Sunday, March 23, 2008

இந்தி

இந்தி மொழியின் ஆதிக்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாததற்கு அறிஞர் அண்ணாவின் முயற்சி ஒரு முக்கிய காரணமாகும்.

ஒரு மாநிலத்தவர் இன்னொரு மாநிலத்தவரோடு பேசுவதற்கு இந்தி மொழியையும் நமது நாட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டு மக்களோடு உரையாடுவதற்கு ஆங்கில மொழியும் கற்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கதை சொன்னார்கள், ஒருத்தர் பெரிய நாய், சிறிய நாய் என்ற இரண்டு நாய்களை வளர்த்தாராம். பெரிய நாய் நுழைவதற்கு ஒரு பெரிய கதவையும், சிறிய நாய் நுழைவதற்கு வசதியாக இன்னொரு சிறிய கதவையும் தனியாக வைத்திருந்தாராம். பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், பெரிய நாய் நுழைவதற்கு என இருக்கு ஒரே கதவு வழியாக சின்ன நாயும் தான் நுழையுமே, அதற்கு ஏன் தனியாக ஒரு கதவு வைப்பானேன்..? என்று தானே கேட்பார்கள்.

அது போலவே அயல் நாட்டினருடன் பேசுவதற்கு என படிக்கும் ஆங்கிலத்தத வைத்துக் கொண்டே மற்ற மாநிலத்தவருடன் பேச முடியும் தானே? என்று அண்ணா தனது திறமையான வாதத்தால் இந்தி ஆதிக்கத்தை மண்னை கவ்வ வைத்தார்.

இந்தி படிப்பதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பாகவே பார்க்கப்பட்டது. தந்தை பெரியார் சொல்வது போல பண்பாட்டு படையெடுப்பு மூளை விளங்காகும். இத்தகைய விளங்கை உடைத்தெறிய தான் அண்ணா அவர்களை போன்றோர்கள் பாடுபட்டார்கள்.

இது இப்படியிருக்க எனக்கு தனிப்பட்ட முறையில் இந்தி படங்களையும் பாடல்களையும முறையே விரும்பி பார்ப்பேன், விரும்பி கேட்பேன். என்னை பொறுத்த வரையில் என் மகளுக்கு வாப்பா (அப்பா) என்றால் டாடி, பிதாஜி அல்லது இன்னும் எத்தனை மொழிகளில் உள்ள நேரடி வார்த்தைகளை வேண்டுமோ தெரிந்து வைத்துக் கொள்ளட்டும். தவறில்லல, ஆனால் என் பிள்ளை என்னை வாப்பா என்று தான் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்

- நாகூர் இஸ்மாயில்

'சண்ட'யில் முடிகிறது

இன்று தமிழ் திரைப்பட வசனகர்த்தா பிரச்சன்னகுமார் அவர்கள் மரணம் என்ற துயரசெய்தி செவிக்கு எட்டியது. பாலைவனச் சோலையில் தொடங்கிய அவரது திரைப் பயணம் 'சண்ட'யில் முடிவடைந்திருக்கிறது.

தீப்பெட்டிக்குள்
எத்தனன குச்சிகள்
அதில்
எத்தனை குச்சிகள்
எரியும்

- 'பறவைகள் பலிவிதம்' எனும் படத்தில் பிரச்சன்னகுமார் எழுதிய கவிதை தான் இது. தாரா என்ற நடிகை ஜனகராஜிடம் இந்த கவிதையை சொல்ல, ஜனகராஜ் சொல்வார், 'இது தான் கவிதையா?, நல்ல வேலை கண்ணதாசன் செத்துட்டார்' என்று

அதற்கு தாரா சொல்வார்கள், ' இல்ல சிவா (படத்தில் ஜனகராஜின் பெயர் என்று நினைக்கிறேன்) நான் தீப்பெட்டின்னு சொன்னது நம்ம காலேஜை, குச்சிங்கறது நாம தான், கனவுங்கற தீமருந்த சுமந்துகிட்டிருக்கோம், அதுல எத்தன கனவு பலிக்க போவுதோ..' என்பார்.

அதற்கு ஜனகராஜ், 'சாரி கீதா (தாராவின் பெயர்) நீ சொன்னதுல என்னமோ இருக்கு, ஆனா எனக்கு தான் புரியல..' என்பார்.

இப்படி என் மனத பாதித்த எத்தனையோ வசனங்களை எழுதிய பிரச்சன்னகுமார் அவர்களின் மரணம் மிகவும் துயரமாக இருக்கிறது.

பிரச்சன்னகுமார் அவர்களின் மனைவியின் தம்பி கணேசுடன் சிங்கப்பூரில் தஞ்சோங் பகாரில் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை பதிவு செய்கிறேன்

- நாகூர் இஸ்மாயில்