1
உலகம் பூராவும் சவுதி அரேபியா தவிர மற்ற முஸ்லீம் நாடுகள் அனைத்திலும் மீலாதுந்நபியன்று விடுமுறையாம். அது சவுதி அரேபியா நாட்டின் சிறப்புகளில் ஒன்றா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.
ஆனால் எனக்கு நாகூரின் சிறப்புகளில் ஒன்றினை பற்றி தெரியும். அது, நாகூரில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மதரஸாக்களில் ஓதும் பிள்ளைகளும் பிறை கொடி ஏந்தி "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்" முழங்கி இந்த மீலாது தினத்தை நினைவு கூர்வார்கள்.
சிறு வயதில் நாகூரின் தெரு பள்ளி தெருவில் அமைந்திருந்த வஹ்ஹாப் சாஹிப் பள்ளியின் சார்பாக பிறை கொடி ஏந்தி மீலாது விழாவில் கலந்து கொண்டு நாகூர் தெருக்களில் ஊர்வலமாக நடந்து சென்றதில் என் கால்களுக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். Too be child was very heaven.
மீலாதுந்நபி என்றால் நபி பெருமானார் அவர்கள் பிறந்த தினம் என்று கொள்ளலாம். மீலாது என்ற வார்த்தை 'விலாதத்' என்ற பிறப்பை குறிக்கும் அரேபிய வார்த்தையிலிருந்து வந்தது.
மீலாதுந்நபி என்றால் 'ஹேப்பி பர்த்டே' பாடி கேக்கில் வைக்கப் பட்டிருக்கும் மெழுகுவர்த்தியை கொளுத்தி அதை ஊதி அனைத்து கேக் ஊட்டி கொண்டாடும் நிகழ்வு அல்ல.
மீலாதுந்நபி என்பது பெருமானாரின் ஒட்டு மொத்த வாழ்வையும் நினைத்து பார்த்து அவர்களை பற்றி தெரியாத அறியாத பல செய்திகளை அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டதாகும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மீலாது விழா தான் பெரியோர்களை தலைவர்களை அவர்களின் பிறந்த நாளில் எப்படி நினைவு கூர வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.
நாங்கள் தெரு பூராவும் கொடி ஏத்தி பேனர்களில் வார்த்தைகள் எழுத நாகூரின் சொல்லரசு மரியாதைக்குறிய மர்ஹும் மு.ஜாபர் முஹ்யித்தீன் மாமா அவர்களிடம் போய் நிற்போம்.
அவர்கள் பெருமானாரை பற்றி நூறு புகழ் வார்த்தைகள் எழுதி வைத்து உங்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்பார்கள்.
திருக்குறள் மாதிரி இரண்டு அடியில் இருக்கும் அந்த வாசகங்களை தேர்ந்தெடுக்க நாங்கள் திணறி போவோம் எதை எடுப்பது எதை விடுப்பது என்று.
அரபு மண்ணின் அழியா காவியம்
மரபுக் கவிதை மாநபி வாக்கியம்
- இது ஒரு சோறு தான், பானை நிறைய சோறு இருந்தது. சொல்லரசு மாமா சமைத்தது.
2
இன்றைக்கு அறிஞர்கள் நிரம்பிய உலகமாகி விட்ட படியால் 'பெருமானாருக்கு பிறந்த நாள் விழாக்கள் தேவையா?, மார்க்க அனுமதி உண்டா?' என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள் கேள்விகளாலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.(excuse my language)
மார்க்கத்தை பிரிந்துவிடாது தூக்கி பிடித்து நிறுத்தும் (யாரும் சிரிக்க வேண்டாம்) இவர்களின் மீலாது பற்றிய ஆதார கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது அல்லது எனக்கு அவர்களுக்கு புரிகின்ற மாதிரி பதில் சொல்ல தெரியாது.
எப்படி அவர்களால் என்னை இதுவரை மீலாது வேண்டாம் என்று அத்தனை ஆதாரங்களை முன்வைத்தும் மீலாது பற்றிய என் எண்ணங்களிலிருந்து பின் வாங்க வைக்க முடியவில்லையோ அதே போல என்று வைத்துக் கொள்ளலாம்.
சரி, மீலாதுக்கு அதாவது பெருமானாரின் வாழ்வை நினைவு கூர்வது தான் மீலாது என்று நான் சொல்லியிருந்தேன் அல்லவா? அதை அந்த நினைவு கூர்தலை பற்றி சிந்திப்போம்.
மனைவி அல்லது லாத்தா அல்லது தங்கச்சி இப்படி யாரும் வீட்டில் பிள்ளை உண்டாகியிருந்தாலே நமக்கெல்லாம் சந்தோஷம் தாங்க முடியாது, அதுவும் அழுது கொண்டே குழந்தை பிறந்து விட்டது என்று வையுங்கள், நம் வீட்டின் சந்தோஷ சிரிப்பொலி சொல்லில் அடங்காது.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'நபி அவர்களே! நான் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன்' என்று.
இது உமர் (ரலி) அவர்களின் கூற்று மற்றுமன்று. ஒவ்வொரு முஸ்லீமின் வார்த்தையாகவும் எடுத்து கொள்ளலாம். அதனால் தான் பெருமானாரின் பிறப்பை நம் வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் சந்தோஷத்தை விட அதிகமான மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம்.
அது சரி, நாட்களை அல்லது பிறப்பை நினைத்து பார்ப்பது ஏற்புடையது தானா? என்றால் குரான் ஷரீஃபிலேயே விளக்கம் இருக்கிறது. இது ஃபாஸ்ட் புட் காலம் என்பதால் நம்மில் பலர் 'சீக்கிரம் சொல்லுங்கள், எங்கே டைரக்டாக இருக்கிறது, எனக்கு வேறு வெட்டி முடிக்கும் வேலைகள் நிறைய இருக்கிறது, இன்னும் நிறைய ஆதார கேள்விகள் தயாரிக்க வேண்டும் (state board questions, central board questions, international board questions எல்லாம் பிச்சை எடுக்கணுமாக்கும்)' என்கிற ரீதியிலேயே கேட்கிறார்களே தவிர சிந்தித்து பார்க்கவோ அல்லது ஆராய்ந்து அணுகவோ தயாராக இல்லை.
3
குரான்ஷரீஃப்
அத்தியாயம் 19
வசனம் 15
"அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக"
- இறைவன் ஹஜ்ரத் யஹ்யா (அலை) அவர்களை பற்றி குறிப்பிடும் பொழுது தான் மேற்கண்டவாறு கூறுகிறான்.
இந்த 15ம் வசனத்திற்கு முந்தைய வசனங்கள் பூராவும் யஹ்யா நபியவர்களின் பிறப்புக்கு முந்தைய சம்பவங்களையும் அவர்கள் பிறந்த பின்னர் அவர்களின் எப்படி பெற்றோருக்கு நன்மை செய்பவராகவும் பெருமை கொண்டவராகவோ அல்லது மாறு செய்பவராகவோ இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறான்.
இதை தான் முழுமையான மீலாதுந்நபி என்று சொல்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நபி ஈஸா (அலை) அவர்கள் தமக்கு தாமே மீலாது விழா கொண்டாடுகிறார்கள்.
குரான்ஷரீஃபின் அதே 19வது அத்தியாயம் 16வது வசனம் அன்னை மர்யம் (அலை) அவர்களை பற்றி நினைவு கூர்கிறது. தொடர்ந்து 33வது வசனத்தில் நபி ஈஸா (அலை) அவர்களின் பேச்சை பற்றி இறைவன் அவர்களின் வார்த்தையையே குறிப்பிடுகிறான்.
"நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் நான் உயிர் பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், சாந்தி என் மீது உண்டாவதாக" - என்று வசனம் வருகிறது.
இந்த 13வது வசனத்திற்கு முன்னர் மர்யம் அவர்கள் கர்ப்பமுற்றது, ஈஸா நபியின் அற்புத பிறப்பை எடுத்து சொல்லும் முறை எல்லாமே மீலாதின் முன் மாதிரிகள் தான்.
4
குரான் ஷரீஃபின் அத்தியாயம் 14 வசனம் 5ல் மூஸா நபியவர்களுக்கு இறைவன் அனுப்பிய செய்தியை பற்றி சொல்லும் போது,
"... இன்னும் அல்லாஹ்வின் நாட்களை பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக!..." - என்று இறைவன் கூறுகிறான்.
அது என்ன நாட்கள் என்பதை பற்றி வசனம் 6ல் குறிப்பிடும் போது "பிர் அவ்னிடமிருந்து காப்பாற்றிய பொழுது இறைவனின் நிஃமத்துகளை நினைவு கூர சொல்வதோடு, பிர் அவ்ன் புரிந்த கொடிய செயல்களை பற்றியும் எடுத்து சொல்கிறான், அவன் கொடிய வேதனை செய்தது, ஆண் மக்களை கொன்று விட்டு பெண் மக்களை விட்டு விட்டது -
- இப்படியாக இறைவன் மூஸா நபிக்கு அளித்த செய்தியில் சொல்கிறான். இதுவே என்னளவில் மீலாது தான்.
முஸ்லீமாகிய நாங்களும் எங்களுக்கு இறைவன் புரிந்த அருட்கொடைகளை நினைவு கூர்கிறோம். எங்களின் அருட்கொடை முஹம்மது நபிகளன்றி வேறொன்றும் இல்லை.
குரான் ஷரீஃபின் அத்தியாயம் 21ல் வரும் வசனம் 107ல் இறைவன் பெருமானாரை பற்றி கூறும் பொழுது,
"(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை" என்றல்லவா கூறுகிறான்.
நாம் நினைத்து பார்க்க அதாவது மீலாது செய்ய இறைவன் நமக்கு புரிந்த அருள் பெருமானாரின் பிறப்பன்றி வேறென்ன இருக்க முடியும்.
5
நாம் செய்யும் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பெருமானார் தான் அழகிய முன்மாதிரி. இதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் நாம் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி?
அல்குரான் ஷரீஃப்
அத்தியாயம்:33; வசனம்:56
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து(அருள் பிரார்த்தனை)ச் செய்கிறார்கள். (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஸலாமும் கூறுங்கள்.
பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்வதற்கு அல்லாஹ்வும் மலக்குமார்களும் தான் அழகிய முன்மாதிரி.
அல்லாஹ் கலிமா சொல்ல வில்லை, தொழுவதுமில்லை, 100க்கு 2.50 காசு ஜகாத்தும் கொடுக்கிறதில்லை, ஹஜ்ஜும் செய்வதில்லை.
அவன் பெருமானாரின் மீது ஸலவாத்து சொல்கிறான். நாமும் இறைவனோடு சேர்ந்து பெருமானாரை நினைவு கூர்வோம். இதுவும் மீலாது தான்.
(அல்லாஹும்ம சல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி)
6
பெருமானாரை பற்றி பேசுவதென்பதே நாவை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போல தான் என்று நான் எழுதிய ஒரு கதையில் சொல்லியிருப்பேன்.
பெருமானாரை பற்றிய கவிதைகளில் நம்மை முழுமையாக சுத்தப்படுத்தும் சக்தி 'கஸீதத்துல் புர்தாஹ்'வுக்கு உண்டு என்று நம்புகிறேன்.
அந்த கஸீதாவிலிருந்து..
35 வது கஸீதா
எமது (நபி பெருமானார் (ஸல்)) அவர்கள் (நன்மையானவற்றை ஏவி, (தீமையானவற்றை) விலக்குபவராவர். எனவே, "ஆம்" அல்லது "இல்லை" என்ற வாக்கில் அவர்களை விட வேறெவரும் சக்தி வாய்ந்தவரல்லர்.
50 வது கஸீதா
கனவுகளை கண்டு அவையே போதுமென திருப்தியடைந்து கொள்ளும் துயில் கொண்ட கூட்டத்தினர், இவ்வுலகில் அ(ந் நபிய)வர்களின் அந்தரங்கத்தை எங்கனம் உணர முடியும்?
7
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை பற்றி ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அதில் 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.." என தொடங்கும் மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்த பாடல் வரிகள் அற்புதம்
இதோ அந்த வரிகள்..
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு
எங்கள் திருநபியிடம் போய் சொல்லு
சலாம் சொல்லு
தன்மார்க்கம் தந்த நபி
துன்மார்க்கம் வென்ற நபி
சாத்வீக மெய்ஞ்ஞான பெருமான்
கண்ணோடு கண்ணாகி
கல்புக்குள் நிறைவாகி
கருணைக்கு பொருள் தந்த எம்மான்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள்
அவரை காண துடிக்கின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)
மடமையாம் இருள் போக்கி
மதுவையும் விஷம் ஆக்கி
மாந்தரின் நலம் காத்த பெருமான்
மண்ணோடு பெண்மகவை
மகிழ்வோடு புதைத்திட்ட
மாபாத(க)ச் செயல் தடுத்த எம்மான்
அந்த மஹமூதை காண்பேனோ இந்நாள்
எங்கள் மஹமூதை காண்பேனோ இந்நாள் (தென்றல் காற்றே)
கடல்காடு மலைபாலை
கடக்கின்ற இறைவேதம்
கனிவாயில் இதழ் விண்ட பெருமான்
கடல்போன்ற பகைமுன்னே
உடைவாளை கரமேந்தி
படை கொண்டு பகைவென்ற எம்மான்
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்?
பத்ருபடைஅரசர் முகம் காண்பதென்னாள்? (தென்றல் காற்றே)
எந்நாளும் அவர்நாமம்
இயம்பாத கணமேது
இறையில்ல பாங்கோசை பெருமான்
கைநகம் கண்தொட்டு
கனிகின்ற ஸலவாத்தில்
கஸ்தூரி மணம் கமழும் எம்மான்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள்
அவரின் கருணைக்கு அழுகின்றேன் இந்நாள் (தென்றல் காற்றே)
8
குரான் ஷரீஃபில்
பெருமானாரை பற்றி இறைவன்
அத்தியாயம் 68
வசனம் 4
"(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்"
(truly you are of a magnificient charachter)
அத்தியாயம் 10
வசனம் 58
"அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும்.; ஆகவே அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும்; இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது" என்று (நபியே) நீர் கூறுவீராக
முஸ்லீம்களாகிய நம்மை பொறுத்த வரை பெருமானாரை தவிர வேறொன்றும் பேரருள் கிடையாது, அவர்களின் பிறப்பை வாழ்வை நினைவு கூர்ந்து சந்தோஷமடைவோம். இந்த சந்தோஷம் நாம் சேகரித்து வைத்திருக்கிறோமே வீடு, வாசல், சொத்து, நகை எல்லாம் இவை எல்லாவற்றையும் விட சிறந்தது.
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Sunday, February 28, 2010
Sunday, February 21, 2010
சில டைரி குறிப்புகள்
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சினிமா இயக்க பைத்தியம் பிடித்து அலைந்த மாதிரி நாங்களும் சிறு வயதில் சினிமா இயக்க வேண்டும் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததுண்டு. (இல்லேண்டாலும் அப்படித் தான்)
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர் படத்துக்கு ‘கத்தி முனையில் ரத்தம்’ என்று பெயர் வைத்திருப்பார்.
நாங்கள் அதே தலைப்போடு நாகூரோடு ஒத்து போகிற இன்னொரு பெயரையும் இணைத்து பெயர் வைத்து வீட்டில் பைத் வாங்கினோம்
நாங்கள் வைத்த பெயர்..
‘கத்தி முனையில் ரத்தம்
மைத்தாங் கொல்லையில் ஹத்தம்“
- இதுக்கு யார் தான் ஏசாம இருப்பார்கள்..?
--------------------------------------------------------------------------
எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம்.
வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர்.
அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?
அதற்கான விடை இதோ:
நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா.
இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...
அடுத்து ரஜினியை பார்ப்போம்..
அவர் குடிச்சிட்டு வந்து குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் உள்ள யுனுஸ் நானா கடைக்கிட்டே ஒரு முறை தவறி விழுந்து விட்டார். தூக்க போன சிலரின் கையை உதறி விட்டு தானாகவே சிரமப்பட்டு எந்திரிச்சு ஒத்த வெரலை பாஷா படத்தில் வரும் ரஜினி மாதிரி உசத்தி காட்டி “நான் ஒரு தடவ உழுந்தா நூறு தடவ உழுந்த மாதிரி”ன்னு சொன்னார். அவர் பெயரும் பாஷா தானுங்களே..
So, நான் சொல்ல வரும் So and So எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து வைத்த கலவை தானே..?
-------------
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர் படத்துக்கு ‘கத்தி முனையில் ரத்தம்’ என்று பெயர் வைத்திருப்பார்.
நாங்கள் அதே தலைப்போடு நாகூரோடு ஒத்து போகிற இன்னொரு பெயரையும் இணைத்து பெயர் வைத்து வீட்டில் பைத் வாங்கினோம்
நாங்கள் வைத்த பெயர்..
‘கத்தி முனையில் ரத்தம்
மைத்தாங் கொல்லையில் ஹத்தம்“
- இதுக்கு யார் தான் ஏசாம இருப்பார்கள்..?
--------------------------------------------------------------------------
எங்க ஊர்ல உள்ள ஒரு நபரை பத்தி எழுதலாம் என்று நினைக்கிறேன். அவரை பத்தி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஆளவந்தான் கமல் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை என்றால் இவர் எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று சொல்லலாம்.
வஹ்ஹாபிகள் தலையெடுத்த புதிதில் இவரிடம் தர்ஹாக்கு நீங்க ஜியாரத்துக்கு போவீங்களா? என்ற கேள்வியை கேட்ட போது “தர்ஹாக்கு நான் போ மாட்டேன்.. அதாவது ’பத்தி’யோட (ஊதுவர்த்தி) போ மாட்டேன் ’பக்தி’யோட போவேன்” என்று வஹ்ஹாபிகளையே குழப்பினவர் அவர்.
அதெல்லாம் சரி, அவர் எப்படி எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து செய்த கலவை என்று நீங்கள் கேட்கலாம்..?
அதற்கான விடை இதோ:
நான் சொல்ல வரும் இந்த நபரின் வாப்பா பெயர் ஜானி - நாகூரார்க்ளுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு காலத்தில் இவர்கள் தான் நாகூரில் நடக்கும் பெரும்பாலான எல்லா நிகாஹுக்கும் ரோக்கா கொடுப்பார்கள் இப்பொழுது மர்ஹும் - நான் சொல்ல வரும் நபர் பெயர் பாஷா, அதை அப்படியே சுருக்கி ஜே.பி. அதாவது ஜானி பாஷா.
இது எப்படி எம்.ஜி.ஆர். மாதிரி ஆகும் என்றால், ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் ஜே.பி. அதனால இவர் எம்.ஜி.ஆரில் பாதி...
அடுத்து ரஜினியை பார்ப்போம்..
அவர் குடிச்சிட்டு வந்து குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் உள்ள யுனுஸ் நானா கடைக்கிட்டே ஒரு முறை தவறி விழுந்து விட்டார். தூக்க போன சிலரின் கையை உதறி விட்டு தானாகவே சிரமப்பட்டு எந்திரிச்சு ஒத்த வெரலை பாஷா படத்தில் வரும் ரஜினி மாதிரி உசத்தி காட்டி “நான் ஒரு தடவ உழுந்தா நூறு தடவ உழுந்த மாதிரி”ன்னு சொன்னார். அவர் பெயரும் பாஷா தானுங்களே..
So, நான் சொல்ல வரும் So and So எம்.ஜி.ஆர் பாதி ரஜினி பாதி கலந்து வைத்த கலவை தானே..?
-------------
Tuesday, February 16, 2010
மாவ்சம் - (காலங்கள் - Season) - பழைய இந்தி பட விமர்சனம்
முதலில் கீழே வரும் இந்த பாட்டை கேளுங்கள் (பாருங்கள்). மாவ்சம் என்ற படத்தில் எழுத்தில் வரும் பாடல் இது. பூபிந்தரின் ஆழமான குரலிலிருந்து நம்மை ஆளும் அருமையான கஜல், இந்த பாடல். வைரமுத்து 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து' என்று எழுதினார். இந்த கஜல் 'செவியில் விழுந்து டைரக்டாக ஆன்மாவில் நுழைந்து' விடும்.
பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.
மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்
பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?
- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்
வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார். டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.
இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.
வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்
ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.
27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.
வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.
சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.
கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.
அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.
அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.
அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த வீட்டில் தங்கியிருக்கும் சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.
தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு சென்றது, தனது தாயாரின் நிலைக்கு காரணமான டாக்டரின் மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.
கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.
டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்
'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்
டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.
கில் கஜிலியிடம் 'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.
டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.
கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.
இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.
குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.
இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.
சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.
படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.
மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.
காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்
இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.
பார்க்க இருக்கும் யுடியுப் காணொளியில் படத்தின் காட்சிகள் இடம் பெறாது. பாடல் கேட்பதற்காகத் தான் இதை பதிகிறேன்.
மேற்கொண்டு பயணிப்பதற்கு முன்னர்.. இதோ 'இழந்த அமைதியை மீண்டும் இதயம் தேடும்..' அந்த பாடல்
பாடலை பார்த்து முடித்து விட்டீர்களா?
நல்லது.
நான் சொன்னது பொய் இல்லை என்று நீங்கள் இந்த அவசர உலகத்தில் தப்பி தவறி அமைதி விரும்பியாக இருந்தால் உணர்ந்து இருப்பீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்,
நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
உன்னையே மணமுடிப்பேன் என்று வாக்களித்ததுண்டா?
சந்தர்ப்ப சூழ்நிலையால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போனதுண்டா?
கைபிடிப்பேன் என்ற சொல்லை காப்பற்ற முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்க நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்?
- அந்த எல்லை தான் மாவ்சம் சொல்லும் மனித ஆவணம்
வலி நிவாரணி மருந்து கம்பெனி நிறுவனர் டாக்டர் அமர்நாத் கில் 27 வருடங்கள் கழித்து ஓய்வுக்காக டார்ஜ்லிங் செல்கிறார். ஓய்வு என்றால் உடல், மனம் அமைதி பெறுவது என்று வைத்து கொண்டால் அந்த அமைதியை தேடி தான் அவர் செல்கிறார். டாக்டரான அவர் தயாரிக்கும் வலி நிவாரணியால் கூட அவருக்கும் இருக்கும் வலியை போக்கி அமைதியை தர முடியவில்லை.
இப்படி ஒரு வலி இருக்கிறதென்றால் அது காதல் சம்மந்தப்பட்டதாகத் தான் இருக்கும் என்று இயல்பாக வரும் நினைப்பை மாற்றிக் கொள்ளும் படி நான் கேட்க போவதில்லை.
வலிகளை
வரவேற்க
தெரிந்தவர்கள்
காதலிக்க
தகுதியானவர்கள்
ஒன்னுங் கீழ் ஒன்னு எழுதினாலாவது கவிதை எழுத வருதான்னு பார்த்தேன். சரி, ஒத்துக்குறேன், கவிதை தான் எழுத வரவில்லை. ஆனால் மாவ்சம் என்ற கவிதையை பற்றி தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்ற திருப்தியோடு தொடர்கிறேன்.
27 வருடங்களுக்கு முன்பு இதே டாக்டர் கில் இதே டார்ஜிலிங்கில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து காலில் சுளுக்கு உண்டாகி ஒரு ஹெர்பல் மருத்துவரையும் அவரது மகளையும் சந்திக்கிறார், சந்தா என்ற அந்த பெண்ணை மனதார நேசிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் கருத்துக்களை 'ச்சடி மே ச்சடி..' பாடி பரிமாறிக் கொண்ட பிறகு அவளை மணமுடிப்பதாக வாக்களித்து விட்டு புகை வண்டியில் ஊரை பார்க்க புறப்படுகிறார் கில். அதன் பிறகு சந்தா கில்லை
பார்க்கவே இல்லை.
ஒரு கட்டத்தில் பரீட்சை முடித்து ரிசல்டுக்காக காத்திருக்கும் போது கில் சொல்கிறார், 'இன்னும் ஒரு வாரத்தில் ரிசல்ட் வந்து விடும், அதன் பிறகு நான் யாரை வேணும்னாலும் கொல்லலாம்..' என்று. விளையாட்டுக்காக கூட இப்படி எல்லாம் பேசலமா? - உண்மையிலேயே இதே போன்று ஒரு சம்பவம் நடந்து விட பல சிக்கலால் சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போக இப்போது 'மன்னிப்பு எனும் ஓய்வு' தேடி தான் இந்த டார்ஜ்லிங் வருகை.
வயசான பிறகு நம் வாழ்க்கையை திரும்பி பார்த்து நாம் யாருக்காவது தவறிழைத்திருந்தால் 'மன்னிப்பு' கேட்டு அவர்களை தேடி போவது என்பது அருமையானவர்கள் செய்யும் காரியம்.
சந்தாவை தேடுகிறார் டாக்டர் கில். ஒரு இடம் ரெண்டு இடம் இல்லை, பல இடங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கிறார். சந்தாவை அல்ல, அவள் கில்லின் வரவை எண்ணி பைத்தியமாக அலைந்து கடைசியாக வாழ்ந்த இடத்தை.
சந்தா இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தாலும் அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருந்த தகவல் தெரிய வருகிறது. சந்தா பைத்தியமாக அலைந்த போது கூட கில்லை மறக்காததால் பார்ப்பவர்களிடம் எல்லாம், 'என் பெண்ணை டாக்டராக்கிடுங்கள்..' என்று அழுது கூப்பாடு போடுவாள்.
கேள்விபட்டு குமுறி அழும் டாக்டர் கில் அதிகரிக்கும் குற்ற உணர்ச்சியுடன் அவளின் மகளை பற்றி விசாரிக்கிறார். அவள் வெளியூரில் சம்பாதித்து தன் தாய்க்கு மாசா மாசம் காசு அனுப்பி வைத்துக் கொண்டு வந்ததாகவும் அவளின் தாயார் இறந்த பிறகு அந்த பணம் வருவது நின்று விட்டதாகவும் கேள்விப்படுகிறார்.
அவளின் மகள் பற்றிய மேலதிக தகவல் கிடைக்காமல் ஒரு இடத்தில் காரை நிறுத்தி கடையில் தலைவலிக்கு மருந்து வாங்கும் போது, 'இந்த மாத்திரை சாப்பிடுங்க சார், கில் கம்பெணி மாத்திரை, நல்லா இருக்கும்..' என்கிறார் கடைக்காரர்.
அந்த கடையின் பக்கத்தில் இருக்கும் ஒரு உடல் தொழில் பண்ணக் கூடிய இடத்திலிருந்து பெரிய சத்தம், டாக்டர் கில் அதை கவனிக்கிறார், குறைந்த காசை வைத்துக் கொண்டு தன்னோடு கட்டிலில் பகிர்ந்து கொள்ள வந்ததற்காக அவள் கெட்ட வார்த்தையில் திட்டுகிறாள். டாக்டர் திடுக்கிடுகிறார். அந்த முகம், அந்த குரல், தான் 27 வருடத்திற்கு முன்னர் பார்த்த சந்தாவின் முகத்தை, குரலை ஒத்திருக்கிறது.
அவளை காண அந்த விபச்சார விடுதிக்கு செல்கிறார் டாக்டர் கில். அந்த விடுதியின் நிர்வாகியிடம் பேசி அவளை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இதனால் அவருக்கு அந்த வீட்டில் ஏகப்பட்ட அவமானம், கஜிலி என்ற அந்த பெண்ணை டாக்டர் கில்லுடன் பார்த்த சந்திக்க வரும் பணக்காரர்கள் முதல் அந்த வீட்டில் தங்கியிருக்கும் சமைக்கும் வேலை பார்க்கும் பெரியவர் வரை அவரை மிகவும் தாழ்வாக எண்ணிக் கொள்கிறார்கள்.
தனது தாயாரான சந்தாவிற்கு எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது, மருத்துவம் படித்த ஒரு மாணவன் கொடுத்த வாக்கை நம்பி தனது தாயார் ஏமாந்து மனநிலை பாதிக்கப்பட்டு அலைந்து திரிந்தது, தனது தந்தையின் சகோதரனே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது, கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலில் விட்டு சென்றது, தனது தாயாரின் நிலைக்கு காரணமான டாக்டரின் மேல் தனக்கு இருக்கும் கோபங்களை எல்லாம் கஜிலி டாக்டரிடம் பதிவு செய்கிறாள்.
கஜிலி தான் ஒருவரை காதலித்ததாகவும் இந்த தொழிலுக்கு வந்த பிறகு அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டதாகவும் சொல்கிறாள்.
டாக்டர் கஜிலியிடம், 'ஏன் தவிர்த்து விட்டாய்?' என்று கேட்கிறார்
'என் சூழ்நிலையில் நான் எந்த முகத்தை வைத்து கொண்டு போய் அவரை சந்திப்பது' என்று பதில் கேள்வி கேட்கிறாள்
டாக்டர் சொல்கிறார், 'இதே மாதிரி ஒரு காரணம் உங்க அம்மாவை சந்திக்க முடியாமல் போனதற்கு அந்த டாக்டருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?' என்று அவளை யோசிக்க வைக்கிறார்.
கில் கஜிலியிடம் 'உன்னை உன் நிலைமை தெரிந்தும் அவர் ஏற்றுக் கொண்டால், அவரிடம் சேர்ந்து வாழ்கிறாயா?' என்று கேட்டு அவளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்லும் போது அந்த வீட்டில் 'வீட்டுக்காரர் வெளியே போயிருக்கார்..' என்று ஒரு பெண் சொல்ல கேட்டு உடைந்து திரும்புகிறார்கள்.
டாக்டர் கில் ஒரு விபச்சாரியாக மாறிப் போய் புதிய உலகில் குடி முழுகி போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கஜிலியை சந்தாவின் மகளாக மாற்ற நினைக்கிறார், அதன் மூலமாக சந்தாவிடம் கேட்காமல் விடப்பட்ட மன்னிப்பை அவள் மகள் கஜிலியிடம் கேட்டு பெறலாம் என்ற நோக்கத்தில்.
கஜிலிக்கு உண்மை தெரிந்து டாக்டர் கில்லை மன்னிப்பாளா? என்பதற்கான விடையை தான் மாவ்சம் படத்தை திரையில் ஓட விடாமல் மனசிலேயே தங்க விடுகிறார்கள்.
இதே கதையை சிவாஜி கனேசன் 'வசந்தத்தில் ஒரு நாள்' என்று தமிழில் நடித்திருப்பார்.
குல்ஜார் சாபின் இயக்கத்தில் இதயங்கள் நனைகிறது.
இந்த படத்தில் பிளேஷ் பேக்குக்கு நடுவே வார்த்தையை காப்பாத்த முடியாமல் போன காதலனும் காதலித்த பெண்ணின் மகளும் சந்தித்து கொள்கிறார்கள்.
சஞ்சீவ் குமார் டாக்டர் கில்லின் சுமையை நன்றாகவே சுமந்து இருக்கிறார். டாக்டார் கில்லின் 27 வருட ஏக்கத்தை முகத்தில் பதிய வைத்திருக்கிறார். சந்தாவாகவும் கஜிலியாகவும் ஷர்மிளா தாகூர் எழுதி கொண்டிருக்கும் என்னை எழுந்து நிற்க வைக்கிறார். ஷர்மிளா தாகூருக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைக்கிறேன்.
படத்துக்கு இசை அமைத்த மதன் மோகனின் நினைவாஞ்சலி என்று தான் பட டைட்டில் கார்டிலேயே போடுவார்கள். படம் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.
மதன் மோகன் பாக்தாதில் பிறந்தவர் என்று நினைக்கிறேன். இவரின் வெளிவராத பாடலை 2004 ஆம் ஆண்டு வெளியான 'வீர்ஜரா' என்ற ஷாருக்கான் நடித்த படத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடதகுந்தது.
காஃபி வித் அனு சீசன் 2 வில் பூ படத்தின் இயக்குனர் சசி சொன்னார் அவர் ஒரு நல்ல படத்தை பார்த்து விட்டு வந்த பிறகு நகத்தை வெட்டினாராம், கலைந்து கிடைத்த புத்தகத்தை ஒழுங்கு படுத்தினாராம்
இந்த படத்தை அவரை பார்க்க வைத்து அவருடைய ரியாக்சனை பார்க்க வேண்டும் என்று ஆவல எழுகிறது.
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்,
சஞ்சீவ் குமார்
Friday, February 12, 2010
கவ்வாலியின் மின்னும் நட்சத்திரம் - ஷாஹென்ஷா-ஏ-கவ்வாலி - The Brightest Star of Qawwaali
1948 அக்டோபர் 13ல் பாகிஸ்தான் நாட்டின் லைலாப்பூர் என்ற நகரில் இசையின் உருவம் இப்புவி மீது அழுது கொண்டே பிறக்கிறது. (லைலாப்பூர் என்ற ஊர் இப்போது ஃபைஸலாபாத் என்ற பெயருடன் விளங்குகிறது).
உஸ்தாத் பதேஹ் அலி கான் எனும் இசை மேதையின் குடும்பத்தில் ஐந்து பெண் மக்களுக்கு பிறகு ஆறாவதாக அந்த இசையின் பெரு உருவம் (பெரு உருவம் என்றால் பெருத்த உருவம் மட்டுமல்ல பெருமைக்குறிய உருவமும் கூட) முதன் முதலாக அழுகையின் ஊடாக இசைத்தது.
உஸ்தாத் பதேஹ் அலி கான் மற்றும் அவரது சகோதரர் உஸ்தாத் முபாரக் அலி கான் மற்றும் சலாமத் அலி கான் ஆகியோர்களின் இசைக் குழுவில் சிறு வயதிலேயே இசை உருவம் தன்னை இணைத்து கொண்டு செயல் பட தொடங்கியது.
தபேலாவில் விரல்கள் படர ஆரம்பித்து பாகிஸ்தானின் பாரம்பரிய இசையான 'கயால்' எனும் இசையை சரி வர உள்வாங்கி கொண்டது.
1964ல் தந்தையாரின் மறைவும், 1971ல் தந்தையின் சகோதரரின் மறைவுக்கு பிறகும் அந்த இசை உருவம் தலையெடுக்க ஆரம்பித்தது.
'கவ்வாலி' என்றால் 'உரக்க சொல்வது' என்றே பொருளாம். யாரிடம் எதை சொல்வது? - உண்மையில் இறைவன் மீதும் அவனது தூதர் முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதான் அன்பை உரக்க சொல்வது. அடுத்து யாரிடம் சொல்வது? அல்லாவிடத்திலா? ஊர் உலகத்துக்கா? - என்றால் அதுவும் இல்லை, தனக்கு தானே சொல்லி கொள்வது.அதை உரக்க சொல்வதற்கு பெயர் தான் கவ்வாலி.
கவ்வாலி என்பது சூஃபி இசையின் ஒரு வடிவம். சூஃபி என்றால் இறைவனை தவிர்த்த வேறு சிந்தனையே இல்லாதவர் என்று பொருள்.
இறைவனை நினைவு கூர்வதால் உள்ளம் அமைதி பெறும் என்ற திருமறை வாசகத்தில் வருவதற்கேற்ப கவ்வாலி இசைக் கலைஞர்கள் தான் உச்சஸ்தாயியில் பாடும் போது இறைவனையே நினைவு கூர்கிறார்கள். இதனால் அவ்வாறு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் உள்ளம் அமைதி பெறுகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த இசை உருவம் 'கயாலை'யும் 'கவ்வாலியையும்' கலக்கியது உலகத்தையே ஒரு கலக்க இருப்பதற்கு ஒரு முன்னோட்டம் தான்.
அவரின் ஒரே கனவு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்காவில் அடங்கியிருக்கும் 'ஏழைகளின் பங்காளர்' (கரீபே நவாஜ்) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யினுத்தீன் அவர்களின் தர்பாரில் ஒரு இசை தர்பார் படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.
இந்த கனவு கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறியது. பாலிவுட்டில் ராஜ்கபூர் என்ற ஷோமேனின் அழைப்பை ஏற்று ரிஷிகபூர் - நீட்டுசிங்கின் திருமண விழாவில் பாடுவதற்காக அந்த இசை உருவம் அழைத்து கௌரவிக்கப்பட்ட போது தான் அந்த கனவு நிறைவேறியது.
(குறிப்பு: ராஜ்கபூரும் பெஷாவர் எனும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு நகரில் பிறந்து லைலாப்பூர் என்ற ஃபைஸலாபாத்தில் வளர்ந்தவர் தான். அதனால் தான் ஒரே ஊர் காரர் என்ற காரணத்தால் ரிஷி-நீட்டு திருமணத்திற்கு அழைத்தார். ராஜ்கபூர் ரஸ்ஸியாவில் தான் பிரபலம். ரஸ்ஸிய மக்களுக்கு காந்தி, நேரு எல்லாம் தெரியாது, ஆனால் ராஜ்கபூர், நர்கீஸ் என்றால் தான் தெரியும்)
பாலிவுட்டே அந்த இசை உருவத்தின் இசை கோர்வையை கேட்டு வியப்பில் மூழ்கியது. இந்த இசை உருவம் உர்து தொடங்கி பஞ்சாபி, பாரசீகம் கடந்து இந்தியையும் விட்டு வைக்காமல் இசைத் தேனால் குளிப்பாட்டியது. உண்மையை சொன்னால் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் நம் அழகிய தமிழிலும் இந்த இசை உருவத்தின் குரலை ஏ.ஆர்.ரஹ்மானின் புண்ணியத்தால் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
(குறிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை தொகுப்பில் இந்த இசை உருவம் ஏ.ஆர்.ஆரோடு சேர்ந்து 'போறாளே பொண்ணுத்தாயி..' என்ற கருத்தம்மாவில் வந்த இசையை ரீமிக்ஸ் வடிவத்தில் கேட்டிருக்கலாம்)
இன்னும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து சோதனை முயற்சி செய்து பார்த்த செய்திகளும் உண்டு. கின்னஸ் ரெக்கார்டில் கவ்வாலி இசை வடிவத்தின் அதிக தொகுப்புகளை படைத்தவர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெற்றதுமுண்டு.
தமிழில் பாடவில்லையே என்ற கவலை எனக்கிருந்தாலும் அவரின் இசையையும் விட்டு வைக்காமல் தமிழ் படத்துக்கு காப்பி அடித்த சம்பவமும் இருக்கவே செய்கிறது.
காப்பியடிப்பதில் சாதனை புரிந்த சுந்தர்.சி யின் முதல் படமான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி வாயசைக்க கார்த்திக் பின்னாடி ஒளிந்து கொண்டு பாடும் வைஜெயந்திமாலாவின் 'வாழ்க்கை' காலத்து காட்சிகள் நிரம்பிய 'மாமா நீ வாம்மா.. புத்தம் புது பாட்டு..' என தொடங்கும் பாடல் 'கின்னா சோனா தெய்னு ரப்னே பனாயா..' என்ற இவரின் பாடலின் இசை திருட்டு அல்லவா அது.
இன்றும் இசை பிரியர்களால் குறைந்த பட்சம் கவ்வாலி இசை பிரியர்களால் மதிக்கப்படும் அந்த இசை உருவம் 'நஸ்ரத் பதேஹ் அலி கான்' என்ற பெயர் தாங்கி உருவம் தன்னுடைய 48வது வயதில் ஆகஸ்ட் 16ல் 1997ஆம் ஆண்டில் காலத்தை முடித்துக் கொண்டு புகழோடு கரை சேர்ந்தது.
பின் குறிப்பு:
'கயால்' இசை வடிவத்தை 'கயல்' என்று தவறாக எழுதியதற்காக வருந்துகிறேன்
திருத்திய ஆபிதீன் நானா அவர்களுக்கு என் நன்றிகள்..
அதற்காக ஆபிதீன் நானா அவர்களை இந்த 'அல்லாஹூ அல்லாஹூ'வில் கரையுங்கள் என்று வாழ்த்துகிறேன்
உஸ்தாத் பதேஹ் அலி கான் எனும் இசை மேதையின் குடும்பத்தில் ஐந்து பெண் மக்களுக்கு பிறகு ஆறாவதாக அந்த இசையின் பெரு உருவம் (பெரு உருவம் என்றால் பெருத்த உருவம் மட்டுமல்ல பெருமைக்குறிய உருவமும் கூட) முதன் முதலாக அழுகையின் ஊடாக இசைத்தது.
உஸ்தாத் பதேஹ் அலி கான் மற்றும் அவரது சகோதரர் உஸ்தாத் முபாரக் அலி கான் மற்றும் சலாமத் அலி கான் ஆகியோர்களின் இசைக் குழுவில் சிறு வயதிலேயே இசை உருவம் தன்னை இணைத்து கொண்டு செயல் பட தொடங்கியது.
தபேலாவில் விரல்கள் படர ஆரம்பித்து பாகிஸ்தானின் பாரம்பரிய இசையான 'கயால்' எனும் இசையை சரி வர உள்வாங்கி கொண்டது.
1964ல் தந்தையாரின் மறைவும், 1971ல் தந்தையின் சகோதரரின் மறைவுக்கு பிறகும் அந்த இசை உருவம் தலையெடுக்க ஆரம்பித்தது.
'கவ்வாலி' என்றால் 'உரக்க சொல்வது' என்றே பொருளாம். யாரிடம் எதை சொல்வது? - உண்மையில் இறைவன் மீதும் அவனது தூதர் முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதான் அன்பை உரக்க சொல்வது. அடுத்து யாரிடம் சொல்வது? அல்லாவிடத்திலா? ஊர் உலகத்துக்கா? - என்றால் அதுவும் இல்லை, தனக்கு தானே சொல்லி கொள்வது.அதை உரக்க சொல்வதற்கு பெயர் தான் கவ்வாலி.
கவ்வாலி என்பது சூஃபி இசையின் ஒரு வடிவம். சூஃபி என்றால் இறைவனை தவிர்த்த வேறு சிந்தனையே இல்லாதவர் என்று பொருள்.
இறைவனை நினைவு கூர்வதால் உள்ளம் அமைதி பெறும் என்ற திருமறை வாசகத்தில் வருவதற்கேற்ப கவ்வாலி இசைக் கலைஞர்கள் தான் உச்சஸ்தாயியில் பாடும் போது இறைவனையே நினைவு கூர்கிறார்கள். இதனால் அவ்வாறு பாடுபவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் உள்ளம் அமைதி பெறுகிறது என்றால் அது மிகையல்ல.
அந்த இசை உருவம் 'கயாலை'யும் 'கவ்வாலியையும்' கலக்கியது உலகத்தையே ஒரு கலக்க இருப்பதற்கு ஒரு முன்னோட்டம் தான்.
அவரின் ஒரே கனவு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து அஜ்மீர் தர்காவில் அடங்கியிருக்கும் 'ஏழைகளின் பங்காளர்' (கரீபே நவாஜ்) ஹஜ்ரத் ஹாஜா முஹ்யினுத்தீன் அவர்களின் தர்பாரில் ஒரு இசை தர்பார் படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.
இந்த கனவு கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறியது. பாலிவுட்டில் ராஜ்கபூர் என்ற ஷோமேனின் அழைப்பை ஏற்று ரிஷிகபூர் - நீட்டுசிங்கின் திருமண விழாவில் பாடுவதற்காக அந்த இசை உருவம் அழைத்து கௌரவிக்கப்பட்ட போது தான் அந்த கனவு நிறைவேறியது.
(குறிப்பு: ராஜ்கபூரும் பெஷாவர் எனும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு நகரில் பிறந்து லைலாப்பூர் என்ற ஃபைஸலாபாத்தில் வளர்ந்தவர் தான். அதனால் தான் ஒரே ஊர் காரர் என்ற காரணத்தால் ரிஷி-நீட்டு திருமணத்திற்கு அழைத்தார். ராஜ்கபூர் ரஸ்ஸியாவில் தான் பிரபலம். ரஸ்ஸிய மக்களுக்கு காந்தி, நேரு எல்லாம் தெரியாது, ஆனால் ராஜ்கபூர், நர்கீஸ் என்றால் தான் தெரியும்)
பாலிவுட்டே அந்த இசை உருவத்தின் இசை கோர்வையை கேட்டு வியப்பில் மூழ்கியது. இந்த இசை உருவம் உர்து தொடங்கி பஞ்சாபி, பாரசீகம் கடந்து இந்தியையும் விட்டு வைக்காமல் இசைத் தேனால் குளிப்பாட்டியது. உண்மையை சொன்னால் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் நம் அழகிய தமிழிலும் இந்த இசை உருவத்தின் குரலை ஏ.ஆர்.ரஹ்மானின் புண்ணியத்தால் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
(குறிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானின் 'வந்தே மாதரம்' இசை தொகுப்பில் இந்த இசை உருவம் ஏ.ஆர்.ஆரோடு சேர்ந்து 'போறாளே பொண்ணுத்தாயி..' என்ற கருத்தம்மாவில் வந்த இசையை ரீமிக்ஸ் வடிவத்தில் கேட்டிருக்கலாம்)
இன்னும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து சோதனை முயற்சி செய்து பார்த்த செய்திகளும் உண்டு. கின்னஸ் ரெக்கார்டில் கவ்வாலி இசை வடிவத்தின் அதிக தொகுப்புகளை படைத்தவர் என்ற சாதனை பட்டியலில் இடம் பெற்றதுமுண்டு.
தமிழில் பாடவில்லையே என்ற கவலை எனக்கிருந்தாலும் அவரின் இசையையும் விட்டு வைக்காமல் தமிழ் படத்துக்கு காப்பி அடித்த சம்பவமும் இருக்கவே செய்கிறது.
காப்பியடிப்பதில் சாதனை புரிந்த சுந்தர்.சி யின் முதல் படமான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி வாயசைக்க கார்த்திக் பின்னாடி ஒளிந்து கொண்டு பாடும் வைஜெயந்திமாலாவின் 'வாழ்க்கை' காலத்து காட்சிகள் நிரம்பிய 'மாமா நீ வாம்மா.. புத்தம் புது பாட்டு..' என தொடங்கும் பாடல் 'கின்னா சோனா தெய்னு ரப்னே பனாயா..' என்ற இவரின் பாடலின் இசை திருட்டு அல்லவா அது.
இன்றும் இசை பிரியர்களால் குறைந்த பட்சம் கவ்வாலி இசை பிரியர்களால் மதிக்கப்படும் அந்த இசை உருவம் 'நஸ்ரத் பதேஹ் அலி கான்' என்ற பெயர் தாங்கி உருவம் தன்னுடைய 48வது வயதில் ஆகஸ்ட் 16ல் 1997ஆம் ஆண்டில் காலத்தை முடித்துக் கொண்டு புகழோடு கரை சேர்ந்தது.
பின் குறிப்பு:
'கயால்' இசை வடிவத்தை 'கயல்' என்று தவறாக எழுதியதற்காக வருந்துகிறேன்
திருத்திய ஆபிதீன் நானா அவர்களுக்கு என் நன்றிகள்..
அதற்காக ஆபிதீன் நானா அவர்களை இந்த 'அல்லாஹூ அல்லாஹூ'வில் கரையுங்கள் என்று வாழ்த்துகிறேன்
Labels:
இசை,
கவ்வாலி,
நஸ்ரத் பதேஹ் அலி கான்
Thursday, February 11, 2010
குழந்தை பாதுகாப்பு
'வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்' ன்னு சொல்வாங்க, அதோட 'குழந்தைய வளர்த்துப் பார்'ன்னும் சேர்த்துக்கலாம்னு தோணுது.
இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.
(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)
(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)
குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.
எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள், வீடு சுத்தம் செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.
ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.
குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.
இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் ஒரு ரெண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.
சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?
ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.
இங்கே சிங்கப்பூரில் பங்களாதேஷை சேர்ந்த நண்பரின் நண்பர் ஒருவரின் குழந்தை முந்தா நாள் இறந்து விட்டது. நேற்று ஜனாசா எடுத்தாகி விட்டது.
குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் மறைப்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டது. கழுத்தில் சுற்றிய படியே அங்கிருந்து ஓட முயன்று இருக்கிறது. கழுத்து நெறிக்கப்பட்டு குழந்தை மௌத்தா போயிடுச்சு.
(அதாவது குழந்தை நாற்காலியில் உட்கார்ந்து மேசை மேலுள்ள கணினியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தன்னையே அறியாமல் ஜன்னலில் உள்ள மறைப்பில் தன் கழுத்தை தானெ சுற்றிக் கொண்டது. இது தெரியாமல் விளையாடி முடிந்ததும் இடத்தை விட்டு நகர முயன்ற போது கழுத்தில் மாட்டியிருந்த அந்த மறைப்பு பிடித்து அந்த பிள்ளையை இழுக்க நாற்காலியிலிருந்து கீழே விழுந்து தொங்கி இருக்கிறது பிள்ளை.)
(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்)
குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கே தானே சும்மா விளையாடிக் கொண்டிருக்கட்டும் என்றெல்லாம் விட்டு விட முடியாது.
எதையாவது எடுத்து வாயில போட்டுடும். பிளாஸ்டிக் ஜாமான், சின்ன சின்ன விளையாட்டு பொருள்கள், மருந்து, மாத்திரைகள், வீடு சுத்தம் செய்கின்ற அமிலங்கள் இப்படி எல்லாத்தையும் குழந்தைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.
ஒரு அம்மா துணிகளை இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். போன் வந்தது என்று துணியின் மீது கார்ட் லெஸ் அயர்ன் பாக்ஸை வைத்து விட்டு பேச போயிருக்கின்ற நேரம் குழந்தை வந்து தொங்கி கொண்டிருந்த துணியை பிடித்து இழுத்திருக்கிறது. நினைத்து பாருங்கள், துணியோடு சேர்ந்து அயர்ன் பாக்ஸும் விழுந்தால் என்னாகும் என்று.
குழந்தைக்கான விளையாட்டு பொருள்கள் வாங்கும் போது '3 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஏற்றது அல்ல' என்றும் 'நச்சு தன்மையுடையது' அல்ல என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை கவனித்து பார்த்து தான் வாங்க வேண்டும்.
இன்னும் சமைக்கும் போது எல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தையை அருகில் விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் ஒரு ரெண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாடி இங்கே என் குழந்தையை கட்டிலில் போட்டு விட்டு சுத்திலும் தலையணையை வைத்து வீடு கட்டுற மாதிரி அடுக்கி வைத்து விட்டு கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று திரும்பி பார்த்தால், தலையணையை எல்லாம் தாண்டி கட்டிலின் ஓரத்துக்கு வந்து கட்டிலிலிருந்து இறங்கி கொண்டிருக்கிறது என் குழந்தை. பயங்கரம்.
சாதாரணமாக பெரியோர்களான நமக்கே, நம்மை சுற்றியிருக்கும் எந்த செயல் அல்லது சூழல் அல்லது பொருள் எவ்வாறெல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்பார்ப்பது?
ஆனால் பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் நமக்கு மட்டுமல்ல நம் குழந்தைக்கு எது ஆபத்தை ஏற்படுத்தும் என்று அடையாளம் கண்டு அதை தடுக்கும் கடமை நமக்கு இருக்கவே செய்கிறது.
சில டைரி குறிப்புகள்...
நான் செட்டியர் ஸ்கூல்ல ரெண்டாவது படிச்சிகிட்டிருந்தேன். வாத்தியார் பேர் தெரியலை. ஆனாக்கா 'செவுட்டு வாத்தியார்' என்று தான் கூப்பிடுவோம். அவருக்கு காது அவ்வளவா கேட்காது அல்ல அவ்வளவும் கேட்காது. வாத்தியார்களுக்கு பல பேர் இப்படி மாணவர்கள் வைப்பதுண்டு. ஒரு வாத்தியாருக்கு 'போண்டா சார்' என்று கூட பெயரிருந்தது. அவர் போண்டா பிரியமா சாப்பிடுவாரா? அல்லது போண்டா மாதிரி இருப்பாரா? அல்லது இரண்டுமேவா? என்றெல்லாம் ஞாபகமில்லை.
இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'.
அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில் (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார்.
போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார்.
'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிறர்,
போனை எடுத்தவர் தொடர்ந்து கடுப்புடனே பேசியிருக்கிறார், 'அவன்லாம் இல்லை'
'வந்தா நான் பேசுனேன்னு சொல்லுங்க..'
அவர், 'நீங்க யாருன்னு சொல்றது?' என்று கேட்டிருக்கிறார்
அறிவாளி சொல்லியிருக்கிறார், 'நானா..?'
அவர், 'ஆமா.. ஆமா..'
அறிவாளி, 'நா அறிவாளின்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்...' என்றிருக்கிறார்
அவர், '(கடுப்புல கெட்ட வார்த்தையை சொல்லிட்டு) அப்ப நாங்க என்ன முட்டாளா?' என்று கேட்டுட்டு போனை அறைந்திருக்கிறார்.
இந்த டைரி குறிப்பு 'செவிட்டு சார்' என்ற பட்டப் பெயரை வைத்து மாணவர்கள் என் வாத்தியாரை கிண்டலடித்தது பற்றியது அல்ல. சொல்ல வருவது வேறு விஷயம்..
நான் ஒரு முறை எனது தம்பி தாஜையும் எனது மச்சான் ஜெஹபரையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு போயிருந்தேன். செவிட்டு வாத்தியார் இன்னும் வரவில்லை. அதுக்கிடையில் தாஜுக்கும் ஜெஹபருக்கும் சரியான சண்டை. கட்டிகிட்டு உருளுகிறார்கள். 'நான் தான்..' 'நீ தான்' என்று பயங்கர சண்டை.
நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். முடியலை. எனக்கு வாத்தியார் வந்துட போறார் என்ற பயம் இருந்தது. அவர் வந்தவுடன் இன்னும் பயம் இன்னும் உச்சத்துக்கு எகிறியது..
செவிட்டு வாத்தியார் அமைதியாக, 'யேய்.. ஏன்ப்பா சண்டை போடுறீங்க.. சண்டை போட கூடாது.. பேசாம எடத்துல போய் உக்காருங்க..' என்று சண்டைய தடுத்தார்.
நான் குறுக்கிட்டு, 'சார், அதுல தான் சார் சண்டையே.. யார் ஒக்கார்ரதுன்னு..' கத்தினேன் நான்
'ஒவ்வொரு ஆளா ஒக்காருங்க.. மொதல்ல நீ ஒக்காரு.. (என்று தாஜ் பக்கம் கையை காட்டி விட்டு) அப்புறம் நீ ஒக்காரு (என்று ஜாஃபர் பக்கம் கையை காட்டினார்..'
'வேணாம் சார்..' கதறினேன் நான்
'ஏன் வேணாம்.. நீ சும்மா இரு.. போய் ஒக்காரு.. ஆமா எங்கே ஒக்கார போறே..' என்று கேட்க
ஜாஃபர் அவசர அவசரமாக கையை நீட்டினான், 'அங்கே தான்..' என்று.
திரும்பி பார்த்தாரு.. அது அவர் உட்கார்ர நாற்காலி.
அன்னைக்கு பூரா நிண்டுகிட்டு பாடம் நடத்துன வாத்தியாரு கடைசியா போவும் போது என்னய தனியா கூப்ட்டு,
'கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து இந்த ரெண்டு பேரையும் மட்டும் இனிமே கூட்டிட்டு வந்துடாதே..' என்று எப்போதுமே கத்தி பேசும் அவர் அந்த செய்தியை மட்டும் மெதுவாக தான் சொன்னார்.
--------------------------------------------------------------------------------------------------------
எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள்.
ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை' (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள்.
முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான்.
'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று
வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.
எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று
அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்
---------------------------------------------------------------------------------------
மதியானம் படத்துக்கு போக வேண்டும் என்று திட்டம். எத்தனை மணிக்கு எங்கே சந்திப்பது என்பது பற்றிய பேச்சு சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது.
எங்கே சந்திப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் இப்போது எத்தனை மணிக்கு என்பது பற்றிய பேச்சு..
ஒருவர், 'பவலைக்கு எத்தனை மணி..' என்று ஆர்வமாக கேட்க
(பவல் - பகல்)
(பகல் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வி)
மற்றொரு நண்பர், '12 மணியாயிட்டா பவல் தாங்கனி..' என்றார்
இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'.
அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில் (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார்.
போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார்.
'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிறர்,
போனை எடுத்தவர் தொடர்ந்து கடுப்புடனே பேசியிருக்கிறார், 'அவன்லாம் இல்லை'
'வந்தா நான் பேசுனேன்னு சொல்லுங்க..'
அவர், 'நீங்க யாருன்னு சொல்றது?' என்று கேட்டிருக்கிறார்
அறிவாளி சொல்லியிருக்கிறார், 'நானா..?'
அவர், 'ஆமா.. ஆமா..'
அறிவாளி, 'நா அறிவாளின்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்...' என்றிருக்கிறார்
அவர், '(கடுப்புல கெட்ட வார்த்தையை சொல்லிட்டு) அப்ப நாங்க என்ன முட்டாளா?' என்று கேட்டுட்டு போனை அறைந்திருக்கிறார்.
இந்த டைரி குறிப்பு 'செவிட்டு சார்' என்ற பட்டப் பெயரை வைத்து மாணவர்கள் என் வாத்தியாரை கிண்டலடித்தது பற்றியது அல்ல. சொல்ல வருவது வேறு விஷயம்..
நான் ஒரு முறை எனது தம்பி தாஜையும் எனது மச்சான் ஜெஹபரையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு போயிருந்தேன். செவிட்டு வாத்தியார் இன்னும் வரவில்லை. அதுக்கிடையில் தாஜுக்கும் ஜெஹபருக்கும் சரியான சண்டை. கட்டிகிட்டு உருளுகிறார்கள். 'நான் தான்..' 'நீ தான்' என்று பயங்கர சண்டை.
நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். முடியலை. எனக்கு வாத்தியார் வந்துட போறார் என்ற பயம் இருந்தது. அவர் வந்தவுடன் இன்னும் பயம் இன்னும் உச்சத்துக்கு எகிறியது..
செவிட்டு வாத்தியார் அமைதியாக, 'யேய்.. ஏன்ப்பா சண்டை போடுறீங்க.. சண்டை போட கூடாது.. பேசாம எடத்துல போய் உக்காருங்க..' என்று சண்டைய தடுத்தார்.
நான் குறுக்கிட்டு, 'சார், அதுல தான் சார் சண்டையே.. யார் ஒக்கார்ரதுன்னு..' கத்தினேன் நான்
'ஒவ்வொரு ஆளா ஒக்காருங்க.. மொதல்ல நீ ஒக்காரு.. (என்று தாஜ் பக்கம் கையை காட்டி விட்டு) அப்புறம் நீ ஒக்காரு (என்று ஜாஃபர் பக்கம் கையை காட்டினார்..'
'வேணாம் சார்..' கதறினேன் நான்
'ஏன் வேணாம்.. நீ சும்மா இரு.. போய் ஒக்காரு.. ஆமா எங்கே ஒக்கார போறே..' என்று கேட்க
ஜாஃபர் அவசர அவசரமாக கையை நீட்டினான், 'அங்கே தான்..' என்று.
திரும்பி பார்த்தாரு.. அது அவர் உட்கார்ர நாற்காலி.
அன்னைக்கு பூரா நிண்டுகிட்டு பாடம் நடத்துன வாத்தியாரு கடைசியா போவும் போது என்னய தனியா கூப்ட்டு,
'கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து இந்த ரெண்டு பேரையும் மட்டும் இனிமே கூட்டிட்டு வந்துடாதே..' என்று எப்போதுமே கத்தி பேசும் அவர் அந்த செய்தியை மட்டும் மெதுவாக தான் சொன்னார்.
--------------------------------------------------------------------------------------------------------
எங்க ஊட்ல 'பாத்திமாபீ லாத்தா' தான் சோறாக்கி கறியாக்கி வச்சு கொடுத்துட்டு போவாஹா. அஹலுக்கு சேத்த மரைக்கான், முத்து மரைக்கான் என்று இரண்டு மகன்கள்.
ஒரு நாள் அவர்களால் வீட்டுக்கு வர முடியலை. வராததற்கான காரணத்தை அதாவது அவர்கள் 'பைத்தாங்கொல்லை' (என்று தான் நினனக்கிறேன், அந்த ஊரின் பேர் எனக்கு மறந்து விட்டது) என்ற ஊருக்கு போக வேண்டியிருந்ததால் தான் வர இயலவில்லை - இந்த மேற்கூறிய காரணத்தை அவர்களின் மகன் முத்து மரைக்கான் மூலமாக எங்க வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி அனுப்பினார்கள்.
முத்து மரைக்கான் வந்து எங்க பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம் தகவல் சொன்னான்.
'ம்மா இன்னைக்கு வர மாட்டாஹலாம்.. 'மைத்தாங்கொல்லை'க்கு போறாஹலாம்.. நாலைக்கு வர்ரேண்டு சொல்ல சொன்னாஹா..' என்று
வீட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.
எங்க பாட்டியா சிரித்து கொண்டே சொன்னாஹா, 'மைத்தாங்கொல்லைக்கு போனஹ யாருமே திரும்ப வர முடியாதேப்பா..' என்று
அவன் அலட்டிக்காம, 'தெரியலைங்க.. எங்க ம்மா எப்படியும் வந்துடறேன்னு சொல்ல சொன்னாஹா..' என்றான்
---------------------------------------------------------------------------------------
மதியானம் படத்துக்கு போக வேண்டும் என்று திட்டம். எத்தனை மணிக்கு எங்கே சந்திப்பது என்பது பற்றிய பேச்சு சுவாரசியமாக நடந்து கொண்டிருந்தது.
எங்கே சந்திப்பது என்பது முடிவாகிவிட்ட நிலையில் இப்போது எத்தனை மணிக்கு என்பது பற்றிய பேச்சு..
ஒருவர், 'பவலைக்கு எத்தனை மணி..' என்று ஆர்வமாக கேட்க
(பவல் - பகல்)
(பகல் எத்தனை மணிக்கு சந்திக்கலாம்? என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வி)
மற்றொரு நண்பர், '12 மணியாயிட்டா பவல் தாங்கனி..' என்றார்
Sunday, January 31, 2010
இஜாஜத் - (விடைபெறுவதற்கான அனுமதி - Permission to depart) - பழைய இந்தி பட விமர்சனம்
குல்ஜார் சாபின் அனைத்து படங்களுக்கும் மொத்தமா சேர்த்து ஒரே தலைப்பு வைக்க வேண்டும் என்றால் 'சந்திப்பு' என்று வைக்கலாம்
இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.
நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை, அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).
இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.
அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும் அந்த நபருடன் உள்ளே நுழைகிறான்.
அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின் ராஜிவ் காந்தியின் புகைப் படத்தையும் 'எ டயலாக் வித் ராஜிவ் காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள்.
பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.
தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள்.
'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை.
ஹனிமூனுக்கு மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள். பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் முடிந்து திரும்பும் போது விமானத்தில் ஏர் ஹோஸ்டஸ் 'பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்ட பூங்கொத்தை வழங்குகிறாள். இது மாயாவின் வேலை என்பது அந்த வேலையில் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
இந்த இஜாஜத்தின் 'சந்திப்பு'களில் யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையும் விட சுவாரசியமானது எங்கே சந்திக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
இந்த படத்தை ஒரு நாள் இரவில் நானும் எனது தம்பி தாஜும் தூர்தர்ஷனில் பார்த்தோம். அன்றைய இரவு எனக்கு தூக்கமே இல்லை. ஒரு மூன்று பேர் என் கண் முன்னே நின்று கொண்டு அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
என் இரவுகளை அறிமுகப்படுத்திய 'இஜாஜத்'தை எழுத என் மனம் 'இஜாஜத் (அனுமதி)' வழங்கி விட்டது. கீழே வரும் இந்த எழுத்துக்களோடு என் 'இஜாஜத்'தின் பயணம் தொடங்குகிறது....
இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மஹேன் என்கிற மஹேந்தர் வாழ்க்கையை ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமுக்கு ஒப்பிட்டு பேசுவார்.
நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை, வசிக்கின்ற வீடு, பார்க்கின்ற வேலை, அணிகின்ற நகைகள் இப்படியாக எதுவுமே நிரந்தரம் இல்லை. (நல்லவேலை நிரந்திரம் இல்லை, நிரந்திரமா இல்லாத போதே மனிதன் ரத்தம் சிந்துகிறான்... இதுல இந்த உலகம் அவனுக்கு நிரந்திரமாக இருந்தால்..? தொலைந்தது போங்கள்.!).
இந்த உலகம் என்பது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூம் மாதிரி தான். நம்ம டிரெய்ன் வந்தவுடன் ரூமை காலி பண்ணி விட்டு சந்தோஷமா போயிகிட்டே இருக்கணும்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வெயிட்டிங் ரூமில் தான் ஒரு அடைமழையின் இரவில் இருவர் சந்தித்து கொள்கிறார்கள். இப்போது யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதை இங்கே உடனே சொல்வதை விட அந்த சந்திப்பின் போது நிகழும் சம்பவங்களை எழுதுவது அவசியம்.
அவன் அந்த வெயிட்டிங் ரூமுக்கு பெட்டியை சுமந்து வருபவரும் கூலி என்றழைக்கப்படும் அந்த நபருடன் உள்ளே நுழைகிறான்.
அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்கும் அவள் 'எங்கேயோ கேட்ட குரல்..?' என்று புத்தகத்தை விலக்கி பார்க்க அவளின் உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி மின்னலின் வெளிச்சம் அவளின் கண்ணாடி கண்கள் வழியே தெரிய 'சண்டே'யின் ராஜிவ் காந்தியின் புகைப் படத்தையும் 'எ டயலாக் வித் ராஜிவ் காந்தி'யின் உதவியுடனும் முகத்தை மறைத்து கொள்கிறாள். அவன் டாய்லெட்டிற்கு போன அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறாள் அந்த பெண்.
எதிர்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் இங்கே 'வேற எதுவும் லேடிஸ்க்குன்னு தனி ரூமு இருக்கா?'ன்னு கேட்கிறாள். அவரோ அப்படி எதுவும் இல்லை என்பதுடன் காமனாக இருக்கும் இன்னொரு ரூம் ரொம்ப தூசியுடன் இருப்பதாகவும் இருக்கும் அந்த அறையிலேயே இருக்கும் படியும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் எல்லாம் இங்கே தான் நடமாடிக் கொண்டு இருப்போம் என்று சொல்லி அனுப்பி விடுகிறாள்.
இதற்கிடையில் டாய்லெட்டிலிருந்து வெளியேறும் அவன் தான் தனது
பெட்டியின் சாவியை தொலைத்து விட்டதை உணர்ந்து அதே அறையில் இருக்கும் ஒருவரின் பெட்டியை உற்றுப் பார்க்கிறான், உறங்கிக் கொண்டிருந்த அந்த பெட்டிக்குறிய நபரின் மனைவி அவரை எழுப்பி 'இங்கே பாருங்கள்..' என்று பயந்து போய் கூற அவர் எழுந்து 'என்ன வேண்டும்?' என்று கோபமாக கேட்க 'என் பொட்டிட சாவியை தொலைச்சுட்டேன், என்னோடது விஐபி பொட்டி அதான் நீங்க அதே பிராண்ட் பொட்டிய வச்சிருந்தா சாவிய வாங்கி அது சேருதான்னு பார்க்கலாம்னு...' என்று சொல்லவும் அவர் 'என்னோடது சேம்சோனைட்' என்று கூறுகிறார்
பக்கத்தில் திரும்பி வெளியேறிய அந்த பெண்ணின் பெட்டியின் அருகே வருகிறான். அதற்குள் அந்த ஸ்டேஷன் மாஸ்டர், 'அது ஒரு லேடியோட பொட்டி, அவங்கோளடதும் விஐபி தான், வந்ததும் கேட்டு வாங்கி தொறந்து பாருங்க..' என்று சொல்ல, வெளியே வருகிறான், அங்கே வாசலில் அவள். இருவருக்கும் நடுவே நிழலாய் எதுவோ இருக்கும் என்பது உறுதியாகிறது.இருவரும் மௌனங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டு உள்ளே வருகிறார்கள். சேம்சோனைட் பெட்டி வைத்திருந்த அந்த பெரியவரை அழைத்து செல்ல ஒருவர் வர அந்த இடம் வெறுமையாகிறது.
ஏன் இந்த சந்திப்பு நிகழ வேண்டும்? என்ன பேசுவது? எதை பேசுவது? யார் ஆரம்பிப்பது? இருவருக்குள்ளும் தவிப்பு தணலாய் எறிந்தது.அவளுக்கு அந்த மேகஸின் மேக்ஸிமம் உதவியை செய்தது. புத்தகத்துக்குள் புழுவாய் அவள்.
மௌனம் கலைத்தவர் அப்போது உள்ளே வந்த ஸ்டேஷன் மாஸ்டர். 'சார், சாவி வாங்கிட்டீங்களா?' - 'இல்லை' என்பது போல் அவன் தலையை ஆட்ட - அவர் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி 'மேடம், சாரோட விஐபி பொட்டி, சாவிய தொலைச்சிட்டார், உங்க சாவிய கொடுத்து உதவுனீங்கன்னா, சார் தொறந்துட்டு கொடுத்துடுவார்' - அவள் தன் கைப்பையை திறந்து சாவியை எடுத்து வந்து கொடுக்கிறாள்.
கொடுத்த அந்த சாவியை பயன்படுத்தி பெட்டியை திறக்க பூட்டு தன்னை விடுவித்து கொள்கிறது. பெட்டியில் வேண்டியதை எடுத்துக் கொண்டு பர்ஸை அப்படியே போட்டு கொடுத்த அந்த சாவியையும் அப்படியே பெட்டியில் போட்டு அந்த பெட்டியையும் திறந்து போட்டு விட்டு டாய்லெட்டிற்குள் மறைகிறான். அவனின் இந்த நடைமுறை அழகியலில் நமக்கு புரிகிறது இவன் சாவியை எப்படி தொலைத்திருப்பான் என்று.
'சார்,' என்று அவனை தேடிக் கொண்டு உள்ளே வரும் டீக்கடை பையன் அவளிடம் சென்று சாரை பத்தி விசாரித்து விட்டு பெட்டி திறந்து கிடப்பதையும் அதில் தெரியும் பர்ஸையும் பார்த்து விட்டு பெட்டியின் அருகே செல்ல அவள் சத்தம் போடுகிறாள், 'நீ அவர் டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தவுடன் டீ கொண்டு வா' என்று சொல்லி விட்டு 'என்னை காவக்காறி மாதிரி ஆக்கி..' என்று பெட்டியிலிருந்து தனது சாவியை எடுத்து கொண்டு பெட்டியை மூடுகிறாள்.
அவன் கதவை திறந்து கொண்டு வருகிறான். அந்த டீக்கடை பையன் இரண்டு டீயை கொண்டு வருகிறான். 'இரண்டு டீ நான் கேக்கலையே?' அவன் குழம்புகிறான்.
'மேடம் தான் கொண்டு வர சொன்னாங்க..' என்கிறான்
அவள் கோபம் கொள்கிறாள், 'நான் எங்கே அப்படி சொன்னேன்..' என்று
அவனை அனுபபி விட்டு, 'இப்ப இரண்டு டீ வந்திருக்கு, நீயும் சாப்பிடலாமே' என்கிறான்.
முதலில் மறுத்து மறுபடியும் சம்மதிக்கிறாள். அடை மழை-சூடான் தேநீர்- இரவின் அமைதி-பிரிந்து வாழ்கிறவர்கள் சந்திக்கிறாள்-அழகான நிமிசங்கள்-மேகத்தில் நடப்பதாய் உணர்வு-உள்ளக்கிடக்கைகளின் பகிர்வு
பேச்சு எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதில் துவங்கி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும் வேலையில் வெள்ளைக்காரனை கொளுத்த சிகரெட் லைட்டரை தேடுகிறான் அவன்.
இவன் தொலைத்தது ஒண்ணு ரெண்டு அல்ல போலிருக்கிறது- அவள் தனது கைப்பையிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்து வெள்ளைக்காரனை கொளுத்துகிறாள். புகையாய் கரைகிறான் அந்த வெள்ளை நாயகன்,
'அப்ப தான் எனக்காக சிகரெட் லைட்டரை எப்போதும் கைலேயே வச்சிகிட்டு இருப்பே.., இப்ப எதுக்காக சிகரெட் லைட்டரை வைச்சிருக்கே?' என்கிறான். அவள் 'சிகரெட்டுக்காக தான்' - அவன் புரியாமல், 'அப்டின்னா? நீ சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிட்டியா?' என்று கேட்கிறான். அவள் கசப்பாய் சிரிக்கிறாள்.
இப்படியாய் கவிதையாய் தொடரும் சம்பவங்களில் தனது வழக்கமான 'நேற்றை இன்றில் நுழைக்கும் வேலையை' சரியாய் புகுத்துகிறார் குல்ஜார் சாப். அவர்களின் வாழ்க்கையை நாமும் பின்னோக்கி போய் பார்த்து விட்டு தான் வருவோமே..!
அவன் மஹேந்தர் என்கிற மஹேன் தனது தாத்தா சுதாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தியதை 5 வருடமாக படித்து முடிக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை இப்படி பல காரணம் சொல்லி தட்டி கழித்து வந்த அவனுக்கு அன்று மறுக்க முடியாத சூழ்நிலை.
தாத்தாவை நேரில் எதிர்க்க துணிவில்லாமல் சுதாவையே நேரில் பார்க்க செல்கிறான். பட் அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவன் சுதாவிடம், 'நானும் மாயாவும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறோம், தாத்தாவை எதிர்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு, ஆனா எனக்கு வேற வழியில்லை.. நீ தான் இப்ப யோசனை சொல்லணும்' என்கிறான் அவளின் மனசு என்ன ஆகும் என்பதை அறியாமல். ஆனால் அவனுக்கு வேற வழியில்லை.அவள் நீங்கள் மாயாவை கல்யாணம் செய்து கொண்டு நேரடியாக தாத்தாவிடம் போய் நின்று விடுங்கள் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்கிறாள். யோசிக்கவே நேரம் இல்லாத நேரத்தில் மாயாவை தேடி போகிறான். மாயா பேருக்கு ஏற்றாற் போல் மாயமாய் மறைகிறாள். அவளுக்கும் தெரியும் சுதாவுக்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன செய்தி.
அவள் மாயா. வித்தியாசமானவள் இந்த உலகத்தை விடவும் மாறுபட்டவள். திருமணத்தை புறக்கணிக்கிறாள். அவளுக்கு அதில் நம்பிக்கையில்லை. உடல் சுகத்தை தேடுபவளுமல்ல. அவளின் தேடல் மனசில் தேடல். அவ்வாறு அவள் இருப்பதற்கு அவளுக்குட்பட்ட நியாயமான காரணங்கள் இருக்கின்றது. அதை எனக்கு மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிகிறது.
அவள் எங்கே போனாள்? திரும்பி வருவாளா? மாட்டாளா? புதிராய் இருக்கும் மாயாவை மறந்து விட முயற்சி செய்கிறேன் என்ற வாக்குறிதியுடன் தாத்தாவின் இஷ்டப்படி சுதாவை கைப்பிடிக்கிறான் மஹேன்.
மஹேனின் பர்ஸில் கூட மாயாவின் படம் தான் இருக்கிறது. சுதா சொல்கிறாள், 'இந்த வீட்ல உள்ள சாமான்கள நான் புழங்கும் போது வேற யாரோடேயோ சாமான புழங்குவது போன்ற உணர்வு இருக்கிறது' என்று
பர்ஸிலிருந்து மாயாவின் போட்டோ கழட்டப்படுகிறது.
இன்று நுழைகிறது..
ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங்க் டாய்லெட்டிற்கு சென்றிருக்கும் மஹேனின் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு சுதா பர்ஸை ஒரு ஆர்வத்தில் திறந்து பார்க்கிறாள்
மீண்டும் அன்று..
கிட்டதட்ட மறந்திருக்கும் அந்த சூழ்நிலையில் மாயா மீண்டும் வருகிறாள். மஹேனை பார்க்க துடிக்கிறாள். அவனது மனைவியை அக்கா என்றழைக்கிறாள். இங்கே வீட்டில் தங்கியிருக்கும் போது அவள் புழங்கிய, உடுத்திய சாமான்களை திரும்ப அனுப்பும் போது பதில் கடிதம் போடுகிறாள்.
'என்னுடைய மற்ற சாமான்களையும் அனுப்பி வையுங்கள்..' என்று தொடங்கும் ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறாள். காதலியின் கவிதையை கணவன் படிக்க மனைவி 'ஹௌ சுவீட்..' என்று ரசிக்க ஆரம்பிக்கிறாள். கவிதை தொடரவும் கவலை கொள்கிறாள். அவள் கேட்பதை எல்லாம் எப்படி நான் தர முடியும் என்று அழுகிறாள். அவள் கவிதையில் அப்படி என்ன கேட்கிறாள்?, 'ek sau solah chaaand ki raatein, ek tumhaare kaandhe kaa thil.. உன்னோடு நானிருந்த அந்த நூற்றி பதினாறு சந்திர இரவுகளை.. ' என்றெல்லாம் மொழிபெயர்ப்பு என்கிற பெயரில் ஒரு கொலை குற்றத்தை செய்ய எனக்கு விருப்பமில்லை. அவளை சந்திக்கவே மறுக்கும் மஹேன் சுதாவை மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். அவளோடு தான் சின்ன வயசில் என்னவாக ஆசைப்பட்டேன் என்று சொல்கிறேன், ஆனா நீ சிரிக்க கூடாது' என்கிறான்.
அவள் சத்தியம் செய்யாத குறையாக சிரிக்க மாட்டேன் என்று சீரியஸாக சொல்கிறாள்.
அவன் 'நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்..' என்றதும் அவள் சிரிக்கிறாள்.
தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது தொ(ல்)லைபேசி அழைக்கிறது. இருவரின் முகத்திலும் மாயாவின் ரேகக ஓடுகிறது.
'நீ போய் எடு..' என்று மஹேன் சொல்கிறான்
'அந்த போன் எனக்கு இல்லை..' என்கிறாள் அவள்
போனை எடுக்கிறான். 'நீ செத்த நேரம் பேசு' என்று போனை சுதாவிடம் கொடுக்கிரான். அவள், 'என் கிட்டே ஏன் கொடுக்கிறீங்க.. நான் பேச மாட்டேன்..' என்கிறாள்
அவளின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்து 'என் மேல் சத்தியம்.. நீ பேச வேண்டும்..' என்று போனை கொடுக்க அவள் தயங்கியவாறே வாங்கி காதுக்கு கொடுத்து ஹலோகிறாள். ஆச்சர்யம்.. 'ம்மா...... இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல.. நான் நல்லா இருக்கேன்.. இங்கே இவங்க...' என்று பேசி வைத்து விட்டு அவனை துரத்துகிறாள்
மாயாவின் எண்ணம் மஹேனையும் சுதாவையும் பிரிக்க வேண்டும் என்பதல்ல, அவளின் எதிர்பார்ப்பு திருமணத்திற்கு முன்பு அவன் காட்டிய அன்பு, காதல் அது அத்தனையும் திரும்ப அவளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே..!
அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.
மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது
மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'
தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்
இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்
இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.
அவளிடம் பேசுகிறான். மஹேன். ஹனிமூன் முடிந்து வந்த பிறகு அவள் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது, அவளை காண சென்றது, அப்போது அவள் தன் தோள் மீது அழும் போது அவளின் ஹேர் கிளிப் தன் சட்டையில் வந்தது என்றும் சுதா போர்வையை போர்த்தும் போது அவளின் காதணிகல் கழன்று போர்வையில் ஒட்டிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறான்.
சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார்.
'இன்னும் வரலை..' என்று அவளின் கணவர் திரும்ப வர சுதா அழுது கொண்டே வெளியேறுகிறாள். சுதாவின் கணவர், 'யாரது?, சொந்தமா?' என்று கேட்க சுதா அழுகிறாள், கணவருக்கு புரிந்து விடுகிறது, 'மஹேன்..' என்று ஆச்சர்யத்துடன் கேட்டு திரும்பி பார்க்க, பெட்டி படுக்கையுடன் வெயிட்டிங் ரூமின் வாசலில் மஹேன் நிற்கிறான். சுதா திரும்பி திரும்பி மஹேனையே பார்த்துக் கொண்டே நடக்கிறாள்
அது அவனுக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி கிடைக்கவே முடியாது என்பதை அவளால் ஜுரணிக்க முடியவில்லை. அவளை பொறுத்த வரை மஹேன் சுதாவின் மீது பிரியமாக இருப்பதில் அவளுக்கு எந்த பொறாமையும் கூட இல்லை.
மாயா வாழ்வை முடித்து கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறாள். தூக்க மாத்திரை - ஆஸ்பத்திரியில் போராடி பிழைக்க வைக்கப்படுகிறாள் - மஹேன் கேள்விபட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான் - இதனை தொடர்ந்து மஹேன் சுதாவுக்கு தெரியாமல் மாயாவை சந்திக்கிறான் - சுமால் வேர்ல்ட் - உண்மை சுதாவுக்கு தெரிய வருகிறது
மஹேனிடம் விளக்கம் கேட்கும் போது நான் மாயாவை இங்கே அழைத்து வருவதாக சொல்கிறான். சுதா கோபித்துக் கொண்டு லட்டரை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் - மஹேனின் தாத்தாவிடம் 'நீங்கள் ஒரு போதும் அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள்'
தாத்தாவோ, 'மஹேன் வந்து கூப்பிட்டால் பிடிவாதம் பிடிக்காமல் போய் விட வேண்டும்.. ஆனால் அவன் வரவில்லை என்றால்..' என்று மனக்குறையோடு செல்கிறார்
இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறாள். ஒரு முறை மஹேனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைக்கும் போது எதிர்முனையில் மாயா எடுக்கவே லைனை கட் செய்கிறாள். இதனை தொடர்ந்து 'உங்கள் இருவருக்கும் இடையில் நான் வர விரும்பவில்லை' என்ற கடிதத்தோடு விவாகரத்து நோட்டீஸையும் சேர்த்தே அனுப்புகிறாள்
இன்று..
விடிகிறது.. சாய்வு நாற்காலியில் உறக்கம் கலைந்து எழுகிறான், அவன் மீது சுதாவின் போர்வை. அறையில் சுதாவை காணவில்லை. வெளியே வருகிறான். தொலைவில் அவள் தனியாக. அவளிடம் செல்கிறான்.
அவள் 'மாயா இப்போது எங்கே?' என்று கேட்கிறாள்
மஹேன், 'நீ உண்மை புரியாமல் அவசரப்பட்டு லட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா.. அன்னைக்கு தான் எனக்கு மொதொ மொதலா ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டு மாசம்.. ஆஸ்பத்திரில இருந்தேன்.. மாயா தான் கவனிச்சிக்கிட்டா.. (இந்த நேரத்தில் தான் சுதா தொலைபேசி பண்ணியிருப்பாள்) நான் மாயாவிடம் சுதாவை போய் அழைத்து கொண்டு வரப் போகிறேன்.. நீ எங்கே போவாய்..?' என்று கேட்கிறான்.
இந்நிலையில் தான் சுதாவின் டைவோர்ஸ் லட்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிர்ச்சியில் மாயா ஒரு முடிவை எடுக்கிறாள். அவளின் முடிவு தான் அது.
சுதா தான் அவசரப்பட்டு விட்டதை உணர்கிறாள். இருவரும் வெயிட்டிங் ரூமுக்கு வருகிறார்கள். தத்தமது பெட்டிகளின் அருகே வந்து கிளம்புவதற்கு தயாராக பெட்டியை அடுக்கி கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு உள்ளே ஒருவர் வருகிறார். சுதாவின் அருகில் செல்கிறாள். 'என்னை மன்னித்து விடு.. லேட்டாயிடுச்சு.. என் மனைவி காத்துகிட்டிருப்பாள் என்று தெரியும்.. ' என்று கடலை உடைக்கும் பேச்சு..
'சிகரெட் இருக்கா..?' என்று கேட்கவும் அவருக்கு சிகரெட் எடுத்து கொடுத்து தன் கைப்பையிலிருந்து லைட்டரை எடுத்து பற்ற வைக்கிறாள்.
மஹேன் இவை அத்தனையும் பார்த்து உறைந்து போகிறான். சுதாவின் கணவன் அவளின் பெட்டியை எடுத்துக் கொண்டு 'சீக்கிரம் வா..' என்று வெளியே செல்ல சுதா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருக்கும் மஹேனிடம் வருகிறாள், 'அவர் தான் என் கணவர், நான் சென்ற ஆண்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன், போன தடவை தான் உங்களிடம் அனுமதி வாங்காமல் வந்துவிட்டேன், இந்த முறை உங்களது அனுமதியை கொடுங்கள்.. ' என்று காலில் விழுந்து கேட்கிறாள்
'உன் கணவர் மிகவும் நல்லவர், என்னை மனசால முடிந்தால் மன்னித்து விடு.. நீ எல்லா சந்தோஷமும் பெற்று நல்லா இருக்கணும்..' என்று மனசால் வாழ்த்தி விடைபெறுவதற்கு அனுமதி வழங்குகிறார்.
அப்போது மழை சுத்தமாக விட்டிருந்தது. வெயிட்டிங் ரூம் காலியாகிறது.
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Thursday, January 21, 2010
சில டைரி குறிப்புகள்
என் கூட ராஜகோபால்ன்னு ஒரு ஐயர் வீட்டு பையன் படித்தான். சோடா புட்டி கண்ணாடி போட்டிருப்பான். நாங்க எல்லாம் நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல் நிலை பள்ளியில் அதாவது தமிழ் புரியாதவர்களுக்கு நேஷனல் ஹை ஸ்கூலில் தான் ஒன்றாக படித்தோம்.
ஒன்றாக படித்தது மட்டுமல்ல ஒரே வாத்தியார்ட்ட தான் டியுசனும் படித்தோம். அப்போ நான் எனது மச்சான் ராஜா என்கிற ஃபாருக் மற்றும் பல முஸ்லீம் இந்து நண்பர்கள் யாவரும் பள்ளிகூடம் விட்டதும் நாகை கடைத்தெருவில் உள்ள கமாலிய்யா பள்ளிக்கு சென்று அங்கேயே டியுசனில் கொடுத்த ஹோம் ஒர்க எல்லாத்தையும் முடித்து விடுவது வழக்கம்.
ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசலில் தொழுகைக்கு ’அதான்’ (அழைப்பு) விடுப்பார்கள். நாங்கள் முஸ்லீம் நண்பர்கள் யாவரும் உடனே அங்க சுத்தி செய்து விட்டு அதாவது கை, கால், முகம், காது, வாய், தலை முடி எல்லாத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவோம்.
தொழுகையில் ஒருவர் பின் ஒருவர் அல்ல ஒருவர் தோலை உரசிக் கொண்டு ஒருவர் வரிசையாக நிற்பது, ஒரே மாதிரி குனிவது, நிமிர்வது, தொழுகை முடிந்தவுடன் கை கொடுத்து வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்வதை கவனித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்ற ஐயர் ஒரு நாள் என்னிடம் அந்த கேள்வியை கேட்டே விட்டான்.
“நானும் உங்க மதத்து வந்துடவா?’ என்று
இதை நான் இங்கே பொய்யாகவோ கொஞ்சம் கூட இட்டுகட்டியோ சொல்லவில்லை.
அவன் அப்படி கேட்டான்.
நான் உளம் மகிழ்ந்து, ’தாராளமா வந்துடு.. ஆமா, என்னா புடிச்சிருக்கு?’ என்று கேட்டேன்
‘நீங்கள்லாம் ஒரே மாதிரி ஒத்துமையா செய்றது பாக்குறதுக்கே அழகா இருக்கு’ என்றான்
இன்னைக்கு முஸ்லீகளுக்குள் இருக்கின்ற ஒத்துமையா எல்லாம் பார்த்திருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டான் என்றே தான் தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------
எங்க ஹஜ்ரத் அவர்களிடம் நான் சேர்ந்த புதிதில் கேள்விகளாக கேட்டு தள்ளுவேன். அந்த ஹதீஸ்ல அப்படி போட்டிருக்கே? இந்த ஹதீஸ் கிதாப்ல இப்படி போட்டிருக்கே என்று எனது கேள்விகள் தாறுமாறாக இருந்தது. ஆது, சமூது கூட்டத்தை பத்தி, சாலிஹ் நபியின் ஒட்டகத்தை பத்தி கேட்டிருக்கிறேன்.
சைத்தானுக்கு உருவம் இருக்கிறதா என்று கூட கேட்டிருக்கிறேன். சைத்தான் தொஹீது வாதியா என்றும் கேட்டிருக்கிறேன். பிர் அவுனிலிருந்து மூஸா நபி வரை, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பற்றி, நூஹ் நபியின் கப்பலை பத்தி, அன்னை மர்யம் (மதர் மேரி) அவர்களை பத்தி அவர்களின் புதல்வர் ஈஸா நபி பற்றி இப்படி ஒரு கேள்வியையும் விட்டது கிடையாது.
பெருமானாரிலிருந்து நாகூர் நாயகம் முதற்கொண்டு நான் கேட்காத கேள்விகளே கிடையாது எனலாம்.
ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை ‘ஹதீஸ்’ என்றே அழைத்தார்கள்.
‘இந்த வந்துட்டாரே ஹதீஸ்’ என்றார்கள்.
எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொன்னார்கள், ‘ஏன்ப்பா, பொண்ணை வுட்டுபுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுகிட்டு இருக்கிறீயே’ என்று
-------------------------------------------------------------------------------------
ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இந்த முஸ்லீம்களெல்லாம் மறுமைக்காக தொழுவுறோம், மறுமைக்காக சகாத் கொடுக்கிறோம் மக்கா யாத்திரைக்கு போறோம் உடலை வருத்திகிட்டு நோன்பு பிடிக்கிறோம்ன்னு சொல்றீங்களே.. மறுமையே வரலைன்னா என்னா செய்வீங்க..?’ என்று உலகத்திலேயே அதி முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்
நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்
அவர் நினைச்சிருப்பாரு, ’ஆனா வந்துட்டான்னு.. சொல்லி நிறுத்திட்டானே.. இவன் என்ன சொல்ல வந்திருப்பான்..? வந்துட்டாலும் வராவிட்டாலும் அவனுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்ல.. வரலேன்னா எனக்கும் நஷ்டமில்லை ஆனா மறுமைன்னு ஒண்ணு உண்மையிலே வந்துட்டா நான் தான் நஷ்டப்பேடுவேன்னு சொல்ல வந்திருப்பேன்னு அவர் நினைச்சிருப்பார்’
ஆனா அதான் இல்ல, நான் சொல்ல நினைச்சது அப்படியே மறுமை வந்துட்டாலும், முஸ்லீம்களுக்கு தான் கஷ்டம்’ன்னு சொல்ல தான் நினைச்சேன்.
ஒன்றாக படித்தது மட்டுமல்ல ஒரே வாத்தியார்ட்ட தான் டியுசனும் படித்தோம். அப்போ நான் எனது மச்சான் ராஜா என்கிற ஃபாருக் மற்றும் பல முஸ்லீம் இந்து நண்பர்கள் யாவரும் பள்ளிகூடம் விட்டதும் நாகை கடைத்தெருவில் உள்ள கமாலிய்யா பள்ளிக்கு சென்று அங்கேயே டியுசனில் கொடுத்த ஹோம் ஒர்க எல்லாத்தையும் முடித்து விடுவது வழக்கம்.
ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசலில் தொழுகைக்கு ’அதான்’ (அழைப்பு) விடுப்பார்கள். நாங்கள் முஸ்லீம் நண்பர்கள் யாவரும் உடனே அங்க சுத்தி செய்து விட்டு அதாவது கை, கால், முகம், காது, வாய், தலை முடி எல்லாத்தையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவோம்.
தொழுகையில் ஒருவர் பின் ஒருவர் அல்ல ஒருவர் தோலை உரசிக் கொண்டு ஒருவர் வரிசையாக நிற்பது, ஒரே மாதிரி குனிவது, நிமிர்வது, தொழுகை முடிந்தவுடன் கை கொடுத்து வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொள்வதை கவனித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்ற ஐயர் ஒரு நாள் என்னிடம் அந்த கேள்வியை கேட்டே விட்டான்.
“நானும் உங்க மதத்து வந்துடவா?’ என்று
இதை நான் இங்கே பொய்யாகவோ கொஞ்சம் கூட இட்டுகட்டியோ சொல்லவில்லை.
அவன் அப்படி கேட்டான்.
நான் உளம் மகிழ்ந்து, ’தாராளமா வந்துடு.. ஆமா, என்னா புடிச்சிருக்கு?’ என்று கேட்டேன்
‘நீங்கள்லாம் ஒரே மாதிரி ஒத்துமையா செய்றது பாக்குறதுக்கே அழகா இருக்கு’ என்றான்
இன்னைக்கு முஸ்லீகளுக்குள் இருக்கின்ற ஒத்துமையா எல்லாம் பார்த்திருந்தா அப்படி சொல்லியிருக்க மாட்டான் என்றே தான் தோன்றுகிறது.
-----------------------------------------------------------------------------------
எங்க ஹஜ்ரத் அவர்களிடம் நான் சேர்ந்த புதிதில் கேள்விகளாக கேட்டு தள்ளுவேன். அந்த ஹதீஸ்ல அப்படி போட்டிருக்கே? இந்த ஹதீஸ் கிதாப்ல இப்படி போட்டிருக்கே என்று எனது கேள்விகள் தாறுமாறாக இருந்தது. ஆது, சமூது கூட்டத்தை பத்தி, சாலிஹ் நபியின் ஒட்டகத்தை பத்தி கேட்டிருக்கிறேன்.
சைத்தானுக்கு உருவம் இருக்கிறதா என்று கூட கேட்டிருக்கிறேன். சைத்தான் தொஹீது வாதியா என்றும் கேட்டிருக்கிறேன். பிர் அவுனிலிருந்து மூஸா நபி வரை, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பற்றி, நூஹ் நபியின் கப்பலை பத்தி, அன்னை மர்யம் (மதர் மேரி) அவர்களை பத்தி அவர்களின் புதல்வர் ஈஸா நபி பற்றி இப்படி ஒரு கேள்வியையும் விட்டது கிடையாது.
பெருமானாரிலிருந்து நாகூர் நாயகம் முதற்கொண்டு நான் கேட்காத கேள்விகளே கிடையாது எனலாம்.
ஒரு கட்டத்தில் ஹஜ்ரத் அவர்கள் என்னை ‘ஹதீஸ்’ என்றே அழைத்தார்கள்.
‘இந்த வந்துட்டாரே ஹதீஸ்’ என்றார்கள்.
எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொன்னார்கள், ‘ஏன்ப்பா, பொண்ணை வுட்டுபுட்டு பொண்ணுக்கு போடுற நகைய பத்தியே கேட்டுகிட்டு இருக்கிறீயே’ என்று
-------------------------------------------------------------------------------------
ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘இந்த முஸ்லீம்களெல்லாம் மறுமைக்காக தொழுவுறோம், மறுமைக்காக சகாத் கொடுக்கிறோம் மக்கா யாத்திரைக்கு போறோம் உடலை வருத்திகிட்டு நோன்பு பிடிக்கிறோம்ன்னு சொல்றீங்களே.. மறுமையே வரலைன்னா என்னா செய்வீங்க..?’ என்று உலகத்திலேயே அதி முக்கியமான ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்
நான் நிதானமாக சொன்னேன், ‘நாங்க முஸ்லீம்கள் மறுமைன்னு ஒன்னு உண்மையிலேயே வராட்டி போனாலும் பெருசா ஒண்ணும் நஷ்டப்பட மாட்டோம், ஆனா வந்துட்டா.. ?’ என்று நான் நிறுத்தி விட்டேன்
அவர் நினைச்சிருப்பாரு, ’ஆனா வந்துட்டான்னு.. சொல்லி நிறுத்திட்டானே.. இவன் என்ன சொல்ல வந்திருப்பான்..? வந்துட்டாலும் வராவிட்டாலும் அவனுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்ல.. வரலேன்னா எனக்கும் நஷ்டமில்லை ஆனா மறுமைன்னு ஒண்ணு உண்மையிலே வந்துட்டா நான் தான் நஷ்டப்பேடுவேன்னு சொல்ல வந்திருப்பேன்னு அவர் நினைச்சிருப்பார்’
ஆனா அதான் இல்ல, நான் சொல்ல நினைச்சது அப்படியே மறுமை வந்துட்டாலும், முஸ்லீம்களுக்கு தான் கஷ்டம்’ன்னு சொல்ல தான் நினைச்சேன்.
குஷ்பு - (நறுமணம் - Fragrance) - பழைய இந்தி பட விமர்சனம்
”குஷ்பு" என்றதும் நடிகை குஷ்பு நடித்த படமோ என்று நினைக்க வேண்டாம். இது ஹேமா மாலினி அற்புதமாக நடித்த படம் அல்லது அவரை குல்சார் அவ்வாறு அற்புதமாக நடிக்க வைத்த படம். இந்த படம் என்னுடைய ஞாபகசக்தி எனக்கு ஒழுங்காக சேவை செய்தால் ஷோலே படம் வந்த காலகட்டத்தில் தான் இந்த படமும் வந்தது. ஆனால் ஷோலேவில் வரும் பசந்திக்கும் குஷ்புவில் வரும் குசுமுக்கும் தீச்சுடருக்கும் (ஷோலே) நறுமணத்துக்கும் (குஷ்பு) உள்ள வித்தியாசம்.
குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.
அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.
ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.
குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.
சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.
இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.
குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.
இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.
குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.
இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.
படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.
அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.
இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.
அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.
அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.
சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.
இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.
பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.
குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று
தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று
குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று
தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று
குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று
ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க இருக்கின்ற தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.
தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்
சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்
பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்
சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.
உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.
‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்
பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்
குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.
குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.
ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து
சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?
பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?
இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!
நடிப்பு
பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்
இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.
-----------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!
குல்சார் படம் என்றாலே ஒருவரை ஒருவர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்து உணர்வு பூர்வமாக கடந்த காலங்களை அசைபோடுவதை கேமரா சுருளுக்குள் போடுவதோடு நம்மையும் சுருட்டி போட்டு விடுவார்.
அந்த சந்திப்பு பாட்டன் பேத்தி பேரன்களை சந்திக்கிற பரிச்சே மாதிரியோ, கணவன் மனைவியை சந்திக்கிற ஆன்ந்தி மாதிரியோ இருக்கலாம். இந்த படத்தில் அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்னை பொறுத்த அளவில் மிகவும் சுவாரசியமானது.
ஏன் என்றால், சின்ன வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் கணவன் மனைவி என்றே ஊராரறிய கொண்டாடப்பட்டவர்கள் கிட்டதட்ட இந்தியாவில் எல்லோர் குடும்பத்திலும் ஏற்படும் சொத்து தகராறினால் பிரிய நேர்ந்து அந்த ஆணுக்கு திருமணம் முடிந்த நிலையில் அந்த பெண் பாத்திரம் மட்டும் வறுமையின் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கின்ற நிலையில் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.
சின்ன வயசிலேயே திருமணம் ஆவது அல்லது நிச்சயிப்பது என்பதை பிற்போக்காக நினைத்தால் எனக்கு எனது திருமணமே அப்படி பிற்போக்கானது தான். அதனால் தானோ என்னவோ எனக்கு இந்த படத்தோடு ஒன்ற முடிகிறது.
குல்சார் தான் அந்த குசும் என்ற பெண்ணின் கதாபாத்திரத்தை வடித்தாரோ அல்லது அல்லது குசும் குசுமாகவே இருக்கிறாரோ என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன ஒரு கோபம்?, என்ன ஒரு சுய மரியாதை?, என்ன ஒரு பிடிவாதம்?, என்ன ஒரு காதல்? என்ன ஒரு ஈகோ? என்ன ஒரு போராட்டம்? - இப்படி குசுமின் எல்லா பரிணாமங்களுமே அவளை தனித்து காட்டுகிறது.
சின்ன வயதிலிருந்து ஒருவனை கணவனாக நினைக்க சொல்லி கற்றுக் கொடுக்கிறார்கள். மனம் அவனையே கணவன் என்று நம்பி விடுகிறது. சின்ன வயதிலேயே அவனது நலவாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறாள். மனசில் அவனையே பச்சை குத்தி இருந்தாலும் கையில் பிருந்தாவன் என்ற அவனது பெயரை பச்சை குத்திக் கொள்கிறாள்.
இடையில் வந்த சொத்து தகராறில் குசுமின் தந்தை கொல்லப்பட அந்த கொலைக்கு பிருந்தாவனின் தந்தையே காரணம் என்று ஊரார் சொல்ல பெரும் குழப்பமாகி இரு குடும்பமும் பிரிய நேர்கிறது. பிருந்தாவன் சிறிய வயதிலேயே அவனது உயிருக்கும் ஆபத்து வரலாம் என்று வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர்.
குசும் பெரியவளானதும் அவளை அழைத்து கொண்டு அவளது தாயார் பிருந்தாவனின் தந்தையிடம் மாப்பிள்ளை கேட்டு வரும் போது பிருந்தாவனின் தந்தை அவமானப்படுத்தி வீட்டு வாசலில் கூட ஏற விடாமல் அனுப்பி விடுகிறார்.
இந்த நிலையில் தான் பிருந்தாவனும் குசுமும் சந்திக்கிறார்கள். மருத்துவனான பிருந்தாவனுக்கு சரண் என்ற ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தை அவர்களது வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை ’அம்மா’ என்று அழைக்கிறது. பிருந்தாவனின் அப்பா இறந்திருக்கும் நிலையில் அம்மாவுடன் வசித்து வருகிறான்.
குசுமின் அண்ணன் குன்ஞ் என்பவர் பொம்மைகள் செய்து கூடையில் வைத்து ஊர் ஊராக சென்று விற்று கிடைக்கும் கால் காசில் தங்கையும் அவனும் கால் வயிறை நிரப்பி வருகிறார்கள். குசுமின் திருமணம் முடிந்த பிறகு தான் தான் திருமணம் செய்து கொள்வது என்ற அண்ணனிச குறிகோளுடன் வாழ்ந்து வருகிறான். குசுமின் மன ஓசைகளை கலந்து பேச அவரது ஒரே தோழியான மன்னோ என்ற கிராமத்து துருதுரு பெண்.
இந்த பிண்ணனியில் பிருந்தாவனும் குசுமும் சந்தித்து கொண்டால்..? அது தான் குஷ்பு.
படம் முழுக்க குசும் என்ற பெண்ணின் உணர்வு போராட்ட நறுமணம் வீசிக் கொண்டே இருக்கிறது.
பிருந்தாவன் குசும் வீட்டு வேலை செய்யும் அந்த வீட்டில் உள்ள ஒரு மூதாட்டிக்கு வைத்தியம் பார்க்க வருகிறான். இருவரும் சந்தித்து கொண்டாலும் அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் தெரியவில்லை.
அந்த பணக்கார பெண்ணின் மகன் அவனை பிருந்தாவன் என்று கூப்பிடும் போது அது தனது மனம் கொண்டாடும் கணவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது குசுமுக்கு. இந்நிலையில் பிருந்தாவனுக்கு வந்ததோ வேறு சந்தேகம். அதாவது அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது பிளேக் எனும் நோயாக இருக்குமோ என்று. அது பரவக்கூடிய வியாதி என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான்.
அப்போது குசுமுக்கு ஊசி போட சம்மதிக்க வைத்து கையை பிடிக்கும் போது கையில் பச்சை குத்தியது எறிந்திருப்பதை பார்க்கிறான். ‘இது எப்படி ஏற்பட்டிச்சு..?’ என்று வினவும் போது அவள் பதிலேதும் சொல்லாமல் சென்று விடுகிறாள்.
இப்படி தொடர்கிறது அவர்களது சந்திப்பு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிய வந்த பிறகு குசும் வேலை செய்யும் வீட்டிற்கு சரணை அழைத்து வருகிறான். சரணை குசும் வந்து பார்த்து ‘லட்டு தருகிறேன்’ என்று கூறி சமையல் கட்டுக்கு கூட்டிட்டு போகிறாள்.
அங்கே லட்டை சாப்பிட்ட பிறகு ‘தண்ணீர்’ கேட்கிறான் சரண்.
அதற்கு நீ ‘அம்மா தண்ணி கொடுங்க’ன்னு என்னை கூப்பிட்டால் தான் தண்ணீர் தருவேன் என்று சொல்கிறாள் குசும்.
சரணோ சொல்ல மாட்டேன் என்று தண்ணீரை பிடுங்குகிறான், அவளோ இறுக்கமாக பிடித்து கொண்டு தர மறுக்கிறாள். படத்தில் இருக்கும் சொத்து தகராறுக்கு பிறகு நடக்கும் தண்ணி சண்டை இது. ஆனால் இந்த சண்டை அழகான சண்டை. அப்படியே ஒருவர் மாத்தி ஒருவர் பிடிவாதமாக தண்ணீர் செம்பை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்க சரண் திடீரென்று ‘அம்மா’ என்று நாக்கை வெளியே நீட்டி கோரணி முகம் காட்டிவிட்டு ஓட அவனை பின் தொடர்ந்து குசும் ஓட நினைத்து திரும்ப அங்கே வாசலில் பிருந்தாவன் நிற்கிறான் அத்தனையையும் கவனித்துக் கொண்டு.
இப்படி படத்தில் பாடல்கள் மட்டுமல்ல மேலே சொன்னது போல் நிறைய கவிதைகளும் உண்டு.
பிருந்தாவனுக்கு எந்த சூழ்நிலையில் கல்யாணம் நடந்தது என்பது குல்சாரின் பிளேஷ் பேக் யுக்தியில் அழகாக சொல்லி காட்டப்படுகிறது.
குசுமிடம் அவளது தோழி பிருந்தாவன் பற்றி கேட்கும் போது, ‘நான் அவரை நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா அவர் என்னை நினைக்கலை’ என்று
தோழி விடாமல் கேட்கிறாள், ‘அது எப்படி சொல்றே, அவர் ஒன்னை நெனைக்கலைன்னு..?’ என்று
குசும், “அப்படி அவர் என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிறவரா இருந்தா அவர் ஏன் இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கனும்’ என்று
தோழி மன்னோவோ மன்றாடுகிறாள், ‘அவர் வந்து கூப்பிட்டால் அவர் கூட போய் வாழுவியா என்று
குசும் சொல்கிறாள், ’நான் ஒன்றும் கையாலாகதவள் இல்லை, தான தர்மம் மாதிரில்லாம் கணவராக ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று
ஒரு முறை குசுமின் வீட்டிற்கு பிருந்தாவன், அவனது தாயார், சரண் மூவரும் வரும் போது வீட்டிற்கு வந்தவர்களை கவனிக்க இருக்கின்ற தண்ணீரை குடிக்க குடுக்கும் போது ‘நான் மதியானம் சாப்டுக்கிறேன், இப்ப ஒண்ணும் வேணாம்’ என்று பிருந்தாவனின் தாயார் என்னமோ அவர் வீடு போல் கட்டிலில் படுத்து விட குசுமுக்கு தயக்கம் ஏற்படுகிறது.
தயக்கத்திற்கு காரணம், வீட்டில் சமைப்பதற்கு என்று ஏதும் அப்போது இல்லை என்பதே. வாசலில் உள்ள அறையில் நின்று கொண்டு சரணை அழைக்கிறாள். சரண் வருகிறான். சரணிடம் ‘ஒன் அப்பாவ போய் கூப்பிடு’ என்கிறாள்
சரண் உள்ளே போய், ‘பாபா, உங்கள அவங்க கூப்பிடுறாங்க..” என்கிறான்
பிருந்தாவன், ‘அவங்க..? அவங்கன்னா யாரு..?’ என்கிறான்
சரண் பிருந்தாவனின் தாயார் பக்கம் திரும்பி, “அவங்க தான், அம்மான்னு கூப்பிட்டா தான் குடிக்க தண்ணி தருவேண்டாங்கல்ல அவங்க தான்..’ என்கிறான் தாயாரும் மகனாரும் சிரிக்கிறார்கள். அந்த சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை.
உடனே பிருந்தாவன் குசுமிடம் வருகிறான், குசும் பேசுகிறான், அவளால் நேரடியாக சொல்ல விஷயத்தை வீட்டில் எதுவும் இல்லை என்பதை சொல்ல முடியவில்லை.
‘என்னால் மார்க்கெட்டுக்கு போக முடியாது, அண்ணன் நைட்டுக்கு தான் வருவார்’ என்கிறாள் குசும்
பிருந்தாவன், ‘என்ன போய் வாங்கிட்டு வரணும்?’ என்கிறான்
குசும் என்ன தான் செய்வாள்? பாவம் அவள்.
குல்சார் சாபின் படங்களில் பெரும்பாலும் தாலாட்டும் அர்த்தமுள்ள கவித்துவமுள்ள பாடல்கள் நிச்சயம்.
ஓ மாஜி ரே பாடல் செவிகளுக்கு கிஷோர் குமார் தரும் விருந்து
சரி, குசும் பிருந்தாவனிடம் என்ன தான் பதில் சொன்னாள்?
பிருந்தாவனுக்கு எந்த சூழலில் திருமணம் நடந்தது?
இறுதியில் பிருந்தாவனும் குசுமும் இணைந்தார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாட்டு புத்தகத்தில் எழுதியிருக்கிற மாதிரி சின்ன திரையில் காண்க..!
நடிப்பு
பிருந்தாவன் - ஜிதேந்திரா
குசும் - ஹேமா மாலினி
பிருந்தாவனின் தாயார் - துர்கா கோடே
சரண் - மாஸ்டர் ராஜு
குன்ஜ் - அஸ்ரானி
மன்னோ - ஃபரிதா ஜலால்
இந்த கதாபாத்திரங்கள் அல்லாமல் லக்கி என்ற ஒரு கதாபாத்திரமும் உள்ளது. அதை ஏற்று நடித்தது யாரென்றால் ‘ஷர்மிளா தாகூர்’.
-----------------------------------------------------------------------------------------------------------
அடுத்ததா ‘இஜாஜத்’ என்ற குல்சார் சாபின் படத்தை பற்றி படிக்க அவசியம் வாங்க..!
Labels:
இந்தி சினிமா,
குல்ஜார் சாப் படங்கள்
Thursday, December 31, 2009
டிரஸ் கோட் - உடை கட்டுப்பாடு - (ஹிஜாப் அல்லது பர்தா)
இந்த பதிவுக்கு போறதுக்கு முன்னாடி மூன்று செய்திகள்
1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
2. ஒரு பின்னூட்டத்தில் "இஸ்லாத்தின் மீது மரியாதை உள்ளது" என்று எழுதிய தோழர் சுகுணா திவாகருக்கு கோடி நன்றிகள்.
3. இஸ்லாமியர்களும் பெரியாரிஸ்டுகளும் இணையும் புள்ளி - என்ற ஒரு பதிவு கூட எழுத வேண்டி உள்ளது, இன்ஷா அல்லாஹ் வரும்..
---------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சாயங்காலம் வேலையிடத்தில் என்னால் ஒரு தேர்வு நடத்த முடியாமல் அதாவது exam invigilation செய்ய முடியாமல் போனது. என் வீட்டில் ஒரு அவசர தேவை இருந்ததால் தான் நான் அவ்வாற தேர்வு நடத்தாமல் வீட்டிற்கு அவசரமாக போக வேண்டியிருந்தது.
ஆகையால், அன்றைய தினம் விடுப்பிலிருந்த எனது சக-ஊழியரை தொலைபேசியில் அழைத்து எனது பணியை அவர் ஏற்று நடத்தும் படி (take over) சொல்லி விட்டு நிர்வாக ஊழியர்களிடமும் நான் இன்னவரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தெரிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
அப்போது வேலையாக வெளியிலிருந்து அப்படியே அலுவலகத்துக்கு தேர்வு நடத்த வந்த அந்த சக-ஊழியர் காலில் சப்பாத்து போடாமல் செருப்பு அணிந்தவாறே வந்து விட்டார். அதை பார்த்த எங்களது மேலதிகாரி கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அதெப்படி நீ செருப்பு போட்டுட்டு வரலாம்? ஒரு நன்னெறி (ethics) இல்லையா, ஒழுக்கம் (discipline) வேண்டாமா? என்று இன்னும் என்னென்னவோ சொல்லி சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அவர் சத்தம் போட்டது சரியா? தவறா? என்று வாதிப்பதற்கு அல்ல இந்த பதிவு.
அது மட்டுமல்லாமல் செருப்பு போட்டு கொண்டு வந்து விட்டதால் இவர் எப்படி ஒழுக்கம் தவறி விட்டார், அப்போ செருப்பு போட்டுட்டு வர்ரவங்க எல்லாம் ஒழுக்க கேடானவர்களா என்று அவரை சண்டை பிடிப்பதற்கு அல்லது தாழிக்கும் கவிதை எழுதுவதற்கு கூட அல்ல இந்த பதிவு.
அப்புறம் வேறு எதற்காம்? - நியாயமான கேள்வி -
ஒவ்வொரு இடத்திற்கும் அந்தந்த இடத்திற்கு என்று உடுத்த தகுந்த ஆடை உள்ளது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்பதை சொல்லவே இந்த பதிவு.
பள்ளிகூடத்துல படிக்கும் போது யுனிஃபார்ம் எனப்படும் சமச்சீர் சீருடை கொடுப்பார்கள், அதை அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) கூட எடுப்பதுண்டு.
அதை எல்லாம் தவறு என்று சொல்லி விட முடியுமா?
அல்லது யுனிஃபார்ம் போடாதவர்கள் எல்லாம் ஒழுக்க கேடானவர்கள் இல்லை என்று பள்ளிகூட நிர்வாகத்திடம் சண்டை தான் போட முடியுமா?
கட்டுமான தல வேலை, கப்பல் பட்டறை வேலை, உற்பத்தி துறை, பெட்ரோல் இரசாயன துறை வேலைகளுக்கு கூட பார்த்தீர்கள் என்றால் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்தந்த வேலைக்கு என தகுந்த ஆடைகள் என்று உள்ளது, அதை மட்டுமே அணிய வேண்டும்.
உதாரணமாக, பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி இவைகளை எல்லாம் கட்டாயமாக (mandatory) அணிய தான் வேண்டும்.
அப்படி பாதுகாப்பு உடைகளை போட்டு கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு அசௌகரிய குறைச்சலாக இருக்கலாம்,
அதை போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களவர்களது விருப்பம் என்று கூட விட்டு விடலாம். ஆனால் அரசாங்கம் இத்தகைய ஆடை கட்டுப்பாட்டை விதியாக்கி உள்ளது. ஏன்..?
உதாரணமாக இரசாயன உற்பத்தி துறையில் வேலை செய்பவர்கள் ஒரு வகை தீ தடுப்பு (fire retardant - அந்த ஆடையில் தீச்சுடரின் படம் கூட போட்டிருக்கும்) ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும்.
வேலையிடம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் இந்த தீ தடுப்பு ஆடை பற்றிய விதிகளே தேவை இல்லை என்று விட்டு விட முடியாது. உலகத்திலேயே மிக சிறந்த பாதுகாப்பான இடமாக இரசாயன தொழிற்சாலை அமைந்து இருந்தாலும் நாம் இத்தகைய தற்காப்பு ஆடைகளை அணிவதை தவறு என்று வாதிட முடியாது.
இந்த ஆடை கட்டுப்பாடு வேண்டுமானால் ஆபத்துகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கை வரிசைகளில் (hierarchy of control) கடைசி தடுப்பாக (last line of defence ஆக) இருக்கலாம், ஆனால் இதுவும் அவசியம் தான் என்பதை மறுக்க முடியாது.
இன்னும் மருத்துவர்களை பார்த்தீர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்யும் போது உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து இருப்பார்கள், தலைமுடியையும் மறைத்திருப்பார்கள், இதெல்லாம் சுகாதாரம் (hygiene) என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
இல்லை, இந்த மருத்துவச்சி ஹிஜாப் அணிந்திருக்கிறார், நான் இவரிடம் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று சொன்னால் ஒருத்தரிடமும் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே முடியாது.
இன்னும் கறி, மீன் வெட்டுபவர்கள், பெரிய பெரிய ஹோட்டலில் சமைப்பவர்கள் எல்லாம் கூட உடலை மூடும் மேலங்கிகளும் தலை மூடிகளும் அணிந்திருப்பார்கள். எல்லாம் சுகாதாரம் தான்.
அதே போல தான் இஸ்லாம் இந்த சமுதாயத்தோடு கலந்த வாழ்க்கை வாழும் போது இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வேண்டுமென்றால் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்சாக இருக்கலாம், ஆனால் இதுவும் நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அம்சம் தான், நல்ல சுகாதாரமான ஆடை தான்.
ஆண்களுக்கு காம வெறி வந்தால் இந்த இடம் (சமீபத்திய கருவறை உதாரணங்களை பொருத்தி பார்த்து கொள்ளவும்) என்று கிடையாது, பெண்களின் சம்மதம் தேவை என்ற விதிகள் கூட கிடையாது அவளின் சம்மதமின்றி கூட பலாத்காரம் செய்து கூட அவனது கீழான இச்சையை அல்லது வெறியை தீர்த்துக் கொள்ள முடியும். இதை எழுதுவதற்கே கஷ்டமாக தான் உள்ளது, ஆனால் அது தான் நிதர்சனம்.
இன்னும் நாட்டில் எத்தனை கற்பழிப்புகள், ஈவ் டீசிங்குகள் எத்தனை எத்தனை பிரச்சினைகள். இத்தனை பிரச்சினைகளுக்கு நவநாகரீக ஆடை முறையா தீர்வென்று சொல்கிறீர்கள்?
மரியாதைக்குறிய சகோதரி காயத்ரி சித்தார்த் அவர்களின் கவிதை ஒன்றை வாசித்த ஞாபகம் கூட வருகிறது, அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார், ஒரு ஆண் அல்லது காதலன் "நேர்மையாக முகம் பார்த்து" பேசியதாக எழுதியிருப்பார்.
எங்க ஹஜ்ரத் கூட என்கிட்டே சொன்னார்கள், 'பொம்பள புள்ளைங்க கிட்ட நீ பேசுனா முகத்த தவிர வேற எங்கேயும் ஒன் கண்ணு ஓட கூடாது.." என்று.
ஆனால் வேலையிடம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் பாதுகாப்பு ஆடை அவசியம் என்று எப்படி நான் சொன்னேனோ அதே நியாயம் தான் ஆண்கள் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக உத்தமாமானவர்களாக இருந்தாலும் (ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும்) இந்த மறைப்பு ஆடை (பர்தா) மிகவும் அவசியம். அது தான் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ்.
சட்டம் என்ற படத்தில் அறை குறை ஆடையில் இருக்கும் மாதவியிடம் கமல்ஹாசன் சொல்வார் "பொருளை தொறந்து வச்சிருந்தா திருடன் வரத்தான் செய்வன்" என்று.
அதுவும் தவிர, உடலை, தலை முடியை மறைத்து ஆடை அணிந்தால் இந்த கவுரவமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையாவது இருக்கிறதா?
ஈரான் நாட்டில் பெண்கள் மறைக்கும் ஆடை அணிந்து தீயணைப்பு படையினராக இருக்கிறார்கள், பத்திரிக்கை காரர்களாக இருக்கிறார்கள், கடைகளில் பணிபுரிகிறார்கள், மருத்துவர்களாக, வக்கீல்களாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ஜெமிமா என்பவர் கூட "பர்தா அணிந்தவர்களே உண்மையான விடுதலைவாதிகள். பர்தா மூலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை" என்று சொன்னதை படித்தது நினைவிற்கு வருகிறது.
நான் எனது வகுப்பில் வேலையிட பாதுகாப்பை பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஆடைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
வேலைக்கு போகும் போது எப்படி உடுப்புகள் அணிந்து கொண்டு போக வேண்டும் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை போன்று வேலையிடத்தில் அணியக் கூடாது என்பதை புரிய வைக்கலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன்.
அதாவது, 'பொண்ணு பாக்க போவும் போது எப்படி போவணும்?' என்று கேட்டேன்.
என் வகுப்பில் இருந்த ஒரு குசும்பன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம இப்படி சொன்னார், "சார், நான் பொண்ணு பாக்க போவும் போது பொண்டாட்டியோட தான் போவேன்.." என்று
இவரை என்ன செய்யலாம்..?
நான் சொன்னேன், "நான் உங்க புள்ளைக்கு கேக்கல... உங்களுக்கு கேக்குறேன்.." என்று
1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
2. ஒரு பின்னூட்டத்தில் "இஸ்லாத்தின் மீது மரியாதை உள்ளது" என்று எழுதிய தோழர் சுகுணா திவாகருக்கு கோடி நன்றிகள்.
3. இஸ்லாமியர்களும் பெரியாரிஸ்டுகளும் இணையும் புள்ளி - என்ற ஒரு பதிவு கூட எழுத வேண்டி உள்ளது, இன்ஷா அல்லாஹ் வரும்..
---------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சாயங்காலம் வேலையிடத்தில் என்னால் ஒரு தேர்வு நடத்த முடியாமல் அதாவது exam invigilation செய்ய முடியாமல் போனது. என் வீட்டில் ஒரு அவசர தேவை இருந்ததால் தான் நான் அவ்வாற தேர்வு நடத்தாமல் வீட்டிற்கு அவசரமாக போக வேண்டியிருந்தது.
ஆகையால், அன்றைய தினம் விடுப்பிலிருந்த எனது சக-ஊழியரை தொலைபேசியில் அழைத்து எனது பணியை அவர் ஏற்று நடத்தும் படி (take over) சொல்லி விட்டு நிர்வாக ஊழியர்களிடமும் நான் இன்னவரை தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தெரிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
அப்போது வேலையாக வெளியிலிருந்து அப்படியே அலுவலகத்துக்கு தேர்வு நடத்த வந்த அந்த சக-ஊழியர் காலில் சப்பாத்து போடாமல் செருப்பு அணிந்தவாறே வந்து விட்டார். அதை பார்த்த எங்களது மேலதிகாரி கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அதெப்படி நீ செருப்பு போட்டுட்டு வரலாம்? ஒரு நன்னெறி (ethics) இல்லையா, ஒழுக்கம் (discipline) வேண்டாமா? என்று இன்னும் என்னென்னவோ சொல்லி சத்தம் போட்டு திட்டி விட்டார்.
அவர் சத்தம் போட்டது சரியா? தவறா? என்று வாதிப்பதற்கு அல்ல இந்த பதிவு.
அது மட்டுமல்லாமல் செருப்பு போட்டு கொண்டு வந்து விட்டதால் இவர் எப்படி ஒழுக்கம் தவறி விட்டார், அப்போ செருப்பு போட்டுட்டு வர்ரவங்க எல்லாம் ஒழுக்க கேடானவர்களா என்று அவரை சண்டை பிடிப்பதற்கு அல்லது தாழிக்கும் கவிதை எழுதுவதற்கு கூட அல்ல இந்த பதிவு.
அப்புறம் வேறு எதற்காம்? - நியாயமான கேள்வி -
ஒவ்வொரு இடத்திற்கும் அந்தந்த இடத்திற்கு என்று உடுத்த தகுந்த ஆடை உள்ளது என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது என்பதை சொல்லவே இந்த பதிவு.
பள்ளிகூடத்துல படிக்கும் போது யுனிஃபார்ம் எனப்படும் சமச்சீர் சீருடை கொடுப்பார்கள், அதை அணியாமல் வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) கூட எடுப்பதுண்டு.
அதை எல்லாம் தவறு என்று சொல்லி விட முடியுமா?
அல்லது யுனிஃபார்ம் போடாதவர்கள் எல்லாம் ஒழுக்க கேடானவர்கள் இல்லை என்று பள்ளிகூட நிர்வாகத்திடம் சண்டை தான் போட முடியுமா?
கட்டுமான தல வேலை, கப்பல் பட்டறை வேலை, உற்பத்தி துறை, பெட்ரோல் இரசாயன துறை வேலைகளுக்கு கூட பார்த்தீர்கள் என்றால் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்தந்த வேலைக்கு என தகுந்த ஆடைகள் என்று உள்ளது, அதை மட்டுமே அணிய வேண்டும்.
உதாரணமாக, பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி இவைகளை எல்லாம் கட்டாயமாக (mandatory) அணிய தான் வேண்டும்.
அப்படி பாதுகாப்பு உடைகளை போட்டு கொண்டு வேலை செய்வது அவர்களுக்கு அசௌகரிய குறைச்சலாக இருக்கலாம்,
அதை போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களவர்களது விருப்பம் என்று கூட விட்டு விடலாம். ஆனால் அரசாங்கம் இத்தகைய ஆடை கட்டுப்பாட்டை விதியாக்கி உள்ளது. ஏன்..?
உதாரணமாக இரசாயன உற்பத்தி துறையில் வேலை செய்பவர்கள் ஒரு வகை தீ தடுப்பு (fire retardant - அந்த ஆடையில் தீச்சுடரின் படம் கூட போட்டிருக்கும்) ஆடையை கட்டாயமாக அணிய வேண்டும்.
வேலையிடம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் இந்த தீ தடுப்பு ஆடை பற்றிய விதிகளே தேவை இல்லை என்று விட்டு விட முடியாது. உலகத்திலேயே மிக சிறந்த பாதுகாப்பான இடமாக இரசாயன தொழிற்சாலை அமைந்து இருந்தாலும் நாம் இத்தகைய தற்காப்பு ஆடைகளை அணிவதை தவறு என்று வாதிட முடியாது.
இந்த ஆடை கட்டுப்பாடு வேண்டுமானால் ஆபத்துகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கை வரிசைகளில் (hierarchy of control) கடைசி தடுப்பாக (last line of defence ஆக) இருக்கலாம், ஆனால் இதுவும் அவசியம் தான் என்பதை மறுக்க முடியாது.
இன்னும் மருத்துவர்களை பார்த்தீர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்யும் போது உடல் முழுவதையும் மறைக்கும் ஹிஜாப் அணிந்து இருப்பார்கள், தலைமுடியையும் மறைத்திருப்பார்கள், இதெல்லாம் சுகாதாரம் (hygiene) என்று ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.
இல்லை, இந்த மருத்துவச்சி ஹிஜாப் அணிந்திருக்கிறார், நான் இவரிடம் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று சொன்னால் ஒருத்தரிடமும் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவே முடியாது.
இன்னும் கறி, மீன் வெட்டுபவர்கள், பெரிய பெரிய ஹோட்டலில் சமைப்பவர்கள் எல்லாம் கூட உடலை மூடும் மேலங்கிகளும் தலை மூடிகளும் அணிந்திருப்பார்கள். எல்லாம் சுகாதாரம் தான்.
அதே போல தான் இஸ்லாம் இந்த சமுதாயத்தோடு கலந்த வாழ்க்கை வாழும் போது இத்தகைய ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது வேண்டுமென்றால் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்சாக இருக்கலாம், ஆனால் இதுவும் நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அம்சம் தான், நல்ல சுகாதாரமான ஆடை தான்.
ஆண்களுக்கு காம வெறி வந்தால் இந்த இடம் (சமீபத்திய கருவறை உதாரணங்களை பொருத்தி பார்த்து கொள்ளவும்) என்று கிடையாது, பெண்களின் சம்மதம் தேவை என்ற விதிகள் கூட கிடையாது அவளின் சம்மதமின்றி கூட பலாத்காரம் செய்து கூட அவனது கீழான இச்சையை அல்லது வெறியை தீர்த்துக் கொள்ள முடியும். இதை எழுதுவதற்கே கஷ்டமாக தான் உள்ளது, ஆனால் அது தான் நிதர்சனம்.
இன்னும் நாட்டில் எத்தனை கற்பழிப்புகள், ஈவ் டீசிங்குகள் எத்தனை எத்தனை பிரச்சினைகள். இத்தனை பிரச்சினைகளுக்கு நவநாகரீக ஆடை முறையா தீர்வென்று சொல்கிறீர்கள்?
மரியாதைக்குறிய சகோதரி காயத்ரி சித்தார்த் அவர்களின் கவிதை ஒன்றை வாசித்த ஞாபகம் கூட வருகிறது, அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார், ஒரு ஆண் அல்லது காதலன் "நேர்மையாக முகம் பார்த்து" பேசியதாக எழுதியிருப்பார்.
எங்க ஹஜ்ரத் கூட என்கிட்டே சொன்னார்கள், 'பொம்பள புள்ளைங்க கிட்ட நீ பேசுனா முகத்த தவிர வேற எங்கேயும் ஒன் கண்ணு ஓட கூடாது.." என்று.
ஆனால் வேலையிடம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் பாதுகாப்பு ஆடை அவசியம் என்று எப்படி நான் சொன்னேனோ அதே நியாயம் தான் ஆண்கள் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக உத்தமாமானவர்களாக இருந்தாலும் (ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும்) இந்த மறைப்பு ஆடை (பர்தா) மிகவும் அவசியம். அது தான் லாஸ்ட் லைன் ஆஃப் டிஃபன்ஸ்.
சட்டம் என்ற படத்தில் அறை குறை ஆடையில் இருக்கும் மாதவியிடம் கமல்ஹாசன் சொல்வார் "பொருளை தொறந்து வச்சிருந்தா திருடன் வரத்தான் செய்வன்" என்று.
அதுவும் தவிர, உடலை, தலை முடியை மறைத்து ஆடை அணிந்தால் இந்த கவுரவமான வேலை செய்ய முடியாது என்று எந்த வேலையாவது இருக்கிறதா?
ஈரான் நாட்டில் பெண்கள் மறைக்கும் ஆடை அணிந்து தீயணைப்பு படையினராக இருக்கிறார்கள், பத்திரிக்கை காரர்களாக இருக்கிறார்கள், கடைகளில் பணிபுரிகிறார்கள், மருத்துவர்களாக, வக்கீல்களாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி ஜெமிமா என்பவர் கூட "பர்தா அணிந்தவர்களே உண்மையான விடுதலைவாதிகள். பர்தா மூலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதில் உண்மையில்லை" என்று சொன்னதை படித்தது நினைவிற்கு வருகிறது.
நான் எனது வகுப்பில் வேலையிட பாதுகாப்பை பற்றி நடத்திக் கொண்டிருக்கும் போது ஆடைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
வேலைக்கு போகும் போது எப்படி உடுப்புகள் அணிந்து கொண்டு போக வேண்டும் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடைகளை போன்று வேலையிடத்தில் அணியக் கூடாது என்பதை புரிய வைக்கலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன்.
அதாவது, 'பொண்ணு பாக்க போவும் போது எப்படி போவணும்?' என்று கேட்டேன்.
என் வகுப்பில் இருந்த ஒரு குசும்பன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம இப்படி சொன்னார், "சார், நான் பொண்ணு பாக்க போவும் போது பொண்டாட்டியோட தான் போவேன்.." என்று
இவரை என்ன செய்யலாம்..?
நான் சொன்னேன், "நான் உங்க புள்ளைக்கு கேக்கல... உங்களுக்கு கேக்குறேன்.." என்று
Wednesday, December 23, 2009
எத்திராஜ் காலேஜை தெரியுமா? - இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் கேள்வி
ஆபிதீன் நானா அவர்கள் இஜட்.ஜபருல்லாஹ் நானாவின் எஸ்.எம்.எஸ். ஐ பதிவாக எழுதியிருந்தார்கள். அதில் இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்க்ள் 'அல்லா என்று உனக்கு பெயரிட்டது யார்?' என்று கவிதை எழுதியிருந்தார்கள்.
அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள்.
அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.
எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.
இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது.
என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான்.
ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.
ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள்.
ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.
ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.
வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.
1. http://abedheen.googlepages.com/zafarulla.html
2. http://nagoori.wordpress.com/category/கவிஞரà¯-ஜபரà¯à®²à¯à®²à®¾/
3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1
இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..
நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை.
அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.
அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..
இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?
நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு
இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே,
நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது
இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?
எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.
"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த
எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.
இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.
'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.
ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை.
'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.
'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.
'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்
'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா
அதற்கு நான் 'அல்லாட அல்லா பில் அல்லா' எல்லாம் கிடையாது என்றேன். அதாவது எங்களது ஊரில் தகப்பனாரின் தந்தையை 'வாப்பாட வாப்பா பில் வாப்பா' என்று கூறுவார்கள்.
அதற்கு ஹமீது ஜாபர் நானா அவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ஆபிதீன் நானா அவர்கள் மீண்டும் பில் அல்லா குழப்பம் என்ற பதிவை எழுதியிருந்தார்கள்.
எனக்கு படித்தவுடன் தலை சுத்தியது, அப்படி சுத்தியதும் நல்லது தான், பல டைரி குறிப்புகளை எனக்குள் கிளறி விட்டது.
இஜட்.ஜபருல்லாஹ் நானாவை பிடிக்குதோ இல்லையோ ஆனா நாகூரில் தெரியாதவங்களே இருக்க முடியாது.
என் வாழ்க்கையில் நான் பாக்கியமாக கருதுவது எங்கள் ஹஜ்ரத் அவர்களிடம் இஸ்லாம் பற்றிய, இறைவன் பற்றிய பாலபாடம் கற்றது தான்.
ஹஜ்ரத் அவர்களுக்கும் எங்களுக்கும் ஆசிரியர் மாணவன் என்ற உறவை விட தந்தை மகன், மாமா மருமகன் போன்ற உறவுகள் கொஞ்சம் மேலோங்கியே நிற்கும்.
ஹஜ்ரத் அவர்களிடம் நாங்கள் மிகவும் அதபாக (உண்மையில் அதாபாக அதாவது தொந்தரவாக தான் இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்)அதாவது மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்வோம். எங்களுக்கு தொடர்ச்சியாக ஒதி வரும் படி சில இஸ்முகளை (குரான் ஷரீஃபின் வசனங்களை) கொடுப்பார்கள்.
ஒலு செய்து விட்டு கிப்லாவை நோக்கி அமர்ந்து ரிலேக்ஸ்டாக இறைவனை நினைவு கூர்ந்து (திக்ர்) ஓதி வர வேண்டும்.
ஒரு முறை ஓத கொடுத்த பிறகு 'எல்லாரும் ஒழுங்கா ஓதிட்டு வரணும், ஜபருல்லாஹ் சொன்ன மாதிரி சொல்ல கூடாது, செட்லேயே (ஹஜ்ரத் அவர்களின் மாணவர்களிலேயே) ஓதாதது நானும் (ஜபருல்லாஹ் அவர்களும்) மாமாவும் (ஹஜ்ரத் அவர்களும்) தான்னு' ஜபருல்லாஹ் சொன்னது தெரியும் தானே' என்று சொல்லி விட்டு சிரித்தார்கள்.
வேறொரு முறை மிஹ்ராஜை பத்தி பேசிக் கொண்டிருக்கும் போது, 'உங்களுக்கு இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேனே, ஜபருல்லாஹ்க்கெல்லாம் இதுல பாதி தான் பேசுவேன்..' என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த ஜபருல்லாஹ் நானா அவர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய கீழ் கண்ட இணைப்புகளுக்கு சென்றால் பயன்பெறலாம்.
1. http://abedheen.googlepages.com/zafarulla.html
2. http://nagoori.wordpress.com/category/கவிஞரà¯-ஜபரà¯à®²à¯à®²à®¾/
3. http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=61&fldrID=1
இன்னும் தலைப்புக்கே வரலையே என்பது நியாயமான கேள்வி தான், இதோ வந்துகிட்டே இருக்கேன்..
நானும் எனது நண்பர் காட்டுப்பள்ளி இக்பாலும் (1.காட்டுபள்ளி என்பது நாகூர் மியா தெருவில் உள்ள ஒரு மஸ்ஜித். 2. இக்பால் காட்டுபள்ளியில் சேவை செய்து வந்தார், அவர் நான் சொல்ல வரும் சம்பவத்தின் போது சவுதியில் இருந்தார்) சேர்ந்து காட்டுபள்ளியில் நல்ல நாள் பெருநாள் என்று ஹதீஸ் நிகழ்ச்சிகள் நடத்துவது வழமை.
அப்படி ஒரு முறை நம்ம இஜட்.ஜபருல்லாஹ் நானாவை கஷ்டப்பட்டு பிடித்து (மின்னலை கூட பிடித்து விடலாம்) எனது தகப்பனாரும் அவர்களும் வாடா போடா கூட்டாளி என்பதால் அவர்கள் மூலமாக ஒப்புக் கொள்ள வைத்து பேச அழைத்து வந்தோம்.
அப்போது அவர்கள் பேச ஆரம்பித்த போதே 'இந்த பேச்சு ஏதோ ஒன் வே டிராபிக் மாதிரி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போ மாட்டேன், ஒரு டிஸ்கஸன் கலந்துரையாடல் மாதிரி வைத்துக் கொள்ளலாம்' என்று தான் ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர்களுடனான உரையாடலிலிருந்து என் ஞாபக அதாவது டைரி குறிப்புகள்..
இஜட். நானா: எத்திராஜ் காலேஜை பத்தி தெரியுமா?
நான்: (கொஞ்சம் கூட என்ன எதுக்கு என்று யோசிக்காமல்) தெரியும், எக்மோர்ல இருக்கு
இஜட் நானா: அதானே தெரியாம இருக்காதே.. பொம்பள புள்ளைல்வோ படிக்கிற காலேஜாச்சே,
நான் கன்னா பின்னா என்று அந்த பள்ளிவாசலில் முழி பிதுங்கி நிற்க இது பத்தாதுண்டு அடுத்த கேள்வி பிதுங்கிய கண்ணில் ஸ்கட்டை பாய்ச்சியது
இஜட் நானாவின் அடுத்த கேள்வி: எத்திராஜ் யாருன்னு தெரியுமா?
எத்திராஜா..? யார் பெத்த புள்ளையோ தெரியலையே? என்பது போல் எச்சில் முழுங்கிக்கிட்டு நிற்க நல்லவேலை அவர்களே தொடர்ந்தார்கள்.
"எத்திராஜ் ஒரு பிரபலமான வக்கீல். யுனிவர்சிட்டி ஆஃப் டப்ளின்லே லா படிச்சவர். அவர் ஒரு கேஸில வாதாடிகிட்டு இருக்கும் போது சட்டத்துல இருக்குற ஒரு செக்சனை திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாரு.. ஜட்ஜுக்கே ஒரு கட்டத்துல வெறுப்பு வந்துடுச்சு, 'என்ன மிஸ்டர் எத்திராஜ், ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கீங்க.. கம் டு த பாயிண்ட்.. ண்டார் ஜட்ஜ். அதுக்கு எத்திராஜ் அவங்க பதில் என்ன தெரியுமா சொன்னாங்க..' என்று சற்று நிறுத்த
எங்களது அனைவரின் கண்கள் இமைகள் இருப்பதையே மறந்து போய் விட்டிருந்தது.
இதோ இஜட்.நானா தொடர்கிறார்கள், 'எத்திராஜ் அவங்க சொன்னாங்க.. இல்லை யுவர் ஆனர்.. அந்த செக்சனை நான் ஒவ்வொரு தடவ சொல்லும் போதும் எனக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கெடைச்சிகிட்டு இருக்கு.. என்றாராம்' என்றவர்கள் 'இதை நான் இங்கே சொல்றேன் என்றால்..' என்று விடாமல் தொடர்ந்தார்கள்.
'மனுஷன் எழுதுன சட்டத்தையே திரும்ப திரும்ப படிக்கும் போது எத்திராஜுக்கு புதுப்புது பாயிண்ட்ஸ் கிடைச்சிகிட்டு இருக்குன்னா.. அல்லா எழுதுன குரானை ஒரு தடவை கூட ஒழுங்கா படிக்காம எல்லா பாயிண்ட்ஸும் தெரிஞ்சிட்ட மாதிரி நடந்து கொள்றோமே, இது சரியா..?' என்ற கேள்வியோடு என்னை கையை காட்டி, 'நீங்க எத்தனை தடவை குரானை தமிழ்ல படிச்சிருக்கீங்க..?' என்றார்கள்.
ஆஹா.. எஹல்ட்ட பார்த்து ஜாக்கிரதையா பேசணும் என்று என்னோட செகண்ட் டிரேக் (நன்றி: பரிச்சே இந்தி படம் - அந்த படத்துல் இப்படி தான் ஜிதேந்திராவிடம் அவரின் மனசாட்சி அதாங்க செகண்ட் டிரேக் பேசும். வசனம்: குல்ஜார் சாப்) என்னிடம் சொல்லிற்று. நான் பள்ளில குரான் ஷரீஃப் ஓதி முடிச்சு புள்ளைல்வோக்கு முட்டாய் கொடுத்ததோட சரி, அதுவும் அரபுல தான் ஓதியிருக்கேன். தமிழ்ல ஒரு தடவ கூட படிச்சதில்லை.
'இல்லை' என்றேன் தயங்கியாவாறே.
'படிங்க.. எத்திராஜ் மாதிரி படிங்க..' என்று சொல்லி விட்டு 'என்னா வெளங்கி கிட்டீங்க?' என்றார்கள்.
'எத்திராஜ் மாதிரி படிக்கணும்' - நான்
'என்ன லாயருக்கா..?' - இது தான் ஜபருல்லாஹ் நானா
Labels:
இஜட்.ஜபருல்லாஹ்,
இஸ்லாம்,
திருமறை குரான் ஷரீஃப்
Subscribe to:
Posts (Atom)




