Saturday, May 12, 2012

தலைமீது இறைகாதலின் நிழலுடையோரின் பாதங்களின் கீழ் சொர்க்கம் உள்ளது - தில்சே பட குல்ஜார் சாபின் பாடல்


இந்த பாடலை பற்றி இங்கே அருமையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

இங்கே:  http://pirapanjakkudil.blogspot.com/2012/03/1.html

ஆனா, அதுக்காக என் பாணியில் மொழி(பெயர்)கெடுக்காமல் விட்டுவிட முடியுமா?

இதோ...

இது ஒரு அருமையான சூஃபியிச பாடல். சூஃபியிச மரபில் இறைக் காதலை பெண்ணின் மீதான காதலோடு ஒப்பிட்டு எழுதப்படுவதுண்டு.

தூய்மையான நேசத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட காதலை பற்றி இங்கே உதாரணமாக வைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாவிட்டால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையாவது புரிந்து கொள்ள முற்பட வேண்டுகிறேன்.

Jinke sar ho ishq ki chaaon
Paaon ke neeche jaanat hogi
Jinke sar ho ishq ki chaaon


எவரின்  எண்ணங்களில் (தலைமீது)
இறைகாதலின் நிழல் 
உள்ளதோ
அவருடைய பாதங்களின் கீழ் 
சொர்க்கம் உள்ளது    

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X 4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே..

Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Voh yaar hai jo khushboo ki tarah
Voh jiski zubaan urdu ki tarah

நேசத்திற்குறியவன்...
காற்றில் கலந்த
நறுமணத்தை 
போன்றவன்

நேசத்திற்குறியவன்..
பேசும் பேச்சு
உருதுகவிதையை
போன்றது

Meri shaam raat, meri kaayanat
Voh yaar mera sainya sainya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X3)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே..  

Gulposh kabhi itraaye kahin
Mehke to nazar aa jaaye kahin
(X2)
பார்க்கும்
பூக்களின் நிறங்களில்
மறைந்திருப்பதும்
அவனது அடையாளமே
பூக்களின் நறுமனமாய்
காற்றில் கலந்திருப்பதும்
அவனது அடையாளமே

Taaveez banaake pehnoon usay
Aayat ki tarah mil jaaye kahin
(X2)

அவனை
காணும் பாக்கியம்
கிட்டினால்
புனிதமான குரான் ஷரீஃப்
வசனங்களை
தாயத்தாக்கி
அணிந்து கொள்வது
போல் 
அவனையே 
அணிந்து கொள்வேன்
நான்

Gulposh kabhi itraaye kahin
Mehke to nazar aa jaaye kahin


பார்க்கும்
பூக்களின் நிறங்களில்
மறைந்திருப்பதும்
அவனது அடையாளமே
பூக்களின் நறுமனமாய்
காற்றில் கலந்திருப்பதும்
அவனது அடையாளமே

Taaveez banaake pehnoon usay
Aayat ki tarah mil jaaye kahin

அவனை
காணும் பாக்கியம்
கிட்டினால்
புனிதமான குரான் ஷரீஃப்
வசனங்களை
தாயத்தாக்கி
அணிந்து கொள்வது
போல் 
அவனையே 
அணிந்து கொள்வேன்
நான்

Voh yaar hai jo imaan ki tarah
Mera nagma vohi mera qalma vohi
Mera nagma nagma mera qalma qalma

எனது 
அந்த நேசத்திற்குறியவன்
அவன் மீதே
நம்பிக்கை வைத்தேன்
அவன் பெயரையே
இன்னிசைத்தேன்
அவன் இருப்பையே
சாட்சியம் செய்கிறேன்
அவனே எனது இன்னிசை
அவனே எனது சாட்சியம் (எனும் திருமந்திரம்)


Mera nagma nagma mera Qalma Qalma
(X3)
அவனே எனது இன்னிசை அவனே எனது சாட்சியம் (எனும் திருமந்திரம்)

Yaar misaal-e-ous dhale
Paaon ke tale firdaus chale
Kabhi daal daal kabhi paat paat
Main hava pe dhoondhoon uske nishaan

அவனை காண்பது
சிரமமே
அவன் பனித்துளியை
போல் 
தோன்றி மறைபவன்
சில நேரங்களில்
தோன்றுபவன்
சில நேரங்களில்
(கண்களிலிருந்து) மறைபவன்
(அவனை தேடி அடைவது சிரமம் தான், அவனை காண்பது என்பது கடினம் தான் - எனினும்)
அவனது அடையாளத்தை
காற்றில் தேடியே 
தான்
எனது பயணத்தை

சொர்க்கத்தின் பாதையில்
தொடர்கிறேன்



Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Main uske roop ka shehdaai
Vo dhoop chhanv se harjaai
Vo shokh hai rang badalta hai
Main rangroop ka saudaai (X2)

நான் அவனது
அழகின்
காதலன்

அவனோ
வெயிலாகி
நிழலாகி
புதிரானவன்

ஒவ்வொரு
ஒளிமயமான
வர்ணங்களிலும்
மாறி மாறி
வருபவன்

அந்த வர்ணத்தோடும்
அந்த அழகோடும்
மட்டுமே
எனது வியாபாரம்
எனது சிந்தனை
எல்லாம்...

Jinke sar ko ishq ki chhaaon
Paaon ke neeche jannat hogi
(X2)

எவரின்  எண்ணங்களில் (தலைமீது)

இறைகாதலின் நிழல் 
உள்ளதோ
அவருடைய பாதங்களின் கீழ் 
சொர்க்கம் உள்ளது  

Meri shaam raat meri kaaynaat
Vo yaar mera sainya sainya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya  (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Saare ishq ki chhaaon chal chaiyya chaiyya
Saare ishq ki chhaaon chal chaiyya


அனைவரும் 
அந்த காதலின் 
பாதையில் செல்லுங்கள்

Pau janat chale chal chaiyya chaiyya
Pau janat chale chal chaiyya


சொர்க்கத்தின் 
பாதையில் இருப்பதை
உணர்ந்து கொள்வீர்கள்

Chal chaiyya chaiyya chaiyya chaiyya  (x4)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Voh yaar hai jo khushboo ki tarah
Voh jiski zubaan urdu ki tarah

நேசத்திற்குறியவன்...
காற்றில் கலந்த
நறுமணத்தை 
போன்றவன்

நேசத்திற்குறியவன்..
பேசும் பேச்சு
உருதுகவிதையை
போன்றது

Meri shaam raat, meri kaayanat
Voh yaar mera saiyya saiyya

அவனே 
என் பகல்
அவனே
என் இரவு
அவனே
எனது உலகம்
அந்த நேசத்திற்குறியவனே
எனது வாழ்க்கைதுணை

Chal chaiyya chaiyya chaiyya chaiyya (X10)

எனவே நடந்து செல்லுங்கள்.. அந்த நிழலின் கீழேயே.. 

Tuesday, May 08, 2012

என்னை உயிர் என்று அழைக்காதே - அனுபவ் பட குல்ஜார் சாபின் பாடல்

An intimate yet decent song... 


My favourite..


நடிப்பு:


சஞ்சீவ் குமார் 
தனுஜா (நடிகை காஜோலின் தாயார்)


பாடியவர்: 


கீதா தத் - http://en.wikipedia.org/wiki/Geeta_Dutt





------------------------
Meri Jaan
Mujhe Jaan na kaho
Meri Jaan
Meri Jaan


என்னில் நெருக்கமானவரே..!
என்னை உயிரென்று
அழையாதிரும்..!
என்னில் நெருக்கமானவரே..!
என்னில் நெருக்கமானவரே..!


Jaan na kaho
anjaan mujhe
Jaan kahan 
rahti hai sada


அறியாமலே 
என்னை
உயிரென்று 
அழைத்திடாதே..!
உயிர் எங்கே
நிரந்தரமாக
தங்குகிறது?


Anjaane kya jaanein
Jaan ke jaaye kaun bhalaa


என் உயிர்
அழைப்பது
அறியாமலே
எங்கே 
சென்று விட்டாய்?


நீ செல்வதற்கு
பதிலாக
என்உயிர்
பிரிந்து
செல்வதே
மேலாக 
தோன்றுகிறது


Sookhe Saawan
baras gaye
Itni baar 
In aankhon se


எத்தனையோ முறை
என் கண்களை
கடந்து
வறண்ட வசந்தம்
பயணித்திருக்கிறது


Do boondein na barsein
ini bheegi palkon se


என் கண்ணிமை
இரண்டு சொட்டு 
கண்ணீரை கூட
என்
ஈர கண்களை
விட்டு
விலக விடவில்லை
------------------------------------------
Honth jhookein
jab hothon par
Saans uljhi ho
Saason mein


இதழ் 
இதழோடு
நெருங்குகையில்
சுவாசம்
சுவாசத்தோடு
கலந்திருக்கையில்


Do judwaa
hoton ki
baat kaho
aankhon se


இரட்டை பிறவியான
இதழ்கள் 
சொல்ல நினைப்பதை
இரட்டை பிறவியான
கண்கள்
மொழிபெயர்த்து
சொல்லட்டும்..!

Wednesday, May 02, 2012

உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் இறந்தவர்கள் உயிரோடிருக்கிறார்கள்

நாகூரில் வாழ்ந்து கொண்டிருக்கிற பாதுஷா நாயகமவர்களின் நினைவு தினம்  அவர்களை பெரிதும் மதித்து போற்றும் என் போன்றவர்களால் நேற்றைய/ இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

யாரையுமே மதிக்காமல் பேசும் போக்கு இன்று நம்மில் பலரிடையே வந்திருக்கிறது. இவர்களின் கேலி பேச்சு யாரையும் விட்டு வைக்கவில்லை, அவர்கள் அலி (றலி) அவர்களையே “எடுப்பார் கைப்பிள்ளை” என்று மிக சாதாரணமாக சொல்லி விட்டார்கள்.

இவர்களுக்கு இறை நேசர்கள் எல்லாம் எம்மாத்திரம்? இவர்கள் தொடுக்கும் கேள்விக் கனைகளில் சில..

குரான் ஷரீஃபிலோ பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீதிலோ ஒருவரை இறை நேசர் என்று அடையாளப் படுத்தியிராவிட்டால் நாங்கள் ஒருவரின் வரலாற்றையோ அல்லது வாழ்க்கை குறிப்பையோ படித்து விட்டு இவர் இறை நேசர் என்ற முடிவுக்கு வர முடியாது?

ஒருவர் இறைநேசர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அதை அல்லாஹ் தான் சொல்ல வேண்டும், அதாவது ஆதாரம் வேண்டும்? 

துறவி எனும் போர்வையில் ஒரு நடிகையிடம் சல்லாபம் புரிந்த நித்தியானந்தாவை போல் இறை நேசர்கள் எனும் பெயரோடு மண்ணறைகளில் உள்ளவர்கள் வாழ்ந்திருந்தால்...? 

அப்படியே அவர்கள் இறை நேசர்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இறந்து விட்டார்கள்.. ஆகையினால் இந்த உலகத்தோடு அவர்களுக்கு தொடர்பு இல்லை.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். இறந்தவர்களிடம் சென்று உயிரோடிருப்பவர்களிடம் உதவி தேடுவது போல் உதவி தேடக் கூடாது. இறந்த பிறகும் ஒருவருக்கு உயிரோடிருந்து உதவி செய்ய முடிகிறது என்று நம்பினால் அது ஷிர்க் ஆகும்.

மண்ணறைகளில் உள்ளவர்களை பெருமானார் (ஸல்) அவர்களே கூட செவியேற்க வைக்க முடியாது.

(இதற்கு ஆதாரம்:

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது)

ஆக, பெருமானாராலேயே (ஸல்) அவர்களாலேயே கேட்க வைக்க முடியாத மண்ணறை வாசிகளிடம் போய் ‘எனக்கு இத செஞ்சு கொடுங்க..” என்று அல்லாஹ் அல்லாதவர்களிடம் அல்லாஹ் மட்டுமே முடித்து கொடுக்கக் கூடிய காரியங்களை ஒப்படைப்பது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.

- எனக்கு இவர்கள் அலி (றலி) அவர்களை அப்படி பேசியதையோ இன்னும் கௌது நாயகம் (றஹ்) அவர்களை ஏக வசனத்தில் அவர் இவர் என்று பேசியதையோ இறை நேசர்களை நம்பாமல் போவதை பற்றியோ அல்லது வேறெதையும் பற்றியோ நமக்கு விமர்சனம், எதிர்ப்பு இருந்தாலும் அதை பற்றி பேசப் போவதில்லை.

ஆனால் மேலே வரும் குரான் ஷரீஃபில், “நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..” என்ற வாக்கியத்தை எப்படி விளங்க வேண்டும் என்பதில் எனது புரிதலை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன்.

குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை மட்டும் மறுபடியும் எழுதுகிறேன்..

நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது..

- இது தான் அந்த வாக்கியம். 

இப்படி நினைத்து பாருங்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் இறந்து போனவர்களிடம் அதாவது கப்ரில் அடங்கியிருப்பவர்களிடம் நான் போய் இஸ்லாத்தை போதிக்கலாமா? என்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் என்று வையுங்கள்.

உடனே இறைவன் மேலே கூறிய வசனத்தை சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி கேட்டு இருப்பார்களா என்று இந்த வசனம் தொடர்பான தப்ஸீர்களை படித்து பார்த்தால் அப்படி ஏதும் அவர்கள் கேட்கவில்லை.

அல்லது இப்படி இருக்குமோ...?

”கப்ரில் உள்ளவர்களை நான் பேச வைக்கிறேன்” என்று யாரிடமாவது வாக்குறுதி அளித்து விட்டு ”அப்படி நான் கேட்க வைக்க வேண்டும்” என்று இறைவனிடம் துவா ஏதும் கேட்டுள்ளார்களா என்று பார்த்தால் அப்படியும் ஏதும் நடைபெறவில்லை.

பிறகு ஏனிந்த வாக்கியம், “நீர் மரித்தோர்களை கேட்கும்படிச் செய்ய முடியாது...”

இதற்கு முந்தைய வாக்கியங்களை தொடர்பு படுத்தி பார்ப்பதோடு பெருமானார் (ஸல்) அவர்களின் குணங்களையும் தொடர்பு படுத்தி சிந்தித்து பார்த்தால் ஒரு வேளை விளங்கி விடும் என்று நினைக்கிறேன்.

உதாரணமாக இதற்கு முந்தைய 79வது வாக்கியத்தை படித்து பார்ப்போம்.

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 79வது வாக்கியம்

எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான் உண்மையின் மீது இருக்கின்றீர்.

இந்த வாக்கியத்தில் இரண்டு செய்திகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சொல்கிறான்.

1. எனவே, அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக

 - அதாவது, உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் ’நேரான வழிக்கு’ அழைப்பது என்பதை பலரும் தட்டி கழிக்கிறார்கள் என்று கவலை கொள்ள வேண்டாம், அல்லாஹ்வின் மீதே உங்களின் எல்லா காரியங்களிலும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அழைப்பு பணி விடுத்துக் கொண்டே இருங்கள்.

2. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்

- அதாவது அவர்களிடம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளோடு வந்த போது அவர்கள் எதிர்ப்பதனால் உங்களை (பெருமானார் (ஸல்) அவர்களை) பொய்யை கொண்டு வந்திருக்கிறீர் என்று சொல்வதனால் எல்லாம் நீங்கள் பொய்யுரைத்தவர் ஆக மாட்டீர்கள், மாறாக, நிச்சயமாக நீங்கள் தெளிவான உண்மையின் இஸ்லாத்தின் மீது இருக்கின்றீர்.

ஆக, பெருமானார் (ஸல்) அவர்கள் ரொம்ப கவலைப்படுகிறார்கள், ‘என்னா இது? மக்கள் நேரான பக்கம் வர மாட்டேங்கிறார்களே.. நம்மை ஏற்காததோடு நமக்கு எதிராக சூழ்ச்சியும் அல்லவா செய்கிறார்கள்..” என்று..

இதே அத்தியாயத்தில் 70 வது வாக்கியத்தை கவனியுங்கள்

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 70வது வாக்கியம்

அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியை பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்

இதை அப்படியே வச்சுகிட்டு நாம் மேலே எடுத்துக் கொண்ட வாக்கியத்தை படித்து பாருங்கள்

இந்த கட்டத்தில் தான் இறைவன் சொல்கிறான்..

குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 80வது வாக்கியம்

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும் போது - அழைப்பை கேட்கும் படி செய்ய முடியாது




குரான் ஷரீஃப்
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) - 
27வது அத்தியாயம் - 81வது வாக்கியம்


இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்வர்.

ஆக, 80ம் வாக்கியத்தையும் 81வது வாக்கியத்தையும் கவனித்து படித்து பாருங்கள். 

”நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது” என்றால் என்ன அர்த்தம் என்றால், உங்களின் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் அல்லவா அவர்கள் மரித்தவர்கள் போலாவார்கள்.

உங்கள் பேச்சை எவர்கள் புறங்காட்டித் திரும்பி விடுகிறார்களோ அவர்கள் தான் செவிடர்கள்.

உங்களின் அத்தாட்சிகளை எவர்கள் காண வில்லையோ அவர்கள் தான் குருடர்கள்

இந்த மரித்தவர்களை, செவிடர்களை, குருடர்களை - அதாவது முத்திரை வைக்கப்பட்டவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த முடியாது.

நீங்கள் யாரை நேர்வழியில் செலுத்த முடியும், உங்கள் பேச்சை கேட்க வைக்க முடியும் என்றால், இறைவனின் வசனங்களை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களை மட்டும் தான் நீங்கள் கேட்க வைக்க, விளங்க வைக்க, புரிய வைக்க (hear, listen and understand) முடியும் என்பதாக சொல்கிறான்.


இந்த வசனத்தில் physical ஆக இறந்தவர்களை பற்றியோ,  physical ஆன செவிடர்களை பற்றியோ, அல்லது  physical ஆன குருடர்களை பற்றியோ பேசவில்லை என்பது தான் நான் விளங்கி வைத்திருப்பது ஆகும்.


இது தான் உயிரோடிருப்பவர்கள் இறந்து விட்டார்கள் என்ற இந்த கட்டுரையில் தலைப்பில் வரும் பாதிக்கான விளக்கம்.


அப்போ இறந்து விட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது எப்படி?


இன்ஷா அல்லாஹ் பிறகு...