என்னுடைய சீன நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் எட்வர்ட் லீ..
அவரிடம் ”குட் மார்னிங்..” என்று சொன்னேன்
அவர் திருப்பி கேட்டார், “வாட் இஸ் தேர் டு பி குட் மார்னிங்.. இட்ஸ் எ டெர்ரிபுள் மார்னிங் ஃபார் மீ டுடே..” என்று
அன்றிலிருந்து அவரிடம் அப்படி சொல்வதே இல்லை...
----------------------------------------------------------------------------------------
- ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவில் உள்ள கோத்தா திங்கிக்கு நண்பர்கள் படைசூழ காரில் பயணமானோம்.
கோத்தா திங்கி: http://en.wikipedia.org/wiki/Kota_Tinggi
அங்கே அருவியில் குளித்தி முடித்து தயார் செய்து கொண்டு சென்ற சோறு கறியை எல்லாம் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தோம்.
நான் நாகூரில் உடுத்துவது போல் கைலியை உடுத்தி இருந்தேன்.
அப்போது நண்பர் ஒருவரிடம் பெருமையாக கைலியை பற்றி பேசிக் கொண்டிருந்தேன், ”எங்க ஊர்லயெல்லாம் இப்படி தான்.. கைலிய உடுத்திகிட்டு தலைல தொப்பிய போட்டுகிட்டு..”அஸ்ஸலாமு அலைக்கும்”ன்னு...
நான் சொல்லி முடிக்கும் முன்னரே
அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவர் நின்று தலைசாய்த்து
“வ அலைக்கும் ஸலாம்..” என்று பதிலளித்தார்
நான் அவரை நோக்கி புன்முறுவல் பூத்தேன்..
நண்பர் ஆச்சர்யப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------
படித்தவையிலிருந்து:
மொழிபெயர்ப்பு நூல்:
அரேபியாவில் சில நாள் (வில்லியம் லூயி)
தமிழில் ஆசிரியர்:
எனது ஆசான்: மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்
முதற் பதிப்பு வெளியான ஆண்டு:
பிப்ரவரி 1958
‘மணிவிளக்கு’ சஞ்சிகையில் ‘மக்கா யாத்திரை’ என்ற பெயரில் வெளியான கட்டுரை.
வில்லியம் லூயி என்பார் தனது மனைவி ஹெலனுக்கு எழுதிய கடிதம்:
....
அராபியர்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பார் ஒருவர். அதற்கு மற்றவர் உடனே பதிலளிப்பார், ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ என்று. இவற்றிற்கு முறையே ‘இறையருள் உங்களுக்கு உண்டாகட்டும்’ என்றும், ‘உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்’ என்றும் பொருளாம். என் நண்பர் இதைச் சொன்னார்.
இவ்வித உரையாடல் நண்பர்களுக்கு மத்தியில் தான் நடைபெறும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் “முஸ்லிம் என்ற சகலரிடமும் இத்தகைய உரையாடல் நடைபெறலாம்” என்று நண்பர் விளக்கினார். “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு வந்தனம் செலுத்தலாம். அப்படித்தான் செலுத்துகிறார்கள் அராபியர்கள், இவ்வாறுதான் நபி முஹம்மது அவர்கள் கற்பித்தார்கள்.”
அன்று ஒரு நாள் சில சாமான்கள் வாங்கும் பொருட்டு கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். நண்பரும் என்னுடன் வந்தார். ஒரு கடையில் நண்பர் பேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு எதிரில் ஒரு அராபியர் வந்தார். அதோடு சும்மா இருந்துவிடவில்லை. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றும் கூறி விட்டார். பாவம், என்னை அவர் ஒரு முஸ்லிம் என்று எண்ணி விட்டார் போலும்!
இவ்வாறு சொல்லப்பட்ட உடனேயே பதிலளித்து விட வேண்டுமாம. எனக்கு அது தெரியாது. அதற்குரிய விடையும் மறந்துபோய்விட்டது. எத்தனை விவரங்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்!
என்னிடமிருந்து விடை வராததால் அந்த அரேபியர் என்னை முறைத்துப் பார்த்தார். நான் என்ன செய்யலாம்? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, மறந்து போன அந்த விடையாவது நினைவிற்கு வருகிறதா? அதுதான் கிடையாது. ஓடி விடலாமா என்று கூட எண்ணி விட்டேன்.
அந்த சமயத்தில் நல்லை வேலையாக நண்பர் குறுக்கிட்டார். அந்த அராபியரிடம் ஏதேதோ புரியாத மொழியில் பேசினார். அராபியரின் முகம் தெளிந்தது. புன்னகையுடன் என்னை நெருங்கி முதுகில் ஒரு தட்டு தட்டினார். மறுபடியும் அரபி மொழியில் ஏதோ சில வார்த்தைகளை உதிர்த்தார். எனக்குப் புரியவில்லை. நண்பரைப் பார்த்தேன். “ஒன்றுமில்லை, ‘எல்லா இடங்களையும் சுற்றிப் பாருங்கள்!” என்று தான் கூறுகிறார்” என்றார் நண்பர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பது நண்பர்களுக்கு மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தம் என்ற விவரம் கண்கூடாகத் தெரிந்தது, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாக்கியத்திற்கு இருக்கும் மதிப்பு அளவிடர்கரியது. இரண்டு உள்ளங்களை அல்லவா அது பிணைத்து விடுகிறது.
......
---------------------------------------------------------------------------
குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
வசனம்: 86
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது , அதற்கு பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பி கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.
ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை:
ஆறு குணங்களை இறை நம்பிக்கையாளர்கள் வெளிப்படுத்த வேண்டும்..
அதில் ஒன்று..
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறிக் கொள்வது.
பிறிதோரிடத்தில் அவர்கள் (ஸல்) சொன்னார்கள்:
ஓ மக்களே!
ஸலாத்தை பரப்புங்கள்
உணவளியுங்கள் (ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும்)
உங்களுடைய ரத்த சொந்தமுடையவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
மற்றவர் உறங்கும் போது எழுந்து தொழுகை செய்யுங்கள்
சாந்தியுடன் சொர்க்கம் செல்வதற்குறிய வழி
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் (இறையருள்) உண்டாகுக!
Peace be with you!
இது எங்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை தான். ஆனால் இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள் ஒழுங்கு படுத்தி அழகு படுத்தினார்கள்.
புதிய ஏற்பாட்டின் படி பார்த்தாலும் நபி ஈஸா (அலை) அவர்களும் இவ்வகையான வந்தனத்தை கூறியுள்ளார்கள்:
ஆதாரம்: Luke 24:36
http://www.biblegateway.com/passage/?search=Luke+24%3A36-49&version=NIV
While they were still talking about this, Jesus himself stood among them and said to them, “Peace be with you.”
ஆதாரம்: John 20: 19 - 21
http://www.biblegateway.com/passage/?search=John+20%3A19-23&version=NIV
On the evening of that first day of the week, when the disciples were together, with the doors locked for fear of the Jewish leaders, Jesus came and stood among them and said, “Peace be with you!”
After he said this, he showed them his hands and side. The disciples were overjoyed when they saw the Lord.
Again Jesus said, “Peace be with you! As the Father has sent me, I am sending you.” 22 And with that he breathed on them and said, “Receive the Holy Spirit. 23 If you forgive anyone’s sins, their sins are forgiven; if you do not forgive them, they are not forgiven.”
--------------------------------------------------------------------------
Link: http://www.muslimtents.com/aminahsworld/Salaam.html
அவரிடம் ”குட் மார்னிங்..” என்று சொன்னேன்
அவர் திருப்பி கேட்டார், “வாட் இஸ் தேர் டு பி குட் மார்னிங்.. இட்ஸ் எ டெர்ரிபுள் மார்னிங் ஃபார் மீ டுடே..” என்று
அன்றிலிருந்து அவரிடம் அப்படி சொல்வதே இல்லை...
----------------------------------------------------------------------------------------
- ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவில் உள்ள கோத்தா திங்கிக்கு நண்பர்கள் படைசூழ காரில் பயணமானோம்.
கோத்தா திங்கி: http://en.wikipedia.org/wiki/Kota_Tinggi
அங்கே அருவியில் குளித்தி முடித்து தயார் செய்து கொண்டு சென்ற சோறு கறியை எல்லாம் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தோம்.
நான் நாகூரில் உடுத்துவது போல் கைலியை உடுத்தி இருந்தேன்.
அப்போது நண்பர் ஒருவரிடம் பெருமையாக கைலியை பற்றி பேசிக் கொண்டிருந்தேன், ”எங்க ஊர்லயெல்லாம் இப்படி தான்.. கைலிய உடுத்திகிட்டு தலைல தொப்பிய போட்டுகிட்டு..”அஸ்ஸலாமு அலைக்கும்”ன்னு...
நான் சொல்லி முடிக்கும் முன்னரே
அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருவர் நின்று தலைசாய்த்து
“வ அலைக்கும் ஸலாம்..” என்று பதிலளித்தார்
நான் அவரை நோக்கி புன்முறுவல் பூத்தேன்..
நண்பர் ஆச்சர்யப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------
படித்தவையிலிருந்து:
மொழிபெயர்ப்பு நூல்:
அரேபியாவில் சில நாள் (வில்லியம் லூயி)
தமிழில் ஆசிரியர்:
எனது ஆசான்: மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்
முதற் பதிப்பு வெளியான ஆண்டு:
பிப்ரவரி 1958
‘மணிவிளக்கு’ சஞ்சிகையில் ‘மக்கா யாத்திரை’ என்ற பெயரில் வெளியான கட்டுரை.
வில்லியம் லூயி என்பார் தனது மனைவி ஹெலனுக்கு எழுதிய கடிதம்:
....
அராபியர்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பார் ஒருவர். அதற்கு மற்றவர் உடனே பதிலளிப்பார், ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ என்று. இவற்றிற்கு முறையே ‘இறையருள் உங்களுக்கு உண்டாகட்டும்’ என்றும், ‘உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்’ என்றும் பொருளாம். என் நண்பர் இதைச் சொன்னார்.
இவ்வித உரையாடல் நண்பர்களுக்கு மத்தியில் தான் நடைபெறும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் “முஸ்லிம் என்ற சகலரிடமும் இத்தகைய உரையாடல் நடைபெறலாம்” என்று நண்பர் விளக்கினார். “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு வந்தனம் செலுத்தலாம். அப்படித்தான் செலுத்துகிறார்கள் அராபியர்கள், இவ்வாறுதான் நபி முஹம்மது அவர்கள் கற்பித்தார்கள்.”
அன்று ஒரு நாள் சில சாமான்கள் வாங்கும் பொருட்டு கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். நண்பரும் என்னுடன் வந்தார். ஒரு கடையில் நண்பர் பேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு எதிரில் ஒரு அராபியர் வந்தார். அதோடு சும்மா இருந்துவிடவில்லை. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றும் கூறி விட்டார். பாவம், என்னை அவர் ஒரு முஸ்லிம் என்று எண்ணி விட்டார் போலும்!
இவ்வாறு சொல்லப்பட்ட உடனேயே பதிலளித்து விட வேண்டுமாம. எனக்கு அது தெரியாது. அதற்குரிய விடையும் மறந்துபோய்விட்டது. எத்தனை விவரங்களைத்தான் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்!
என்னிடமிருந்து விடை வராததால் அந்த அரேபியர் என்னை முறைத்துப் பார்த்தார். நான் என்ன செய்யலாம்? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, மறந்து போன அந்த விடையாவது நினைவிற்கு வருகிறதா? அதுதான் கிடையாது. ஓடி விடலாமா என்று கூட எண்ணி விட்டேன்.
அந்த சமயத்தில் நல்லை வேலையாக நண்பர் குறுக்கிட்டார். அந்த அராபியரிடம் ஏதேதோ புரியாத மொழியில் பேசினார். அராபியரின் முகம் தெளிந்தது. புன்னகையுடன் என்னை நெருங்கி முதுகில் ஒரு தட்டு தட்டினார். மறுபடியும் அரபி மொழியில் ஏதோ சில வார்த்தைகளை உதிர்த்தார். எனக்குப் புரியவில்லை. நண்பரைப் பார்த்தேன். “ஒன்றுமில்லை, ‘எல்லா இடங்களையும் சுற்றிப் பாருங்கள்!” என்று தான் கூறுகிறார்” என்றார் நண்பர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பது நண்பர்களுக்கு மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தம் என்ற விவரம் கண்கூடாகத் தெரிந்தது, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாக்கியத்திற்கு இருக்கும் மதிப்பு அளவிடர்கரியது. இரண்டு உள்ளங்களை அல்லவா அது பிணைத்து விடுகிறது.
......
---------------------------------------------------------------------------
குரான் ஷரீஃப்
அத்தியாயம்: 4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
வசனம்: 86
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது , அதற்கு பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பி கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்.
ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை:
ஆறு குணங்களை இறை நம்பிக்கையாளர்கள் வெளிப்படுத்த வேண்டும்..
அதில் ஒன்று..
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறிக் கொள்வது.
பிறிதோரிடத்தில் அவர்கள் (ஸல்) சொன்னார்கள்:
ஓ மக்களே!
ஸலாத்தை பரப்புங்கள்
உணவளியுங்கள் (ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும்)
உங்களுடைய ரத்த சொந்தமுடையவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்
மற்றவர் உறங்கும் போது எழுந்து தொழுகை செய்யுங்கள்
சாந்தியுடன் சொர்க்கம் செல்வதற்குறிய வழி
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் (இறையருள்) உண்டாகுக!
Peace be with you!
இது எங்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தவை தான். ஆனால் இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள் ஒழுங்கு படுத்தி அழகு படுத்தினார்கள்.
புதிய ஏற்பாட்டின் படி பார்த்தாலும் நபி ஈஸா (அலை) அவர்களும் இவ்வகையான வந்தனத்தை கூறியுள்ளார்கள்:
ஆதாரம்: Luke 24:36
http://www.biblegateway.com/passage/?search=Luke+24%3A36-49&version=NIV
While they were still talking about this, Jesus himself stood among them and said to them, “Peace be with you.”
ஆதாரம்: John 20: 19 - 21
http://www.biblegateway.com/passage/?search=John+20%3A19-23&version=NIV
On the evening of that first day of the week, when the disciples were together, with the doors locked for fear of the Jewish leaders, Jesus came and stood among them and said, “Peace be with you!”
After he said this, he showed them his hands and side. The disciples were overjoyed when they saw the Lord.
Again Jesus said, “Peace be with you! As the Father has sent me, I am sending you.” 22 And with that he breathed on them and said, “Receive the Holy Spirit. 23 If you forgive anyone’s sins, their sins are forgiven; if you do not forgive them, they are not forgiven.”
--------------------------------------------------------------------------
Link: http://www.muslimtents.com/aminahsworld/Salaam.html