Wednesday, March 09, 2011

மௌத் - இந்தி படக் காட்சிகள்

காட்சி 1:
படம்: ஆனந்த் (இந்தி); வசனம்: குல்ஜார் சாப்
காட்சியில் பிரபல சிரிப்பு நடிகர் ஜான்னி வாக்கர் (உண்மையான பெயர்: பதுருத்தின் கமாலுத்தின் காஜி)
                                                                                                                                      

ஜானி: ஜஹான் பனா..

தந்தை: எனக்கு அவமானமாக உள்ளது
ஒரு இளவரசனாக இருந்துக் கொண்டு கேவலம் ஒரு சாதாரண பெண்ணோடு காதல் கொள்வதா? (முகலே ஆஜம்)

ஜா: இவள் சாதரணமாக பெண் என்றால் (அந்த பெண் பக்கம் திரும்பி - கொஞ்சம் முன்னே வாம்மா - என்று அழைத்து விட்டு) இவளை விட சிறந்த பெண்ணை எனக்கு காட்டுங்கள்

த: என்னால் காட்ட முடியும், அதிருக்கட்டும், நான் இதற்கு (காதலுக்கு) அனுமதி தரமாட்டேன்.

ஜா: சிரித்து விட்டு - எனக்கு புரிகிறது தந்தையே

த: உன்னை போல் ஒரு மகனை பெற்றெடுத்ததற்காக நான் வெட்கப் படுகிறேன்.

ஜா: அவரவர் செய்த தவறுக்கு அவரவர் வெட்கப்படுவது அவரவரின் கடமை

த: வாயை மூடு அறிவிலியே..! உன்னை உயிரோடு புதைத்து விடுவேன்..!

ஜா: என்ன பந்தயம் - என்னை வேண்டுமென்றால் புதைக்கலாம், ஆனால் உயிரோடு வைத்திருக்க முடியாது தந்தையே..!

த: நீ ஏன் பிறந்த நாளிலேயே இறந்து தொலைக்கவில்லை..!

ஜா:
பிறப்பு இறப்பு என்பது மேலே இருபவனின் (இறைவனின்) கையில் இருக்கின்றது மன்னர் மன்னா..! 
அதை நீங்களும் மாற்ற முடியாது
அவ்வாறே நானும் (மாற்ற முடியாது)
நாம் அனைவரும் கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மைகளை போன்றவர்கள்.
கயிற்றை இஷ்டத்திற்கு இழுக்கும் ஆற்றல் மேலே இருப்பவனின் கைவசம் உள்ளது.
எப்பொழுது, யாரை, எப்படி இழுப்பான் என்று ஒருவராலும் சொல்லவே முடியாது. (சிரிப்பு)



காட்சி 2:

படம்: ஆனந்த்; வசனம்: குல்ஜார் சாப்

காட்சியில்: ராஜேஷ் கன்னா, அமிதாப்பச்சன்

                

அமிதாப்:
மரணம் என்பது ஒரு கவிதை
இந்த கவிதையிடம் நான் வாக்குறிதி அளிக்கின்றேன்...
நான் ஒரு நாள் இந்த கவிதையை நிச்சயம் சந்திப்பேன்
நரம்புகளில் ஏற்படும் வலியினால் தூக்கம் மறந்து போகும் போது
மஞ்சள் நிலவு வானில் உயரும் நேரத்தில்
கதிரவன் முழுமையடைந்து ஒரு முடிவுக்கு வரும் தருணத்தில்
இரவு அடிவானத்தில் இருக்கும் பொழுதில்
இருளும் அல்லாத
வெளிச்சமும் அல்லாத
இரவென்றும் கொள்ள முடியாத
பகலென்றும் ஒப்ப முடியாத
எப்பொழுது நம் உடல் இவ்வுலக வாழ்க்கையை இழக்கின்றதோ
அப்பொழுது
எப்பொழுது ரூஹூ (உயிர்) சுவாசத்தை விடுகின்றதோ
அப்பொழுது
நான் இந்த கவிதையிடம் வாக்குறுதி அளிக்கின்றேன்
நான் அதனை நிச்சயமாக சந்திப்பேன் என்று. 

(படத்தில் 40 விநாடிகள் கழித்து)

ராஜேஷ் கன்னா:

பிறப்பு இறப்பு என்பது மேலே இருபவனின் (இறைவனின்) கையில் இருக்கின்றது மன்னர் மன்னா..! 
அதை நீங்களும் மாற்ற முடியாது
நானும் மாற்ற முடியாது
நாம் அனைவரும் கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மலாட்ட பொம்மைகளை போன்றவர்கள்.
கயிற்றை இஷ்டத்திற்கு இழுப்பது மேலே இருப்பவனின் கையில் உள்ளது.
எப்பொழுது, யாரை, எப்படி இழுப்பான் என்று ஒருவராலும் சொல்லவே முடியாது. (சிரிப்பு)


காட்சி 3
படம் - ஆனந்த்; வசனம்: குல்ஜார் சாப்
காட்சியில்: ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், ரமேஷ் , சீமா, லலிதா பவார், ஜானி வாக்கர், மற்றும் சிலர்..

               

Babu Moshaaye… Babu Moshaaye.. (a very respected word to address a person in Bengali)


Zindagi aur maut upar wale ke haath mein hai.. 


Jahan Panaa (which means His Excellency..!)
Isse na to aap rok sakte hain na hi main …
hum sab to rang manch ki kathputaliyan hain 


jinki dor upar wale ke ungaliyon mein bandhi hui hai..
Kab kaun aur kaise utega …
isse koi nahi bata sakta hai……….


Ha ha ha...

No comments: