Sufism Related Quotes

"Restrain yourselves with those who cry unto their Lord morning & night, seeking His countenance; and let not your eyes overlook them, desiring the pomp & life of the world." - Quran Shareef - Sura Kahf 28:
(the above one verse is summary of Sufism)

“And watch two men washing clothes, one makes dry clothes wet. The other makes wet clothes dry. They seem to be thwarting each other, but their work is a perfect harmony. Every holy person seems to have a different doctrine and practice, but there’s really only one work.” - Rumi (Rah)

Deem not the summons ('Dua' - the arabic term used) of the Messenger among yourselves like the summons of one of you to another. - Quran Shareef 24: 63

"I am the slave of the Qur'an and dust under the feet of Muhammad (Sal), Anyone who claims otherwise is no friend of mine." - Moulana Rumi (Rah)

Sunday, October 30, 2011

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள்

ஹதீஸ் குத்ஸி (மகத்துவமிக்க பெருமானார் (ஸல்) செய்தி):

என்னுடைய சுவர்க்கமோ என்னுடைய பூமியோ என்னை வைத்திருக்க (அடைய, never contain) முடியாது. என் நேசர்களின் இதயத்தில் என்னை வைத்திருக்க இயலும்”
---------------------------------------------------------

மிகப் பெரிய வியாபாரியும் செல்வந்தருமான பீர் சையித் ஹாஜி அலி ஷாஹ் புஹாரி (றலி) அவர்கள் பிறப்பால் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.  இஸ்லாத்தை பரப்புவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வந்த மும்பையில் வொர்லி நதிக்கரையில் அமர்ந்தார்கள்.
நாடி வருவோருக்கெல்லாம் சாந்தி மார்க்கத்தை பரப்பினார்கள். இவர்களின் நினைவாக...


படம்: ஃபிஜா
நடிப்பு: ஹ்ரித்திக் ரோஷன், ஜெயபாதுரி, கரிஷ்மா கஃபூர்
பாடலாசிரியர்: ஷவ்கத் அலி
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

பாப்ரி மஸ்ஜித் இடிப்ப, கலவரத்தை தொடர்ந்து மகன் காணாமல் போய் விடுகிறான். மகனை நினைத்து ஏங்கி தவிக்கும் தாய் மனசாந்திக்காக இறையடியாரின் இல்லம் தேடி செல்கிறார்...

-----------------------------
கி.பி.1142 - ஹிஜ்ரி ஆண்டு 530 - ரஜப் மாதம் - 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெற்கு ஆஃப்கானிஸ்தானில் சஞ்சர் எனும் சிறிய கிராமத்தில் இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாய் வழியில் பெருமானார் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவர்களான இமாம் ஹஸன் (றலி) அவர்களின் வழியிலும் தந்தை வழியில் மற்றொரு பேரரான இமாம் ஹுஸைன் (றலி) அவர்களின் வழியிலும் தோன்றியவர்கள்.

இறையருளால் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் வந்து தங்கினார்கள். ஆனால் அப்போது அஜ்மீரை பிருதிவிராஜன் எனும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான்.

இவர்களை அஜ்மீரை விட்டு செல்லும்படி மன்னர் கேட்டுக் கொண்டும் இவர்கள் போக மறுத்து விட்டதால் இவர்கள் மீது மன்னர் மிகவும் கோபம் கொண்டு பல திட்டங்கள் தீட்டினான். ஆனால் திட்டமிடுபவர்களிலெல்லாம் மேலான திட்டமிடுபவனின் நாட்டம் வேறாக இருந்தமையால் கைசேதமடைந்தார் மன்னன்.

ஏழைகளோடு ஏழையாய் ஏழைகளின் உற்ற தோழனாய் “கரீபே நவாஜ் (ஏழைகளின் பங்காளன்)” என்று வழங்கப்பட்டு வந்தார்கள். ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகிய இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மிஸ்ஸன் வெற்றிகரமாக முழுமையடைந்ததும் ஹிஜ்ரி 633 ரஜப் மாதம் 6 ஆம் நாள் (கிபி 1236) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யீனுத்தீன் ஷிஸ்தி (றஹ்) அவர்கள் தம்முடைய 97வது வயதில் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நினைவாக...




பாடலாசிரியர்: கஷிஃப்
---------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் ஷெய்க் ஹாஜா சையித் முஹம்மத் நிஜாமுத்தின் (றஹ்) அவர்கள் ஹிஜ்ரி 636 ஆம் ஆண்டு சஃபர் மாதம் 27 ஆம் தேதி அன்று உத்திரபிரதேச மாநிலமான பதாயுன் நகரில் பிறந்தார்கள். ஐந்து வயது நிறைவு பெறும் முன்னரே தந்தையை இழந்தார்கள் ஐந்தாவது வயதில் தாயையும் இழந்தார்கள்.

தாயார் மரணப் படுக்கையில் இருக்கும் போது ஐந்து வயது சிறுவனை “அல்லாஹ்வின் தவக்கலில் (பாதுகாவலில்) விட்டு செல்வதாக” கூறி விட்டு மரணித்தார்கள்.

அன்னையின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகனார் மிகப் பெரிய இறைநேசராக வாழ்ந்தார்கள்.

சுல்தான், மந்திரிகள், இவர்களோடு ஒரு போதும் கலந்திருக்காமல் ஏழைகளோடு ஏழைகளாய் வாழ்ந்தார்கள்.

இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவு பொருள்கள் அன்றே அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். நாளைக்கு என்று எதுவும் சேமித்து வைத்திருப்பது கிடையாது. முற்றிலும் இறைவனை சார்ந்தே இருந்தார்கள்.

இறை அழைப்பை ஏற்று புதன்கிழமை ஸஃபர் மாதம், ஹிஜ்ரி 725ல் டில்லியில் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பயணமானார்கள்.

இவர்களின் உஸ்தாத் ஹஜ்ரத் பாபா ஃபரீத் (றஹ்) அவர்கள்
இவர்களின் மாணவர்களில் ஒருவர் தான் அமீர் குஸ்ரோ (றஹ்) அவர்கள்

அவர்களின் நினைவாக...





படம்: ராக் ஸ்டார்
இயக்கம்: இம்தியாஜ் அலி
பாடல்: இர்ஷாத் காமில்

Ya Nizamuddin Auliya, Ya Nizamuddin Salqa


இறைநேசரே..!
நிஜாமுதீனே!
ஏழைகளின் தோழரே!
நிஜாமுதீனே!

Kadam Badhaa Le, Hadon Ko Mitaa Le,
Aaja Khaali Pan Mein Pee Ka Ghar Tera,
Tere Bin Khaali Aaja, Khali Pan Mein

இடையில் வரும் இடையூறுகள்

மறைந்து போக செய்யுங்கள்
காலியான வெற்றிடம் நான்
என்னை நிரப்பிவிடுங்கள்

Rangreza
Rangreza
Rangrezaa…
Ho… Rang-rezaaaa…..



வர்ணம் பூசுபவரே
என்னை
தங்களின் வர்ணத்திற்கு
பூசி விடுங்கள்


(வர்ணம்- இதற்கு சூஃபியிசத்தில் நிறையவே அர்த்தம் உள்ளர்த்தம் உண்டு; பொதுவாக இஸ்லாத்தில் இணைவதை கூட இதை குறிக்க பயன்பட்டு இருக்கிறது)

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக! அது ஆகி விடுகிறது..!



(இது குரான் ஷரீஃபின் வசனம்


 - ஸூரத்துல் பகறா (2) - 117; 
 - ஸூரா யாஸீன் (36) - வசனம் 82;)


Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha



எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Woh Jo Mujh Mein Samaya
Woh Jo Tujh Mein Samaya
Maula Wahi Wahi Maaya

அவனே 

எனது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அவனே
உங்களது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அந்த இறைவனே
எங்கெங்கும் மாயமாய்
(மறைந்தல்ல) நிறைந்திருக்கின்றான்

Kun Faya Kun
Kun Faya Kun
SadaqAllahul-alliyul-Azeem’



ஆகுக! 
எனும் ஒரு சொல் தான்
அது ஆகி விடுகிறது!


(ஆகுக என்ற சொல்லுக்கும் அது ஆகி விடுவதற்கும் கால நேர வித்தியாசமே இருப்பதில்லை - Yes! There is no time difference!)


நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,



வர்ணம் பூசுபவரே!
என்னுடைய 
எண்ணத்தில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
என்னுடைய 
மனதில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
அவ்வாறு பூசுவதற்கு
பதிலாக
என்னுடைய
எண்ணத்தில்
மனதில்
இருக்கும்
அத்தனையையும்
எடுத்துக் கொள்ளுங்கள்


(அப்படி எடுத்து விட்ட பிறகு பூசப்பட்ட வர்ணம் மட்டுமே நிலைத்து நிற்கும்)

Sajra Savera Mere Tan Barse
Kajra Andhera Teri Jalti Lau

Katra Mila Jo Tere Dar Par Se
O Maula…
Maula….. Aaa…



நான்
உங்களிடம் 
நேசம் கொள்ளும்போது
எனது காலையின் 
வெளிச்சம்
எனது இரவின் 
இருட்டை
சுத்தம் செய்கிறது


இறைநேசரான
உங்களின் புகலிடம்
வரும் போது
எனது ஆன்மா
இறையுணர்வு
பெறுகிறது


இறைவா...
இறைவா...

Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun

ஆகுக..!

ஆகி விடுகிறது..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam




நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

O Mujhpe Karam Sarkar Tera
Araz Tujhe, Karde Mujhe, Mujhse Hi Riha
Ab Mujhko Bhi Ho, Deedaar Mera
Karde Mujhe, Mujhse Hi Riha
Mujhse Hi Rihaaaaaaaa



எனது தலைவனே..!
என்மீது கருணை காட்டு..!


நான் வேண்டுவதெல்லாம்
என்னை
என்னிலிருந்து
விடுவித்து விடு..!


எனது 
உண்மையான தோற்றத்தை
எனக்கு
அறிமுகப் படுத்து..!


என்னை
நான் என்று 
நம்பிக் கொண்டிருக்கும்
போலியான
என்னிடமிருந்து
என்னை விடுவி...!


Mann Ke Mere Ye Bharam,
Kachche Mere Ye Karam
Leke Chale Hai Kahaan,
Main Toh Jaanoon Hi Na



எண்ணத்தில்
விளைந்திருக்கும்
வீண்பெருமை
தவறானசெய்கைகளால்
விளைந்து நிற்கும்
சுமைகள்


இவைகளை
சேமிப்பாக 
வைத்துக் கொண்டு
நான் 
எங்கே செல்வது?


ஒன்றும் விளங்கவில்லை..

Tu Hai Mujhmein Samaya,
Kahaan Leke Mujhe Aaya,
Main Hoon Tujhmein Samaya,
Tere Peeche Chala Aaya,
Tera Hi Main Ek Saaya,
Tune Mujhko Banaya,
Main Toh Jag Ko Na Bhaaya,
Tune Gale Se Lagaya
Haq Tu Hi Hai Khudaya,
Sach Tu Hi Hai Khudaya



நீ
என்னுள் 
நுழைந்து விடு


எங்கினும்
என்னை
அழைத்து செல்


நான்
உன்னில்
நுழைந்து விடுகிறேன்


நான் உன்னை
பின் தொடர்கிறேன்


நான் உனது
நிழலாகிறேன்


நியே
என்னை படைத்தாய்..!


நான் 
இந்த உலகிற்கு
அருகதையற்றவனாய்
இருக்கிறேன்..!


நீ 
என்னை அணைத்தாய்..!


நீயே
பேருண்மை, சத்தியம் (ஹக்)


நீயே
உண்மை..

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக..!

எனும் ஒரு சொல் போதும்
அது உடனே ஆகி விடும்..!

Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha

எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Kun Faya Kun
Kun Faya Kun




ஆகுக..!
அது உடனே ஆகி விடும்..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam



நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

-----------------------------------------------------------

0 comments: