Saturday, March 22, 2008

இந்தி


இந்தி மொழியின் ஆதிக்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாததற்கு அறிஞர் அண்ணாவின் முயற்சி ஒரு முக்கிய காரணமாகும்.

ஒரு மாநிலத்தவர் இன்னொரு மாநிலத்தவரோடு பேசுவதற்கு இந்தி மொழியையும் நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டு மக்களோடு உரையாடுவதற்கு ஆங்கில மொழியும் கற்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், ஒருத்தர் பெரிய நாய், சிறிய நாய் என்ற இரண்டு நாய்களை வளர்த்தாராம். பெரிய நாய் நுழைவதற்கு ஒரு பெரிய கதவையும், சிறிய நாய் நுழைவதற்கு வசதியாக இன்னொரு சிறிய கதவையும் தனியாக வைத்திருந்தாராம். பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், பெரிய நாய் நுழைவதற்கு என இருக்கு ஒரே கதவு வழியாக சின்ன நாயும் தான் நுழையுமே, அதற்கு ஏன் தனியாக ஒரு கதவு வைப்பானேன்..? என்று தானே கேட்பார்கள்.

அது போலவே அயல் நாட்டினருடன் பேசுவதற்கு என படிக்கும் ஆங்கிலத்தத வைத்துக் கொண்டே மற்ற மாநிலத்தவருடன் பேச முடியும் தானே? என்று அண்ணா தனது திறமையான வாதத்தால் இந்தி ஆதிக்கத்தை மண்னை கவ்வ வைத்தார்.

இந்தி படிப்பதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே பார்க்கப்பட்டது. தந்தை பெரியார் சொல்வது போல பண்பாட்டு படையெடுப்பு மூளை விளங்காகும். இத்தகைய விளங்கை உடைத்தெறிய தான் அண்ணா அவர்களை போன்றோர்கள் பாடுபட்டார்கள்.

இது இப்படியிருக்க எனக்கு தனிப்பட்ட முறையில் இந்தி படங்களையும் பாடல்களையும முறையே விரும்பி பார்ப்பேன், விரும்பி கேட்பேன். என்னை பொறுத்த வரையில் என் மகளுக்கு வாப்பா (அப்பா) என்றால் டாடி, பிதாஜி அல்லது இன்னும் எத்தனை மொழிகளில் உள்ள நேரடி வார்த்தைகளை வேண்டுமோ தெரிந்து வைத்துக் கொள்ளட்டும். தவறில்லல, ஆனால் என் பிள்ளை என்னை வாப்பா என்று தான் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்

- நாகூர் இஸ்மாயில்

0 comments: