்துவமான காதல் வேறு.
குல்ஜார் சாபின் படங்கள் என்றாலே பிளேஷ் பேக்கில் தான் கதை சொல்வார். இந்த படமும் விதிவிலக்கல்ல.
ரவியாக ஜிதேந்திரா, ரமாவாக ஜெயபாதுரி, ராய் சாஹேபாக பிரான், நீலேஷாக சஞ்சீவ் குமார், ரவியின் மாமாவாக ஏ.கே.ஹங்கால் மாமியாக லீலா மிஷ்ரா, அப்புறம் அந்த மற்ற 4 குழந்தைகள் யாவரும் நம் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.
ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.
நீலேஷ் தன் மனைவியை இழந்து வறுமையில் வாடும் போது தனது மகள் ரமாவுடன் சேர்ந்து 'பீட்டி நா பிதாயி ரெய்னா..' என்ற பாடலை இங்கே பாருங்கள்
ரவி வேலை கிடைக்காமல் முஸாஃபிர் போல் அதாவது நாடோடி போல் வேலையில்லாமல் அலைந்து திரிந்து தனது மாமாவின் கடிதம் பார்த்து மாமாவின் ஊருக்கு வரும் போது வரும் , 'முஸாஃபிர் ஹுன் யாரோ..' என்ற இசை அற்புதங்களை இங்கே காணலாம்
பறவை கிளையில் உட்கார்ந்து ஆடி விட்டு பறந்த பிறகும் ஆடும் கிளையை போலே இந்த படத்தை எப்போதோ பார்த்த பிறகும் இன்னமும் இந்த படத்தை பற்றிய பாத்திரங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது
அவருக்கு ஒரே மகன் நீலேஷ். நீலேஷ் இசையில் அதீத ஆர்வம் உடையவர். நீலேஷுக்கு அவர் வீட்டில் வேலை பார்க்கும் நாராயணன் மூலமாக பெண் பார்க்க போக இருப்பது தெரிய வருகிறது.
பெண் பார்க்க புறப்பட இருக்கும் சரியான நேரத்தில் ராய் சாஹேப் நீலேஷின் அறைக்கு வருகிறார், நீலேஷ் இன்னமும் தயாராகாமல் இருப்பதை கண்டு, 'நாராயணன் உன்னிடம் சொல்லவில்லையா..?' என்று வினவுகிறார்.
'இல்ல பாபுஜி.. நான் என்னுடைய குருநாதரோடு இன்றைக்கு கச்சேரி பண்ண இருக்கிறேன்.. இப்ப கிளம்பி விடுவேன்.." என்கிறார்
ராய் சாஹேபுக்கு கடும் கோபம் வருகிறது, 'நான் அங்கே முதலில் செல்கிறேன், நீ சரியாக வந்து விட வேண்டும்..' என்று கூறி விட்டு கோபமாக சென்று விடுகிறார்
அப்பாவை போலவே பிடிவாதமுடைய நீலேஷ் வீட்டை விட்டு வெளியேறி கச்சேரிக்கு செல்வதோடு தன்னுடைய குருநாதரின் மகளையே மணமுடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ராய் சாஹேபின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மருமகளுக்கு ஆசி வழங்கி விட்டு நீலேஷிடம் 'உள்ளே அழைத்து கொண்டு போ" என்கிறார்
ராய் சாஹேபை சந்திக்க நீலேஷ் வருகிறார், 'பாபுஜி.. கூப்பிட்டீங்களா..?' என்று கேட்கிறார்
'சாப்டியா." - அப்பா
'ம்' - மகன்
'பஹூ..' என்று மருமகள் சாப்பிட்டாச்சா என்று கேட்கிறார்
'ம்..' என்று சாப்பிட்டு விட்டதாக சொல்கிறார் மகன்
'அவங்க அவங்க வாழ்க்கைய அமைச்சுக்க அவங்க அவங்களுக்கு உரிமை இருக்கு..' என்பதோடு இரும்பு பெட்டியின் சாவியை கொடுத்து, 'எனக்கு பெத்த கடமை இருக்கு.. இதுல எவ்வளவு பணம் வேணுமோ எடுத்துக்க.. நான் எப்படி என் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சுகிட்டேனோ.. அதே மாதிரி நீயும் வெளியே போய்.. உனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க..' என்கிறார்
தன்மானமும் பிடிவாதமும் நீலேஷுக்கு பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விடவே தன் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்
2 பெண் பிள்ளைகள் 3 ஆண் பிள்ளைகள் என்று வரிசையாக பெற்று மனைவி இழந்த நிலையில் கடும் வறுமையில் வாடுகிறார். வறுமையோடு அதன் கூட பிறந்த சகோதரரான வியாதியும் ஒட்டிக் கொள்ளவே தனது முடிவு நெருங்குவதை உணர்கிறார்.
தனது அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறார், 'பாபுஜி, நீங்கள் சொன்ன மாதிரியே என் வாழ்க்கையை நான் அமைத்து கொண்டேன், இப்ப கூட நான் எனக்காக இந்த கடிதத்தை எழுத வில்லை, எனக்கு முடிவு நெருங்கி விட்டதாக உணர்கிறேன், உங்களை விட்டால் என் குழந்தைகளுக்கு ஆதரவில்லை..' என்று
கடிதம் வந்த போது ஊரில் இல்லாமல் கடிதம் பார்த்ததும் உடனே கிளம்பி சென்று 5 பேர பிள்ளைகளையும் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், பிடிவாதத்திலே ராய் சாஹேப் கூட இந்த 5 குழந்தைகளுக்கு பேரன் தான், அவ்வளவு கோபம் ராய் சாஹேப் மீது, அதாவது ராய் சாஹேப் தான் தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணம் என்று நம்பும் குழந்தைகள் ராய் சாஹேபுக்கும் அவரின் தங்கை சாதி தேவிக்கும் அடங்காமல் தொல்லைகள் கொடுத்து கொண்டும் கொடுக்கும் தண்டனைகளை 'சாப்பாடு கிடையாது', 'இங்கேயே ராத்திரி முழுக்க தூங்காமல் நிக்க வேண்டும்' என்று அனுபவித்து கொண்டும் வருகிறார்கள்.
இந்த 5 பிள்ளைகளில் மூத்தவளான ரமா தான் வழிகாட்டி. அவளுக்கு கட்டுப்பட்டு தான் அத்தனை பிள்ளைகளும் ராய் சாஹேபின் கடும் டிசிபிளினுக்கு வளையாமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரவி என்பவர் வேலையில்லாத பட்டதாரி, ஒரு வேலைக்கு இண்டர்வியு செல்வார், அங்கே இவருக்கு ஒரு வயதான நபரை கூப்பிட்டு ரவிக்கு என்னென்ன வேலை என்று சொல்லி கொடுக்கும்படி முதலாளி கூறுவார்.
அந்த வயதான நபர் ரவியை அழைத்து சென்று, வேலையை பத்தி சொல்லி கொடுத்து விட்டு, 'முதலாளி ரொம்ப நல்லவர், என் மகள் கல்யாணத்துக்கு நான் கேக்காமலே பணமெல்லாம் கொடுத்தார், இப்ப அவர் என்ன ஒண்ணும் சொல்லல.. நான் தான் போறேன்னு சொல்றேன்.. எனக்கு வயசாயிடுச்சு.. கண்ணு சரியா தெரியலை.." என்று கண்கலங்க அந்த வேலையை ஒத்துக் கொள்ள ஏனோ மனமில்லாமல் வந்து விடுகிறார்.
இப்படி வேலையில்லாமல் இருக்கும் ரவி தன்னுடைய மாமா வீட்டிற்கு வருகிறார். அவர் ராய் சாஹேபிடம் அந்த 5 பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்க அழைத்து செல்கிறார்.
அந்த குழந்தைகளுக்கு பாடமும் புத்தியும் சொல்லி கொடுக்க வந்தவர்கள் குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தால் 'பேய் போல் வருவது..', 'ஆமை முதுகில் மெழுகுவர்த்தி கொளுத்து இருட்டில் வாத்தியார் ரூமுக்கு போக விடுவது' இப்படியாக செய்ய போக துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட ஆரம்பிப்பார்கள்.
அந்த வேலைக்கு ரவி வருகிறார், ரவியிடமும் குழந்தைகள் குறும்பு தனங்கள் செய்ய ரவிக்கு நெற்றியில் அடிபட்டு விடுகிறது, இதை சாதி தேவி கண்டுகொண்டு, 'இது குழந்தைகளின் வேலை தான்..' என்று கூறும் போது, 'இது குதிரை வண்டியில் அடிபட்டது..' என்று பொய் சொல்லி குழந்தைகளை அன்றைய தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறார்.
ராய் சாஹேபுக்கு ரவி மீது நம்பிக்கை வருகிறது, 'குழந்தைகள் செய்திருந்தாலும் அதை குழந்தைகளை காட்டி கொடுக்காமல் இருந்தீர்களே..' என்று ரவியிடமே சொல்கிறார்.
இந்த சூழலில் குழந்தைகளில் குறும்புதனமும் நின்றபாடிலை, ராய் சாஹேபும் சாதி தேவியும் வெளியூர் கிளம்புகிறார்கள்.
ரவி எப்படி குழந்தைகளை திருத்தி அவர்களது தாத்தாவுக்கு பேரப் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளுக்கு தாத்தாவையும் அறிமுகம் செய்து வைக்கிறார் (பரிச்சே) என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பார் குல்ஜார் சாப் இதற்கிடையே ரமா, ரவியின் கவித்துவமான காதல் வேறு.
குல்ஜார் சாபின் படங்கள் என்றாலே பிளேஷ் பேக்கில் தான் கதை சொல்வார். இந்த படமும் விதிவிலக்கல்ல.
ரவியாக ஜிதேந்திரா, ரமாவாக ஜெயபாதுரி, ராய் சாஹேபாக பிரான், நீலேஷாக சஞ்சீவ் குமார், ரவியின் மாமாவாக ஏ.கே.ஹங்கால் மாமியாக லீலா மிஷ்ரா, அப்புறம் அந்த மற்ற 4 குழந்தைகள் யாவரும் நம் பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள்.
ஆர்.டி.பர்மன், குல்ஜார் சாப், கிஷோர் குமார் முக்கோணங்கள் இணைந்தால் காற்று, எரிபொருள், வெப்பம் இணைந்தது போல் இசைத்தீ பரவிக் கொள்ளும்.
நீலேஷ் தன் மனைவியை இழந்து வறுமையில் வாடும் போது தனது மகள் ரமாவுடன் சேர்ந்து 'பீட்டி நா பிதாயி ரெய்னா..' என்ற பாடலை இங்கே பாருங்கள்
ரவி வேலை கிடைக்காமல் முஸாஃபிர் போல் அதாவது நாடோடி போல் வேலையில்லாமல் அலைந்து திரிந்து தனது மாமாவின் கடிதம் பார்த்து மாமாவின் ஊருக்கு வரும் போது வரும் , 'முஸாஃபிர் ஹுன் யாரோ..' என்ற இசை அற்புதங்களை இங்கே காணலாம்
பறவை கிளையில் உட்கார்ந்து ஆடி விட்டு பறந்த பிறகும் ஆடும் கிளையை போலே இந்த படத்தை எப்போதோ பார்த்த பிறகும் இன்னமும் இந்த படத்தை பற்றிய பாத்திரங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கிறது
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Subscribe to:
Posts (Atom)