Sunday, October 07, 2012

எல்லையில்லை உனது கடல் கண்களில் - 7 கூன் மாஃப் எனும் படத்தில் வரும் குல்ஜார் சாபின் பாடல்


இந்த லிங்கில் பாடல் தொடங்கும் முன் வரும் கவிதை இடம் பெறுகிறது:
http://www.youtube.com/watch?v=dM12mtXKRk8&feature=relmfu

 தொடங்கும் முன் வரும் கவிதை:

Ik baar to yun hoga, thoda sa sukoon hoga
Na dil mein kasak hogi, na sar pe junoon hoga
என்றேனும் ஒரு நாள் இது நடைபெறும் - 
கொஞ்சம் அமைதி பெறும்

என் இதயத்தில் அப்போது இபோது இருக்கும் இந்த ஏக்கம் இருக்காது
அப்போது இந்த (தலைக்)கனம் இருக்காது

இனி பாடல்

bekaraan hai bekaraan 
aankhein bandh kijay na
dubne lagey hai 
hum saans lene dijay na 
Lillaah...
ek zara chehra udhar kijay inayat hogi
aap ko dekh ke badi der se meri saans ruki hai 
எல்லையில்லை எல்லையில்லை
உன் கடல் போன்ற பெரிய கண்களை
கொஞ்சம் மூடிக் கொள் -
அதன் ஆழத்தில் 
மூழ்குகின்றேன்...
மூச்சு திணறுகின்றேன்..
யா அல்லாஹ்..!
உன்னைத் தவிர யாருமில்லை..!
எனக்கொரு உபகாரம் செய்
உன் தெய்வாதீனம் பொருந்திய முகத்தை
வேறொரு பக்கம் திருப்பி விடு
நான் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறேன்..
உனை பார்க்கும் என் கண்கள் - உன் முகத்தை விட்டு 
மீள முடியாமல் தவிக்கையில்
என் சுவாசம் பறிபோகிறது
(Udti-udti si nazar mujhko chho jaaye agar
Ek tasleem ko har baar meri aankh jhuki hai
aap ko dekh ke badi der se meri (saans) ruki hai)
- Muqarrar... Muqarrar

ekzara dekhiye toh aapke paaon tale kuch toh atka hai kahin
waqt se kahiye chale
Udti udti si nazar mujhko chu jaaye aa gaye ek taslim ki
har baar meri aankh jhuki hai

aap ko dekh ke badi der se meri saans ruhi hai

உன் பாதங்களின் கீழ் கொஞ்சம் உற்றுப் பார்..! 
எதுவோ மிதிபட்டு கிடக்கின்றது பார்..!
அது காலநேரமின்றி வேறொன்றுமில்லை
உன் பாதங்களை விட்டு நகர்ந்து செல்ல அதற்கு அனுமதி அளி..! 
போகிற போக்கில் நீ பார்க்கின்ற பார்வை எனக்கு ஸலாம் சொல்கிறது
என் கண்கள் பதிலாக தலை சாய்த்து ஸலாத்தை மரியாதையோடு ஏற்றுக்கொள்கிறது
உனை பார்க்கும் என் கண்கள் உன் முகத்தை விட்டு
மீள முடியாமல் தவிக்கையில்
என் சுவாசம் பறிபோகிறது.

No comments: