Showing posts with label இந்தி சினிமா. Show all posts
Showing posts with label இந்தி சினிமா. Show all posts

Wednesday, September 17, 2014

ஷஹிதான ஷஹித் அஜ்மியின் வாழ்க்கை துளிகள் - ஷஹித் இந்தி திரைப்படம் (விமர்சனம்)

உலக நாயகர்கள் இளைய தளபதிகள் முஸ்லிம்களை வில்லன்களாகவும் தீவிரவாதிகளாகவும் விஸ்வரூபம் எடுத்து துப்பாக்கி முனையில் பைசா பார்க்கும் இந்த சூழலில் அமைதியாக சென்ற ஆண்டு வெளியாகி இந்தி திரை என்றாலும் இதயத்தில் இடம் பிடித்து விட்டது ”ஷஹித்” என்ற திரைப்படம்.

உண்மைக்காக போராடி ஷஹீதான ஷஹித் அஜ்மியின் வாழ்க்கை கதை தான் இந்த திரைப்படம்.

ஷஹித் அஜ்மி தனது 13வது வயதில் பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நடந்த கலவரத்தில் கைது செய்யப்படுகிறார். காவல்துறையினரே முஸ்லிம்களை கொல்வதை பார்த்த பிறகு பாகிஸ்தான் வசமிருக்கும் ஆஸாத் கஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி பெறுகிறார். பின்னர் பிடிக்காமல் விட்டுவிட்டு ஊர் திரும்புகையில்  மீண்டும் தடாவில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுகிறார். 

ஆயுதங்களால் சாதிக்க முடியாததை கல்வி தான் சாதிக்கும் என்று புரிந்துக் கொள்கிறார்.  ஏழாண்டு சிறைவாசத்தில் சட்டப்படிப்பும் post graduate in creative writing படிப்பும் படித்து சரித்திரம் படைத்தார்.

சிறை வாசம் முடிந்து வெளியே வந்து  குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் கைதிகளாக இருப்பவர்களை ஒரு குற்றமும் அறியாத அப்பாவிகளுக்காக வாதாடி குற்றத்திலிருந்து விடுபட வைத்தார்.

தான் வக்கீலாக செயல்பட்ட குறைவான 6 ஆண்டுகளில் அவர் எடுத்துக் கொண்ட 17 வழக்கில் தீவிரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை விடுதலை பெற வைக்கிறார். 

இதற்கிடையில் வந்த ஏராளமான மிரட்டல்களுக்கு சொல்லொணா துன்பங்களுக்கும் பணியாமல் கண் முன்னால் நடக்கும் அநீதியை தனது வாத திறமையால் நீதியை நிலைநாட்டுகிறார்.

கொலையாளிகள்  அவரை அவரின் அலுவலகத்திலேயே இரண்டு குண்டுகளால் துளைத்து உயிரை பறித்தனர். ஷஹித் அஜ்மி தனது 33வது வயதில் பிப்ரவரி மாதம் 11ந் தேதி 2010ம் ஆண்டு ஷஹிதானார் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த உணமை சம்பவங்களை அடிப்படையாக வைத்து “ஷஹித்” என்ற படத்தை மதிப்பிற்குறிய ஹன்ஸல் மேத்தா அவர்கள் மிக தத்ரூபமாக படம் பிடித்து தந்திருக்கிறார்.

ஷஹித் அஜ்மியாக நடித்தவர் ராஜ்குமார் ராவ் என்ற அற்புத நடிகர். ஹன்ஸல் மேத்தா படப்பிடிப்பை ஷஹித் அஜ்மியின் அலுவலகத்திலேயே வைத்து படம் பிடித்திருந்தார்.

 ராஜ்குமார் தான் தன் மகனாக நடிக்கிறார் என்றது ஷஹித் அஜ்மியின் தாயார் ரேஹானா அவர்கள், ராஜ்குமாரை தனது வீட்டிற்கு அழைத்து அவரில் தனது மகனை பார்த்து மகிழ்ந்தார். 

ஆனாலும் “ஷஹித்” என்ற படத்தை ரேஹானா அவர்கள் பார்க்க மறுத்து விட்டாராம், காரணம், தனது மகன் இன்னொரு முறை இறப்பதை அந்த தாயிதயம் பார்க்க விரும்பவில்லையாம்.

ஷஹித் அஜ்மியின் தம்பியான காலித், இவரும் வக்கீல் தான், படம் 95 சதவிகிதம் உண்மை சம்பவம் என்றும் 5 சதவிகிதம் புனைவு என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஷஹித் அஜ்மியின் 18 ஆண்டு வாழ்க்கையினை இரண்டரை மணி நேரத்தில் நெகிழ்ச்சியான காட்சிகளின் மூலம் நெஞ்சத்தில் பதிகிறது, கலவரம் நடக்கும் போது வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டு அதன் பிறகு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீடு வந்து தாயாரிடம் அறை வாங்குவது, ராத்திரியில் படிக்கும் போது விளக்கை அணைக்க சொல்லி தம்பிமார்கள் சண்டையிட தாயார் தலையிடுவது, முதல் மாத சம்பளத்தை ஷாஹித் தனது தாயாரிடம் தருவது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீங்கள் குற்றம் இழைத்திருந்தால் நான் கேஸிலிருந்து விலகி விடுவேன் என்று சொல்வது, நீதிமன்றத்தில் திறமையாக கேஸை உடைப்பது, நீதிமன்ற வாசலில் முகத்தில் கறிபூசப்படுவது, இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

துணை கதாபாத்திரமான அண்ணன் ஆரிபாக வரும் முஹம்மது ஜீஷன் அய்யூப் மிக சாந்தமாக குடும்ப பொறுப்பை வெளிப்படுத்துகிறார்.

கதாநாயகி மர்யமாக வரும் பிரப்லீன் சந்து என்ற நடிகை மிக அற்புதமாக நடித்து இருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஒன்று, ஷஹித் ஒரு சிற்றுண்டி விடுதியில் தனது காதலை சொல்லும் போது, ஒரு குழந்தைக்கு தாயாகி விவாகரத்தான அவர் தரும் முக பாவங்கள்.

இரண்டாவது, ஷஹித் தனது தாயார் வீட்டிற்கு அழைத்து வரும் போது கண்ணாலேயே போகலாமா என்று கேட்பது, நடிப்பு மிக துல்லியம்.

இந்த படத்தில் ஷாஹித் அஜ்மியாக உண்மைக்கு வாதாடியதற்காக ராஜ்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது பொருத்தமானதே. இன்னும் இந்த படம் ஆஸ்கர் ரேஸிலும் இருக்கிறதாம். ஆஸ்கர் பெருமையடைகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Must Watch:



Resources:

http://en.wikipedia.org/wiki/Shahid_Azmi

http://archive.indianexpress.com/news/-my-family-lacks-courage-to-watch-shahid-cant-see-him-die-again-/1185052/0

http://en.wikipedia.org/wiki/Terrorist_and_Disruptive_Activities_(Prevention)_Act 

Wednesday, October 24, 2012

யஷ் சோப்ராவின் மஷால் (1984) இந்தி திரை

யஷ் சோப்ரா 1932 ஆம் ஆண்டில் லாஹூரில் பிறந்தவர், இவர் நிறைய வெற்றி படங்களை தயாரித்து இயக்கி இருந்தாலும் உதாரணமாக வக்த் (1965), அமிதாப் நடித்த திவார் (தமிழில் ரஜினி நடிக்க தீ என்று வெளியானது), கபிகபி, திரிசுல் (தமிழில் ரஜினி நடிக்க மிஸ்டர் பாரத் என்று வெளியானது), எனக்கு இவர் இயக்கிய படத்திலேயே பிடித்த படம் திலிப் குமார் நடித்த மஷால் என்ற படம் தான் மிகவும் பிடித்தமான படம்.

ஷாருக் நடித்த டர் என்ற படத்தை சென்னையில் மெலடி தியேட்டரிலேயோ அல்லது ஜெயப்பிரதா தியேட்டரிலேயோ பார்த்து இருக்கிறேன். தில் தோ பாகல் ஹெய்ன், வீர் ஜரா, சாந்தினி, ரொம்பவுமே காண்ட்ரவர்சியலான சில்சிலா என்ற படத்தையும் இயக்கியவர் இவர் தான்.

சில்சிலா என்ற படத்தில் அமிதாப், ஜெயபாதுரி, எனக்கு மிகவும் பிடித்த நடிகையான ரேகா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகரான சஞ்சீவ் குமாரும் நடித்து இருப்பார்கள். இந்த படம் அமிதாப், ரேகா வின் உரிமை இல்லா உறவை  அப்படியே எடுத்து சொல்வதாக அமைந்திருந்தது.

சலிம்-ஜாவித் என்ற ஜாம்பவான்கள் இந்தி சினிமாவிற்கு நிறைய வெற்றி படங்களை அள்ளி தந்திருக்கிறார்கள். சலிம் என்பவர் சல்மான் கானின் தகப்பனார், ஜாவின் பிரபல பாடலாசிரியர், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மியின் கணவர், ஷாருக்கானின் டான் பட இயக்குனர் ஃபர்ஹான் அக்தரின் தகப்பனார்.

இருவரின் கைவண்ணத்தில் உருவான ஷோலே என்ற படம் இன்றைய அளவும் இந்தி சினிமாவிற்கு ஒரு லேண்ட்மார்க்காக இருந்து வருகிறது.

ஒரு முறை ஜாவிதிடம் கேட்டார்கள், நீங்கள் எதை எழுதினீர்கள், சலீம் எதை எழுதினார் என்று - அதற்கு ஜாவின் இப்படி பதில் சொன்னார், வெர்ப் எல்லாம் நான் எழுதினேன், நவுன் எல்லாம் சலிம் எழுதினார் என்று.

யஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளியான திவார், திரிசுல், காலாபதர் என்ற மூன்று படத்தையும் எழுதி தந்தவர்கள் சலிம் ஜாவித் தான்.

மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தை ஆங்கில படமான் ‘த காட் ஃபாதர்” என்ற படத்தின் தழுவல், இன்ஸ்பிரேஷன், ஈயடிச்சான் காப்பி என்று பலவாறாக புகழ்ந்து தள்ளப்பட்டிருக்கிறது.

மேற்படி ஆங்கில படத்தை நான் பார்த்தது கிடையாது ஆனால் நாயகன் என்ற திரைப்படத்தையும் சலிம்-ஜாவித் எழுதிய திவார் எனும் படத்தின் ஒவ்வொரு காட்சியையுமே நாயகனாக என்னால் ஒப்பீடு செய்ய முடியும்.

அப்படி பார்த்தால் தீவார் என்ற படம் தான் ‘த காட் பாதர்’ என்ற படத்தின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் என்று நினைக்கிறேன்.

மணிரத்னம் அவர்கள் காலாபதர் படத்தில் வரும் சில காட்சிகளை அப்படியே அக்னி நட்சத்திரத்திலும் பயன்படுத்தியிருப்பார். கார்த்திக் பிரபு சண்டை போட வரும் போதெல்லாம் ஏதோ ஒரு வழியில் எலக்ட்ரிக் டிரெயினில் கூட்டம் ஏறுவது போன்று சண்டை தட்டுபட்டு போவது போல் அமிதாபும் சத்ருகன் சின்ஹா சண்டை போட வரும் போதெல்லாம் கடையில் கூட்டம் வந்து கலைத்து விடுவது போன்று காட்சிகள் அமைந்திருக்கும்.

சலிம்-ஜாவித் திவார் படத்தின் திரைக்கதையை எழுதிய பிறகு யஷ் சோப்ராவிடம் வந்து ‘உங்களிடம் இந்த திரைக்கதையை நாங்கள் தருகிறோம், ஆனால் சில கண்டிசன், படத்தின் ஹீரோவை விட எங்களுக்கு காசு தர வேண்டும் (கதாசிரியர்கள் இப்படி எல்லாம் டிமாண்ட் பண்ண முடியுமா? - உண்மையா தெரியவில்லை - எப்பவோ படித்தது), படத்தில் ஒரு புள்ளி கூட மாத்த கூடாது, முக்கியமாக கிளைமேக்ஸ் என்று கேட்டுக் கொண்டார்களாம்.

திரைக்கதையை படித்து விட்டு  யஷ் சோப்ரா ஒத்துக் கொண்டு காட்சி வடிவமாக்கி காட்டினார். அமிதாப்பை சூப்பர் ஸ்டாராக்கிய படம் அது.

சலிம்-ஜாவித் ஏதேதோ காரணத்தால் பிரிந்த பிறகு ஜாவித் யஷ் சோப்ராவிற்கு நெருக்கமான ஆளாக இருந்தார். சில்சிலா என்ற படம் தான் ஜாவித் அக்தராக முதன் முதலில் பாடல் எழுதிய படம்.

‘ஏ கஹான் ஆகயே ஹம்.. ” என்ற பாடல் அவர் எழுதிய சூப்பர் ஹிட் பாடல். ஜாவித் சலிமிடமிருந்து பிரிந்த பிறகு முதன்முதலாக எழுதிய (கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்) படம் தான் மஷால் எனும் எனக்கு பிடித்த திரைப்படம்.

யஷ் சோப்ரா 21ந் தேதி டெங்கி எனும் கொடிய பாக்டிரியா காய்ச்சலினால் இறந்து போய் விட்டார்.

அவர் இயக்கிய மஷால் எனும் எப்போதோ பார்த்த திரைப்படத்தை பற்றிய நினைவு வருகிறது.

இந்த படத்தில் திலிப் குமார் யஷ் சோப்ராவுடன் முதல் முறையாக இணைந்தார். திலிப் குமாரின் பவர் பெர்ஃபார்மெண்ஸை இந்த படத்தில் பார்க்கலாம்.

இந்த படத்தில் அனில் கபூர் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் யஷ் சோப்ரா கமலஹாசனை  தான் அணுகினார். கமலஹாசனிடம் யஷ் கதையின் அவுட் லைனை சொன்ன போது ரொம்பவும் எக்ஸைட் ஆகியிருக்கிறார் கமலஹாசன்.

ஆனால் அதே சமயம் முழு கதையையும் ஜாவித் அக்தரிடம் கேட்டு தெரிந்த பிறகு திலிப்குமாருக்கு ஈக்வலான ரோல் இல்லை என்று கூறி விலகி விட்டாராம் நம்ம கமலஹாசன்.

அதோடு ஜாவித் அக்தர் அனில் கபூரை ரெகமண்ட் செய்ய அவர் நடிக்க ஒப்புக் கொண்டு ஆளாகினார்.

இன்றைக்கு நேர்மையான ரோலை ஹீரோவுக்கு கொடுத்தால் கூட கேலி கூத்தாகும் நிலை இருக்க நேர்மையான பத்திரிக்கையாளராக விநோத் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.

எஸ்.கே. வர்தன் என்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு பெரிய மனுசனை பற்றிய இருட்டு செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.

வர்தனாக அம்ரிஷ் புரி அடிக்கடி, ‘துனியா பஹுத் கராப்.. (இந்த உலகம் மிகவும் மோசமானது..)’ என்று பன்ச் லைன் பேசிக் கொண்டே இருப்பார்.

படத்தில் சில காட்சிகள் உள்ளன...

அம்ரிஷ் புரி திலிப் குமாரை அவரது பத்திரிக்கை அலுவலகத்தில் சந்திக்கும் காட்சி

- ஒவ்வொருத்தருக்கும் ஒரு விலை உண்டு, அந்த விலை என்ன என்று தெரிந்து கொண்டு கொடுத்து விட்டால் அந்த நபர் நம்முடைய ஆள் தான் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வருவார்.

எஸ்.கே. வர்தன் வாசலிலேயே நிற்பார். விநோத் எழுதிக் கொண்டு இருப்பார்.

எஸ்.கே - நான் உள்ளே வரலாமா?

விநோத் - உள்ளே வாங்க

எஸ் - நான் யாருன்னு என்னய அறிமுகப்படுத்திக்கிறேன். நான் தான் எஸ்.கே. வர்தன். இப்போ உள்ளே வர அனுமதி கிடைக்குமா?

வி - உள்ளே வாங்க

எஸ் - (உள்ளே வந்து நாற்காலியை காட்டி) உட்காரலாமா என்று கேட்க விநோத் கையை காட்டி அமருங்கள் என்கிறார்.

எஸ் - நன்றி.. நான் உங்க நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை, எனக்கு தெரியும் நீங்க ஒரு பிஸியான ஆளென்று. அதனால தான் நானே உங்கள தேடி பார்க்கணும்னு வந்திருக்கிறேன். இதுவரைக்கும் நான் எதுக்காக வந்திருப்பேன்னு நீங்க கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நம்புறேன்.

வி - பாருங்க மிஸ்டர் வரதன். நான்  மொதல்ல செல விஷயத்த தெளிவு படுத்த விரும்பறேன்.. ஒண்ணு ...நான் உங்கள பத்தி எழுதுனது உங்க மேல உள்ள தனிப்பட்ட விரோதத்துனால அல்ல - ரெண்டாவது... நான் எதையும் ஆதாரம் இல்லாம எழுதல...

எஸ் - அப்படிலாம் இல்ல சார்...நீங்க என்னய தப்பா புரிஞ்சுகிட்டீங்க... நான் எழுதுனத தவறு சொல்ல வரல... நான் உங்க கிட்டே நட்பு கரம் நீட்ட தான் வந்திருக்கிறேன்..

வி - நம்ம ரெண்டு பேரும் நட்பு பாராட்டுற அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்கு..?

எஸ் - அப்படி எல்லாம் சொல்லகூடாது சார் நீங்க... நீங்க மிகப் பெரிய அறிவாளி..ஆனால் இந்த உலகம் ரொம்ப மோசமானது விநோத் குமார் சாப்... உங்கள இந்த உலகம் அங்கீகரிக்கவே அங்கீகரிக்காது. உங்க எழுத்த பார்த்த ஒடனே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.. என்ன அழகா எழுதுறீங்க.. ஆனால் சாதாரண ஒரு செய்தி தாள்ல வர்ரத நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. உங்களோட ஜபர்தஸ்தான பேப்பரான வருது... ஆனா இந்த அலுவலகம்..
கோவர்த்தன் சாலைல ஒரு பெரிய கட்டடம் இருக்கு.. அங்கே ஆபிஸ் பிளாக்ஸ் எல்லாம் நல்ல விலைக்கு வருது...

வி - (இடைமறித்து... கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு) இங்கே பாருங்க.. வர்தன்.. நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது.. நீங்க இங்கே வர்ரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் வேலை பார்த்து கிட்டு இருந்தேன்.. அந்த வேலைய நான் முடிக்கணும்... அதனால தயவு செய்து..
(கோபமாக எழுகிறார்)

எஸ் - நீங்க ரொம்ப புத்திசாலின்னு தான் நான் சொல்வேன்..நம்ம வெளிப்படையாவே பேசுவோம்.. எவ்வளவு வேணும்..? வெளியில கார்ல பணம் இருக்கு... எவ்வளவு பணம் வேணும்னு யோசிச்சு சொல்லுங்க..

வி -  (யோசிக்கிறார் - யோசித்து விட்டு ஒரு அறை விடுகிறார்) நான் இப்போ அறையிறதுக்கு முன்னாடி இதை செய்ய கூடாதுன்னு தான் யோசிச்சேன் மிஸ்டர் வர்தன்..ஆனா நீங்க பேசுன ச்சீப்பான வியாபாரத்துக்கு இதை விட சிறந்த பதில் வேற எதுவும் என்னால தர முடியாது... நீங்க போகலாம்.

எஸ் - (கடுங் கோபத்துடன் எறிக்கின்ற பார்வையில்) மிஸ்டர் விநோத் குமார்.. நான் உள்ளே வர்ரதுக்கு முன்னாடியே சொன்னேன் நான் எஸ்.கே.வர்தன்.. நீயும் எல்லாத்தையும் கேட்டுகிட்டே தான் இருந்தே... அப்படியிருந்தும் என்னை...

வி - (இடைமறித்து) வாசல் கதவு அந்த பக்கம்... அதோ அந்த பக்கம்... (கையை நீட்டி காட்டுவார்) - (தர்வாஜா உஸ் தரா...உஸ் தரா...)

நெருப்பு பொறி பறக்கும் ஜாவித் சாபின் வசனத்தில். அப்பா... என்னமா நடித்து இருப்பார்கள் திலீப் குமாரும் அம்ரிஷ் புரியும்.

அடுத்து எனக்கு பிடித்த காட்சி...

அனில்கபூரை திலிப்குமார் அனிலின் வீட்டில் சந்திக்கும் காட்சி

திலிப் குமார் அனில் கபுரிடம் கோவித்து கொண்டு வீட்டு பக்கம் வரக்கூடாது என்று சொல்லி யிருப்பார்.

ஏனெனில்.. அனில் கபூரின் நண்பர் ஒரு அங்காடியில் போய் ஒரு பொருளின் விலையை கேட்பார், அந்த கடையின் சேல்ஸ் மேனோ ஒரு பெண்ணிடம் வியாபாரம் செய்து கொண்டிருப்பார், அந்த நண்பர் கடையில் உள்ள ஒரு கேமராவை தொட்டு எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பார், கடை சேல்ஸ் மேன், ‘தொடாதே... சேரில வாழுற உனக்கு எல்லாம் எதுக்கு இத தொடறே...” என்பது போல் கேட்டு விடுவார்.. அனில் கபூருக்கு தெரிய வர கடையை போட்டு அடித்து உடைத்து விடுவார்.

கடையை உடைத்த செய்தி மட்டும் கேள்விப்படும் திலிப் குமார் இன்னமும் ரவுடியிசத்தை விடவில்லை என்று கூறி அனில் கபூரை கடிந்து வெளியேற்றி விடுவார். திரும்பவும் கேள்விபட்டு அனில்கபூரை அவர் வீட்டிற்கே போய் சந்திப்பார்.. “நான் ஒன்னய தப்பா சொல்லி காயப்படுத்திட்டேன்...” என்று ஆரம்பிப்பார்..

அனில் கபூர், “நான் தப்பா நினைக்க என்ன இருக்கு சார்.. இது தான் மொதோ தடவயா என்ன... என்ன பத்தி எல்லாரும் தப்பு தப்பா பேசுறது.. நான் மட்டும் இல்லை.. எங்க அப்பா அம்மாவும் ரொம்ப கேவலமான வார்த்தைகளை எல்லாம் கேட்டிருக்காங்க... சாப்...

எனக்கு அஞ்சு வயசிருக்கும் சாப்.. எங்க அப்பா என்னய மார்க்கெட்டுக்கு கூட்டிட்டு போவாரு... நாங்க நிறைய கடையை எல்லாம் பார்த்துகிட்டே போவோம்...

அப்போ என்னோட அப்பா ஒரு தடவை ஒரு துணிய தொட்டு பார்த்தாரு... கட காரர் கத்துனாரு, திட்டினாரு..”ஏய்.. துணி மேல கைய வைக்காதே... ஹஹ்ஹா.... அந்த அதே துணிய தான் சாப் எங்க அப்பா பஞ்சாலைல வேல பாத்து தைச்சு தர்ராரு.. அதே துணி கடைக்கு வந்ததோட யாரு தச்சதோ அவங்களையே தொட கூடாதுன்னு கேவலமா சொன்னா...

தொடாதே.ன்னு சொன்னா கேட்டுட்டு போவ நான் ஒண்ணும் எங்க அப்பா இல்லை சாப்... கடைல உள்ள பொருள தொடாதேன்னு சொன்னா... கடையைய தொட்டுடுவேன் சாப் (உடைத்தெறிந்துடுவேன்  சாப்)...

சாப்... அந்த பில்டிங் இருக்குல சார்... அங்கே தான் எங்க அம்மா வீட்டு வேல பார்த்தாங்க... ராவும் பகலும்.. பத்து பாத்திரம் தேய்க்கிற வேல... கைல அடிபட்டுடிச்சு... ஒருத்தர் கூட சொல்லல...”சாவித்ரி... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க”ன்னு... எங்க அம்மா கைல துணிய வச்சு சுத்திகிட்டு அப்பவும் தேய்ச்சுகிட்டே தான் இருந்தாங்க... அப்படியே கைல செப்டிக் ஆயிடிச்சு சாப்... அப்ப வந்து சொல்றாங்க... “எதயும் தொடாதே... எதையும் தொடாதே...”  அம்மா என்ன மட்டும் தனியா விட்டுட்டு எறந்து போயிட்டாங்க...”  என்று கோபத்தில் வெடித்து சொல்லும் காட்சி.. (கமலஹாசன் சார் மிஸ் பண்ணிட்டீங்களே..!)

அடுத்து...

சுதாவான வஹிதா ரஹ்மான் வயிற்று வலியில் துடிக்க திலிப்குமார் நடுரோட்டில் ‘கோயி ஹெய்ன்..(யாராவது இருக்கீங்களா?) என்று கதறி துடிக்கும் காட்சி.. 


எஸ்.கே. வர்தனின் புண்ணியத்தால் பத்திரிக்கை ஆபீஸ் எரிந்து.. வாடகை வீட்டிலிருந்து வெளியேறி நடுத்தெருவில் நிற்க நேரிடும் போது மனைவிக்கு தாங்க முடியாத வயிற்று வலி...

அந்த காட்சியை பார்க்க...




அடுத்ததாக.. 

திலிப்குமார் அனில்கபூரை படிக்க ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார். அனில் கபூருக்கு நேர்மையை கற்று கொடுத்த திலிப்குமாரோ மிகப்பெரியா டானாக மாறியிருப்பது தெரிய வருகிறது.. 

இடைவேளை வரை.. திலிப்குமார் நேர்மையாக இருப்பார்... அனில்கபூர் ரவுடியாக இருப்பார்... 

இடைவேளைக்கு பின்பு.. திலிப்குமார் டானாகா மாறி விடுவார்... அனில்கபூர் நேர்மையான பத்திரிக்கையாளராக மாறிவிடுவார்.

இதை பற்றி படத்தில் திலீப் குமார் அனில் கபூரிடத்தில் சொல்லி காட்டுவார், “இது வந்து ஃபுட் பால் மேட்ச் மாதிரி... செகண்ட் ஹாஃபில் இடம் மாறி தான் விளையாடணும்...” என்று

அப்போ திலீப் குமார் தான் மாறியதற்கான காரணத்தை அனில் கபூரிடம் சொல்லி காட்டும் அற்புதம்... வேறு எவராலயும் நடிக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நடிப்பு இருக்கும்... கண்கள், கைகள் எல்லாம் நடிக்கும்...

அந்த காட்சியை பார்க்க...


மும்பையில் கிரேண்ட் ஹோட்டல் அருகில் எடுக்கப்பட்ட இந்த காட்சியை பற்றி ஒரு பேட்டியில் யஷ் சோப்ரா சொல்லும் போது நான்கு நாட்கள் இரவில் போய் எடுத்தோம், எடுத்த 4 நாளிலும் திலிப்குமாரின் கிரேஃப் ஆஃப் எமோஷன்ஸ் அவுட் ஆஃப் லைனுக்கு போகவே இல்லை என்றார்.

இவர் இறுதியாக எடுத்த படமான “ஜப் தக் ஹெய்ன் ஜான் (என் இறுதி மூச்சு உள்ள வரை..) எனும் படம் ஷாருக் கான் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளி வர தயாராய் இருக்கிறது.

சமீபத்தில் சல்மான் நடித்து சக்கை போடு போட்ட ‘ஏக் தா டைகர் (ஒரு சிங்கம் இருந்தது...) என்ற படம் இவரது தயாரிப்பில் வந்த படம் தான்.

யஷ் சோப்ரா எடுத்த படங்களிலேயே மஷால் தான் - மஷால் என்றால் வெளிச்சம் (வழி காட்டுவது) அல்லது தீப்பந்தம் (தீயதை எரிப்பது) என்று பொருள் - எனக்கு மிகவும் பிடித்தமான படம்.

அவரின் சில படைப்புகள் நல்ல வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன..

யஷ் சோப்ரா சாப்..
ரெஸ்ட் இன் பீஸ்...

Friday, July 08, 2011

ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி - ஆனந்த் - பழைய இந்தி பட விமர்சனம் 2

”எழுத்தாளர்கள் நம்மூர்ல நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்காங்க.. முன்னாடிலாம் அவங்க இலக்கிய கூட்டத்துக்கு சைக்கில்ல வந்துகிட்டுருந்தாங்க... இப்ப என்னடான்னா கார்ல எல்லாம் வந்திறங்குறாங்க...” என்கிறார் ஒருவர்

இன்னொருவர், “நானும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள் வச்சிருந்தேன்.. ஆனா, என் கதைய வெளியிடுறதுக்காக அந்த சைக்கிளை வித்துட வேண்டியதா போச்சு..”

தொடர்ந்து வரும் சிரிப்பலையோடு தான் படம் தொடங்குகிறது.
---------------------
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த படத்தை பற்றி எழுத சொன்னால் (அதாவது என்னை நானே எழுத சொன்னால், வேறு யாரு என்னை எழுத சொல்ல போகிறார்கள்? - ஆபிதீன் நானாவை தவிர்த்து) இந்த படத்தின் மொத்த வசனத்தையுமே எழுதுவேன். அவ்வளவு அழுது அவ்வளவு ரசித்து அவ்வளவு பார்த்து அவ்வளவு புரிந்து இருக்கிறேன்.
------------------------

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி முதல் தடவையாக எழுதிய ”ஆனந்த்” என்ற புத்தகத்தை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக ருஸ்டம் டிரஸ்ட் தேர்ந்தெடுத்து சர்ஸ்வதி விருதையும் வழங்குகிறது.

அந்த புத்தகத்தை எழுத உந்துதலாக இருந்த நபரையும் அந்த நபரின் வாழ்க்கையையும் மைக் பிடித்து மக்களோடு அந்த மருத்துவர் பகிர்ந்து கொள்கிறார்.

டாக்டர் பாஸ்கர் பானர்ஜி ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.

கேன்சர் என்பது கொடிய வியாதி. எங்கள் குடும்பத்திலேயே இரண்டு சீதேவிகளை இந்த பாழாப்போன நோய்க்கு பலி கொடுத்து இருக்கிறோம். (தவிர்க்க இயலாத குறுக்கீடு.. சாரி.. )

ஆனந்தை பற்றி டாக்டர் சொல்கிறார்,

”ஆனந்த் நண்பர்களை அதிகம் விரும்புவார்.
செல்லுமிடமெல்லாம் அவர் நண்பர்களையும் நட்பையுமே தேடினார்.
அதனால் தான் இந்த கதையை நான் வெளியிடுகிறேன்.
ஏனெனில் அவரது நட்பு இந்த உலகம் முழுக்க பரவ வேண்டும் என்பதற்காக ...”

டாக்டர் பானர்ஜி அவரது மருத்துவ தொழிலில் சந்தித்த மரணங்கள், வலிகள், துயரங்களை நினைத்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறார்.

அவரால் இருக்கும் வியாதிகளை குணமாக்க முடியாமல் போகும் போது இயலாமையை எண்ணி அவர் மீதே வெறுப்பு கொள்கிறார்.

சிலர் விட்டமின்கள் குறைவாக இருப்பதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது பலர் உணவே இல்லாத தட்டுபாட்டில் வறுமையில் வாடுகையில் - அவர் அதை கட்டுப்படுத்த சரியாத ஆயுதமின்றி மனம் உடைகிறார்.

மருந்து மாத்திரை நோயை குணப்படுத்தலாம். ஆனால் வறுமையை என்ன செய்ய முடியும்? - தவிக்கிறார்.

உப்பு வாங்கவே காசில்லாதவரிடம் மருந்து வாங்க சொல்லி எவ்வாறு கேட்க முடியும்? - அவரே கேட்டுக் கொள்கிறார்

ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து குழந்தை பிறந்ததாக சொல்லி இனிப்புகளும் மிட்டாய்களும் வழங்கிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு வீட்டில் ஒருவர் இறந்து போனதற்காக அழும் குரலும் கசப்புகளும் கேட்டுத் தாங்காமல் புழுங்குகிறார்.

“ஒருவர் இறந்து விட்டார்.. இன்னொருவர் இறப்பதற்கு பிறந்து இருக்கிறார்..” புலம்புகிறார்.

இந்த சமயத்தில் தான் அவர் ஆனந்த் செய்கலை சந்திக்கிறார்.

டாக்டர் பானர்ஜியின் அப்பாவும் மருத்துவர் தான். அப்பாவான அவர் காலத்தில் வாங்கிய வீட்டில் தான் இப்போது மகனான டாக்டரும் வசித்து வருகிறார். அவரை வளர்த்த ரகு காகா என்பவருடன் தங்கி இருக்கிறார். ரகு காக்கா தான் இவரை தூக்கியோ தூக்காமலோ வளர்த்தவர். டாக்டர் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனது கிராமத்திற்கே செல்ல தயாராக இருக்கிறார் இந்த ரகு காக்கா.

டாக்டர் பானர்ஜிக்கு பிரகாஷ் குல்கர்னி என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். பானர்ஜி மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கும் அதே ஊரில் இவர் மருத்துவ தொழில் செய்கிறார். சம்பாதிக்கிறார். வசதியோடு இருக்கிறார்.

இந்த இரு டாக்டர்களுக்கும் டெல்லியில் டாக்டர் திரிவேதியிடமிருந்து ஆனந்த் என்பவரின் மருத்துவ குறிப்புகள் ஊடுகதிர் படங்கள் கடுதாசியோடு கைக்கு கிடைக்கிறது.

ஆனந்த் என்பவருக்கோ ”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்” என்ற வியாதி.

டாக்டர் பானர்ஜி கோபப்படுகிறார், “ஏன் திரிவேதிக்கு தெரியாதா? இதுக்கு தான் மருந்தே இல்லையே? - எதுக்காக இங்கே அனுப்பி விடுகிறார்?” -

"இல்லை, அது ஆனந்துக்கு தெரியாது.. அவர் ஆம்புலேட்டரி ஸ்டேஜில் தான் இருக்கிறார், பம்பாயையும், நம்மையும் பார்க்க வருகிறார்..” என்று பதில் சொல்கிறார்.

ஊடுகதிர் படத்தை போட்டு காட்டுகிறார்.

டாக்டர் பானர்ஜி, “இதுல பார்க்க என்னா இக்கிது? - இன்னும் கொஞ்சம் நாள்ல வயிறு பெருசா வீங்குன மாதிரி போயிடும், கேன்சர் கட்டி வெடித்து விடும், சுவாசம் பாதிக்கப்படும், மிஞ்சி மிஞ்சி போனா, இன்னும் 4 அல்லது 6 மாசம் தான்..”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்ஸ் வந்து கதவை திறந்து ”ஆனந்த்ன்னு யாரோ உங்களை பார்க்க டில்லியிலிருந்து வந்திருக்காங்க..” என்கிறார்

“நாளைக்கில்ல வரணும்..  சரி.. வரச் சொல்..’

அந்த நர்ஸ் சென்று விட, பானர்ஜி “எங்கே தங்குவார்?” என்று கேட்கிறார்

“இங்கே தான்.. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்.. திரிவேதிட நெருங்கிய நண்பர்... இன்னும் 4 மாசம் தானே “

சொல்லிக் கொண்டிருக்கும் போதே... “தோஸ்த்.. “ ஆனந்தின் குரல் காற்றில் ஒலி அலைகளாய் மிதந்து செவிக்கு வருகிறது.

இனி ஆனந்த்தின் பேச்சு பம்பாய் முழுக்க காற்றோடு கலந்து விடுகிறது..

ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே,

நான் சொல்லலையா? நாம மறுபடி சந்திப்போம்ண்டு.. நான் கேள்விபட்டேன், உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னு.. மனைவி எப்படி இருக்காங்க?.. ஜூனியர்... சீனியர்... (குழந்தைங்க...?)..  என்ன நண்பா..? 3 வருஷமாச்சு.. இந்த டாக்டருக்கு ஒரு கம்பவுண்டர் வேண்டாமா?.. நீங்க பேசாம திரிவேதிய கன்சல்ட் பண்ணி பாருங்களேன்..

படபடவென பொறிந்து தள்ளும் ஆனந்தை டாக்டர் பிரகாஷ் அதே அறையிலேயே அமர்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் பானர்ஜிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஆனந்த் புதிய மனிதரை பார்த்ததும்..

“அர்ரே.. பாபுமூஷாய்.. காலேஜ்ல பெண்கள் உங்களை அப்படி தான் கூப்பிடுவாங்க இல்லையா? டாக்டர் திரிவேதி ஒண்ணு விடாம எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி விட்டார்.. காலேஜ்ல எல்லா பெண்களுக்கும் உங்க மேல ஒரு ஆர்வம் பிரியம் இருந்துச்சாம்ல.. இப்ப எப்படி..? ”

பானர்ஜிக்கு இதெல்லாம் பிடிக்காது என்பதை உணர்ந்த குல்கர்னி பேச்சை மாற்றுகிறார், “ஆனந்த்.. நீங்க நாளைக்கி தானே வர்ரதா இருந்திச்சு..?’

ஆனந்த், “அட.. இது என்னோட பழக்கமாவே போயிடிச்சு.. நான் பிறக்கும் போதே டாக்டர் 21 ந்தேதி தான் நான் பொறப்பேன்னு சொன்னாங்க.. ஆனா நான் அதுக்கு முன்னாடியே பொறந்துட்டேன்.. அதே மாதிரி தான்.. இப்போ வந்து டாக்டர் நான் இன்னைக்கி தான் இறந்து போவேன்னு ஒரு தேதி குறிச்சாங்கன்னா.. நான் கண்டிப்பா சொல்றேன்.. அதுக்கு முன்னாடியே எறந்து போயிடுவேன்..”

திடீரென்று ஞாபகம் வந்தவராக.. பிரகாஷிடம் வந்து..

“தோஸ்த்.. என் சாமான்வோ எல்லாம் நான் ஆஃபிஸ் உங்க ரூம்ல வச்சிருக்கேன்.. ஒரு சூட்கேஸ்.. ஒரு டேப் ரெக்கார்டர்.. நான் டிரஸ்லாம் கொண்டுட்டு வந்துட்டேன்.. ஆனாக்கா பெட் கொண்டுட்டு வரலை..”

- கவலை வேண்டாம் எல்லாம் ஏற்பாடு பண்ணி விட்டேன்.. மேலே ரூம் இருக்கு தங்கிக்கலாம்.. உங்களோட எக்ஸ்ரேயை தான் டாக்டர் பானர்ஜி கிட்டே காட்டி பேசிகிட்டு இருந்தேன்..

”அடடே என் படம் தான் இங்கே ஓடிட்டு இருக்கா..?”  பாபுமூஷாய் பக்கம் திரும்பி, “ஏய் பாபுமூஷாய்.. என்ன கிடைச்சிச்சு..?”

”நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.. நான் எல்லாத்தையும் டாக்டர் திரிவேதி கிட்டே பேசிக்கிறேன்..”

“என்ன அதிசயமா இருக்கு.. என்னை பத்தி பேசறீங்க.. நான் எப்படி கவலைப்படாம் இக்கிறது?”

- என்றதும் டாக்டர் பானர்ஜிக்கு கோபம் வருகிறது, “உங்களுக்கு என்னா தெரியனும்?’ என்று கேட்கிறார்

“அட்லீஸ்ட் என்ன வியாதின்னு அதோட பேராச்சும் சொல்லுங்க..”

”வியாதிட பேர தெரிஞ்சிகிட்டு என்னா செய்ய போறீங்க..?” கோபம்..

“ஒண்ணும் செய்ய போறதில்லை.. ஆனா பேரு கண்டிப்பா தெரியணும்..” பிடிவாதம்..

“நான் இப்போ லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்னு சொன்னா உங்களுக்கு ஏதாவது வெளங்குமா?”

”என்னா சொன்னீங்க.. என்னா சொன்னீங்க... திரும்ப சொல்லுங்க..” ஆனந்த் ஆர்வமாகிறார்..

”லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்”

ஆனந்த், “வாவ்.. வாவ்.. என்னா வார்த்தை.. என்னா பேரு.. ஏதோ வைசராயோட பேரு மாதிரில்ல இருக்கு.. என்ன அருமையான வியாதி.. நீங்க அருமையான டாக்டர் பாபுமூஷாய்.. என்னா பேரு.. லிம்போசெர்கோமா ஆஃப் இண்டஸ்டெய்ன்.. விவிதபாரதில வர்ர விளம்பரம் மாதிரியும் இருக்குது பாருஙளேன்..”

டாக்டர் பானர்ஜி கோபத்தோடு எழுந்து, “இது விளையாடுற விஷயமில்ல.. உங்களுக்கு லிம்போசெர்கோமான்னா என்னான்னு தெரியுமா?” இந்த வியாதிய பத்தி தெரியுமா உனக்கு?” - கோபத்தில் வெடிக்க..

ஆனந்த் பயந்து போய், “என் வயித்துல... குணப்படுத்தவே முடியாத ஒரு கட்டி இருக்கு.. அதனால.. நான் 6 மாசத்துக்கு மேல உயிரோடவே இருக்க முடியாது.. இதோட மெடிக்கல் டெர்மா தான் இருக்கணும்.. இல்லையா?” என்று அமைதியாக கேட்க - டாக்டர் பானர்ஜி ஆச்சர்யமாக பார்க்க -

ஆனந்த் தொடர்கிறார், ”இதுக்கு ஏன் திடீர்ன்னு கோவப்படறீங்க.. ஓ..! இப்ப தான் எனக்கு புரியுது.. உங்களுக்கு என் மேல கோவம் இல்ல.. உங்களுக்கு உங்க மேலேயே தான் கோவம்.. என்னய குணப்படுத்த முடியலைல.. அதனால தான்..”

பாபுமூஷாய்க்கு என்ன சொல்வதென்றே விளங்க வில்லை..

“ஏய் பாபுமூஷாய்.. ஏஷா பாலோ பாஷா பாலோ நய் (பெங்காலி வார்த்தை) இவ்வளவு அன்பு நல்லதல்ல (என்று அர்த்தம்).. பாபுமூஷாய் நான் உங்களை மருத்துவ பரிசோதனை செய்ய போறேன்..”

”ஏன்? எனக்கு என்னா?”

கைய குடுங்க.. டாக்டரின் கையை பேஷண்ட் பிடிக்கிறார்

டாக்டர், “பல்ஸ் இங்கே இருக்கு..” என்று காட்ட

 “ஷ்” என்று “எதுவும் பேசக்கூடாது” என்பது போல் சைகை காட்டி விட்டு

“சான்ஸே இல்லை.. பாபுமூஷாய்.. உங்களுக்கு இப்ப என்னா வயசு?”

“30”

”30.. நூத்துல 30 கழிச்சா எவ்வளவு..?”

“70”

“70.. நீங்க இன்னும் 70 வருஷத்துக்கு மேலே உயிர் வாழ முடியாது.. உங்க உடம்புக்கு என்னா வந்திருக்குன்னு தெரியுமா?.. உங்க ஜிஸ்ம்.. உடல்.. சரீரம்.. கொஞ்சம் கொஞ்சமா அழுகிட்டே வருது.. ”

“நீங்க என்னா சொல்ல வர்ரீங்க?”

“70 வருஷத்துக்கும் 6 மாசத்துக்கும் என்னா பெரிய வித்தியாசம் இருக்கு..

மரணம் ஒரு நொடியில வந்துடும்..

நான் இந்த ஆறு மாசத்துல எத்தனையோ லட்சக்கணக்கான கனங்கள் நான் வாழ

நான் அனுபவிக்க முடியும்..

பாபுமூஷாய்..


ஜிந்தகி படி ஹோனி ச்சாயிஹே.. லம்பி நஹி.. (வாழ்க்கை பெருசா (சிறப்பா) இருக்கணும் நீளமா (நிறைய நாள்) இருக்கணும்னு அவசியமில்ல..)

மௌத் பத்திய பயத்த விடுங்க.. மௌத்தின் அடிப்படை எஸ்ஸன்ஸ் என்னன்னு உங்களுக்கு தெரியுமா, தோஸ்த்?


ஜப் தக் ஜிந்தா ஹூன் த்தப் தக் மரா நஹின் ஜர் மரா கயா சாலாஹ்.. மெய்ன் ஹி நஹின் (நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்கு மரணம் கிடையாது.. நான் மரணிக்கும் போது.. மகனே.. நானே கிடையாது) 

இதுக்கு போய் ஏன் பயந்துகிட்டு..”


”என்னய மன்னிச்சிடுங்க.. ஆனந்த சாப்..”

”சாப்.. ஏய்.. பாபுமூஷாய்.. வாழ்க்கை பெருசா இருக்கு.. ஆனா நேரம் குறைவா இருக்கு.. எல்லாத்தையும் கட் பண்ணி வேக வேகமா காரியங்கள முடிக்கணும்.. குறைஞ்ச பட்சம் இந்த சாபுங்குற மரியாதையையாவது கட் பண்ணிக்கலாமே..”

எல்லாம் பேசி கீசி முடிந்து தனது ரூமுக்கு போகும் போது, ஆனந்த் பாபுமூஷாயிடம், “என்ன மன்னிச்சிடுங்க பாபுமூஷாய்.. திரிவேதி சொல்லி தான் அனுபவிச்சார்.. உங்க கிட்டே மஜா கிஜா பண்ண கூடாதுன்னு.. என்ன செய்றது.. பழக்கத்த விடுறது கஷ்டம் தானே.. அவருக்கு எங்கே தெரிய போவுது, ஏன்..?” என்று கண்களை சிமிட்டி மறைகிறார்.

- தொடரும்

இந்த ஆனந்த் பானர்ஜி சந்திப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.. நான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன்.. அதனால் தான் ஒன்று விடாமல் எழுத நேர்ந்து விட்டது..

ஆனந்த் பற்றிய எனது பழைய பதிவுகள்:

http://nagoreismail786.blogspot.com/2011/07/1.html - ஆனந்த் பட விமர்சனம் பகுதி 1


http://nagoreismail786.blogspot.com/2011/03/blog-post.html - மௌத் இந்தி பட காட்சிகள்


http://nagoreismail786.blogspot.com/2011/04/blog-post_27.html - ஆனந்த் திரைப்பட பாடல்கள்

Saturday, January 29, 2011

வாழ்க்கையே என்னை தழுவிக் கொள் - நீ கொடுத்த துயரங்களை முழுமையாக நான் தழுவிக் கொண்டது போல் - குல்ஜார் சாப் பாலுமகேந்திராவுக்காக..

மூன்றாம் பிறை - 


‘மின்னலே நீ வந்ததேனடி.. மண்ணிலே மறைந்து போன மாயம் என்னடி..’ - என்று ஒரு பாடல் வருமே மே மாதம் எனும் படத்தில். அது போல் தான் சீனு வாழ்வில் ஒரு மின்னலாய் வந்து மறைகிறாள் விஜி.


நான் நினைக்கிறேன், கமலஹாசன் கமலஹாசனாக நடிக்காத ஒரே படம் இது தான் என்று. மற்ற எவ்வளவோ பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கலாம், ஆனாலும் அதில் ஏனோ ஆழ்வார் பேட்டை கமல் தெரிவார் ஆனால் இந்த மூன்றாம் பிறையில் மட்டும் தான் அவர் ஊட்டியை சேர்ந்த சீனுவாகவே வசித்திருக்கிறார். 


சீனு அப்பாவித்தனம் நிறைந்த வெட்கம் மிகுந்த ஒரு வாலிபன். வயசுக்கேத்த ஆசை ஆட்டிப்படைக்க அடிமையாகி நண்பனின் அழைப்பில் போக கூடாத இடம் விபச்சார விடுதி செல்கிறான். ஆனால் அங்கே அவன் பார்க்க கூடாத எதையும் பார்க்கவில்லை, பார்க்க வேண்டிய தேவதையை பார்க்கிறான். 


பாக்யலட்சிமி என்ற பெயர் தாங்கியான அவளோ நண்பர்களுடன் பிக்னிக் செல்கையில் கார் ஓட்டி வரும் போது நடந்த விபத்தில் மண்டையில் அடிப்பட்டு அத்தனையையும் மறக்கிறாள். வெறும் ஆறு வயதே நிரம்பிய உள்ளத்துடனும் 18 வயது நிரம்பிய உடலுடனும் இருக்கிறாள். 


மருத்துவமனையில் சரியான கவனிப்பாரற்று அங்கிருந்து வெளியேறி இப்போது யார் கையில் சிக்கியோ இந்த விபச்சார விடுதியில் விஜியாகிறாள்.


‘என் பேரு பாக்யலட்சுமி.. எல்லாரும் ஏன் விஜி என்கிறார்கள்’ என்று கேட்கிறாள். ஏற்கனவே விபச்சாரம் வரை வந்திருந்தாலும் இன்னமும் குழந்தை மனத்துடனே இருக்கும் இந்த பருவ வாலிபன் அதே போல் ஒரு குமரியின் வடிவில் இருக்கும் குழந்தையை கண்டதில் இயல்பாகவே ஒரு நேசக் கயிறு இருவரையும் கட்டி போடுகிறது.


அவளை அழைத்துக் கொண்டு ஊட்டி வரை வந்து விடுகிறான். இப்பொழுது இவர்கள் இருவருக்கு இடையில் உருவான அன்பை மூன்று காட்சிகளில் பிராதனமாக தெரிந்து கொள்ள முடிகிறது.


1. ஒரு முறை சீனு விஜியை கோபத்தில் திட்டி விடுகிறான். அதன் பின்பு வீடு வந்து பார்க்கையில் வீடு திறந்து கிடக்க விஜியை காணவில்லை. வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஊட்டி முழுவதுமே சல்லடையாக தேடுகிறான். 


தேடலின் மிகுதியில் கண்ணீர் சிந்துகிறான், கால் வலிக்க தேடியும் கை நிறைய தோல்விகளோடு வீடு திரும்புகையில் உள்ளே விஜி நிற்கிறாள்.. அந்த கனம்.. அவர்கள் உடலின் தேடலை மீறிய உள்ளத்து தேடல் அங்கே பிரதிபலிக்கின்றது..


2. செப்பில் செய்த சிலையை ஒரு முறை அனுபவித்து விட துடிக்கிறான் ஒருவன். விஜி ஆசையுடன் வளர்க்கும் சுப்ரமணி என்ற நாய் குட்டிக்கு பெல்ட் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி தான் ஆசைக்கு பலியாக்க நினைக்கிறேன்.


அவன் தகாது நடந்து கொள்வதை 6 வயது சிறுமியால் கூட பொறுக்கத் தான் முடியாது, அவனிடமிருந்து தப்பித்து வருகிறாள். விஜியை கிழிந்த ஆடையுடன் பார்க்கும் சீனு செய்தியை தெரிந்து கொண்டு அந்த ஒருவனை தேடி அவன் இடத்திற்கு செல்கிறான். அவனோடு சண்டை பிடிக்கிறான். கோபத்தில் அவனை புரட்டி எடுக்கிறான். 


3. தான் வேலை செய்யும் பள்ளிக்கூட வயதான முதல்வரின் இள மனைவி சீனுவை படுக்கையில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஒரு நாள் அவளுக்கான சந்தர்ப்பம் அமைகிறது. சீனுவை வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு அவன் வருகைக்காக நவநாகரீக உடை அணிந்து நடக்க இருக்கும் அந்த கட்டிலறை காட்சியை கனவில் கண்டபடி அவளது பொன்மேனி உருகித் தான் போய் கிடக்கிறது. (பொன்மேனி உருகுதே பாடலில் கூட கமலஹாசன் தெரிய மாட்டார், சீனு தான் தெரிவார்)


சீனு வருகிறான். நினைத்து பார்க்க வெட்கப்படாதவள் அதை சீனுவிடம் தன் ஆசையை வெளிப்படுத்தவும் வெட்கமோ தயக்கமோ அடையவில்லை. சீனு என்ன தான் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள விபச்சார விடுதி வரை சென்றிருந்தாலும் அவன் இந்த கனத்தில் தனது உண்மையான உள்ளத்து தேவையை உணர்ந்தவனாக ”என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது” என்ற பதிலாள் அவளது ஆசைக்கு அங்கேயே முற்றுப் புள்ளி வைக்கிறான்.

இதற்கிடையில் பாக்யலட்சிமியின் பெற்றோர்கள் தேடிக் கொண்டு ஊட்டிக்கு வர, விஜி குணமாகி அதாவது விஜியாக இருந்த நினைவுகள் எல்லாம் மறந்து போய் பாக்யலட்சிமியாகி தனது பெற்றோருடன் புகை வண்டியில் சென்னைக்கு திரும்புகையில் சீனு தான் காதலித்த விஜியை நினைவு படுத்த கர்ணம் போட்டு நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்க புகைவண்டி அவனது வாழ்க்கையில் வந்த விஜியை போலவே மறைந்து போகிறது.

மூன்றாம் பிறை இறுதி கட்டம்:



எல்லோரும் பார்த்து ரசித்த மூன்றாம் பிறை படத்தை இந்தியில் சத்மா (அதிர்ச்சி) என்று எடுத்தார் பாலுமகேந்திரா. ஒரு நாள் இரவு தூர்தர்ஷனில் நானும் எனது தம்பியும் இந்த படத்தை பார்த்தோம்.

பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மூன்றாம் பிறையில் எடுக்க நினைத்து விடுபட்டதை எல்லாம் சத்மாவில் எடுத்திருக்கின்றோம் என்று.

அப்படி விடுபட்டவை வந்து விடாதா என்று விழித்திருந்து பார்த்து ஏமாற்றமடைந்தோம். எங்களுக்கு எங்கள் மொழி என்பதால் தமிழ் மூன்றாம் பிறை தான் பிடித்திருந்தது என்பதில் எந்த வித சத்மாவும் இல்லை.

சத்மா கிளைமேக்ஸ் சீன்..



ஆனாலும் எங்களுக்கு இந்த இந்தி படத்தில் ‘ஏ ஜிந்தகி’ பாடல் மனதை என்னவோ பண்ணியது. இதோ அந்த பாடல்..




Ae zindegi gale laga le!Hum ne bhi, tere har ik gham ko,
Gale se lagaya hai - Hai na?



வாழ்க்கையே..! 
என்னை 
இறுக்கமாக
அணைத்துக் கொள்..!
(அதாவது ஆதரவாக ஆரத் தழுவிக் கொள் அல்லது என்னை முழுமையாக ஏற்றுக் கொள் என்ற பொருள்கள் அடங்கி கிடக்கிறது)


வாழ்க்கையே..!
நீ வாரி வாரி
வழங்கிய
ஒவ்வொரு 
துயரத்தையும்,
துக்கத்தையும்
நான் 
அணைத்துக் 
கொண்டு விட்டேன்..
இல்லையா..?
(அதாவது வாழ்வில் கிடைத்த துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்து சுகமாக நினைத்து ஏற்றுக் கொண்டு அதிலே பழகியும் விட்டேன்.. அதே போல் வாழ்க்கையே என்னையும் நீ ஏற்றுக் கொள் என்று வாழ்க்கையிடம் முறையிடுகிறான் இந்த அற்புத கவிஞன்.. கவிஞர்களை தவிர வேறு யார் தான் இப்படியெல்லாம் முறையிடுவார்கள்..)
-------------

Hum ne bahane se, chhup ke jamane se
Palkon ke, parde mein, ghar bhar liya.
Tera sahaara mil gaya hai zindegi



ஏ வாழ்க்கையே..!இறக்கையை விரித்து
உலகத்திலிருந்து மறைத்துஇமைகளின் பர்தாவினுள்
என் இல்லத்தினை 
கட்டி வைத்தேன்..


(அப்படி பொத்தி பொத்தி வைத்து எனக்காக ஒரு இல்லத்தினை எழுப்ப..)
உன்னுடைய உதவியும்
கிடைத்தது..
என் அருமையான 
வாழ்க்கையே..!


(வாழ்க்கையோடு என்ன ஒரு அருமையான உரையாடல்..! - 
குல்ஜார் சாப்.. ஹேட்ஸ் ஆஃப்..)

la la lala la la lala la la la...



Tera sahaara mil gaya hai zindegi!


உன்னுடைய உதவியும்
கிடைத்தது..
என் அருமையான 
வாழ்க்கையே..!
--------------
Chhota sa saaya tha, aakhon main aaya tha
Humne do boondon se maan bhar liya
Humko kinaara mil gaya hai zindegi


சிறிய நிழல்
விழியோரம் வந்தது
இரண்டுசொட்டு கண்ணீரில் 
மனம் நிறைந்தது


நான் 
என் கரையை 
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!
La la lala la la lala la la la..

Humko kinaara mil gaya hai zindegi!
நான் 
என் கரையை 
கண்டு கொண்டேன்
வாழ்க்கையே..!--------------------------------------------------------------------------------------------------------
இதே பாடல் தமிழில்..



---------------------------------------------------------------------------------------------------------
இசைஞானி ’ஏ ஜிந்தகி’ டியுனை முதன் முதலில் பயன்படுத்திய ’தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் ’என் வாழ்விலே’ பாடல்..


Wednesday, January 19, 2011

அர்த் (அர்த்தம்) + மறுபடியும்

ஷபனா ஆஜ்மி - ரேவதி

ராஜ் கிரண் (என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் அல்ல) - அர்விந்த்சாமி

கய்ஃபி ஆஜ்மி (ஷபனா ஆஜ்மியின் தந்தை) - வாலி (என்று தான் நினைக்கிறேன்)

ஜக்ஜித் சிங் + சித்ரா சிங் (கணவன் மனைவி) - இளையராஜா

மகேஷ் பட் - பாலுமகேந்திரா





Tum itanaa jo muskuraa rahe ho
Tum itanaa Jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே


kyaa Gam hai jisako chhupaa rahe ho
Kyaa Gam hai jisako chhupaa rahe ho



நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்?
நீ என்ன சோகத்தை மறைத்து வைத்துள்ளாய்? 
(உன் புன்னகையால் அதனை மறைக்கின்றாய்)


Tum itanaa Jo muskuraa rahe ho

நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே

Aankhon Mein Nami, Hansi Labon Par
Aankhon Mein Nami, Hansi Labon Par



விழிகளின் ஓரம் கண்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை
விழிகளின் ஓரம் கன்ணீர் - இதழ்களின் ஓரம் புன்னகை


kyaa haal hai kyaa dikhaa rahe ho
Kyaa haal hai kyaa dikhaa rahe ho



என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?
என்ன ஆயிற்று உனக்கு - எதை வெளிப்படுத்த எத்தனிக்கிறாய்?


Kyaa Gam hai jisako chhupaa rahe ho


என்ன துக்கத்தை தொண்டைக்குள் அடைத்து வைத்திருக்கின்றாய்
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்?)

Tum itanaa Jo muskuraa rahe ho

நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே


Ban Jayenge Zehar Peete Peete
Ban Jayenge Zehar Peete Peete
Yeh Ashq Jo Piye JA Rahe Ho
Yeh Ashq Jo Piye Ja Rahe Ho



கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றாய் - குடிநீரும் விஷமாய் மாறுகிறது உனக்கு
kyaa Gam hai jisako chhupaa rahe ho


அப்படி என்ன துயரத்தை புதைத்து வைத்துள்ளாய்?
(உன் புன்னகையால் மறைக்கின்றாய்)


tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai
Jin Zakhmon Ko Waqt Bhar Chala Hai



காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது
காலம் உன் துயரத்தை மரணிக்க செய்கின்றது

Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho
Tum Kyon Unhe Chhedhe Ja Rahe Ho



நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
நீ ஏன் அதையே நினைத்து (உன் துயரத்தை) உயிர் பிழைக்க வைக்கின்றாய்?
kyaa Gam hai jisako chhupaa rahe ho

அப்படி என்ன துக்கத்தை (உன் புன்னகையால்) மறைக்கின்றாய்

tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே
Rekhaon Ka Khel Hai Muqaddar
Rekhaon Ka Khel Hai Muqaddar



வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
வாழ்க்கை என்பது கைரேகை எனும் விதியின் விளையாட்டு
Rekhaon Se Maat Kha Rahe Ho
Rekhaon Se Maat Kha Rahe Ho



நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
நீ விதியை எதிர்க்காமலே தோற்று போகின்றாய்
tum itanaa jo muskuraa rahe ho


நீ புன்னகை பூக்கின்றாய் சற்று அதிகமாகவே

kyaa Gam hai jisako chhupaa rahe ho


அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?
அப்படி என்ன ஒரு சோகத்தை உள்ளத்தில் புதையலாக்கினாய்?


-----------------------------------------------------------------------------





-------------------------------------------------------------------------------


உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?

Tuesday, February 16, 2010

மாவ்சம் - (காலங்கள் - Season) - பழைய இந்தி பட விமர்சனம்

முதலில் கீழே வரும் இந்த பாட்டை கேளுங்கள் (பாருங்கள்). மாவ்சம் என்ற படத்தில் எழுத்தில் வரும் பாடல் இது. பூபிந்தரின்  ஆழமான குரலிலிருந்து நம்மை ஆளும் அருமையான கஜல், இந்த பாடல்.  வைரமுத்து 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்று எழுதினார். இந்த கஜல் 'செவியில் விழுந்து டைரக்டாக ஆன்மாவில் நுழைந்து' விடும்.

பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.

மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்



பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?

- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்

வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார்.  டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.

இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.

வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்

ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.

27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.

வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.




சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.

கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.

அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.

அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.

அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.




இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த  வீட்டில்  தங்கியிருக்கும்  சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.

தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு    சென்றது,  தனது  தாயாரின்  நிலைக்கு  காரணமான  டாக்டரின்  மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.

கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.

டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்

'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்

டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.

கில் கஜிலியிடம்  'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.

டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.

கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.




இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.

குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.

இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.

சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.

படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.

காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்

இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.

Sunday, January 31, 2010

இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்

குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம் 

இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....



இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.

நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை,  அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).

இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.

அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது  நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.

அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும்  அந்த நபருடன் உள்ளே நுழைகிறான். அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின்  ராஜிவ்  காந்தியின்  புகைப் படத்தையும்   'எ  டயலாக்  வித்  ராஜிவ்  காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.

அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.

எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.

இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது 
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப்  பார்க்கிறான்,  உறங்கிக்  கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க  அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்

பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.

இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.

ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.

மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.

கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.

'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.

அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.

'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்

அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று

அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.

முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு 

பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.

இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,

'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.

இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான  'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!

அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.

தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.

அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.

அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.

மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.

இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்

மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.

இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.

'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.


அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.

அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.

அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.

தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.

'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்

'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்

போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்

அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்

ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.


மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!

அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.

மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது

மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'

தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்

இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்

இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.

அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்

மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.

இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.

சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.

சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு..  என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.

மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்

'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.

'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்

அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.