Thursday, May 20, 2010

இந்த நகரத்தில் தனிமையில் ஒருவன் - குல்சார் சாப் எழுதிய இந்தி பாடல்

படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர்
படம் வெளியான ஆண்டு: 1977
இசை: ஜெய் தேவ்
இயக்கம்: பீம்செய்ன்
கதை: டாக்டர் சங்கர் சேஷ்

குருவி சேர்ப்பது போல் காசை சேர்த்து காதலியோடு சேர்ந்து வாழ வீடு கட்ட ஆசைப்பட்டான் ஒருவன்.  வீட்டை கட்டி கொடுப்பவர் பாதி வீடு கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள வீடும் பணமும் காணாமல் போகிறது.

அந்த கட்டத்தில்   எடுத்த  சில  தவறான  முடிவுகளால்  காதலியும்  கை  விட்டு  போகிறாள். 
வாழ்க்கையை தொலைத்து விட்டு இனி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாத தனிமையில் அவன்.
அறிமுகமானவர் என்று யாருமில்லாத மும்பை போன்ற பெரிய நகரத்துக்கு வந்து தனிமை எனும் கொடுமையில் விழி பிதுங்கி நின்றால்...

இதோ குல்சாரின் பேனாவின் இலக்கிய'மை' இசையோடு கலக்கிறது..




Ek Akela is Seher Mein
Raat mein aur do-pehar mein
Aab-o-daana dhoondta hain...
Aashiyaanaa dhoondth hain...

இந்த நகரத்திலே
தனிமையிலே ஒருவன்..

இரவும் பகலும்

வாழ்வாதாரம் தேடுகிறான்...

வசிப்பிடம் தேடுகிறான்...

Din Khaali Khaali Bartan Hai
Aur raat hai jayse Andhaa Kuaan
In sooni andheri aankhon mein....
Aansoo ki jagah aata hai dhuaan
Jeene ki wajaah to koi nahin...
Marne ka bahaana dhoondta hai..

பகல் இங்கே
காலியான பாத்திரம்
(அதாவது பசித்தவனுக்கு காலியான பாத்திரம் என்ன பயன்படுமோ அதுவே இங்கே பகல் வாழ்க்கை)
இரவு இங்கே
ஆழமான கிணறு
(அதாவது பக்கத்தில் இருப்பவர் கூட யாரென்று தெரியாத மிகவும் ஆழமான இருள் நிறைந்த பள்ளத்தாக்கு)
தனித்துவிடப்பட்ட
கருமைநிற கண்களில்
கண்ணீரும்
வெறும் புகையானது..!
(அதாவது வைரமுத்து 'வெள்ளை புறா ஒன்று' பாடலில் அருமையாக எழுதியிருப்பாரே 'நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழையானதே' என்று அதே போல் தனிமையில் அழுதழுது கண்கள் ஏழையாகி இனி அவன் அழும் போது கூட வெறும் புகை மட்டுமே வருகிறதாம்)
இனி அவன்
வாழ்வதெற்கென்று
ஒரு காரணமும்
இல்லை..!
அதனால்
சாவதற்கு
ஒரு சாக்கு
(அதாவது காரணம்) 
தேடுகிறான்..!

In umr se lambi sarhkon ko
Humne to Theherte dekha nahin
Bas Daurhti phirti rehti hain..
Manzil tak pahunchte dekha nahin
Is ajnabi se shehar mein..
Jaana Pehchaana dhoondta hai

இங்கே சாலைகள்
கூட
வாழ்க்கையை
விட
நீளமாக இருக்கிறது..!
அதை பயன்படுத்துபவர்கள்
ஓரிடத்தில் நிற்பதை
நான் பார்த்ததே
இல்லை..!
மாறாக
ஒடிக் கொண்டே
இருக்கிறார்கள்..!
அவர்கள் சேரிடம்
சேர்ந்ததையும்
பார்த்ததே
இல்லை..!
(அதாவது நகரத்து வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் சாலையிலே பாதி வாழ்க்கையை கழித்து வருவதோடு அவர்கள் போய் சேர வேண்டிய எல்லையையும் அடையாமல் 'ஏதோ ஓடுகிறது' என்பது போல் வாழும் வாழ்க்கையை பற்றி பேசுகிறது)
இத்தகைய
அறிமுகமில்லாத
விநோதமான ஊரில்
தெரிந்தவரையும்
அறிந்தவரையும்
தேடுகிறேன்..!

Thursday, May 13, 2010

சில டைரி குறிப்புகள்...

வாசல் கதவு உள் பக்கமாக தாழிட்டு இருந்தது. வீட்டின் வாசலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தி விரலில் உள்ள 'வி'யும் 'ர'வும் போயே போய் விட்டது. கதவை ரொம்ப நேரமாக தட்டியும் திறந்த பாடில்லை.

எங்க மாமா மிகவும் கோபக்காரர். எங்க மாமாவிற்கு பிடிக்காத பழமொழி அல்லது சொல்மொழி 'தோலுக்கு மேலே வளர்ந்துட்டா பெத்த புள்ளைங்க கூட தோழர்கள் அல்லது தோழிகள்' என்பதாகும். பிடித்த பழமொழி 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் கூட உதவ மாட்டான்' என்பதாகும்.

அதனால் பிள்ளைங்க எல்லாம் பயந்து நடுங்குங்க.. இப்போது அவர் தான் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: யார் வீட்டு கதவை?  -
பதில்: அவர் வீட்டு கதவை தான்.

என் மாமாவின் மகனார் இருக்கிறாரே, அவர் பத்தாவது பரீட்சை எழுதியிருந்தார். அவர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று கண்டிப்பாக கறாராக கட்டளையிட்டிருந்தார்கள் எங்கள் மாமா.

அன்னாருடைய மகனோ, 'வாப்பா ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரொம்ப கஷ்டம் வாப்பா.. இருந்தாலும் நான் முயற்சி பண்றேன்.. எப்படியும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாவது வாங்கி காட்டுறேன்' என்று சவால் விட்டிருந்தார்.

அவர் இதுவரை விட்ட எந்த சவாலிலும் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவ்வளவு ஏன்..? இதுவரை அவர் எந்த சவாலுமே விட்டதாக கூட சரித்திரமே இல்லைன்னா பார்த்துக்க வேண்டியது தான்.

எங்க மாமா அவர்களின் வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் அந்த நல்ல நாளின் காலையில் தான் ரிசல்ட் வந்திருந்தது. மரைக்காயர் அதான் எங்க மாமாவின் மகனார் பரிச்சையில பெயிலாகி இருந்தார். அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரே ஒரு சப்ஜெக்டில் தான் அப்படி பெயிலாகி இருந்தார்.

இப்போது வாசலில் இருந்த அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது, புள்ளை அடிக்கு பயந்தோ அல்லது அவமானத்துலேயோ ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு செஞ்சிருக்குமோ என்பதே அது.

எல்லோரும் அழுது புலம்ப எங்க மாமா உள்பட தெருவாடிகளில் பலர் எல்லோரும் ஓட்டின் மீது ஏறி கொல்லை வழியாக குதித்து இரண்டு நாளைக்கு முன்னாடி ஆயிரங்கணக்கா செலவு பண்ணி மாட்டின கதவை கஷ்டப்பட்டு உடைச்சு எல்லோரும் உள்ளே போய் பார்த்தா..

உள்ளே போய் பார்த்தா பத்தாவது பரீட்சையில ஃபெயிலான புள்ளை படுத்து தூங்கிட்டு இருக்கு உள்ளே..

எங்க மாமா அடிச்சாரு தான், ஆனா பரீட்சையில ஃபெயிலானதுக்கு கூட இல்லை, தூங்கிட்டிருந்த அவரை எழுப்பி விட்ட உடனே அவர் சொல்லியிருக்கார், ' இதுக்காக ஏன் புது கதவை உடைச்சீங்க.. வாசல் கதவை உடைச்சிருக்கலாம்ல.. அது தான் பழசு.." என்றிருக்கார் என்னோட சூப்பர் மச்சான்..

Wednesday, May 12, 2010

நீயில்லாத வாழ்க்கையில் குறையேதும் இல்லை.. நீயில்லாத வாழ்க்கையில்.. ஆனால்.. வாழ்க்கையே இல்லை - குல்ஜார் சாப் பாடல்கள்

’ஆன்ந்தி’ - இந்த படத்தை பற்றி ஏற்கனவே எனக்கு தெரிந்த அளவுக்கு இங்கே ஒளறி கொட்டி களறி முடித்து இருந்தாலும் இந்த படம் பாதித்த அளவில் பாதி எழுதியதாக கூட ஒத்துக் கொள்ள முடியாது. சரியாக ஒளற (எழுத) தெரியவில்லை என வேண்டுமென்றால் உண்மையை ஒப்புக் கொள்ளலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தை பற்றி நான் மறுபடியும் இங்கே எழுதுவதற்கு காரணம் இந்த படத்துக்கும் எனக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. எப்படியெனில்..

இந்த படத்தில் ஒரு கட்டத்தில் சுசித்ரா சென், ‘என்னா இது.. இஸ்மாயில் பாய்.. இஸ்மாயில் பாய்..’ என்று கூறுவார். கேமரா கொஞ்சம் பின்னுக்கு செல்லும் போது சஞ்சீவ் குமார் கையில் கேமராவுடன் சுசித்ரா சென்னை புகைப்படம் எடுக்க வேண்டி ‘இஸ்மாயில் பாய் இல்லை ஸ்மைல் பாய்’ என்று செல்லமாக சிரிக்க சொல்லி கொஞ்சி கொண்டு இருப்பார்.

இந்த வகையில் சுசித்ரா சென் ’இஸ்மாயில் பாய்’ என்று என் பெயரை சொல்லி எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு சம்மந்தத்தை ஏற்படுத்தி விட்டார். நான் என்ன செய்ய..?

'தேரா பினா ஜிந்தகி சே கோயி.. ' என தொடங்கும் இந்த பாடலை ஏற்கனவே மொழி பெயர்த்து எழுதியிருந்தாலும் (அரை குறையாக தான்)இங்கே பாடலை மட்டும் தனியாக எழுதி விட அடி மனதில் ஆசை வந்து விட்டது.  ஆகையினால்.. இந்த பதிவு..

அரசியல் கட்சியின் தலைவியான ஆர்த்தி தேவி தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக வெளியூர் சென்று ஒரு ஓட்டலில் தங்குகிறார். அந்த ஓட்டலின் எம்.டி கம் மேலாளர் தனது கணவர் என்று தெரிய வருகிறது. 

முன்னர் ஆர்த்தி தேவி அரசியலில் ஈடுபடுவதை விரும்பாத காரணத்தினால் எழுந்த கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து இருவரும் பிரிய நேரிடுகிறது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

இறுதி கட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ‘இனி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டு வீட்டில் குடும்பத்தை குழந்தையை கவனித்து கொள்கிறேன்’ என்று கூறுகிறார்

முன்பு அரசியலில் ஈடுபடுவதை கடுமையாக எதிர்த்த கணவரோ, ‘உன் சேவை கட்சிக்கும் நாட்டுக்கும் இப்போது அவசியம் தேவைப்படுகிறது, நீ வீட்டிலேயும் சரி.. நாட்டிலேயும் சரி.. தோல்வி அடைவதை நான் விரும்ப மாட்டேன். நீ போய் வா.. நான் எப்போதும் உன் கூட இருப்பேன்’ என்று அனுப்பி வைத்து கதையை தொடங்கி முடிப்பார்.

இந்த கதையை மிகவும் உணர்வு பூர்வமாக குல்சார் அவர்கள் ‘ஆன்ந்தி’யில் எடுத்திருப்பார்கள்.

ஒரு தியேட்டரில் 'See The Prime Minister of India' என்று விளம்பரப்படுத்தியதை பிலிம்ஃபேர் பத்திரிக்கையில் வெளியிட்டவுடன் இந்த படம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக முடிவு செய்து இந்த படத்துக்கு ஒரு முடிவு கட்டினார்கள்.

அதன் பிறகு சுசித்ரா சென் இந்திரா காந்தியின் ஆதரவாளர் போல் ஒரு காட்சி தனியாக எடுக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் படம் முழுக்க ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான். அவர் தான் சுசித்ரா சென். அவரை தவிர்த்து படத்தில் வரும் அத்தனை பேரும் ஆண் கதாபாத்திரம் தான்.

ஜே.கே, ஆர்த்தியின் மகளான 'மன்னு' கூட சிறுமியாக இருக்கும் போது மட்டும் தான் காட்டுவார்கள் பெரியவளானதும் காட்ட மாட்டார்கள். அவளை சிம்லாவில் படிக்க அனுப்பி விடுவார்கள்.

ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் தான் என்றாலும் படமே அவரை சுற்றித் தான் அவர் இல்லாமல் இந்த படமே இல்லை. சுசித்ரா சென்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றும் அந்த கதையை குல்சாரே டைரக்ட் செய்ய வேண்டும் என்று குல்சார் சாபிடம் கதையை சொல்லிய போது,

குல்சார் சொன்னாராம், ‘இந்த கதைக்கு எதுக்கு சுசித்ரா ஜி.. இந்த கதையை தான் டைரக்ட் செய்யணும்னு சொன்னா இதுக்கு யார வேணும்னாலும் நடிக்க வைக்கலாம்.. ஆனால் சுசித்ரா ஜியை தான் நடிக்க வைக்கணும்னு சொன்னா நான் ஒரு கதை சொல்றேன்..’ என்று ஆன்ந்தி கதையை சொன்னாராம்.

அந்த அளவுக்கு சுசித்ரா ஜிக்காகவே எழுதப்பட்ட கதை. அவரும் இருக்கின்ற ஃபிலிம் இன்ஸ்டிடியுட்டுக்கு காம்பெட்டிட்டர் மாதிரி ஒரு நடிப்பு இன்ஸ்டிடியுட்டே நடத்தியிருப்பார் படத்தில்.

ஆனால் அதே சமயத்தில் சஞ்சீவ் குமாரையும் சும்மா சொல்லி விட முடியாது, சில ஹீரோக்கள் தங்களது புதுப்படம் வெளியாகும் போது 'நான் இந்த படத்தில ரொம்ப வித்தியாசமா நடிச்சிருக்கேன்..' என்பார்கள். கடைசியிலே படத்த பார்த்தா கேரக்டர் பேரு மட்டும் தான் வித்தியாசமா இருக்கும். 'தமிழ்படம்' படத்தில் மச்சத்தை வைத்து வேறொரு ஆள் என்பது போல் காட்டியிருப்பார்களே அந்த அளவுக்கு கூட வித்தியாசம் இருக்காது.

ஆனால் 'மாவ்சம்' என்ற படத்திலும் 'ஆன்ந்தி' என்ற படத்திலும் கிட்டதட்ட ஒரே மாதிரி மேக்கப், ஒரே மாதிரி காஸ்ட்யூம் என்றாலும்  சஞ்சீவ் குமார்   எவ்வளவு வித்தியாசம் காட்டி நடித்திருப்பார்.

'குல்சார்', 'ஆர்.டி.பர்மன்', சஞ்சீவ் குமார்'  காம்பினேஷனில்  புதியதொரு  படம் பார்க்க நிச்சயமாக நடக்காதுன்னு தெரிந்தும்  மனம்  ஒரு தலை  ராகமாய் ஏங்கிக் கொண்டே இருக்கிறது.

பெரிய காரணம் ஏதுமில்லாமல் பிரியமான தம்பதிகள் பிரிந்த பின்பு  இருவருமாக - தேர்தல் நேரம் என்பதால் இதை வைத்து எதிர்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் என்று பயந்து - யாருக்கும் தெரியாமல் இரவின் தனிமையில் சந்தித்து தத்தமது மனங்களை பேச விட்டு பிரிவுகளின் துயரங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

மரணித்த மௌணங்களும் செதுக்கிய சொற்களுமாய் நிரம்பிய அந்த  சோக கனங்களின் ஒரு பதிவு தான் இந்த பாடல்...

(டிரில்லியன் தடவை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல்.. an ultimate song..)

மனைவி:
barson baad, yun ghumne nikli hoon ... aise lagta hai
ரொம்ப வருஷமாச்சு.. இப்படிலாம் வெளியே வந்து..  இது எப்படி இருக்குன்னா...!

கணவன்:
kiya?
என்ன..?

மனைவி:
jaise wo kisi sadi ki baath thi
ஒரு யுகத்தையே கடந்து வந்த  மாதிரி இருக்கு

கணவன்:
huhn.., shaayad un dinon ki baath hogi.. jab yeh imaarath abhi ujdehi nahin thi..
(ஒரு இடிந்திருக்கிற பழைய கட்டடத்தை சுட்டிக்காட்டி)
ஹும்.. இந்த கட்ட்டம் இடிபடாம இருந்துச்சுல்ல.. அநேகமா.. அந்த காலத்துக்கே திரும்பிட்ட மாதிரி இருக்கு..

மனைவி:
huhn.., pichle kisi janam ki bath hi tho laghti hai na?
ஹும்.. இன்னொரு தடவை பொறந்து வந்த மாதிரி இருக்கு.. இல்லை?

கணவன்:
ek kaam karein.., jab thak thum yahan ho..,  roz ghar pe kaane keliye tho aaya hi karogi.. khaane ke baad, ghoom ne nikal aya kareinge.. kum-se-kum, yeh imaarath, kuch dinon keliye tho bas jaayegi
ஒரு வேலை செய்.. நீ இங்கே இருக்கிற வரைக்கும்.. ஒவ்வொரு நாளைக்கும் ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு.. சாப்பாட்டுக்கு பிறகு..அப்படியே செத்த காலாற நடந்துட்டு வருவோம்.. அப்படியே இந்த கட்டங்களுக்கு ஒரு உயிர் கெடைச்ச மாதிரியாவது இருந்துட்டு போவட்டும்..
 
thumhaare shawl kahan?
ஒன்னோட ஷால் (shawl) எங்கே?

மனைவி:
um, hahn hahn, bhool gai, hahn, ah, ah, na, na,
ம்.. ஆமா.. ஆமா.. நான் மறந்துட்டேன்..  இல்லை.. இல்லை..  (ஷாலை கணவர் போர்த்தி விட) வேண்டாம்.. வேண்டாம்.

கணவன்:
thum nahin badaloge, lo
நீ இன்னும் மாறவே இல்லை.. இத போர்த்திக்க..




பல்லவி:
பெண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும் 
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில் 
வாழ்க்கையே இல்லை 

வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை

Tere bina zindagi se koyi, shikwa, to nahi
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும் குறைகளேதும் 
இல்லை

சரணம் 1:

Kaash aisa ho tere qadmo se, chun ke manzil chale, aur kahi, door kahi

என் சேரிடம்
உன் பாதங்களின்
வழியாக
இருந்திருக்க வேண்டும் -
அது அல்லாமல்
வழிமாறி சென்றுவிட்டது
தூரமாக சென்றுவிட்டது

Tum gar saath ho, manzilo ki, kami to nahi
நீ என்னுடன்
இருந்தால்
என் சேரிடம்
குறைவில்லாமல்
இருந்திருக்கும்


வசனம்:

கணவன்:
Suno Aarti.., ye jo phoolon ki belen nazar aati hain na,
ஆர்த்தி இதை பாரு.. (அரபி எழுத்துக்களை காட்டி) இங்கே பூ எல்லாம் ஊர்ந்து போற மாதிரி தெரியுதுல்ல..?

darasal ye belein nahin hai, arabi main aayaten likhi huyi hain.
அதெல்லாம் உண்மையிலே பூ இல்ல.. அரபி ஆயத்துகள் (எழுத்துக்கள்)..
Ise din ke vaqt dekhna chahiye.., bilkul saaf nazar aati hain. 
நீ பகல்ல பார்த்தா.. நல்ல தெளிவா தெரியும்

(எதிரே கையை நீட்டி)
Din ke vaqt ye paani se bharaa rahataa hai.
இந்த இடத்துல பகல்ல பூரா தண்ணியா நெரம்பியிருக்கும்..

(வேறொரு பக்கம் கையை காட்டி)
Din ke vaqt.., jab ye fuwhare...
பகல்ல இங்கே.. இங்கே துளித்துளியா இருக்கும் போது..
(என்று வாயெடுக்கும் போது ஆர்த்தி இடை மறிக்கிறார்)

மனைவி: 
Kyon din ki baaten kar rahe ho
ஏன் பகல்ல நடக்குறத பத்தி எங்கிட்ட சொல்றீங்க.. 


Kahaan aa paaungi main din ke vaqt?
நான் எப்படி பகல்ல உங்களோட வெளியே வர முடியும்..


கணவன்: 
Ye jo chaand hai na, ise raat main dekhnaa... Ye din main nahin nikaltaa ..
இந்த நிலா இருக்குல்ல.. இது ராத்திரியில மட்டும் தான் தெரியும்.. பகல்ல தெரியறிதில்லை..


மனைவி: 
Ye to jaroor nikaltaa hogaa
இது தான் எப்போதும் தெரியுதே


கணவன்: 
Haan.., lekin beech mein amaavas aa jaati hai...Waise to amaavas pandra dinon ke hothi hai, lekin is baar bahut lambi thhi
ஆமா தெரியும்.. ஆனா இடையில.. அமாவாசை வந்துடும்.. உண்மையில.. எப்போதும் அமாவாசை 15 நாளைக்கு பிறகு தான் நிலா வரும்.. ஆனா இந்த தடவை ரொம்ப நாளாயிடிச்சு..


மனைவி: 
Nau baras lambi thhi naa ?
9 வருஷம் ரொம்ப அதிகம் இல்ல..?


சரணம் 2:


பெண்:
Jee mein aata hai, tere daaman mein, sar jhuka ke ham, rote rahe, rote rahe
உன்னுடைய
தோளில்
சாய்ந்து கொண்டு
அழுது
தீர்க்க வேண்டுமாய்
மனம் உந்துகிறது 



Teri bhi aankho mein, aansuo ki, nami to nahi
உன்னுடைய
கண்களிலும்
அழுது தீர்த்த
தடங்கள்
தெரிகிறது..


ஆண்:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi

நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை

வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை



சரணம் 3:
ஆண்:
Tum jo keh do to aaj ki raat, chaand doobega nahi, raat ko rok lo
நீ மட்டும்
ஒரு வார்த்தை
சொன்னால்
இந்த நிலவின்
இரவுகள்
நீடித்திருக்கும்..
இரவை  அப்படியே
நிறுத்திவிடு..!


Raat ki baat hai, aur zindagi baaki to nahi 
இருவருக்குமான
இந்த இரவு
நீடித்து விட்டால்
இரவை தவிர்த்து
வேறு வாழ்க்கையே
பற்றிய பேச்சில்லை
பல்லவி:
Tere bina zindagi se koyi, shikwa, to nahi, shikwa nahi, shikwa nahi, shikwa nahi

நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
எனக்கு அப்படி
ஒன்றும்
குறைகளேதும்
இல்லை

Tere bina zindagi bhi lekin, zindagi, to nahi, zindagi nahi, zindagi nahi, zindagi nahi
ஆனால்
நீ இல்லாமல்
நான் வாழும்
இந்த வாழ்க்கையில்
வாழ்க்கையே இல்லை


வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை, வாழ்க்கையே இல்லை

என்னுடைய இண்டர்பிரடேசனும் குல்சார் சாபுடைய இண்டர்பிரடேசனும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல் குற்றம் பொருள் குற்றம் ஏதுமிருந்தால் பரிசுத் தொகையில் கழித்துக் கொள்ளலாம்.

நாகூர்ல கொடியேத்தம்

1
எங்க ஊர் ஆசாமி ஒருவர் ரொம்ப இறை பக்தி உள்ளவர். பக்கத்து ஊருக்கு போய் வாஞ்சூர் மருந்த குடிச்சா கூட 'பிஸ்மில்லா' சொல்லி தான் குடிப்பார்ன்னா பாத்துக்குங்களேன்.

அவர் கிட்டே நான் சொன்னேன், 'நானா, நம்ம ஒடம்புக்குள்ளே நம்மளால சொந்தமா உருவாக்க முடியாத வெலை மதிப்பில்லாத பொருளெல்லாம் இருக்கு, நீங்க சாராயத்த குடிச்சு அதெல்லாம் அழிக்க பாக்குறீங்களே..'ன்னேன், அத்தோடு விடாமல், 'நம்ம ஒடம்பு நமக்கு ஒரு வூடு மாதிரி நானா, நம்ம வூட்டுக்குள்ளே நமக்கு கெடுதலானத நாம சேர்ப்போமா..' என்றேன்

அரை போதையில் அறைக்குள் இருந்த அவர், 'ஏன் சேர்க்க மாட்டோம், நம்ம வூட்டுக்குள்ள கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய சேக்குறதில்லை..' என்றார்.

நான் கைலியை காணோம் கைநேஞ்சியை காணோம்னு ஓடியே வந்துட்டேன்.

அவர் நாகூர் தர்ஹால எஜமாண்ட வாசல்ல ரொம்ப மரியாதையா ஒக்கார்ந்திருப்பார், வாஞ்சூருக்கு போவும் போது கூட மியா தெரு, குஞ்சாலி மரைக்கார் தெரு சந்திக்கும் முனையில் தர்ஹா பெரிய மனாரா தெரியும், அங்கே செருப்பை கழட்டி போட்டுட்டு கையை கண்ணுல வச்சு முச்சம் கொடுத்துட்டு தான் வாஞ்சூர்க்கே போவார்.

அதே மாதிரி திரும்ப வரும் போது குடிச்சிட்டு வர்ரது எஜமானுக்கு தெரிய கூடாதுங்கறதுக்காக அப்படியே வாயை பொத்திகிட்டு தலையை திருப்பிகிட்டு தான் போவார். அவ்வளவு மரியாதை.

மரியாதை பலவகைப்படும் என்றால், அதில் நானாவின் இந்த மரியாதை ஒரு வகை. இது மாதிரி மரியாதைகளில் பல வகைகள் உள்ளது.

அதில் ஹந்திரியே நடக்கக் கூடாது தர்ஹாக்கே போவக்கூடாதுங்கறது தான் உச்சபட்ச மரியாதை.

2
எங்க ஹஜ்ரத் ஒரு கதை சொல்லி காண்பித்தார்கள்,

ஒரு ஊர்ல ஒரு தர்ஹா இருந்துச்சு, அந்த தர்ஹாவ ஒட்டி ஒரு பள்ளிவாசலும் இருந்துச்சு, அந்த பள்ளிக்கி ஒரு முத்தவல்லி ஒருத்தர் இருந்தாரு, அவர் அஞ்சு வேலை தொழுவ, குரான் ஷரீஃப் ஓதுறது, தர்ஹா ஜியாரத்ன்னு ரொம்ப இபாதத்தா இருந்திருக்காரு.

ஆனா அவர்ட மவன் ஒரு வேலைக்கு கூட பள்ளி பக்கமோ இல்ல தர்ஹா பக்கமோ வராதவனா ஒரு ஆட்டு மேலேயே ரொம்ப புரியமா இருந்துகிட்டு இருந்திருக்கான்.

அவர் எவ்வளவோ சொல்லி பார்த்தாரு, இவன் கேக்கலை, ஆட்டு கூடேயே சுத்திகிட்டு இருந்திருக்கான். அதனால் கோவப்பட்டு 'நீ என் புள்ளையே இல்ல, இப்படி தர்தீப் இல்லாத புள்ளை எனக்கு தேவையுமில்லைண்டு சொல்லி வூட்டை வுட்டே தொறத்தி வுட்டுட்டாரு'.

அவன் ரொம்ப சந்தோஷமா, ஆட்டை கூட்டிட்டு அந்த ஊரை வுட்டே போயிட்டானாம். அப்புறமா, திடீர்ன்னு ஒரு நாள்  அந்த ஆடு எறந்துடுச்சு, அத பொதச்ச எடத்துலேயே இவன் ஒக்காந்து அழுவிகிட்டு இருந்திருக்கான்.

அந்த வழியா போற வர்ற ஜனங்க பாத்துட்டு, யாரோ ஒரு மகான் இந்த எடத்துல தான் அடக்கமாயிருக்காருன்னு அவங்களுக்குள்ளாகவே  பேசிகிட்டதோடில்லாம  அவன் கைல காசயும் கொடுத்துட்டு போயிருக்காங்க.

ஒடனே, அவன் ஒரு உண்டியலை வச்சுட்டான், அது பெரிய தர்ஹாவாயிடுச்சு, அதை ஒட்டி ஒரு பள்ளியும் கட்டுனான், தாடிய வச்சிகிட்டு தசுவமணிய ஓதிகிட்டு முத்தவல்லியா ஒக்காந்துட்டான்.

அவர்ர வாப்பா 'பையன் பெரிய இபாதத்துகரனா மாறிட்டான்'னு கேள்விபட்டு இவன வந்து பார்த்திருக்காரு. அதோட, 'எப்டிப்பா இதெல்லாம்..?'ண்டும் கேட்டிருக்கார்.

அவன் வாப்பாட்ட உண்மையை ஒத்துகிட்டு இருந்திருக்கான், 'இந்த கப்ருல அடங்கியிருக்கிறது அவ்லியாவெல்லாம் இல்ல, என்னோட ஆட்டுகுட்டி தான்'னு

உடனே அவண்ட வாப்பா சொன்னாராம், 'அதானே, புலிக்கு பொறந்தது பூனையாவுமா?, நம்ம ஊர்ல தர்ஹால அடங்கியிருக்கிறது யாரு?, நீ கூட்டிட்டு வந்த ஆட்டுகுட்டியோட ம்மா தானே' என்று.

எப்படியிருக்கு கதை?

3
நாகூரில் 453வது வருட கந்தூரி வருகிற மே மாதம்  15ந் தேதி சனிக்கிழமை சிறப்பாக தொடங்க இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.

ஹந்திரி என்பது இறைவனின் நண்பர்கள் என்று அறியப்படும் அவ்லியாக்கள் மறைந்த தினத்தில் அவர்களின் சீடர்கள், குடும்பத்தார்கள், இன்னும் பொது மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அன்னாரை நினைவு கூர்வதையே குறிக்கும்.

இந்த வகையில் சையிது அப்துல் காதிர் என்ற இயற் பெயரை கொண்ட சுல்தானுல் அவ்லியா நாகூர் பாதுஷா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிகிழமை அதிகாலை நேரத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள்.

அவர்களின் சீடர்களான 404 பேரும் சன்மார்க்க பணி புரிய நான்கு குழுக்களாக பான்வா, மலங்கு, மதாரி, ஜலாலி என நான்கு வகுப்பாக பிரிந்து சென்றார்கள். பிரிந்து சென்ற அவர்கள் ஹிஜ்ரி 979 ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆஹிர் முதல் தேதியில் சந்தித்தார்கள். 10ஆம் நாள் வாழ்வை நீத்த அந்த தருணத்தில் திக்ரில் ஈடுபட்டார்கள். இதுவே ஹந்திரியானது.

4

ஆனால் ஊரில் இன்னேரத்துக்கு சுறா, பையா, குட்டி பிசாசு கைலிங்க எல்லாம் கம்பில தொங்கிட்டு இருக்கும். மூக்கை துளைக்கும் முட்டை புரோட்டாவிலிருந்து மலேசியா ஸ்பெஷல் மீங்கோரிங் வரை கடைகள் குவிந்திருக்கும். அலங்கார வாசல் வெளக்கு ஜெதப்பா எறிய ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கும். இசை முரசு இசை அமுதமெல்லாம் செவிக்கொரு சுவையாய் விருந்து படைத்து கொண்டிருப்பார்கள்.

இப்படியாக ஒரு புரம் ஹந்திரி வேடிக்கை தடபுடலாக நடந்து கொண்டிருக்க இன்னொரு புரம் முஸ்லீம்களில் ஒரு சாரார் எங்கே ஷிர்க் வைத்து விடுவார்களோ என்ற உண்மையான (?) அக்கறையிலும் கவலையிலும் கபுரு வழிபாடு கூடாது, கல்லை படுக்க வச்சு வணங்காதீங்க, அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீங்க என்று கூடு வருவதற்கும் கொடி ஏற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க தயாராகிக் கொண்டு இருப்பார்கள்

அவ்லியாக்களின் கப்ரில் மரியாதையின் குறியீடாக போர்வை போர்த்துவார்கள், அதற்கு ஒரு மேலே சொன்ன ஷிர்க் பற்றி கவலைப்படும் அறிஞர்களில் ஒருவர் இப்படி கேட்டார், ‘ஏன்..? அஹலுக்கு என்ன குளுராவா இருக்குது..” என்று

4

குரான் ஷரீஃப், ஹதீஸை மட்டும் தான் பின்பற்றுங்கள் என்று சொல்வோர்கள் ஒரே அணியாக இருக்க தவறி விட்டார்கள். மேடையேறி ஒருவர் மீது ஒருவர் வசை பாடி அறிக்கை விட்டு பிரிவினைக்கு காரணமாகி இருக்கிறார்கள்.

ரசூல் (சல்) அவர்களை ‘அழகிய முன்மாதிரி’ என்று ஒப்புக் கொண்ட நாம் இந்த ஏகத்துவத்தை விட சொந்த பிரச்சினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி பல குழுவாகி நிற்கும் இவர்களை ‘மோசமான முன்மாதிரி’ என்று ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் ஹந்திரி நிகழ்ச்சியானது முஸ்லீம்களை முஸ்லீம்களோடு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களோடும் ஒன்றிணைந்து ஒரே மனநிலைக்கு கொண்டு செல்கிறது எனலாம்.

சீர்திருத்தம் என்பது தேவையான அளவு தான் இருக்க வேண்டும், ரசூலுல்லாஹ் (சல்) அவர்கள் மக்காவில் உள்ள சிலையை தான் உடைத்தார்கள். மக்காவில் குறைஷிகளால் கஃபாவை சுற்றி கட்டியிருந்த துணிகளை கிழிக்கவில்லை. அதற்கு அவசியமுமில்லை.

’ஷிர்க்’ புகழ் அறிஞர்கள் (அதாவது எதற்கெடுத்தாலும் அவன் ஷிர்க் வச்சுட்டான் என்று கவலைப்படுபவர்கள்) துணிகளையும் கிழித்து எரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனது கருத்தாகும்.

5

’ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் போது ஹந்திரி வருது என்று உங்களை யாரும் கூப்பிட்டு நீங்கள் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், முழு ஊர்வலமும் முடிந்து திரும்ப வந்து விட்ட இடத்திலிருந்து கடிதத்தை உடனே தொடங்க உங்களால் முடியணும்..’ - எங்கள் ஹஜ்ரத் கற்றுக் கொடுத்தவை தான்..


ஹந்திரியில் கொடியேறுவது, கப்பல் வருவது, கூடு வருவது இவை அத்தனையும் எஜமானை நினைவு கூர்வதை விட்டும் தடுத்து விடாத அளவுக்கு  நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றே நான் எங்களின் ஹஜ்ரத்திடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘கத் அஃப்லஹ மன் தஜக்கா..’ - மனதை தூய்மை படுத்தியவர்கள் வெற்றி அடைந்து விட்டார்கள் என்பது குரான் ஷரீஃபின் வாசகம்.

இறைநேச செல்வர்களின் மீது அன்பு பாராட்டுவதிலும் மரியாதை செலுத்துவதிலும் அவர்களின் வாசலில் நின்று சலாம் சொல்வதிலும் மனம் தூய்மையடையவே செய்யும்.

Sunday, May 02, 2010

உன்னிடமுள்ள என்னுடைய வேறு சில உடைமைகளையும் திரும்ப அனுப்பவும் - குல்ஜார் சாப் பாடல்கள்

கொட்டுகின்ற ஒரு மழை நாள் இரவில் மஹேனும் சுதாவும்  புகைவண்டி  நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் சந்தித்து கொள்கிறார்கள்.  மஹேனும் சுதாவும் திருமணமாகி பிரிந்து வாழ்கிறவர்கள். இருவரும் மறக்க நினைத்திருந்த அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்க்க அந்த அறையும் அன்று பெய்த மழையும் ஒரு சந்தர்பத்தை வழங்குகிறது.

அவர்களுடைய அந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மூன்றாவது நபராக அந்த அறையில் அவர்களுடனே விடியும் வரை வசிக்கிறது இல்லை இல்லை விடிந்த பின்னும் கூட தொடர்கிறது. அவர்களின் பிரிவுக்கு  மஹேனுக்கும் மாயாவுக்கு திருமணத்திற்கு முன்பிருந்த உறவு திருமணத்திற்கு பின்பும் தொடர்வதாக சுதா நம்புவதும் சுதாவின் உரிமை கொண்டாடுதலுமே காரணமாக அமைகிறது.

ஆனால் சுதாவை கரம் பிடித்த பிறகு மாயாவை மறந்து விட்டு சுதாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே மஹேன் ஆசைப்பட்டான். மஹேனுக்கு நடந்த ஒரு வகை கட்டாய திருமணத்திற்கு  முன்பு  திடிரென்று சொல்லாமல் கொல்லாமல் காணாமல் போன மாயா திருமணத்திற்கு பிறகு திடீரென்று வந்து நிற்கிறாள்.

மஹேனை பொறுத்தவரை அவனுக்கு அது கட்டாய திருமணம் அதுவும் மாயா திடீரென மறைந்ததால் எப்போது வருவாள் ஒருவேளை திரும்பவே வராமல் கூட போய்விடலாம் என்ற நிலையில் ஒத்துகொண்ட திருமணம்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு மாயா வந்தால் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்து நடந்தேறிய திருமணம். இப்போது திடுதிப்பென்று மறைந்த மாயா திரும்ப வந்து நிற்கிறாள். என்ன செய்வான் அவன்?

சுதாவை பொறுத்தவரை தனது கணவன் தனக்கு மட்டுமே முழுமையாக கிடைக்க வேண்டும் என்று எல்லோரையும் போல் ஆசைப்படும் பெண்மணி. திருமணத்திற்கு முன்னர் மஹேன் தனக்கும் மாயாவுக்கு உள்ள தொடர்பை நேர்மையாக வெளிப்படுத்திய போது மாயவையே திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒதுங்க நினைத்தாள் கஷ்டத்துடன் தான். ஆனால் மாயா மாயமாய் மறைந்து விட்ட நிலையில் மஹேனின் மாயாவை மறந்துவிடுகிறேன் என்ற வாக்குறிதியை நம்பி திருமணம் செய்து கொண்டாள்.

மாயாவை பொறுத்தவரை இப்படி ஒரு திருமணம் நடந்தேறும் என்று அவளுக்கு தெரியாது, அவளுக்கென்று யாருமும் கிடையாது. அவள் இப்படி தான் அடிக்கடி சொல்லாமல் கொல்லாமல் அமைதியை தேடி மறைந்து போவாள். ஒரு முறை அப்படி மறைந்து விட்டு திரும்பி வந்த போது கிடைத்து கொண்டிருந்த அன்பு இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்று நம்பவும் முடியாமல் வேறு எந்த ஆதரவும் கூட இல்லாமல் இல்லை பிற ஆதரவையும் விரும்பாமல் தவிக்கின்றாள்.

யார் மீதும் குற்றம் சொல்ல முடியாத அந்த சூழலில்  கைதிகளாகிறார்கள்  மூவரும். மஹேன் வீட்டில் குடியிருந்த போது மாயா புழங்கிய துணி மணிகளை அப்படியே போட்டு வைத்திருந்தால் கெட்டு போய் விடும் திருப்பி அனுப்பி வைத்தால் அவளாவது உபயோகப் படுத்திக் கொள்வாள் என்று அந்த துணிமணிகளை திருப்பி அனுப்பி வைக்கிறார்கள் சுதாவும் மஹேனும்.

மாயா திருப்பி வந்த சாமான்களை பெற்று கொண்டு அவளது வேறு சில உடைமைகளையும் அந்த வீட்டில் இருப்பதாக சொல்லி ஒரு பக்க கவிதையை தந்தியில் அனுப்புகிறாள்.

'இது தான் மாயா' என்று மஹேன் கவிதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பத்தில் கவிதை என்று எண்ணி ரசிக்க ஆரம்பித்த சுதா அவளுக்கு உரிமையான உடைமைகளையும் கேட்கும் போது எதிர்வினை செய்கிறாள்...

இனி..
மஹேனின் குரலில் மாயாவின் கவிதையை சுதாவோடு சேர்ந்து நாமும் கேட்க தொடங்குவோம்.. அதை தொடர்ந்து மாயாவே அவளது கவிதையை பாடுகிறாள்..




மஹேன்:
உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை நாம் இருவரும் விளக்குகள் பொருத்தப்படாத மிதிவண்டியில் ஓட்டி வந்ததற்காக பிடிபட்ட போது, நாம் பசியோடும், தாகத்தோடும் இருப்பதாகவும் கையில் காசில்லாத ஏழைகளை போலும் நடித்தோமே, அப்போது நம்மை பிடித்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள்  நம் மீது இறக்கப்பட்டதோடு நமக்கு 50 பைசாவும் கொடுத்து விட்டு சென்றாரே.. அதில் 25 பைசா என்னுடையது. அதையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்...

சுதா:
ஹௌ சுவீட்.. என்ன இனிமை? அப்புறம்...

மஹேன்:
உன்னுடன் கழித்த இளவேனில் கால ஈர இரவுகளில் ஒன்றினை என்னுடைய கடிதங்களில் ஒன்றில் மடித்து கிடக்கிறது. அந்த இரவினையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்..

என்னுடைய வேறு சில பொருள்களும் உன்னுடன் உள்ளது. அதனையும் திருப்பி கொடுத்து அனுப்பவும்.. அதில் இலையுதிர் காலமும் அடக்கம்.. அந்த காலத்தில் இலையுதிர்ந்த சப்தம் என் காதோரம் கவிதை பாடி சென்றது, அந்த மரத்தின் தண்டுகள் இன்னமும் நடுக்கத்தில் இருக்கின்றன.. அவைகளை திருப்பி கொடுத்து அனுப்பவும்..

நூற்றி பதினாறு சந்திர இரவுகளையும், உன் தோலில் உள்ள மச்சத்தையும், ஈரம் காயாத மருதானி வாசனைகளையும், ஒருவருக்கொருவர் செய்த பொய்யான சத்தியங்களையும்..

சுதா:
நான் ஏன் அதையெல்லாம் அவளிடம் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்?
இதையெல்லாம் திருப்பி அனுப்பாத போதும், மாயா நம்மோடு தான் இரவும் பகலும் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய பொருள்களென்று அவள் திரும்ப கேட்பதை அனுப்பாமல் நம்மோடு வைத்திருந்தால் மட்டும் என்ன ஆகி விடும்..?

மாயா:
Mera kuch saamaan tumhare paas pada hai
o o o ! saavan ke kuch bheege bheege din rakhe hain
aur mere ik khat main lipti raat padi hai
vo raat bhujaa do, mera vo saamaan lauta do
mera kuch saamaan tumhaare paas pada hai
patjhad hai kcuh ... hai na ?
o ! patjhad main kuch patton ke girne kee aahat
kaanon main ek baar pahan ke laut aai thee
patajhad kee vo saakh abhi tak kaanp rahi hai
vo saakh gira do, mera vo saamaan lauta do

என்னுடைய வேறு சில உடைமகளும் உன்னிடம் உள்ளது
இளவேனிற் கால ஈர தினங்களை அங்கே உன் வீட்டில் வைத்துள்ளேன்
அத்தோடு இனிமை நிறைந்த இரவுகளையும் என் கடிதத்தில் மடித்து வைத்துள்ளேன்
அந்த இரவுகளை முடித்து விட்டு எனக்கு என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பவும்
இது அல்லாமல், என்னுடைய வேறு சில உடைமைகளும் உன்னிடம் உள்ளன
இலையுதிர்ந்த சில மரங்கள் இருந்தனவே.. இப்பவும் இருக்கின்றது தானே?
அங்கே மரத்திலிருந்து இலையுதிர்ந்த சத்தங்களும் உண்டு
ஒரு முறை அந்த சத்தம் என் காதோரம் வந்து விட்டு திரும்ப சென்று விட்டது
அந்த மரத்தின் தண்டுகள் இப்பவும் நடுங்கிகொண்டு இருக்கின்றது
அந்த தண்டை எடுத்து என்னுடைய உடைமகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------
ek akeli chhataree main jab aadhe aadhe bheeg rahe the
aadhe sookhe aadhe geele, sukha to main le aaye thee
geela man shayad bistar ke paas pada ho
vo bhijwa do, mera vo saamaan lauta do

நாம் ஒரு முறை ஒரே குடையில் பாதி நனைந்து சென்ற போது
பாதி நனைந்தும் பாதி நனையாமலும் இருந்தோம், நனையாமல் இருந்த பகுதியை என்னுடன் எடுத்து வந்து விட்டேன்
ஆனால் நனைந்த பாதி அங்கே தான் எங்கேயோ உனது படுக்கையில் ஓரமாக படுத்திருக்கலாம்
அதை திருப்பி அனுப்பி வைத்து விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து இதனையும் திருப்பி அனுப்பி வைத்து விடவும்
--------------------
ek so sola chaand ki ratain ek tumhare kaandhe ka til
geeli mahendi ki khushbu, jhoot mooth ke shikwe kuch
jhooth mooth ke wade sab yaad karaa do
sab bhijwa do, mera vo saamaan lauta do

ஒரு நூற்றி பதினாறு இரவுகளும், உன் தோல்பட்டையில் உள்ள மச்சத்தையும்
ஈரம் போகாத மருதாணியின் நறுமணத்தையும், போலியாய் கோபப்பட்டு கிறுக்கர்களை போல் நடந்த காட்சிகளையும்
ஒன்றுவிடாமல் எனக்கு அத்தனையையும் நினைவூட்டும் நாம் செய்து கொண்ட பொய்யான சத்தியங்களையும்
இன்னும் என்னுடையதான அத்தனையையும் திருப்பி அனுப்பி விடவும், என்னுடைய உடைமைகளோடு சேர்த்து திருப்பி அனுப்பி வைத்து விடவும்
---------------------
ek ijaazat de do bas, jab isako dafanaaungee
main bhi vaheen so jaungee
main bhi vaheen so jaungee

அத்தோடு எனக்கு நீ ஒரு அனுமதியையும் வழங்கி அனுப்பி விடவும், எப்போது அந்த உடைமைகளை நான் எரிக்கின்றேனோ
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதர்கான  அனுமதியையும் வழங்கிவிடவும்
அதன் அருகிலேயே நானும் நிரந்திரமாக உறங்கி விடுவதற்கான அனுமதியையும் வழங்கி விடவும்
---------------------
படம்: இஜாஜத்
கவிதை(கஜல்) வரிகள்: குல்ஜார்
இயக்கம்: குல்ஜார்
நடிப்பு: நசிருதீன் ஷா, ரேகா, அனுராதா படேல்
இசை: ஆர்.டி.பர்மன்
பாடியவர்: ஆஷா போன்ஸ்லே (ஆர்.டி.பர்மனின் மனைவி)
படம் வெளியான ஆண்டு: 1987
தேசிய விருதுகள்:
சிறந்த பாடகி: ஆஷா போன்ஸ்லே (1988)
சிறந்த பாடலாசிரியர்: குல்ஜார் (1988)

Saturday, May 01, 2010

மௌனமான காதல் கதையை தண்ணீரினால் எழுதினால்.. - இந்தி (குல்ஜார்) பாடல் வரிகள்

குல்ஜார் சாபின் கஜலுக்கு நான் ரசிகன். அவர் எழுத்தில் இருக்கும் புள்ளிகளை கூட நான் ரசிக்கிறேன்.

ஏற்கனவே 'ஆன்ந்தி' எனும் படத்தில் வரும் 'தேரா பினா ஜிந்தகி சே கோயி' எனும் பாடலை அதில் வரும் வசனங்கள் உள்பட மொழி பெயர்த்திருந்தேன்.

அதன் பிறகு சென்ற பதிவில் 'கினாரா' படத்தில் வரும் 'நாம் கும் ஜாயேகா' பாடலையும் ஏதோ எனக்கு தெரிந்த வரையில் மொழி பெயர்த்திருந்தேன்.

இப்போது அந்த வரிசையில் மூன்றாவது பாடல் 'லிபாஸ்' எனும் படத்தில் வரும் 'காமோஷ் ச அஃப்சானா..' பாடலை மொழி பெயர்க்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இனி பாடல்,




பல்லவி
(பெண்)
காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சானா

யாரும் அறிந்திராத
இந்த 
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திராத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 1
(பெண்)
தில் கி பாத் நா பூச்சோ, தில் தோ ஆத்தா ரஹேகா
தில் பஹேகாதா ரஹா ஹேய்ன்; தில் பஹேகாதா ரஹேகா
தில் கோ தும்னே, ஓ, குச் சம்ஜ்ஹாயா ஹோதா

என் மனதை பற்றி
மட்டும்
எதுவும் கேட்டுவிடாதே
அது
ஓரிடத்தில்
நிலையாக நில்லாமல்
சுற்றிக் கொண்டே
இருக்கிறது


மேலும்
அது
பயத்தில்
நடுங்கி கொண்டுமிருக்கிறது -
இன்னமும்
நடுங்கி கொண்டே
தானிருக்கிறது


நீ தான்
என் மனதிடம்
எதுவோ
சொல்லியிருக்க கூடும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திராத
இந்த
மௌணமானகாதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!


சரணம் 2
(பெண்)
செஹ்மே சே ரெஹ்தே ஹெய்ன் ஜப் யே தின் தல்தா ஹெய்ன்
ஏக் தியா புஜ்தா ஹெய்ன், ஏக் தியா ஜல்தா ஹெய்ன்
தும்னே கோய், ஓ, தீப் ஜலாயா ஹோதா

பகலின்
வெளிச்சம்
முடிவுறும் போது
இருள்
தொடங்க இருப்பதை
எண்ணி
நான்
அச்சமடைந்தேன்.!


ஒரு
விளக்கு
அணைந்த பொழுது
இன்னொரு
விளக்கு
திடீரென
எரிய ஆரம்பித்தது


அந்த விளக்கை
நீ தான்
ஏற்றியிருக்க
வேண்டும்..!

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத 
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 3
(ஆண்)
கித்னே சாஹில் டூண்தே, கோயி ந சாம்னே ஆயா
ஜப் மஜ்தார் மெய்ன் தூபே, சாஹில் தாம்னே ஆயா
தும்னே சாஹில், ஓ, பெஹ்லே பிச்சாயா ஹோதா

எத்தனையோ
கரைகளை தேடி
அலைந்திருந்தேன்
எதுவும்
என் கண்களுக்கு
தென்படவில்லை


நடுக்கடலில்
நான் மூழ்கவிருந்த
நேரத்தில்
கரை ஒன்று
கை கொடுத்தது


நிச்சயமாக
அந்த கரை
நீ
அமைத்த 
தாகதானிருக்கும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை


நானும்
கேட்டிருக்க
போவதில்லை

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

Sunday, April 18, 2010

நாம் கும் ஜாயேகா - பெயர் மறைந்து விடும் - இந்தி பாடல்

 கார் மெக்கானிக்காக இருந்து ஸ்பானரை பிடித்துக் கொண்டிருந்த 'சம்பூரன் சிங் கல்ரா' என்ற பஞ்சாபியான அவர் 'குல்ஜாரா'க மாறி பேனாவை பிடிக்க ஆரம்பித்த போது மழையாக பொழிந்தது கவிதை.

அப்படி ஒரு மழை தான் இந்த பாடல்.
நனைந்து விடுங்கள்
குல்ஜார் காய்ச்சல்
வந்தால்
மீண்டும் நனைந்து விடுவது நன்மை பயக்கும்..

 

நான் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்:

பல்லவி:

Naam gum jaayegaa,
Cheharaa ye badal jayegaa
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பெயர் மறைந்து விடும்
முகம், என் தோற்றம் மாறி விடும்
என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்
(which means - if you bother to remember)

சரணம் 1:
Waqt ke sitam, kam hasin nahin
Aaj hain yahaan, kal kahin nahin
Waqt se phare agar, mil gaye kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

(கண்ணீரை தரும்)
காலம் நேரம் கொடுமையானது,
ஆனால் அதுவே அழகானதும்


இன்று இங்கே (இம்மையில்) இருக்கின்றோம்
நாளை இருக்க போவதில்லை


கால நேரங்களுக்கு
கட்டுப்படாத
ஒரு உலகத்தில்
நாம் சந்திக்கக் கூடும்
(அப்போது...)


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 2:
Jo guzar ga_i, kal ki baat thi
Umr to nahin, ek raat thi
Raat kaa silaa agar, phir mile kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

எது நடந்ததோ
அது
நேற்றைக்கு சொந்தமானது


அது ஒரு இரவை
போன்றது
வாழ்க்கை முழுமைக்குமானது
அல்ல


அந்த இரவின் தொடர்ச்சி
திரும்பினால்,
நாம்  மீண்டும்
(அந்த இரவை)
அனுபவிக்கலாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 3:
Din dhale jahaan, raat paas ho
Zindagi ki lau, uunchi kar chalo
Yaad aaye gar kabhi, ji udaas ho
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பகலின் நேரங்கள்
முடிவுரை
எழுதும் போது -
இரவு
எப்போதும்
அருகிலேயே
இருக்கும்
(உடனே
தொடங்கிவிடும்)


(அப்போது)
உன்
வாழ்க்கை எனும் விளக்கின்
ஒலியை
அதிகமாக்கி விடு


உனக்கு கண்ணீரை
தந்த
அந்த கனங்களை
(அந்த விஷயங்களை)
நினைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

Thursday, April 15, 2010

பாபு Vs. பாபா

நான் நினைத்த கருத்தை எழுதுவதற்கு இரண்டு விஷயங்கள் எனக்கு உறுத்தலாய் இருக்கின்றன.
1. இறந்தவர்களை பற்றி எதுவும் தவறாக எழுதிவிடுவோமோ என்ற ஐயம்
2. ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு பேசுவது

அப்படி எதை பற்றி எழுதப் போகிறேன் என்று கேட்டால்,

அக்டோபர் 2 Vs. ஏப்ரல் 14

காந்தியை பற்றிய படம் 18 கோடியில் செலவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. சமீபத்தில் கூட அதாவது ஜுலை 2006ல் ஒரு படம் வெளியானது, "லகே ரஹோ முன்னா பாய்' என்ற இந்தி படம் தான் அது. அதில் 'பாபு (- இது இந்தி பாபு -அப்பான்னு அர்த்தம்)' வின் செய்திகளை, "மனிதநேயம், உண்மை, வன்முறையின்மை போன்ற செய்திகளையெல்லாம் ரொமான்ஸ் கலந்து சொன்னார்கள்.

ஆனால் பாபா சாஹேபை பற்றி எடுத்து முடித்த ஒரு படத்தை வெளியிடுவதற்கு ஒன்றரை வருடம் ஆனதாக அந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஜாபர் படேல் கூறுகிறார்.

அது மட்டுமல்ல மேலும் அவர் கூறும் போது, 'அம்பேத்காருடைய கருத்துக்களை அதன் உண்மையான வடிவில் சித்தரிப்பது மிகவும் கடினம்' என்றும் கூறியிருந்தார்.

“When I made a film on Ambedkar, I realised it’s indeed difficult to do depict his ideas and achievements in their true light. My film took one-and-half-years to be released in the country due to censorship issues. In this country, it is extremely difficult to portray Ambedkar’s philosophy in its true sense,” said Patel.


“To me Lage Raho Munnabahi is too much a romanticised version of the whole Gandhian philosophy. Dr Ambedkar’s philosophy is much deeper than that. Ambedkar did not just talk about Dalits, but he also spoke about human rights,” said Jabbar Patel.


அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்,
1. அம்பேத்காரை பற்றிய படம் என்றால் கிட்டதட்ட காந்தியை வில்லன் போல் காட்டியாக வேண்டும்
2. அம்பேத்கார் தலித் மக்களின் உரிமைக்காக போராடினார் என்பதாக இருக்க கூடும்

ஆனால் எது எப்படியோ இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்று போற்றப்படும் காந்தி அவர்களை நினைவு கொள்கின்ற அளவுக்கு அல்லது  மதிக்கின்ற அளவுக்கு இந்தியாவின்  "சட்ட வரைவு குழு"விற்கே தலைவராக இருந்து இந்திய நாட்டின் உச்ச சட்டத்தையே (Supreme Law) வடிவமைத்த (உலகிலேயே நீளமான சட்டம் - the lengthiest Constitution in this world - 22 பகுதிகளாக 440 ஆர்டிகிள்ஸ் - 12 அட்டவணையுடன் 96 திருத்தங்கள் - ஆதாரம்: விக்கிபீடியா) டாக்டர் அம்பேத்காரை நினைவு கொள்கிறார்களா அல்லது மதிக்கின்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அப்படி மதிக்க விடாமல் அவர்களை எது தடுக்கின்றது என்பதை அறிவது அப்படி ஒன்றும் அம்பேத்காரின் படத்தை வெளியிடுவது போன்று கஷ்டமான காரியமல்ல. ஆனால் அம்பேத்காரை  கொண்டாட  விரும்பாதவர்கள்  அவர்களை அறியாமலே 26 சனவரி தினத்தை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த கொண்டாட்டம் என்னளவில் அம்பேத்காரை கொண்டாடுவது போல் தான்.

அம்பேத்கார் 14 ஏப்ரல் 1891ஆம் ஆண்டு மஹர் என்றழைக்கப்படும் தீண்டத்தகாததாக ஆக்கப்பட்ட குலத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் 'ம்ஹௌ' எனும் ஊரில் பிறந்தார். பிறப்பின் மீதே திணிக்கப்பட்ட இந்த வன்முறையை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதுமே போராடினார்

என்னை பொறுத்தவரை அவரின் போராட்டமே அவர் நன்றாக படித்ததில் தொடங்குகிறது. இன்றைக்கும் அம்பேத்காரை பின்பற்றுபவர்கள் அல்லது மதிப்பவர்கள் தொடங்குகின்ற புள்ளியாக நன்றாக படிப்பது என்பதிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்றைக்கு அவர் படித்த சூழ்நிலையை படித்து பார்த்தால், கண்ணீர் கொதிக்கும். ஆசிரியரின் உதவி கிடைக்காது, பள்ளிகூடம் உள்ளேயே வர முடியாது இதையே படிக்க முடியலை இன்னும் கொடுமை என்ன என்றால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் மேல்சாதியினர் மேலே நின்று கொண்டு தண்ணீர் ஊற்றுவார்களாம், இவர்கள் கீழே இருந்து கொண்டு குடிக்க வேண்டுமாம், ஏனெனில் அந்த தண்ணீரையோ அல்லது குவளையையோ தொட கூடாது என்பதே காரணமாக இருந்தது.

இந்தியாவிலேயே அரசாங்க பள்ளியில் சேர்ந்து 1907ல் முதன் முதலாக மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர் என்ற பெயரை வாங்கினார். இது அன்றைக்கு அந்த சமூகத்துக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது.

1908ல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரி படிப்பை படித்து முடிக்கிறார். 1912ல் அவர் எக்கனாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டத்தை பெறுகிறார். அதன் பிறகு பரோடா அரசாங்க வேலை ஏற்றுக் கொள்கிறார்.

அவர் இஸ்லாத்தை பற்றியும் குறைகள் சொல்லியிருக்கிறார், 'பர்தா அணிவது, அடிமைகள் முறை' - இவைகள் இஸ்லாத்தில் இருப்பதாக கூறி கண்டித்திருக்கிறார்.

14ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு நாக்புர் எனும் ஊரில் தலித் மக்கள் 500,000 பேருடன்  பவுத்த மதத்தை தழுவினார்.

அன்றைக்கு அவர் மிகப் பெரிய கூட்டமாக மதம் மாறியது இன்றைக்கும் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்வதனால் தான் 'மத மாற்ற தடை சட்டமே வந்தது'

டிசம்பர் 6, 1956 ஆம் ஆண்டு டில்லியில் அவருடைய வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார் என்று அறியப்படுகிறது.

மேலும் நான் இன்றைக்கு படித்த கருத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டேன், நான் அரசியலில் நிபுணர் அல்ல, நான் சொல்வதில் தவறுகள் இருக்கலாம், எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.


அம்பேத்கார் இந்தியர்கள் அல்லது இந்திய பூர்வீகம் என்று சொல்லி கொள்ளும் ஒவ்வொருவராலும் மதிக்கப்பட வேண்டியவர் என்பது மட்டுமே அது.

Monday, April 12, 2010

மிஸ்டர் பீன்

ரோவான் செபாஸ்டியன் அட்கின்சனாக 6 சனவரி 1955ல் இலா மேவுக்கும் எரிக் அட்கின்சனுக்கும் மகனாக நியுகேஸ்டில்-அபான்- டைனில் (யுகே) பிறந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்ஸிட்டியில் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் முடித்தார். அங்கே ரிச்சர் கர்டிஸ் என்ற திரைக்கதை ஆசிரியரை சந்திக்கிறார். அவருடன் கிடைத்த அந்த சந்திப்பு அவர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

அவருடன் சேர்ந்து துணை திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியதோடு 'நாட் த நைன் ஓ கிளாக் நியுஸ்' (1979 - 1982) எனும் தொலைகாட்சி தொடரில் (27 எபிஸோட்ஸ்) நடித்தார். அந்த தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு ரோவான் அட்கின்சனுக்கு 'பிபிசி பெர்சானலிட்டி ஆஃப் த இயர்'  என்றும் பெயர் வாங்கினார்.

அதை தொடர்ந்து அவர் நிறைய தொலைகாட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு உலகம் முழுக்க இரசிகர்களை பெற்று தந்தது அவர் 'மிஸ்டர் பீன்' எனும் டிவி தொடரில் 1990 ஆம் ஆண்டில் நடித்த பிறகு தான்.

வாழ்க்கை படகு படத்தில் வரும் அருமையான பாடல் 'சின்ன சின்ன கண்ணனுக்கு' என்ற பாடலில் 'பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா'  என்று வரும். மிஸ்டர் பீன் என்ற இந்த தொடரில் அவர் வளர்ந்த குழந்தையாக வந்து அவர் படும் அவஸ்தைகள் தான் கதை.

இந்த தொடரில் முதலில் அவர் வானத்திலிருந்து கீழே குதிப்பது போல் காட்டுவார்கள். அது அந்த நாடகத்தை பார்த்தால் அவர் அப்படி தான் உண்மையிலேயே குதித்தாரோ என்று எண்ணத் தோன்றும்.

அவரை வைத்து எத்தனையோ நகைச்சுவைகள் இணையத்தில் உலா வரும். அப்படி வந்தவைகளில் சில இதோ உங்கள் பார்வைக்கு:

மிஸ்டர் பீன் மருந்து கடைகாரரிடம்: என்னுடைய பேரனுக்கு விட்டமின் மாத்திரை கொடுங்க

மருந்து கடைக்காரர்: விட்டமின் A யா, B யா அல்லது C யா?

மிஸ்டர் பீன்: எதா இருந்தாலும் பராவியில்லை, என் பேரனுக்கு அல்ஃபபேட்ஸ் எல்லாம் தெரியாது
-------------

டாக்டர்: உங்களது தாயார் இறந்து விட்டார்

மிஸ்டர் பீன் கதறி அழுகிறார்.

மிஸ்டர் பீனின் நண்பர்: என் ஆழ்ந்த இரங்கல், நண்பரே!

இரண்டு நிமிடம் கழித்து மிஸ்டர் பீன் இன்னமும் வேகமாக கதறி அழுகிறார்

நண்பர்: ஏன், திடீர்ன்னு என்னாச்சு?

மிஸ்டர் பீன்: இப்ப தான் எங்கூட பொறந்த தங்கச்சி கால் பண்ணுனா, அவங்க அம்மாவும் எறந்து போயிட்டாங்களாம்
-----------

மிஸ்டர் பீனின் மகன்: அப்பா, சக்ஸஸ்ஃபூலுக்கு (Successful) ஒரு S வருமா, இல்லை இரண்டு S வருமா?

மிஸ்டர் பீன்: எதுக்குப்பா சந்தேகம், எதுக்கும் மூணு Sஆ போட்டுடேன்
--------

நண்பர்: ஏன்ப்பா, எங்கிட்டேந்து வீடியோ டேப்லாம் எடுத்துட்டு போனியே, ஓக்கேயா?

மிஸ்டர் பீன்: என்ன ஓக்கேயே, நான் பேய் படமா இருக்கும்னு நெனைச்சு எடுத்துட்டு போனேன், போட்டா ஒரு காட்சி கூட வரலை

நண்பர்: அப்படியா? ஆமா, நீ என்னா கேஸட் எடுத்துட்டு போனே?

மிஸ்டர் பீன்: அதெல்லாம் யாருக்கு தெரியும், ஹெட் கிளீனர்ன்னு எழுதியிருந்துச்சு.
--------

மிஸ்டர் பீன் எனும் இந்த தொடரில் நடித்த பிறகு அவர் மிஸ்டர் பீன் என்றே அறியப்பட்டார். அவர் திரையில் நம்மை சிரிக்க வைத்தாலும் நேரில் அவ்வளவாக பேச மாட்டாராம்.

தமிழ் சினிமாவில் ஹீரோ நல்லது செய்தால் நமக்கும் நன்மை செய்வார் என்று நம்பும் ரசிகர்களை போல் யுகேவிலும் ரசிகர்கள் மிஸ்டர் பீன் நேரிலும் நம்மிடம் சிரிக்க சிரிக்க் பேசுவார் என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் சொன்ன பதிலானது, "மக்கள் நான் ஸ்டேஜில் சிரிக்க வைப்பது போல் நேரிலும் சிரிக்க வைப்பேன் என்று நம்புகிறார்கள். அப்படியல்ல, நான் உண்மையில் யாரிடமும் பேசாத ஒரு மாதிரி டல்லான ஆசாமி, ஒரு நடிகன் அவ்வளவு தான்.." என்பது போல் பதிலளித்தார்.

மிஸ்டர் பீனுக்கு சுனட்ரா சேஸ்ட்ரி என்ற மனைவியும் லில்லி பென்ஞமின் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கூட 'புதுப் புது அர்த்தங்கள்' படத்தில் மிஸ்டர் பீனிலிருந்து ஒரு காட்சியை காப்பி ரைட் அடித்திருப்பார். ஜனகராஜ் தாமதமாக விழித்து காரிலேயே பல் துளக்கி, பேண்ட் சட்டை எல்லாம் போடுவாரே அது அப்படியே மிஸ்டர் பீனில் வரும் காட்சி தான்.

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிபிஆர் செய்து ரகுவரன் உயிரை மீட்டெடுப்பாரே அதே போல் இங்கே மிஸ்டர் பீன் அவர்களும் ஒருவருக்கு சிபிஆர் செய்கிறார். சரியாக அல்ல, வேடிக்கையாக.

"மிஸ்டர் பீன் ரைட்ஸ் அகேய்ன்' என்ற தொடரில் வரும் காட்சி இது.




பின் குறிப்பு:
சரியான சிபிஆர் முறைக்கு இங்கே அழுத்தி டிரை பண்ணி பார்க்கவும்

Thursday, April 01, 2010

கடவுள் மறுப்பு - ஒரு கடவுளா? பல கடவுளா? -பெரியார்தாசன் - அப்துல்லாஹ்

நான் சொல்ல வரும் செய்திக்கு ஐஸ்-பிரேக்கர் போன்று உதவும் சில செய்திகளை கவனிப்போம்.

மு.மேத்தாவோ அல்லது கவிக்கோவோ சரியாக நினைவிலில்லை. பாபர் மசுதி இடித்த பிறகு கவிதை எழுதினார்கள்.

கடவுள் ஆலயத்தை
இடித்தான்
ஏன் இடிக்கிறாய்
என்று கேட்டேன்
கடவுள் ஆலயம்
அமைக்க என்கிறான்

- இப்படியாக எழுதியிருந்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த கோயிலையும் இடித்ததில்லை என்றும் சொல்ல கேட்டதுண்டு.

அடுத்து, இன்னொரு செய்தியும் உண்டு, "மத நம்பிக்கையுள்ளவர்கள் ஒன் கடவுள் தான் பெரிசு என் கடவுள் தான் பெரிசு என்று பார்ப்பதால் தான் சண்டையே வருகிறது.

அப்துஸ் ஸமது சாபு ஒரு முறை திராவிடர் கழகத் தோழர்களுடன் இணைந்து நடந்த கூட்டத்தில் பேசி விட்டு வரும் போது 'இவர்கள் கடவுள் இல்லை (லா இலாஹா - கடவுள் இல்லை) வரை வந்து விட்டார்கள். ஒருவனைத் தவிர (இல்லல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர) விற்கும் சீக்கிரமே வருவார்கள்' என்று பொருள் படும் படி சொன்னார்கள்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன், நாத்திகர்களின் கடவுள் மறுப்பு வாதங்களில் முக்கியமாக முன்வைப்பவை கடவுளை மனிதன் தன் கற்பனைக்கேற்ப படைத்தான் என்பதாகும். அதே போல் கடவுளுக்கு பதிலாக அல்லது கடவுளுடைய இடத்தில் அறிவியலை அல்லது இயற்கையை முன்வைப்பவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.

ஒரு கடவுளை அல்ல பல கடவுள்களை மனிதன் தன் விருப்பத்திற்கேற்ப படைத்துக் கொண்டான் என்பதே இஸ்லாத்தின் குற்றச்சாட்டு ஆகும். அவ்வளவு தான் நாத்திகர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வித்தியாசம்.

திரு கோ.வி.கண்ணன் எனக்கு ஒரு முறை எழுதிய பின்னூட்டத்தில், 'இறைவனை மிதமிஞ்சிய புகழ்ச்சியும் சிலை வணக்கங்களும் ஒன்றே என்றும் முன்னது உருவகம் பின்னது உருவம் என்றும் எழுதியிருந்தார். அத்தோடு மட்டுமல்லாமல், உருவகங்களை அமைக்க தெரியாதவர்கள் தான் உருவம் அமைத்து கும்பிடுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார். அதை நாங்கள் இணைவைத்தல், பாவம் என்போம் என்றும் சுட்டியிருந்தார்.

இதை 'இணைவைத்தல், பாவம்' என்று சொல்லாமல் வேறு எதுவும் சொல்ல முடியாது சார். ஏன்னா உருவகம் என்கிறீர்கள். எப்படி நாங்கள் உருவகப் படுத்துகிறோம் என்று நீங்கள் புரிந்து வைத்திருப்பதை விளக்க வேண்டும்.

ஏன்னா இல்லாத ஒன்றை நாங்கள் உருவகப் படுத்தவில்லை, உதாரணமாக, நீங்கள் வந்து யானை முகத்துடைய ஒரு உருவத்தை வரைந்து கடவுள் என்று வழிபடுகையில் நான் 'ஆணை முகத்துடையவனே' என்று உருவகப் படுத்தி வணங்கி வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களா?

அப்படி என்றால் நாங்கள் நிச்சயாமாக அப்படி செய்யவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். உண்மையில் நாங்கள் இறைவனை சொல்லவில்லை. இறைவனை பற்றி இறைவனே சொல்வதாக குரான் ஷரீஃப் சொல்வதை நம்புகிறோம். அவ்வளவு தான்.

அப்படி என்ன குரான் ஷரீஃப் இறைவனை பற்றி சொல்கிறது என்றால்:

இறைவனாகிய அல்லாஹ் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

இணையற்றவன்! (6:163)

அவனுக்கு சந்ததி இல்லை (2:116)

அனைத்தையும் ஆக்கியவன் (2:29)

புகழுக்குரியவன் (1:1)

படைப்புகளின் போஷகன் (1:1)

என்றும் உள்ளவன் (55:27)

தீர்ப்பு நாளின் அதிபதி (1:3)

அனைத்தையும் நன்கு அறிந்தவன் (35: 38)

ஆற்றல் மிக்கவன் (16:77)

அவன் அறிந்ததை எவரும் அறிய முடியாது (27:65)

நேர் வழியில் செல்வோருக்குத் துணை புரிபவன் (9:115)

மானக்கேடானதை ஏவவில்லை (7: 28)

எளிதான கட்டளைகளை ஏவுவான் (2:128)

அமைதியின் பக்கமே அழைப்பவன் (10:25)

மேற்கூறிய இவையெல்லாம் உருவகங்கள் அல்ல, இல்லாததை மிகைப்படுத்தி அல்லது எக்ஸ்ட்ராவாக புகழ்ந்து கூறியது அல்லமேலே கூறியதை படித்தாலே கடவுள் என்ற அந்த கண்ணியம் இருக்கிறது.

இதுஅல்லாமல் குழந்தையா வந்து அதை திருடினார், துணிமணியை எடுத்துட்டு மரத்துமேலே ஏறினார், கல்யாணத்துக்காக வில்லை உடைத்தார், காதல் செய்தார், புள்ளை குட்டிகளை பெற்றார், - யாரு? கடவுள்..? - இதில் எங்கே இருக்கிறது கண்ணியமான இறைவன்? என்பது தான் நமது கேள்வி.


 இதில் பெரிய வேடிக்கை என்ன என்றால் உருவகம் அமைக்க தெரியாதவர்கள் என்று சொன்னது தான்.

நான்கு வேதங்கள் எனப்படுவதே கடவுளை துதி துதி என்று துதித்து ரிஷிகள் பாடிய ரிஷிகளின் துதிப்பாடலகள் தானே.

மற்ற வேதங்கள் எல்லாம் கடவுளை மனிதன் பாடியது தான், கடவுளை மனிதன் செய்தது, அதாவது நாத்திகர்கள் சொல்வது போல் மனிதனின் கற்பனை. அவ்வாறாகவே தான் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் தவிர, ஒரு கடவுள் போல் பல கடவுளும் இருந்து விட்டு போகட்டுமே என்று வைத்துக் கொள்வதற்கு கடவுள் பண்டம் பாத்திரமோ அல்லது மரம் செடி கொடியோ அல்ல. நாம் நம் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்வதற்கு.

இறைவனின் பேச்சு என்று வழங்கப்படுகிற குரான் ஷரீஃபில் 'ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்றே (5:73) அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப் படுகிறது.

ஒரு சிற்பியையோ அல்லது ஓவியரையோ அழைத்து எனக்கு கடவுள் படம் செய்து அலல்து வரைந்து தாருங்கள் என்று கேட்கிறீர்கள் என்று வையுங்கள்.

அவர் 'எந்த கடவுள்?' என்று கேள்வி கேட்பார்.

சரி என்று ஏதாவது ஒரு கடவுளின் பெயரை சொன்னவுடன் அவரும் வரைந்து தருகிறார் என்று வையுங்கள். அவர் என்ன கடவுளை நேரில் பார்த்தாரா? நிச்சயமாக இல்லை. ஒரு மனிதனால் கடவுளையே வரையவோ செதுக்கவோ முடிகிறது அவர் வரைந்த கடவுளை விட வரைந்தவர் மேலானவரல்லவா?

பெருமானாரின் வாழ்வை நன்கு கவனித்து பார்த்தால் கடவுள் விஷயத்தில் ஒரு இறை கொள்கைக்கும் பல இறை கொள்கைக்கும் நடந்த போராட்டத்தில், விவாதத்தில், போரில் ஒரு இறை கொள்கைக்கு கிடைத்த வெற்றி தான் இஸ்லாமிய வரலாறு.

இந்த ஓரிறை கொள்கை என்பது தமிழுக்கு புதியதும் அல்ல. 'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்' திருமூலர் சொன்னதை அண்ணாவும் அறிமுகம்  செய்து  வைத்தது தான்.

இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுள் மறுப்பும் தவறு, பல கடவுள் இருப்பு என்று கொள்வதும் தவறு.

நாகூர் தர்ஹால் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னால் பாதுஷா நாயகம்  கபுருக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒரு முஸ்லிமிடம் 'உன் ரப் யார்?' என்று கேட்டால் என்ன விடை வருமோ (பாங்கு சொல்லியாச்சுன்னா அவர் எழுந்து நவாப் பள்ளிக்கோ அல்லது சின்ன ஹொத்துவா பள்ளிக்கோ போய் விடுவார்) அதே விடை தான் மக்காவுல கஃபதுல்லாஹ்வுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கிற ஒரு முஸ்லிமிடமிருந்தும் வரும். 'அல்லாஹ்' என்பதே அது.

பெரியார்தாசனாய் இருந்தவர் இப்போது பெரியார் நேசனாய் மாறியுள்ளார் என்பதே எனது கருத்து. இஸ்லாமும் பெரியார் பரப்பியது தான். ஆகவே, இதுவும் ஒரு வகையில் சுய மரியாதை தான். நான் யாருக்கும் அடிமையில்லை கொள்கை தான்.


இஸ்லாத்தை பொறுத்த வரை கடவுள் நம்பிக்கை கூட ஞானம் அல்ல தெளிவு அல்ல, அது எத்தனை கடவுள் என்ற உணமையில் தான் புதைந்து கிடக்கிறது ஞானம்.

அப்துல்லாஹ் சென்னை மக்கா பள்ளியில் பேசிய யுடியுப் காணொளியை நன்றிகளுடன் பதிவில் இணைத்துள்ளேன்.



















.

Monday, March 29, 2010

துளசி - என் கதை - இரண்டாம் பாகம்

துளசி - என் கதை - முதல் பாகம்

2 - திருப்பம்


'சுதாகருக்கும் எனக்கும் தான் திருமணம்னு சின்ன வயசுலேயெ பெரியவங்க பேசிக்கிடாங்க, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம், படிப்போம், அப்பலாம் சுதாகர் இல்லாமல் எதையும் நான் செய்ய மாட்டேன், அப்புறம் அவங்க வெளிநாடு பயணம் போன பிறகு எப்பவாவது போன் பேசிக்குவோம்.. ஆனா இந்த காதல்.. கல்யாணம்.. இத பத்தி எல்லாம் நாங்க எப்பவுமே பேசிக்கிட்டது கிடையாது..' என்றவள் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, 'இப்ப அத்தை கல்யாணத்த பத்தி பேச தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..' என்றாள்.

துரை மௌனமாக இருந்தான், அவனது முகத்தில் இருப்பது ஏமாற்றமா..? சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

துளசி அவனையே கவனித்து விட்டு கேட்டாள், 'என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க..' என்று.

துரை வாய் திறந்தான், வார்த்தை தடுமாறியது,, 'இப்ப எப்படி..?, உங்களுக்கு சுதாகர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே..?' தயங்கியவாறு கேட்டான் தரையையும் துளசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே..

துளசி துரையை கவனித்தாள், அவன் அவளின் பதிலுக்கு ஆர்வமாக இருப்பது தெரிந்தது, 'எனக்கு இப்ப இல்ல.. எப்பவுமே.. அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியம்..' என்றாள்.

துரை கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்து விட்டு, ' சுதாகர் இஸ் லக்கி..' என்றான்.

அந்த அத்தை அடுத்த முறை வரும் போது கல்யாணம் பேசி துளசியை கையோடு கூட்டிட்டு தான் போவேன் என்று துளசியின் பெற்றோரிடம் கறாராக சொல்லி விட்டு போயிருந்தார். அந்த அடுத்த முறை இப்போது வந்தது, கல்யாணம் சம்மந்தமாக அத்தை பேசிக் கொண்டிருந்தார், 'என் புள்ள சுதாகர பத்தி சொல்ல வேண்டியதே இல்ல.. அப்படியே இந்தி நடிகர் மாதிரியே இருப்பான், நிறைய செலவு பண்ணி எம்.பி.ஏ. படிக்க வச்சிருக்கோம், இப்ப நல்ல உத்தியோகத்துல இருக்கான், இன்னும் கொஞ்ச வருஷத்துல கம்பெனி சொந்தமா வைக்கிற அளவுக்கு பெரிய ஆளாயிடுவான்.. உங்களுக்கும் ஒரே பொண்ணு, நான் கேட்குறத கேட்டு நீங்க கொடுத்தா தான் இந்த கல்யாணத்துக்கே பெருமை, 300 பவுன் போட்டுடனும், பையனுக்கு கார் வாங்கி தந்துடணும், நுங்கம்பாக்கத்துல ஒரு பிளாட் அப்புறம் ரொக்கமா 20 லட்சம் கொடுத்துடுங்க, எல்லாம் நான் எனக்கு கேக்கல, உங்க மருமகனுக்கு தான், கடைசில பாத்தீங்கன்னா உங்க மகளுக்கு தான்..' என்றார்.

ராஜாராமன் லட்சுமியை பார்த்தார், லட்சுமியின் அகத்தில் விருப்பம் இல்லாதது அவரது முகத்தில் கண்ணாடி போல் தெரிந்தது.

அத்தை தொடர்ந்தார், 'கல்யாண செலவு பூரா உங்களோடது தான்.. நீங்க யோசிக்கவே வேண்டியதில்லை.. பட்டுன்னு சம்மதம் சொல்ல வேண்டியது தான்' ஓவராக உளறி கொட்டினார்.

ராஜாராமன் கையமர்த்தினார், 'ராஜம்.. துளசி எனக்கு ஒரே பொண்ணு.. என் கிட்ட இருக்கிறது எல்லாம் அவளுக்கு தான், ஆனா.. என் பொண்ணை மருமகளா எடுக்குறவங்க என் பொண்ண பத்தி தான் கேக்கணும், பேசணும், பொண்ண விட்டுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே பேசிக்கிட்டு இருக்கக் கூடாது..' என்றார்.

ராஜத்திற்கு புரியவில்லை, 'என்ன அண்ணே! இப்படி சொல்லிட்டே.. நம்ம சுதாகருக்கு வேற நல்ல இடத்துல இன்னும் கொட்டி கொடுக்குறேன்னுட்டு வரிசை கட்டி நிக்கிறாங்க.. நான் சொன்ன சொல் ஆச்சே.. சொந்தம் விட்டு போகூடாதுன்னு வந்தா.. நீ இஷ்டம் இல்லாத மாதிரி பேசறியே..'என்று கேட்க

'அப்படி நிறைய கொட்டி கொடுக்கிறேன்னு வந்தா நல்லா முடிச்சுக்க வேண்டியது தான்.. யாரும் தடுக்க போறதில்லை..' என்றார்.

'அப்படின்னா சரி.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊருலேந்து யு.எஸ். போய் செட்டிலான குடும்பத்திலேந்து கூட பேசி வருது.. எல்லாம் நம்ம சாதி சனம் தான்.. கல்யாணத்த ரொம்ப கிராண்டா நடத்துறேன்னு பேசிக்கிறாங்க.. நல்லா யோசிச்சுக்க.. ' என்றார்.

'இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல..' என்றவர் ராஜம் போனவுடன் லட்சுமியிடம் சொன்னார், 'இவ கேட்டத விட அதிகமா கொடுத்து நம்ம பொண்ண கட்டி கொடுப்போம்.. கவலைப்படாதே..' என்று.

லட்சுமி, 'நமக்கு எப்படியோ போகட்டுங்க.. சின்ன வயசுலேந்து சுதாகர் தான் இவளுக்குன்னு பேசுனது.. துளசி மனசுல ஆசய வளர்த்து இருந்தான்னா.. அவள்ட்ட ஒரு வார்த்தை கலந்துக்கறது நல்லது..' என்று.

ராஜாராமன் லட்சுமி சொல்வது தான் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

துளசி அழைக்கப்பட்டாள், நடந்த சம்பவங்கள் விளக்கி சொல்லப்பட்டாள், இப்பொழுது அவளது வார்த்தைக்காக காத்திருந்தார்கள், "என் கல்யாணம் உங்க ரெண்டு பேரோட இஷ்டப்படி தான் நடக்கும்..' என்று கல்யாண குணத்தோடு சொன்னாள்.

சில நாட்கள் கழித்து, சுதாகர் போன் பேசிய போது துளசி தான் எடுத்தாள்,

சுதாகர், 'யேய்.. துளசி என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. நீ அத்தை மாமா எல்லோரும் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்... நீ வரலேன்னா ஒன் கூட பேசவே மாட்டேன்....' இப்படியாக இன்னும் ஏதேதோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசிவிட்டு வைத்து விட்டான்.

சுதாகரின் மனைவி ராஜத்தை சரியாக மதிப்பதில்லை, 'எனக்கு டயர்டா இருக்கு.. நீங்க போய் காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க ஆன்ட்டி.. உங்க கையால தான் சாப்பிடணும்..' என்று மாமியாரை வேலை வாங்க ஆரம்பித்து விட்டாள். ராஜமும் முதலில் 'என் மருமகள் என் மேல ரொம்ப பிரியமா இருக்கா, என் கையால தான் எதுவும் சாப்பிடுவாள்' என்று வாய் நிறைய சொல்ல ஆரம்பித்தவர் போக போக தன்னை ஓரங்கட்ட தான் எல்லா வேலையும் என்று புரிந்தவுடன் வாயடைத்து போனார், 'ஐயோ தெரியாம சேத்துல கொண்டு போய் கால உட்டுட்டேனே...' என்று. கடைசியில் ராஜம் சொந்தங்கள் இருந்தும் பணக்கார அனாதை ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்.

கொஞ்ச நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த துரை கல்லூரிக்கு திரும்ப வந்த போது துளசியின் கல்யாணம் நின்று போன செய்தி எல்லாம் கேள்விப்பட்டு துளசியை பார்க்க வந்தான், துளசி கேட்டாள், 'ஆளே இளைச்சு போய், யாரோ மாதிரி ஆயிட்டீங்களே?, உடம்பு இப்ப எப்படி இருக்கு?'

துரை, 'இருக்குது.. அத விடுங்க.. உங்க கல்யாணம் சம்மந்தமா நான் கேள்விப்பட்டது பொய்யா இருக்கணும்னு விரும்பறேன்..' என்றான்.

துளசி அவன் முகத்தையே உற்று பார்த்து விட்டு சொன்னாள், 'அப்ப பொய் தான் சொல்லனும்'

இதற்கிடையில் துளசிக்கு வட நாட்டிலிருந்து ஒரு நல்ல இடத்தில் வரன் பேசி வந்தது. பேச்சுக்கள் எல்லாம் நல்ல விதமாக இருந்ததால் எல்லோருக்கும் பிடித்து போய் விட்டது. படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று முடிவானது. ஆனால், நடக்க இருக்கும் இந்த கல்யாணத்தில் துளசி பல கசப்பான அனுபவங்களை பெற போகிறாள் என்று அப்போது ஒருத்தர் கூட உணர்ந்தாரில்லை.

படிப்பு முடிந்தது..

கல்யாணம்..

ராஜம் கல்யாணத்திற்கு வந்திருந்தார், துளசி ராஜத்தின் காலை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டாள், 'கடவுளே! என் வீட்டுக்கு வர வேண்டியத இப்படி ஊர் பேர் தெரியாத எடத்துக்கு அனுப்பி விட நானே காரணமாயிட்டேனே..! காசு, பணம்ல என் கண்ண மறச்சுடுச்சு' என்று கண்ணீர் விட்டு புலம்பினார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்க துரைக்கு ராஜத்தை போலவே அழுது புலம்ப வேண்டும் போல் இருந்தது. ஏதோ ஒரு புதிய உணர்வு அவன் மனதில் மின்னலை போல் வெட்டி விட்டு போனது, இவன் அந்த உணர்வின் வெட்டில் துண்டு பட்டது போல் துடித்தான். அது காதலின் அவஸ்தை என்று அவன் உணர்ந்த போது துளசி மூர்த்தி என்பவருக்கு சொந்தமாகி இருந்தாள்.

தொடரும்

Saturday, March 20, 2010

இக்ரா - (படியுங்கள் அல்லது ஓதுங்கள்)

இறக்கி அருளப்பட்ட குரான் ஷரீஃபின் முதல் வார்த்தையே 'இக்ரா (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read) என்பதாக உள்ளது.

கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - கல்வியே  செல்வத்துட்  செல்வம் என்பதும் தமிழர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று தான்.

கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்ற வித்தியாசத்தை பார்த்ததில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.

"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது

எங்கள் ஹஜ்ரத் சொன்னார்கள், 'சீன்'ங்குற வார்த்தைய தான் 'சீனா'ன்னு சொல்லி இக்கிறாஹா, 'சீன்'ங்குற வார்த்தைக்கு சிங்கத்துட நெத்தின்னு இன்னொரு அர்த்தம் இருக்கு, அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா இருக்கும்..' என்று

அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் அது சிங்கத்தின் நெற்றியில் இருந்தாலும் சரி' - என்று அர்த்தம். (இந்த அர்த்தத்தில் பார்த்தால் சீனாக்காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும்)

குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில் வருகிறதாம்.

இந்த கல்வி மார்க்க கல்வியை மட்டும் தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும் உண்டு. உண்மை அப்படி அல்ல என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லீம்கள் மீது போர் தொடுக்கிறார்கள் காஃபிர்கள் எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் (kafir means non-muslim). முஸ்லீம்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் கைதிகளாகி நிற்கிறார்கள் காஃபிர்கள்.

இந்த கட்டத்தில் நமக்கு நமது இந்த நவீன காலத்தில் நம் அறிவுக்கு உட்பட்டு போரில் சிறைப்பட்ட நமது தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை கண்கூடாக பார்த்தும் கையையும் காலையும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது.

பெருமானார் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள், 'முஸ்லீம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று.

இங்கே கவனிக்க வேண்டியது கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள், சற்று முன்னர் தங்களோடு போர் களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக் கொண்டவர்கள்.

வழக்கமாக சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தான், 'நான் அவனுக்கு (தோல்வி அடைந்தவருக்கு) சரியான அல்லது நல்ல பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால் அன்று பத்ரு போரில் தோல்வி அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தார்கள்.

முஸ்லீம்கள் அவர்கள் பெற்ற வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடவில்லை. மாறாக தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவனாக பாடம் கற்றுக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.

படிக்க வரக்கூடாது உங்களுக்கு கல்வி கிடையாது என்று கல்வி மறுக்கப்பட்ட மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால்  அந்த  சிறந்த பாடத்தை புரிந்து கொள்ள முடியும்.

அதுவும் தவிர இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் முஸ்லீம்களுக்கு என்ன இஸ்லாமிய ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள். உலக கல்வியை தான் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பள்ளிவாசலானது முஸ்லீம்கள் தொழுத நேரம் போக அன்று முதல் பகுதிநிலை பள்ளிகூடமாகவும் மாறியது அதாவது ஜாமிஆவாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தான்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிவாசல் பகுதி நேர வகுப்புகள் (பார்ட் டைம் கிளாஸ்) நடக்கும் இடமாக மாறியது, அந்த வகையில் பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு பார்ட் டைம் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நான் அறிகிறேன்.

இன்றைக்கு முதியோர் கல்வி, Adult Learning, continuous learning, life long learning   என்ற  கல்வி  முறைகளுக்கெல்லாம் பெருமானார்  அன்று  வகுத்து  தந்த  திட்டம் தான் முன்னோடி.

இதெல்லாம் ஒரு புறமிருக்க என் வகுப்பில் நான் பாடம் நடத்தும் போது ஒருவர் உறங்கி கொண்டிருந்தார். (முழிச்சிக்கிட்டிருந்தா தானே நியூஸ் என்கிறீர்களா?)

நான் அவர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் 'அவரை எழுப்பி விடுங்கள்' என்று சொன்னேன்.

அவரும் எழுப்பி விடவே, திடுக்கிட்டு எழுந்திருந்த அவர், 'சாரி சார், அசந்துட்டேன்..' என்றேன்

நான், 'என்னா அசந்துட்டேன்.. நான் என்ன சண்டை காட்சியா நடத்தி காட்டுனேன்..' என்று சொல்லி விட்டு 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன்

அவர் உடனே 'காமராஜ்' என்றார்

நான் சொன்னேன், 'என்னங்க காமராஜ் தான் கல்வி கண்ணை தொறந்தாரும்பாங்க.. நீங்க என்னடான்னா கண்ணை மூடிட்டிங்களே.." என்றேன்

Sunday, March 14, 2010

நேசக்குமாருக்கு.... வித்தியாசம் இருக்கிறது..

முதலில் சிகப்பு எழுத்தில் இருக்கும் இந்த செய்தியை படியுங்கள். இது திண்ணையில் நேசக்குமார் என்பவர் எழுதியது.

'நான் கடவுள்' என்று ஒரு நபி அல்லது இறைதூதர் சொல்லிக்கொள்ளவில்லை என்று வாதிடலாம். 'நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.


படித்துவிட்டீர்களா?.. இந்த கருத்தை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று ஆச்சர்யமா இருக்குமே?
 
அது வேறொன்றுமில்லை. மேப்புடியான் நடிகை ரஞ்சிதாவோடு "யாரும் விளையாடும் தோட்டம் தினந்தோறும் ஆட்டம் பாட்டம்.." என்று பாடிய பாட்டு பட்டையை கிளப்பியதை வைத்து யாரும் சாமியாரே வேண்டாம் என்று சொல்வது தவறு, எல்லா மதத்திலும் இது போன்ற குருமார்கள் இருக்கிறார்கள். அவங்களுக்கும் இவங்களுக்கும் வித்தியாசமில்லை என்கிற ரீதியில் நேசக்குமார் எழுதியது தான் இது. (இந்த கர்மத்தை எழுதியது என்றும் சொல்லலாம் புலம்பியது என்றும் சொல்லலாம்.)
 
இந்த நேசக்குமார் என்பவர் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற நாகூர் ரூமியில் புத்தகத்துக்கு எதிர்வினை எழுதி அறிமுக(மூடியா)மானவர். அவர் வீட்டில் அடுப்பு எறிஞ்சா கூட அது இஸ்லாமியர்கள் எறித்தது தான் என்பார். அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது பாச(க்கயிறு)ம்.
 
இதுக்கு முன்னாடி பிரேமானந்தா சுவாமிகள் கையும் களவுமா (இப்ப எல்லாம் கையும் சிடியுமா.. (ச்சீச்சீ.. கர்மம்..கர்மம்.. லோகம் ரொம்ப கெட்டு போயிடுச்சு..!) மாட்டிகிட்ட போது பழனிபாபா பேசிய பேச்சு ஒன்று நினைவுக்கு வருகிறது,
 
அவர் பேசுனாரு, 'பிரேமானந்தா என்கிட்டே வராம போயிட்டான், வந்தா ஒரு நிமிஷத்துல அவனுக்கு விடுதலை வாங்கி தந்திருப்பேன், அவன் என்னாய்யா பெரிய தப்பு பண்ணிட்டான், அந்த பொண்ணு என்னா சொன்னுச்சு.. சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திபுட்டாருன்னு சொல்லிடுச்சு.. நான் என்னா சொல்றேன்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு நரகத்த காமிச்சிருந்தா அரெஸ்ட் பண்ணலாம்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு சொர்க்கத்த  தானே காமிச்சிருக்கான்.." என்ற ரீதியில அவர் பேசிட்டு போயே போயிட்டரு.
 
சரி, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன், இந்த நேசக்குமார் என்னா சொல்றாரு,
 
''நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை."
 
அவரு வித்தியாசம் இல்லைங்கிறாரு.. நான் என்னா சொல்றேன்.. வித்தியாசம் இருக்குங்குறேன்.. எப்படின்னு கேக்குறீங்களா?
 
நான் கடவுள் என்று சொன்னது - பொய்
நன் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது நான் செய்வதெல்லாம் கடவுள் செய்ய சொல்லி செய்வது என்று சொன்னது - உண்மை
 
இது தான் அந்த வித்தியாசம்.. அவ்வளவு தான்.. மேட்டர் ஓவர்.
 
----------------------------------------------------------------------------------------
 
அடுத்து ஒரு முக்கியமான செய்தி.. எனக்கு பேராசிரியர் பெரியார் தாசன் என்றால் கொள்ளை பிரியம். அவர் இஸ்லாத்தை தழுவி விட்டாராமே? அவரையே நாங்கள் எல்லாம் தழுவிக் கொள்ள தயாராக இருக்கிறோம்
அவர் மீது இறக்கி வைத்த சூத்திர ஆடையை தூக்கி எறிந்து விட்டு இஹ்ராம் ஆடையை கட்ட தயாராகி விட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே!
 
http://arabnews.com/saudiarabia/article29180.ece
 
மேற்கூறிய இந்த லிங்க்லே போட்டிருக்காஹலே.. மர்ஹபா...

Wednesday, March 03, 2010

நூஹ் நபியின் கப்பல் தரும் பாடம் - படித்தவை.. பிடித்தவை..

Plan Ahead...

It wasn't raining when Noah (Alai) built the ark

Don't listen critics - Do what has to be done

Build on high ground

Two heads are better than one

Speed isn't always an advantage
The Cheetahs were on board but... so were the snails

If you can't fight or flee... float!

Take care of your animals as if they were the last ones on Earth

Don't forget that we're all in the same boat
When things get really deep, don't sit there and complain.. Shovel!

Stay below deck during the storm

Remember that the Ark was built by Amateurs and the Titanic was built by Professionals
If you have to start over, have a friend by your side

Don't miss the boat
No matter how bleak it looks, there's always a rainbow on the horizon