Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts

Tuesday, November 08, 2011

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள் - 2

இஸ்லாம் எனக்கு அமைதியை தந்தது - ஏ ஆர் ரஹ்மான்

http://rahmaniac.wordpress.com/2008/05/27/islam-gives-me-peace-a-r-rahman/
-------------------------------------------------------
படம்: அதா
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2008/06/meherbaan-from-ada-lyrics-and.html


-------------------------------
படம்: புளு
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2009/09/blue-2009-lyrics-and-translation-bhoola.html


-------------------------------------
படம்: டெல்லி - 6




பெரும்பாலான சூஃபி பாடல்களில் ‘மவ்லா’ என்ற பதம் பயன் படுத்தப்பட்டிருக்கும்.

இவ்வார்த்தை அரபி எழுத்தான் ‘வாவ் - லாம் - யெ (W - L - Y)' என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். 


இதே மூல வார்த்தை குரான் ஷரீஃபில் பல்வேறு வார்த்தைகளாக மாறி பல இடங்களில் வந்திருக்கிறது. ஒரு குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, இந்த மூல வார்த்தையை பயன்படுத்தி பெயர்ச்சொல்லாக 124 தடவையும் வினைச்சொல்லாக 112 தடவையும் வந்திருக்கிறதாம்.


வலா, வலாயத், விலாயத், அவ்லா, வலி - இப்படியாக மேற்சொன்ன மூல எழுத்திலிருந்து பிறந்த வார்த்தைகள் வருகிறது. இதன் தோராயமான அர்த்தமானது தலைவர், முதன்மையானவர், காப்பவர், நேசர் (நண்பர்), உதவியாளர், மேலான உரிமையுள்ளவர் - என்பதே யாகும்.


குரான் ஷரீஃபின் 5 வது அத்தியாயமான சூரத்துல் மாயிதாவில் (உணவு மறவை) 55 வது வசனமும் 56 வது வசனமும் இந்த மூல வார்த்தையிலிருந்து பிறந்த ஒரு வார்த்தையை எடுத்து பயன்படுத்தி நமக்கு யார் யாரெல்லாம் ’வலி’யாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.


”நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் (வலி): அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் இறை நம்பிக்கை கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ஏழைக்குறிய வரியையும் செலுத்தி பணிவுடன் (humbled) நடந்து கொள்கிறார்களோ அவர்கள் தாம்"


”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறை நம்பிக்கையாளர்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஹிஸ்பல்லாஹ்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்”


இந்த வசனத்தை சூஃபியாக்கள் அணுகும் விதம் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது. 


சூஃபியாக்களின் புரிதலின்படி மவ்லா என்றால் அது ஒரு சங்கிலி தொடர் - மவ்லா என்றால் இறைவன் - மவ்லா என்றால் அவனது தூதுவர் (ஸல்) அவர்கள் - மவ்லா என்றால் இறைநம்பிக்கையாளர்கள் அதாவது பாத்திஹா சூராவில் வருவது போல் அருள் பாலிக்கப்பட்டவர்கள், ஆன்மிக வழிகாட்டிகள்.


கதிர்கும் எனும் இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘மவ்லா’ எனும் பதத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற ஹதீது ஒன்றை சொன்னார்கள்..


http://nagoreismail786.blogspot.com/2011/06/blog-post_12.html

”என்னை எவர்கள் மவ்லாவாக ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்”

பெரும்பாலான சூஃபி வழியின் ஆரம்ப முடிச்சு அலி (றலி) அவர்களிடமிருந்து தொடங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.

இறைபாதையில் சென்றவர்களை தலைவர்களாக, அவர்களோடு நெருங்கியிருக்கக் கூடியவர்களாக, அவர்களை நேசிக்கக் கூடியவர்களாகவும்  ஆக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

10: ஸூரத்து யூனுஸ் (நபி)
வசனம்: 30

There will every soul become acquainted with what it sent before, and they will be brought back to Allah, their Mawla....
--------------------------------------------------------------


Arziyan saari mein, chehre pe likh ke laaya hoon
Tumse kya maangoon mein, Tum khud hi samajh lo.

என்னுடைய 
அதீத ஆவலினால்
உன்னிடம் வந்துள்ளேன்

என்னுடைய தேவை
என் முகத்திலேயே
எழுதப்பட்டுள்ளது


இன்னும் 
வாய்திறந்து
வசனம் படித்து
நான் என்ன
கேட்பது?


உனக்கு 
தெரியாதது
என்று
எதுவும் இல்லை

Ya Maula..
Maula Maula
Mere Maula..
Maulaaaaa...



ஓ அனைத்திற்கும் முதன்மையானவனே!
தலைவனே தலைவனே!
என்னுடைய ஆன்மீக வழிகாட்டியே!
எனது நேசத்திற்குறியவரே!

Darare Darare Hai Mathey Pe Maula

Marammat Muqaddar ki kardo Maula
Mere Maula….

நல்லது
கெட்டது
முன் தலையில்
முன்மொழியப்பட்டுள்ளதே


முதன்மையானவனே!


என்னால் 
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!

Tere dar pe jhuka hun mitha hun Bana hun 
Marammat Muqaddar ki kardo Maula 

உனது
கருணை மிகு
பள்ளிவாசலில்
நான்
சிரம் தாழ்கிறேன்
நான்
என்னையே அழித்துகொள்கிறேன்
நான்
புதுபிறப்பெய்துகிறேன்

என்னால் 
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!

Jo bhi Tere Dar aaya..Jhukne Jo Sar aaya
Mastiyan Peeye Sabko..Jhoomta Nazar aaya..


Pyaas Leke Aaya tha..Dariya Woh bhar Laya..
Noor ki Baarish Main bheegta sa tar aaya..

உன்
கருணைமிகு
வாசல் வரும்
யாரும்
உன்னிடம்
சிரம் தாழ்த்தி
முழுமையாக
உன்னிடம்
ஒப்படைக்கவே வருகின்றனர்


பேருண்மையை 
கண்டுகொண்டவர்
பரவசத்தில்
மகிழ்ந்து
ஆடுகின்றனர்


தாகத்தோடு 
வருகின்றவர்
ஓடுகின்ற நதியை
பெற்று திரும்புகின்றனர்


நூரெனும் 
இறைஒளி
பொழியும் 
மழைநீரில்
நீந்தியபடி
செல்கின்றனர்

Ooo ek khushboo aati thi
Main Bhatkta Jaata Tha
Reshmi Si Maaya Thi
Aur Mein Takta Jaata Tha


Jab Teri Gali Aayaa, 

Sach Kabhi Nazar Aayaa
Mujhme Hi woh Khushboo Thi, 
Jise Tune ilwaaya

நறுமணம்
வருகிறது -
அதன் தேடலில்
தொலைகிறேன்
நான்


சிலிர்க்கும்
மாயங்கள் -
அதன் மர்மங்களில்
புதைகின்றேன்
நான்


(அதன் உட்பொருள் விளங்காமல் தவிக்கின்றேன்)


எப்பொழுது
உனது வாசலுக்கு
வந்தேனோ
உண்மைகள்
யாவும்
விளங்கிற்று


நறுமணம்
என்னுடையது 
தான் -
அதை
எனக்கு
அறிமுகப் படுத்தியது
நீ தான்


Tootke Bhikharna Mujhko Zaroor Aata hai 
Varna Ibaadatwaala Shaur Aata Hai
Sajde Mein Rehne Do Ab Kahin Na Jaaongaa
Ab Jo Tumne Thukraaya To Sawar Na Paaongaa


உடைப்பதுவும்
காயப்படுத்துவதும்
எனக்கு
கைவந்த
கலையாகிறது


உன்னை
உளப்பூர்வமாக
வணங்குவது
தான்
வர மறுக்கிறது


உனது 
கருணை பார்வையின்
கீழ் நான் 
இருக்க வேண்டுகிறேன்


வேறு இடம்
எங்கும்
நான்
செல்லேன்


நீ
என்னை
மறுத்து விட்டால்
நான்
பிழைக்க 
மாட்டேன்


Sar Udhaake Meine To Kitni Khwahishein Ki Thi

Kitne Khwaab Dekhe The Kitni Koshishein Ki Thi
Jab Tu Roobaroo Aayaa…..
Jab Tu Roobaroo Aayaa, Nazar Na Mila Paayaa
Sar Jhukaa Ke Ek Pal Mein…
Sar Jhukaa Ke Ek Pal Mein, Maine Kyaa Nahin Paaya
Maula Maula Maulaa Mere Maula..


என்னுடைய 
தேவைகளை
வரிசைப்படுத்த
எனக்கு எந்த 
தயக்கமும்
ஏற்படவில்லை


கணக்குவழக்கில்லாத
கனவுகள்
காணவும்
எனக்கு எந்த
கலைப்பும்
ஏற்படவில்லை


ஆனால்
நீ
நேருக்கு நேராக
என்னை
சந்திக்கும் போது
நான்
அந்த
பார்வையின் சந்திப்பை
தாங்க முடியாமல்
வெட்கி 
அவமானத்தால்
தலை குனிகிறேன்


எனினும்,
விலைமதிக்க முடியாத
அந்த கனத்தில்
தயார் செய்து
வைத்திருந்த 
தேவைகளை
தூக்கி எறிந்து விட்டு
உன்னிடம் 
தலை குனிந்து
முழுவதுமாய்
ஒப்படைக்கிறேன்


இனி
நான் 
தேடுவதற்கும்
வேண்டுவதற்கும்
எதுவுமில்லை
உனது
அன்பை 
பெற்ற பிறகு
எனக்கு
அனைத்தும்
கிடைத்து விட்டது


என் முதன்மையானவனே!
என் நேசத்திற்குறியவனே!!

Mora Piya Ghar Aayaa, Mora Piya Ghar Ayaa
Maula Maula Maulaa Mere Maula…
Maula Maula Maulaa Mere Maula…



எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்


எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்


எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே


எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே

Sunday, October 30, 2011

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசை பாடல்கள்

ஹதீஸ் குத்ஸி (மகத்துவமிக்க பெருமானார் (ஸல்) செய்தி):

என்னுடைய சுவர்க்கமோ என்னுடைய பூமியோ என்னை வைத்திருக்க (அடைய, never contain) முடியாது. என் நேசர்களின் இதயத்தில் என்னை வைத்திருக்க இயலும்”
---------------------------------------------------------

மிகப் பெரிய வியாபாரியும் செல்வந்தருமான பீர் சையித் ஹாஜி அலி ஷாஹ் புஹாரி (றலி) அவர்கள் பிறப்பால் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.  இஸ்லாத்தை பரப்புவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வந்த மும்பையில் வொர்லி நதிக்கரையில் அமர்ந்தார்கள்.
நாடி வருவோருக்கெல்லாம் சாந்தி மார்க்கத்தை பரப்பினார்கள். இவர்களின் நினைவாக...


படம்: ஃபிஜா
நடிப்பு: ஹ்ரித்திக் ரோஷன், ஜெயபாதுரி, கரிஷ்மா கஃபூர்
பாடலாசிரியர்: ஷவ்கத் அலி
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

பாப்ரி மஸ்ஜித் இடிப்ப, கலவரத்தை தொடர்ந்து மகன் காணாமல் போய் விடுகிறான். மகனை நினைத்து ஏங்கி தவிக்கும் தாய் மனசாந்திக்காக இறையடியாரின் இல்லம் தேடி செல்கிறார்...

-----------------------------
கி.பி.1142 - ஹிஜ்ரி ஆண்டு 530 - ரஜப் மாதம் - 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெற்கு ஆஃப்கானிஸ்தானில் சஞ்சர் எனும் சிறிய கிராமத்தில் இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாய் வழியில் பெருமானார் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவர்களான இமாம் ஹஸன் (றலி) அவர்களின் வழியிலும் தந்தை வழியில் மற்றொரு பேரரான இமாம் ஹுஸைன் (றலி) அவர்களின் வழியிலும் தோன்றியவர்கள்.

இறையருளால் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் வந்து தங்கினார்கள். ஆனால் அப்போது அஜ்மீரை பிருதிவிராஜன் எனும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான்.

இவர்களை அஜ்மீரை விட்டு செல்லும்படி மன்னர் கேட்டுக் கொண்டும் இவர்கள் போக மறுத்து விட்டதால் இவர்கள் மீது மன்னர் மிகவும் கோபம் கொண்டு பல திட்டங்கள் தீட்டினான். ஆனால் திட்டமிடுபவர்களிலெல்லாம் மேலான திட்டமிடுபவனின் நாட்டம் வேறாக இருந்தமையால் கைசேதமடைந்தார் மன்னன்.

ஏழைகளோடு ஏழையாய் ஏழைகளின் உற்ற தோழனாய் “கரீபே நவாஜ் (ஏழைகளின் பங்காளன்)” என்று வழங்கப்பட்டு வந்தார்கள். ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகிய இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மிஸ்ஸன் வெற்றிகரமாக முழுமையடைந்ததும் ஹிஜ்ரி 633 ரஜப் மாதம் 6 ஆம் நாள் (கிபி 1236) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யீனுத்தீன் ஷிஸ்தி (றஹ்) அவர்கள் தம்முடைய 97வது வயதில் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நினைவாக...




பாடலாசிரியர்: கஷிஃப்
---------------------------------------------------------------------------------
ஹஜ்ரத் ஷெய்க் ஹாஜா சையித் முஹம்மத் நிஜாமுத்தின் (றஹ்) அவர்கள் ஹிஜ்ரி 636 ஆம் ஆண்டு சஃபர் மாதம் 27 ஆம் தேதி அன்று உத்திரபிரதேச மாநிலமான பதாயுன் நகரில் பிறந்தார்கள். ஐந்து வயது நிறைவு பெறும் முன்னரே தந்தையை இழந்தார்கள் ஐந்தாவது வயதில் தாயையும் இழந்தார்கள்.

தாயார் மரணப் படுக்கையில் இருக்கும் போது ஐந்து வயது சிறுவனை “அல்லாஹ்வின் தவக்கலில் (பாதுகாவலில்) விட்டு செல்வதாக” கூறி விட்டு மரணித்தார்கள்.

அன்னையின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. மகனார் மிகப் பெரிய இறைநேசராக வாழ்ந்தார்கள்.

சுல்தான், மந்திரிகள், இவர்களோடு ஒரு போதும் கலந்திருக்காமல் ஏழைகளோடு ஏழைகளாய் வாழ்ந்தார்கள்.

இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவு பொருள்கள் அன்றே அருகில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். நாளைக்கு என்று எதுவும் சேமித்து வைத்திருப்பது கிடையாது. முற்றிலும் இறைவனை சார்ந்தே இருந்தார்கள்.

இறை அழைப்பை ஏற்று புதன்கிழமை ஸஃபர் மாதம், ஹிஜ்ரி 725ல் டில்லியில் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பயணமானார்கள்.

இவர்களின் உஸ்தாத் ஹஜ்ரத் பாபா ஃபரீத் (றஹ்) அவர்கள்
இவர்களின் மாணவர்களில் ஒருவர் தான் அமீர் குஸ்ரோ (றஹ்) அவர்கள்

அவர்களின் நினைவாக...





படம்: ராக் ஸ்டார்
இயக்கம்: இம்தியாஜ் அலி
பாடல்: இர்ஷாத் காமில்

Ya Nizamuddin Auliya, Ya Nizamuddin Salqa


இறைநேசரே..!
நிஜாமுதீனே!
ஏழைகளின் தோழரே!
நிஜாமுதீனே!

Kadam Badhaa Le, Hadon Ko Mitaa Le,
Aaja Khaali Pan Mein Pee Ka Ghar Tera,
Tere Bin Khaali Aaja, Khali Pan Mein

இடையில் வரும் இடையூறுகள்

மறைந்து போக செய்யுங்கள்
காலியான வெற்றிடம் நான்
என்னை நிரப்பிவிடுங்கள்

Rangreza
Rangreza
Rangrezaa…
Ho… Rang-rezaaaa…..



வர்ணம் பூசுபவரே
என்னை
தங்களின் வர்ணத்திற்கு
பூசி விடுங்கள்


(வர்ணம்- இதற்கு சூஃபியிசத்தில் நிறையவே அர்த்தம் உள்ளர்த்தம் உண்டு; பொதுவாக இஸ்லாத்தில் இணைவதை கூட இதை குறிக்க பயன்பட்டு இருக்கிறது)

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக! அது ஆகி விடுகிறது..!



(இது குரான் ஷரீஃபின் வசனம்


 - ஸூரத்துல் பகறா (2) - 117; 
 - ஸூரா யாஸீன் (36) - வசனம் 82;)


Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha



எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Woh Jo Mujh Mein Samaya
Woh Jo Tujh Mein Samaya
Maula Wahi Wahi Maaya

அவனே 

எனது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அவனே
உங்களது உள்ளுணர்விலும்
இருக்கின்றான்
அந்த இறைவனே
எங்கெங்கும் மாயமாய்
(மறைந்தல்ல) நிறைந்திருக்கின்றான்

Kun Faya Kun
Kun Faya Kun
SadaqAllahul-alliyul-Azeem’



ஆகுக! 
எனும் ஒரு சொல் தான்
அது ஆகி விடுகிறது!


(ஆகுக என்ற சொல்லுக்கும் அது ஆகி விடுவதற்கும் கால நேர வித்தியாசமே இருப்பதில்லை - Yes! There is no time difference!)


நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,
Rangreza Rang Mera Tan Mera Mann,
Le Le Rangaayi Chaahe Tan Chaahe Mann,



வர்ணம் பூசுபவரே!
என்னுடைய 
எண்ணத்தில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
என்னுடைய 
மனதில்
உங்களது வர்ணத்தை
பூசுங்கள்
அவ்வாறு பூசுவதற்கு
பதிலாக
என்னுடைய
எண்ணத்தில்
மனதில்
இருக்கும்
அத்தனையையும்
எடுத்துக் கொள்ளுங்கள்


(அப்படி எடுத்து விட்ட பிறகு பூசப்பட்ட வர்ணம் மட்டுமே நிலைத்து நிற்கும்)

Sajra Savera Mere Tan Barse
Kajra Andhera Teri Jalti Lau

Katra Mila Jo Tere Dar Par Se
O Maula…
Maula….. Aaa…



நான்
உங்களிடம் 
நேசம் கொள்ளும்போது
எனது காலையின் 
வெளிச்சம்
எனது இரவின் 
இருட்டை
சுத்தம் செய்கிறது


இறைநேசரான
உங்களின் புகலிடம்
வரும் போது
எனது ஆன்மா
இறையுணர்வு
பெறுகிறது


இறைவா...
இறைவா...

Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun
Kun Faya Kun

ஆகுக..!

ஆகி விடுகிறது..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam




நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

O Mujhpe Karam Sarkar Tera
Araz Tujhe, Karde Mujhe, Mujhse Hi Riha
Ab Mujhko Bhi Ho, Deedaar Mera
Karde Mujhe, Mujhse Hi Riha
Mujhse Hi Rihaaaaaaaa



எனது தலைவனே..!
என்மீது கருணை காட்டு..!


நான் வேண்டுவதெல்லாம்
என்னை
என்னிலிருந்து
விடுவித்து விடு..!


எனது 
உண்மையான தோற்றத்தை
எனக்கு
அறிமுகப் படுத்து..!


என்னை
நான் என்று 
நம்பிக் கொண்டிருக்கும்
போலியான
என்னிடமிருந்து
என்னை விடுவி...!


Mann Ke Mere Ye Bharam,
Kachche Mere Ye Karam
Leke Chale Hai Kahaan,
Main Toh Jaanoon Hi Na



எண்ணத்தில்
விளைந்திருக்கும்
வீண்பெருமை
தவறானசெய்கைகளால்
விளைந்து நிற்கும்
சுமைகள்


இவைகளை
சேமிப்பாக 
வைத்துக் கொண்டு
நான் 
எங்கே செல்வது?


ஒன்றும் விளங்கவில்லை..

Tu Hai Mujhmein Samaya,
Kahaan Leke Mujhe Aaya,
Main Hoon Tujhmein Samaya,
Tere Peeche Chala Aaya,
Tera Hi Main Ek Saaya,
Tune Mujhko Banaya,
Main Toh Jag Ko Na Bhaaya,
Tune Gale Se Lagaya
Haq Tu Hi Hai Khudaya,
Sach Tu Hi Hai Khudaya



நீ
என்னுள் 
நுழைந்து விடு


எங்கினும்
என்னை
அழைத்து செல்


நான்
உன்னில்
நுழைந்து விடுகிறேன்


நான் உன்னை
பின் தொடர்கிறேன்


நான் உனது
நிழலாகிறேன்


நியே
என்னை படைத்தாய்..!


நான் 
இந்த உலகிற்கு
அருகதையற்றவனாய்
இருக்கிறேன்..!


நீ 
என்னை அணைத்தாய்..!


நீயே
பேருண்மை, சத்தியம் (ஹக்)


நீயே
உண்மை..

Kun Faya Kun
Kun Faya Kun
Faya Kun,
Faya Kun, Faya Kun, Faya Kun

ஆகுக..!

எனும் ஒரு சொல் போதும்
அது உடனே ஆகி விடும்..!

Jab Kahin Pe Kuch Nahi
Bhi Nahi Tha
Wahi Tha Wahi Tha
Wahi Tha Wahi Tha

எங்கெங்கும்
எது ஒன்றும்
இல்லாத போது
ஒருவன் மட்டுமிருந்தான்
ஒருவன் மட்டுமே இருந்தான்

Kun Faya Kun
Kun Faya Kun




ஆகுக..!
அது உடனே ஆகி விடும்..!

SadaqAllahul-alliyul-Azeem’
Sadaqa Rasulu-hun nabi-yun-kareem

Sallallaahu Alayhi Wasallam, Sallallaahu Alayhi Wasallam



நான் 
சாட்சி சொல்கிறேன்..!
அந்த 
இறைவனான 
அல்லாஹ்
மிகவும் மேலானவன்
மிகவும் உயர்வானவன்


நான் இன்னும்
சாட்சி சொல்கிறேன்...!
அந்த இறைவனின் தூதர்
ஹஜ்ரத் முஹம்மத (ஸல்)
மிகவும் உயர்குணமுடையவர்கள்


இறைவனின் 
வாழ்த்தும்
இறைவனின்
சாந்தியும்
அன்னாரின் மீது
உரித்தாகுக..!

-----------------------------------------------------------

Sunday, July 24, 2011

அமைதி இல்லத்திலிருந்து.. அமைதியை வேண்டி.. நுஸ்ரத் சாபுடன் ஏ.ஆர்.ரஹ்மான்.


கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற “போறாளே பொன்னுத்தாயி..” என்ற இந்திய கறிக்குகொஞ்சம் பாகிஸ்தான் மசாலா கலந்து ஏஆர் ரஹ்மான் நுஸ்ரத்தோடு சேர்ந்து சமைத்த அறுசுவை...

இந்த பாடல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியிட்ட வந்தே மாதரம் தொகுப்பில் இடம் பெற்ற பாடல். அந்த தொகுப்பிலேயே இந்த வரிகளுக்காக எனக்கு மிகவும் பிடித்த பாடல்...





Chanda suraj laakhon taare hain jab tere hi yeh saare
சந்திரன் சூரியன்
இன்னும்
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள்
எல்லாம் உங்களுடையதே..!

Kis baat par hothi hai phir thakraarein

பிறகு நமக்கிடையே
என்ன காரணத்திற்காக
சர்ச்சை (சண்டை, கலவரம், குண்டு வெடிப்புகள்) ஏற்படுகிறது?
Keenchi hai lakeere is zameen pe par na keencho dekho

இந்த பூமியில்

உள்ள
எல்லைக் கோடுகளை
வரைந்து சென்றவர் யார்?
ஏன் அவ்வாறு செய்தனர்?
Beech mein do dilon ke yeh deewaarein

இது கடைசியில்
இதயங்களுக்கு இடையில்
அல்லவா
எல்லை கோடுகளாய்
இடையூறாய்
தடுப்புச்சுவராய்
வளர்ந்து நிற்கின்றது
Duniya mein kahin bhi, dard se koyi bhi…
Duniya mein kahin bhi, dard se koyi bhi
Ehsaas uske zakhmon ka ho ke
Thadpe to humko yahan pe
Apna bhi dil bhar bhar aaye roye aankhein

இந்த உலகில் எங்கேனும், யாருக்கேனும்
இந்த உலகில் எங்கேனும், யாருக்கேனும்
தடங்களுக்கு உள்ளானால்

எங்களுக்கும்
அந்த வலியை
இதயம்
ரணமாய் உணர்கிறது
கண்கள்
கண்ணீர் வடிக்கின்றது
What are you waiting for another day another dawn,
Somewhere we have to find a new way to peace
What are you waiting for another sign another call,
Somewhere we have to find a new way to peace!!!
நீங்கள் இன்னும் எத்தனை முறை தான்
இன்னொரு நாளுக்காக
இன்னொரு விடியலுக்காக
காத்திருப்பீர்கள்
நாம்தான்
எப்படியாவது
அமைதியை
கொண்டு வர
புதிய வழியை
கண்டுபிடித்தாக வேண்டும்..!!!
Doori kyon dilon mein rahe faasle kyon badhte rahe

ஏன் நம்
இதயத்திற்கிடையேயான
தூரம்
இன்னமும் இருக்கிறது
ஏன் இந்த
தூரம்
இன்னும் அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது

Pyaari hai zindagi hai pyaara jahaan

வாழ்க்கை அன்பு மயமானது
உலகம் அன்பு மயமானது
Rishte badi mushkilon se
ஒருவருக்கொருவர்
உறவாய் பழகுங்கள்
என்று சொன்னால்
அது
கடினமாக இருக்கிறது
ஆனால்
பிரிந்து விடுவதென்றால்
ஒரு கனம்
போதுமானதாய் இருந்து
தொலைக்கிறது..!

Ishq dava hai har ek dard ki



ஒருவருக்கொருவர்
அளவுக்கு அதிகமாக
நேசிக்க ஆரம்பிப்பதே
அனைத்து வலிகளுக்குமான
மிகச் சிறந்த மருந்து
Zanjeer ishq hai har ek rishte ki

அத்தகைய
நேசம் மட்டுமே

எல்லா உறவுகளையும்
கட்டி போடும்
சங்கிலி..!
Ishq saari hadhon ko tod daale

அத்தகைய
நேசம் மட்டுமே
அனைத்து எல்லைக் கோடுகளையும்
அழிக்க வல்லது..!
Ishq to duniya ko pal mein mita bhi de

அத்தகைய
நேசம் மட்டுமே
உலகத்தையே கேட்டாலும்
விட்டுக் கொடுக்க வைக்க
முடியக் கூடியது..!
Ishq hai jo saare jahaan ko aman bhi de

அத்தகைய
நேசமே
உலகம் முழுமைக்கும்
அமைதியை
கொண்டு சேர்க்க

போதுமானது

Rona ishq se hai saare aalam ki…
அத்தகைய
நேசத்திற்க்காக மட்டுமே
ஒட்டுமொத்த உலகமும்
ஏங்கி தவித்து
அழுது மடிகிறது..!