Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Wednesday, May 25, 2011
Saturday, May 07, 2011
குரான் ஷரீஃபில் மனைவியை அடிக்க சொல்வது பற்றி...
முஹல்லாவாசி ஒருவரின் மனைவி தனது கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவனோடு தொடர்பு வைத்திருந்தார். கணவனுக்கு தெரிந்த மறுநாளே கணவரையும், தான் பெற்றெடுத்த இரண்டு பிள்ளை கனியமுதுகளையும் விட்டு விட்டு ஓடிப் போய் விட்டார்.
கணவரோ ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார், ‘அவர் அவனை விட்டு விட்டு திரும்ப திருந்தி வருவாரேயானால் நான் ஒரு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று.
-----------------------------------------------------------
இன்னொரு முஹல்லாவாசி எப்போதும் அரை கை சட்டை போடுபவர். நிகாஹ் முடிந்த பிறகு மாப்பிள்ளை மாதிரி முழுகை சட்டை அணிந்தவாறு வந்தார்.
‘சூப்பரா இக்கிதுங்கணி..’ என்றால் ‘எல்லாம் அவன் செயல்’ என்பது போல்
‘எல்லாம் பொண்டாட்டி செயல்..’ என்றார்.
ஆஹா நம்மளும் நிகாஹுக்கு பிறகு இப்படி தான் முழுகை சட்டை எல்லாம் போட்டு அசத்தணும் என்ற ஆசை வந்தது.
ஒரு நாள் முழுகை சட்டையின் ரகசியம் உடைந்தது.
உடைந்த ரகசியம் இது தான், ’அவரது மனைவியோடு சண்டையிட்டதில் அவரது மனைவி கையெல்லாம் கீறி விட்டு கை பூரா ரத்தம் தோய்ந்த கோடுகளாய் காட்சி தந்தது.
அது வெளியே தெரியாமல் இருக்கவே இந்த முழு கை சட்டை ஏற்பாடு.
இதையெல்லாம் அவர் வாயாலேயே கேட்டு தெரிந்த பிறகு என்னை பார்த்து இப்படி கேட்டார், ‘உங்களுக்கு எப்போ நிகாஹ்’ என்று.
இன்னொரு அடி(னு)பவசாலி இப்படி சொன்னார், ‘ஏங்க நம்ம கதைய எல்லாம் சொல்லி அவர பயமுறுத்துறீங்க.. நீங்க பயப்படாதீங்க தம்பி.. நம்ம ம்மா வாப்பா நம்மள அடிச்சதில்ல... நம்மட வாத்தியார் நம்மள அடிச்சதில்ல... அத மாதிரி தான்...’ என்றார்.
நிகாஹ் செய்துகொள்ள அல்ல நிகாஹ் என்ற இந்தி படத்தை பார்க்கவே கூட முதன்முதலாய் பயம் வந்தது.
-------------------------------------------
பொண்டாட்டிட்ட அடிவாங்கிய உண்மை சம்பவம் ஒரு பக்கமா இருக்கட்டும். குரான் ஷரீஃபில் ”...மனைவியை அடியுங்கள்...” என்று ஒரு வசனமே இருக்குதாமே..
இந்த வசனம் பற்றி பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள்.
’இஸ்லாம் வெளிப்படையாகவே மனைவியை அடிக்க சொல்வதால் இது சர்வ நிச்சயமாக ஒரு ஆணாதிக்க மதம்..’
‘மனைவியை அடிப்பதா... முதல்ல அடி வாங்காம இருக்க வழி இருக்கான்னு சொல்லுங்க...’
’அடிக்க சொல்ல ஒரு வேதம் எதற்கு... இதை தான் எல்லா குடிமகன்களும் செய்றாங்களே..’
இன்னும் எப்படியெல்லாம் வாய்க்கு வருதோ எப்படியெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்களோ அப்படியெல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.
சிலர் ’குரான் ஷரீஃப் அப்படி தவறாக வழிகாட்டினாலும் எல்லா முஸ்லீமும் அப்படி செய்வதில்லை..’ என்றும் சொல்கிறார்கள்.
சில பேர் தெரியாதமாறி, ‘உங்க மதத்துல பொண்டாட்டிய அடிக்க சொல்லியிருக்கா, என்ன..?’ என்று மூக்குடைப்பது போல் வாயடைக்காமல் பேசுவார்கள்.
‘சரி நீங்க என்ன இல்லைன்னு சொல்ல போறீங்களான்னு..’ படிக்கிற ஒன்னு ரெண்டு பேரும் என்ன பார்த்து கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்.
இப்போ போலீஸ்காரங்கள பாத்தீங்கன்னா கையில லத்தி, இடுப்புல துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பாங்க... அதுக்கு என்னா அர்த்தம்...? எல்லாத்தையும் சும்மா அடிச்சிகிட்டே இருங்கன்னா அர்த்தம்.. இல்லை பாக்குறவங்கள எல்லாம் சுடுங்கன்னு அர்த்தமா..?
இப்படி பதில் கேள்வி எழுப்பி ’அடியுங்கள்’ என்று வார்த்தையை நியாயப்படுத்த போகிறீர்களா..? என்று கேட்கவும் கூடும்.
’அல்லது டாக்டர் கையில கத்தி இருக்குற மாதிரி உடலை காயப்படுத்தி கட்டுப்போடுவது உடலில் இருக்கிற வியாதியை போக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கை தான்’ என்று விளக்கம் தரப் போகிறீர்களா என்று வினவவும் கூடும்...
‘கிராமத்துல மனப்பிறழ்வு அல்லது சாமி வந்த போது ஒரு மாதிரி வேப்பிலை வைத்துக் கொண்டு அடிப்பார்களே... அந்த மாதிரி அடி தான் இது.. அந்த மாதிரி பிடித்திருக்கிறது நீங்க எடுக்கப்படும் நியாய அடி வைத்தியம் தான் இது...’ என்று அதிரடியாய் கூறப் போகிறீர்களா என்று தோன்றவும் கூடும்.
-------------------------------------------
குரான் ஷரீஃபில் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) என்ற
- 4வது அத்தியாயம் -
- 34 வது வசனம் -
”.... எந்த பெண்கள் விஷயத்தில் - அவர்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களை படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிபட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்”
--------------------------------------------------
மேலே உள்ள இறைவசனத்தில் கணவனுக்கு மாறு செய்யும் பெண்களை பற்றிய விவகாரத்திற்கு மூன்று வழிகள் சல்யுசன்ஸ் சொல்லப்படுகிறது.
இப்போது கணவன், மனைவி இருவரும் இனிய இல்லறம் நடத்தி வருகிறார்கள் என்று வையுங்கள். (ஒவ்வொருவரும் அவரவரை பொருத்தி பார்த்துக் கொள்வது நல்லது)
இப்போது அந்த கணவருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அதாகப்பட்டது அந்த மனைவி இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று.
’ஒரு நிமிஷம்.. நிறுத்துங்கள்’ என்ற குரல் கேட்கிறது.
குரல் தொடர்கிறது, ‘ஏங்க.. மேலே உள்ள இறைவசனத்துல, மாறு செய்வார்கள் என்று தானே வருகிறது.. அதெப்படி நீங்க இந்த இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற உதாரணத்தை தரலாம்.. வேறொரு உதாரணம் பொருந்தி வராதா..’ என்று கேட்டது.
இதே வசனத்தின் முந்தைய பகுதியை பார்த்தீர்கள் என்றால் இப்படி வருகிறது, “..இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்து கொள்வார்கள்..’ என்று வருகிறது.
கணவன் இருக்கும் போது மனம் குளிர வைத்து விடுவதோடு யாரும் இல்லாத போதும் கணவனுடைய மான மரியாதைக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நல்ல மனைவிக்கு அடையாளம்.
யாரும் இல்லாத சமயத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய எதுவும் இதை குறிக்கும் என்றாலும் நான் சொன்ன உதாரணம் முதன்மை பெறுகிறது என்பதால் தான் இதனை குறிப்பிடுகிறேன்.
அதுவும் தவிர, மாறு செய்வது என்ற வார்த்தைக்கு ’நுஸுஜஹுன்ன’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதே நுஸுஜன்’ என்ற வார்த்தை இதே ஸூரத்துன்னிஸாவுன் எனும் அத்தியாயம் 128வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த வசனத்தில் மனைவிக்கு மாறு செய்யும் கணவர்களை பற்றி பேசுகிறது.
மனைவி கணவனுக்கு மாறு செய்வதும், கணவன் மனைவிக்கு மாறு செய்வதும் இரண்டுக்குமே இந்த ஒரு விஷயம் இயல்பாகவே பொருந்தி வரும். இதுவும் ஒரு காரணம் இந்த உதாரணத்தை கொண்டு பேசுவதற்கு..
இனி தொடர்வோம்..
மனைவியின் எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்ஃபேர்ஸை கேட்ட உடனே சாதாரணமா ஊர் உலகத்துல என்ன நடக்குது..?
கணவனுக்கு கோபம் கொப்பளிக்கும். கண்கள் சிவக்கும். வீட்டிற்கு வந்து கண்ணை மூடிக் கொண்டு காதை பொத்திக் கொண்டு மனைவியை அடித்து கவரிமான் ரேஞ்சுக்கு கொன்று போட்டு விடுவார். எத்தனையோ செய்திகள். எத்தனையோ வரலாறுகள்.
குரான் ஷரீஃப் சொல்கிறது, அதெல்லாம் செய்ய கூடாது. நான் மூன்று வழிகள் சொல்கிறேன். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
-----------------------------------------------------------
முதல் வழி:
ஒரு மாதிரி கவுன்சிலிங். அட்மோனிஷ். அட்வைஸ். அறிவுறை, நல்லுபதேசம், எப்படி வெர்பலாக பேசி புரிய வைக்க முடியுமோ அப்படி தவறை உணர வைக்க வேண்டும். இதுவே மிகவும் சவாலான விஷயம் தான்.
ஊர் உலகம் மனைவியை ஒரு மாதிரி பேச ஆரம்பித்த உடனேயே வெளியில் தலை காட்ட முடியாத நிலைமையில் இருப்பதாக உணர்வார்கள்.
இந்த நேரத்தில் தான் போய் பொண்டாட்டியோடு சமாதானம் பேச சொல்கிறது குரான் ஷரீஃப்.
சரி, கள்ளக் காதலனின் ஆசை வார்த்தைகளில் கணவரின் அர்த்தமுள்ள வார்த்தைகள் காணாமல் போய் தொடர்பு தொடர்கிறது என்று வையுங்கள்.
------------------------------------------------------
இரண்டாவது வழி:
முதல் வழியில் பேச சொன்ன குரான் ஷரீஃப் இந்த இரண்டாவது வழியில் பேசாமல் இருக்க சொல்கிறது. அவர்களுடன் எந்த தருணத்திலும் மகிழ்வாக இருக்க கூடாது. அட்வைஸ் பண்ணி பார்த்து சரி வரவில்லை என்றால் அவாய்ட் செய்ய வேண்டும்.
இத்தகைய உங்களது நடவடிக்கையால் குடும்பத்தில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இதுவும் சரிப்பட்டு வராமல், ‘அப்பாடா.. இப்ப தான் நிம்மதியாக இருக்கு..’ என்கிற தொனியில் நடந்து கொண்டு தொடர்ந்து மாறு செய்து கொண்டு நடந்தால் மூன்றாவது வழி.
-------------------------------------------------------
மூன்றாவது வழி:
அடியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கருணையோடு அடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பிரேக்கெட்டில் இலேசாக என்று சேர்க்கவும் பட்டுள்ளது.
இப்பொழுது நாம் அரபியில் என்ன பதம் பயன்படுத்தப் படுகிறது என்று பார்த்து விடுவது நலம்.
’வழ்ரிபூஹுன்ன..’ என்ற அரபி பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வார்த்தை ’யழ்ரிப்’ என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை. இந்த மூல வார்த்தையை குரான் ஷரீஃபில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
உதாரணமாக:
ஸூரத்துர் ரஃது (இடி) எனும்
-13 வது அத்தியாயம் -
-17 வது வசனம் -
’.... கதாலிக யழ்ரிபுல்லாஹுல் ஹக்க வல் பாதில்...’
இங்கே யழ்ரிப் என்ற பதத்திற்கு அடிப்பது என்று பொருள் கொண்டால் கொஞ்சம் கூட பொருந்தாமல் இப்படி வரும்..
‘... இவ்வாறு சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் அடிக்கிறான்...” என்று
ஆனால் ’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ‘எக்ஸ்பிளெய்ன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வோமே.. அந்த அர்த்தம் தான் பொருந்தும் படியாக இருக்கும்..
எப்படி?
‘... இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் விளக்கமளிக்கிறான்...’ என்று.
இவ்வாறு இந்த பதம் இன்னும் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. குரான் ஷரீஃபில் மட்டுமே பத்து அர்த்தங்கள் இடத்திற்கு தக்கவாறு இடம் பெறுகிறதாம். அதில் ஒன்று தான் மேலே கண்ட உதாரணம்.
இன்னும் குரான் ஷரீஃபில் சொல்லப்படாத பல்வேறு அர்த்தங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பழைய அரபிய அகராதியில் அதிகமான அர்த்தங்களை கொண்ட வார்த்தையாக இந்த ‘யழ்ரிப்’ என்ற வார்த்தையே இடம் பெறுகிறதாம்.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் வரும் போது இப்படி தான் மொழி பெயர்ப்பு தடுமாறுகிறது.
உதாரணமாக ‘அடிப்பது’ என்ற தமிழ் வார்த்தையையே எடுத்துக் கொண்டாலும் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்பவதை பேச்சு வழக்கில் காண முடியும்.
‘தண்ணி அடிக்கலாமா?’ என்றால் என்ன அர்த்தம்..
பச்சை தண்ணீரை ஓங்கி அடிப்பது என்று அர்த்தம் சொல்ல மாட்டோம் இல்லையா?
அதே போல் ’பரீச்சைல காப்பி அடிக்க கூடாது’ என்றால் என்ன அர்த்தம்...
ஆங்கிலத்திலும் இதே போல் ‘beat‘ என்ற வார்த்தை பலவாறு பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, ‘இந்தியா பீட் பாகிஸ்தான் இன் தி வேர்ல்ட் கப் செமி ஃபைனல்’ என்றால் என்ன அர்த்தம்?
‘beating around the bush' என்ற phraseல் வரும் ’பீட்’டுக்கு என்ன அர்த்தம்?
எல்லாத்துக்கும் கையால் அடிப்பது என்று பொருள் கொடுக்க முடியுமா?
குரான் ஷரீஃபில் இதே ஸீரத்துன்னிஸாவில் 19வது வசனத்தில் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறான்.
“... இன்னும், அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்” என்று மனைவியிடம் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள், வெறுக்கின்ற ஒன்றில் தான் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்துள்ளான்’ என்று பாடம் நடத்தப்படுகிறது.
இப்படியாபட்ட வசனங்களை உடைய குரான் ஷரீஃபில் ‘அடிக்க’ சொல்லி வருவதாவது...?
அர்த்தம் கொடுப்பதில் தான் தவறு நடந்திருக்க வேண்டும்.
’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் கையாளப்படுகிறது.
1. beat
2. strike
இணையத்தில் மெர்ரியம்-வெப்ஸ்டெர் என்ற அகராதி உள்ளது.
இதில் மேலே உள்ள இரண்டு வார்த்தைக்குமே (verb) நிறைய அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன...
இங்கே வந்து ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதனை தீர்க்கும் வழிகளை சொல்லி கொண்டு வருகிறது.
இங்கே அடிப்பது என்று கையால் அடிப்பது என்று புரிந்து கொண்டால் அர்த்தம் போட்டால் அது எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.
அப்போ, அடிக்க அடிக்க தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தால் பரவாயில்லையா?
இப்படி பலவாறாக யோசித்து தான் ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமே தவிர.. இது தான் என்று முடிவுக்கு வர முடியாது. அடித்து கூறவும் முடியாது...
என்னளவில் கேட்டால் 'strike them out' அதாவது ‘வெளியேற்றி விடுங்கள்’ என்று தான் மூன்றாவது வழியாக நான் புரிந்து கொள்வேன்.
நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
கணவரோ ஒரு கட்டத்தில் இப்படி சொன்னார், ‘அவர் அவனை விட்டு விட்டு திரும்ப திருந்தி வருவாரேயானால் நான் ஒரு பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று.
-----------------------------------------------------------
இன்னொரு முஹல்லாவாசி எப்போதும் அரை கை சட்டை போடுபவர். நிகாஹ் முடிந்த பிறகு மாப்பிள்ளை மாதிரி முழுகை சட்டை அணிந்தவாறு வந்தார்.
‘சூப்பரா இக்கிதுங்கணி..’ என்றால் ‘எல்லாம் அவன் செயல்’ என்பது போல்
‘எல்லாம் பொண்டாட்டி செயல்..’ என்றார்.
ஆஹா நம்மளும் நிகாஹுக்கு பிறகு இப்படி தான் முழுகை சட்டை எல்லாம் போட்டு அசத்தணும் என்ற ஆசை வந்தது.
ஒரு நாள் முழுகை சட்டையின் ரகசியம் உடைந்தது.
உடைந்த ரகசியம் இது தான், ’அவரது மனைவியோடு சண்டையிட்டதில் அவரது மனைவி கையெல்லாம் கீறி விட்டு கை பூரா ரத்தம் தோய்ந்த கோடுகளாய் காட்சி தந்தது.
அது வெளியே தெரியாமல் இருக்கவே இந்த முழு கை சட்டை ஏற்பாடு.
இதையெல்லாம் அவர் வாயாலேயே கேட்டு தெரிந்த பிறகு என்னை பார்த்து இப்படி கேட்டார், ‘உங்களுக்கு எப்போ நிகாஹ்’ என்று.
இன்னொரு அடி(னு)பவசாலி இப்படி சொன்னார், ‘ஏங்க நம்ம கதைய எல்லாம் சொல்லி அவர பயமுறுத்துறீங்க.. நீங்க பயப்படாதீங்க தம்பி.. நம்ம ம்மா வாப்பா நம்மள அடிச்சதில்ல... நம்மட வாத்தியார் நம்மள அடிச்சதில்ல... அத மாதிரி தான்...’ என்றார்.
நிகாஹ் செய்துகொள்ள அல்ல நிகாஹ் என்ற இந்தி படத்தை பார்க்கவே கூட முதன்முதலாய் பயம் வந்தது.
-------------------------------------------
பொண்டாட்டிட்ட அடிவாங்கிய உண்மை சம்பவம் ஒரு பக்கமா இருக்கட்டும். குரான் ஷரீஃபில் ”...மனைவியை அடியுங்கள்...” என்று ஒரு வசனமே இருக்குதாமே..
இந்த வசனம் பற்றி பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள்.
’இஸ்லாம் வெளிப்படையாகவே மனைவியை அடிக்க சொல்வதால் இது சர்வ நிச்சயமாக ஒரு ஆணாதிக்க மதம்..’
‘மனைவியை அடிப்பதா... முதல்ல அடி வாங்காம இருக்க வழி இருக்கான்னு சொல்லுங்க...’
’அடிக்க சொல்ல ஒரு வேதம் எதற்கு... இதை தான் எல்லா குடிமகன்களும் செய்றாங்களே..’
இன்னும் எப்படியெல்லாம் வாய்க்கு வருதோ எப்படியெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்களோ அப்படியெல்லாம் போட்டு வறுத்து எடுக்கிறார்கள்.
சிலர் ’குரான் ஷரீஃப் அப்படி தவறாக வழிகாட்டினாலும் எல்லா முஸ்லீமும் அப்படி செய்வதில்லை..’ என்றும் சொல்கிறார்கள்.
சில பேர் தெரியாதமாறி, ‘உங்க மதத்துல பொண்டாட்டிய அடிக்க சொல்லியிருக்கா, என்ன..?’ என்று மூக்குடைப்பது போல் வாயடைக்காமல் பேசுவார்கள்.
‘சரி நீங்க என்ன இல்லைன்னு சொல்ல போறீங்களான்னு..’ படிக்கிற ஒன்னு ரெண்டு பேரும் என்ன பார்த்து கேப்பீங்கன்னு எனக்கு தெரியும்.
இப்போ போலீஸ்காரங்கள பாத்தீங்கன்னா கையில லத்தி, இடுப்புல துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பாங்க... அதுக்கு என்னா அர்த்தம்...? எல்லாத்தையும் சும்மா அடிச்சிகிட்டே இருங்கன்னா அர்த்தம்.. இல்லை பாக்குறவங்கள எல்லாம் சுடுங்கன்னு அர்த்தமா..?
இப்படி பதில் கேள்வி எழுப்பி ’அடியுங்கள்’ என்று வார்த்தையை நியாயப்படுத்த போகிறீர்களா..? என்று கேட்கவும் கூடும்.
’அல்லது டாக்டர் கையில கத்தி இருக்குற மாதிரி உடலை காயப்படுத்தி கட்டுப்போடுவது உடலில் இருக்கிற வியாதியை போக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கை தான்’ என்று விளக்கம் தரப் போகிறீர்களா என்று வினவவும் கூடும்...
‘கிராமத்துல மனப்பிறழ்வு அல்லது சாமி வந்த போது ஒரு மாதிரி வேப்பிலை வைத்துக் கொண்டு அடிப்பார்களே... அந்த மாதிரி அடி தான் இது.. அந்த மாதிரி பிடித்திருக்கிறது நீங்க எடுக்கப்படும் நியாய அடி வைத்தியம் தான் இது...’ என்று அதிரடியாய் கூறப் போகிறீர்களா என்று தோன்றவும் கூடும்.
-------------------------------------------
குரான் ஷரீஃபில் ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) என்ற
- 4வது அத்தியாயம் -
- 34 வது வசனம் -
”.... எந்த பெண்கள் விஷயத்தில் - அவர்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். அவர்களை படுக்கையிலிருந்து விலக்கி விடுங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிபட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்”
--------------------------------------------------
மேலே உள்ள இறைவசனத்தில் கணவனுக்கு மாறு செய்யும் பெண்களை பற்றிய விவகாரத்திற்கு மூன்று வழிகள் சல்யுசன்ஸ் சொல்லப்படுகிறது.
இப்போது கணவன், மனைவி இருவரும் இனிய இல்லறம் நடத்தி வருகிறார்கள் என்று வையுங்கள். (ஒவ்வொருவரும் அவரவரை பொருத்தி பார்த்துக் கொள்வது நல்லது)
இப்போது அந்த கணவருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. அதாகப்பட்டது அந்த மனைவி இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்று.
’ஒரு நிமிஷம்.. நிறுத்துங்கள்’ என்ற குரல் கேட்கிறது.
குரல் தொடர்கிறது, ‘ஏங்க.. மேலே உள்ள இறைவசனத்துல, மாறு செய்வார்கள் என்று தானே வருகிறது.. அதெப்படி நீங்க இந்த இன்னொருவரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற உதாரணத்தை தரலாம்.. வேறொரு உதாரணம் பொருந்தி வராதா..’ என்று கேட்டது.
இதே வசனத்தின் முந்தைய பகுதியை பார்த்தீர்கள் என்றால் இப்படி வருகிறது, “..இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாத்து கொள்வார்கள்..’ என்று வருகிறது.
கணவன் இருக்கும் போது மனம் குளிர வைத்து விடுவதோடு யாரும் இல்லாத போதும் கணவனுடைய மான மரியாதைக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்பதே நல்ல மனைவிக்கு அடையாளம்.
யாரும் இல்லாத சமயத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய எதுவும் இதை குறிக்கும் என்றாலும் நான் சொன்ன உதாரணம் முதன்மை பெறுகிறது என்பதால் தான் இதனை குறிப்பிடுகிறேன்.
அதுவும் தவிர, மாறு செய்வது என்ற வார்த்தைக்கு ’நுஸுஜஹுன்ன’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதே நுஸுஜன்’ என்ற வார்த்தை இதே ஸூரத்துன்னிஸாவுன் எனும் அத்தியாயம் 128வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த வசனத்தில் மனைவிக்கு மாறு செய்யும் கணவர்களை பற்றி பேசுகிறது.
மனைவி கணவனுக்கு மாறு செய்வதும், கணவன் மனைவிக்கு மாறு செய்வதும் இரண்டுக்குமே இந்த ஒரு விஷயம் இயல்பாகவே பொருந்தி வரும். இதுவும் ஒரு காரணம் இந்த உதாரணத்தை கொண்டு பேசுவதற்கு..
இனி தொடர்வோம்..
மனைவியின் எக்ஸ்ட்ரா மாரிடல் அஃப்ஃபேர்ஸை கேட்ட உடனே சாதாரணமா ஊர் உலகத்துல என்ன நடக்குது..?
கணவனுக்கு கோபம் கொப்பளிக்கும். கண்கள் சிவக்கும். வீட்டிற்கு வந்து கண்ணை மூடிக் கொண்டு காதை பொத்திக் கொண்டு மனைவியை அடித்து கவரிமான் ரேஞ்சுக்கு கொன்று போட்டு விடுவார். எத்தனையோ செய்திகள். எத்தனையோ வரலாறுகள்.
குரான் ஷரீஃப் சொல்கிறது, அதெல்லாம் செய்ய கூடாது. நான் மூன்று வழிகள் சொல்கிறேன். அதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
-----------------------------------------------------------
முதல் வழி:
ஒரு மாதிரி கவுன்சிலிங். அட்மோனிஷ். அட்வைஸ். அறிவுறை, நல்லுபதேசம், எப்படி வெர்பலாக பேசி புரிய வைக்க முடியுமோ அப்படி தவறை உணர வைக்க வேண்டும். இதுவே மிகவும் சவாலான விஷயம் தான்.
ஊர் உலகம் மனைவியை ஒரு மாதிரி பேச ஆரம்பித்த உடனேயே வெளியில் தலை காட்ட முடியாத நிலைமையில் இருப்பதாக உணர்வார்கள்.
இந்த நேரத்தில் தான் போய் பொண்டாட்டியோடு சமாதானம் பேச சொல்கிறது குரான் ஷரீஃப்.
சரி, கள்ளக் காதலனின் ஆசை வார்த்தைகளில் கணவரின் அர்த்தமுள்ள வார்த்தைகள் காணாமல் போய் தொடர்பு தொடர்கிறது என்று வையுங்கள்.
------------------------------------------------------
இரண்டாவது வழி:
முதல் வழியில் பேச சொன்ன குரான் ஷரீஃப் இந்த இரண்டாவது வழியில் பேசாமல் இருக்க சொல்கிறது. அவர்களுடன் எந்த தருணத்திலும் மகிழ்வாக இருக்க கூடாது. அட்வைஸ் பண்ணி பார்த்து சரி வரவில்லை என்றால் அவாய்ட் செய்ய வேண்டும்.
இத்தகைய உங்களது நடவடிக்கையால் குடும்பத்தில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இதுவும் சரிப்பட்டு வராமல், ‘அப்பாடா.. இப்ப தான் நிம்மதியாக இருக்கு..’ என்கிற தொனியில் நடந்து கொண்டு தொடர்ந்து மாறு செய்து கொண்டு நடந்தால் மூன்றாவது வழி.
-------------------------------------------------------
மூன்றாவது வழி:
அடியுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கருணையோடு அடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பிரேக்கெட்டில் இலேசாக என்று சேர்க்கவும் பட்டுள்ளது.
இப்பொழுது நாம் அரபியில் என்ன பதம் பயன்படுத்தப் படுகிறது என்று பார்த்து விடுவது நலம்.
’வழ்ரிபூஹுன்ன..’ என்ற அரபி பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வார்த்தை ’யழ்ரிப்’ என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்த வார்த்தை. இந்த மூல வார்த்தையை குரான் ஷரீஃபில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
உதாரணமாக:
ஸூரத்துர் ரஃது (இடி) எனும்
-13 வது அத்தியாயம் -
-17 வது வசனம் -
’.... கதாலிக யழ்ரிபுல்லாஹுல் ஹக்க வல் பாதில்...’
இங்கே யழ்ரிப் என்ற பதத்திற்கு அடிப்பது என்று பொருள் கொண்டால் கொஞ்சம் கூட பொருந்தாமல் இப்படி வரும்..
‘... இவ்வாறு சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் அடிக்கிறான்...” என்று
ஆனால் ’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ‘எக்ஸ்பிளெய்ன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வோமே.. அந்த அர்த்தம் தான் பொருந்தும் படியாக இருக்கும்..
எப்படி?
‘... இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் விளக்கமளிக்கிறான்...’ என்று.
இவ்வாறு இந்த பதம் இன்னும் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. குரான் ஷரீஃபில் மட்டுமே பத்து அர்த்தங்கள் இடத்திற்கு தக்கவாறு இடம் பெறுகிறதாம். அதில் ஒன்று தான் மேலே கண்ட உதாரணம்.
இன்னும் குரான் ஷரீஃபில் சொல்லப்படாத பல்வேறு அர்த்தங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. பழைய அரபிய அகராதியில் அதிகமான அர்த்தங்களை கொண்ட வார்த்தையாக இந்த ‘யழ்ரிப்’ என்ற வார்த்தையே இடம் பெறுகிறதாம்.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் வரும் போது இப்படி தான் மொழி பெயர்ப்பு தடுமாறுகிறது.
உதாரணமாக ‘அடிப்பது’ என்ற தமிழ் வார்த்தையையே எடுத்துக் கொண்டாலும் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்பவதை பேச்சு வழக்கில் காண முடியும்.
‘தண்ணி அடிக்கலாமா?’ என்றால் என்ன அர்த்தம்..
பச்சை தண்ணீரை ஓங்கி அடிப்பது என்று அர்த்தம் சொல்ல மாட்டோம் இல்லையா?
அதே போல் ’பரீச்சைல காப்பி அடிக்க கூடாது’ என்றால் என்ன அர்த்தம்...
ஆங்கிலத்திலும் இதே போல் ‘beat‘ என்ற வார்த்தை பலவாறு பயன்படுத்த முடியும்.
உதாரணமாக, ‘இந்தியா பீட் பாகிஸ்தான் இன் தி வேர்ல்ட் கப் செமி ஃபைனல்’ என்றால் என்ன அர்த்தம்?
‘beating around the bush' என்ற phraseல் வரும் ’பீட்’டுக்கு என்ன அர்த்தம்?
எல்லாத்துக்கும் கையால் அடிப்பது என்று பொருள் கொடுக்க முடியுமா?
குரான் ஷரீஃபில் இதே ஸீரத்துன்னிஸாவில் 19வது வசனத்தில் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறான்.
“... இன்னும், அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்” என்று மனைவியிடம் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், வெறுக்காதீர்கள், வெறுக்கின்ற ஒன்றில் தான் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்துள்ளான்’ என்று பாடம் நடத்தப்படுகிறது.
இப்படியாபட்ட வசனங்களை உடைய குரான் ஷரீஃபில் ‘அடிக்க’ சொல்லி வருவதாவது...?
அர்த்தம் கொடுப்பதில் தான் தவறு நடந்திருக்க வேண்டும்.
’யழ்ரிப்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் கையாளப்படுகிறது.
1. beat
2. strike
இணையத்தில் மெர்ரியம்-வெப்ஸ்டெர் என்ற அகராதி உள்ளது.
இதில் மேலே உள்ள இரண்டு வார்த்தைக்குமே (verb) நிறைய அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன...
இங்கே வந்து ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதனை தீர்க்கும் வழிகளை சொல்லி கொண்டு வருகிறது.
இங்கே அடிப்பது என்று கையால் அடிப்பது என்று புரிந்து கொண்டால் அர்த்தம் போட்டால் அது எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.
அப்போ, அடிக்க அடிக்க தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தால் பரவாயில்லையா?
இப்படி பலவாறாக யோசித்து தான் ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமே தவிர.. இது தான் என்று முடிவுக்கு வர முடியாது. அடித்து கூறவும் முடியாது...
என்னளவில் கேட்டால் 'strike them out' அதாவது ‘வெளியேற்றி விடுங்கள்’ என்று தான் மூன்றாவது வழியாக நான் புரிந்து கொள்வேன்.
நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
Labels:
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Thursday, April 28, 2011
ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் (திரைப்பட பாடல்கள்)
தேனின் சுவை
காதுகளுக்கு..!
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.
வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.
அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...
------------------------------------------------
Choti baaten,
Choti choti baaton ki hai yaadein bani,
Bhoole nahin bithi hui ek choti ghadi,
Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,
Bhole bhale,
Bhole bhale dil ko behlate rahe,
உனது
Tanhai mein tere khayalon ko sajate rahe,
Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,
Roothi hui raaton ko jagaya kabhi,
Tere liye bithi subah ko bulaya kabhi,
Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,
நீயின்றி
தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.
அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.
அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.
இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..
அப்போது இவனது நினைவுகளில்..
-------------------------------------------------
kahii.n duur jab din Dhal jaae
saa.Njh kii dulhan badan churaae
chupake se aae
mere Kayaalo.n ke aa.ngan me.n
kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n
tabhii machal ke, pyaar se chhal ke
chhue koii mujhe par nazar na aae, nazar na aae
kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate
kahii.n se nikal aae, janmo.n ke naate
apanaa hii hoke sahe dard paraae, dard paraae
dil jaane, mere saare, bhed ye gahare
ho gae kaise mere, sapane sunahare
ye mere sapane, yahii to hai.n apane
mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye
’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’
‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’
‘நல்லா தானே இருந்தார்..’
- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?
அதுவும் போன இடம் சொல்லாமல்...?
போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!
போன இடம் பற்றி பகிருங்கள்....
--------------------------------------------------------
Zindagi kaisi hai paheli haaye
காதுகளுக்கு..!
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
----------------------------------------------------------
டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.
வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.
அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...
------------------------------------------------
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்
Teri ankhon ke saye churaye rasili yaadon ne,
(அந்த கனவானது)
(அந்த கனவானது)
உனது விழிகளின்
வழி
எண்ணங்களை
களவாடி
இனிய நினைவுகளால்
நிரப்பி விடும்
Choti baaten,
சிறிய விஷயங்கள்
Choti choti baaton ki hai yaadein bani,
சிறிய விஷயங்கள்
தான்
நாம் அதிகமாக
நினைவில் வைத்துக்
கொள்வது
Bhoole nahin bithi hui ek choti ghadi,
ஒரு
சின்ன கனத்தை
கூட
நான்
மறக்கவே இல்லை
Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,
பல பிறப்புகளாய்
வழி மேல்
விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்..
Bhole bhale,
குழந்தைத்தனம்
(சிறுபிள்ளைத்தனமான என்ற அர்த்தத்தில் சொல்வோமே அதுவல்ல - ஒரு குற்றங் குறை அறியாத கள்ளம் கபடமில்லாத)
Bhole bhale dil ko behlate rahe,
உனது
குழந்தைத்தனமான
இதயத்தால்
நான்
களிப்படைகிறேன்
Tanhai mein tere khayalon ko sajate rahe,
தனிமையில்
உனது நினைவுகளை
ஆடையாய்
அணிந்து கொள்கிறேன்
Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,
சில பொழுதுகளில்
உனது
குரல் கேட்கிறது
குரல் கேட்கிறது
அந்த குரல்
என்னை
விழிப்படைய செய்கிறது
Roothi raatein,
கோபமான இரவுகள்
Roothi hui raaton ko jagaya kabhi,
கோபமான இரவுகளை
நான்
சில பொழுதுகளில்
வாங்கி வருகிறேன்
Tere liye bithi subah ko bulaya kabhi,
வேறு
சில பொழுதுகளில்
அழகான அமைதியான சுபுஹ் (விடிந்தும் விடியாத அதிகாலை) நேரங்களை
வாங்கி வருகிறேன்
Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,
நீயின்றி
உனக்காக
இரவில்
விளக்கை ஏற்றுகிறேன்
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
----------------------------------------------------------
தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.
அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.
அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.
இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..
அப்போது இவனது நினைவுகளில்..
-------------------------------------------------
kahii.n duur jab din Dhal jaae
எங்கேயோ
தொலை தூரத்தில்
நாளின் முடிவில்
saa.Njh kii dulhan badan churaae
மாலைப் பொழுதெனும்
மணமகளின்
உடல்
களவாடப்படும் பொழுது
chupake se aae
ரகசியமாக
mere Kayaalo.n ke aa.ngan me.n
எனது நினைவுகளின்
தலைவாசலில்
koi sapano.n ke diip jalaae, diip jalaae
யாரோஒருவர்
கனவுகளெனும்
விளக்கை
ஏற்றினர்
kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n
சில பொழுதுகளில்
எனது சுவாசம்
காரணமின்றி
கடினமாகிறது
bhar aaii baiThe baiThe, jab yuu.Nhii.n aa.Nkhe.n
காரணமின்றி
என் கண்கள்
கண்ணீரில்
நனைந்து விடுகிறது
tabhii machal ke, pyaar se chhal ke
யாரோ ஒருவர்
உள்ளத்தில்
கிளர்ச்சியை தூண்டியதுடன்
காதலோடும் என்னுடன்
காலாற நடக்கின்றனர்
chhue koii mujhe par nazar na aae, nazar na aae
இதயத்தை தொடும்
அவர்
கண்களுக்கு மட்டும் தென்படவில்லை
kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate
சில பொழுதுகளில்
இரு இதயங்கள்
சந்தித்துக்
கொள்வதில்லை
kahii.n se nikal aae, janmo.n ke naate
ஆனால்
சில பொழுதுகளில்
சந்தித்தேயிராத
அந்த இதயங்களுக்குறியவர்கள்
அந்த இதயங்களுக்குறியவர்கள்
ஜென்மம் வரை
இணைந்திருக்கின்றனர்
ghanii thii ulajhan, bairii apanaa man
என்ன புதிர் இது
இந்த இதயத்தில்
என்ன முரண்பாடு
இந்த இதயத்திற்குள்
apanaa hii hoke sahe dard paraae, dard paraae
ஒருவருக்கு
உரிமையாயிருக்கிறது
பிறரின்
சோகங்களை
சுமக்கிறது
dil jaane, mere saare, bhed ye gahare
என் இதயத்திற்கு
மட்டுமே
தெரிந்த
இரகசியம்
ho gae kaise mere, sapane sunahare
எப்படி
என் கனவுகள்
தங்கமாக
மாறுகிறதென்பது
ye mere sapane, yahii to hai.n apane
இது என்னுடைய
கனவு
இது ஒன்றுதான்
இப்போது எனக்கென
இப்போது எனக்கென
இருக்கும்
ஒரே ஒரு
உறவு
mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye
என்னை விட்டு
பிரிவதில்லை
அந்த கனவின்
நிழலும் கூட
அந்த கனவின்
நிழலும் கூட
----------------------------------------------------------
’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’
‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’
‘நல்லா தானே இருந்தார்..’
- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?
அதுவும் போன இடம் சொல்லாமல்...?
போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!
போன இடம் பற்றி பகிருங்கள்....
--------------------------------------------------------
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்..
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்
Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்
Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்
Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்
Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்
Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக...
Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaayeசில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்
Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்
Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்
Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்
Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்
Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக...
Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaayeசில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Labels:
இந்தி படங்கள்,
ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி
Wednesday, April 27, 2011
நவீன சாமிரிகள்
குரான் ஷரீஃப் வசனம்:
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்
இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம்.
அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.
மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள்.
இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.
திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்
அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார்.
எதில் கண்டு இருக்கிறார்?
தூதரின் காலடி மண்ணில்,
- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.
2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.
3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.
4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.
6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.
7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.
நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.
சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள்,
சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள்.
சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள்.
சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.
இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...
"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
-ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) - 152 வது வசனம்
இந்த வசனம் ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வசனம்.
அதாவது யாகூர் நபி என்றழைக்கப்பட்ட இஸ்ராயீலின் சந்ததிகளை பிர்அவ்ன் எனும் அரசன் அடிமையாக்கி தன்னையே கடவுளென வணங்கி வரும் படியும் ஏவினான். இறைவன் அந்த மக்களை மூஸா நபி மூலமாக காப்பாற்றி பிர் அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்த பிறகு இறைவனிடமிருந்து செய்தியை பெற தூர்சினாய்க்கு செல்கிறார்கள்.
மூஸா நபிய்வர்கள் 40 நாட்கள் தான் தன்னுடைய மக்களை விட்டு பிரிந்து போனார்கள், வேறு எங்கும் அல்ல, இறைவனைக் கண்டு கட்டளைகளை பெற்று வர தூர்சினாய்க்கு தான் சென்றார்கள்.
இறைவன் மூஸா நபியவர்களுக்கு உண்மையான இறை மார்க்கத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் போலியான இன்னொரு போட்டி மார்க்கத்தை சாமிரி என்பவர் உருவாக்கினார். எந்த மக்கள் இறைவனின் அத்தாட்சியை கண்கூடாக பார்த்தார்களோ அதே மக்கள் அந்த சாமிரி உருவாக்கின அந்த போட்டி மதத்தை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.
திரும்பி வந்து சாமிரியிடம் மூஸா நபியவர்கள் இது பற்றி ’உன் விஷயமென்ன?’ என்று கேட்டபோது அவன் அழகாக பதில் சொன்னான்.
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
-ஸூரத்து தாஹா - 96 வது வசனம்
அவர்கள் காணாத ஒன்றை சாமிரி கண்டு இருக்கிறார்.
எதில் கண்டு இருக்கிறார்?
தூதரின் காலடி மண்ணில்,
- சாமிரி பொய் சொல்லவில்லை என்று கொண்டால் (உண்மையும் அது தான்), இதிலிருந்து நாம் சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
1. தூதரின் காலடி மண்ணில் ஏதோ ஒரு அற்புதம் இருந்திருக்கிறது.
2. தூதரின் காலடியில் இருந்த ஏதோ ஒரு அற்புதத்தை சாமிரியும் கண்டு இருக்கிறார்.
3. மற்றவர்களுக்கு இந்த அற்புதம் விளங்கவில்லை, அவர்கள் இந்த அற்புதத்தை கவனிப்பாராகவும் இருக்கவில்லை.
4. மற்றவர்களை விட சாமிரியான இவர் மறைவான உண்மைகளை அறியக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
5. அந்த தூதர் காலடி பட்ட மண்ணுக்கு எந்த அளவுக்கு சக்தி இருந்தது என்றால் அதை சாமிரி எறிந்த போது காளைக் கன்றுக்கு சப்தம் (அதாவது உயிர் வந்தது போல்) தோன்றியது.
6. அப்படி போலியான போட்டி மதத்தை உருவாக்க தூதரின் காலடி மண்ணில் தான் பார்த்த அந்த மறைவான அற்புதத்தை பயன்படுத்திக் கொண்டார்.
7. அவ்வாறு அவர் உருவாக்குவதை அவரின் மனம் அவருக்கு அழகான செயலாக காட்டியிருக்கிறது.
நபிகளின் வரிசையில் முத்திரை முடிந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் நம்மிடம் எத்தனையோ சாமிரிகள் எத்தனையோ காளைகன்றை கொண்டு வந்து விட்டனர்.
சிலர் கேஸட், சிடி போட்டு உண்மைக்கு புறம்பானவற்றை கொண்டு வந்தார்கள்,
சிலர் அரசியல், பணம், பதவியை கொண்டு வந்தார்கள்.
சிலர் மந்திரம், தந்திரம் செய்து காட்டினார்கள்.
சிலர் தன்னை இறை தூதர் என்றே காதில் காதியானி சொன்னார்கள்.
இவ்வாறு தங்களின் மனம் அவர்களுக்கு எதையெல்லாம் அழகாக காட்டியதோ அந்த அழகிய பேச்சுக்களை எல்லாம் விற்பனை செய்து வந்தார்கள். மூஸா நபி இறங்கி வந்ததை போல் இமாம் மஹதி (றஹ்) அவர்கள் வரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்...
"There are as many paths to God as there are souls on Earth." - ஹதீது
Wednesday, April 20, 2011
இரண்டு கண்கள் ஒரு கதை - குல்ஜார் சாபின் பாடல்கள்

இந்த பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.
பாடல் காட்சியில் நடித்தவர்கள்:

ஷபனா ஆஜ்மி (படத்தில் கணவர் ஜாவித் அக்தருடன்)
நஸிருத்தீன் ஷா
சுப்ரியா பதக் (நஸிருத்தின் ஷாவின் நிஜத்தில் மனைவி)
குழந்தைகள் மூவர்:

ஊர்மிளா மடோண்ட்கர்


ஜுகல் ஹன்ஸ்ராஜ்
பேபி ஆராதானா

படத்தின் இயக்குனர்: சேகர் கபூர்
படத்தின் வசனம், பாடல்களை எழுதியவர்: குல்ஜார் சாப்
--------------------------------
இந்துவாகிய (படத்தில் ஷபனா ஆஜ்மியின் பெயர் இந்து) அவள் தனது குழந்தைகளை கண்களின் கதையை சொல்லி உறங்க வைக்கிறாள். அவள் ஏற்றுக் கொள்ள முடியாத துயரங்கள் அவளுக்குள் உறங்காமலே இருக்கின்றன.
தனது கணவனுக்கு வேறொரு பெண்ணோடு ஏற்பட்ட தொடர்பில் பிறந்த அந்த குழந்தையை ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை அவள்.
ஆனால் கணவனுக்கோ அவளை ஏமாற்ற வேண்டும் என்பதோ அவளை தர்ம சங்கடப் பட வைக்க வேண்டுமென்பதோ நோக்கமில்லை.
ஆனால் அதே சமயத்தில் தனது தாயை இழந்து தந்தை யார் என்று அறியாமல் இருக்கும் அந்த மகனை அரவணைத்து ஏற்றுக் கொள்ளவும் அவன் தயக்கம் காட்டவில்லை.
தனக்கு சொந்தம் என்று இருந்த அந்த அன்பின் வடிவை பறிகொடுத்து விட்டு தனது தாயின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரின் வீட்டில் யாரும் முகம் கொடுத்து பேசாத அந்த துயரத்தில் தான் அவன் இந்த கண்களின் கதையை கேட்கிறான்..
அவனுக்கு அவனது தாயாரின் நினைவுகள் கண்ணீரின் துணையோடு வந்து வதைக்கிறது...
ஒரு வித தனிமையின் சிறையில் சிக்கித் தவிக்கும் அவனுக்கு இந்த இரண்டு கண்களின் கதை அவனை விட்டும் ரொம்ப தூரம் சென்று விட்ட அவனது தாயின் அருகில் சில நேரத்திற்காவது கொண்டு சேர்த்து விடுகிறது..
இதோ குல்ஜார் சாபின் வார்த்தை தோரண வரவேற்பில் இரு கண்களின் கதை இரு செவிகளில் நுழைகிறது...
thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
thodaa saa paanee
aur ek kahaanee
இரண்டு கண்கள்
ஒரு கதை
சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..
------------------------------------
chhotee see do jeelon mein
wo bahatee rahatee hai
koee sune yaa naa sune
kahatee rahatee hai
kuchh likh ke aur kuchh zubaanee
wo bahatee rahatee hai
koee sune yaa naa sune
kahatee rahatee hai
kuchh likh ke aur kuchh zubaanee
கதை சிறிய சொற்றொடர்களாக
முடிவுறாமல் பொழிந்து
கொண்டே இருக்கிறது
யாரும் கேட்கிறார்கள்
அல்லது கேட்காமல் இருக்கிறார்கள்
(என்பது பற்றிய சிந்தனையில்லாமல்)
கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ஏதோ அர்த்தம் தெரியாமல் எழுதியவையிலிருந்து
ஏதோ அர்த்தம் தெரியாமல் பேசியதிலிருந்து
thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee
சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..
இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
thodee si hai jaanee huyee
thodee see nayee
jahaa ruke aansoo
wahee pooree ho gayee
hai to nayee fir bhee hai puraanee
thodee see nayee
jahaa ruke aansoo
wahee pooree ho gayee
hai to nayee fir bhee hai puraanee
கொஞ்சம் தெரிந்தவையிலிருந்து
கொஞ்சம் புதியவையிலிருந்து
(கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது)
எப்பொழுது கண்ணீர் முடிவுறுகிறதோ
அப்பொழுது கதையும் முடிவுறும்
இது புதியது தான், ஆனாலும் பழையது
thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee
சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..
இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
ek khatm ho to
doosaree yaad aa jaatee hai
hothhon pe phir bhoolee huyee
baat aa jaatee hai
do nainon kee hain ye kahaanee
doosaree yaad aa jaatee hai
hothhon pe phir bhoolee huyee
baat aa jaatee hai
do nainon kee hain ye kahaanee
ஒன்று (கதை) முடிவுறும் போது,
இன்னொன்றின் ஞாபகம் வந்து கதை தொடங்கி விடும்
எப்போதோ மறந்து போன அந்த கதை
உன் வாய் நுனியில் வெளிவர காத்திருக்கும்
இது தான் அந்த இரு கண்களின் கதை
(தொலைந்து போன நினைவுகளை வானில் தேடும் பொழுது காட்சி முடிவுறுகிறது)
Subscribe to:
Posts (Atom)