Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Friday, December 31, 2010

திரைக்கதை வைத்தியர் - கே.பாக்யராஜ்

கதை சொல்றது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை.. ஆனால் கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும். இதெல்லாம் கதை என்று கழட்டி விடாதீர்கள்.

நான் சின்னவனா இருந்தப்போ எனக்கு தூக்கம் வரவைக்க எங்க வூட்ல எங்க பாட்டியா மாமரக்கா கதை, சபூர் கட்டை கதை, லவை கதை என்று ஏராளமான கதை சொல்வார்கள். எல்லா கதையிலும் கடைசியாக சுபம் போட்டு முடிக்கும் போது, ‘நானும் போனேன், வாய்க்கு ஒரு வெத்தலை கூட தரல..’ என்ற பன்ச் டயலாக்கோடு தான் முடிப்பார்கள்.

கதை சொல்வதோடு மட்டுமல்லாமல் எங்களது வாயால் கதையை கேட்டு மழலை மொழியில் சொல்லக் கேட்டும் மகிழ்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது அந்த கதையை அதன் ஆன்மா கெடாமல் சிறுவர்கள் நாங்கள் சொல்லி காட்டுவோம். அதை விட கவனிக்க வேண்டிய விஷயம் அப்படி மனதில் பதியும் படி கதை சொல்வார்கள் என்பது தான்.

சினிமாவில் காட்சி வடிவத்தில் கதை சொல்வது என்பது ரொம்பவே சிக்கலான விஷயம் தான். இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் ஒன் லைன் என்ன என்று கேட்கிறார்கள் என்று படித்ததுண்டு. ஒன் லைனில் கதை சொல்லுங்கள் என்று எங்கள் பாட்டியாவிடம் சொன்னால், ஒன் லைன்லயும் சொல்ல முடியாது டெலிபோன் லைன்லயும் சொல்ல முடியாது என்று லொல்லு சபா செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுவாக சினிமாவாகப்பட்டது,

கதாநாயகனுக்கு உயிரை குடிக்கும் நோய் - வாழ்வே மாயம்
கதாநாயகிக்கு உயிரை குடிக்கும் நோய் - பூவே பூச்சூடவா
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இருவருக்குமே உயிரை குடிக்கும் நோய் - இதயத்தை திருடாதே

கதாநாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் - எங்கிருந்தோ வந்தாள்
கதாநாயகிக்கு மனப்பிறழ்வு நோய் - மூன்றாம் பிறை
கதாநாயகனுக்கும் கதாநாயகனுக்கும் மனப்பிறழ்வு நோய் - மீண்டும் ஒரு காதல் கதை

இப்படியாக, சினிமாவை பொறுத்த வரை கதை என்று புதிதாக எதையும் சொல்லி விட முடியாது அதே காதல் அதே கத்திரிக்காய், அதே அருவா அதே பழிவாங்கல் தான்.

ஆனால் திரைக்கதை அமைப்பதில் தான் படத்தின் வெற்றியும் சுவாரஸ்யமும் அடங்கி இருக்கிறது என்பது திரைப்படங்களை பார்த்து ரசித்தவன் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் கொண்ட எனது அனுபவ செய்தி.

அந்த வகையில் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை ஆசிரியர் யார் என்றால் அது நம்மவர் பாக்யராஜ் அவர்கள் தான் என்று ஒட்டு மொத்த இந்தியாவே ஒத்துக் கொள்ளும்.

இவரது திரைக்கதையில் இடைவேளை வரை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உறவு (அது காதலாகவோ அல்லது காதல் கைகூடி திருமணம் வரை சென்றதாகவோ இருக்கலாம்) நகைச்சுவையுடன் வளர்ந்து ஒரு சில காரணத்தால் பிரிவு வரை பயணிக்கும். இடைவேளை முடிந்து கதை வளரும் போது பிரிந்தவர் மீண்டும் இணைவதற்கு மிகவும் ஹெவியான ஒரு காரணத்தை புகுத்தி முடிவை சுபமாக்குவார் (ஓரிரு படங்களில் சுகம் கலந்த சோகமாக்குவார்)

இதை திரைக்கதை டிரீட்மெண்ட் என்று சொல்லலாம். அந்த வகையில் திரு.பாக்யராஜ் அவர்களை நான் திரைக்கதை வைத்தியர் என்கிறேன். இதற்கு ஒரே ஒரு படத்தை பற்றி மட்டும் உதாரணமாக சொல்கிறேன். (பிறிதொரு சமயத்தில் மேலும் இவரது படங்கள்)

படம்: மௌன கீதங்கள்

இந்த படத்தின் கதையை இவர் சொல்லும் அழகே தனி. பேருந்தில் பிரிந்து வாழும் கணவனும் மனைவியும் பயணம் செய்கிறார்கள். பயணத்தினூடே அவர்களது முதல் சந்திப்பு முதல் காதல் மலர்ந்து திருமணத்தில் கலந்து ஒரு காரணத்தால் பிரிவு வரை சென்றதை அசை போடுகிறார்கள்.

இடைவேளை வந்து விடுகிறது..

கணவன் இன்னொரு பெண்ணோடு சந்தர்ப்ப வசத்தில் வசமாக மாட்டிக் கொண்டு சந்தோஷம் கொண்டாடியதை தொடர்ந்து கடும் கோவத்தில் பிரிந்து இருக்கும் மனைவி திரும்ப என்ன காரணம் இருந்தால் அவனோடு சேர்ந்து வாழுவாள்..?

பல முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பார் திரைக்கதை ஆசிரியர்.(பின்னே முந்தானை முடிச்சு போட்டவருக்கு முடிச்சை அவிழ்க்க மட்டும் தெரியாதா என்ன..?)

அதில் முக்கியமாக..

 ஒரு வயதானவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து அதிர்ச்சியாகி மூர்ச்சையாகி விடுவார். அதை தொடர்ந்து அவர் மனைவி இறந்து விட்ட செய்தி அறிந்து அவருடன் வேலை பார்க்கும் கதாநாயகி உள்பட எல்லோரும் மயானத்தில் நின்றிருக்க மனைவியின் சிதை எறிக்கப்படும் இடத்தில் தானும் உடன் கட்டை ஏறுவது போல் நெருப்பில் விழ போக எல்லோரும் அவரை தடுக்கிறார்கள்.

கொஞ்ச நாள் கழித்து அவரே ஒரு பத்திரிக்கையை கொடுப்பார், தனக்கு கல்யாணம் என்று. கதாநாயகி கேட்பார் அவரது தோழியிடம், ‘என்னா இது.. அன்னைக்கு தான் தனக்கு வாழ்க்கையே போச்சுன்னு உடன்கட்டை ஏற போனாரு.. இப்ப இன்னொரு கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்கிறாரே..?’ என்று புருவத்தை மேலுயர்த்தி கேட்க..

தோழி சொல்கிறார், ‘பொண்டாட்டி செத்த மூணாவது நாளே இன்னொரு கல்யாணத்த பண்ணிக்கிற இவர பத்தி யோசிக்காம மூணு வருஷமாகியும் கல்யாணமே பண்ணிக்காம ஒன்னையே நெனைச்சிக்கிட்டு இருக்காறே.. அவர பத்தி கொஞ்சம் சீரியஸா நெனைச்சு பாரு..’ என்று (வசனம் எக்ஸேக்டா உள்ளது அல்ல..)

அதை தொடர்ந்து முத்தாய்ப்பாக ஒரு கட்டத்தில் கதாநாயகியை அவரின் நடத்தையில் அவர் வேலை செய்யும் அலுவலகமே சந்தேகம் கொள்கிறது.
அவரது தோழி கூட, ‘நான் ஒன்னை நம்புறேன்.. ஒன் வயச நம்ப நான் தயாரா இல்லை..’ என்பது போல் வார்த்தையை கொட்டி விடுகிறார். ஆனால் அதே அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் பிரிந்த கணவரின் அறையை திறக்க அவரிடம் பணியாள் ஒருவர் கதாநாயகி சுகுணாவை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொண்டிருக்க..

பிரிந்த கணவன் கொதித்தெழுகிறான், ‘ஷட் அப்..’ என்று.. அதோடு விடவில்லை, ‘சுகுணா நெருப்பு மாதிரி.. நெருப்பை கரையான் அறிச்சிடுச்சுன்னு சொன்னா நீ நம்புவியா..?’ என்று கேட்கிறார்.

வேறு என்ன வேணும் - அந்த சுகுணாவுக்கு..?

பிரிந்தவர் மீண்டும் சேருகிறார்கள்.. இனி பேச ஏதுமில்லை..

Thursday, December 30, 2010

ஃபஹ்மிதா அஃப்ஷீன்

1. 






இவர் - (கோபத்துடன்) நாய்.. நாய்..  


இவரின் தந்தை - ஏய், இதெல்லாம் சொல்ல கூடாது, இப்டிலாம் ஏசுறதுக்கு யார்ட்ட கத்துகிட்டே 


இவர் - இது டிவின்னு யார் கிட்டே கத்துகிட்டேனோ அஹ கிட்ட.. இது மேச இது சோபான்னு யார் கிட்டே கத்துகிட்டேனோ அஹ கிட்டே.. 


(கற்றுக் கொண்டவை: இனி இவருக்கு முன்னால் ஏசவே கூடாது)      


2.  






தமிழ் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது 


இவரின் தந்தை - அ 


இவர் - அ 


இவரின் தந்தை - ஆ 


இவர் - ஆ 


இவரின் தந்தை - இ 


இவர் - இ 


இவரின் தந்தை - ஈ 


இவர் - ஈ 


இவரின் தந்தை - உ 


இவர் - உ 


இவரின் தந்தை - ஊ 


இவர் - ஊ 


இவரின் தந்தை - எ 


இவர் - எ 


இவரின் தந்தை - ஏ 


இவர் - ஏ 


இவரின் தந்தை - ஐ 


இவர் - ஐ 


இவரின் தந்தை - ஒ 


இவர் சொல்ல மறுக்கிறார். 




இவரின் தந்தை - ஏம்மா, சொல்ல மாட்டேங்குறே, சொல்லு ’ஒ’ 


இவர் - போங்க வாப்பா, ஐ க்கு அப்புறம் அ ய்ய்ய்ய்ய்ய் ல்ல வரணும் நீங்க தப்பா சொல்லி கொடுங்கறீங்களே 


(கற்றுக் கொண்டவை: கற்றது ஐ அளவு கல்லாதது அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அளவு) 


3. 






ஷேக் ஹசன் சாபுவின் (தற்போதைய தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி) சாபுவாப்சி ஊரிலிருந்து வீட்டிற்கு வருகிறார்கள்.


வீடு கழுவி விட்டு ஈரமாக இருந்தது..


இவர்: சாபு, பாத்து வாங்க, மோப் பண்ணி வுட்டு கீழே ஒரே ஈரமா இருக்கு, எனக்கே வழுக்குது.. நானே வுழுந்துட பார்த்தேன் (என்னமோ எஹ பெரிய மனுஷி மாதிரி)


4.




இரண்டு மருந்து பாட்டில்கள் இருந்தது..


ஒன்றின் மேலிருந்த லேபில் பிரிந்து கொண்டு வந்ததால்.. இவரின் தாயார் முழுவதுமாக தாளை கிழித்து விட்டிருந்தார்.


இவர் (இரண்டு பாட்டில்களையும் பார்த்து விட்டு): ஒண்ணு மொட்ட மேலா இக்கிது.. ஒண்ணு டிரஸ்லாம் போட்டுகிட்டு இக்கிது.


5.








இவருக்கு 26 12 2010 அன்று பிறந்த நாள்


ஆகையினால்,


பிறந்த நாள் வாழ்த்துகள் 

Sunday, December 12, 2010

புர்தாஹ் ஷரீஃப்


எங்கள் வீட்டில் உள்ள சுவர்கள் யாவும் கவிதை போர்வையால்போர்த்தப் பட்டிருக்கும்.

யாரை பற்றிய கவிதையாக இருக்கும்..?

நிச்சயமாக, பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்பாடும் கவிதைகள் தான்.

பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி புகழப்படாத முஸ்லீம் நாவுகளே இருக்காது. அப்படி பாடப்பட்டவைகளிலேயே மிகவும் உயர்வானது என்று இன்றளவும் உலகம் முழுக்க பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புகழ்ப்பாடல் தான் எங்கள் இல்லத்து சுவரை அலங்கரித்த கஸீதத்துல் புர்தாஹ் எனும் கவிதை போர்வை.

கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வார்கள் ’பெருமானாரை புகழ்வது என்பது நாவை புனித நீராட்டுவதாகும்’ என்று. மேலும், அவர்கள், ’இறைவனாலேயே புகழப்பட்ட ஒருவரை மனிதன் என்ன புகழ்ந்துவிட முடியும்?’ என்ற கேள்வியையும் முன் வைத்திருப்பார்கள்.

வாணியம்பாடி கவிஞரை தொடர்ந்து வானம்பாடி கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதினார்கள்..

எழுதப் படிக்கத்
தெரியாதவர் தான்...
ஆனால்
இவர் தான்
பூமியின் புத்தகம்!

என்று..

இந்த பூமியின் புத்தகத்தை பற்றிய புகழ்வரிகள் தான் இந்த கஸீதத்துல் புர்தாஹ் என்பது.

இது எங்களது ஹஜ்ரத் வீட்டில் அவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ஞாயிறு இரவில் பயபக்தியோடு அமர்ந்து மெதுவான குரலில் (மைக் வைத்து சத்தம் போட்டு கத்து கத்துன்னு கத்திகிட்டு அல்ல) ஓதுவார்கள்.

இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமருவதற்கு எங்கள் ஹஜ்ரத்திடம் அனுமதி கேட்க வேண்டும். அவ்வளவு சீக்கிரம் அந்த அனுமதி கிடைத்து விடாது.

‘நாளைக்கு வா.. சொல்கிறேன்” என்று நிறைய நாள் ஓடி விடும். இது நமக்கு சரிபட்டு வராது என்று நாளோடு சேர்ந்துக் கொண்டு ஓடியவர்களும் உண்டு.

எனக்கு நான் கேட்ட உடனேயே உட்கார அனுமதி கிடைத்த அதிசயமும் பாக்கியமும் நிகழ்ந்தது.

ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் வாரா வாரம் புர்தா ஷரீஃப் அல்லாமல் மார்க்க விளக்க பாடமும் நடைபெறும். பல பயிற்சிகளுக்கான செய்முறை விளக்கமும் கொடுப்பார்கள். அந்த கூட்டத்திலே அமரும் அறிய வாய்ப்பினையும் நான் பெற்றுள்ளேன்.

ஒரு முறை ஹஜ்ரத் அவர்கள், “யாராவது நான் எழுதிய இஹ்யா உலுமித்தீனை  சமுதாய வாழ்வுங்கற புஸ்தகத்துல உயிரின் பிறப்பை பற்றி எழுதியிருக்கிறேன்.. படிச்சிருந்தா அத பத்தி தெரிஞ்சவங்க.. கைய தூக்குங்க..’ என்றார்கள்.

ஒருத்தர் கையை தவிர வேறு எந்த கையும் எழவில்லை..

அந்த கைக்குறியவரிடம்..

‘எங்கே அதுல என்ன எழுதியிருக்கேன்.. நீ சொல்லு..’ என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள்.

அவரும் அவருக்கு தெரிந்ததை சொன்னார் ‘... இது தான் எழுதியிருந்தீங்க ஹஜ்ரத்..’ என்று..

உடனே சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா அவரை பார்த்து ‘இவர் நல்லா வருவார்ன்னு’ சொன்னாஹா..

எனக்கு இந்த புர்தாஹ் ஷரீஃபில் அமர அனுமதி கிடைத்ததே நான் நல்லா வந்துட்டேன்னு தான் நான் புரிந்து கொண்டேன். சேஃப்டி ஹாஜா மெய்தீன் நானா சொன்னது என்னை பார்த்து தான்.

உலகின் மிக சிறந்த மனிதரான புனிதரான உயிரினும் மேலான பெருமானாரை (ஸல்) பற்றிய புகழ்ப்பாவில் மிக சிறந்ததாக கருதப்படும் இந்த புர்தாஹ் ஷரீஃபை எழுதியவ்ர்கள் இமாம் ஷர்பத்தீன் முஹம்மது பூஸீரி (ரஹ்) அவர்கள்.

இவர்கள் பெருமானாரை நேரில் சந்தித்ததே கிடையாது. இவர்களின் காலம் ஹிஜ்ரி 608 முதல் 696 (அல்லது 697) வரை. 87 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து மறைந்து போனார்கள். இவர்கள் பிறந்தது எகிப்தில் உள்ள அல் பூசிர் என்ற ஊரில்.

                                              
                                       இமாம் பூஸீரி (றஹ்) அவர்களின் மஜாரே - ஷரீஃப்

இவர்கள் இள வயதினராக இருக்கும் போதே திருக்குரானை மனனம் செய்து ஹாஃபிஸ் ஆனார்கள். பின்பு பிரபல அரபி மதரஸாவான ஜாமிஉல் அஜ்ஹரில் கல்வி கற்று, பல கலைகளில் தேர்ச்சியும் பெற்றார்கள். அரபி இலக்கன இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இவர்கள் அரசாங்க உத்தியோகத்திலும் பதவி வகித்துள்ளார்கள்.

இமாமவர்களுக்கு ஒரு முறை ‘பாரிச வாய்வு’ நோய் ஏற்பட்டு உடலின் பகுதிகள் விளங்காமல் படுத்த படுக்கையில் இருந்தார்கள். அப்போது பெருமானார் (ஸல்) அவர்களை கனவில் கண்டு இந்த உலக பிரசித்தி பெற்ற புர்தாஹ் (போர்வை) எனும் கவிதையை பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே பாடினார்கள்.

இந்த கவிதையின் சிறப்பு இதன் 10 பகுதிகளில் உள்ள 160 பாடல்களும் ‘மீம்’ என்ற அரபு எழுத்தில் தான் முடிவடையும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்பெயரில் வரும் துவக்க எழுத்தும் இதே ‘மீம்’ என்ற எழுத்து தான்.

இந்த கவிதைக்கு புர்தாஹ் என்ற பெயர் வரக் காரணம் பெருமானார் (ஸல்) அவர்கள் கனவில் இமாமவர்களுக்கு அவர்களது போர்வையை போர்த்தினார்கள்.

(இதே போல் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை காணாமலே அவர்கள் மீது உயிரையே வைத்திருந்த உவைஸ் கர்னீ (றலி) அவர்களுக்கு தக்க அடையாளத்தை சொல்லி போர்வையை பரி சாக கொடுத்து அனுப்பியுள்ளார்கள். )

இதன் காரணமாகவே இதற்கு கஸீதத்துல் புர்தாஹ் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த கனவிற்கு பிறகு இமாமவர்கள் பரிபூரண குணம் அடைந்து விட்டார்கள்.

ஒருவருக்கும் இந்த கஸீதாவை பற்றி தெரியாத நிலையில் அவ்வூர் வாசி ஒருவர் அடுத்த நாளே இமாமிடம் வந்து ‘உங்கள் கஸீதாவை காட்டுங்கள்..’ என்று கேட்க

‘எந்த கஸீதா வேண்டும்’ என்று இமாமவர்கள் பதிலுக்கு கேட்க

உடனே அந்த ஊர்வாசி, ‘அமின் ததக்குறி ஜீரானின் பி தீஸலமி என்று ஆரம்பிக்கும் கஸீதாவை தான் நான் கேட்கிறேன்..’ என்று சொல்லவும்..

(அமின் த தக்குறி ஜீரானின் பி தீஸலமி
மஜஜ்த தம் அன் ஜரா மின்ம் முக்லதின் பிதமி

தீ ஸலமெனும் (தீ ஸலமென்பது மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையில் உள்ள ஓரிடம்) ஸ்தலத்தின் அயலகத்தாரை (பெருமானார் (ஸல்) அவர்களையும் அவர்களின் அருமை தோழர்களான ஷஹாபா பெருமக்களையும் குறிக்கும்) நினைத்ததினாலோ
நேந்திரத்திலிருந்து ஓடும் கண்னீரை உதிரத்தால் கலந்தாய் (இரத்தக் கண்ணீர்) வடிக்கின்றாய்?

இமாமவர்களின் மனசாட்சி இமாமவர்களை பார்த்து கேட்பது போல் அமைந்திருக்கும் இந்த கவிதையே புர்தாஹ் ஷரீஃபில் இடம் பெற்றிருக்கும் முதல் புகழ்ப்பாவாகும்)

இமாமவர்கள் ‘இதை நான் வெளியிடாதிருக்கும் போது உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று வினவ..

‘நீங்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பாடி காண்பித்த போது நானும் கூட இருந்தேன்..’ என்று கூறினார்கள்.

அதை தொடர்ந்து இந்த கஸீதாவை பற்றி கேள்விப்பட்ட எகிப்து நாட்டு மன்னரான அத்தாஹிர் என்பவரின் மந்திரி பஹாவுத்தீன் அவர்கள் இமாமிடமிருந்து ஒரு பிரதியை பெற்று கொண்டார்கள்.

இதன் பின்பே உலகம் முழுதும் பாரசீகம், உர்து, பஞ்சாபி, பெர்பர், துருக்கிஷ், ஜெர்மன், பிரென்ச், மற்றும் நம் தமிழோடு சேர்த்து எண்ணற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சிரத்தையோடு பெருமானாரை (ஸல்) அவர்களை பற்றி என்பதால் புனிதமாகவும் கருதி ஓதி வரப்படுகிறது.

பொதுவாகவே நபிமார்கள் என்றாலே அவர்கள் ஏதாவது அற்புதங்கள் (முஃஜிஸாத்) நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அது அந்தந்த காலத்துக்கு ஏற்றவாறு அப்போது தோன்றிய நபிமார்களால் அவ்வாறான அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டும் வந்துள்ளது.

மூஸா நபியவர்கள் செய்த தடியை வைத்து கடலை பிளந்த அற்புதமும் ஈஸா நபியவர்கள் மரித்தவர்களையே உயிர்பித்த அற்புதமும் நிகழ்ந்தேறியிருக்கின்றன.

என்றாலும்,

இதே புர்தாஹ் ஷரீபில் ஒரு பாடல் வருகிறது...

46 ஆவது பாடல்

லவ் னாஸபத் கத்ரஹு ஆயாதுஹு இழமன்
அஹ்யாஸ்முஹூ ஹீன யுத் ஆதா ரிஸார்ரிமமி

அவர்களது (பெருமானார் (ஸல்)) கீர்த்திக்கு அவரது அற்புதங்கள்  மகத்துவத்தில் நிகராக இருப்பின்
அவர்களது திருநாமம் உச்சரிக்கப்படும் சமயத்து (மடிந்து) மக்கிப்போன எலும்பையும் உயிர்ப்பித்துவிடும்.
(ஆகவே, அவர்களது சொந்த கீர்த்திக்கு அற்புதங்கள் நிகரானவையல்ல)

என்று இமாமவர்கள் பாடுகிறார்கள்.


புர்தாஹ் ஷரீஃப் பற்றிய இணைப்பு:


http://www.deenislam.co.uk/burdah/burdah.htm 

Saturday, December 11, 2010

முரண்பாடுகள்

உலக நாட்டாமையின் முன்னாள் அதிபர் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டத்தை துவக்கிய போது இப்படி சொன்னார், “நீங்கள் எங்களுடன் இருங்கள், இல்லையென்றால் தீவிரவாதிகளாக இருங்கள்” என்று.

இவ்வகையான பேச்சை False Dichotomy என்பார்கள். 


கிட்டதட்ட இந்த நிலை தான் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை பல முஸ்லீம்களுக்கு வந்திருக்கிறது.


குரைஷிகள் எனும் கோத்திரம் மக்கமா நகரிலே பெரிய குடும்ப கிளைகளை கொண்ட இனம். 


இதில் பல குடும்ப கிளைகளில் பனு அப்து முனாஃப் இப்னு குசை எனும் குலமும் ஒன்று.


இந்த குலத்தில்  உதித்த பனு ஹாஷிம் குடும்பத்தாரில் வந்தவர்கள் தான் பெருமானார் (ஸல்), அலி (ரலி), ஹம்ஜா (ரலி) அவர்கள் யாவரும்..


இதே குலத்தில் பனு ஷம்ஸ் குடும்பத்தில் வந்த பனு உமைய்யா குடும்பத்தாரில் (ஷம்ஸ் அவர்களின் வளர்ப்பு மகன் தான் உமைய்யா அவர்கள் என்றும் ரத்த சொந்தம் அல்ல என்பதையும் ஷியாக்கள் சுட்டி காட்டியிருக்கிரார்கள்) உஸ்மான் இப்னு அஃபான் (ரலி), அபு சுஃப்யான் அவர்கள்,  முஆவியா (ரலி) அவர்கள், யஜித் யாவரும்..


பனு ஹாஷிம் குடும்பத்தாருக்கும் பனு உமைய்யா குடும்பத்தாருக்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே ஒத்து போகாத நிலை இருந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.


அந்த பகை பெருமானார் (ஸல்) காலத்தில் நடந்த பத்ரு யுத்தத்தில் ஹாஷிம் குடும்பத்தாரில் வந்த ஹம்ஜா (ரலி) அவர்கள் உமைய்யா குடும்பத்தாரில் வந்த உத்பா இப்னு ரபியா அவர்களை கொன்றதிலிருந்து உஹது போரில் பதிலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக உத்பாவின் மகளான ஹிந்த் என்பவர்கள் ஹம்ஜா (ரலி) அவர்களின் கொல்ல வைத்து குடலை உருவியெடுத்தையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருந்தது.


பெருமானார் (ஸல்) அவர்களின் மக்கா வெற்றிக்கு பிறகு உமையாக்களின் குடும்பத்தாரில் வந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் கரம் பிடித்து தூய இஸ்லாத்தில் இணைத்து கொண்டாட்ர்கள். 


பகை இத்தோடு ஒழிந்தது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை..


மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், 


ஒரு பாம்பு ஒன்று நல்ல குளிர்காலத்தில் தன் உடலை வெளியே காட்ட முடியாமல் நடுங்கி ஒடுங்கி சுருங்கி படுத்து கொண்டதாம். ஆஹா பாம்பு இனி தலை தூக்காது என்று அதோடு நெருங்கி அதை அலட்சியமாக விட்டு விட்டால் கோடை காலம் தொடங்கியதும் அந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை தூக்க ஆரம்பிக்குமாம். 


மௌலானா அவர்கள் நம் உள்ளத்திலே தோன்றுகின்ற துர் எண்ணங்கள் நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் போது மறைந்திருப்பதை பார்த்து ஏமாந்து விடக் கூடாது. அதற்கு எப்போது வேண்டுமானாலும் கோடை காலம் பிறக்கும் என்ற கருத்தின் அடிப்படையிலே அவ்வாறு கூறியிருப்பார்கள்.


அப்படி தான் இரு குலத்தாருக்கும் ஏற்பட்ட பகையானது மூன்றாவது கலிபாவும் உமையாக்களின் குலத்தில் வந்தவர்களுமான ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் ஷஹீது வரை அடங்கி இருந்தது. அதன் பிறகு அந்த பகை தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது. 


அப்போது முஸ்லீம்களுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்ட அரசியல் பிளவு தான் ‘ஒன்று நீங்கள் எங்களோடு இருங்கள், அல்லது எங்கள் அரசியல் எதிரிகளாக இருங்கள்” 


அதாவது (நாகூர் பாஷையில்) ஒன்று சுன்னி மரைக்கானாக இருங்கள் அல்லது சியா மரைக்கானாக இருங்கள் என்ற false dichotomy எனும் கருத்தியலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.


ரெஸ்டாரண்ட்டில் ‘டீயா, காபியா’ என்று கேட்பது போல் 


‘நீங்க சுன்னியா சியாவா’ என்றெல்லாம் கேட்கப்பட்டது (இப்போது சுன்னியிலே இருந்தால் ‘சுன்னத்து ஜமாத்தா வஹ்ஹாபியா?’ என்ற கேள்வி)


நான் சொல்வது தான் முற்றிலும் சரி, நீ சொல்வது முற்றிலும் தவறு என்று இருபாலரும் இருபக்கமாக நின்று கொண்டு கவிக்கோ அப்துற் றஹ்மான் அவர்கள் சொல்வது போல் ஒற்றுமை எனும் கயிற்றை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து இழுத்து பிச்சு போட்டு விட்டார்கள். 


ஜபருல்லாஹ் நானாவோ ஆபிதீன் நானாவோ சொன்னது போல் இனி புதிதாக தான் ஒரு கயிறு செய்ய வேண்டும்.