Friday, May 21, 2010

இரண்டு பித்தர்கள் பகலிலும், இரவிலும் வாழ்க்கையை, வசிப்பிடத்தை தேடி -

இந்த பதிவில் இதே படத்தில் வரும் 'ஏக் அகேலா இஸ் ஷெஹர் மெய்ன்' என்ற பாடலை சோக அலைவரிசையில் கேட்டு லயித்திருக்கலாம். இதே பாடலை மகிழ்ச்சியின் அலைவரிசையில் இங்கே பாடப்படுகிறது அல்லது பதியப்படுகிறது.

படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர் (கோல் மால் (தமிழில் தில்லுமுல்லு) எனும் படத்தில் நடித்தவர் தான்), ஜரினா வஹ்ஹாப் (மை நேம் இஸ் கானில் ஷாருக்கானின் - அம்மிஜானாக - அம்மாவாக வருபவர்)
பாடியவர்கள்: பூபிந்தர், ரூனா லைலா (- இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்)

இந்த பாடலுக்காக குல்ஜார் சாபுக்கு பிலிம்பேர் 'சிறந்த பாடலாசிரியர்' விருதை வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது..

கட்டுமானம் நடைபெறும் ஓர் கட்டடத்தின் இடையே ஒரு நடுத்தர வர்க்க இளஞ்சோடிகள் தங்களுக்கு ஓர் இல்லம் வேண்டும் என்ற கற்பனையில் கவிஞர்களாகவோ அல்லது பித்தர்களாகவோ மாறிய போது.. என்னையும் இசையின் காதலானாக மாற்றி விட்டார்கள்..




Bhupinder: Do diwaane shaher mein, raat mein aur dopahar mein
Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
(repeated by Runa)

இரு பித்தர்கள்
இந்த நகரத்தில்
இரவும்
பகலும்
வாழ்வாதாரம் தேடுகின்றனர்.. (ஆபோ தானா என்றால் நீரும் உணவும் என்று அர்த்தம்)
ஓர்
வசிப்பிடம் தேடுகின்றனர்..

Runa: In bhoolbhulaiya galiyo mein, apna bhi koyi ghar hoga
Ambar pe khulegi khidki ya, khidki pe khula ambar hoga

(repeated by Bhupinder)

இந்த
சிக்கல் நிறைந்த
குழப்பமான
வழிதடங்களுள்
நமக்கென்று
ஒரு
இல்லம்
இருக்கும்..

விண்ணில்
சாளரம்
திறக்கும்
அல்லது
சாளரம் வழி
தெளிவான வானமது
தெரியும்

Asmaani rang ki aankho mein
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்

R: Asmaani ya aasmaani?
ஒப்பிடமுடியாதவா அல்லது நீல நிறமா? (வானத்தின் நிறமா?)

B: Asmaani rang ki aankho mein

Basne ka bahaana dhhundhhte hain, dhhundhhte hain
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
நாம்
குடியேற
காரணம்
தேடுவோம்

நாம்
தேடுவோம்

வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம் தேடுவோம்

B: Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்R: Taare, aur zameen par?

பூமியில் இறங்கி
நடக்கும் போது


நட்சத்திரம், அதுவும் பூமியில்..?

B: of course
சந்தேகமே இல்லை..

Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
நடக்கும் போது

R: Hmmm hmmm
ஹும்.. ஹூம்..

B: Aakaash zameen ho jaata hai
வானம்
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்

R: A aa aa
ஆ..

B: Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
அந்த இரவானது
மீண்டும்
இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி
விடும்..

R: Jab taare zameen par chalte hain


Aakaash zameen ho jaata hai
Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai

விண்மீன்கள்
பூமியில் இறங்கி
விளையாடும் போது
வானமானது
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
அந்த இரவானது
மீண்டும்
தனது இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி விடும்


B: Pal bhar ke liye
R: Pal bhar ke liye
சில நொடிகளுக்கு மட்டிலும்
சில நொடிகளுக்கு மட்டிலும்


B: Pal bhar ke liye in aankho mein
சில நொடிகளுக்கு மட்டிலும் இந்த கண்களில்

Ham ek zamaana dhhundhhte hain, dhhundhhte hain
நாம் ஓர் உலகை தேடுவோம், தேடுவோம்..

R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம்
தேடுவோம்

No comments: