Saturday, May 01, 2010

மௌனமான காதல் கதையை தண்ணீரினால் எழுதினால்.. - இந்தி (குல்ஜார்) பாடல் வரிகள்

குல்ஜார் சாபின் கஜலுக்கு நான் ரசிகன். அவர் எழுத்தில் இருக்கும் புள்ளிகளை கூட நான் ரசிக்கிறேன்.

ஏற்கனவே 'ஆன்ந்தி' எனும் படத்தில் வரும் 'தேரா பினா ஜிந்தகி சே கோயி' எனும் பாடலை அதில் வரும் வசனங்கள் உள்பட மொழி பெயர்த்திருந்தேன்.

அதன் பிறகு சென்ற பதிவில் 'கினாரா' படத்தில் வரும் 'நாம் கும் ஜாயேகா' பாடலையும் ஏதோ எனக்கு தெரிந்த வரையில் மொழி பெயர்த்திருந்தேன்.

இப்போது அந்த வரிசையில் மூன்றாவது பாடல் 'லிபாஸ்' எனும் படத்தில் வரும் 'காமோஷ் ச அஃப்சானா..' பாடலை மொழி பெயர்க்க முயற்சி எடுத்திருக்கிறேன்.

இனி பாடல்,




பல்லவி
(பெண்)
காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சானா

யாரும் அறிந்திராத
இந்த 
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திராத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 1
(பெண்)
தில் கி பாத் நா பூச்சோ, தில் தோ ஆத்தா ரஹேகா
தில் பஹேகாதா ரஹா ஹேய்ன்; தில் பஹேகாதா ரஹேகா
தில் கோ தும்னே, ஓ, குச் சம்ஜ்ஹாயா ஹோதா

என் மனதை பற்றி
மட்டும்
எதுவும் கேட்டுவிடாதே
அது
ஓரிடத்தில்
நிலையாக நில்லாமல்
சுற்றிக் கொண்டே
இருக்கிறது


மேலும்
அது
பயத்தில்
நடுங்கி கொண்டுமிருக்கிறது -
இன்னமும்
நடுங்கி கொண்டே
தானிருக்கிறது


நீ தான்
என் மனதிடம்
எதுவோ
சொல்லியிருக்க கூடும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திராத
இந்த
மௌணமானகாதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!


சரணம் 2
(பெண்)
செஹ்மே சே ரெஹ்தே ஹெய்ன் ஜப் யே தின் தல்தா ஹெய்ன்
ஏக் தியா புஜ்தா ஹெய்ன், ஏக் தியா ஜல்தா ஹெய்ன்
தும்னே கோய், ஓ, தீப் ஜலாயா ஹோதா

பகலின்
வெளிச்சம்
முடிவுறும் போது
இருள்
தொடங்க இருப்பதை
எண்ணி
நான்
அச்சமடைந்தேன்.!


ஒரு
விளக்கு
அணைந்த பொழுது
இன்னொரு
விளக்கு
திடீரென
எரிய ஆரம்பித்தது


அந்த விளக்கை
நீ தான்
ஏற்றியிருக்க
வேண்டும்..!

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத 
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை
நானும்
கேட்டிருக்க
போவதில்லை


யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

சரணம் 3
(ஆண்)
கித்னே சாஹில் டூண்தே, கோயி ந சாம்னே ஆயா
ஜப் மஜ்தார் மெய்ன் தூபே, சாஹில் தாம்னே ஆயா
தும்னே சாஹில், ஓ, பெஹ்லே பிச்சாயா ஹோதா

எத்தனையோ
கரைகளை தேடி
அலைந்திருந்தேன்
எதுவும்
என் கண்களுக்கு
தென்படவில்லை


நடுக்கடலில்
நான் மூழ்கவிருந்த
நேரத்தில்
கரை ஒன்று
கை கொடுத்தது


நிச்சயமாக
அந்த கரை
நீ
அமைத்த 
தாகதானிருக்கும்

காமோஷ் ச அஃப்சானா பானி சே லிகா ஹோதா
நா தும்னே கஹா ஹோதா; நா ஹம்னே சுனா ஹோதா
காமோஷ் ச அஃப்சனா

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை
நீரில் எழுதியிருந்தால்


நீயும்
சொல்லியிருக்க
போவதில்லை


நானும்
கேட்டிருக்க
போவதில்லை

யாரும் அறிந்திடாத
இந்த
மௌணமான
காதல் கதையை..!

No comments: