இன்று தமிழ் திரைப்பட வசனகர்த்தா பிரச்சன்னகுமார் அவர்கள் மரணம் என்ற துயரசெய்தி செவிக்கு எட்டியது. பாலைவனச் சோலையில் தொடங்கிய அவரது திரைப் பயணம் 'சண்ட'யில் முடிவடைந்திருக்கிறது.
தீப்பெட்டிக்குள்
எத்தனன குச்சிகள்
அதில்
எத்தனை குச்சிகள்
எரியும்
- 'பறவைகள் பலிவிதம்' எனும் படத்தில் பிரச்சன்னகுமார் எழுதிய கவிதை தான் இது. தாரா என்ற நடிகை ஜனகராஜிடம் இந்த கவிதையை சொல்ல, ஜனகராஜ் சொல்வார், 'இது தான் கவிதையா?, நல்ல வேலை கண்ணதாசன் செத்துட்டார்' என்று
அதற்கு தாரா சொல்வார்கள், ' இல்ல சிவா (படத்தில் ஜனகராஜின் பெயர் என்று நினைக்கிறேன்) நான் தீப்பெட்டின்னு சொன்னது நம்ம காலேஜை, குச்சிங்கறது நாம தான், கனவுங்கற தீமருந்த சுமந்துகிட்டிருக்கோம், அதுல எத்தன கனவு பலிக்க போவுதோ..' என்பார்.
அதற்கு ஜனகராஜ், 'சாரி கீதா (தாராவின் பெயர்) நீ சொன்னதுல என்னமோ இருக்கு, ஆனா எனக்கு தான் புரியல..' என்பார்.
இப்படி என் மனத பாதித்த எத்தனையோ வசனங்களை எழுதிய பிரச்சன்னகுமார் அவர்களின் மரணம் மிகவும் துயரமாக இருக்கிறது.
பிரச்சன்னகுமார் அவர்களின் மனைவியின் தம்பி கணேசுடன் சிங்கப்பூரில் தஞ்சோங் பகாரில் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை பதிவு செய்கிறேன்
- நாகூர் இஸ்மாயில்
No comments:
Post a Comment