Sunday, April 18, 2010

நாம் கும் ஜாயேகா - பெயர் மறைந்து விடும் - இந்தி பாடல்

 கார் மெக்கானிக்காக இருந்து ஸ்பானரை பிடித்துக் கொண்டிருந்த 'சம்பூரன் சிங் கல்ரா' என்ற பஞ்சாபியான அவர் 'குல்ஜாரா'க மாறி பேனாவை பிடிக்க ஆரம்பித்த போது மழையாக பொழிந்தது கவிதை.

அப்படி ஒரு மழை தான் இந்த பாடல்.
நனைந்து விடுங்கள்
குல்ஜார் காய்ச்சல்
வந்தால்
மீண்டும் நனைந்து விடுவது நன்மை பயக்கும்..

 

நான் புரிந்து கொண்டதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்:

பல்லவி:

Naam gum jaayegaa,
Cheharaa ye badal jayegaa
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பெயர் மறைந்து விடும்
முகம், என் தோற்றம் மாறி விடும்
என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்
(which means - if you bother to remember)

சரணம் 1:
Waqt ke sitam, kam hasin nahin
Aaj hain yahaan, kal kahin nahin
Waqt se phare agar, mil gaye kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

(கண்ணீரை தரும்)
காலம் நேரம் கொடுமையானது,
ஆனால் அதுவே அழகானதும்


இன்று இங்கே (இம்மையில்) இருக்கின்றோம்
நாளை இருக்க போவதில்லை


கால நேரங்களுக்கு
கட்டுப்படாத
ஒரு உலகத்தில்
நாம் சந்திக்கக் கூடும்
(அப்போது...)


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 2:
Jo guzar ga_i, kal ki baat thi
Umr to nahin, ek raat thi
Raat kaa silaa agar, phir mile kahin
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

எது நடந்ததோ
அது
நேற்றைக்கு சொந்தமானது


அது ஒரு இரவை
போன்றது
வாழ்க்கை முழுமைக்குமானது
அல்ல


அந்த இரவின் தொடர்ச்சி
திரும்பினால்,
நாம்  மீண்டும்
(அந்த இரவை)
அனுபவிக்கலாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

சரணம் 3:
Din dhale jahaan, raat paas ho
Zindagi ki lau, uunchi kar chalo
Yaad aaye gar kabhi, ji udaas ho
Meri aavaaz hi, pahachaan hai
Gar yaad rahe

பகலின் நேரங்கள்
முடிவுரை
எழுதும் போது -
இரவு
எப்போதும்
அருகிலேயே
இருக்கும்
(உடனே
தொடங்கிவிடும்)


(அப்போது)
உன்
வாழ்க்கை எனும் விளக்கின்
ஒலியை
அதிகமாக்கி விடு


உனக்கு கண்ணீரை
தந்த
அந்த கனங்களை
(அந்த விஷயங்களை)
நினைத்துக்
கொண்டிருக்க வேண்டாம்


என் குரல் மட்டும்
என்னை அடையாளம்
காட்டும்


நீ என்னை
ஞாபகப் படுத்திக் கொள்ள
நினைத்தால்

No comments: