1
சோத்தை விடவும் சினிமா முக்கியமாக தோன்றிய காலமது. வீடியோ வந்த புதுசு. சின்னாப்பாவுக்கு சினிமா காட்ட வேண்டுமென்பது ஆசை. வீட்டு வாசலில் அட்டையில் ‘இன்று புதுக்கவிதை” என்று எழுதி தொங்க விடப்படும். அதை பார்த்து விட்டு ஒரு ஜமா வீடியோவில் படம் பார்க்க வந்து விடுவார்கள்.
ஒரு முறை சங்கத்த பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு சுரேஷ் நாய் குட்டியோடு நடித்த 'செல்வி' எனும் படம் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக செவத்தை ஒட்டி ஒக்காந்து படம் பார்த்து கொண்டிருக்க, தூரத்திலிருந்து ம்மா பார்த்து விட, கிட்டே வந்து சட்டையை பிடித்ததும், ‘சும்மா வுடுங்கனி..’ என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க.. வுட்டேன் ஓட்டம்.. வாசல் பக்கம்..
மூச்சிறைக்க நின்ற இடம்.. சங்கத்த பள்ளி.. (நாகூர் முஸ்லீம் சங்கம், குஞ்சாலி மரைக்காயர் தெரு). நல்ல பிள்ளை மாதிரி ஓதிகிட்டு இருக்கும் போது துப்பட்டியோடு வாசலில் ம்மா வந்து நல்ல பிள்ளையாட்டம் ஓதிக்கிட்டு இருந்த என்னை ஒண்ணும் பேசாமல் வூட்டுக்கு கூட்டிட்டு வந்து.. வாங்க வேண்டியத வாங்கியது எல்லாம் சிரிப்பா சிரிச்ச கதைகள்.
அப்படி ஒரு நாள் ஆச்சிகனிமா வூட்டு வாசல்ல உக்காந்து இக்கிம் போது தான் ஒருத்தஹ வந்து இறங்குனாஹா, ‘கண்ணுல கண்ணாடி, ஒரு பெரிய மேஜர் ஜெனரல் மாதிரியான தோற்றம், கைலி தான், அரை கை சட்டை” இப்படி சகிதமா வந்திறங்கிய அவர்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை.
சின்னாப்பா யாரையும் சத்தம் போடக் கூடாது என்று சைகை காட்டி விட்டு மிகவும் பவ்யமாக அவர்கள் முன்னால் நடந்து சென்றார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வீடியோ ஓடும் சத்தம் கேட்டு நாங்களும் வீடியோ பார்க்க ஓடினோம்.
வீடியோவில் ஓடிக் கொண்டிருந்த படத்தை விடவும் நான் வந்த அது புது மனுஷரை தான் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.
கையில் சிகரெட்.
நிலைத்த பார்வை.
மொத்த வீடும் கர்ச்சீஃப் விழுந்த சத்தம் கூட இல்லாமல் கப்சிப் என்று இருந்தது.
கொஞ்ச நேரம் காட்சி முடிந்ததும் வெளியே கிளம்பும் போது என்னிடம் வந்து கன்னத்தில் கை வைத்தார்கள்.
சின்னாப்பா இன்னாரின் மகனார் என்று என்னை அறிமுகப்படுத்தி சொன்னதும்..
“வாப்பா நல்லா இக்கிறாஹலா.. சலாம் சொல்லுங்க..”
அடுத்தடுத்த பிள்ளைகள்..
மறைந்து போனார்கள்.
எனக்கு யார் இவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
-------------------
2
ஹிலுரு (அலை) அவர்களை பற்றிய வரலாறு குரான் ஷரீஃபில் வருகிறது. அந்த பெயரோடு அல்ல.. ‘நம் அடியார்..’ என்ற அடைமொழியோடு வருகிறது. அவர்களின் பெயரில் தெருமுனையில் ஒரு பள்ளி இருந்தது.
தொழுவுற அந்த பள்ளிக்கு போய் பெண்கள் எல்லாம் கபுரடிக்கு ஜியாரத் செய்ய போவது போல் போய் வந்தார்கள்.
கேட்டால், “ஹிலுறு நபி அங்கே ஹாலிற் ஆகிறார்கள்’ என்று காரணம் சொன்னார்கள்.
சின்னாப்பா தான் டெய்லி பள்ளிக்கு போய் ஹிலுறு நபியின் நினைவாக ஃபாத்திஹா ஓதி வந்தார்கள்.
கொஞ்ச நாளாக போக வில்லை. ஏன் என்று கேட்டால், ‘ஹஜ்ரத் அங்கே போய் ஜியாரத் எல்லாம் செய்யக் கூடாது’ என்றார்கள் என்றும் ‘ஹிலுறு (அலை) அங்கே ஹாலிற் ஆக வில்லை என்றும் கூறுவதாகவும்’ சொன்னார்கள்.
ஹிலுறு (அலை) ஹாலிற் ஆகிறார்கள் என்பதை 101 சதவிகிதம் நம்பி வந்த எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்று சொன்னவர்கள் மீது எனக்கு ஆத்திரமாக வந்தது.
‘இவர்களுக்கு என்னா தெரியும்?’ என்று கேட்டேன்.
’அப்படி சொன்ன ஆள் யார்?’ என்ற தேடலின் விளைவாக தெரிந்து கொண்டது ‘கையில் சிகரெட்டோடு கன்னத்தில் தடவியவர்கள் தான் அது’ என்று தெரிந்த போது கலவரம் கண்ட எங்க ஊர் மாதிரி கதிகலங்கி போனேன்.
அப்படி கலவரமடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தது, அதில் முதன்மையானது, “இவர்கள் ஹஜ்ரத்தா?’ என்பதே அது.
தோற்றம் தான் காரணம்.
கையில் தஸ்பீஹ் இருக்க வேண்டிய இடத்தில் சிகரெட் இருந்தது
முகத்தில் தாடி இல்லை. கிளீன் ஷேவ் பண்ணி இருந்தது.
உட்காரும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்..’ இல்லை
எந்திருக்கும் போது, ‘அல்லாஹு அக்பர்’ இல்லை
இவர்களா ஹஜ்ரத்?
-------------------------
3
நண்பர்கள் ஹஜ்ரத் வீட்டில் நடப்பதை பற்றி கிண்டலடித்தார்கள்.
அவர்கள் வீட்டில் புர்தாஹ் ஷரீஃப் மஜ்லிஸ் ஓதப்பட்டது.
வாரா வாரம் ஞாயிறு இரவன்று ஓதப்படும் இந்த மஜ்லிஸுக்கு வீட்டை கழுவி சுத்தம் செய்யப்படும்.
வஹ்ஹாபிகள் எல்லாம் விரல் நீட்டாத தலையெடுக்காத காலத்தில், ஒரு பக்கத்து தெருவாசி இப்படி கேட்டார், “குரான் பெருசா? (பெருசு என்றால் அதன் சைஸால் அல்ல, புனிதமானதா என்ற அர்த்தத்தில்) புர்தா பெருசா?”
நான், “இதென்ன கேள்வி, ‘குரான் ஷரீஃப் தான் பெருசு..” என்றேன்
அவர், ‘குரான் ஓத கழுவி வுட மாட்டாஹலாம், புர்தாவுக்கு வூட்டையே கழுவி வுடுவாஹலாம்.. பாருங்க.. இதெல்லாம் பித்ஆவாக்கும்.. ஷிர்காக்கும்..’ - வஹ்ஹாபிகளுக்கே முன்னோடி நாங்கள்
இன்னும் ”அதாக்கும் இதாக்கும்” என்று கண்டபடி பேசி கலைந்து போனோம்..
கொஞ்ச நாள் கழித்து, எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, டாக்டர் ஊசி போட்டார், மருந்து மாத்திரை கொடுத்தார், எது கொடுத்தும் தேவலையா போகலை.
எனக்கு எடுத்த பிளட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், எல்லா டெஸ்டுகளுமே என்னை தவிர நார்மலாகவே இருந்தது.
அப்புறம் என்ன...? - ஓதி பார்த்தா என்ன...?
வேறு யார் கிட்டே ஓதி பார்க்குறது? அவங்கள விட்டா...?
கூட்டிட்டு போனார்கள்...
அங்கே உள்ளே போன போது எனக்கு என்னவோ போல இருந்தது.
என்னடா ‘எஹல பத்தி எஹ வூட்ல ஓதுற புர்தா ஷரீஃபை பத்தி அப்படி இப்படி பேசியிருக்கிறோம்.. இப்போ அஹல்ட்டயே ஓதி பாக்க வந்திருக்கிறோமே..” என்று
தெருவாடிகள் பார்த்து விட்டால் என்ன செய்வது? - யோசனையாக உள்ளே போன எனக்கு அதிர்ச்சி...
எந்த பக்கத்து தெருவாசி குரான் பெருசா? புர்தா பெருசா? என்றெல்லாம் கேள்வி கேட்டாரோ - அதே அவர் ஹஜ்ரத்தின் காலை தன் கண்ணில் வைத்து ஒத்தி கொண்டு இருந்தார் -
----------------------------------
4
அந்த பக்கத்து தெருவாசியான அவர் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது அவர் ரூம்மெட் ஒருவர் தூக்கு போட்டுக் கொண்டு உயிரை விட்டார்.
தன்னை சாகடித்துக் கொண்ட அந்த நண்பரிடன் உயிருக்கு உயிராக பழகியிருந்த அவர் அன்றிலிருந்து மனம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.
போகாத ஊரில்லை, பார்க்காத டாக்டரில்லை.. கொஞ்சம் கூட சரியாகாமல் இருந்து வந்தார்.
கடைசியாக அவரது வீட்டில் ஹஜ்ரத்திடம் கூட்டி வந்தார்கள்.
பத்து ஆளுடைய பலத்தோடு கட்டுக்கடங்காமல் கிடந்த அவரை பெரும் படையே கட்டி இழுத்து போய் அவர்கள் முன்னால் நிறுத்தியது.
ஹஜ்ரத் அவர்கள் அப்பொழுது தான் தூங்கி எழுந்த மாதிரி இருந்தார்கள்.
‘அவரை விடுங்கள்..” என்றார்கள்..
ஒரு பார்வை தான் பார்த்தார்கள்...
சுருண்டு விழுந்து விட்டார் அந்த நண்பர்.
அப்பொழுது விழுந்தவர் தானாம். எழுந்திருக்கும் போது புதிய மனிதராக எழுந்து இருந்தார்.
எனக்கு அவர்கள் தலை வைத்து ஓதி பார்த்தில் மருந்தில் காணாத நலம் அன்னாரின் மகத்துவத்தில் நலமாக தான் போயிருந்தேன்.
தன்னை சாகடித்துக் கொண்ட அந்த நண்பரிடன் உயிருக்கு உயிராக பழகியிருந்த அவர் அன்றிலிருந்து மனம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.
போகாத ஊரில்லை, பார்க்காத டாக்டரில்லை.. கொஞ்சம் கூட சரியாகாமல் இருந்து வந்தார்.
கடைசியாக அவரது வீட்டில் ஹஜ்ரத்திடம் கூட்டி வந்தார்கள்.
பத்து ஆளுடைய பலத்தோடு கட்டுக்கடங்காமல் கிடந்த அவரை பெரும் படையே கட்டி இழுத்து போய் அவர்கள் முன்னால் நிறுத்தியது.
ஹஜ்ரத் அவர்கள் அப்பொழுது தான் தூங்கி எழுந்த மாதிரி இருந்தார்கள்.
‘அவரை விடுங்கள்..” என்றார்கள்..
ஒரு பார்வை தான் பார்த்தார்கள்...
சுருண்டு விழுந்து விட்டார் அந்த நண்பர்.
அப்பொழுது விழுந்தவர் தானாம். எழுந்திருக்கும் போது புதிய மனிதராக எழுந்து இருந்தார்.
எனக்கு அவர்கள் தலை வைத்து ஓதி பார்த்தில் மருந்தில் காணாத நலம் அன்னாரின் மகத்துவத்தில் நலமாக தான் போயிருந்தேன்.
ஆனாலும் இவையெல்லாம் எனக்கு குழப்பத்தை அதிகரித்தனவே தவிர தெளிவான நிலைக்கு இன்னும் நான் வரவில்லை.
பொதுவாக சூஃபியிசம் வாயிலாக இஸ்லாத்திற்கு நுழைபவர்கள் முதலில் பெரும்பாலும் நோய் வாய்ப்பட்டிருப்பார்கள். யாராலும் குணமாக்க முடியாமல் போயிருக்கும். அதன் பிறகு ஒரு சூஃபியின் சகவாசத்தால் இவரது உடல் குணமாகியிருக்கும்.
இப்படி குணமாக்கும் சூஃபிகள் தங்களை குணமாக்கும் வைத்தியர்களாக விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. போஸ்டர் அடித்து ஒட்டுவதில்லை. அவர்கள் பாட்டுக்கு ஓரிடத்தில் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களை பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.
இவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, முக்கியமாக மதம், ஜாதி இவைகள் ஒரு தடையே அல்ல. இது முழுமையான மனித சேவை.
சரி, நோய் என்றால் என்ன? அது குரான் ஷரீஃபின் ஒரு வாக்கியத்தையோ அல்லது அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமோ அந்த நோய் குணமாகி விடுமா என்ன? கெட்டுப் போன உடல் உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுமா? மேலே சொன்ன வாசகத்தையோ திருநாமத்தையோ இவர்கள் என்றூ அல்லாமல் வேறு யார் சொன்னாலும் குணமாகி விடுமா? அவ்வளவு சுலபமானது தான் நோய் குணமாகி விடும் என்றால் இவ்வளவு மருத்துவமனைகள் உயிரைக் காப்பாற்ற உயிரை எடுப்பது ஏன்?
- இப்படியாக தலையை பிய்த்துக் கொண்டு யோசித்து கொண்டிருந்ததில் மூன்று முடிவுகள் இருப்பதாக ஒரு முடிவுக்கு வந்தேன்.
1. இப்படியெல்லாம் குணமாக்க யாராலையும் முடியாது.
2. இப்படி குணமாக்க இவர்களால் மட்டுமே முடியும். நம்மாலெல்லாம் முடியாது.
3. இவர்களை போல் குணமாக்க நம்மாலும் முடியும்.
இந்த மூன்று முடிவுகளில் ஒன்றே ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எதை தேர்ந்தெடுப்பது?
5
இறுதியாக, மூன்றாவதை தேர்ந்தெடுத்தேன். ஏன் நாமும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை முயன்று பார்த்து அனுபவத்தில் சரி அல்லது தவறு என்று தெரிந்து கொள்ள கூடாது.
நீச்சல் கற்றுக் கொள்ள முடிவெடுத்தவுடன் டைனிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு இருந்தால் எப்படி?
ஹஜ்ரத் அவர்களது வீட்டிற்கே புறப்பட்டேன்.
ஒவ்வொரு நாளும் போய் வாசலில் அமர்ந்து இருப்பேன்.
ரொம்ப நாளைக்கு பிறகு என்னை உள்ளே வர அனுமதி தந்தார்கள்.
உள்ளே போய் உட்கார்ந்து இருப்பேன்.
நான்கு மணி நேரம் போய் இருக்கும். நாலு வார்த்தை கூட சேர்ந்தாப்ல பேசியது கிடையாது.
இப்படியே ஒரு வாரம், ஒரு மாதம் கடந்தது.
ஒரு முறை ஒருவர் ஹஜ்ரத் வீட்டிற்கு வந்தார், ஒரு பேப்பர் கட்டிங்கை கொண்டு வந்திருந்தார்.
அதை கொண்டு வந்து, ஹஜ்ரத் அவர்களிடம் காட்டி, “இங்கே பாருங்க... ஹஜ்ரத்.. ஒரு மீனோட படம் இது... இதுல அல்லாஹ்ன்னு எழுதியிருக்கு... நம்ம மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்... இதெல்லாம் குதரத்..” - அது இதுன்னு பில்டப் கொடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.
எனக்கு அவர் பேச்சை கேட்ட போது புதிதாய் ஒரு வீரம் வந்த மாதிரி..”மாஷா அல்லாஹ்..” என்று பெருமை உணர்வோடு சொல்லிக் கொண்டே திரும்பி ஹஜ்ரத் அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.
அவர்கள் முகத்தில் ஒரு சொட்டு மாறுதல் கூட இல்லை. ஒரு பெருமிதம் இல்லை. இந்த செய்தியை கேள்விபடும் முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்பவும் இருந்தது.
என்னா இது, இப்படி இருக்கிறார்கள்...? இதற்கு ஒரு சின்ன ஆச்சர்யம் கூட இல்லையே...?
- யோசித்துக் கொண்டிருந்த போது...
ஹஜ்ரத் அவர்கள் என் பக்கம் திரும்பி சொன்னார்கள், “இந்த மாதிரி செய்திலாம் கேள்வி பட்டுட்டு உங்க ஈமான வளர்த்துகாதீங்க... நாளைக்கு மாட்டுட கன்னுல இவர் உருவம் தெரியுதும்பாங்க... அப்போ அதையும் ஈமான் கொள்ளுவீங்களா...?”
- இப்படியாக இருந்தது அவர்களின் பேச்சு..
உடல் நோய் குணமாக்குவதில் அனுபவம் கிடைப்பது இருக்கட்டும்... எனக்குள் நிறைய மன நோய் இருக்கிறதே அதனை முதலில் குணமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பட்டது.
அதற்கு எங்கள் ‘ஹஜ்ரத் வீடு’ தான் சரியான இடம் என்பதே நான் கண்ட முதல் அனுபவம்.