நேற்றைய தினமலரில் படித்த செய்தி, இதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
http://www.dinamalar.com//sambavamnewsdetail.asp?News_id=11563
பொதுவாக பெண்களுக்கு நடக்கும் அநீதி தொடர்ந்து கொண்டே வருகிறது, ஒரு கருத்துக்காக இதை சொல்கிறேன், பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் என்று யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் சொல்கின்றது. இது ஒரு குறீயீடாக கூட சொல்லப்பட்டிருக்கலாம்.
அதாவது தலையில் இருந்து அல்லது காலிலிருந்து படைக்கப்பட்டவள் என்றால் ஆணை விட பெண் மேலானவள் என்றோ அல்லது ஆணை விட பெண் கீழானவள் என்றோ முறையே அர்த்தமாகி போகும்.
ஆனால் விலாவிலிருந்து என்றால் அது உடலின் நடு பகுதியில் இருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஆணுக்கு அதிகாரம் இருக்குமேயானால் அவன் சமமாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று கூட பொருள் கொள்ள முடியும்.
இன்னும் யூத வேதத்தில் (ஹெப்ரிவ் தல்முத்) விலா எலும்பு கைகளுக்கு கீழே இருப்பதால் அவள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதயத்திற்கு அடுத்தபடியாக இருப்பதால் அவள் நேசிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மேலே கொடுத்திருக்கும் இணைப்பில் காதலித்து மணமுடித்த அந்த ஆண் தனது காதல் மனைவியிடம் உன் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளாதே என்று தகராறு செய்திருக்கிறான். இது அவர்களது குடும்ப விஷயம் என்று விட்டு விடலாம், இந்த விஷயம் தற்கொலை செய்தி வரை வராமலிருந்தால்.
"நீ பேசக்கூடாது.." என்று வெறும் வார்த்தைகளால் சொல்லியிருந்தால் தற்கொலை வரை போயிருக்க முடியாது. அடித்திருக்கலாம், வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கலாம்.
பரிதாபத்துக்குறிய அந்த பெண் நிர்வாணமாக தூக்கில் தொங்கப்பட்டிருக்கிறாள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளின் காலையில் அந்த பெண்ணின் தாயார் தொலைபேசியில் 8:23 மணிக்கு தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து செய்தி சொன்ன போது, "நான் குளிச்சிட்டு கோயிலுக்கு போறேன்..' என்று சொல்லியிருக்கிறார்கள். (இது பத்திரிக்கையில் இல்லாத செய்தி). சரியாக 11 மணிக்கு தாயாருக்கு தற்கொலை செய்தி போகிறது.
எது எப்படியிருப்பினும், தற்கொலை என்பது சந்தேகத்திற்குறியதாக படுகிறது. பத்திரிக்கை செய்தியில் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் கூறியிருக்கும் கருத்தும் சிந்திக்க கூடியது தான்.
தவறிழைத்தவர்கள் அவ்வாறு தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
No comments:
Post a Comment