தட்ஸ் தமிழ் டாட் காமில் படித்த செய்தி
2 துப்புரவு தொழிலாளிகள் கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்ட போது விஷ வாயு தாக்கி பலியாகி விட்டதாக படித்தேன்.
அதன் இணைப்பு இங்கே உள்ளது
இன்றைய தேதிக்கு மனித உயிர்களுக்கு அப்படி ஒன்றும் மதிப்பு கிடையாது. மனித உயிர்கள் என்று கூட என்னால் சொல்ல முடிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், நாடு, மொழி என்று பிரிந்து கிடக்கிறார்கள்.
ஒரு கதை கூட சொல்வார்கள். அமெரிக்காவின் நியுயார்க் நகரின் சாலையில் ஒரு குழந்தையை நாய் ஒன்று கடித்து கொன்றிருந்ததாம். அப்போது அதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் குழந்தையை காப்பாற்ற வேண்டு நாயை அடித்து கொன்று விட்டார்.
அதை பார்த்துக் கொண்டிருந்த அந்நகரின் காவல் அதிகாரி ஒருவர், ஓடி வந்து குழந்தையை காப்பாற்றிய அவரின் கையை பிடித்து , "வீரமிக்க நியுயார்க் வாசி ஒருவர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று பாராட்டினாராம்.
அதற்கு அவர், "நான் நியுயார்க் வாசி அல்ல.." என்று பதிலுறைத்தாராம்
உடனே காவலதிகாரி, "பரவாயில்லை.. ஒரு வீரமிக்க அமெரிக்கர் குழந்தையை காப்பாற்றி விட்டார்" என்று புன்னகைத்திருக்கிறார்
அதற்கும் அவர், "நான் அமெரிக்கரும் அல்லர்.." என்று கூறினாராம்
"அப்படி என்றால் யார் தான் நீங்கள்" என்று கேட்டதற்கு "நான் பாகிஸ்தானி" என்றாரம்
உடனே அடுத்த நாள் செய்தி தாளில் "தீவிரவாத பாகிஸ்தானி அநியாயமாக நடு ரோட்டில் நாயை அடித்து கொன்றார்.." என்று வந்ததாம்.
இப்படி மனிதர்கள் தான் மனிதர்கள் என்பதை மறந்து அவர்களுக்கு சமூகம் கற்று கொடுத்திருக்கும் பல் வேறு சாதி மத நாடு மொழி இனம் வர்க்கம் போன்ற முகமூடிகளை அணிந்து சுய முகங்களை இழந்து பல காலங்கள் மறைந்தோடி விட்டது.
நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் துப்புரவு தொழிலாளிகள் இறந்தால் அவர்களுக்கான உரிமைகளை பற்றி பேச வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காகத் தான்.
சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.
ஊழியர்கள் சாக்கடை அமைக்க, சுத்தம் செய்ய, இருப்பதை மூட, இன்னும் பல்வேறு பணிகளுக்காக பூமிக்கு அடியில் இறங்கி வேலை பார்க்க வேண்டி உள்ளது.
பூமிக்கு கீழுள்ள இடங்களை ஆங்கிலத்தில் கன்ஃபைண்ட் ஸ்பேஸ் என்றும் தமிழில் வரையறுக்கப்பட்ட இடம் என்றும் அழைப்பார்கள்.
இத்தகைய இடங்களின் விளக்கமாவது..
1. உள்ளே செல்வதற்கும் உள்ளிருந்து வெளியேறுவதற்கும் குறைவான வழிகளே இருக்கும்
2. இயற்கையான காற்றோட்டம் இருக்காது
3. இயற்கையான வெளிச்சம் கிடைக்காது
4. அது வேலை செய்வதற்கான இடமல்ல (அதாவது அலுவலகம் போன்றோ கடைகள் போன்றோ அமைக்கப்பட்ட இடமல்ல)
மேற்கூறிய விளக்கங்களையுடைய இடங்களில் ஊழியர்கள் இறங்கும் போது அவர்களுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு ஆபத்துகள் உள்ளது.
அவையாவன..
1. உயிர்வாயு பற்றாக்குறை (ஆக்ஸிஜன் டெஃபிஸியன்ஸி)
2. தீயும் விபத்துகளும் கூட ஏற்படும்
3. நச்சுத்தன்மையுடைய அல்லது விஷத்தன்மையுடைய வாயுக்கள்
இதில் ஹைட்ரஜன் சல்பைட் என்ற விஷ வாயு பத்து லட்சம் பங்கு காற்றில் வெறும் பத்து பங்கு அளவு மட்டுமே கலந்து இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து உள்ளது.
ஆகவே ஊழியர்களை ஆபத்தான வரையறுக்கப்பட்ட இடங்களில் இறங்க சொல்வதற்கு முன்பு தேவையான உயிர்வாயு உள்ளதா என்று சோதிப்பதுடன் எரியக்கூடிய வாயுக்கள், விஷ வாயுக்கள் இல்லை எனவும் 100 சதவிகிதம் உறுதியாக தெரிந்தவுடன் தான் இறங்க சொல்ல வேண்டும்.
மேற்கூறிய இடத்தில் வேலை செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அதிகாரிகள் இடத்தை சோதனையிட வேண்டும். அனைவருக்கு பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்.
விபத்துகள் விடுமுறைக்கு செல்வதே இல்லை. "இன்றைக்கு எங்க ஊட்டு காலண்டர்ல நல்ல நேரம்னு போட்டிருக்கு அதனால விஷ வாயு வந்தா கூட எனக்கு ஒண்ணும் ஆவாது" என்றெல்லாம் சொல்லி ஏமாந்து போக கூடாது. பாதுகாப்பு தான் உயிருக்கு உத்திரவாதம்
உயர்நீதி மன்றம் இத்தகைய விபத்துகளை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆராய்வதற்கு 13 பேர் கொண்ட குழுவை இந்த மாத துவக்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி நல்ல துவக்கம் தான்
இது போன்ற வேலையிட விபத்துகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்
2 comments:
Thuppuravu tholilaargalgilin velayil paadhukaappu amsangal kadai pidikka padaamal iruppadhu vanamiyana kandanathukku kuriyadhu...Idhu ponra maranagal thodaraamal irukka aarasu yedhavadhu seyya vendum...
ஏதேனும் செய்வார்கள் என்று நம்புவோமாக!
Post a Comment