Friday, October 07, 2011

நகராத பொழுதுகள்.. - குல்ஜார் சாபின் ’கினாரா’ பட பாடல்

கால வெள்ளத்தில்
அடித்து செல்லப்பட்ட
எத்தனையோ
பாறைகள்
இருப்பினும்
விட்டுவிட்டுப் போன
பூக்களும்
இருக்கத்தான் செய்கிறது..


இதோ
காலம் 
விட்டுவிட்டுப் போன
குல்ஜார் சாபின் 
பூ...



Jaane Kya Sochkar Nahin Guzra

Ik Pal Raat Bhar Nahin Guzra 

நினைத்து பார்க்கிறேன்..
கடந்து போன 
சில பொழுதுகள்
நகரவே மாட்டேங்கிறது..!

சில பொழுதுகள்
சில கனங்கள்
இரவுகளோடு சேர்ந்து
நகருவதேயில்லை...!

Apni Tanhai Kaa Auron Se Na Shikva Karna 
Tum Akele Hi Nahin Ho Sabhi Akele Hain
Ye Akela Safar Nahin Guzra

தனிமை..
உங்களின் தனிமை 
பற்றி
யாரிடமும்
புகார் சொல்லிவிட
வேண்டாம்...!

தனிமையோடிருப்பது
நீங்கள் மட்டுமல்ல
உலகமே
தனிமையில் தான்
மிதக்கிறது

எனினும்
பயணங்கள்
தனிமையில்
நகர்வதில்லை...

Do Ghadi Jeene Ki Mohalat To Mili Hai Sabko
Tum Bhi Mil Jaao Ghadi Bhar To Ye Gam Hota Hai
Is Ghadi Ka Safar Nahin Guzra
சொற்ப நேரமே
இளைப்பாற
அனைவருக்கும் உள்ளது

நீ என்னை
சந்திக்கும் வேளையில்
இனம் தெரியா சோகம்
உள்ளுக்குள்

அந்த சோகத்தின் 
பயணங்கள்
நகருவதேயில்லை...

No comments: