Tuesday, March 29, 2011

ஹஜ்ரத் கௌதுனா (றலி)

இன்றைக்கு ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பினார், அதில், ‘உயிரோடிருக்கும் போது பாம்பு எறும்பை தின்கிறது, பாம்பு இறந்த பிறகு எறும்பு பாம்பை தின்கிறது - காலம் மாறிக்கிட்டே இருக்கும் மறந்துவிட வேண்டாம்” என்று (ஆங்கிலத்தில்) எச்சரிக்கும் தொனியில் இருந்தது.

நான் சேமித்த வைக்காத எண்களை கொண்ட அந்த நண்பருக்கு நான் திருப்பி அனுப்பினேன், “சரி, நான் இப்போ பாம்புங்கறீங்களா? அல்லது எறும்புங்கறீங்களா?” என்று திருப்பி அனுப்பினேன்.

அப்புறம், ‘சாரி சார், நான் ஜஸ்ட் ஷேர் பண்ணினேன், அவ்வளவு தான்..” என்று பதில் அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பிய செய்தியில் உண்மை இருக்கிறது. இன்றைக்கு வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள மனிதன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான்.

ஒழுக்கம், பண்பு எல்லாம் பழைய சரக்காகி விட்டது. மனிதநேயமோ பழங்கதையாகி விட்டது.

கை. கால், கண், இதயம் உள்பட எல்லாம் இனி இயந்திரத்திலேயே செய்து விடலாம். அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை அதுவே இயந்திரங்களாக தான் காட்சியளிக்கிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மனித உடலில் ஒரு துண்டுச் சதை இருக்கிறது; அது நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் முழுவதுமே ஆரோக்கியமாக விளங்கும். அது கெட்டு சீரழியுமானால் உடல் உறுப்புகள் செயலிழந்து விடும். இது குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.”
அந்த சதைத் துண்டு மனித இருதயமே” என்று.

மனித இருதயங்களை எச்சரிக்கையோடு சரி செய்த சூஃபியாக்கள் வகுத்த மெய்ஞ்ஞான வழிமுறைகளுக்கு ‘தஸ்ஸவுஃப்பு” என்று பெயர். ‘தஸ்ஸவுஃப்பு’க்கு ‘தவ்ஹீது’ எனும் இறை ஓர்மையே மூலக்கரு.

‘தவ்ஹீது’ எனும் இந்த கோட்பாடு இறைவனோடு ஒன்றாக கலந்துவிடுவது அல்ல இறை பண்புகள் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருதயத்தை தூய்மைபடுத்திக் கொள்வதே தவ்ஹீது எனப்படும்.

சூஃபியிச குழந்தை பிறந்தது அரேபியாவில் தான் என்றாலும் அது அதிக போஷாக்குடன் வளர்ந்தது பாரசீகத்தில் தான்.

இந்த சமயத்தில் இஸ்லாம் அதன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வெறும் அசைவற்ற உடலாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசாங்கங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைக்க ஆரம்பித்தனர். உலமாக்கள் என பெயரளவில் உள்ளோர் அரசாங்கத்திற்கு ஒத்தூதீனர்.

இதனை தட்டிக் கேட்ட சூஃபியாக்களை ஷரியத்தை விட்டு விலகி விட்டதாக குறை கூறி ஷரியத்திற்கு பொருந்தாத வகையில் தண்டனையும் அளித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இமாம் அல்-கஸ்ஸாலி அவர்களையே சாரும். குரான் ஷரீஃப், ஹதீது ஆகியவற்றை வழுவறக் கற்றதோடு மக்களுக்கு புரியும் வகையிலும் உலமாக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் தனது ‘இஹ்யா உலூமித்தீன்’ எனும் சூபியாக்களின் வாழ்க்கையை விளக்கும் கருத்துக் கரூவூலத்தை உலகுக்கு படைத்தார்கள்.

திருக்குரான் ஷரீஃபுக்கும், ஹதீதுகளுக்கும் அவர்கள் கொடுத்த ஆழ்ந்த விளக்கம் சூஃபியிசத்தின் காப்பியங்களாகும்.

இவர்களின் காலம் கி.பி. 1058 லிருந்து 1111 வரை.

இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தான் குத்பு நாயகம் மஹ்பூபே சுபுஹானி மஹ்சூகே ரஹ்மானி ஹஜ்ரத் கௌதுனா (றஹ்) அவர்களும் வாழ்ந்தார்கள்.

இவர்களின் காலம் கி.பி 1078 லிருந்து 1166 வரை.

- தொடரும்..

படிக்க வேண்டியவை:

http://sufibooks.info/Sufism/Memorial_of_Saints_Muslim_Saints_and_Mystics-Attar.pdf 

பார்க்க வேண்டியவை:

2 comments:

புல்லாங்குழல் said...

அருமையாக இருக்கிறது இந்த புத்தக சுட்டியை எனது தளத்திலும் இணைத்து விடுகின்றேன்.

nagoreismail said...

Please Noorul Ameen Bhai.. and thanks for it.