ஜட்ஜ் அப்பா - பகுதி 1 ஐ இங்கே படிக்கலாம்
நாடோடிகள் படத்தில் சசிகுமார் வரலாறு பாடத்தின் பெருமையை அப்பா பேரு அப்பாவோட அப்பா பேரு அப்பாவோட அப்பாவோட அப்பா பேரு ... என்று கேட்டு அழகாக விளக்கம் சொல்லுவார், அவர் கொடுத்த தைரியத்தில் எங்கள் குடும்ப வரலாற்றையும் இங்கே எழுதிட விழைகிறேன்.
குலாம் மெய்தீன் - இவர் ஒரு பிஸினஸ் மேக்னட் - பிறந்தது குன்னூர், ஊட்டி அந்த பக்கம் - வசித்தது நாகூர் - துணிமணி (துணி தான்) வியாபாரம் செய்தது மற்றும் திருமணம் செய்தது தாய்லாந்த் நாட்டில் - ஆமாம், வியாபார நிமித்தமாக அந்த காலத்தில் சியாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்த் நாட்டிற்கு சென்ற போது அங்கே யாயி என்ற சீயத்து பெண்ணை (தாய்லாந்த் நாட்டு பெண்ணை) மணமுடித்ததோடு 2 பெண் பிள்ளைகள் 5 ஆண் பிள்ளைகள் என அந்த காலத்து நடைமுறையில் குறை வைக்காமல் நிறைவாய் பெற்றெடுத்தார்.
அவர் அனைத்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நாகூர் வந்த போது தனக்கு இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் தனது உறவினரான அப்துல் அஜீஸ் என்பவரிடம் (அப்போது அவர் தையல் கடை வைத்திருந்தார்) எல்லா சொத்துக்களையும், பிள்ளைகளையும் அமானிதமாக கையை பிடித்து கொடுத்து விட்டு கண்ணை மூடினார்.
சொத்துக்கள், குலாமின் பிள்ளைகள் என்பது மட்டுமல்லாமல் அப்துல் அஜீஸுக்கு 3 பிள்ளைகள், அப்துல் அஜீஸின் சகோதரியின் பிள்ளைகள் என ஒரு பெரும் தோப்பே அந்த தனி மரத்தின் முன் பாதுகாவலில் வைக்கப்பட்டது.
அப்துல் அஜீஸ் வியாபாரத்தை சிறு துள்ளியிலிருந்து ஆரம்பித்து பெரு வெள்ளமாக்கினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். தன் பிள்ளைகளாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவர்கள் வேலையை அவர்களே தான் பார்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் உதாரணமாக வீடு வாசல் பெருக்கி சுத்தம் செய்வதிலிருந்து கொள்ளையில் இருக்கும் மாட்டு கொட்டகையை தொடைச்சு சுத்தம் செய்வது வரை இப்படி எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.
மேலும் அரபு பாடத்தில் சரியாக ஓதா விட்டால் சாவி கொத்தால் அடி கொடுப்பார். ஒரு முறை ஜட்ஜ் அப்பா தமிழ் பாடத்தில் 98 மார்க் வாங்கியதற்கு அஜீஸ் அவர்கள், "மத்த பாடமா இருந்தாலும் பரவாயில்லை, நம்ம தாய் மொழி தமிழ்ல்ல போய் இப்படி 2 மார்க் கொறைச்சி வாங்கிட்டு வந்திருக்கியே.." என்று கேட்டிருக்கிறார்கள். ஜட்ஜ் அப்பா அவர்கள் தான் சரியாக எழுதியதாகவும் வாத்தியார் தமிழுக்கு 100க்கு 100 மார்க் போட மாட்டார்களாம் என்று எடுத்து விளக்கினார்கள்.
குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் படிப்பு (அதாவது ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை), அதன் பிறகு பிழைப்பு. அதாவது தாய்லாந்த் நாட்டில் பேங்காக் நகரில் வாட்கோ லாவின்ச் (Watco Lavinch) என்ற முக்கிய வியாபார இடத்தில் அமைந்திருந்த "நாகூர் ஸ்டோர்ஸ்" என்ற கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் வேலை பார்க்க சென்று விட வேண்டும். அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் வேலை இருக்கும்.
இந்த சூழ்நிலையில் தான் ஜட்ஜ் அப்பா வளர்கிறார்கள். மியா தெரு முனையில் இருந்த நாகூர் முஸ்லீம் பாட சாலையில் படிக்க போவது, பள்ளிகூடம் விட்டு வந்தவுடன் மாட்டை குளிப்பாட்டுவது, கடைகளுக்கு போய் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வருவது, ஒரு நிமிஷம் ஓய்வு இருக்காது.
ஜட்ஜ் அப்பாவுக்கு அப்போதே தெரியும் நம்மள இன்னும் கொஞ்ச நாள்ல கப்பலேத்தி சீயத்துக்கு அனுப்பி விட்டுடுவாஹாண்டு. அவர்களின் தம்பி ஜக்காப்பா கூட (ஜக்காப்பா அவர்கள் வேறு யாருமல்ல, அவர்கள் எழுத்துலகில் பிரபலமான (இவரின் கதையை அப்படியே நம் பேர் போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தாலும் பிரபலாமாகலாம்), நகைச்சுவையில் சோகம், சோகத்தில் நகைச்சுவை, இப்படி கலந்து தனது அனுபவங்களை எழுதும் எழுத்தாளரும் ஓவியருமான ஆபிதீன் நானா அவர்களின் மாமனார், அதாவது அன்னாரின் மகளை தான் ஆபிதீன் நானா அவர்கள் நிகாஹ் செய்துள்ளார், ஆக ஒரு முறையில் ஜட்ஜ் அப்பாவின் மருமகனும் ஆவார் ) அப்படி தான் நாகூர் ஸ்டோர்ஸின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள சீயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜக்காப்பா தான் அந்த கடையின் மேனேஜர்.
ஆனால் ஜட்ஜ் அப்பாவுக்கு அப்படி சீயத்துக்கு போய் வேலை செய்யணும் என்ற ஆர்வம் இல்லை. ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இருந்தாலும் அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு கூடவே படித்துக் கொண்டும் (எப்படி தான் முடிந்ததோ?) - அதுவும் படிக்கிறது என்றால் சும்மா ஏனோ தானோ படிப்பல்ல, ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்பிற்கு போகாமாலே மூன்றாவது வகுப்பிற்கும் மூன்றாவது வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பிற்கு போகாமலே ஐந்தாவது வகுப்பிற்கு டபுள் புரோமஷனையே டபுள் டைம்ஸ் (இரண்டு முறை) வாங்கி படித்தார்கள். (ஹேட்ரிக் டபுள் பிரமோஷன் வாங்க வேண்டியது ஒரு சில காரணங்களால் அவர்களே வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்)
இப்படி படிப்பில் அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் அவர்களின் மாமாவான அப்துல் அஜீஸை ஜட்ஜ் அப்பாவை சீயத்துக்கு (பேங்காக் நாடு) அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட வைத்தது.
--------------------------------------------------------------------------
அப்புறம் அவர்களின் சிறு பிராயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி சொல்ல வேண்டும்.
தொடரும்
நாடோடிகள் படத்தில் சசிகுமார் வரலாறு பாடத்தின் பெருமையை அப்பா பேரு அப்பாவோட அப்பா பேரு அப்பாவோட அப்பாவோட அப்பா பேரு ... என்று கேட்டு அழகாக விளக்கம் சொல்லுவார், அவர் கொடுத்த தைரியத்தில் எங்கள் குடும்ப வரலாற்றையும் இங்கே எழுதிட விழைகிறேன்.
குலாம் மெய்தீன் - இவர் ஒரு பிஸினஸ் மேக்னட் - பிறந்தது குன்னூர், ஊட்டி அந்த பக்கம் - வசித்தது நாகூர் - துணிமணி (துணி தான்) வியாபாரம் செய்தது மற்றும் திருமணம் செய்தது தாய்லாந்த் நாட்டில் - ஆமாம், வியாபார நிமித்தமாக அந்த காலத்தில் சியாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்த் நாட்டிற்கு சென்ற போது அங்கே யாயி என்ற சீயத்து பெண்ணை (தாய்லாந்த் நாட்டு பெண்ணை) மணமுடித்ததோடு 2 பெண் பிள்ளைகள் 5 ஆண் பிள்ளைகள் என அந்த காலத்து நடைமுறையில் குறை வைக்காமல் நிறைவாய் பெற்றெடுத்தார்.
அவர் அனைத்து பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நாகூர் வந்த போது தனக்கு இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர் தனது உறவினரான அப்துல் அஜீஸ் என்பவரிடம் (அப்போது அவர் தையல் கடை வைத்திருந்தார்) எல்லா சொத்துக்களையும், பிள்ளைகளையும் அமானிதமாக கையை பிடித்து கொடுத்து விட்டு கண்ணை மூடினார்.
சொத்துக்கள், குலாமின் பிள்ளைகள் என்பது மட்டுமல்லாமல் அப்துல் அஜீஸுக்கு 3 பிள்ளைகள், அப்துல் அஜீஸின் சகோதரியின் பிள்ளைகள் என ஒரு பெரும் தோப்பே அந்த தனி மரத்தின் முன் பாதுகாவலில் வைக்கப்பட்டது.
அப்துல் அஜீஸ் வியாபாரத்தை சிறு துள்ளியிலிருந்து ஆரம்பித்து பெரு வெள்ளமாக்கினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். தன் பிள்ளைகளாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவர்கள் வேலையை அவர்களே தான் பார்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் உதாரணமாக வீடு வாசல் பெருக்கி சுத்தம் செய்வதிலிருந்து கொள்ளையில் இருக்கும் மாட்டு கொட்டகையை தொடைச்சு சுத்தம் செய்வது வரை இப்படி எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.
மேலும் அரபு பாடத்தில் சரியாக ஓதா விட்டால் சாவி கொத்தால் அடி கொடுப்பார். ஒரு முறை ஜட்ஜ் அப்பா தமிழ் பாடத்தில் 98 மார்க் வாங்கியதற்கு அஜீஸ் அவர்கள், "மத்த பாடமா இருந்தாலும் பரவாயில்லை, நம்ம தாய் மொழி தமிழ்ல்ல போய் இப்படி 2 மார்க் கொறைச்சி வாங்கிட்டு வந்திருக்கியே.." என்று கேட்டிருக்கிறார்கள். ஜட்ஜ் அப்பா அவர்கள் தான் சரியாக எழுதியதாகவும் வாத்தியார் தமிழுக்கு 100க்கு 100 மார்க் போட மாட்டார்களாம் என்று எடுத்து விளக்கினார்கள்.
குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் படிப்பு (அதாவது ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை), அதன் பிறகு பிழைப்பு. அதாவது தாய்லாந்த் நாட்டில் பேங்காக் நகரில் வாட்கோ லாவின்ச் (Watco Lavinch) என்ற முக்கிய வியாபார இடத்தில் அமைந்திருந்த "நாகூர் ஸ்டோர்ஸ்" என்ற கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் வேலை பார்க்க சென்று விட வேண்டும். அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் வேலை இருக்கும்.
நாகூர் ஸ்டோர் (பின்புறம் போர்டில் தெரிகிறது) , பேங்காக் நகரம் (போட்டோவில் கம்பி கேட்டை ஒட்டி நிற்பவர்கள் எனது மாமனார் ஹாஜா மொய்தீன் அவர்கள்)
இந்த சூழ்நிலையில் தான் ஜட்ஜ் அப்பா வளர்கிறார்கள். மியா தெரு முனையில் இருந்த நாகூர் முஸ்லீம் பாட சாலையில் படிக்க போவது, பள்ளிகூடம் விட்டு வந்தவுடன் மாட்டை குளிப்பாட்டுவது, கடைகளுக்கு போய் வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கி வருவது, ஒரு நிமிஷம் ஓய்வு இருக்காது.
ஜட்ஜ் அப்பாவுக்கு அப்போதே தெரியும் நம்மள இன்னும் கொஞ்ச நாள்ல கப்பலேத்தி சீயத்துக்கு அனுப்பி விட்டுடுவாஹாண்டு. அவர்களின் தம்பி ஜக்காப்பா கூட (ஜக்காப்பா அவர்கள் வேறு யாருமல்ல, அவர்கள் எழுத்துலகில் பிரபலமான (இவரின் கதையை அப்படியே நம் பேர் போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தாலும் பிரபலாமாகலாம்), நகைச்சுவையில் சோகம், சோகத்தில் நகைச்சுவை, இப்படி கலந்து தனது அனுபவங்களை எழுதும் எழுத்தாளரும் ஓவியருமான ஆபிதீன் நானா அவர்களின் மாமனார், அதாவது அன்னாரின் மகளை தான் ஆபிதீன் நானா அவர்கள் நிகாஹ் செய்துள்ளார், ஆக ஒரு முறையில் ஜட்ஜ் அப்பாவின் மருமகனும் ஆவார் ) அப்படி தான் நாகூர் ஸ்டோர்ஸின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள சீயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜக்காப்பா தான் அந்த கடையின் மேனேஜர்.
பேங்காக்
(மேலே உள்ள படத்தில்: இடதிலிருந்து இரண்டாவது: சேத்தப்பா (என் தாயாரின் தந்தை), கடைசியில் தொப்பி போட்டு இருப்பது ஜக்காப்பா (ஜட்ஜப்பாவின் தம்பியும் ஆபிதீன் நானாவின் மாமானாருமாவார்))
(கீழே உள்ள படத்தில் முதலாவது: முஹம்மது தம்பி (எனது தந்தையின் தந்தை), கடைசியில் ஹாஜா மொய்தீன் (எனது தாயாரின் நானாவும், எனது மாமனாரருமாவார்))
ஆனால் ஜட்ஜ் அப்பாவுக்கு அப்படி சீயத்துக்கு போய் வேலை செய்யணும் என்ற ஆர்வம் இல்லை. ஒரு நிமிஷம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை இருந்தாலும் அந்த வேலையையும் பார்த்துக் கொண்டு கூடவே படித்துக் கொண்டும் (எப்படி தான் முடிந்ததோ?) - அதுவும் படிக்கிறது என்றால் சும்மா ஏனோ தானோ படிப்பல்ல, ஒன்றாவது வகுப்பிலிருந்து இரண்டாவது வகுப்பிற்கு போகாமாலே மூன்றாவது வகுப்பிற்கும் மூன்றாவது வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பிற்கு போகாமலே ஐந்தாவது வகுப்பிற்கு டபுள் புரோமஷனையே டபுள் டைம்ஸ் (இரண்டு முறை) வாங்கி படித்தார்கள். (ஹேட்ரிக் டபுள் பிரமோஷன் வாங்க வேண்டியது ஒரு சில காரணங்களால் அவர்களே வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்)
இப்படி படிப்பில் அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் அவர்களின் மாமாவான அப்துல் அஜீஸை ஜட்ஜ் அப்பாவை சீயத்துக்கு (பேங்காக் நாடு) அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட வைத்தது.
--------------------------------------------------------------------------
அப்புறம் அவர்களின் சிறு பிராயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை பற்றி சொல்ல வேண்டும்.
தொடரும்


2 comments:
மாமாவின் ஃபோட்டோ பார்த்து கண் கலங்கி விட்டது. நன்றி துரை.
நன்றியெல்லாம் எதுக்கு நானா...
நீங்க வேற...
எனக்கு புரியுது நானா..
அஹ இன்னும் கொஞ்ச நாள் இருந்து மூத்த மகள் சந்தோஷமா வாழ்ந்தத பார்த்திருக்கலாம்...
என்ன செய்றது..?
இன்னக மய்யிதுன் வ இன்ன ஹும் மய்யிதுனாச்சே
Post a Comment