Wednesday, April 20, 2011

இரண்டு கண்கள் ஒரு கதை - குல்ஜார் சாபின் பாடல்கள்



பாடலை பாடியவர்: ஆர்த்தி முகர்ஜி

இந்த பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.

பாடல் காட்சியில் நடித்தவர்கள்:


ஷபனா ஆஜ்மி (படத்தில் கணவர் ஜாவித் அக்தருடன்)

நஸிருத்தீன் ஷா

சுப்ரியா பதக் (நஸிருத்தின் ஷாவின் நிஜத்தில் மனைவி)

குழந்தைகள் மூவர்:

ஊர்மிளா மடோண்ட்கர்


ஜுகல் ஹன்ஸ்ராஜ்

பேபி ஆராதானா




படத்தின் இயக்குனர்: சேகர் கபூர்

படத்தின் வசனம், பாடல்களை எழுதியவர்: குல்ஜார் சாப்

--------------------------------

இந்துவாகிய (படத்தில் ஷபனா ஆஜ்மியின் பெயர் இந்து) அவள் தனது குழந்தைகளை கண்களின் கதையை சொல்லி உறங்க வைக்கிறாள். அவள் ஏற்றுக் கொள்ள முடியாத துயரங்கள் அவளுக்குள் உறங்காமலே இருக்கின்றன.

தனது கணவனுக்கு வேறொரு பெண்ணோடு ஏற்பட்ட தொடர்பில் பிறந்த அந்த குழந்தையை ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை அவள்.

ஆனால் கணவனுக்கோ அவளை ஏமாற்ற வேண்டும் என்பதோ அவளை தர்ம சங்கடப் பட வைக்க வேண்டுமென்பதோ நோக்கமில்லை.

ஆனால் அதே சமயத்தில் தனது தாயை இழந்து தந்தை யார் என்று அறியாமல் இருக்கும் அந்த மகனை அரவணைத்து ஏற்றுக் கொள்ளவும் அவன் தயக்கம் காட்டவில்லை.

தனக்கு சொந்தம் என்று இருந்த அந்த அன்பின் வடிவை பறிகொடுத்து விட்டு தனது தாயின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரின் வீட்டில் யாரும் முகம் கொடுத்து பேசாத அந்த துயரத்தில் தான் அவன் இந்த கண்களின் கதையை கேட்கிறான்..

அவனுக்கு அவனது தாயாரின் நினைவுகள் கண்ணீரின் துணையோடு வந்து வதைக்கிறது...

ஒரு வித தனிமையின் சிறையில் சிக்கித் தவிக்கும் அவனுக்கு இந்த இரண்டு கண்களின் கதை அவனை விட்டும் ரொம்ப தூரம் சென்று விட்ட அவனது தாயின் அருகில் சில நேரத்திற்காவது கொண்டு சேர்த்து விடுகிறது..

இதோ குல்ஜார் சாபின் வார்த்தை தோரண வரவேற்பில் இரு கண்களின் கதை இரு செவிகளில் நுழைகிறது...

Do nainaa, ek kahaanee
thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee


இரண்டு கண்கள்
ஒரு கதை
சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..
------------------------------------
chhotee see do jeelon mein
wo bahatee rahatee hai
koee sune yaa naa sune
kahatee rahatee hai
kuchh likh ke aur kuchh zubaanee


கதை சிறிய சொற்றொடர்களாக
முடிவுறாமல் பொழிந்து
கொண்டே இருக்கிறது
யாரும் கேட்கிறார்கள்
அல்லது கேட்காமல் இருக்கிறார்கள்
(என்பது பற்றிய சிந்தனையில்லாமல்)
கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
ஏதோ அர்த்தம் தெரியாமல் எழுதியவையிலிருந்து
ஏதோ அர்த்தம் தெரியாமல் பேசியதிலிருந்து

thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee



சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..

இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
thodee si hai jaanee huyee
thodee see nayee
jahaa ruke aansoo
wahee pooree ho gayee
hai to nayee fir bhee hai puraanee


கொஞ்சம் தெரிந்தவையிலிருந்து
கொஞ்சம் புதியவையிலிருந்து
(கதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது)
எப்பொழுது கண்ணீர் முடிவுறுகிறதோ
அப்பொழுது கதையும் முடிவுறும்
இது புதியது தான், ஆனாலும் பழையது

thodaa saa baadal
thodaa saa paanee
aur ek kahaanee
Do nainaa, ek kahaanee




சில மேகங்கள்
கொஞ்சம் மழைநீர்
அப்புறம், ஒரு கதை..

இரண்டு கண்கள்
ஒரு கதை...
-----------------------------------------
ek khatm ho to
doosaree yaad aa jaatee hai
hothhon pe phir bhoolee huyee
baat aa jaatee hai
do nainon kee hain ye kahaanee


ஒன்று (கதை) முடிவுறும் போது,
இன்னொன்றின் ஞாபகம் வந்து கதை தொடங்கி விடும்
எப்போதோ மறந்து போன அந்த கதை
உன் வாய் நுனியில் வெளிவர காத்திருக்கும்
இது தான் அந்த இரு கண்களின் கதை


(தொலைந்து போன நினைவுகளை வானில் தேடும் பொழுது காட்சி முடிவுறுகிறது)

No comments: