இஜாஜத் - குல்ஜார் சாப் எழுதிய இந்த திரைக்கவிதை எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு ஒரு வகையில் நெருக்கமான ஒன்றும் கூட.
சுதா நினைவு தெரியாத போதே மஹிந்தர் தான் தனது கணவன் என்று நினைத்து வளர்ந்தவள். நினைவு கைகூடும் தருவாயில் ஒரு நாள் தனது வாசலில் வருகிறான்.
மஹிந்தர், தானும் ஒரு பெண்ணும் திருமணம் ஆகாமலே சேர்ந்தே ஒரே வீட்டில் இருப்பதாக சொல்லி சுதாவின் கனவுக் கூட்டை கலைத்தவுடன் - சுதா கலவரம் அடையாமல் கதறி அழாமல் அவனை புரிந்து கொள்ள முற்படுகிறாள். ஆசிரியை அல்லவா அவள்..?
மஹிந்தரோடு சேர்ந்திருக்கும் அந்த பெண் மாயா எனும் சுதந்திர பறவையோ உத்திரவு வாங்காமலும் வார்த்தை சொல்லாமலும் வானம் நீட்டி சிறகை விரிக்கிறாள். பரந்த வானத்தில் பறந்த அவளை பார்க்கவே முடியவில்லை.
மஹிந்தர் சுதா இருவரது திருமணம் இந்த சூழ்நிலையில் இருவரது தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் மேடை ஏறுகிறது.
பறந்து சென்ற பழைய பறவை கூடு தேடி மீண்டும் வருகிறது.
மாயாவல் மஹிந்தரின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் மஹிந்தரிடம் தான் பெற்று வந்த அன்பை மீண்டும் பெற வேண்டும் என்றும் பிடிவாதம் இருக்கிறது.
மஹிந்தர் மாயாவை மறப்பதென முடிவெடுக்கிறான். இருந்தும் பல தவறான புரிதல்களால் சுதா மஹிந்தரை பிரிய நேர்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு...
புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறையில் பொழிகின்ற மழை ஈரத்தின் வாசனை அவர்களின் பழைய வாழ்க்கை நினைவுகளை கிளறி விடுகிறது.
ஒரு கட்டத்தில் காட்சியானது காத்திருப்பு அறையிலிருந்து கல்யாணம் தந்த பழைய மகிழ்ச்சியான தருணங்களை பின்நோக்கி இழுத்து செல்கிறது..
சுதாவிற்கு தெரியும் தனது கணவரான மஹிந்தர் மாயாவை காதலித்தவன் என்று. இருந்தாலும், தான் சிறிய வயதிலிருந்து கனவு கண்டு வந்த காதலனோடு இருக்கும் அந்த கனத்தில் லயிக்கிறாள். இந்த கனம் வருங்காலத்தில் தொடர வேண்டும் என்றும் தனது வாழ்க்கை முழுதும் இந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்றும் கவிபாடுகிறாள்.
சுதா நினைவு தெரியாத போதே மஹிந்தர் தான் தனது கணவன் என்று நினைத்து வளர்ந்தவள். நினைவு கைகூடும் தருவாயில் ஒரு நாள் தனது வாசலில் வருகிறான்.
மஹிந்தர், தானும் ஒரு பெண்ணும் திருமணம் ஆகாமலே சேர்ந்தே ஒரே வீட்டில் இருப்பதாக சொல்லி சுதாவின் கனவுக் கூட்டை கலைத்தவுடன் - சுதா கலவரம் அடையாமல் கதறி அழாமல் அவனை புரிந்து கொள்ள முற்படுகிறாள். ஆசிரியை அல்லவா அவள்..?
மஹிந்தரோடு சேர்ந்திருக்கும் அந்த பெண் மாயா எனும் சுதந்திர பறவையோ உத்திரவு வாங்காமலும் வார்த்தை சொல்லாமலும் வானம் நீட்டி சிறகை விரிக்கிறாள். பரந்த வானத்தில் பறந்த அவளை பார்க்கவே முடியவில்லை.
மஹிந்தர் சுதா இருவரது திருமணம் இந்த சூழ்நிலையில் இருவரது தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் மேடை ஏறுகிறது.
பறந்து சென்ற பழைய பறவை கூடு தேடி மீண்டும் வருகிறது.
மாயாவல் மஹிந்தரின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் மஹிந்தரிடம் தான் பெற்று வந்த அன்பை மீண்டும் பெற வேண்டும் என்றும் பிடிவாதம் இருக்கிறது.
மஹிந்தர் மாயாவை மறப்பதென முடிவெடுக்கிறான். இருந்தும் பல தவறான புரிதல்களால் சுதா மஹிந்தரை பிரிய நேர்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு...
புகைவண்டி நிலையத்தின் காத்திருப்பு அறையில் பொழிகின்ற மழை ஈரத்தின் வாசனை அவர்களின் பழைய வாழ்க்கை நினைவுகளை கிளறி விடுகிறது.
ஒரு கட்டத்தில் காட்சியானது காத்திருப்பு அறையிலிருந்து கல்யாணம் தந்த பழைய மகிழ்ச்சியான தருணங்களை பின்நோக்கி இழுத்து செல்கிறது..
சுதாவிற்கு தெரியும் தனது கணவரான மஹிந்தர் மாயாவை காதலித்தவன் என்று. இருந்தாலும், தான் சிறிய வயதிலிருந்து கனவு கண்டு வந்த காதலனோடு இருக்கும் அந்த கனத்தில் லயிக்கிறாள். இந்த கனம் வருங்காலத்தில் தொடர வேண்டும் என்றும் தனது வாழ்க்கை முழுதும் இந்த மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்றும் கவிபாடுகிறாள்.
Qatra-qatra milti hai
qatra-qatra jeene do
Zindagi hai (zingadi hai - inner voice)
Bahne do (bahne do - inner voice)
Pyaasi hoon main
Pyaasi rahne do
Rahne do, na...
துளித்துளியாய்
கடந்து செல்கின்றது
அவ்வாறே
கடந்து செல்லட்டும்
இதுதான் வாழ்க்கை
இவ்வாறே
கடந்து செல்லட்டும்
என்னை
தாகத்தில்
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்
அப்படியே ஆகட்டும்
(மன்னிக்கவும்: இவ்வளவு மட்டமான ஒரு மொழிபெயர்ப்பை வேறு எங்கேயும் படித்திருக்க முடியாது. இதை எப்படி தமிழில் அழகாக்குவது என்று தெரியவில்லை. சரி நானே எழுதி நானே படிக்கும் பாடல் தானே.. அப்படியே இருந்து விட்டு போகட்டும்..)
(அதாகப்பட்டது சுதா சொல்கிறாள்:
மஹிந்தரோடு இருக்கும் பொழுதுகள் எப்படி கழிகின்றது என்றால் ஒவ்வொரு துளியாய், ஒவ்வொரு விநாடிக்கும் குறைவான நேரமாய் அனுபவிக்கப்பட்டு அவளை விட்டு கடந்து செல்கிறதாம்.
இது தான் அவள் தேடிய வாழ்க்கையாம்..
இப்படி அந்த நேரங்கள் கடந்து செல்லும் போது, தனது காதல்கணவர் யாரிடமும் பங்கு போடாத தனக்கு மட்டுமே உரித்தான பிரியத்தை வழங்க வேண்டும், நேரத்தை கழிக்க வேண்டும் என்று தாகம் அதாவது தேடல், தவிப்பு பிறக்கின்றதாம், அவ்வாறே மனம் அந்த பிரியத்தை தேடி தவிக்கட்டும் என்று கவிமழை பொழிகிறாள்.
இதே போல் கீழ் வரும் வரிகளுக்கும் அர்த்தம் போட்டு விளங்கிக் கொள்ளவும் என்று வாசிக்கும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்)
Kal bhi to kuchh aisa hi hua tha
Neend mein thi, tumne jab chhua tha
Girte-girte baahon mein bachi main
Sapne pe paaon pad gaya tha
Sapnon mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do
நேற்று
எனக்கு
நேர்ந்தது என்ன
என்று
நீ அறிவாயா?
துயில்கொண்டு
நான்
இருந்த போது
உன் தொடல்
உணர்ந்தேன்..
நான்
கையிலிருந்து
தவறி விழும்
குழந்தையை போல்
விழுந்து விட்டேன்
அவ்வாறு
தவறி
ஒரு கனவில்
விழுந்து விட்டேன்
அந்த
கனவு வாழ்விலேயே
நான்
வாழ்ந்து விட
வேண்டும்
என்னை
தாகத்தில்
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்
அப்படியே ஆகட்டும்
Tumne to aakaash bichhaaya
Mere nange pairon mein zameen hai
Paa ke bhi tumhari arzoo ho
Shayad aise zindagi haseen hai
Arzoo mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do
நீ
பறப்பதற்கு
ஆகாயம் அமைத்தாய்
நானோ
வெறுங்காலோடு
பூமியில்
நிற்கிறேன்
நான்
உன்னோடு
இருக்கும் போது
தான்
உன்னை
அதிகமாக தேடுகிறேன்
உன்னுடனான
இந்த வாழ்வு
மிக அழகானது
அந்த
தேடல் வாழ்விலேயே
நான்
மூழ்கி விட
வேண்டும்
என்னை
தாகத்தில்
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்
அப்படியே ஆகட்டும்
Halke-halke kohre ke dhuen mein
Shaayad aasmaan tak aa gayi hoon
Teri do nigaahon ke sahaare
Dekho to kahaan tak aa gayi hoon
Kohre mein, bahne do
Pyaasi hoon main
Pyaasi rahne do
மூடுபனியின்
புகை நடுவே
வெளிச்சம் தேடி
அலைந்தேன்
நான்
தூரம் அறியாமலே
ஆகாயத்திற்கே
வந்தடைந்து விட்டேன்
உனது கண்கள்
காட்டிய பாதையில்
என் கால்கள்
எங்கே
வந்து விட்டது
பார்..!
அந்த
மூடு பனியிலேயே
நான்
கரைந்து விட
வேண்டும்
என்னை
தாகத்தில்
ஆழ்த்தி விடுகிறது
இப்படியே
என்னை
தாகத்தில் தவிக்க
விடட்டும்
அப்படியே ஆகட்டும்
----------------
குரல்: ஆஷா (இந்த பாடலில் ஆஷா இரு குரல்களில் பாடுவது போல் மிக்ஸிங் செய்யப்பட்டிருக்கிறது).
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஆர்.டி.பர்மன்