Saturday, September 17, 2011

கியா ஹுவா தெரா வாதா - ரஃபி சாப் பாடிய பாடல்


ஷம்மி கபூர் சொன்னாராம், “ரஃபி இல்லாமல் நான் முழுமையடைய வில்லை” என்று..

உண்மையில் ரஃபி சாப் இல்லாமல் இந்தி சினி பாடல்களும் முழுமடையவில்லை.

சினிமாக்களில் காதலி தன்னை (இந்த படத்தில் பணம், காசு தரும் வசதிக்காக) ஏமாற்றி விட்டதாக கருதி காதலன் பாடும் காதல் தோல்வி பாடல்களில் மிகச் சிறந்த 1 பாடல் என்று தேர்ந்தெடுத்தால் அதில் இந்த பாடல் நிச்சயம் இடம் பெறும்.

”வெண்ணிலா வெள்ளிதட்டு” என்று இந்த பாடலை தழிழ் வடிவிலும் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது உண்டு.

இந்த பாடலுக்காக ரஃபி சாபுக்கு தேசிய விருது கிடைத்தது.

யுனானி மருத்துவரும், அரபி, பார்ஸி பட்டம் பெற்ற ஆலிமும், கவிஞருமான மஜ்ரூஹ் சுல்தான் பூரி என்பவர் தான் இந்த பாடலை எழுதினார்.




Kya hua tera waada
Woh kasam, woh iraada

என்ன ஆயிற்று...?
உங்களது வாக்கு..!
நீங்கள் சொன்ன அந்த சத்தியம்..!!
உங்களுக்கு தோன்றிய அந்த நோக்கம், ஆசை ...!!!

Bhoolega dil jis din tumhe
Woh din zindagi ka aakhri din hoga

உங்களை
என் இதயம்
மறக்கும்
தினம் -
அத்தினமே
என் வாழ்க்கையின்
கடைசி
தினமாகும்
---------------
Yaad hai mujhko, tune kaha tha 
Tumse nahin roothenge kabhi


எனக்கு நினைவிருக்கிறது

நீங்கள் சொன்னவை
ஒரு பொழுது கூட
நானின்றி
வாழமாட்டேன் என்றீர்கள்

Dil ki tarah se haath mile hain
Kaise bhala chhootenge kabhi

இதயங்களின்
வழியே தானே
நம் கைகள்
இணைந்தது
பின்பு
பிரிந்ததெப்படி?

Teri baahon mein beeti har shyaam
Bewafa yeh bhi kya yaad nahin

உங்களது
அரவணைப்பில் தான்
எனது
ஒவ்வொரு
மாலைபொழுதும்
கழிந்தது
காதலுக்கு
விசுவாவசமாக இல்லாதவரே...!
இது என்ன
நினைவில்லையா
உங்களுக்கு..?
--------------------------------------
Oh kehne waale mujhko farebi
Kaun farebi hai yeh bata

என்னை வஞ்சகன்
என்று
உரைத்தவரே..!
யார் வஞ்சகர்
கொஞ்சம்
நிதானித்து
சொல்லுங்கள்..!

Woh jisne gham liya pyaar ki khaatir
Ya jisne pyaar ko bech diya

யார் வஞ்சகன்..?
காதலுக்காக
வலியை
வாங்கிக் கொண்டவரா?
அல்லது
காதலை
காசு பணத்துக்காக
விற்று விட்டவரா?

Nasha daulat ka aisa bhi kya
Ke tujhe kuch bhi yaad nahin

என்ன
வகையான
போதையை
இந்த பணம்
தந்திருக்கிறது
பாருங்கள்..!
உங்களுக்கு
காதல் பற்றிய
எந்த
ஞாபகமும் இல்லாமல்
செய்து விட்டது..!
-------------------------------
Kya hua tera waada
Woh kasam, woh iraada

என்ன ஆயிற்று...?
உங்களது வாக்கு..!
நீங்கள் சொன்ன அந்த சத்தியம்..!!
உங்களுக்கு தோன்றிய அந்த நோக்கம், ஆசை ...!!!



Bhoolega dil jis din tumhe
Woh din zindagi ka aakhri din hoga

உங்களை
என் இதயம்
மறக்கும்
தினம் -
அத்தினமே
என் வாழ்க்கையின்
கடைசி
தினமாகும்

-------------------------------

No comments: