மௌலானா ரூமி (றஹ்) அவர்கள் கண்ணாடியை பற்றி:
You've no idea how hard I've looked for a gift to bring you.
Nothing seemed right.
What's the point of bringing gold to the gold mine, or water to the ocean?
Everything I came up with was like taking spices to the Orient.
Everything I came up with was like taking spices to the Orient.
It's no good giving my heart and my soul because you already have these.
So I brought you a mirror.
Look at yourself. Remember me!
மௌலானா ரூமி (றஹ்)
_____________________________________________________________________
இது என் கண்ணாடி
நிசப்தங்களும்
சப்தங்களும்
இணையும்
திருநாளில்
உன்னை
சந்திக்க
இருப்பதாய்
உறுதியளித்திருக்கிறேன்
நாளைய
சந்திப்பில்
உனக்கு முன்
அழகாய்
தோன்ற
அடிமனதில்
ஆசை முளைத்தது
கடைமூடும் நேரம்
கடைவீதிக்கு சென்றேன்
முகம் பார்க்கும்
கண்ணாடி ஒன்று
தேடினேன்
கண்ணாடிக்கு
எத்தனை
கிராக்கி
பழைய கண்ணாடி
பாதி விலைக்கு
கிடைத்தது
அலங்காரம்
செய்து
கண்ணாடி
முன் நின்றேன்
மதிய நேரத்திலும்
மங்கலாய்
தெரிந்தது.
கொடுத்த
பாதிக்கு
பாதி கூட
காட்டவில்லையே..!
இந்த கண்ணாடி..!!
அழகை
எடுத்து சொல்ல வந்த
கண்ணாடியோ
அழகை
இழந்திருந்தது
ரசம் போன
கண்ணாடியில்
முகத்தின்
நவரசம்
எங்கனம் தெரியும்?
மெனக்கெட்டு
வாங்கி வந்த
கண்ணாடிக்கு
மெருகூட்டும்
வேலை
செவ்வனே நடந்தது
பளிச்சென தெரிந்த
கண்ணாடி
முன்னே
வந்து நின்றேன்
இன்னமும்
கலங்கலாய்
இப்போது
கண்ணாடி
பொய் சொல்லவில்லை
என்று
உள்ளவலையில்
முதன்முதலாய்
மூளை
பதிவெழுதியது
இங்கே குருடனாய்
இருந்தால்
நாளைய சந்திப்பிலும்
குருனாய்
இருப்பேன்
இது என்ன சோதனை!
கண்களில் கோளாறு
என்று
கண் பரிசோதனைக்கு
சென்றேன்
கிட்டப் பார்வையும்
இல்லை
தூரப் பார்வையும்
இல்லை
கண் நீதிபதி
தீர்ப்பை
வெள்ளை காகிதத்தில்
கிறுக்கினார்
மீண்டும்
பளிச்சிடும் கண்ணாடி
எதிரே
தெளிவான கண்களோடு
நான்
புரிந்துவிட்டது..!
மெருகூட்ட வேண்டியது
கண்ணாடியை அல்ல
சரிசெய்ய வேண்டியது
கண்களையும் அல்ல
வெட்கமேயில்லாத
எனது உண்மைகளை
காட்டிய
கண்ணாடிக்கு
நன்றி சொல்லி
புறப்பட்டேன்
முஸ்தபா காட்டிய
வழியில்
இறக்கும் முன்பு
இறப்பெய்திட
என்னையே பளபளப்பாக்க...!
-------------------------------
No comments:
Post a Comment