தீவிரவாதிகள் பிறப்பதில்லை - வலிய போய் துயரங்களை கேட்டு பெறவுமில்லை - அவர்கள் நம்மை போல் வீட்டில் தெருவில் வியாபாரத்தில் சுற்றி வந்தவர்கள் தான் - விதிக்கப்பட்ட சூழலின் காரணமாக துயரம் நிறைந்த துக்கம் கனக்கின்ற வாழ்க்கையில் வாழும் இவர்கள் தாங்கள் எதையெல்லாம் விட்டு விட்டு வந்திருக்கிறோம் என்பதை திரும்பி பார்க்கிறார்கள்
திரை: மாச்சிஸ்
http://www.nagoreismail786.blogspot.com/2009/12/blog-post_18.html
Chhod aaye hum woh galiyaan
அந்த தெருவினை
அப்படியே
விட்டுவிட்டு
வந்துவிட்டோம்
Jahan teri pairon ke
kamal gira karti thi
Hanse to do gaalon mein
bhanwar pada karti thi
Teri kamar ke bal pe
nadi muda karti thi
Hansi teri sun sun ke
fasal paka karti thi
எந்த தெருவில்
நம்
பாதம் பட்டவுடன்
தாமரை மலர்கள்
மலர்ந்தனவோ
எந்த தெருவில்
நாம்
மகிழ்ந்து திரிந்து
சூறாவளியாய்
சுற்றி வந்தோமோ
எந்த தெருவில்
உனது
இடுப்பின் வளைவின்
வழியே
நதிகள் ஓடிபாய்ந்ததோ
எந்த தெருவில்
உனது
புன்னகையில்
பயிர்கள்
அறுவடை செய்யப்பட்டதோ
அந்த தெருவினை
அப்படியே
விட்டுவிட்டு
வந்துவிட்டோம்
Jahan teri edi se
dhoop uda karti thi
Suna hai us chaukhat pe
ab shaam raha karti thi
Laton se uljhi lipti
ek raat hua karti thi
Kabhi kabhi takiye pe
wo bhi mila karti hai
எங்கே நம்மக்கள்
சுற்றம்சூழ
சூரிய வெப்பத்தில்
கூடி மகிழ்ந்திருந்தோமோ
அந்த தெரு
வீட்டின் தலைவாசல்
பற்றி
நான் இப்போது
கேள்விப்படுகிறேன்..
அது
எப்போதும்
இருளின் மையநிழலில்
இருண்டு கிடக்கிறதாம்
ஓர் இரவு
ஒன்று
கால்களோடு
சிக்கிக் கொண்டு
மடித்து
வைக்கப்பட்டிருக்கிறது
Dil dard ka thukda hai
pathar ki dali si hai
Ek andha kuan hai ya
ek band gali si hai
Ek chhota sa lamha hai
jo khatm nahin hota
Main laakh jalata hoon
yeh bhasm nahin hota
இதயம்
வலிகளின் குவியலால்
உடைகிறது
உடைந்து
உடையாத கற்களாய்
உருமாறியது
ஒரு
நீரில்லாத
ஆழமான கிணறு
ஒரு
இருளசூழ் குறுக்குபாதை
ஒரு சிறிய
கனம்
ஒன்று உள்ளது
அந்த கனம்
இன்னும்
முடியவே இல்லை
அந்த கனம்
எவ்வளவு தான்
எரிக்க முற்பட்டாலும்
எரிந்து போக
மறுக்கிறது