குரான் ஷரீஃப் 6 (சூரத்துல் அன்ஆம் - ஆடு, மாடு, ஒட்டகம்): 38 வது வசனம்
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும்உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
பூமியில் இருக்கும் அத்தனை படைப்புகளும் நம்மை போன்ற சமூகமாக வாழ்வதாக குரான் ஷரீஃப் சொல்கிறது.
அந்த வகையில் குரான் ஷரீஃபில் எறும்புகளின் வாழ்க்கை முறையை பற்றி சொல்லப்படுகிறது. எறும்பு ஒன்று சுலைமான் நபியிடம் உரையாடியதாக கூட வருகிறது. இத்தகைய எறும்புகளை பற்றி நான் படித்த செய்தி ஒன்று ஆச்சர்யமாக கூட இருந்தது.
அந்த செய்தி இங்கே:
These insects have the strength to carry food up to seven times their own body weight, and set up amazingly complex colonies, nests and homes, with social orders in which every member has a role. Each ant in a colony seemed to have its own schema, and yet the group as a whole appeared to be highly organized. This organization is accomplished under strict supervision and through interaction among individuals.
Ants live together in large colonies organized under one powerful female ant which rules, known as the queen. Ants usually nest in soil or wood, and a single ant colony may contain as many as 20 million individual ants. Most of them are female; only a few male ants are produced to mate with the queen.
One of the most unusual things about ants is their ability to communicate. Signaling each other with distinctive hormones, ants work together to build and move their nests, raise the young, and find food. Ants sometimes fight other ant colonies, and they even arrest other ants and enslave them.
குரான் ஷரீஃப் 27 (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 18 (வது வசனம்)
இறுதியாக எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் (பெண்) எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி); “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’” என்று கூறிற்று.
மேலே கண்ட குரான் ஷரீஃபின் வசனத்தில் பெண் எறும்பு தலைமை பொறுப்பில் இருக்கிறது என்பது ஒரு செய்தி, அது அல்லாமல் கவனிக்க வேண்டிய சில செய்திகளும் உள்ளது, ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் எறும்பு மற்ற எறும்புகளை காப்பாற்றும் நோக்கத்தில் ‘நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று சொல்கிறது. இன்றைக்கு தலைவர்களாக இருப்பவர்களுக்கே இது ஒரு பெரும் பாடமாக இருக்கிறது. தன் நலனை பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் தனக்கு கீழ் இருப்பவர்களை பற்றியும் கவலை கொண்டு காப்பாற்றும் எண்ணம் எறும்புக்கு இருக்கிறது.
அடுத்து, சுலைமான் நபியும் அவர்களுடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு என்று கூறுவதை கவனியுங்கள். என்ன அழகான பேச்சு. யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை. நம்ம போய் சுலைமான் நபியிடத்திலே சொல்ல முடியாது, சுலைமான் நபியவர்களும் அவர்களுடைய சேனைகளும் கீழே எறும்புகள் உள்ளதா என்று பார்த்து அதன் மேல் காலை வைத்து நசுக்குவதுமில்லை, ஆகையினால் அவர்கள் அறியாத வண்ணம் நசுக்கி விடப் போகிறார்கள் என்று உள்ளதை உள்ளபடி கூறுகிறதே. இதில் ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அல்லவா படிப்பினை இருக்கிறது.
இதில் அவ்வளவு பாடம் இருந்ததால் தான் எறும்பின் இந்த பேச்சை கேட்ட சுலைமான் நபி அவர்கள் சிரித்து விட்டு இறைவனிடத்திலே நன்மைகள் செய்ய அருள் செய்வாக என்று துவா கேட்டார்கள். சுலைமான் நபி ஓர் அரசர். தமிழில் கூட இவர்களின் வாழ்க்கையை பற்றி ‘இராஜநாயகம்’ என்ற படைப்பு உண்டு. இராஜநாயகம் என்றால் அரசர்க்கு எல்லாம் தலைவர் என்று அர்த்தம்.
(குறிப்பு: இந்த இராஜநாயகம் எனும் நூலில் உள்ள இலக்கியத்தை தான் ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில் அவர்கள் கூட சிலாகித்து ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற நூலை வடித்தார்கள்).
இப்படிப்பட அரசர்க்கெல்லாம் தலைவரான சுலைமான் நபியவர்களுக்கே எறும்புகள் மூலமாக கூட வாழ்வு முறையை இறைவன் கற்றுக் கொடுத்தான் என்றே நான் கருதுகிறேன். அதற்காக சுலைமான் நபியவர்கள் இறைவனுக்கு நன்றி கூட செலுத்துகிறார்கள்.
குரான் ஷரீஃப் (சூரத்துலந் நம்லி - எறும்புகள் எனும் அத்தியாயம்) : 19 (வது வசனம்)
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
************************************************************
எறும்பு - எழுதியவர் - கவிப்பேரரசு வைரமுத்து
எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!
உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?
நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்
ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?
பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?
உங்கள் பொழுது போக்கு?
வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு
ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு
இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?
உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று
செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.
இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!
சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு
மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்
எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!
உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?
மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.
நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?
வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை
சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?
கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!
உங்களால் மறக்க முடியாதது?
உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.
எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?
எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்
சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?
அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.
சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?
இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு
எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!
மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?
நன்றி எறும்பே நன்றி!
நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு
காணாத காமதேனுவைப் பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!