பேருண்மை - அல்-ஹக்கு - The Truth
குரான் ஷரீஃப்
அத்தியாயம்: ஸூரத்து யுனுஸ் (33)
வசனம்: 31 - 32
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
மௌலானா ரூமி (றஹ்) அவர்களின் மஸ்னவியிலிருந்து...
இரு இதயங்களுக்கு மத்தியில்
இருக்கும் சாளரத்தின் வழியே
ஒளியின் மின்னல்
உண்மையை பொய்யிலிருந்து
பிரித்து காட்டுகிறது
Credit:
http://www.sufism.org/society/asma/haqq.html
குரான் ஷரீஃப் தமிழில்:
http://www.tamililquran.com/qurandisp.php?start=10
Image Credit:
http://madaniwallpaper.com/51_al_haqq-wallpapers.html
Audio chants of 99 asmaul husna:
http://wahiduddin.net/words/99_chants/99_Names_chanted_Seemi_Ghazi.mp3

0 comments:
Post a Comment