Showing posts with label அஜான். Show all posts
Showing posts with label அஜான். Show all posts

Sunday, October 23, 2011

அஜான் (பாங்கு) - தொழுகைக்கான அழைப்பு

குரான் ஷரீஃப்


37வது அத்தியாயம் - ஸூரத்து நூர் (பேரொளி)


வசனம்: 37


மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கலோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த நாளை அவர்கள் அஞ்சுவார்கள்

They are such whom neither wordly commerce nor striving after gain can divert from the remembrance of Allah, and from constancy in prayer, and from charity: They are people filled with awesome consciousness of the Day when hearts and eyes will be convulsed. 


---------------------------------------------------------------------------------------------



தொழுகை முதன் முதலில் தனித்தனியாக தான் தொழப்பட்டு வந்தது. இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை பெருகி விடவே பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையை கூட்டுத் தொழுகையாக ஜமாத்தாக தொழ வைக்க நாடினார்கள்.

எல்லோருக்கும் தொழுகை வரும் நேரத்தை அறிவிப்பது எப்படி என்று கலந்தாலோசித்தார்கள்.

மணி அடிப்பது
எக்காளம் ஊதுவது
பறையறைவது
தீப்பந்தம் காட்டுவது

- மேற்படியல்லாமல் உள்ளத்தை தொடக்கூடியதாய் இருக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டார்கள். 

முதல் நாள் கூடிய கூட்டத்தில் முடிவொன்றும் கிட்டவில்லை. மறுநாள் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்க்ள் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்கள்:

ஒருவர் உயரத்தில் நின்று உரத்த சப்தமிட்டு மக்களை தொழுகைக்கு அழைக்கிறார் 

- என்று கூறவும். இதே சாரமுடைய கனவை அப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) அவர்களும் கண்டதாக கூறவே பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இந்த முறை, வழக்கம் மிகவும் பிடித்து போனது.

முதலில் தொழுகைக்கான அழைப்பை விடுத்தவர்கள்: 

ஹஜ்ரத் பிலால் (றலி) - 
(இவர்கள் அரபியல்லாதவர்கள்,  ஹபஷி இனத்தை 
சேர்ந்தவர்கள்.  அடிமை இனம் என்று கருதப்பட்டவர் அஜான் கொடுத்து நாங்கள் தொழுகைக்கு வருவதா என்றும் அரபி சரியாக உச்சரிக்க வரவில்லை என்றெல்லாம் குறைகள் எழுந்தன. பெருமானார் (ஸல்) அவர்களோ இவர்கள் அவ்வாறு உச்சரிப்பது தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானதாக இருக்கின்றது என்று கூறி மனதளவில் உருவாக இருந்த பேத உணர்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். 
இந்த ஹபஷி இனத்தை சேர்ந்தவர்களைத் தான் இஸ்லாமிய அரசின் இரண்டாவது கலிபாவான உமர் (றலி) அவர்கள் ”ஸய்யிதினா (தலைவர்)” என்று அழைப்பார்கள். 
இது தான் இஸ்லாமிய உணர்வு. இறைவன் முன் அனைவரும் சமம். மேலோர் கீழோர் என்பதெல்லாம் மருந்துக்கும் இங்கே கிடைக்காது)

முதலில் அழைப்பு விடுக்கப்பட்ட தொழுகை: 

லுஹர் (நண்பகல்)

முதலில் பாங்கு சொன்ன இடம்: 


பனூ நஜ்ஜார் என்ற இனத்தை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு சொந்தமான உயர்ந்த வீட்டின் மேல் தளம்.
-----------------------------------------------------------------
இவ்வாறு 1432 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அழைப்பு இன்று முதல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் வலது கோடி வெலிங்க்டனில் (நியுஜிலான்ந்) ஆரம்பித்து ஜாவா, ஜகார்த்தா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு, ஆப்ரிக்க, அமெரிக்க, என எல்லா கண்டங்களையும் உள்ளடக்கி மெக்ஸிகோ வரைக்கும் உள்ள டிரில்லியன் கணக்கான பள்ளிவாயில்களில் இந்த பாங்கு சத்தம் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

அந்த வகையில் இந்த அழைப்பு ஒலி தான் உலகின் ஒரே ஒரு தொடர்ச்சியான மாறாத இன்னும் அதிகமான முறையில் எழுப்பப்படும் இறைதுதி பாடல் என்று சொல்ல முடியும்.

இந்த அழைப்பில் நிறைய சிறப்பம்சங்கள் இருக்கின்றன். 

முஸ்லிம்களை மாத்திரமே தொழுகைக்கு வாருங்கள் என்று இந்த அழைப்பொலி அழைக்கவில்லை. 
மாறாக உலக மக்கள் அனைவரையும் அழைக்கின்றது. 
அதுவும் எப்படி அழைக்கின்றது என்றால்.. 

உங்களின் இறைவன் ஒருவனே என்று தான் அழைக்கின்றது. 
அதாவது நீங்கள் அனைவரும் ஒரே ஒரு மூலத்திலிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் தான். 

Don't divide... be divine..

..என்பது தான் அது





----------------------------------------------------------------
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

அஷ்ஹது அன்ல்லாஇலாஹா இல்லல்லாஹ்
அஷ்ஹது அன்ல்லாஇலாஹா இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதன்ர் ரஸுலுல்லாஹ்
அஷ்ஹது அன்ன முஹம்மதன்ர் ரஸுலுல்லாஹ்

ஹய்ய ஆலஸ் ஸலாத்
ஹய்ய ஆலஸ் ஸலாத்

ஹய்ய ஆலல் ஃபலாஹ்
ஹய்ய ஆலல் ஃபலாஹ்

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்


இதன் பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்

(அல்லாஹ் என்றால் ஏக இறைவன்)

வேறு அல்லாஹ் இல்லை அல்லாஹ் ஒருவனைத் தவிர என்று சாட்சியம் கூறுகின்றேன்
வேறு அல்லாஹ் இல்லை அல்லாஹ் ஒருவனைத் தவிர என்று சாட்சியம் கூறுகின்றேன்

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் கூறுகின்றேன்
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் கூறுகின்றேன்

தொழுகைக்கு வாருங்கள்
தொழுகைக்கு வாருங்கள்

வெற்றிபெற வாருங்கள்
வெற்றிபெற வாருங்கள்
(come to attainment, success, salvation)


அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்