Wednesday, July 22, 2009

விஜய் டிவி - தமிழ் பேச்சு - பெரியார்தாசன் - VARK - பயிற்றுவிக்கும் முறை

எனக்கு தெரிந்து இங்கே சிங்கப்பூரில் சன் டிவி, விஜய் டிவி மட்டும் தான் பார்க்க முடியும். நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் சன் டிவியின் தமிழ் மாலை மாறன் குடும்பத்தார்களின் தமிழ் மாலையாகவே மாறி விட்ட நிலையில் விஜய் டிவி நடன் நிகழ்ச்சி, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவே தமிழ் பேச்சு ... என்ற நல்ல நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பாகிறது.

எனக்கு பெரியாரை முழுமையாக பின்பற்றாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் கிட்டதட்ட பெரியாரின் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அதே போல் பெரியார்தாசனையும் பிடிக்கும்.  விளம்பரத்தில் பெரியார்தாசனை பார்த்து விட்டதால் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு வாரம் பார்த்தேன்.

அதில் பெரியார்தாசன் பேசும் பயிற்றுவிக்கும் முறைகளை பற்றி மிக அழகாக குறிப்பிட்டார். மொத்தம் மூன்று விதமான மாணவர்கள் இருப்பார்கள்.

சிலருக்கு படித்தால் தான் புரியும். இவர்களை  Reading   என்று குறிப்பிடலாம்.
அதனால் தான் வகுப்பறையில் ஆசிரியர் செய்திகளை சொல்லுவார்.

சிலருக்கு கேட்டால் தான் புரியும். இவர்களை  Auditory  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் பலகையில் எழுதி போடுவார்.

சிலர் தொடு உணர்ச்சிகாரர்கள், இவர்களை   Kinesthetic  என்று குறிப்பிடலாம். அதனால் தான் ஆசிரியர் மாணவர் அருகிலேயே சென்று அவனை தொட்டு தடவி கொடுத்து எடுத்து சொல்லி புரிய வைப்பார் என்று விளக்கம் கொடுத்தார்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் மொத்தம் நான்கு வகையினர் இருக்கிறார்கள்.
1. படத்தை பார்த்து புரிந்து கொள்பவர்கள் - Visual learners

2. கேட்டு புரிந்து கொள்பவர்கள் - Auditory learners

3. படித்து புரிந்து கொள்பவர்கள் - Reading learners
4. பங்கேற்று புரிந்து கொள்பவர்கள் - Kinesthetic learners

மேற்கூறியபடி நான்கு வகையில் பாடங்களை புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் ஒரு புது வகை உணவு பதார்த்தத்தை அல்லது ஒரு புது திறனை பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் வகைப்படி நீங்கள் படிப்பது என்றால் டிவியில் சமைப்பதை பார்த்து தெரிந்து கொள்வது

இரண்டாவது வகை என்பது நண்பரிடம் அல்லது ஆசிரியரிடம் அல்லது நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்வது

மூன்றாவது முறையில் நீங்கள் புத்தகங்களில் உள்ள ரெஸிபியை படித்து தெரிந்து கொள்வது

நான்காவது வகையினர் சமைத்து பார்த்து தெரிந்து கொள்வது,

இதில் நான்காவது வகை தான் சிறந்த முறை என்று சொல்கிறார்கள். ஏனெனில்...
நான் கேட்டேன் - எனக்கு மறந்து விட்டது
நான் பார்த்தேன் - எனக்கு ஞாபகம் இருக்கிறது
நான் செய்து பார்த்தேன் - எனக்கு புரிந்தது

பங்கேற்று புரிந்து கொள்வது தான் நிலையானது என்று அறியப்படுகிறது

2 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்திலும் பெரியார் தாசன் வலைப்பதிவராக இணைந்திருக்கிறார்.

nagoreismail said...

ஓ..! மிக்க நன்றி..!

நான் மிகவும் விரும்பும்
மனிதர்
பேச்சாளர்
பேராசிரியர்