நான் இதுவரை ஜப்பானுக்கும் மட்டுமல்ல, இங்கே சிங்கையில் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஜப்பானீஸ் கார்டனுக்கு கூட போனதில்லை.
நாம ஏதோ உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலமாக எம்.ஜி.ஆரோடு ஜப்பானை சுற்றி பார்த்ததுண்டு. 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்' என்ற அழகிய பாடல் நினைவிலிருந்து நீங்காதவை.
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் கவுண்டமணி, கோவை சரளா, சித்ரா லட்சுமணன் அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை.
அப்புறம் கிருஷ்ணன் வந்தான் எனும் படத்தில் தேங்காய் சீனிவாசன் ஜப்பான் பாஷை பேசுவார்
விவேக் ஒரு படத்தில் ஜப்பான் பாஷையில் ஒரு பாடலே பாடுவார்
ஜப்பான் என்றாலே எலக்ட்ரானிக்ஸ் சாமான்கள், சோனி, வாகனங்கள் டொயோட்டா இதெல்லாம் ஞாபகத்துக்கு வரலாம்
எதிலும் புதுமை, வித்தியாசம் என்று வாழ்பவர்கள்.
அவர்களின் புதுமை ஆர்வம் விளையாட்டு துறையையும் விட்டு வைக்கவில்லை போலும்
புதுமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா!
சிரிப்பதற்கு மட்டுமே!
No comments:
Post a Comment