குரான் ஷரீஃப்
... மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
...and recite the Qur’an in slow, measured rhythmic tones.
74 வது அத்தியாயம் ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
4வது வசனம்
*****************************************************************************
ஸூரா நாஸ் (நாஸ் - மனிதர்கள்)
114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;
114.3 (அவனே) மனிதர்களின் நாயன்.
114.4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114.5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114.6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
*******************************************************************************************************
ஸுரா ஃபலக் (ஃபலக் - அதிகாலை)
113.1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113.2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113.3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113.4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113.5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
**********************************************************************
ஸூரா அல்-இக்லாஸ் (அல்-இக்லாஸ் - ஏகத்துவம்)
112.1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112.2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112.3 அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112.4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
**********************************************************************************************************
... மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
...and recite the Qur’an in slow, measured rhythmic tones.
74 வது அத்தியாயம் ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
4வது வசனம்
*****************************************************************************
ஸூரா நாஸ் (நாஸ் - மனிதர்கள்)
114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்;
114.3 (அவனே) மனிதர்களின் நாயன்.
114.4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114.5 அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114.6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
*******************************************************************************************************
ஸுரா ஃபலக் (ஃபலக் - அதிகாலை)
113.1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113.2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113.3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113.4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113.5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
**********************************************************************
ஸூரா அல்-இக்லாஸ் (அல்-இக்லாஸ் - ஏகத்துவம்)
112.1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112.2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112.3 அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112.4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
**********************************************************************************************************