Monday, March 29, 2010

துளசி - என் கதை - இரண்டாம் பாகம்

துளசி - என் கதை - முதல் பாகம்

2 - திருப்பம்


'சுதாகருக்கும் எனக்கும் தான் திருமணம்னு சின்ன வயசுலேயெ பெரியவங்க பேசிக்கிடாங்க, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் விளையாடுவோம், படிப்போம், அப்பலாம் சுதாகர் இல்லாமல் எதையும் நான் செய்ய மாட்டேன், அப்புறம் அவங்க வெளிநாடு பயணம் போன பிறகு எப்பவாவது போன் பேசிக்குவோம்.. ஆனா இந்த காதல்.. கல்யாணம்.. இத பத்தி எல்லாம் நாங்க எப்பவுமே பேசிக்கிட்டது கிடையாது..' என்றவள் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு, 'இப்ப அத்தை கல்யாணத்த பத்தி பேச தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்..' என்றாள்.

துரை மௌனமாக இருந்தான், அவனது முகத்தில் இருப்பது ஏமாற்றமா..? சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

துளசி அவனையே கவனித்து விட்டு கேட்டாள், 'என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க..' என்று.

துரை வாய் திறந்தான், வார்த்தை தடுமாறியது,, 'இப்ப எப்படி..?, உங்களுக்கு சுதாகர கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே..?' தயங்கியவாறு கேட்டான் தரையையும் துளசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே..

துளசி துரையை கவனித்தாள், அவன் அவளின் பதிலுக்கு ஆர்வமாக இருப்பது தெரிந்தது, 'எனக்கு இப்ப இல்ல.. எப்பவுமே.. அப்பா அம்மா சந்தோஷம் தான் முக்கியம்..' என்றாள்.

துரை கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்து விட்டு, ' சுதாகர் இஸ் லக்கி..' என்றான்.

அந்த அத்தை அடுத்த முறை வரும் போது கல்யாணம் பேசி துளசியை கையோடு கூட்டிட்டு தான் போவேன் என்று துளசியின் பெற்றோரிடம் கறாராக சொல்லி விட்டு போயிருந்தார். அந்த அடுத்த முறை இப்போது வந்தது, கல்யாணம் சம்மந்தமாக அத்தை பேசிக் கொண்டிருந்தார், 'என் புள்ள சுதாகர பத்தி சொல்ல வேண்டியதே இல்ல.. அப்படியே இந்தி நடிகர் மாதிரியே இருப்பான், நிறைய செலவு பண்ணி எம்.பி.ஏ. படிக்க வச்சிருக்கோம், இப்ப நல்ல உத்தியோகத்துல இருக்கான், இன்னும் கொஞ்ச வருஷத்துல கம்பெனி சொந்தமா வைக்கிற அளவுக்கு பெரிய ஆளாயிடுவான்.. உங்களுக்கும் ஒரே பொண்ணு, நான் கேட்குறத கேட்டு நீங்க கொடுத்தா தான் இந்த கல்யாணத்துக்கே பெருமை, 300 பவுன் போட்டுடனும், பையனுக்கு கார் வாங்கி தந்துடணும், நுங்கம்பாக்கத்துல ஒரு பிளாட் அப்புறம் ரொக்கமா 20 லட்சம் கொடுத்துடுங்க, எல்லாம் நான் எனக்கு கேக்கல, உங்க மருமகனுக்கு தான், கடைசில பாத்தீங்கன்னா உங்க மகளுக்கு தான்..' என்றார்.

ராஜாராமன் லட்சுமியை பார்த்தார், லட்சுமியின் அகத்தில் விருப்பம் இல்லாதது அவரது முகத்தில் கண்ணாடி போல் தெரிந்தது.

அத்தை தொடர்ந்தார், 'கல்யாண செலவு பூரா உங்களோடது தான்.. நீங்க யோசிக்கவே வேண்டியதில்லை.. பட்டுன்னு சம்மதம் சொல்ல வேண்டியது தான்' ஓவராக உளறி கொட்டினார்.

ராஜாராமன் கையமர்த்தினார், 'ராஜம்.. துளசி எனக்கு ஒரே பொண்ணு.. என் கிட்ட இருக்கிறது எல்லாம் அவளுக்கு தான், ஆனா.. என் பொண்ணை மருமகளா எடுக்குறவங்க என் பொண்ண பத்தி தான் கேக்கணும், பேசணும், பொண்ண விட்டுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே பேசிக்கிட்டு இருக்கக் கூடாது..' என்றார்.

ராஜத்திற்கு புரியவில்லை, 'என்ன அண்ணே! இப்படி சொல்லிட்டே.. நம்ம சுதாகருக்கு வேற நல்ல இடத்துல இன்னும் கொட்டி கொடுக்குறேன்னுட்டு வரிசை கட்டி நிக்கிறாங்க.. நான் சொன்ன சொல் ஆச்சே.. சொந்தம் விட்டு போகூடாதுன்னு வந்தா.. நீ இஷ்டம் இல்லாத மாதிரி பேசறியே..'என்று கேட்க

'அப்படி நிறைய கொட்டி கொடுக்கிறேன்னு வந்தா நல்லா முடிச்சுக்க வேண்டியது தான்.. யாரும் தடுக்க போறதில்லை..' என்றார்.

'அப்படின்னா சரி.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊருலேந்து யு.எஸ். போய் செட்டிலான குடும்பத்திலேந்து கூட பேசி வருது.. எல்லாம் நம்ம சாதி சனம் தான்.. கல்யாணத்த ரொம்ப கிராண்டா நடத்துறேன்னு பேசிக்கிறாங்க.. நல்லா யோசிச்சுக்க.. ' என்றார்.

'இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல..' என்றவர் ராஜம் போனவுடன் லட்சுமியிடம் சொன்னார், 'இவ கேட்டத விட அதிகமா கொடுத்து நம்ம பொண்ண கட்டி கொடுப்போம்.. கவலைப்படாதே..' என்று.

லட்சுமி, 'நமக்கு எப்படியோ போகட்டுங்க.. சின்ன வயசுலேந்து சுதாகர் தான் இவளுக்குன்னு பேசுனது.. துளசி மனசுல ஆசய வளர்த்து இருந்தான்னா.. அவள்ட்ட ஒரு வார்த்தை கலந்துக்கறது நல்லது..' என்று.

ராஜாராமன் லட்சுமி சொல்வது தான் சரி என்பது போல் தலையை அசைத்தார்.

துளசி அழைக்கப்பட்டாள், நடந்த சம்பவங்கள் விளக்கி சொல்லப்பட்டாள், இப்பொழுது அவளது வார்த்தைக்காக காத்திருந்தார்கள், "என் கல்யாணம் உங்க ரெண்டு பேரோட இஷ்டப்படி தான் நடக்கும்..' என்று கல்யாண குணத்தோடு சொன்னாள்.

சில நாட்கள் கழித்து, சுதாகர் போன் பேசிய போது துளசி தான் எடுத்தாள்,

சுதாகர், 'யேய்.. துளசி என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. நீ அத்தை மாமா எல்லோரும் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்... நீ வரலேன்னா ஒன் கூட பேசவே மாட்டேன்....' இப்படியாக இன்னும் ஏதேதோ சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசிவிட்டு வைத்து விட்டான்.

சுதாகரின் மனைவி ராஜத்தை சரியாக மதிப்பதில்லை, 'எனக்கு டயர்டா இருக்கு.. நீங்க போய் காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க ஆன்ட்டி.. உங்க கையால தான் சாப்பிடணும்..' என்று மாமியாரை வேலை வாங்க ஆரம்பித்து விட்டாள். ராஜமும் முதலில் 'என் மருமகள் என் மேல ரொம்ப பிரியமா இருக்கா, என் கையால தான் எதுவும் சாப்பிடுவாள்' என்று வாய் நிறைய சொல்ல ஆரம்பித்தவர் போக போக தன்னை ஓரங்கட்ட தான் எல்லா வேலையும் என்று புரிந்தவுடன் வாயடைத்து போனார், 'ஐயோ தெரியாம சேத்துல கொண்டு போய் கால உட்டுட்டேனே...' என்று. கடைசியில் ராஜம் சொந்தங்கள் இருந்தும் பணக்கார அனாதை ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்.

கொஞ்ச நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த துரை கல்லூரிக்கு திரும்ப வந்த போது துளசியின் கல்யாணம் நின்று போன செய்தி எல்லாம் கேள்விப்பட்டு துளசியை பார்க்க வந்தான், துளசி கேட்டாள், 'ஆளே இளைச்சு போய், யாரோ மாதிரி ஆயிட்டீங்களே?, உடம்பு இப்ப எப்படி இருக்கு?'

துரை, 'இருக்குது.. அத விடுங்க.. உங்க கல்யாணம் சம்மந்தமா நான் கேள்விப்பட்டது பொய்யா இருக்கணும்னு விரும்பறேன்..' என்றான்.

துளசி அவன் முகத்தையே உற்று பார்த்து விட்டு சொன்னாள், 'அப்ப பொய் தான் சொல்லனும்'

இதற்கிடையில் துளசிக்கு வட நாட்டிலிருந்து ஒரு நல்ல இடத்தில் வரன் பேசி வந்தது. பேச்சுக்கள் எல்லாம் நல்ல விதமாக இருந்ததால் எல்லோருக்கும் பிடித்து போய் விட்டது. படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று முடிவானது. ஆனால், நடக்க இருக்கும் இந்த கல்யாணத்தில் துளசி பல கசப்பான அனுபவங்களை பெற போகிறாள் என்று அப்போது ஒருத்தர் கூட உணர்ந்தாரில்லை.

படிப்பு முடிந்தது..

கல்யாணம்..

ராஜம் கல்யாணத்திற்கு வந்திருந்தார், துளசி ராஜத்தின் காலை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டாள், 'கடவுளே! என் வீட்டுக்கு வர வேண்டியத இப்படி ஊர் பேர் தெரியாத எடத்துக்கு அனுப்பி விட நானே காரணமாயிட்டேனே..! காசு, பணம்ல என் கண்ண மறச்சுடுச்சு' என்று கண்ணீர் விட்டு புலம்பினார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்க துரைக்கு ராஜத்தை போலவே அழுது புலம்ப வேண்டும் போல் இருந்தது. ஏதோ ஒரு புதிய உணர்வு அவன் மனதில் மின்னலை போல் வெட்டி விட்டு போனது, இவன் அந்த உணர்வின் வெட்டில் துண்டு பட்டது போல் துடித்தான். அது காதலின் அவஸ்தை என்று அவன் உணர்ந்த போது துளசி மூர்த்தி என்பவருக்கு சொந்தமாகி இருந்தாள்.

தொடரும்

Saturday, March 20, 2010

இக்ரா - (படியுங்கள் அல்லது ஓதுங்கள்)

இறக்கி அருளப்பட்ட குரான் ஷரீஃபின் முதல் வார்த்தையே 'இக்ரா (ஓதுங்கள் - படியுங்கள் - Recite or Read) என்பதாக உள்ளது.

கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு - கல்வியே  செல்வத்துட்  செல்வம் என்பதும் தமிழர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று தான்.

கல்வியை கற்க சொல்வதில் இஸ்லாம் ஆண் பெண் என்ற வித்தியாசத்தை பார்த்ததில்லை. கல்வி கற்பது இருபாலருக்கும் கடமையாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.

"கல்வி சீனாவில் தான் கிடைக்கும் என்றால் அங்கு சென்று கல்வியை கற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒரு ஹதீஸ் இருக்கிறது

எங்கள் ஹஜ்ரத் சொன்னார்கள், 'சீன்'ங்குற வார்த்தைய தான் 'சீனா'ன்னு சொல்லி இக்கிறாஹா, 'சீன்'ங்குற வார்த்தைக்கு சிங்கத்துட நெத்தின்னு இன்னொரு அர்த்தம் இருக்கு, அப்பிடி போட்டு பாருங்க.. இன்னும் பொருத்தமா இருக்கும்..' என்று

அதாவது, 'கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் அது சிங்கத்தின் நெற்றியில் இருந்தாலும் சரி' - என்று அர்த்தம். (இந்த அர்த்தத்தில் பார்த்தால் சீனாக்காரர்களுக்கும் இந்த ஹதீஸ் பொருந்தும்)

குரான் ஷரீஃபில் 'இல்ம்' (அறிவு) என்ற வார்த்தை மட்டும் 750 இடங்களில் வருகிறதாம்.

இந்த கல்வி மார்க்க கல்வியை மட்டும் தான் குறிக்கும் என்று வாதிடுபவர்களும் உண்டு. உண்மை அப்படி அல்ல என்று இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

இஸ்லாத்துக்கு எதிராக முஸ்லீம்கள் மீது போர் தொடுக்கிறார்கள் காஃபிர்கள் எனும் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் (kafir means non-muslim). முஸ்லீம்கள் மீது நிர்பந்திக்கப்பட்ட அந்த போரில் முஸ்லீம்களிடம் கைதிகளாகி நிற்கிறார்கள் காஃபிர்கள்.

இந்த கட்டத்தில் நமக்கு நமது இந்த நவீன காலத்தில் நம் அறிவுக்கு உட்பட்டு போரில் சிறைப்பட்ட நமது தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை கண்கூடாக பார்த்தும் கையையும் காலையும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாத கையாலாகாத நிலை தான் நமக்கு ஏற்பட்டது.

பெருமானார் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள், 'முஸ்லீம்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் காஃபிர்களுக்கு விடுதலை' என்று.

இங்கே கவனிக்க வேண்டியது கைதிகளாக நிற்பவர்கள் தங்களை கொல்ல வந்தவர்கள், சற்று முன்னர் தங்களோடு போர் களத்தில் வாளோடு வாள் வைத்து மோதிக் கொண்டவர்கள்.

வழக்கமாக சண்டையில் வெற்றி பெற்றவர்கள் தான், 'நான் அவனுக்கு (தோல்வி அடைந்தவருக்கு) சரியான அல்லது நல்ல பாடம் கற்றுக் கொடுத்தேன்' என்று பெருமையாகவும் கர்வத்தோடும் பேசுவார்கள். ஆனால் அன்று பத்ரு போரில் தோல்வி அடைந்தவர்கள் அதே போரில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தார்கள்.

முஸ்லீம்கள் அவர்கள் பெற்ற வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடவில்லை. மாறாக தங்களிடம் தோல்வி அடைந்தவர்களிடமே மாணவனாக பாடம் கற்றுக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இந்த வரலாறே மிகச் சிறந்த பாடமாக அமைகின்றது.

படிக்க வரக்கூடாது உங்களுக்கு கல்வி கிடையாது என்று கல்வி மறுக்கப்பட்ட மிகவும் கொடூரமான சூழலில் வாழ்ந்தவர்களால்  அந்த  சிறந்த பாடத்தை புரிந்து கொள்ள முடியும்.

அதுவும் தவிர இஸ்லாத்தை ஏற்காத காஃபிர்கள் முஸ்லீம்களுக்கு என்ன இஸ்லாமிய ஷரீஅத்தையா சொல்லி கொடுத்திருப்பார்கள். உலக கல்வியை தான் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

பள்ளிவாசலானது முஸ்லீம்கள் தொழுத நேரம் போக அன்று முதல் பகுதிநிலை பள்ளிகூடமாகவும் மாறியது அதாவது ஜாமிஆவாகவும் மாறியது. 'ஜாமியா' என்ற வார்த்தையே பள்ளிகூடத்தையும் தொழுகின்ற இடத்தையும் இணைக்கின்ற வார்த்தை தான்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் பள்ளிவாசல் பகுதி நேர வகுப்புகள் (பார்ட் டைம் கிளாஸ்) நடக்கும் இடமாக மாறியது, அந்த வகையில் பார்த்தால் முதன் முதலில் உலகத்துக்கு பார்ட் டைம் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்றே நான் அறிகிறேன்.

இன்றைக்கு முதியோர் கல்வி, Adult Learning, continuous learning, life long learning   என்ற  கல்வி  முறைகளுக்கெல்லாம் பெருமானார்  அன்று  வகுத்து  தந்த  திட்டம் தான் முன்னோடி.

இதெல்லாம் ஒரு புறமிருக்க என் வகுப்பில் நான் பாடம் நடத்தும் போது ஒருவர் உறங்கி கொண்டிருந்தார். (முழிச்சிக்கிட்டிருந்தா தானே நியூஸ் என்கிறீர்களா?)

நான் அவர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் 'அவரை எழுப்பி விடுங்கள்' என்று சொன்னேன்.

அவரும் எழுப்பி விடவே, திடுக்கிட்டு எழுந்திருந்த அவர், 'சாரி சார், அசந்துட்டேன்..' என்றேன்

நான், 'என்னா அசந்துட்டேன்.. நான் என்ன சண்டை காட்சியா நடத்தி காட்டுனேன்..' என்று சொல்லி விட்டு 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன்

அவர் உடனே 'காமராஜ்' என்றார்

நான் சொன்னேன், 'என்னங்க காமராஜ் தான் கல்வி கண்ணை தொறந்தாரும்பாங்க.. நீங்க என்னடான்னா கண்ணை மூடிட்டிங்களே.." என்றேன்

Sunday, March 14, 2010

நேசக்குமாருக்கு.... வித்தியாசம் இருக்கிறது..

முதலில் சிகப்பு எழுத்தில் இருக்கும் இந்த செய்தியை படியுங்கள். இது திண்ணையில் நேசக்குமார் என்பவர் எழுதியது.

'நான் கடவுள்' என்று ஒரு நபி அல்லது இறைதூதர் சொல்லிக்கொள்ளவில்லை என்று வாதிடலாம். 'நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தன்னைத் தானே நபி/இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்வதற்கும், அவதாரம் என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை.


படித்துவிட்டீர்களா?.. இந்த கருத்தை எல்லாம் ஏன் சொல்கிறார் என்று ஆச்சர்யமா இருக்குமே?
 
அது வேறொன்றுமில்லை. மேப்புடியான் நடிகை ரஞ்சிதாவோடு "யாரும் விளையாடும் தோட்டம் தினந்தோறும் ஆட்டம் பாட்டம்.." என்று பாடிய பாட்டு பட்டையை கிளப்பியதை வைத்து யாரும் சாமியாரே வேண்டாம் என்று சொல்வது தவறு, எல்லா மதத்திலும் இது போன்ற குருமார்கள் இருக்கிறார்கள். அவங்களுக்கும் இவங்களுக்கும் வித்தியாசமில்லை என்கிற ரீதியில் நேசக்குமார் எழுதியது தான் இது. (இந்த கர்மத்தை எழுதியது என்றும் சொல்லலாம் புலம்பியது என்றும் சொல்லலாம்.)
 
இந்த நேசக்குமார் என்பவர் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற நாகூர் ரூமியில் புத்தகத்துக்கு எதிர்வினை எழுதி அறிமுக(மூடியா)மானவர். அவர் வீட்டில் அடுப்பு எறிஞ்சா கூட அது இஸ்லாமியர்கள் எறித்தது தான் என்பார். அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது பாச(க்கயிறு)ம்.
 
இதுக்கு முன்னாடி பிரேமானந்தா சுவாமிகள் கையும் களவுமா (இப்ப எல்லாம் கையும் சிடியுமா.. (ச்சீச்சீ.. கர்மம்..கர்மம்.. லோகம் ரொம்ப கெட்டு போயிடுச்சு..!) மாட்டிகிட்ட போது பழனிபாபா பேசிய பேச்சு ஒன்று நினைவுக்கு வருகிறது,
 
அவர் பேசுனாரு, 'பிரேமானந்தா என்கிட்டே வராம போயிட்டான், வந்தா ஒரு நிமிஷத்துல அவனுக்கு விடுதலை வாங்கி தந்திருப்பேன், அவன் என்னாய்யா பெரிய தப்பு பண்ணிட்டான், அந்த பொண்ணு என்னா சொன்னுச்சு.. சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திபுட்டாருன்னு சொல்லிடுச்சு.. நான் என்னா சொல்றேன்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு நரகத்த காமிச்சிருந்தா அரெஸ்ட் பண்ணலாம்.. அவன் சொர்க்கத்த காமிக்கிறேன்னு சொல்லிபுட்டு சொர்க்கத்த  தானே காமிச்சிருக்கான்.." என்ற ரீதியில அவர் பேசிட்டு போயே போயிட்டரு.
 
சரி, நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன், இந்த நேசக்குமார் என்னா சொல்றாரு,
 
''நான் கடவுள்' என்பதற்கும், 'நான் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது, நான் செய்வதெல்லாம் கடவுள் செய்யச் சொல்லி செய்வது' என்று இந்த இறைதூதர்கள்/ரட்சகர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை."
 
அவரு வித்தியாசம் இல்லைங்கிறாரு.. நான் என்னா சொல்றேன்.. வித்தியாசம் இருக்குங்குறேன்.. எப்படின்னு கேக்குறீங்களா?
 
நான் கடவுள் என்று சொன்னது - பொய்
நன் சொல்வதெல்லாம் கடவுள் சொல்வது நான் செய்வதெல்லாம் கடவுள் செய்ய சொல்லி செய்வது என்று சொன்னது - உண்மை
 
இது தான் அந்த வித்தியாசம்.. அவ்வளவு தான்.. மேட்டர் ஓவர்.
 
----------------------------------------------------------------------------------------
 
அடுத்து ஒரு முக்கியமான செய்தி.. எனக்கு பேராசிரியர் பெரியார் தாசன் என்றால் கொள்ளை பிரியம். அவர் இஸ்லாத்தை தழுவி விட்டாராமே? அவரையே நாங்கள் எல்லாம் தழுவிக் கொள்ள தயாராக இருக்கிறோம்
அவர் மீது இறக்கி வைத்த சூத்திர ஆடையை தூக்கி எறிந்து விட்டு இஹ்ராம் ஆடையை கட்ட தயாராகி விட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே!
 
http://arabnews.com/saudiarabia/article29180.ece
 
மேற்கூறிய இந்த லிங்க்லே போட்டிருக்காஹலே.. மர்ஹபா...

Wednesday, March 03, 2010

நூஹ் நபியின் கப்பல் தரும் பாடம் - படித்தவை.. பிடித்தவை..

Plan Ahead...

It wasn't raining when Noah (Alai) built the ark

Don't listen critics - Do what has to be done

Build on high ground

Two heads are better than one

Speed isn't always an advantage
The Cheetahs were on board but... so were the snails

If you can't fight or flee... float!

Take care of your animals as if they were the last ones on Earth

Don't forget that we're all in the same boat
When things get really deep, don't sit there and complain.. Shovel!

Stay below deck during the storm

Remember that the Ark was built by Amateurs and the Titanic was built by Professionals
If you have to start over, have a friend by your side

Don't miss the boat
No matter how bleak it looks, there's always a rainbow on the horizon