Showing posts with label 89 ஸூரா ஃபஜ்ர். Show all posts
Showing posts with label 89 ஸூரா ஃபஜ்ர். Show all posts

Saturday, August 28, 2010

விடியற்காலை - குரான் ஷரீஃப்

89:1 விடியற்காலையின் மீது சத்தியமாக

89:2 பத்து இரவுகளின் மீது சத்தியமாக

89:3 இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக

89:4 செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக

89:5 இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

89:6 உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்தை) என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

89:7 (அவர்கள்) தூண்களுடைய ”இரம்” (நகர) வாசிகள்

89:8 அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை

89:9 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசிந்து வந்த) ஸமூது கூட்டத்தையும் அவன் (என்ன செய்தான் என்று அவர்கள் பார்க்கவில்லையா?)

89:10 மேலும் பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)

89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்

89:12 அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்

89:13 எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்

89:14 நிச்சயமாக உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டும்
இருக்கின்றான்

89:15 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனை சோதிக்கும் போது அவன்: ”என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகின்றான்.

89:16 எனினும் அவனுடைய உணவு வசதிகளை குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ, ”என் இறைவன் என்னை சிறுமைப்படுத்தி விட்டான்” என கூறுகின்றான்

89:17 அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

89:18 ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

89:19 இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

89:20 இன்னும் பொருள்களை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

89:21 அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது

89:22 உம்முடைய இறைவனும், வானவரும் அணி அணியாக வரும் போது,

89:23 அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்?

89:24 ”என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை முற்படுத்தி நான்
(அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்

89:25 ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையை போல் வேறு எவனும் வேதனை செய்ய மாட்டான்.

89:26 மேலும் அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

89:27 (ஆனால்) அந்நாளில் நல்லடியார்களிடம் சாந்தியடைந்த ஆத்மாவே!

89:28 நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தியடைந்த நிலையிலும், (அவன்) உன்னிடம் திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

89:29 நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

89:30 மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்)