நம் உடல் மிகவும் முக்கியமானது, கவனிக்கப்பட வேண்டியது, குரான் ஷரீஃபின் கூற்றுப்படி இறைவன் தன்னுடைய ரூஹை ஊதுவதற்கு அந்த ரூஹை தாங்குவதற்கு ஏற்ற ஒரு பையாக ரூஹு தங்கி செல்லும் ஒரு வசிப்பிடமாக இந்த உடலே உள்ளது.
நம் உடலுக்குள் எத்தனையோ சங்கதிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நான் ஒரு வலைத்தளத்தோட லிங்கை பார்த்தேன். அந்த லிங்கை கீழே தருகிறேன். போய் பாருங்கள்.
http://www.innerbody.com/htm/body.html
எவ்வளவு நுணுக்கமான நெட்வொர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உடலுக்குள். நரம்பு, எலும்புகளிலிருந்து மூளை, இதயம், நுரையீரல், கல்லீரலிருந்து, இரத்தம், நீர், ஆகாரத்திலிருந்து, கண், காது, மூக்குகளிலிருந்து இப்படி இருந்து இருந்துன்னு முடிவில்லாம போய்கிட்டே இருக்கும்.
ஒரு நாள் வரும், அந்த நாளில் யார் சொல்லியும் கேக்காமல் எந்த முறையீடுக்கும் கட்டுப்படாமல் அது பாட்டுக்கு இந்த இயக்கத்தை எல்லாம் ஒரேயடியாக நிறுத்தி விட்டு நீங்க அழுதா அழுதுகிட்டு இரிங்க, எனக்கென்னா? என்ற ரீதியில் அது பாட்டுக்கு போய் கிட்டே இருக்கும்.
ஆனால் அந்த நாள் வரும் வரைக்கும், அல்லது அந்த நாளையே தள்ளி போடலாம் என்ற அவாவில் அல்லது அந்த நாள் வரும் வரைக்கும் கொஞ்சநஞ்சம் வேலை செய்துக் கொண்டிருக்கிற உடல் இயக்கங்களை கொண்டு நோகாமல் வலி வராமல் இருப்பதற்காக நம் உடலை நலமுடன் வைத்திருப்பதற்காக உடல் கூறுகளின் வித்தைகளை அறிந்த ஒரு நிபுணரை சோ கால்ட் டாக்டரை நாம் சந்திக்க செல்வதுண்டு.
அப்படி ஒரு மருத்துவரை நாம் அணுகும் போது என்னென்ன எதிர்ப்பார்ப்புகளோடு அணுகுவோம் அல்லது அணுக வேண்டும் (not limited with):
1. நல்ல அறிவாளி - Brainy
2. கைராசிக்காரர் - Lucky Person
3. இரக்க உணர்வு - Compassionate
4. மனிதாபிமானம் - Humanity
5. புர்ந்துணர்வு - Empathy
6. அர்ப்பணிப்பு - Dedication
7. தியாக உணர்வு - Sacrifice
8. பொறுமை - Tolerant
9. பரிவு - Considerate
10. தாராள உள்ளம் - Generous
இப்படி இன்னும் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகளோடு தான் ஒரு உடல் வைத்தியரை நாம் அணுகுவோம்.
ஒரு வைத்தியராக பணியாற்ற academic excellence மட்டுமே போதுமானது அல்ல, அதையும் தாண்டிய extra miles செல்லக்கூடிய ஒரு அணுகு முறையை தனக்கே உரியதாக்கி இருக்க வேண்டும்.
மருத்துவர் தனது உடலை காட்ட வந்தவர்களிடம் கெட்ட செய்தியை சொல்ல வேண்டியது வரும், எனக்கு ஒரு தடவை கடுமையான வயிற்று வலி வந்தது, ஒரு மருத்துவரிடம் காட்டினேன், அவர் தவறாக டயக்னைஸ் செய்தது மட்டுமல்லாது அதை அவர் சொல்லிய விதம், எடுத்த எடுப்பிலேயே,
“கிட்னி ஃபெயிலியர், அறுத்து எரிஞ்சிட வேண்டியது தான்...”
- என்னா இது? - இப்படியா? சொல்ற முறைன்னு ஒண்ணு இருக்கு, body language, tone இதெல்லாம் எவ்வளவு முக்கியம்.
என்னோட வகுப்புல நான் பாடம் நடத்தும் போது மாணவர்களை பார்த்து கேட்டேன், “ஒரு டாக்டரை பார்க்க போனீங்கன்னா மொதொ மொதோ அவர் உங்கள பாத்து கேக்குற கேள்வி என்னா..? என்று
நான் இப்படி பதில் வரும்னு எதிர்ப்பார்த்தேன்,
“வாங்க... உங்க ஒடம்புக்கு என்னா செய்யுது?”
“உடல்ல என்ன பிரச்சினை..?’
இப்படிலாம் வந்திருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை தான், ஆனா... பாருங்க... ஒரு பையன் சொல்றான்...”
”வாங்க... பாக்கெட்ல (அல்லது பர்ஸ்ல) எவ்ளோ காசு வச்சிருக்கீங்க...”
- அப்டின்னு கேக்குறாங்களாம்... காசு தான்.. சுபஹானல்லாஹ்...
ஆனால் நான் மேலே சொன்ன பத்து குணங்களையும் தன்னகத்தே கொண்ட மருத்துவர் ஒருத்தர் இருந்தார், அவர் பெயர் மோகன். அவர் குடும்ப டாக்டரெல்லாம் கிடையாதுங்க... எங்களது குடும்பத்தில் ஒருவர்...
இன்னை ரத்த உறவுகளே சொத்து சண்டையில் சந்தியில் நிக்கிது. ஆனால், ஒரு டாக்டருக்கும் பேஷண்டுக்கும் உள்ள ரிலேசன்ஷிப்பை தாண்டி அதாவது ஆங்கிலத்தில் bedside manners என்று சொல்வார்களே அதனையும் தாண்டி
ஒரு இரத்த சொந்தம் மாதிரியான உறவு எங்களுடையதாக இருந்தது.
மருத்துவர் மோகன் எனது மகளின் உருவத்தை வரைகிறார்.
ஒரு நாள் தொலைபேசியில் எனது தகப்பானார் என்னை அழைத்து, “மோகன் டாக்டருக்கு ஆக்ஸிடெண்ட்ப்பா.. பயங்கர அடி... சென்னைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க..”
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, ”..சேலத்துக்கு கூட்டிட்டு போயிருக்காங்க...”
யாரை..? எங்களுக்கெல்லாம் சொந்தம் மாதிரி இருந்தவரை.. எங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒருத்தருக்கு உடல் நலமில்லை என்றால் ராத்திரி பகல் பாராது வந்திருந்து வைத்தியத்தோடு தைரியத்தையும் கொடுத்தவரை, எனது சிறிய தாயார் கேன்ஸரின் பிடியில் மரணத்தின் மடியில் இருந்த போது.. அருகில் நின்றவர்களை யாசீன் ஓத சொல்லி நினைவூட்டியவரை...”
அப்புறம் மெஸேஜ் வருது, “மோகன் டாக்டர் மவுத்..”
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
இனி, எங்கே போய் தேடுவது?
மருந்தோடு மனிதநேயத்தையும் கலந்து தரும் அந்த மாமனிதரை
என்ன ஒரு aptitude, என்ன ஒரு aptitude, என்ன ஒரு character, என்ன ஒரு commitment, என்ன ஒரு demeanour...
ஒரு மருத்துவருக்கு limitation உள்ளது, அவரை ‘எப்படியாவது காப்பாத்துங்க...” என்று நோயுற்றவரின் சொந்தபந்தங்கள் அழுதாலும், அனைவருக்கும் நன்றாக தெரியவே செய்யும், “இவர் இறைவன் அல்ல...” என்பது.
என்றாலும், அந்த நிமிடம், சில நேரங்களின், நோயுற்றவரின் உயிர் மருத்துவரின் கையில் இருக்கும், எல்லா நோயுக்கும் மருந்துள்ளது.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த சதைத்துண்டு மனித இருதயமே” என்று கூறியுள்ளார்கள்.
மருத்துவர் உள்பட எந்த மனிதரானாலும் இருதயம் சீரழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல மருத்துவரை இழந்த பிறகு தான் உடலை பற்றிய கவலையே வரும். இப்போது எனக்கு வந்திருக்கிறது.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, எத்தனையோ ஏழை எளியவர்களிடம் காசை கராராக கேட்டு அறுத்தெடுக்காமல் இல்லாதவர்களிடம் எதுவும் வாங்காமலேயே வைத்தியம் செய்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது Patientகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உளமாற பதிவு செய்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, எத்தனையோ ஏழை எளியவர்களிடம் காசை கராராக கேட்டு அறுத்தெடுக்காமல் இல்லாதவர்களிடம் எதுவும் வாங்காமலேயே வைத்தியம் செய்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது Patientகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உளமாற பதிவு செய்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாள் ஒரு மாதிரியாக மூச்சு விட முடியாமல் சிரமம் வந்தது, எனது தாயார் சொல்வார்கள், சின்ன வயசுலேயே கெனைப்பு மாதிரி வருமாம, அவர்கள் அப்படி தான் சொல்வார்கள், அப்படி மறுபடி வந்த போது மருத்துவர் ராஜேந்திரன் என்பவரிடம் எனது மாமா (நாகப்பட்டினம் சர் அஹ்மத் தெரு கமால் மாமா) அவர்கள் அழைத்து சென்றார்கள்.
அவர் ஏதேதோ டெஸ்ட் எடுத்தார். எல்லாம் நார்மலாக இருக்கிறதே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஓடிபோச்சு என்றார்.
நான் நேராக எங்கள் ஹஜ்ரத்திடம் ஓடினேன்,
“நாளைக்கி வா..” என்றார்கள்
ஒரு தாளில் அவர்கள் கைப்பட எழுதிய இஸ்மை (குரான் ஆயத்து) எழுதி வைத்திருந்தார்கள். (அந்த தாளை உயிருக்கும் மேலாக வைத்திருக்கிறேன்)
இதை டெய்லி ஓதி வர வேண்டும் என்றார்கள்.
வாங்கினேன்,,,, ஓதினேன்...
வியாதி ஓடினேன் என்று அப்போது தான் ஓடிப்போனது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மருந்து சிகிச்சை சம்மந்தமான சில குரான் ஷரீஃப் வசனங்கள்:
1.
9. ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
14வது வாக்கியம்
... இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்
2.
10. ஸூரத்து யூனுஸ் (நபி)
57வது வாக்கியம்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது
3
16. ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
69வது வாக்கியம்
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
4.
17. ஸூரத்து பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் (Israel) சந்ததிகள்)
82வது வாக்கியம்
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால், அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
5.
26. ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
80வது வாக்கியம்
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்தினன்.”
(இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக வருகிறது)
6.
41. ஸூரத்து ஹாமீம் ஸ்ஜ்தா
44வது வாக்கியம்
நாம் இதை (குர்ஆனை) அரபில்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).
இஸ்லாமிய சூஃபியிச சிகிச்சை சம்மந்தமான சில இணைப்புகள்:
http://en.wikipedia.org/wiki/Islamic_medicine
http://www.ishim.net/ishimj/2/02.pdf
http://www.mysticsaint.info/2008/07/spiritual-healing-in-islamic-sufi.html
http://www.nurmuhammad.com/Meditation/EnergyHealing/harvardhealinglecture.htm