1
18 வயசு, 28 வயசு, 38 வயசு இந்த மூன்று வயதினருடைய பெண்களுக்கு திருமணம் ஒரே நேரத்தில் நடந்ததாம். திருமணம் நல்லவிதமாக நடந்தேறி தம்பதியர் தனியறைக்குள் விடப்பட்டனர்.
மறுநாள் காலையில்,..
38 வயதுடைய பெண்மணி தாமாகவே கதவை திறந்து கொண்டு வெளியே வந்து விட்டார்.
28 வயதுடைய பெண்மணியுடைய அறையின் கதவை காலையில் தட்டினார்கள். கதவை திறந்து வெட்கத்துடன் வெளியேறினார்.
18 வயதுடைய பெண்மணியுடைய அறையின் கதவு தட்டப்பட்டது. அந்த பதின்ம வயதுடைய பெண்மணி கதவை திறந்தாள்.. "குட் நைட்" என்று சொல்லி விட்டு மீண்டும் அறையை சாத்தி கதவை கொலுக்கு (கொலுக்கு - தாழ்ப்பாள்) போட்டுகிட்டார்.
மேலே கண்டது எப்போதோ ராணி வார இதழில் அல்லியின் பதில்களில் படித்து ரசித்தது.
ஒரு ஜோடி கோர்ட்டுக்கு டைவோர்ஸ் கேட்டு போயிருக்கு, "எங்க ரெண்டு பேருக்கும் டைவோர்ஸ் வேணும்.." என்று
சம்மந்தப்பட்டவர் கேட்டிருக்கிறார், "நீங்க எப்போ கல்யாணம் பண்ணிகிட்டீங்க..?" என்று
அதுக்கு அந்த ஜோடிங்க இப்படி பதில் சொல்லியிருக்கு, "இனிமே தாங்க நாங்க கல்யாணம் பண்ணிக்கவே போறோம், ஆனா எப்படியும் இங்கே வர வேண்டியதிருக்கும், அதான் முன்னாடியே எதுக்கும் ரிசர்வ் பண்ணி வச்சுக்கலாம்னு.." என்று எதையும் பிளேன் பண்ணி செய்கின்ற வடிவேலு டைப் தம்பதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்பல்லாம் பிள்ளை பிறப்பதற்கு முந்தி ஸ்கூல் அட்மிஷன் வாங்க கியுவில் நிற்கிற மாதிரி கல்யாணம் முடியிறதுக்கு முன்னாடியே விவாகரத்து கேட்டு கியுவில இடம் பிடிக்க வந்துடறாங்க.. உலகம் அவ்வளவு அட்வான்ஸா போயிகிட்டு இருக்கு..
"இதெல்லாம் இருக்கட்டும், இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்" என்று
எனது நண்பர்களும்
என் மதத்திற்கு எதிராளிகளுமான,
ஒரு மாதிரி பெண்களின் நலனில் அக்கறையுள்ள கனவான்களும்
எனது "நண்பராளிகளு"மானவர்கள் கேட்கிறார்கள்,
"சொர்க்கத்திலே ஆண்களுக்கு ஹூருல் ஈன் எனப்படும் கண்ணழகிகள் பரிசாக அளிக்கப்படுவது போல் பெண்களுக்கும் ஏதாவது பரிசு கிடைக்குமா.."
- என்கிற ரீதியில்.
இந்த கேள்வியில் அப்படி ஒன்றும் எனக்கு பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை.
அவர்களின் இந்த கேள்வியில் அவர்களாக தீர்மானம் செய்து கொண்ட விஷயங்கள் நிறையவே உள்ளதாக நான் புரிந்து கொண்டதை கீழே குறிப்பிடுகிறேன்..
1. ஹூருல் ஈன் நிச்சயமாக ஒரு பெண் தான்
2. அந்த ஹூருல் ஈன்களும் ஆண்களுக்கு மட்டுமே பரிசாக அளிக்கப்படுவார்கள்
3. அதுவும் அந்த ஹூருல் ஈன்கள் ஆண்கள் தங்களின் காம இச்சையை சொர்க்கத்தில் வைத்து தீர்த்து கொள்வதற்காக தான் (அல்லது முதன்மையாக இந்த காரணத்திற்காகவே) படைக்கப்பட்டுள்ளார்கள்
4. ஹூருல் ஈன்களை ஆண்களுக்கென படைக்கப்பட்டதை போன்று பெண்களுக்கு படைக்காததால் ஆணாதிக்கம் இதில் வெளிப்படையாகவே பல் இழிக்கிறது
இப்படியாக அவர்களின் குற்றச்சாட்டுகளின் அடுக்குகள் உயர்ந்து விண்ணை முட்டுகிறது.
இதெல்லாம் 'சொர்க்கத்துக்கு போறவங்கள்ள.. கவலைப்படணும்.. நமக்கு எதுக்கு பாஸ் அந்த கவலைல்லாம்..' என்று ஒரே பதிலில் நம்மோடு அவர்களையும் நரகத்துகு இழுக்கலாம் என்று பார்த்தால் 'அது எப்படி உங்க அமைதி இல்லத்துக்கு' எல்லாம் எங்களை கூப்பிடுறீங்க என்று கேட்பார்களோ என்று பயமாகவும் இருக்கிறது.
2
மூலத்திலிருந்து மொழி பெயர்த்து வேறொரு மொழியில் சொல்லப்படும் போது அந்த மொழி பெயர்ப்பு மூலத்தில் உள்ள அத்தனை கருத்துக்களையும் உள்ளடக்கி அதே அழகியலோடு எத்தகைய பண்டிதரும் வெளியிட முடியாது என்பது நிரூபணம்.
இதற்கு ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும் என் வேலையிடத்தில் நேர்ந்த அனுபவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.
"Fire Alarm Goes Off.." என்ற ஆங்கில வார்த்தையை ஒருவர் இவ்வாறு மொழி பெயர்த்திருந்தார், "தீ எச்சரிக்கை ஒலி அணைந்து விட்டது.." என்று.
அதாவது அவர் நேரடியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியை பார்த்து அப்படியே மொழி பெயர்த்து இருந்தார். மொத்தத்தில் பார்க்கும் போது பொருள் மாறுபட்டு தவறாகி எதிராகவே ஆகி இருந்தது.
இன்னொருவர் 'house keeping" என்ற வார்த்தையை "வீட்டை வைப்பது" என்று மொழி பெயர்த்திருந்தார்.
இப்படி நேரடியாக மொழி பெயர்த்தால் தவறான கருத்துக்களையே வெளிக் கொண்டு வரும். அது மூலத்தில் என்ன கருத்தை சொல்ல வந்ததோ அதை முழுமையாக புரிந்து கொள்ள உதவவே முடியாது.
மேற்கொண்டு படிக்கும் முன் மேலே சொன்னதை விளங்கி ஒத்துக் கொண்டால் தொடர்ந்து படிப்பது நன்மை பயக்கலாம்.
இந்த உலகத்தில் நன்மை புரிந்தவர்களுக்கு சொர்க்கத்தில் பலவிதமான கௌரவங்கள் அளிக்கப்படுவதில் குறிப்பாக ஹூருல் ஈன் எனப்படுபவர்களும் உண்டு.
ஹூருல் ஈன்களை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை பல மொழிபெயர்ப்பாளர்கள் பலவாறாக மொழிபெயர்த்துள்ளார்கள்.
நாம் இங்கே ஒரு சில ஆங்கில மொழி பெயர்ப்புகளை கவனிப்போம்.. நான் ஒரு மொழி பெயர்ப்பை மட்டும் தனி அடையாளத்துடன் சற்று பெரிதாக வேறு வர்ணத்தில் காட்டியிருக்கிறேன்.
அதை கொஞ்சம் முனைப்புடன் படிக்க வேண்டுகிறேன்.
3
குரான் ஷரீஃபில் ஹூருல் ஈன்கள் பற்றி வரும் வசனங்கள்
--------------------------------------------------------------------
A
And besides them will be chaste women, restraining their glances, with big eyes (of wonder and beauty)
- A.Yusuf Ali
And with them are those of modest gaze, with lovely eyes
- Marmaduke Pickthall
And with them will be chaste females, restraining their glances (desiring none except their husbands), with wide and beautiful eyes
- Dr Hilali & Dr. Mohsin Khan
And with them shall be those who restrain the eyes, having beautiful eyes;
- M.H.Shakir
And with them will be mates of modest gaze, most beautiful of eye
- Asad
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் - 37:48
மேலே குறிப்பிட்டிருக்கும் வசனத்தில் ஆஸாத் அவர்களின் மொழி பெயர்ப்பை கவனித்தால் ஹூருல் ஈனை அவர் பெண் பாலோடு ஒப்பிடவே இல்லை.
--------------------------------------------------------
B
And beside them will be chaste women restraining their glances, (companions) of equal age
- A.Yusuf Ali
And with them are those of modest gaze, companions
- Marmaduke Pickthall
And beside them will be chaste females (virgins) restraining their glances only for their husbands, (and) of equal ages
- Dr Hilali & Dr. Mohsin Khan
And with them shall be those restraining their eyes, equals in age
- M.H.Shakir
Having beside them well-matched mates of modest-gaze
- Asad
ஸூரத்து ஸாத்
வசனம் - 38:52
மேலே வரும் வசனத்தில் அவர்களுடன் (அவர்கள் என்றால் ஆண் பாலும் அல்ல பெண் பாலும் அல்ல) மிகவும் பொருத்தமான - வெல் மேச்ட் - ஹூருல் ஈன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
--------------------------------------------------------------------------
C
In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-
- A.Yusuf Ali
Therein are those of modest gaze, whom neither man nor jinni will have touched before them.
- Marmaduke Pickthall
Wherein both will be those (maidens) restraining their glances upon their husbands, whom no man or jinn yatmithhunna (has opened their hymens with sexual intercourse) before them.
- Dr Hilali & Dr. Mohsin Khan
In them will be (Maidens), chaste, restraining their glances, whom no man or Jinn before them has touched;-
- M.H.Shakir
In these (gardens) will be mates of modest gaze, whom neither man nor invisibe being will have touched ere then
- Asad
ஸூரத்து ரஹ்மான்
வசனம் - 55:56
மேலே வரும் வசனத்தில் ஹூருல் ஈன்களை புதிதாக படைக்கப்பட்டவர்களைப் போல் யாரும் தொடாத புனிதமானவர்களாக சொல்கிறது
---------------------------------------------------------------------------------
4
ஆக, இது வரை குரான் ஷரீஃப் வசனத்தை கவனித்ததிலிருந்து ஹூருல் ஈன் எனப்படுபவர்கள் யாரெனில்,
Mates - தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்
Modest Gaze - அடக்கமான பார்வையுடையவர்கள்
Most Beautiful of Eye - அழகிய கண்களையுடைவர்கள்
Well-matched - மிகவும் பொருத்தமான துணையாளர்கள்
Neither man nor invisible being will have touched ere then - களங்கமற்றவர்கள்
ஆக மேற்கூறிய குணாதிசியங்களை உடைய ஹூருல் ஈனானவர்கள் சொர்க்கவாசிகளுக்கு (ஆண் பெண் இருபாலரையும் குறிக்கும்) துணையாக இருப்பார்கள் என்பதை விளங்க முடிகிறது.
துணை என்றால் நமக்கு நினைவிற்கு வருவது 'பாலியல் உறவு' மட்டும் தான். ஆனால் அந்த உறவுக்காக மட்டுமே துணையாக ஏற்றுக் கொள்பவர்கள் சனவரியில் காதலித்ததை போல் டிசம்பரில் காதலிப்பது இல்லை.
ஆனால் ஹூருல் ஈன் எனப்படும் இந்த துணையானது பாலியல் ஈர்ப்பு சம்மந்தப்பட்ட இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக அல்ல..
அவர்கள் சொர்க்கவாசிகளிடத்தில் ஒரு கருத்து வேறுபாடுகளும் தோன்றாத மிகவும் பொருத்தமான (Well - Matched) ஒரு துணை (Companion).
5
குரான் ஷரீஃபில் ஹூருல் ஈன்கள் ஒரு சிறந்த துணை என்பதை மெய்ப்பிக்கும் வசனங்கள்..
-------------------------------------------------------------------------------------------------
Companions:
A
So; and We shall wed them to maidens with beautiful, big, and lustrous eyes
- A.Yusuf Ali
Even so (it will be). And We shall wed them unto fair ones with wide, lovely eyes.
- Marmaduke Pickthall
So (it will be), and We shall marry them to Houris (female fair ones) with wide, lovely eyes.
- Dr Hilali & Dr. Mohsin Khan
Thus (shall it be), and We will wed them with Houris pure, beautiful ones.
- M.H.Shakir
Thus shall it be. And we shall pair them with companions pure, most beautiful of eye
- Asad
ஸூரத்துத் துகான்
வசனம் - 44:54
----------------------------------------------------------------
B
They will recline (with ease) upon couches arranged in ranks; and We shall wed them to Maidens, with beautiful big and lustrous eyes.
- A.Yusuf Ali
Reclining on ranged couches. And we wed them unto fair ones with wide, lovely eyes.
- Marmaduke Pickthall
They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Houris (female, fair ones) with wide lovely eyes.
- Dr Hilali & Dr. Mohsin Khan
Reclining on thrones set in lines, and We will unite them to large-eyed beautiful ones.
- M.H.Shakir
Reclining on couches (of happiness) ranged in rows!" And (in that paradise) We shall mate them with companions pure, most beautiful of eye
- Asad
ஸூரத்துத் தூர்
வசனம் - 52:20
----------------------------------------------------------------
C
70:In them will be fair (Maidens), good, beautiful;-
72: Maidens restrained (as to their glances), in (goodly) pavilions;-
- A.Yusuf Ali
70:Wherein (are found) the good and beautiful -
72:Fair ones, close-guarded in pavilions
-- Marmaduke Pickthall
70:Therein (gardens) will be fair (wives) good and beautiful;
72:Houris (beautiful, fair females) restrained in pavilions;
- Dr Hilali & Dr. Mohsin Khan
70:In them will be fair (Maidens), good, beautiful;-
72:Maidens restrained (as to their glances), in (goodly) pavilions;-
- M.H.Shakir
70: In these (gardens) will be (all) things most excellent and beautiful
72: (There the blest will live with their) companions pure and modest, in pavilions (splendid) -
- Asad
ஸூரத்துர் ரஹ்மான்
வசனம் - 55:70, 72
-------------------------------------------------------------------
D
And (there will be) Companions with beautiful, big, and lustrous eyes,-
- A.Yusuf Ali
And (there are) fair ones with wide, lovely eyes,
- Marmaduke Pickthall
And (there will be) Houris (fair females) with wide, lovely eyes (as wives for the pious),
- Dr Hilali & Dr. Mohsin Khan
And (there will be) Companions with beautiful, big, and lustrous eyes,-
- M.H.Shakir
And (with them will be their) companions pure, most beautiful of eye,
- Asad
ஸூரத்துல் வாகிஆ
வசனம் - 56:22
---------------------------------------------------------------------------
E
35:We have created them of special creation.
36:And made them virgin - pure (and undefiled), -
37:Full of love (for their mates), equal in age,-
38: For the Companions of the Right Hand.
- A.Yusuf Ali
35:Lo! We have created them a (new) creation
36: And made them virgins,- Marmaduke Pickthall
37:Lovers, friends,
38: For those on the right hand;
- Marmaduke Pickthall
35:Verily, We have created them (maidens) of special creation.
36:And made them virgins,
37:Loving (their husbands only), equal in age.
38: For those on the Right Hand.
- Dr Hilali & Dr. Mohsin Khan
35:We have created them of special creation.
36:And made them virgin - pure (and undefiled),
37:Full of love (for their mates), equal in age,-
38:For the Companions of the Right Hand.
- M.H.Shakir
35:For, behold, We shall have brought them into being in a life renewed,
36:having resurrected them as virgins,
37: full of love, well-matched
38: with those who have attained to righteousness:
- Asad
ஸூரத்துல் வாகிஆ
வசனம் - 56:35-38
----------------------------------------------------------------------------
F
Madians of equal age;
- A.Yusuf Ali
And maidens for companions,
- Marmaduke Pickthall
And young full-breasted (mature) maidens of equal age;
- Dr Hilali & Dr. Mohsin Khan
And those showing freshness of youth, equals in age,
- M.H.Shakir
And splendid companions well-matched
- Asad
ஸூரத்துந் நபா
வசனம் - 78:33
----------------------------------------------------------------------------
6
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகத்தில் நன்மை புரிந்தவர்கள் சொர்க்கத்தில் நுழையும் போது குடும்பம் குடும்பமாக வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக தனது வாழ்க்கை துணையோடு நுழைவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
சொர்க்கத்தில் குடும்பத்தோடு ஒன்று சேருவதாக குரான் ஷரீஃபில் வரும் வசனம்:
Gardens of perpetual bliss: they shall enter there, as well as the righteous among their fathers, their spouses, and their offspring: and angels shall enter unto them from every gate (with the salutation):
- A.Yusuf Ali
Gardens of Eden which they enter, along with all who do right of their fathers and their helpmeets and their seed. The angels enter unto them from every gate,
- Marmaduke Pickthall
'Adn (Eden) Paradise (everlasting Gardens), which they shall enter and (also) those who acted righteously from among their fathers, and their wives, and their offspring. And angels shall enter unto them from every gate (saying):
- Dr Hilali & Dr. Mohsin Khan
The gardens of perpetual abode which they will enter along with those who do good from among their parents and their spouses and their offspring; and the angels will enter in upon them from every gate:
- M.H.Shakir
Gardens of perpetual bliss, which they shall enter together with the righteous from among their parents, their spouses, and their offspring; and the angels will come unto them from every gate (and will say);
- Asad
ஸூரத்துர் ரஃது
வசனம் - 13:23
--------------------------------------------------------------------------------------
7
இறுதியாக, நான் அறிந்தது தெரிந்ததிலிருந்து சொல்ல வருவது இது தான்.
1. சொர்க்கத்தில் நன்மை புரிந்தவர்கள் தங்கள் மனைவி மக்களோடு இருப்பார்கள்
2. அவர்களுக்கு சொர்க்கத்தில் வழங்கப்படும் பரிசுகளில் பேச்சு துணைக்கென எந்த கருத்திலும் மாறுபடாத நல்ல துணையும் உண்டு.
3. அந்த துணை ஆணும் அல்ல பெண்ணும் அல்ல
4. அந்த துணை ஆணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அந்த குடும்பத்திற்கே என்று கூட கொள்ளலாம்
5. அதிலும் நிச்சயமாக செக்ஸ் உறவுக்காக அல்ல.. (செக்ஸ் என்பது பிள்ளை பெறுவதற்காக மட்டுமே உள்ளது.. அது வியாபாரப் பொருளோ அல்லது நினைத்த நேரத்தில் தீர்த்துக் கொள்வதற்காக செயலாக்கப்படும் ஒரு அடிமைப் பொருளோ அல்ல)
6. ஹூர் என்ற வார்த்தை பெண்ணை மட்டும் தான் குறிக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை உதாரணமாக கத்ரினா புயல், ரீட்டா புயல் என்கிறீர்கள் கங்கா, யமுனா, சரஸ்வதி என்றும் சொல்கிறீர்கள் - இதற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு உள்ளதோ அந்த அளவுக்கு மட்டுமே ஹூருல் ஈனுக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது.
7. ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப நீதியான முறையில் வாக்களிக்கப்பட்டுள்ள இறை தீர்ப்பு நிச்சயம் வழங்கப்படும்
8. இஸ்லாத்தில் சமத்துவமே கருப்பொருளின் மையமாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------
Hasbi Rabbi jallaAllah Ma fi qalbi ghayru'Llah - Lord is my Sole Sufficiency Glorious is Allah Nothing is in my heart except the Divine. இன்னும் எவரும் நாட முடியாத, அடைய முடியாத இருவில் (போன்ற புருவ) மத்தியின் இடைவெளியளவு (இறைவனை) நெருங்கும் அந்தஸ்த்தைப் பெறும் வரை நீங்கள் ஏறிக் கொண்டே போனீர்கள். - கஸீதத்துல் புர்தாஹ் (பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்ப்பா)
Tuesday, June 22, 2010
Saturday, June 19, 2010
நம்கீன் (Salty) - குல்ஜார் சாபின் பழைய இந்தி பட விமர்சனம்
இந்த படம் 1982ல் தூர்தர்ஷனில் வெளியானது. படத்தை பார்த்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட படத்தை வாங்கி வெளியிட முடியாது என மறுத்து விட்டார்களாம். இந்த விநியோகஸ்தர்களே இப்படி தான், 'ரொம்ப நல்ல படத்தையும் ரொம்ப மோசமான படத்தையும்' வாங்கவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை இந்த படம் முதல் காரணத்தினால் தான் விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என்பதேயாகும். இந்த படத்துக்கு 'உப்பின் சுவை' என்று பெயர். கண்ணீரின் சுவை என்றும் சொல்லலாம்.. வாழ்வின் சுவை என்றும் கொள்ளலாம்.
உப்பில்லாத சோறு குப்பையிலே என்பார்கள் இந்த படத்தின் பெயரிலேயே 'உப்பி'ருந்ததாலும் தியேட்டரில் நிறைய குப்பை படங்கள் ஓடுவதால் இந்த படமும் தியேட்டர்களுக்கு போய் குப்பையோடு குப்பையாக போய் விடக்கூடாது என்று தான் தூர்தர்ஷன் வாங்கி ஒளிப்பரப்பியதோ என்னவோ.
'மூன்றாம் பிறை' படத்தை இந்தியில் 'சத்மா' என்று எடுத்தார்கள். தமிழில் 'பூங்காற்று புதிதானது..' என தொடங்கும் பாடல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கலாம். அதே பாடல் இந்தியில் வரும் போது இசைஞானி இளையராஜா அவர்கள் 'பூங்காற்று..' டியுனை பயன்படுத்தாமல் 'தம்பிக்கு எந்த ஊரு' படத்திற்கு இவர்கள் இசையமைத்த 'என் வாழ்விலே வரும் அன்பே வா...' பாடலின் டியுனை பயன்படுத்தியிருப்பார்.
இப்போது அந்த டியுனுக்கு குல்ஜார் சாப் பாடல் வரிகள் தர வேண்டும்.
'ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஹம் னே பி தெரே ஹர் இக் கம் கோ கலே சே லகாயா
ஹெய் னா'
- என்று எழுதியிருப்பார்.
இதன் அர்த்தம்..
ஓ.. வாழ்க்கையே.. எங்களை அணைத்துக் (அரவணைத்து ஏற்றுக்) கொள்..
நாங்கள் நீ தரும் அனைத்து சோகங்களையும் அணைத்து (ஏற்றுக்) கொள்வதை போல் (அதே போல் வாழ்க்கையே எங்களை அணைத்துக் கொள்)
வாழ்க்கை தரும் சோகங்கள் துயரங்களின் உடல் ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடாக வருவது தூய அழுகை தான். அந்த அழுகையின் சுவை தான் வாழ்வின் சுவை. அது தான் நம்கீன். (Namkeen - A Taste of Life)
3 அல்லது 4 பெண்கள் கதாநாயகிகளாக கிடைத்தால் அவர்களை எவ்வளவு துகிலுறிக்க முடியுமோ அவ்வளவு தூரம் துகிலுறித்து ஆடி பாடி கட்டிபிடிக்க விடுவார்கள் நம் திரைப்பட மேமக்கள். அல்லது அந்த மூன்று பெயரையுமே ஒரு ஆணை காதலிக்க வைத்து அவர்களின் தலையோடு நம்முடைய தலையையும் சுற்ற வைப்பார்கள்.
இந்த படத்திலும் 4 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இவர்களை எவ்வளவு தூரம் நடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடிக்க வைத்து அழ வைத்து சிரிக்க வைத்து வாழ சொல்லி மனித உணர்வுகளை துகிலுரித்து பதிவு செய்திருக்கிறார் குல்ஜார் சாப் அவர்கள். Hats Off Sir. இதிலும் காதலிருக்கிறது. நடுத்தெரு காதல் அல்ல.. நல்லதொரு காதல்..
மணிரத்னம் அவர்களின் படங்களான அக்னி நட்சத்திரம், அஞ்சலி படங்களை பார்த்தால் மன்னிக்கவும் பார்க்கவே முடியாது.. அந்த இருட்டில் எப்படி பார்க்க முடியும். அந்த லைட்டிங் எனக்கு புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை.
இந்த படத்திலும் முழுக்க முழுக்க இருட்டு தான். பணம் கொழிக்கும் ஹோட்டலின் உள்ளே ரொமான்சுக்காக இருக்கின்ற விளக்கை அணைத்து இருட்டையே செயற்கையாக ஆக்கி இருப்பார்களே அந்த வகையான இருட்டல்ல. மின்சார இணைப்பே இல்லாத அரிக்கன் விளக்கை மட்டுமே நம்பி வாழும் வர்க்கத்தினரின் இல்லத்து இருட்டு. இந்த இருட்டு எனக்கு புரிவதோடு பிடிக்கவும் செய்தது.
மேலே கண்ட காட்சியில் இறுதியாக அந்த பெண், 'மின்சார இணைப்பு இல்லா விட்டால் லைட் எரியாது' என்றும் 'பல வருடங்களாக இப்படித் தான்..' என்று கூறியதும்.. வேறு எதையும் பார்க்காதீர்கள் சஞ்சீவ் குமார் அவர்களின் நடிப்பை தவிர. சில நொடிகளில் எத்தனை பாவனைகள்.. 'அப்ப இவ்வளவு நேரம்.. நான்..' என்று அவர் கேட்டு அவர் படும் பாடு..
சஞ்சீவ் குமார் கெருலாலாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் பழையதாகி விட்டதால் அவர் இந்த படத்தில் பிறந்து இருக்கிறார் என்றே சொல்ல நினைக்கிறேன்.
குல்ஜார் ரொம்ப ஸ்டிரிக்டாம். எல்லோரும் நேரத்துக்கு வந்து விட வேண்டும் என்று கறாராக இருப்பாராம். ஒரு முறை நான்கு பெரிய நடிகைகளும் (வஹிதா ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ஷபனா ஆஜ்மி, கிரன் விராலே) எல்லோரும் நேரத்துக்கு வந்தும் சஞ்சீவ் குமார் சரியான நேரத்துக்கு வராததால் அவரை நறுக்குன்னு கேள்வி கேட்க வேண்டும் என்று அந்த 4 நடிகைகளும் குல்ஜார் சாபிடம் கோபப்பட்டு அவரின் வருகைக்காக காத்திருந்தார்களாம் .
அப்போது சஞ்சீவ் வந்தாராம். விறுவிறு என்று காஸ்டியுமுக்கு மாறினாராம். காட்சி விளக்கப்பட்டதாம். ஒரே ஷாட். ஒக்கே ஆனது. காட்சி முடிந்ததும் சஞ்சீவ் அந்த நால்வர் அணியும் தன்னையே பிரம்மிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை கண்டாராம். அவர்கள் தங்களுக்குள் இருந்த கோபத்தையும் மறந்து சஞ்சீவை பாராட்டினார்களாம். ஏனெனில் படத்தில் வரும் மிக முக்கியமான கஷ்டமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய காட்சியாம் அது. ஒரே டேக்கில் அற்புதமாக ஸ்பாண்டேனியசாக நடித்து முடித்தாராம். அது தான் சஞ்சீவ் குமார்.
கெருலால் ஒப்பந்தத்தின் பேரில் வேலை செய்யும் லாரி டிரைவர். ஹிமாச்சல பிரதேசத்தில் நாட்டுப்புறத்தில் மழைவாழ் பகுதியில் குலு பள்ளத்தாக்கின் அருகில் உள்ள ஒரு ஊரில் நடக்கும் கட்டுமான பணி வேலை நிமித்தமாக சுமார் 4 மாதங்களாக அந்த ஊரில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் கெருலாலுக்கு. அவர் தங்குவதற்கு வீடு காட்ட அவரை தனிராம் என்பவர் அழைத்து செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த வீடு ஒரு வயதான தாயாருக்குடையது, அவருக்கு மூன்று மகள்கள் என்று சொல்லிக் கொண்டே வருவார் தனிராம்.
ஒரு சிறுவன் சைக்கிளில் கெருலாலை மோதி விடுவான். அவன் விலகி சென்றதும் கெருலால், "நான் மொதல்லேயே பார்த்திருக்கணும்.." என்பார்
அதற்கு தனிராம், "பார்த்திருந்தா.. சைக்கிள்ள மோதியிருக்க மாட்டீங்க.." என்பார்
உடனே, 'நான் சைக்கிளை சொல்லலை.. வீட்டை சொல்றேன்..' என்பார் பெட்டி படுக்கையுடன் தங்குவதற்கே வந்து விட்ட கெருலால்.
மித்து (ஷபனா ஆஜ்மி) என்பவள் வீட்டில் நிற்பதை பார்த்து, 'இது யாரு?' என்று கெருலால் வினவுகிறார்.
மித்துவை தான் முதன் முதலாக கெருலால் பார்த்திருப்பார். ஆனால் மித்து அவரின் தாயாருக்கு இரண்டாவது மகள்.
'மித்து.. வாடகைக்கு ஆள் வந்திருக்குன்னு சொல்லி அம்மாவ கூட்டிட்டு வா.' என்று அனுப்பி விடுகிறார் தனிராம்.
அப்படியே வந்து கொண்டிருக்கும் போது மரத்திலிருந்து தொப்பென்று குதிக்கிறாள் சிங்கி. அதற்கு தனிரம் சொல்கிறார், 'பழுத்த மாதுளம்பழம் கீழே விழுற மாதிரி விழுறியே..' என்று..
அதற்கு சிங்கி சொல்வாள், 'மாதுளை இல்லை.. மாங்காய்..' என்று மரத்திலிருந்த பறித்த மாங்காயை காட்டுகிறாள்.
இந்த சிங்கியை தான் கெருலால் இரண்டாவதாக சந்திப்பார். ஆனால் சிங்கி அவரின் தாயாருக்கு மூன்றாவது குழந்தை.
தனிராம் சிங்கியை காட்டி, 'இது தான் மூணாவது..' என்பார்
கெருலால், 'ஆனா.. இது தானே இரண்டாவது..' என்கிறார்
'உண்மையிலேயே இரண்டாவது தான் மூணாவது..' இது தனிராம்
'அப்ப முதல்ல பார்த்தது..' இது கெருலால்
'அது இரண்டாவது..' - தனிராம்
'அப்ப மூணாவது..' - கெருலால்
'நம்ம இப்ப தானே மூணாவத பார்த்தோம்..' - தெளிவாக தனிராம்
'ஆனா இது இரண்டாவது தானே..' குழப்பத்துடன் கெருலால்
'இத பாருங்க..' என்று விளக்க ஆரம்பிப்பதற்குள் அந்த வீட்டு ஓனரும் மூன்று பிள்ளைகளுக்கு தாயாருமான (வஹிதா ரஹ்மான்) வருகிறார்.
வயதான மறதியுடையவரான காசு விஷயத்தில் கறாரான இவர் கெருலாலை பார்த்து, 'பாத்தா பிராடு மாதிரில்ல இருக்கு.. ஒழுங்கா வாடகை கொடுத்துடுவீயா.. நான் யாரோட காசையும் நான் வச்சுக்க மாட்டேன்.. யாரும் என்னோட காசயும் வச்சிகிட்டிருக்க விட மாட்டேன்.. நாங்கள்லாம்.. இந்த காச நம்பி தான் அரை வயிற நிரப்பிக்கிறோம்.. அத போய் ஏமாத்திடாதீங்க ' என்று சொல்கிறார். அட்வான்சாக 30 ரூபாய் கேட்டு பெறுகிறார். 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது
அதை தொடர்ந்து அவர் தங்குவதும் வீட்டில் மின்சார இணைப்பு இல்லை என்று தெரிய வருவதும், தூங்கி நடுஇரவில் எழுந்து பசி வந்து சாப்பாடு கிடைக்காமல் மூன்று பெண்களின் கிண்டலுக்கு ஆளாகி காலையில் எழுந்து தனிராமிடம் சென்று, '30 ரூவாக்கு 40 ரூவா கொடுத்தேன்.. பாக்கி 10 ரூவாய் வரலைன்னாலும் பராவியில்லை.. இனி இந்த வீடு சரிபட்டு வராது - ' என்று கோபப்படுகிறார். தனிராம் சமாதானப்படுத்துகிறார்.
கெருலால் அறைக்கு வெளிச்சத்துக்கு அரிக்கன் விளக்கு, தண்ணி குடிக்க பானை, குளிக்க பக்கெட் எல்லாம் வாங்கி வந்து ஒவ்வொன்றுக்கும் விலை போட்டு வைக்க சொல்கிறார் மூத்தவரான நிம்க்கி (ஷார்மிளா தாகூர்).
(வஹிதா ரஹ்மானும் ஷார்மிளா தாகூரும் ஒரே கால கட்ட நடிகை ஆனாலும் வஹிதா ஷார்மிளாவிற்கு தாயாராக நடிக்க சம்மதித்து விட்டர். முதலில் ஷார்மிளா ரோலுக்கு ஜெமினி கணேசன் அவர்களின் மகள் ரேகாவை தான் குல்ஜார் நடிக்க வைக்க நினைத்திருந்தார்.)
நைட் வேலை முடிந்து வருகிறார், கையில் அரிக்கன் விளக்கு, பானை, பக்கெட் எல்லாம் வாங்கி கொண்டு. அறைக்கு போய் பார்த்தா வாங்கிட்டு வந்த அத்தனையும் ஏற்கனவே வைத்து விலை வேற போட்டு இருக்கு.
எல்லாம் சேர்த்து 9 ரூவாய் 90 காசு என்று போட்டிருக்கு.. 'பாக்கி 10 ரூவாய் அதுல இப்ப மிச்சம் 10 பைசா' என்று வேதனையோடு புலம்பி மேலும் பில்லில் எழுதியிருப்பதை படிக்கிறார், 'அரிக்கன் விளக்கில் எண்ணெய் இப்போது ஃபுல்லாக இருக்கிறது.. தீர்ந்து போனதும்.. காசு கொடுத்து வாங்கி ஊற்றி கொள்ளவும்..' என்று.. பில்லை கசக்கி கீழே எறிகிறார்.
கெருலால் ஒரு முறை லாரியில் செல்லும் போது கோழி திடீரென்று பறந்து வந்து வண்டிக்கு முன்னால் வந்து அடிபடுகிறது. கெருலால் வண்டியை விட்டு இறங்கி பின்பக்க கோழியை தேடி டயரை பார்க்கிறார். அவருக்கு நேர் எதிர்பக்கம் ஒரு சிறுவன் நின்று கொண்டு, 'நீ கொன்னுட்டே..' என்கிறான்.
'அடப்பாவி.. என் கோழியை கொன்னுட்டீயா.?' - எனும் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார் கெருலால்.
இரு வயதான பெண்மணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர், 'விட்டாக்கா என் மேலேயே லாரிய ஏத்தி கொன்னுடுவே போலிருக்கே..' என்கிறார்.
கெருலால் இன்னொருவரை பார்த்து, 'இவங்கள்ட கோழியா..?' என்கிறார்
'அங்கே என்னா கேள்வி வேண்டி கெடக்குது.. எதாயிருந்தாலும் என்கிட்டே கேளு' - கோழியை பறிகொடுத்தவர்
'இது இவங்கள்ட கோழி தான்..' - அந்த இன்னொருவர்
கெருலால், 'சாச்சி, நான் என்னா செய்வேன்.. அதுவா வந்து டயர்ல மாட்டிகிச்சு.. நானா வேணும்னு அது மேல ஏத்தல..'
'அப்ப.. நான் வேணும்னு அது மேல ஏத்திட்டேனா..' - அந்த சாச்சி
கெருலால் கோபமாக, 'கோழி உங்கள்டன்னா.. வூட்லேயே வச்சு வளர்க்க வேண்டியது தானே.. எதுக்கு வெளில ரோட்டுல லாரிலாம் போற எடத்துல வந்து மேய வுடுறீங்க..'
சாச்சி, 'என்ன ஒளற்றே.. பாரு.. இந்த காடி காரன்..' (ஏதோ சொல்ல வந்த விநாடி)
கெருலால் பையிலிருந்து காசை எடுத்து, 'சாச்சி, இந்தாங்க.. 5 ரூவா.. போய் ரெண்டு கோழி வாங்கிக்கிங்க..' பிரச்சினையை முடிக்க பார்க்கிறார்.
சாச்சி, 'ஹூம்.. 5 ரூவா.. பெரிய காச கொடுத்துட்டாரு.. எனக்கு 25 ரூவா வேணும்..(என்று பக்கத்தில் நிற்கும் அந்த இன்னொருவரை பார்த்து) 5 ரூவா கொடுத்து சரிகட்ட பார்க்குறான்..'
அந்த இன்னொருவர், 'அவங்க சொல்றாங்க.. 5 ரூவா கட்டாதுன்னு..'
கெருலால், '25 ரூவாயா.. என்னா சொல்றீங்க.. அந்த காசுக்கு நல்ல ஆடே வாங்கிடலாமே..'
சாச்சி, 'அப்படி வாங்குற ஆடு.. எனக்கு முட்டை போடுமா..?'
கெருலால் விடாமல், 'அப்படின்னா செத்து போன அந்த கோழி மட்டும் பால் கறக்குமா..?'
- இப்படி நிலைமை மோசமாகி கொண்டிருக்க நல்ல வேலையாக எதிர்பார்த்தது போல் நிம்க்கியும் சிங்கியும் வருகிறார்கள்.
நிம்க்கி, 'என்னாச்சு?' என்று கேட்கிறார்
'இவங்கள பாருங்க.. இந்த ரோடு.. லாரி போறதுக்காக உள்ளது.. கோழிகள் போறதுக்காக இல்ல.. நானா வேணும்னு மோதலை.. என் டயர்ல அதுவா திடீர்னு வந்து விழுந்திடுச்சி.. 5 ரூவா கொடுக்கிறேன்.. 25 ரூவா கேக்குறாங்க..' - என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்ல..
நிம்க்கி ஆச்சர்யத்துடன், 'என்னாது.. 25 ரூவாயா?.. என்னா சாச்சி.. கோழி 25 ரூவாயா? 2.5 ரூவாய்க்கு கிடைக்குமே - அதான் 5 ரூவா தர்ராறே..' என்று முடிக்கும் முன்
சாச்சி, 'அது நல்லா முட்டை போடும்..'
சிங்கி, 'அது என்னா பவுன்லயா முட்டை போடும்? வேணும்டா 5 ரூவாய வாங்கிக்குங்க.. இல்லைன்னா உங்க பாட்டுக்கு போய்ட்டே இருங்க..'
சாச்சி, 'சிங்கி.. நீ இதுல வந்து வுழாதே.. பேசாம மூடிகிட்டு போ.. வந்துட்டா பெருசா.. வக்காலத்து வாங்க.. அவன் என்ன ஒன் புருஷனா..?'
சிங்கி, 'ஆமா.. அவன் என் புருஷன் தான்' என்று கெருலால் கையிலிருந்த காசை பிடுங்கி சாச்சியிடம் திரும்பி, 'இந்த 5 ரூவாய வச்சுக்க.. இல்லாட்டி போ..' என்று சொல்ல
சாச்சி, 'நிம்க்கி, இந்த சிங்கியை அடக்கி வை. இல்லைன்னா நல்லா இருக்காது..' என்று சொல்ல
நிம்க்கி, 'அவ கரெக்டா தான் சொல்றா சாச்சி, அவர் வெளியூர் காரரு.. அவர்கிட்டே போய் நம்ம இப்படி நடந்துக்கலாமா.. உண்மையிலேயே நம்ம எதுவுமே வாங்கிக்க கூடாது.. '
சாச்சி கடுப்பாகி, 'எதுவுமே.. வாங்க கூடாது.. இவ சொல்றா?.. 5 ரூவா கொடு' என்று சிங்கி கையிலிருந்த காசை வெடுக்கென்று பிடுங்கி கொள்ள சிங்கி விறுவிறுவென்று போய் டயர் கீழே உள்ள கோழியை எடுத்து கொள்கிறாள்.
சாச்சி, 'அதை ஏன் எடுக்குறே?' என்று கேக்க
சிங்கி, 'உங்களுக்கு கோழியும் வேணும்.. காசும் வேணுமோ?' என்று சொல்ல
கெருலால், 'அதை கொடுத்துடு.. அதை வச்சு நீ என்ன செய்ய போறே?'
நிம்க்கி, 'வேணாம்.. விட்டுடு.. நீ வேற எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்திகிட்டு..'
சாச்சி 'இங்கே கொடு' என்று கேக்க 'நான் தர மாட்டேன்' என்று எடுத்து கொண்டு ஓட தயாராக..
கெருலால், 'அதை கொடுத்துடேன்.. எறந்து போனதை யாராவது சாப்பிடுவாங்களா?'
'பின்னே உயிரோடு இருக்குறதயா சாப்பிட்வாங்க..' என்று சொல்லி விட்டு ஓரே ஓட்டமாக ஓடி விடுகிறாள் சிங்கி.
சாச்சி கடுஞ் சினத்துடன், 'நான் ஒனக்கு சாபம் கொடுக்குறேன்.. இந்தா வாங்கிக்க.. நீ அதை சாப்டுட்டு காக்கா மாதிரி கத்த தான் போறே..' என்று -
அங்கிருந்து காட்சியிலிருந்து விடை பெற்று வந்ததும்..
நிம்க்கி வாசலில் இருக்கும் கிணத்தடியில் குளித்து கொண்டிருக்கும் போது லாரி வருவது தெரிந்து சிங்கி ஓடி போய் ஒரு துணியை எடுத்துட்டு வந்து கெருலால் வரும் பாதையில் அவருக்கு தனது அக்காள் குளிப்பது தெரியாத படி மறைக்கிறாள்.
'நீங்க மேலே போங்க.. நான் சாப்பாடு கொண்டுட்டு வர்ரேன்..' என்று சொல்ல
'நான் சாப்டு விட்டேன்..' என்று சொல்கிறார் கெருலால்
சிங்கி, 'அப்புறம் ஏன் அந்த கோழியை கொண்டீங்களாம்?' என்று கேக்கிறாள்
கெருலால் ஆச்சர்யமாக, 'அப்படீன்னா.. அந்த கோழிய நீ சாப்ட்டீயா..?' என்று ஆச்சர்யத்துடன் கேக்க..
அவள் சாதாரணமாக, 'நான் மட்டும் இல்லை.. இங்கே எல்லோருமே சாப்பிட்டோம்' என்கிறாள்.
அந்த சாச்சி சொன்னது ஞாபகமிருக்கா, யாரு அந்த கோழிய சாப்பிடுறாங்களோ அவங்க நாளைக்கு காத்தால காக்கா மாதிரி கத்துவாங்களாம்..' என்று அனைவரும் சிரிக்க சிரிக்க சொல்ல.
கெருலால் தொடர்ந்து, 'நான் இன்னைக்கு காலைல வேலைக்கு லேட்டா போயிட்டேன்.. நீ ஒண்ணு செய்.. நாளைக்கு காலைல கொஞ்சம் வெள்ளனமே கத்திடு..' என்று சொல்ல அந்த இடத்தில் சிரிப்பு மழையாய் பெய்கிறது..
ஒரு முறை கெருலாலுக்கு வந்த சாப்பாட்டு கேரியரை மித்துவும் சிங்கியும் திறந்து பார்த்து ருசித்தும் பார்க்கிறார்கள். இவர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு சாப்பாட்டு கேரியரை திறந்து பார்க்கும் போது ஒன்றுமே இல்லை - காலியான பாத்திரம் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு கனம், 'இதையும் எடுத்து சாப்பிட்டுடாங்களா..?' என்று தவறாக நினைக்கும் போதே நிம்க்கி சாப்பாட்டை சூடு காட்டி கொண்டு வந்து தருகிறார்கள், உடனே அதை கண்டு 'தவறாக நினைத்து விட்டோமே' என்று வருந்தியவுடன், நிம்க்கியிடம், 'இனிமேல் சிங்கியை வெளியே எல்லாம் அனுப்ப வேண்டாம்..' என்று சொல்லும் போது
நிம்க்கி கேட்கிறாள், 'இன்னைக்கு யாரையோ கோபப்பட்டு அடிச்சிட்டீங்களாமே..' என்று கேட்கிறாள்..
'ஆமாம்.. எப்படி உங்களுக்கு தெரியும்..?' என்று ஆச்சர்யப்பட
'அவங்க சிங்கியை பத்தி தவறா பேசினாங்களாமே.. நிஜமாவா..' என்று வினவ
'அது எப்படி உங்களுக்கு..' என்று ஆச்சர்யம் மேலிட 'அவங்கள்ளாம்.. ரொம்ப கீழ்தரமானவங்க.. இனிமே எதாவது வேலையிருந்தா நீங்க போகலாமே..' எ
'முன்னாடில்லாம் நான் தான் போயிட்டு இருந்தேன்........' என்று நிறுத்தி விட்டு, 'பேசுறவங்க யாரா இருந்தாலும் தான் பேசுவாங்க..' என்கிறாள்.
'அப்ப எப்படி?.. ஒண்ணு செய்ங்க.. இனிமே எதாவது வாங்கணும் கொடுக்கணும்னா எங்கிட்டே சொல்லுங்க.. நான் செய்றேன்..' என்கிறார்.
அடுத்த நாள் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்கும் ஒண்ணும் இல்லை.. நாங்களே செஞ்சுக்குறோம்.. நீங்க போன பிறகு நாங்க தானே செய்ய வேண்டி இருக்கும்.. நாங்க இப்படியே வாழ பழகியாச்சு..' என்று சொல்கிறாள்
அதை தொடர்ந்து சிங்கி வெளியே எண்ணெய் வாங்க செல்லும் போது சில பொறுக்கி பொடிசுகள், 'அந்த டிரைவரோட யாரு படுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா.. மொதோ சான்ஸ் வயசானவங்களுக்கு தான்..' என்று வாய்க்கு வந்ததை பேசி வைக்க எண்ணெய்யை தூக்கி வீசி எறிகிறாள்.
அந்த இடத்திற்கு வரும் கெருலாலிடம் தகாத வார்த்தையால் இவளும் பதிலுக்கு திட்டி நடந்ததை சொல்ல, 'அப்படி எல்லாம் சொல்ல கூடாது' என்று அழைத்து சென்று ஒரு டின் எண்ணெய்யை வாங்கி கொடுத்து அடிக்கடி இந்த மாதிரி வர வேண்டாம் என்று சொல்கிறார்.
இந்த கட்டத்தில் ஜுகுனி இருக்கிறாளா? என்று நட்ட நடு ராத்திரியில் அந்த வீட்டிற்கு கத்தியுடன் வருகிறான் ஒருவன். அவனை கெருலால் அடித்து அனுப்பி விட 'அந்த மூணு பொண்ணுங்க..' என்கிறான் அவன். 'ஒனக்கு பொண்ணுங்க கேக்குதான்னு சொல்லி..' அடித்து அனுப்பி விட நிம்க்கி அதை தொடர்ந்து அம்மாவும் விசாரிக்கிறார்கள்.
அம்மாவுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது, கெருலாலிடம், 'நிம்க்கிய பத்தி என்ன நெனைக்கிறே? அவளை கல்யாணம் பண்ணிகிட்டு கூட்டிட்டு போயிடு.. ஒருத்தியாவது நல்லா இருக்கான்னு நான் சந்தோஷமா இருக்கிறேன்..' என்கிறாள்.
கெருலால் தன்னுடைய பாட்டிக்கு கடிதம் எழுதுகிறார் மூன்று பேரையும் பத்தி, ஒன்று ... மூத்தவள் நிம்க்கி உங்களுக்கு மருமகளாக வந்தால் மகிழ்வாக இருக்கலாம்.' என்று எழுதி வைக்கிறார். காலையில் லட்டரை எடுத்து போக மறந்து விட்டு அடுத்த நாள் எடுத்துட்டு போக வேண்டி லட்டரை எடுத்து எழுதியதை திரும்ப படித்து பார்க்கும் போது நிம்க்கி என்ற இடத்தில் மித்தூ என்றிருக்கிறது.
அந்த நேரத்தில் மித்து தேத்தணி போட்டு கொண்டு வருகிறாள், 'இங்க ஒரு லட்டர் வச்சிருந்தேன்.. பார்த்தியா?'
அவள் தலையை ஆட்டுகிறாள் பார்க்கவில்லை என்பது போல்
'நான் இல்லாத நேரத்துல இந்த அறைக்கு வந்தியா?' என்று அதட்டலாக கேட்கிறாள்.
அவள் பயந்து பின்வாங்க, 'ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறே.. ஒனக்கு என்ன நாக்கு இல்லை..?' என்று கேட்கிறான். இத்தனை கேள்விகளையும் உண்மையான கோபத்தில் கேட்க வில்லை. ஒரு மாதிரி சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் கேட்கிறான்
அவள் பயந்து போய் ஓடி போனவுடன் நிம்க்கி, 'என்னாச்சு.. மித்து ஏன் அழறா? எனக்கு பயமா இருக்கு.. அவளால வாய் பேச முடியாது.. என்னா சொன்னீங்க.. சொல்லுங்க' என்று கேட்கிறாள்.
கெருலால் அதிர்ந்து, 'வாய் பேச முடியாதவளா..?' என்று கேட்கும் போது
'இத்தனை நாளா நீங்க இத கவனிக்கவே இல்லையா? ' என்று கேட்கிறாள்
கெருலாலுக்கு அப்போது தான் மித்து வாய் பேச முடியாதவள்' என்று தெரிய வருகிறது
அவளிடம் மன்னிப்பு கேட்க துடிக்கிறார். அதன் பிறகு மித்துவிற்கு கெருலாலை சந்திக்கவே பிடிக்காமல் மறைந்தே இருக்கிறாள். கெருலாலால் மித்துவை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியவில்லை.
ஒரு முறை அவர் மித்துவிற்கு 'பிறந்ததிலிருந்தே வாய் பேச முடியாதா?' என்று நிம்க்கியிடம் வினவும் போது, 'சிறிய வயதில் அவளை யாரோ கடத்தி சென்று விட்டார்கள்.. ரொம்ப நாள் கழிச்சி திரும்ப வந்ததிலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடலை ஒரு நாளும் தூங்கலை ஒரு வார்த்தை கூட பேசலை.. இப்ப வரை பேசாமலே..' என்று சொல்லி காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை விட்டு எறிகிறாள் 'என்னை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..' என்பதாக..
அப்புறம் அந்த வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கி கொண்டு வந்து மாட்டு சாணத்தில் வழுக்கி விழுந்ததை பார்த்து மித்து சிரித்து அவளும் விழுந்து ராசியாகிறார்கள்.
அப்போது தான் மித்து கவிதை எழுதுவாள் என்று தெரிய வருகிறது.. 'உன் மனமாவது பேசுகிறதே...' என்று பாதி எழுதிய கவிதையை கேட்டு வியக்கிறார் கெருலால்.
அவர் சென்ற பிறகு தான் எழுதிய அந்த கவிதையை பாடுகிறாள்..
தான் வாய் பேச முடியாதவள்.. அவளின் காதலனோ நாள் முழுதும் சாலையில் வாழும் ஒரு லாரி டிரைவர். அவனை மேகத்தோடு ஒப்பிட்டு இந்த கவிதை பாடுகிறாள். மேகத்தை காதலுக்கு தூது விடுவார்கள். ஆனால் இவளோ மேகத்தையே காதலனாக பாவித்து பாடுகிறாள்.
தொலைதூரத்திலிருந்து
மீண்டும் ஒரு மேகம்
வந்திருக்கிறது..
உனது இறக்கையில்
நான் முத்துக்களை
கட்டி விடுகிறேன்
என்னுடைய ஏரியில்
பூக்களை கொண்டு
நிரப்பிவிடு
நான் ஒரு
பழைய சூஃபியின்
பொருட்டால்
மன்றாடி கேட்டுக்
கொள்கிறேன்..
அவளின் மனதில் குரல் நம் காதை விட மனதில் பதிகிறது
அந்த நேரத்தில் ஊரில் அரங்கு அமைத்து நாட்டியம் நடத்த வண்டியில் மைக் செட் கட்டி விளம்பரத்தோடு வருகிறார்கள். ரோட்டுல சாணம் பொறுக்கிக் கொண்டிருக்கும் அந்த தாயார் அப்படியே போட்டு விட்டு வீட்டிற்கு ஓடி வருகிறார்.
மூன்று பிள்ளைகளையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி 'வெளியே வந்தால் காலை உடைத்து விடுவேன்' என்று அரற்றுகிறார்.
அந்த விளம்பர வண்டி அவர் வீட்டின் வழியாக சென்று மறைந்தவுடன் சற்றே அமைதி பெறுகிறார்.
அந்த இரவு கெருலால் வரும் போது, 'ஏய்.. யார் நீ.. அந்த நாட்டியம் பார்த்துட்டு வர்ரீயா?' என்கிறாள்
'அம்மா.. நான் வேலய முடிச்சிட்டு வர்ரேன்..' என்கிறார் கெருலால்
அப்போது தான் சொல்லி காண்பிக்கிறார் அவரும் இதே போல் ஒரு டுரூப்பில் ஜுகுனி என்ற பெயரோடு நாட்டிய தாரகையாக விளங்கியதையும் அந்த டுரூப்பில் சாரங்கி வாசித்த ஒருவர் தன்னை திருமணம் செய்து மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த கதையையும் அந்த மூன்று பிள்ளைகளையும் நாட்டியத்திற்கே அழைத்து செல்ல முயன்றதையும் நிம்க்கி வலியுறுத்தி பார்த்து முடியாமல் போய் மித்துவை கடத்தி கொண்டு போய் வைத்திருந்ததையும் அவளும் ஒத்துக்காமல் போகவே அவளை அடித்து ஊமையாக்கி விட்ட கதையையும் அழுகையின் ஊடே சொல்லி காண்பிக்கிறாள்.
கெருலால், 'மித்துவை கடத்திட்டு போனது அவளது தந்தையா?' என்று ஆச்சர்யம் கொள்கிறார். 'நீங்க கவலைப்படாதீங்க அம்மா.. உங்க ஆம்புள புள்ள நான் இருக்கேன்ல.. இனிமே யாரும் இந்த வீட்டிற்கு வர மாட்டாங்க.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க..' என்று ஆறுதல் சொல்கிறார். அந்த தாயார் கெருலாலின் மார்பிலேயே உறங்கி போகிறார்.
அந்த குடும்பத்திலேயே ஒருவனாக கெருலால் மாறி வரும் போது திடீரென்று காண்ட்ராக்ட் முடிந்து அன்றிரவே வேறு ஊருக்கு திரும்ப சொல்கிறார் ஒப்பந்ததாரர்.
புறப்பட தயாராகும் போது முன்னாளில் கொடுத்திருந்த வாக்குப்படி நிம்க்கியை சிவன் கோயிலுக்கு அழைத்து செல்ல கூப்பிடுகிறார். அவள் மறுக்கிறாள்.
'நீ கடவுள்ட்ட வேண்டிக்க வேண்டாமா?' என்று கேட்கிறாள்
நிம்க்கியோ, 'நான் கடவுள்ட்ட என் தங்கை மித்துவிக்கு உங்களை கணவராக வேண்டி கேட்க போகிறேன்.. என் வேண்டுதல் நிறைவேறுமான்னு நீங்க சொல்லுங்க..' என்று இடியை இறக்குகிறாள்
கெருலால், 'அது எப்படி நிறைவேறும்.. நான் உன்னை எனக்கு கேட்கும் போது..' என்கிறார். (கெருலால் தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தை தன் தங்கையின் வாழ்வுக்காக மாற்றி எழுதியது நிம்க்கி தான் சொல்ல தான் வேண்டுமோ?)
கெருலாலுக்கு மித்துவை மணமுடிக்க விருப்பமில்லை நிம்க்கி சொல்கிறாள், 'நான் இந்த வீட்டை விட்டுவிட்டு வர முடியாது'
அவளது தாயார் மறதி நிறைந்த முதிய வயதுடையவர்
அவளது மூத்த தங்கை வாய் பேச முடியாதவ.ள்
அவளது இளைய தங்கை விபரம் புரியாதவள்
'நான் திரும்ப வரலாமா?' என்று நிம்க்கியிடம் கேட்கிறார்
'வரலாம்.. ஆனால் எனக்காக வர வேண்டாம்..'
புறப்படும் போது, சிங்கி அழுகிறாள், 'எப்போ வருவீர்கள்?' - கண்களில் கண்ணீருடன் கேட்கிறாள்
'வராம எப்படி.. ஒன் கல்யாணத்துக்கு வரணும்ல..' என்று சொல்கிறார்
மித்துவிடம் சென்று 'நீ கவிதையை எழுதி முடிச்சி வை.. நான் வந்து வாங்கிக்குவேன்..' என்கிறார்
நிம்க்கியிடம் சென்று, 'என்னோட முகவரி மித்துவோட பழைய கவிதை நோட்ல எழுதி வச்சிருக்கேன்.. எப்போ தோணுதோ ஒரே ஒரு கடிதம் போதும்.. ஓடியாந்துடுவேன்..'
சொல்லிவிட்டு அவரின் பயணம் 'ராஹே பே ரெஹ்தே ஹெய்ன்..' என அங்கிருந்து தொடங்குகிறது..
இந்த பாடல் மழை, பனி என அவர் பல காலங்களில் பயனம் செய்வதை சுட்டுவதாக அமைகிறது.
மூன்று வருடங்கள் கழித்து பயணத்தில் ஒரு நாள் ஓரிரவு ஓரிடத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் போது 'ஒரு நாட்டிய குழு வந்திருப்பதாகவும் அருமையான ஒரு பெண் நடனம் ஆடுகிறது.. அவசியம் பார்க்க வேண்டிய நடனம்..' என்று நண்பர்கள் வற்புறுத்தி அழைத்து செல்ல அந்த நாட்டிய அரங்கிற்கு செல்கிறார்.
அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் நம்கீனின் சுவையை சொல்வதாக அமைகிறது.
கெருலால் அந்த ஊரை விட்டு கிளம்பும் போது அந்த வலியை உங்களாலும் உணர முடிகிறது. படத்தில் இருக்கும் இதமான இருட்டை தாண்டிய வெளிச்சத்தை வேண்டவே இல்லை. உண்மையில் இந்த படத்தில் உப்பின் சுவை மட்டுமல்ல வாழ்வில் காணும் அத்தனை சுவைகளும் கொட்டி கிடக்கிறது.
என்னை பொறுத்த வரை இந்த படம் முதல் காரணத்தினால் தான் விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என்பதேயாகும். இந்த படத்துக்கு 'உப்பின் சுவை' என்று பெயர். கண்ணீரின் சுவை என்றும் சொல்லலாம்.. வாழ்வின் சுவை என்றும் கொள்ளலாம்.
உப்பில்லாத சோறு குப்பையிலே என்பார்கள் இந்த படத்தின் பெயரிலேயே 'உப்பி'ருந்ததாலும் தியேட்டரில் நிறைய குப்பை படங்கள் ஓடுவதால் இந்த படமும் தியேட்டர்களுக்கு போய் குப்பையோடு குப்பையாக போய் விடக்கூடாது என்று தான் தூர்தர்ஷன் வாங்கி ஒளிப்பரப்பியதோ என்னவோ.
'மூன்றாம் பிறை' படத்தை இந்தியில் 'சத்மா' என்று எடுத்தார்கள். தமிழில் 'பூங்காற்று புதிதானது..' என தொடங்கும் பாடல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கலாம். அதே பாடல் இந்தியில் வரும் போது இசைஞானி இளையராஜா அவர்கள் 'பூங்காற்று..' டியுனை பயன்படுத்தாமல் 'தம்பிக்கு எந்த ஊரு' படத்திற்கு இவர்கள் இசையமைத்த 'என் வாழ்விலே வரும் அன்பே வா...' பாடலின் டியுனை பயன்படுத்தியிருப்பார்.
இப்போது அந்த டியுனுக்கு குல்ஜார் சாப் பாடல் வரிகள் தர வேண்டும்.
'ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஏ ஜிந்தகி தெரே கலா லே..
ஹம் னே பி தெரே ஹர் இக் கம் கோ கலே சே லகாயா
ஹெய் னா'
- என்று எழுதியிருப்பார்.
இதன் அர்த்தம்..
ஓ.. வாழ்க்கையே.. எங்களை அணைத்துக் (அரவணைத்து ஏற்றுக்) கொள்..
நாங்கள் நீ தரும் அனைத்து சோகங்களையும் அணைத்து (ஏற்றுக்) கொள்வதை போல் (அதே போல் வாழ்க்கையே எங்களை அணைத்துக் கொள்)
வாழ்க்கை தரும் சோகங்கள் துயரங்களின் உடல் ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடாக வருவது தூய அழுகை தான். அந்த அழுகையின் சுவை தான் வாழ்வின் சுவை. அது தான் நம்கீன். (Namkeen - A Taste of Life)
3 அல்லது 4 பெண்கள் கதாநாயகிகளாக கிடைத்தால் அவர்களை எவ்வளவு துகிலுறிக்க முடியுமோ அவ்வளவு தூரம் துகிலுறித்து ஆடி பாடி கட்டிபிடிக்க விடுவார்கள் நம் திரைப்பட மேமக்கள். அல்லது அந்த மூன்று பெயரையுமே ஒரு ஆணை காதலிக்க வைத்து அவர்களின் தலையோடு நம்முடைய தலையையும் சுற்ற வைப்பார்கள்.
இந்த படத்திலும் 4 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இவர்களை எவ்வளவு தூரம் நடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடிக்க வைத்து அழ வைத்து சிரிக்க வைத்து வாழ சொல்லி மனித உணர்வுகளை துகிலுரித்து பதிவு செய்திருக்கிறார் குல்ஜார் சாப் அவர்கள். Hats Off Sir. இதிலும் காதலிருக்கிறது. நடுத்தெரு காதல் அல்ல.. நல்லதொரு காதல்..
மணிரத்னம் அவர்களின் படங்களான அக்னி நட்சத்திரம், அஞ்சலி படங்களை பார்த்தால் மன்னிக்கவும் பார்க்கவே முடியாது.. அந்த இருட்டில் எப்படி பார்க்க முடியும். அந்த லைட்டிங் எனக்கு புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை.
இந்த படத்திலும் முழுக்க முழுக்க இருட்டு தான். பணம் கொழிக்கும் ஹோட்டலின் உள்ளே ரொமான்சுக்காக இருக்கின்ற விளக்கை அணைத்து இருட்டையே செயற்கையாக ஆக்கி இருப்பார்களே அந்த வகையான இருட்டல்ல. மின்சார இணைப்பே இல்லாத அரிக்கன் விளக்கை மட்டுமே நம்பி வாழும் வர்க்கத்தினரின் இல்லத்து இருட்டு. இந்த இருட்டு எனக்கு புரிவதோடு பிடிக்கவும் செய்தது.
மேலே கண்ட காட்சியில் இறுதியாக அந்த பெண், 'மின்சார இணைப்பு இல்லா விட்டால் லைட் எரியாது' என்றும் 'பல வருடங்களாக இப்படித் தான்..' என்று கூறியதும்.. வேறு எதையும் பார்க்காதீர்கள் சஞ்சீவ் குமார் அவர்களின் நடிப்பை தவிர. சில நொடிகளில் எத்தனை பாவனைகள்.. 'அப்ப இவ்வளவு நேரம்.. நான்..' என்று அவர் கேட்டு அவர் படும் பாடு..
சஞ்சீவ் குமார் கெருலாலாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் பழையதாகி விட்டதால் அவர் இந்த படத்தில் பிறந்து இருக்கிறார் என்றே சொல்ல நினைக்கிறேன்.
குல்ஜார் ரொம்ப ஸ்டிரிக்டாம். எல்லோரும் நேரத்துக்கு வந்து விட வேண்டும் என்று கறாராக இருப்பாராம். ஒரு முறை நான்கு பெரிய நடிகைகளும் (வஹிதா ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ஷபனா ஆஜ்மி, கிரன் விராலே) எல்லோரும் நேரத்துக்கு வந்தும் சஞ்சீவ் குமார் சரியான நேரத்துக்கு வராததால் அவரை நறுக்குன்னு கேள்வி கேட்க வேண்டும் என்று அந்த 4 நடிகைகளும் குல்ஜார் சாபிடம் கோபப்பட்டு அவரின் வருகைக்காக காத்திருந்தார்களாம் .
அப்போது சஞ்சீவ் வந்தாராம். விறுவிறு என்று காஸ்டியுமுக்கு மாறினாராம். காட்சி விளக்கப்பட்டதாம். ஒரே ஷாட். ஒக்கே ஆனது. காட்சி முடிந்ததும் சஞ்சீவ் அந்த நால்வர் அணியும் தன்னையே பிரம்மிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதை கண்டாராம். அவர்கள் தங்களுக்குள் இருந்த கோபத்தையும் மறந்து சஞ்சீவை பாராட்டினார்களாம். ஏனெனில் படத்தில் வரும் மிக முக்கியமான கஷ்டமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய காட்சியாம் அது. ஒரே டேக்கில் அற்புதமாக ஸ்பாண்டேனியசாக நடித்து முடித்தாராம். அது தான் சஞ்சீவ் குமார்.
கெருலால் ஒப்பந்தத்தின் பேரில் வேலை செய்யும் லாரி டிரைவர். ஹிமாச்சல பிரதேசத்தில் நாட்டுப்புறத்தில் மழைவாழ் பகுதியில் குலு பள்ளத்தாக்கின் அருகில் உள்ள ஒரு ஊரில் நடக்கும் கட்டுமான பணி வேலை நிமித்தமாக சுமார் 4 மாதங்களாக அந்த ஊரில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தம் கெருலாலுக்கு. அவர் தங்குவதற்கு வீடு காட்ட அவரை தனிராம் என்பவர் அழைத்து செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. அந்த வீடு ஒரு வயதான தாயாருக்குடையது, அவருக்கு மூன்று மகள்கள் என்று சொல்லிக் கொண்டே வருவார் தனிராம்.
ஒரு சிறுவன் சைக்கிளில் கெருலாலை மோதி விடுவான். அவன் விலகி சென்றதும் கெருலால், "நான் மொதல்லேயே பார்த்திருக்கணும்.." என்பார்
அதற்கு தனிராம், "பார்த்திருந்தா.. சைக்கிள்ள மோதியிருக்க மாட்டீங்க.." என்பார்
உடனே, 'நான் சைக்கிளை சொல்லலை.. வீட்டை சொல்றேன்..' என்பார் பெட்டி படுக்கையுடன் தங்குவதற்கே வந்து விட்ட கெருலால்.
மித்து (ஷபனா ஆஜ்மி) என்பவள் வீட்டில் நிற்பதை பார்த்து, 'இது யாரு?' என்று கெருலால் வினவுகிறார்.
மித்துவை தான் முதன் முதலாக கெருலால் பார்த்திருப்பார். ஆனால் மித்து அவரின் தாயாருக்கு இரண்டாவது மகள்.
'மித்து.. வாடகைக்கு ஆள் வந்திருக்குன்னு சொல்லி அம்மாவ கூட்டிட்டு வா.' என்று அனுப்பி விடுகிறார் தனிராம்.
அப்படியே வந்து கொண்டிருக்கும் போது மரத்திலிருந்து தொப்பென்று குதிக்கிறாள் சிங்கி. அதற்கு தனிரம் சொல்கிறார், 'பழுத்த மாதுளம்பழம் கீழே விழுற மாதிரி விழுறியே..' என்று..
அதற்கு சிங்கி சொல்வாள், 'மாதுளை இல்லை.. மாங்காய்..' என்று மரத்திலிருந்த பறித்த மாங்காயை காட்டுகிறாள்.
இந்த சிங்கியை தான் கெருலால் இரண்டாவதாக சந்திப்பார். ஆனால் சிங்கி அவரின் தாயாருக்கு மூன்றாவது குழந்தை.
தனிராம் சிங்கியை காட்டி, 'இது தான் மூணாவது..' என்பார்
கெருலால், 'ஆனா.. இது தானே இரண்டாவது..' என்கிறார்
'உண்மையிலேயே இரண்டாவது தான் மூணாவது..' இது தனிராம்
'அப்ப முதல்ல பார்த்தது..' இது கெருலால்
'அது இரண்டாவது..' - தனிராம்
'அப்ப மூணாவது..' - கெருலால்
'நம்ம இப்ப தானே மூணாவத பார்த்தோம்..' - தெளிவாக தனிராம்
'ஆனா இது இரண்டாவது தானே..' குழப்பத்துடன் கெருலால்
'இத பாருங்க..' என்று விளக்க ஆரம்பிப்பதற்குள் அந்த வீட்டு ஓனரும் மூன்று பிள்ளைகளுக்கு தாயாருமான (வஹிதா ரஹ்மான்) வருகிறார்.
வயதான மறதியுடையவரான காசு விஷயத்தில் கறாரான இவர் கெருலாலை பார்த்து, 'பாத்தா பிராடு மாதிரில்ல இருக்கு.. ஒழுங்கா வாடகை கொடுத்துடுவீயா.. நான் யாரோட காசையும் நான் வச்சுக்க மாட்டேன்.. யாரும் என்னோட காசயும் வச்சிகிட்டிருக்க விட மாட்டேன்.. நாங்கள்லாம்.. இந்த காச நம்பி தான் அரை வயிற நிரப்பிக்கிறோம்.. அத போய் ஏமாத்திடாதீங்க ' என்று சொல்கிறார். அட்வான்சாக 30 ரூபாய் கேட்டு பெறுகிறார். 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது
அதை தொடர்ந்து அவர் தங்குவதும் வீட்டில் மின்சார இணைப்பு இல்லை என்று தெரிய வருவதும், தூங்கி நடுஇரவில் எழுந்து பசி வந்து சாப்பாடு கிடைக்காமல் மூன்று பெண்களின் கிண்டலுக்கு ஆளாகி காலையில் எழுந்து தனிராமிடம் சென்று, '30 ரூவாக்கு 40 ரூவா கொடுத்தேன்.. பாக்கி 10 ரூவாய் வரலைன்னாலும் பராவியில்லை.. இனி இந்த வீடு சரிபட்டு வராது - ' என்று கோபப்படுகிறார். தனிராம் சமாதானப்படுத்துகிறார்.
கெருலால் அறைக்கு வெளிச்சத்துக்கு அரிக்கன் விளக்கு, தண்ணி குடிக்க பானை, குளிக்க பக்கெட் எல்லாம் வாங்கி வந்து ஒவ்வொன்றுக்கும் விலை போட்டு வைக்க சொல்கிறார் மூத்தவரான நிம்க்கி (ஷார்மிளா தாகூர்).
(வஹிதா ரஹ்மானும் ஷார்மிளா தாகூரும் ஒரே கால கட்ட நடிகை ஆனாலும் வஹிதா ஷார்மிளாவிற்கு தாயாராக நடிக்க சம்மதித்து விட்டர். முதலில் ஷார்மிளா ரோலுக்கு ஜெமினி கணேசன் அவர்களின் மகள் ரேகாவை தான் குல்ஜார் நடிக்க வைக்க நினைத்திருந்தார்.)
நைட் வேலை முடிந்து வருகிறார், கையில் அரிக்கன் விளக்கு, பானை, பக்கெட் எல்லாம் வாங்கி கொண்டு. அறைக்கு போய் பார்த்தா வாங்கிட்டு வந்த அத்தனையும் ஏற்கனவே வைத்து விலை வேற போட்டு இருக்கு.
எல்லாம் சேர்த்து 9 ரூவாய் 90 காசு என்று போட்டிருக்கு.. 'பாக்கி 10 ரூவாய் அதுல இப்ப மிச்சம் 10 பைசா' என்று வேதனையோடு புலம்பி மேலும் பில்லில் எழுதியிருப்பதை படிக்கிறார், 'அரிக்கன் விளக்கில் எண்ணெய் இப்போது ஃபுல்லாக இருக்கிறது.. தீர்ந்து போனதும்.. காசு கொடுத்து வாங்கி ஊற்றி கொள்ளவும்..' என்று.. பில்லை கசக்கி கீழே எறிகிறார்.
கெருலால் ஒரு முறை லாரியில் செல்லும் போது கோழி திடீரென்று பறந்து வந்து வண்டிக்கு முன்னால் வந்து அடிபடுகிறது. கெருலால் வண்டியை விட்டு இறங்கி பின்பக்க கோழியை தேடி டயரை பார்க்கிறார். அவருக்கு நேர் எதிர்பக்கம் ஒரு சிறுவன் நின்று கொண்டு, 'நீ கொன்னுட்டே..' என்கிறான்.
'அடப்பாவி.. என் கோழியை கொன்னுட்டீயா.?' - எனும் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார் கெருலால்.
இரு வயதான பெண்மணிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர், 'விட்டாக்கா என் மேலேயே லாரிய ஏத்தி கொன்னுடுவே போலிருக்கே..' என்கிறார்.
கெருலால் இன்னொருவரை பார்த்து, 'இவங்கள்ட கோழியா..?' என்கிறார்
'அங்கே என்னா கேள்வி வேண்டி கெடக்குது.. எதாயிருந்தாலும் என்கிட்டே கேளு' - கோழியை பறிகொடுத்தவர்
'இது இவங்கள்ட கோழி தான்..' - அந்த இன்னொருவர்
கெருலால், 'சாச்சி, நான் என்னா செய்வேன்.. அதுவா வந்து டயர்ல மாட்டிகிச்சு.. நானா வேணும்னு அது மேல ஏத்தல..'
'அப்ப.. நான் வேணும்னு அது மேல ஏத்திட்டேனா..' - அந்த சாச்சி
கெருலால் கோபமாக, 'கோழி உங்கள்டன்னா.. வூட்லேயே வச்சு வளர்க்க வேண்டியது தானே.. எதுக்கு வெளில ரோட்டுல லாரிலாம் போற எடத்துல வந்து மேய வுடுறீங்க..'
சாச்சி, 'என்ன ஒளற்றே.. பாரு.. இந்த காடி காரன்..' (ஏதோ சொல்ல வந்த விநாடி)
கெருலால் பையிலிருந்து காசை எடுத்து, 'சாச்சி, இந்தாங்க.. 5 ரூவா.. போய் ரெண்டு கோழி வாங்கிக்கிங்க..' பிரச்சினையை முடிக்க பார்க்கிறார்.
சாச்சி, 'ஹூம்.. 5 ரூவா.. பெரிய காச கொடுத்துட்டாரு.. எனக்கு 25 ரூவா வேணும்..(என்று பக்கத்தில் நிற்கும் அந்த இன்னொருவரை பார்த்து) 5 ரூவா கொடுத்து சரிகட்ட பார்க்குறான்..'
அந்த இன்னொருவர், 'அவங்க சொல்றாங்க.. 5 ரூவா கட்டாதுன்னு..'
கெருலால், '25 ரூவாயா.. என்னா சொல்றீங்க.. அந்த காசுக்கு நல்ல ஆடே வாங்கிடலாமே..'
சாச்சி, 'அப்படி வாங்குற ஆடு.. எனக்கு முட்டை போடுமா..?'
கெருலால் விடாமல், 'அப்படின்னா செத்து போன அந்த கோழி மட்டும் பால் கறக்குமா..?'
- இப்படி நிலைமை மோசமாகி கொண்டிருக்க நல்ல வேலையாக எதிர்பார்த்தது போல் நிம்க்கியும் சிங்கியும் வருகிறார்கள்.
நிம்க்கி, 'என்னாச்சு?' என்று கேட்கிறார்
'இவங்கள பாருங்க.. இந்த ரோடு.. லாரி போறதுக்காக உள்ளது.. கோழிகள் போறதுக்காக இல்ல.. நானா வேணும்னு மோதலை.. என் டயர்ல அதுவா திடீர்னு வந்து விழுந்திடுச்சி.. 5 ரூவா கொடுக்கிறேன்.. 25 ரூவா கேக்குறாங்க..' - என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்ல..
நிம்க்கி ஆச்சர்யத்துடன், 'என்னாது.. 25 ரூவாயா?.. என்னா சாச்சி.. கோழி 25 ரூவாயா? 2.5 ரூவாய்க்கு கிடைக்குமே - அதான் 5 ரூவா தர்ராறே..' என்று முடிக்கும் முன்
சாச்சி, 'அது நல்லா முட்டை போடும்..'
சிங்கி, 'அது என்னா பவுன்லயா முட்டை போடும்? வேணும்டா 5 ரூவாய வாங்கிக்குங்க.. இல்லைன்னா உங்க பாட்டுக்கு போய்ட்டே இருங்க..'
சாச்சி, 'சிங்கி.. நீ இதுல வந்து வுழாதே.. பேசாம மூடிகிட்டு போ.. வந்துட்டா பெருசா.. வக்காலத்து வாங்க.. அவன் என்ன ஒன் புருஷனா..?'
சிங்கி, 'ஆமா.. அவன் என் புருஷன் தான்' என்று கெருலால் கையிலிருந்த காசை பிடுங்கி சாச்சியிடம் திரும்பி, 'இந்த 5 ரூவாய வச்சுக்க.. இல்லாட்டி போ..' என்று சொல்ல
சாச்சி, 'நிம்க்கி, இந்த சிங்கியை அடக்கி வை. இல்லைன்னா நல்லா இருக்காது..' என்று சொல்ல
நிம்க்கி, 'அவ கரெக்டா தான் சொல்றா சாச்சி, அவர் வெளியூர் காரரு.. அவர்கிட்டே போய் நம்ம இப்படி நடந்துக்கலாமா.. உண்மையிலேயே நம்ம எதுவுமே வாங்கிக்க கூடாது.. '
சாச்சி கடுப்பாகி, 'எதுவுமே.. வாங்க கூடாது.. இவ சொல்றா?.. 5 ரூவா கொடு' என்று சிங்கி கையிலிருந்த காசை வெடுக்கென்று பிடுங்கி கொள்ள சிங்கி விறுவிறுவென்று போய் டயர் கீழே உள்ள கோழியை எடுத்து கொள்கிறாள்.
சாச்சி, 'அதை ஏன் எடுக்குறே?' என்று கேக்க
சிங்கி, 'உங்களுக்கு கோழியும் வேணும்.. காசும் வேணுமோ?' என்று சொல்ல
கெருலால், 'அதை கொடுத்துடு.. அதை வச்சு நீ என்ன செய்ய போறே?'
நிம்க்கி, 'வேணாம்.. விட்டுடு.. நீ வேற எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்திகிட்டு..'
சாச்சி 'இங்கே கொடு' என்று கேக்க 'நான் தர மாட்டேன்' என்று எடுத்து கொண்டு ஓட தயாராக..
கெருலால், 'அதை கொடுத்துடேன்.. எறந்து போனதை யாராவது சாப்பிடுவாங்களா?'
'பின்னே உயிரோடு இருக்குறதயா சாப்பிட்வாங்க..' என்று சொல்லி விட்டு ஓரே ஓட்டமாக ஓடி விடுகிறாள் சிங்கி.
சாச்சி கடுஞ் சினத்துடன், 'நான் ஒனக்கு சாபம் கொடுக்குறேன்.. இந்தா வாங்கிக்க.. நீ அதை சாப்டுட்டு காக்கா மாதிரி கத்த தான் போறே..' என்று -
அங்கிருந்து காட்சியிலிருந்து விடை பெற்று வந்ததும்..
நிம்க்கி வாசலில் இருக்கும் கிணத்தடியில் குளித்து கொண்டிருக்கும் போது லாரி வருவது தெரிந்து சிங்கி ஓடி போய் ஒரு துணியை எடுத்துட்டு வந்து கெருலால் வரும் பாதையில் அவருக்கு தனது அக்காள் குளிப்பது தெரியாத படி மறைக்கிறாள்.
'நீங்க மேலே போங்க.. நான் சாப்பாடு கொண்டுட்டு வர்ரேன்..' என்று சொல்ல
'நான் சாப்டு விட்டேன்..' என்று சொல்கிறார் கெருலால்
சிங்கி, 'அப்புறம் ஏன் அந்த கோழியை கொண்டீங்களாம்?' என்று கேக்கிறாள்
கெருலால் ஆச்சர்யமாக, 'அப்படீன்னா.. அந்த கோழிய நீ சாப்ட்டீயா..?' என்று ஆச்சர்யத்துடன் கேக்க..
அவள் சாதாரணமாக, 'நான் மட்டும் இல்லை.. இங்கே எல்லோருமே சாப்பிட்டோம்' என்கிறாள்.
அந்த சாச்சி சொன்னது ஞாபகமிருக்கா, யாரு அந்த கோழிய சாப்பிடுறாங்களோ அவங்க நாளைக்கு காத்தால காக்கா மாதிரி கத்துவாங்களாம்..' என்று அனைவரும் சிரிக்க சிரிக்க சொல்ல.
கெருலால் தொடர்ந்து, 'நான் இன்னைக்கு காலைல வேலைக்கு லேட்டா போயிட்டேன்.. நீ ஒண்ணு செய்.. நாளைக்கு காலைல கொஞ்சம் வெள்ளனமே கத்திடு..' என்று சொல்ல அந்த இடத்தில் சிரிப்பு மழையாய் பெய்கிறது..
ஒரு முறை கெருலாலுக்கு வந்த சாப்பாட்டு கேரியரை மித்துவும் சிங்கியும் திறந்து பார்த்து ருசித்தும் பார்க்கிறார்கள். இவர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு சாப்பாட்டு கேரியரை திறந்து பார்க்கும் போது ஒன்றுமே இல்லை - காலியான பாத்திரம் மட்டுமே இருக்கிறது. அந்த ஒரு கனம், 'இதையும் எடுத்து சாப்பிட்டுடாங்களா..?' என்று தவறாக நினைக்கும் போதே நிம்க்கி சாப்பாட்டை சூடு காட்டி கொண்டு வந்து தருகிறார்கள், உடனே அதை கண்டு 'தவறாக நினைத்து விட்டோமே' என்று வருந்தியவுடன், நிம்க்கியிடம், 'இனிமேல் சிங்கியை வெளியே எல்லாம் அனுப்ப வேண்டாம்..' என்று சொல்லும் போது
நிம்க்கி கேட்கிறாள், 'இன்னைக்கு யாரையோ கோபப்பட்டு அடிச்சிட்டீங்களாமே..' என்று கேட்கிறாள்..
'ஆமாம்.. எப்படி உங்களுக்கு தெரியும்..?' என்று ஆச்சர்யப்பட
'அவங்க சிங்கியை பத்தி தவறா பேசினாங்களாமே.. நிஜமாவா..' என்று வினவ
'அது எப்படி உங்களுக்கு..' என்று ஆச்சர்யம் மேலிட 'அவங்கள்ளாம்.. ரொம்ப கீழ்தரமானவங்க.. இனிமே எதாவது வேலையிருந்தா நீங்க போகலாமே..' எ
'முன்னாடில்லாம் நான் தான் போயிட்டு இருந்தேன்........' என்று நிறுத்தி விட்டு, 'பேசுறவங்க யாரா இருந்தாலும் தான் பேசுவாங்க..' என்கிறாள்.
'அப்ப எப்படி?.. ஒண்ணு செய்ங்க.. இனிமே எதாவது வாங்கணும் கொடுக்கணும்னா எங்கிட்டே சொல்லுங்க.. நான் செய்றேன்..' என்கிறார்.
அடுத்த நாள் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்கும் ஒண்ணும் இல்லை.. நாங்களே செஞ்சுக்குறோம்.. நீங்க போன பிறகு நாங்க தானே செய்ய வேண்டி இருக்கும்.. நாங்க இப்படியே வாழ பழகியாச்சு..' என்று சொல்கிறாள்
அதை தொடர்ந்து சிங்கி வெளியே எண்ணெய் வாங்க செல்லும் போது சில பொறுக்கி பொடிசுகள், 'அந்த டிரைவரோட யாரு படுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா.. மொதோ சான்ஸ் வயசானவங்களுக்கு தான்..' என்று வாய்க்கு வந்ததை பேசி வைக்க எண்ணெய்யை தூக்கி வீசி எறிகிறாள்.
அந்த இடத்திற்கு வரும் கெருலாலிடம் தகாத வார்த்தையால் இவளும் பதிலுக்கு திட்டி நடந்ததை சொல்ல, 'அப்படி எல்லாம் சொல்ல கூடாது' என்று அழைத்து சென்று ஒரு டின் எண்ணெய்யை வாங்கி கொடுத்து அடிக்கடி இந்த மாதிரி வர வேண்டாம் என்று சொல்கிறார்.
இந்த கட்டத்தில் ஜுகுனி இருக்கிறாளா? என்று நட்ட நடு ராத்திரியில் அந்த வீட்டிற்கு கத்தியுடன் வருகிறான் ஒருவன். அவனை கெருலால் அடித்து அனுப்பி விட 'அந்த மூணு பொண்ணுங்க..' என்கிறான் அவன். 'ஒனக்கு பொண்ணுங்க கேக்குதான்னு சொல்லி..' அடித்து அனுப்பி விட நிம்க்கி அதை தொடர்ந்து அம்மாவும் விசாரிக்கிறார்கள்.
அம்மாவுக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது, கெருலாலிடம், 'நிம்க்கிய பத்தி என்ன நெனைக்கிறே? அவளை கல்யாணம் பண்ணிகிட்டு கூட்டிட்டு போயிடு.. ஒருத்தியாவது நல்லா இருக்கான்னு நான் சந்தோஷமா இருக்கிறேன்..' என்கிறாள்.
கெருலால் தன்னுடைய பாட்டிக்கு கடிதம் எழுதுகிறார் மூன்று பேரையும் பத்தி, ஒன்று ... மூத்தவள் நிம்க்கி உங்களுக்கு மருமகளாக வந்தால் மகிழ்வாக இருக்கலாம்.' என்று எழுதி வைக்கிறார். காலையில் லட்டரை எடுத்து போக மறந்து விட்டு அடுத்த நாள் எடுத்துட்டு போக வேண்டி லட்டரை எடுத்து எழுதியதை திரும்ப படித்து பார்க்கும் போது நிம்க்கி என்ற இடத்தில் மித்தூ என்றிருக்கிறது.
அந்த நேரத்தில் மித்து தேத்தணி போட்டு கொண்டு வருகிறாள், 'இங்க ஒரு லட்டர் வச்சிருந்தேன்.. பார்த்தியா?'
அவள் தலையை ஆட்டுகிறாள் பார்க்கவில்லை என்பது போல்
'நான் இல்லாத நேரத்துல இந்த அறைக்கு வந்தியா?' என்று அதட்டலாக கேட்கிறாள்.
அவள் பயந்து பின்வாங்க, 'ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறே.. ஒனக்கு என்ன நாக்கு இல்லை..?' என்று கேட்கிறான். இத்தனை கேள்விகளையும் உண்மையான கோபத்தில் கேட்க வில்லை. ஒரு மாதிரி சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் கேட்கிறான்
அவள் பயந்து போய் ஓடி போனவுடன் நிம்க்கி, 'என்னாச்சு.. மித்து ஏன் அழறா? எனக்கு பயமா இருக்கு.. அவளால வாய் பேச முடியாது.. என்னா சொன்னீங்க.. சொல்லுங்க' என்று கேட்கிறாள்.
கெருலால் அதிர்ந்து, 'வாய் பேச முடியாதவளா..?' என்று கேட்கும் போது
'இத்தனை நாளா நீங்க இத கவனிக்கவே இல்லையா? ' என்று கேட்கிறாள்
கெருலாலுக்கு அப்போது தான் மித்து வாய் பேச முடியாதவள்' என்று தெரிய வருகிறது
அவளிடம் மன்னிப்பு கேட்க துடிக்கிறார். அதன் பிறகு மித்துவிற்கு கெருலாலை சந்திக்கவே பிடிக்காமல் மறைந்தே இருக்கிறாள். கெருலாலால் மித்துவை சந்தித்து மன்னிப்பு கேட்க முடியவில்லை.
ஒரு முறை அவர் மித்துவிற்கு 'பிறந்ததிலிருந்தே வாய் பேச முடியாதா?' என்று நிம்க்கியிடம் வினவும் போது, 'சிறிய வயதில் அவளை யாரோ கடத்தி சென்று விட்டார்கள்.. ரொம்ப நாள் கழிச்சி திரும்ப வந்ததிலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடலை ஒரு நாளும் தூங்கலை ஒரு வார்த்தை கூட பேசலை.. இப்ப வரை பேசாமலே..' என்று சொல்லி காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை விட்டு எறிகிறாள் 'என்னை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..' என்பதாக..
அப்புறம் அந்த வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கி கொண்டு வந்து மாட்டு சாணத்தில் வழுக்கி விழுந்ததை பார்த்து மித்து சிரித்து அவளும் விழுந்து ராசியாகிறார்கள்.
அப்போது தான் மித்து கவிதை எழுதுவாள் என்று தெரிய வருகிறது.. 'உன் மனமாவது பேசுகிறதே...' என்று பாதி எழுதிய கவிதையை கேட்டு வியக்கிறார் கெருலால்.
அவர் சென்ற பிறகு தான் எழுதிய அந்த கவிதையை பாடுகிறாள்..
தான் வாய் பேச முடியாதவள்.. அவளின் காதலனோ நாள் முழுதும் சாலையில் வாழும் ஒரு லாரி டிரைவர். அவனை மேகத்தோடு ஒப்பிட்டு இந்த கவிதை பாடுகிறாள். மேகத்தை காதலுக்கு தூது விடுவார்கள். ஆனால் இவளோ மேகத்தையே காதலனாக பாவித்து பாடுகிறாள்.
தொலைதூரத்திலிருந்து
மீண்டும் ஒரு மேகம்
வந்திருக்கிறது..
உனது இறக்கையில்
நான் முத்துக்களை
கட்டி விடுகிறேன்
என்னுடைய ஏரியில்
பூக்களை கொண்டு
நிரப்பிவிடு
நான் ஒரு
பழைய சூஃபியின்
பொருட்டால்
மன்றாடி கேட்டுக்
கொள்கிறேன்..
அவளின் மனதில் குரல் நம் காதை விட மனதில் பதிகிறது
அந்த நேரத்தில் ஊரில் அரங்கு அமைத்து நாட்டியம் நடத்த வண்டியில் மைக் செட் கட்டி விளம்பரத்தோடு வருகிறார்கள். ரோட்டுல சாணம் பொறுக்கிக் கொண்டிருக்கும் அந்த தாயார் அப்படியே போட்டு விட்டு வீட்டிற்கு ஓடி வருகிறார்.
மூன்று பிள்ளைகளையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி 'வெளியே வந்தால் காலை உடைத்து விடுவேன்' என்று அரற்றுகிறார்.
அந்த விளம்பர வண்டி அவர் வீட்டின் வழியாக சென்று மறைந்தவுடன் சற்றே அமைதி பெறுகிறார்.
அந்த இரவு கெருலால் வரும் போது, 'ஏய்.. யார் நீ.. அந்த நாட்டியம் பார்த்துட்டு வர்ரீயா?' என்கிறாள்
'அம்மா.. நான் வேலய முடிச்சிட்டு வர்ரேன்..' என்கிறார் கெருலால்
அப்போது தான் சொல்லி காண்பிக்கிறார் அவரும் இதே போல் ஒரு டுரூப்பில் ஜுகுனி என்ற பெயரோடு நாட்டிய தாரகையாக விளங்கியதையும் அந்த டுரூப்பில் சாரங்கி வாசித்த ஒருவர் தன்னை திருமணம் செய்து மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த கதையையும் அந்த மூன்று பிள்ளைகளையும் நாட்டியத்திற்கே அழைத்து செல்ல முயன்றதையும் நிம்க்கி வலியுறுத்தி பார்த்து முடியாமல் போய் மித்துவை கடத்தி கொண்டு போய் வைத்திருந்ததையும் அவளும் ஒத்துக்காமல் போகவே அவளை அடித்து ஊமையாக்கி விட்ட கதையையும் அழுகையின் ஊடே சொல்லி காண்பிக்கிறாள்.
கெருலால், 'மித்துவை கடத்திட்டு போனது அவளது தந்தையா?' என்று ஆச்சர்யம் கொள்கிறார். 'நீங்க கவலைப்படாதீங்க அம்மா.. உங்க ஆம்புள புள்ள நான் இருக்கேன்ல.. இனிமே யாரும் இந்த வீட்டிற்கு வர மாட்டாங்க.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க..' என்று ஆறுதல் சொல்கிறார். அந்த தாயார் கெருலாலின் மார்பிலேயே உறங்கி போகிறார்.
அந்த குடும்பத்திலேயே ஒருவனாக கெருலால் மாறி வரும் போது திடீரென்று காண்ட்ராக்ட் முடிந்து அன்றிரவே வேறு ஊருக்கு திரும்ப சொல்கிறார் ஒப்பந்ததாரர்.
புறப்பட தயாராகும் போது முன்னாளில் கொடுத்திருந்த வாக்குப்படி நிம்க்கியை சிவன் கோயிலுக்கு அழைத்து செல்ல கூப்பிடுகிறார். அவள் மறுக்கிறாள்.
'நீ கடவுள்ட்ட வேண்டிக்க வேண்டாமா?' என்று கேட்கிறாள்
நிம்க்கியோ, 'நான் கடவுள்ட்ட என் தங்கை மித்துவிக்கு உங்களை கணவராக வேண்டி கேட்க போகிறேன்.. என் வேண்டுதல் நிறைவேறுமான்னு நீங்க சொல்லுங்க..' என்று இடியை இறக்குகிறாள்
கெருலால், 'அது எப்படி நிறைவேறும்.. நான் உன்னை எனக்கு கேட்கும் போது..' என்கிறார். (கெருலால் தனது தாயாருக்கு எழுதிய கடிதத்தை தன் தங்கையின் வாழ்வுக்காக மாற்றி எழுதியது நிம்க்கி தான் சொல்ல தான் வேண்டுமோ?)
கெருலாலுக்கு மித்துவை மணமுடிக்க விருப்பமில்லை நிம்க்கி சொல்கிறாள், 'நான் இந்த வீட்டை விட்டுவிட்டு வர முடியாது'
அவளது தாயார் மறதி நிறைந்த முதிய வயதுடையவர்
அவளது மூத்த தங்கை வாய் பேச முடியாதவ.ள்
அவளது இளைய தங்கை விபரம் புரியாதவள்
'நான் திரும்ப வரலாமா?' என்று நிம்க்கியிடம் கேட்கிறார்
'வரலாம்.. ஆனால் எனக்காக வர வேண்டாம்..'
புறப்படும் போது, சிங்கி அழுகிறாள், 'எப்போ வருவீர்கள்?' - கண்களில் கண்ணீருடன் கேட்கிறாள்
'வராம எப்படி.. ஒன் கல்யாணத்துக்கு வரணும்ல..' என்று சொல்கிறார்
மித்துவிடம் சென்று 'நீ கவிதையை எழுதி முடிச்சி வை.. நான் வந்து வாங்கிக்குவேன்..' என்கிறார்
நிம்க்கியிடம் சென்று, 'என்னோட முகவரி மித்துவோட பழைய கவிதை நோட்ல எழுதி வச்சிருக்கேன்.. எப்போ தோணுதோ ஒரே ஒரு கடிதம் போதும்.. ஓடியாந்துடுவேன்..'
சொல்லிவிட்டு அவரின் பயணம் 'ராஹே பே ரெஹ்தே ஹெய்ன்..' என அங்கிருந்து தொடங்குகிறது..
இந்த பாடல் மழை, பனி என அவர் பல காலங்களில் பயனம் செய்வதை சுட்டுவதாக அமைகிறது.
மூன்று வருடங்கள் கழித்து பயணத்தில் ஒரு நாள் ஓரிரவு ஓரிடத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் போது 'ஒரு நாட்டிய குழு வந்திருப்பதாகவும் அருமையான ஒரு பெண் நடனம் ஆடுகிறது.. அவசியம் பார்க்க வேண்டிய நடனம்..' என்று நண்பர்கள் வற்புறுத்தி அழைத்து செல்ல அந்த நாட்டிய அரங்கிற்கு செல்கிறார்.
அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் நம்கீனின் சுவையை சொல்வதாக அமைகிறது.
கெருலால் அந்த ஊரை விட்டு கிளம்பும் போது அந்த வலியை உங்களாலும் உணர முடிகிறது. படத்தில் இருக்கும் இதமான இருட்டை தாண்டிய வெளிச்சத்தை வேண்டவே இல்லை. உண்மையில் இந்த படத்தில் உப்பின் சுவை மட்டுமல்ல வாழ்வில் காணும் அத்தனை சுவைகளும் கொட்டி கிடக்கிறது.
Labels:
இந்தி படங்கள்,
குல்ஜார் சாப் படங்கள்
Sunday, June 13, 2010
S.M.A.R.T. -
If we fail to plan
We are planning to fail - என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.
அதாவது நாம் திட்டமிட தவறினால்
தோல்விக்கு தான் திட்டமிடுகிறோம்
- என்று அர்த்தம்.
ஒவ்வொரு காரியத்திற்கும் 'இன்னது' செய்ய போகிறோம் என்று சொல்லிக் கொள்வது அல்லது திட்டமிடுவது அவசியமாகிறது.
ஆங்கிலத்திலே "Goals" என்றும் "Objectives" என்றும் இரண்டு வார்த்தைகள் இருக்கிறது. இவை இரண்டுக்குமே வெவ்வேறு விளக்கங்கள் (recognized definitions) உள்ளது.
எனக்கு தெரிந்தவரை..
"Goals" என்பதற்கு 'இலக்கு' அல்லது 'லட்சியம்' என்பதாக மொழி பெயர்க்கலாம். அதாவது, நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்ற வினாவுக்கான விடை தான் "Goals"-
இதில் "Objectives" என்பது உங்களது அந்த 'இலக்கை' 'லட்சியத்தை' அடைய என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றியது.
ஒரு "Goal" க்கு ஒன்றுக்கு மேற்பட்ட "Objectives" - "குறிகோள்' இருக்கும். கோலானது எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உங்களது 'படிப்பு', 'தொழில்', 'குடும்பம்', 'பழக்க வழக்கம்' இவ்வளவு ஏன் வலைப்பதிவில் எழுதுவது இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக:
"Goal" :
1. நான் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்
இதற்கான "Objectives":
1.1 தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
1.2 மதுபானம் குடிப்பதை நிறுத்த வேண்டும்
1.3 புகை பிடிப்பதை விட வேண்டும்
1.4 தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும்
"Goal"
2. நான் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து இருக்க கூடாது
இதற்கான "Objectives":
2.1 இருக்கும் கடன்களை அடைத்து முடிக்க வேண்டும்
2.2 குறிப்பிட்ட வீண் சிலவை குறைக்க வேண்டும்
2.3 சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்
2.4 ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும்
இப்படியாக உங்களின் "Goals"ஐ அடைய தேவையான "Objectives"ஐ கண்டுபிடித்து எழுதி வைக்க வேண்டும்.
"Objectives"ஐ பொறுத்த வரையில் அது S.M.A.R.T. ஆக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வது உண்டு
S.M.A.R.T என்றால்..
Specific - குறிப்பிடும்படியான
Measurable - அளக்கத்தக்க
Achievable - முடியக்கூடிய
Realistic - யதார்த்தமான
Time-Bound - காலவரையறைக்குட்பட்ட
**************************************************
1. Specific - குறிப்பிடும்படியான
"Objectives" விளக்கமாக, தெளிவாக இருக்க வேண்டும். 'இது தான்' என்று ஆணி அடிப்பது போல் நெத்தி பொட்டில் சுடுவது போல் இருக்க வேண்டும்.
உதாரணமாக, தொழுகையை தொடங்குவதற்கு முன்னர் 'நான் கிப்லாவை (கஃபத்துல்லாஹ்வை) முன்னோக்கி இந்த இமாமை (தலைவரை) பின்பற்றி இந்த நேரத்து (ஐவேளை தொழுகையில் எந்த வேளை என்று குறிப்பிட வேண்டும்) தொழுகையை இத்தனை ரக்கத்துகள் (பொதுவாக இரண்டு அல்லது நான்கு) தொழுவதாக சொல்லிக் (நினைத்து) கொள்கிறோமே.. அதை போல் தெளிவாக இருக்க வேண்டும்.
என்னை பொருத்த வரை மேலே கண்ட தொழுகைக்கான நிய்யத் என்பது ஒரு well-defined obejectives ஆகும்.
2. Measurable - அளக்கத்தக்க
நோன்பு 27 லைலத்துல் கத்ர் வர்ரதுக்குள்ளே 2 முறை குரான் ஷரீஃபை ஓதி முடிச்சிடணும்னு நினைக்கிறோம் இல்லையா? - இதில் '2' தான் அளக்கத்தக்கவாக உள்ளது.
இன்னொரு உதாரணம்: நான் உடற்பயிற்சி செய்வேன் என்று சொல்வதற்கு பதிலாக வாரத்தில் இரண்டு நாள் சனி, ஞாயிறு உடற்பயிற்சி செய்வேன் என்று இருக்க வேண்டும். அந்த Quantity இங்கே அவசியப்படுகிறது.
3. Achievable - முடியக்கூடிய
கணக்கு பரீச்சையில் 10, 15 மார்க் வாங்குகிற மாணவன் ஒருவன் 35, 40 மார்க் வாங்கி பாஸாக வேண்டும் என்றால் முடியக்கூடியதாக இருக்கலாம். அவனே 100 க்கு 100 மார்க் வாங்க வேண்டும் என்று objectives அமைப்பது அடையக் கூடியது தானா என்று பார்க்க வேண்டும்.
முயன்றால முடியலாம் என்பது உண்மையாக இருந்தாலும் முடியாமல் போய் Motivation குறைந்து விடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.
4. Realistic - யதார்த்தமான
"Objectives" யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றால் சுலபமானதாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. தவிர Achievable எல்லாம் Realistic ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. இருக்கின்ற KSA (KSA - Kingdom of Saudi Arabia அல்ல அது Knowledge, Skills, Attitudes), காலம், பணம் போன்ற வளவசதிகளை வைத்துக் கொண்டு முடியக்கூடியது தானா என்று சிந்திக்க வேண்டும்.
5. Time-Bound - காலவரையறைக்குட்பட்ட
இது எந்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு விதிப்பது. ஒரு 4 மாசத்திற்குள் 5 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வதை குறிக்கும்.
இதில் '4 மாதம்' என்ற காலவறையறைக்குள் உங்கள் Objectivesஐ நிறைவேற்றுவது என்று விதித்து கொள்வது தான் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற அவசரத்தையும் (urgency), தூண்டுகோலையும் (motivation), செயலையுமே (action) உருவாக்கி தரும்.
--------------------------------------------
நீங்களும் வேண்டுமென்றால் டிரை பண்ணி பாருங்களேன்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி 'நல்ல வலைப்பதிவாளராக வர வேண்டும்' என்ற கோலை வகுத்து கொண்டு 'மொக்கைகள் எழுதுவ்தில்லை, பதிவரசியலில் ஈடுபடுவதில்லை, etc., etc., என்ற அப்ஜெக்டிவ்சையும் வைத்துக் கொண்டு முயன்று பார்க்கலாமே..
We are planning to fail - என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.
அதாவது நாம் திட்டமிட தவறினால்
தோல்விக்கு தான் திட்டமிடுகிறோம்
- என்று அர்த்தம்.
ஒவ்வொரு காரியத்திற்கும் 'இன்னது' செய்ய போகிறோம் என்று சொல்லிக் கொள்வது அல்லது திட்டமிடுவது அவசியமாகிறது.
ஆங்கிலத்திலே "Goals" என்றும் "Objectives" என்றும் இரண்டு வார்த்தைகள் இருக்கிறது. இவை இரண்டுக்குமே வெவ்வேறு விளக்கங்கள் (recognized definitions) உள்ளது.
எனக்கு தெரிந்தவரை..
"Goals" என்பதற்கு 'இலக்கு' அல்லது 'லட்சியம்' என்பதாக மொழி பெயர்க்கலாம். அதாவது, நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்ற வினாவுக்கான விடை தான் "Goals"-
இதில் "Objectives" என்பது உங்களது அந்த 'இலக்கை' 'லட்சியத்தை' அடைய என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றியது.
ஒரு "Goal" க்கு ஒன்றுக்கு மேற்பட்ட "Objectives" - "குறிகோள்' இருக்கும். கோலானது எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், உங்களது 'படிப்பு', 'தொழில்', 'குடும்பம்', 'பழக்க வழக்கம்' இவ்வளவு ஏன் வலைப்பதிவில் எழுதுவது இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக:
"Goal" :
1. நான் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்
இதற்கான "Objectives":
1.1 தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
1.2 மதுபானம் குடிப்பதை நிறுத்த வேண்டும்
1.3 புகை பிடிப்பதை விட வேண்டும்
1.4 தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும்
"Goal"
2. நான் பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து இருக்க கூடாது
இதற்கான "Objectives":
2.1 இருக்கும் கடன்களை அடைத்து முடிக்க வேண்டும்
2.2 குறிப்பிட்ட வீண் சிலவை குறைக்க வேண்டும்
2.3 சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்
2.4 ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும்
இப்படியாக உங்களின் "Goals"ஐ அடைய தேவையான "Objectives"ஐ கண்டுபிடித்து எழுதி வைக்க வேண்டும்.
"Objectives"ஐ பொறுத்த வரையில் அது S.M.A.R.T. ஆக இருக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வது உண்டு
S.M.A.R.T என்றால்..
Specific - குறிப்பிடும்படியான
Measurable - அளக்கத்தக்க
Achievable - முடியக்கூடிய
Realistic - யதார்த்தமான
Time-Bound - காலவரையறைக்குட்பட்ட
**************************************************
1. Specific - குறிப்பிடும்படியான
"Objectives" விளக்கமாக, தெளிவாக இருக்க வேண்டும். 'இது தான்' என்று ஆணி அடிப்பது போல் நெத்தி பொட்டில் சுடுவது போல் இருக்க வேண்டும்.
உதாரணமாக, தொழுகையை தொடங்குவதற்கு முன்னர் 'நான் கிப்லாவை (கஃபத்துல்லாஹ்வை) முன்னோக்கி இந்த இமாமை (தலைவரை) பின்பற்றி இந்த நேரத்து (ஐவேளை தொழுகையில் எந்த வேளை என்று குறிப்பிட வேண்டும்) தொழுகையை இத்தனை ரக்கத்துகள் (பொதுவாக இரண்டு அல்லது நான்கு) தொழுவதாக சொல்லிக் (நினைத்து) கொள்கிறோமே.. அதை போல் தெளிவாக இருக்க வேண்டும்.
என்னை பொருத்த வரை மேலே கண்ட தொழுகைக்கான நிய்யத் என்பது ஒரு well-defined obejectives ஆகும்.
2. Measurable - அளக்கத்தக்க
நோன்பு 27 லைலத்துல் கத்ர் வர்ரதுக்குள்ளே 2 முறை குரான் ஷரீஃபை ஓதி முடிச்சிடணும்னு நினைக்கிறோம் இல்லையா? - இதில் '2' தான் அளக்கத்தக்கவாக உள்ளது.
இன்னொரு உதாரணம்: நான் உடற்பயிற்சி செய்வேன் என்று சொல்வதற்கு பதிலாக வாரத்தில் இரண்டு நாள் சனி, ஞாயிறு உடற்பயிற்சி செய்வேன் என்று இருக்க வேண்டும். அந்த Quantity இங்கே அவசியப்படுகிறது.
3. Achievable - முடியக்கூடிய
கணக்கு பரீச்சையில் 10, 15 மார்க் வாங்குகிற மாணவன் ஒருவன் 35, 40 மார்க் வாங்கி பாஸாக வேண்டும் என்றால் முடியக்கூடியதாக இருக்கலாம். அவனே 100 க்கு 100 மார்க் வாங்க வேண்டும் என்று objectives அமைப்பது அடையக் கூடியது தானா என்று பார்க்க வேண்டும்.
முயன்றால முடியலாம் என்பது உண்மையாக இருந்தாலும் முடியாமல் போய் Motivation குறைந்து விடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.
4. Realistic - யதார்த்தமான
"Objectives" யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றால் சுலபமானதாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. தவிர Achievable எல்லாம் Realistic ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. இருக்கின்ற KSA (KSA - Kingdom of Saudi Arabia அல்ல அது Knowledge, Skills, Attitudes), காலம், பணம் போன்ற வளவசதிகளை வைத்துக் கொண்டு முடியக்கூடியது தானா என்று சிந்திக்க வேண்டும்.
5. Time-Bound - காலவரையறைக்குட்பட்ட
இது எந்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு விதிப்பது. ஒரு 4 மாசத்திற்குள் 5 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வதை குறிக்கும்.
இதில் '4 மாதம்' என்ற காலவறையறைக்குள் உங்கள் Objectivesஐ நிறைவேற்றுவது என்று விதித்து கொள்வது தான் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என்ற அவசரத்தையும் (urgency), தூண்டுகோலையும் (motivation), செயலையுமே (action) உருவாக்கி தரும்.
--------------------------------------------
நீங்களும் வேண்டுமென்றால் டிரை பண்ணி பாருங்களேன்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி 'நல்ல வலைப்பதிவாளராக வர வேண்டும்' என்ற கோலை வகுத்து கொண்டு 'மொக்கைகள் எழுதுவ்தில்லை, பதிவரசியலில் ஈடுபடுவதில்லை, etc., etc., என்ற அப்ஜெக்டிவ்சையும் வைத்துக் கொண்டு முயன்று பார்க்கலாமே..
Wednesday, May 26, 2010
ஏ ஃபார் ஆல்கஹால் - ஹராம்
1
ஒரு குடிமகன் போலீஸுக்கு டெலிபோன் செய்து அழுதிருக்கிறான், "சார், திருடன் என்னோட கார்லேந்து டேஷ் போர்ட், ஸ்டியரிங், பிரேக் பெடல் இவ்வளவு ஏன் ஆக்ஸிலேட்டரையும் விட்டு வைக்காம எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான் சார், நீங்க தான் எப்படியாவது திருடனை கண்டு பிடிச்சு என் சாமான எல்லாம் திருப்பி தரணும்.." என்றானாம்..
போலீஸ்காரர்கள் இது குறித்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கிய போது போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு டெலிபோன் வந்தது, எடுத்து பேசினால், கொஞ்ச நேரத்துக்கு முந்தி பேசுன அதே வாய்ஸ், 'பராவாயில்லை' இடையில் வந்த விக்கலை தொடர்ந்து 'நான் தான் தெரியாம பின் சீட்டில ஏறிட்டேன்' என்றதும் 'டொக்..'
டெலிபோன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்..
மதுபானம் அருந்துபவர்கள் பற்றி பரவலாக ஆங்கிலத்தில் இணையத்தில் புழங்கப்படும் ஜோக் இது.
இன்னொரு குடிமகன் நன்றாக குடித்து விட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஒரு பெண்மணியின் அருகில் போய் அமர்ந்திருக்கிறார். அந்த பெண்மணி இந்த குடிமகனிடம், 'நீ குடித்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் 'ஃப்பூ' என்று ஊதி 'ஆமாம்' என்று தலையை ஆட்டியிருக்கிறான்.
உடனே அந்த பெண்மணி கோபமாக 'நிச்சயமாக சொல்கிறேன்.. நீ நரகத்திற்கு தான் செல்வாய்..' என்றார்களாம்
உடனே அந்த குடிமகன் பேருந்திலிருந்து குதித்து விட்டு, 'நல்ல வேலை சொன்னீர்கள், நான் அங்கே போகவில்லை' என்றானாம்..
குடிமகன்கள் நரகத்திற்கு செல்வது ஒருபுறமிருக்கட்டும், சொர்க்கத்தில் மது கிடைக்குமாமே? அதுவும் குரான் ஷரீஃப் சொல்கிறதாமே?
2
நானும் எனது சீன நண்பர் ஒருவரும் 'கோபி தியம்' என்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்றோம், அங்கே அவர் சீனவங்க கடையில் 'வெள்ளை சோறும், கோழியும்' வாங்கினார். நான் போய் முஸ்லீம் ஃபுட் கடையில் 'வெள்ளை சோறும் கோழியும்' வாங்கி வந்தேன்.
இருவரும் அருகருகே அமர்ந்தோம். அவரவர் உணவை அவரவர் சாப்பிட்டோம். அவர் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான் நான் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான். இரண்டுமே ஒன்று தான் ஆனாக்கா வேற வேற..
அது எப்படி வேற வேற , 'ஃபோஃத் சிக்கன் வாட்? ஸோ, சேம் வாட்?' என்று நீங்கள் கேக்கலாம், நான், 'யெஸ், சேம் சேம்.. பட்.. டிஃபரெண்ட்..' என்று பதில் சொல்வேன்.
எப்படி? சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்..?
முதலில் சேம் சேமை பார்ப்போம்..
கோழியை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.. நாங்கள் இருவரும் சாப்பிட்டதற்கும் பெயர் கோழி தான்.. இரண்டுமே ஒரே தாய் வயிற்றில் பிறந்து ஒரே பண்ணையில் வளர்ந்து ஒரே தீனியை தின்று வளர்ந்தது என்றும் வைத்துக் கொள்வோம்.. அந்த வகையில் சேம் சேம் தான்..
ஆனால் டிஃபரெண்ட்.. எப்படியெனில்.. எனது நண்பர் சாப்பிட்ட கோழியானது இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படவில்லை. ஆகையினால், நான் சாப்பிட முடியாது. அந்த கோழி எனக்கு ஹராமாகிறது. அந்த வகையில் இரண்டும் வேறு வேறாகிறது.
3
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்..
-------------------------------------------------------
A.
"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ......"
ஸூரத்துல் பகரா
வசனம் 2:219
--------------------------------------------
B.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
ஸூரத்துல் மாயிதா
வசனம் 5:90
-----------------------------------------------
ஆக, குரான் ஷரீஃப் மதுபானத்தை தடை செய்வதற்கான காரணம் (In Summary from A and B) அதிலுள்ள பலனை விட கேடுகள் அதிகம் என்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாக இருப்பதும், தவிர்த்தால் வெற்றியடையலாம் என்பதுமேயாகும்.
4
வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தில் வழங்கப்படும் மதுவை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை இனி படித்து புரிந்து கொள்வோம்..
-------------------------------------------------------
A.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும் (rivers of incorruptibe water), தன் சுவை மாறாத பாலாறுகளும் (rivers of milk of which of the taste never deteriorates), அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், (rivers of wine of joyous taste for the drinkers), தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன (and rivers of clear and pure honey); இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தககயோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
ஸூரத்து முஹம்மது (ஸல்)
வசனம் 47:15
மேலே கூறப்பட்ட வசனத்தில் பிரதானமாக இருப்பது இந்த உலகத்தில் இறைவனுக்கு பயந்து தனிமையிலும் தீய காரியங்களை செய்யாமல்
பயபக்தியுடன் இருந்த காரணத்தால் பாலாறும் தேனாறும் ஓடும் சுவர்கத்தில் இருப்பவர்களும் தீய காரியங்களில் ஈடுபட்டதினால் கொதிக்கும் நீர் குடித்து
குடல் துண்டாகி இருப்பவர்களும் சமமா? என்று கேட்கிறது..
ஆனால் சுவர்க்கத்தை பற்றி கூறும் போது 'அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்..' என்று வந்துள்ளதே.. அப்படி என்றால் இங்கே அனுமதிக்கப்படாத மது சொர்க்கத்தில் அருந்த அனுமதியுண்டா?
5
---------------------------------------------------------
இது வரை..
1.வது அத்தியாயம்:
சொர்க்கத்தில் மது அனுமதிக்கப்படுகிறதாமே? என்ற கேள்வி எழுந்தது
2.வது அத்தியாயம்:
இந்த உலகத்தில் அனுமதிக்கப்பட்ட உணவில் (உதாரணமாக கோழி கறி) கூட இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட வில்லை என்றால் அனுமதி கிடையாது.
3.வது அத்தியாயம்:
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்
4வது அத்தியாயம்:
நல்லவர்களான சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படுவதாக வரும் குரான் ஷரீஃப் வசனத்தில் 'மதுரச ஆறுகளும்..' இருப்பதாக சொல்லப்படுவது
-----------------------------------------
6
இனி,
சொர்க்கத்தில் வழங்கப்படுவதாக கூறப்படும் 'மதுரசம்' எத்தகையது என்பது பற்றிய குரான் ஷரீஃப் வசனங்கள்:
A.
83:22 - நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) "நயீம்" என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23 - ஆசனங்களில் அமர்ந்து பார்ப்பார்கள்
83:24 - அவர்களுடைய முகங்களிலிருந்தே பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்
83:25 - முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்
ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்
வசனம் 83: 22 - 25.
------------------------------------------
B.
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பரிசுத்தமான பானமும் புகட்டுவான் (their Lord having given them a cleansed drink).
ஸூரத்துத் தஹ்ர்
வசனம் 76: 21
-----------------------------------------------------
C.
37:43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37: 46 (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:47 அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்திதடுமாறுபவர்களும் அல்லர்.
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் 37:43 - 47
--------------------------------------------------------------------------
D.
56:17 நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்
56:18 தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்)
56:19 (அப்பானங்களை பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
ஸூரத்து வாகிஆ
வசனம் 56: 17 - 19
7
சுவர்க்கத்தில் வழங்கப்படுவதாக சொல்லப்படும் மதுவானது எத்தகையது என்றால்:
1. முத்திரையிடப்பட்ட தெளிவானது
2. பரிசுத்தமான பானம்
3. தெளிவான பானம்
4. மிக்க வெண்மையானது, அருந்துவோருக்கு மதுரமானது
5. அதில் கெடுதியும் இராது - அதை அருந்தினால் புத்தி தடுமாற்றமும் இராது
6. அதை அருந்தினால், 'தலைவலி' போன்ற தலை சம்மந்தப்பட்ட நோயும் ஏற்படாது - மதிமயக்கமும் ஏற்படாது
8
இறுதியாக, மதுபானம் அதில் இருக்கும் கெடுதிகளால் தான் குடிப்பதற்கு அனுமதியில்லை. அத்தகைய கேடுகளை எடுத்து விட்டால் அதில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட பலன்கள் மட்டும் எஞ்சி நிற்கும். அதை அருந்துவதில் தவறேதும் இல்லை.
(2வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை பார்க்கவும்) நானும் எனது சீன நண்பரும் இருவருமே கோழி கறி தான் சாப்பிட்டோம் என்றாலும் 'இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதன்' காராணமாகவே இரண்டும் வேறு வேறாகும் போது 'பயபக்தியுடையவர்களுக்கு பரிசாக இறைவனே வழங்கும்' மதுபானத்தில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா..?
சுருக்கமா சிங்கப்பூர் ஸ்டைலில் சொல்லணும்னா இரண்டும் "சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்.."
ஒரு குடிமகன் போலீஸுக்கு டெலிபோன் செய்து அழுதிருக்கிறான், "சார், திருடன் என்னோட கார்லேந்து டேஷ் போர்ட், ஸ்டியரிங், பிரேக் பெடல் இவ்வளவு ஏன் ஆக்ஸிலேட்டரையும் விட்டு வைக்காம எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டான் சார், நீங்க தான் எப்படியாவது திருடனை கண்டு பிடிச்சு என் சாமான எல்லாம் திருப்பி தரணும்.." என்றானாம்..
போலீஸ்காரர்கள் இது குறித்து கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கிய போது போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு டெலிபோன் வந்தது, எடுத்து பேசினால், கொஞ்ச நேரத்துக்கு முந்தி பேசுன அதே வாய்ஸ், 'பராவாயில்லை' இடையில் வந்த விக்கலை தொடர்ந்து 'நான் தான் தெரியாம பின் சீட்டில ஏறிட்டேன்' என்றதும் 'டொக்..'
டெலிபோன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்..
மதுபானம் அருந்துபவர்கள் பற்றி பரவலாக ஆங்கிலத்தில் இணையத்தில் புழங்கப்படும் ஜோக் இது.
இன்னொரு குடிமகன் நன்றாக குடித்து விட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார். பேருந்தில் ஒரு பெண்மணியின் அருகில் போய் அமர்ந்திருக்கிறார். அந்த பெண்மணி இந்த குடிமகனிடம், 'நீ குடித்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவன் 'ஃப்பூ' என்று ஊதி 'ஆமாம்' என்று தலையை ஆட்டியிருக்கிறான்.
உடனே அந்த பெண்மணி கோபமாக 'நிச்சயமாக சொல்கிறேன்.. நீ நரகத்திற்கு தான் செல்வாய்..' என்றார்களாம்
உடனே அந்த குடிமகன் பேருந்திலிருந்து குதித்து விட்டு, 'நல்ல வேலை சொன்னீர்கள், நான் அங்கே போகவில்லை' என்றானாம்..
குடிமகன்கள் நரகத்திற்கு செல்வது ஒருபுறமிருக்கட்டும், சொர்க்கத்தில் மது கிடைக்குமாமே? அதுவும் குரான் ஷரீஃப் சொல்கிறதாமே?
2
நானும் எனது சீன நண்பர் ஒருவரும் 'கோபி தியம்' என்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்றோம், அங்கே அவர் சீனவங்க கடையில் 'வெள்ளை சோறும், கோழியும்' வாங்கினார். நான் போய் முஸ்லீம் ஃபுட் கடையில் 'வெள்ளை சோறும் கோழியும்' வாங்கி வந்தேன்.
இருவரும் அருகருகே அமர்ந்தோம். அவரவர் உணவை அவரவர் சாப்பிட்டோம். அவர் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான் நான் சாப்பிட்டதும் வெள்ளை சோறு கோழி தான். இரண்டுமே ஒன்று தான் ஆனாக்கா வேற வேற..
அது எப்படி வேற வேற , 'ஃபோஃத் சிக்கன் வாட்? ஸோ, சேம் வாட்?' என்று நீங்கள் கேக்கலாம், நான், 'யெஸ், சேம் சேம்.. பட்.. டிஃபரெண்ட்..' என்று பதில் சொல்வேன்.
எப்படி? சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்..?
முதலில் சேம் சேமை பார்ப்போம்..
கோழியை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.. நாங்கள் இருவரும் சாப்பிட்டதற்கும் பெயர் கோழி தான்.. இரண்டுமே ஒரே தாய் வயிற்றில் பிறந்து ஒரே பண்ணையில் வளர்ந்து ஒரே தீனியை தின்று வளர்ந்தது என்றும் வைத்துக் கொள்வோம்.. அந்த வகையில் சேம் சேம் தான்..
ஆனால் டிஃபரெண்ட்.. எப்படியெனில்.. எனது நண்பர் சாப்பிட்ட கோழியானது இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படவில்லை. ஆகையினால், நான் சாப்பிட முடியாது. அந்த கோழி எனக்கு ஹராமாகிறது. அந்த வகையில் இரண்டும் வேறு வேறாகிறது.
3
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்..
-------------------------------------------------------
A.
"(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ......"
ஸூரத்துல் பகரா
வசனம் 2:219
--------------------------------------------
B.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
ஸூரத்துல் மாயிதா
வசனம் 5:90
-----------------------------------------------
ஆக, குரான் ஷரீஃப் மதுபானத்தை தடை செய்வதற்கான காரணம் (In Summary from A and B) அதிலுள்ள பலனை விட கேடுகள் அதிகம் என்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாக இருப்பதும், தவிர்த்தால் வெற்றியடையலாம் என்பதுமேயாகும்.
4
வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தில் வழங்கப்படும் மதுவை பற்றி குரான் ஷரீஃப் சொல்வதை இனி படித்து புரிந்து கொள்வோம்..
-------------------------------------------------------
A.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும் (rivers of incorruptibe water), தன் சுவை மாறாத பாலாறுகளும் (rivers of milk of which of the taste never deteriorates), அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், (rivers of wine of joyous taste for the drinkers), தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன (and rivers of clear and pure honey); இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தககயோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
ஸூரத்து முஹம்மது (ஸல்)
வசனம் 47:15
மேலே கூறப்பட்ட வசனத்தில் பிரதானமாக இருப்பது இந்த உலகத்தில் இறைவனுக்கு பயந்து தனிமையிலும் தீய காரியங்களை செய்யாமல்
பயபக்தியுடன் இருந்த காரணத்தால் பாலாறும் தேனாறும் ஓடும் சுவர்கத்தில் இருப்பவர்களும் தீய காரியங்களில் ஈடுபட்டதினால் கொதிக்கும் நீர் குடித்து
குடல் துண்டாகி இருப்பவர்களும் சமமா? என்று கேட்கிறது..
ஆனால் சுவர்க்கத்தை பற்றி கூறும் போது 'அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்..' என்று வந்துள்ளதே.. அப்படி என்றால் இங்கே அனுமதிக்கப்படாத மது சொர்க்கத்தில் அருந்த அனுமதியுண்டா?
5
---------------------------------------------------------
இது வரை..
1.வது அத்தியாயம்:
சொர்க்கத்தில் மது அனுமதிக்கப்படுகிறதாமே? என்ற கேள்வி எழுந்தது
2.வது அத்தியாயம்:
இந்த உலகத்தில் அனுமதிக்கப்பட்ட உணவில் (உதாரணமாக கோழி கறி) கூட இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட வில்லை என்றால் அனுமதி கிடையாது.
3.வது அத்தியாயம்:
மதுவை தடை செய்வதற்கான குரான் ஷரீஃப் கூறும் காரணம்
4வது அத்தியாயம்:
நல்லவர்களான சுவர்க்கவாசிகளுக்கு வழங்கப்படுவதாக வரும் குரான் ஷரீஃப் வசனத்தில் 'மதுரச ஆறுகளும்..' இருப்பதாக சொல்லப்படுவது
-----------------------------------------
6
இனி,
சொர்க்கத்தில் வழங்கப்படுவதாக கூறப்படும் 'மதுரசம்' எத்தகையது என்பது பற்றிய குரான் ஷரீஃப் வசனங்கள்:
A.
83:22 - நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) "நயீம்" என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23 - ஆசனங்களில் அமர்ந்து பார்ப்பார்கள்
83:24 - அவர்களுடைய முகங்களிலிருந்தே பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்
83:25 - முத்திரையிடப்பட்ட தெளிவான மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்
ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்
வசனம் 83: 22 - 25.
------------------------------------------
B.
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பரிசுத்தமான பானமும் புகட்டுவான் (their Lord having given them a cleansed drink).
ஸூரத்துத் தஹ்ர்
வசனம் 76: 21
-----------------------------------------------------
C.
37:43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37: 46 (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:47 அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்திதடுமாறுபவர்களும் அல்லர்.
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
வசனம் 37:43 - 47
--------------------------------------------------------------------------
D.
56:17 நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காக) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்
56:18 தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்)
56:19 (அப்பானங்களை பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
ஸூரத்து வாகிஆ
வசனம் 56: 17 - 19
7
சுவர்க்கத்தில் வழங்கப்படுவதாக சொல்லப்படும் மதுவானது எத்தகையது என்றால்:
1. முத்திரையிடப்பட்ட தெளிவானது
2. பரிசுத்தமான பானம்
3. தெளிவான பானம்
4. மிக்க வெண்மையானது, அருந்துவோருக்கு மதுரமானது
5. அதில் கெடுதியும் இராது - அதை அருந்தினால் புத்தி தடுமாற்றமும் இராது
6. அதை அருந்தினால், 'தலைவலி' போன்ற தலை சம்மந்தப்பட்ட நோயும் ஏற்படாது - மதிமயக்கமும் ஏற்படாது
8
இறுதியாக, மதுபானம் அதில் இருக்கும் கெடுதிகளால் தான் குடிப்பதற்கு அனுமதியில்லை. அத்தகைய கேடுகளை எடுத்து விட்டால் அதில் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட பலன்கள் மட்டும் எஞ்சி நிற்கும். அதை அருந்துவதில் தவறேதும் இல்லை.
(2வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டதை பார்க்கவும்) நானும் எனது சீன நண்பரும் இருவருமே கோழி கறி தான் சாப்பிட்டோம் என்றாலும் 'இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதன்' காராணமாகவே இரண்டும் வேறு வேறாகும் போது 'பயபக்தியுடையவர்களுக்கு பரிசாக இறைவனே வழங்கும்' மதுபானத்தில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமா..?
சுருக்கமா சிங்கப்பூர் ஸ்டைலில் சொல்லணும்னா இரண்டும் "சேம்.. சேம்.. பட் டிஃபரெண்ட்.."
Sunday, May 23, 2010
இந்த சந்திப்பிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும் - குல்சார் சாப் எழுதிய பாடல்
ஆன்ந்தி எனும் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்:
1. இஸ் மோடு சே ஜாத்தே ஹெய்ன் - இந்த பதிவில் இதன் தோராயமான மொழிபெயர்ப்பை படிக்கலாம்
2. சலாம் கீஜியே ஆலி ஜனாப் ஆயிஹே - முஹம்மது ரஃபி சாப் அவர்கள் பாடிய கவாலி. ஐந்து வருடத்திற்கு மட்டும் ஓட்டு கேட்டு வரும் கட்சி தலைவர்/தலைவிகளை பார்த்து மக்கள் கிண்டலடித்து பாடுவது போல் அமைந்திருக்கும். இந்த பாடலின் மொழிபெயர்ப்பு பின்பு பதியப்படும் (தேர்தல் நேரத்தில்)
3. தும் ஆகயே நூர் ஆகயா ஹெய்ன் - நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது.. நீ மட்டும் வந்திரா விட்டால்.. இப்படி போகிறது அந்த பாடல்.
4. தேரே பினா ஜிந்தகி சே கோயி - இந்த அல்டிமேட் பாடலை பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
இப்போது இந்த 'இஸ் மோடு சே ஜாதே ஹெய்ன்' என தொடங்கும் இந்த பாடல் தொடங்கும் சூழலுக்குள் செல்ல வேண்டியதாகிறது.
காதலன் அவன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். பெரிய தங்கும்விடுதியில் துணை மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலியானவள் பெரிய வியாபாரியின் மகள். அந்த வியாபாரியோ தனது மகளை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அந்த காதலனும் காதலியும் தங்கள் காதலையும் வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சத்தையும் இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த பாடல் அந்த காதலனும் காதலியும் கணவன் மனைவியாகி கருத்து வேறுபாடுகளால் 9 வருடங்களாக பிரிந்து தற்போது மனைவி பெரிய அரசியல் கட்சியின் தலைவியாகி கனவன் மேலாளராக இருக்கும் அந்த ஹோட்டலில் வந்து தங்க நேரிடுகிறது.
தனது மனைவி வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கணவருக்கு தெரியும். தனது கணவர் தான் அந்த ஹோட்டலின் மேலாளர் என்பதை தன்னை தூக்கி வளர்த்த பிந்தா காக்கா என்பவர் மூலமாக தெரிந்து கொள்கிறாள். பிந்தா காக்கா என்பவர் இருவருக்கும் பிறந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக கணவருடனேயே தங்கியிருந்திருப்பார்.
தான் தூக்கி வளர்த்த பிள்ளையை 9 வருடங்கள் கழித்து அவளுக்கு பிடித்த கீரை செய்து கொண்டு கொடுத்து அவளின் கணவருடனேயே தங்கி விட்டதாக சொல்லி விட்டு விடைபெறும் போது இந்த பாடல் தொடங்குகிறது.
இந்த பாடலின் முடிவில் மனைவி 9 வருடங்களுக்கு பிறகு தனது கணவனை சந்திக்கிறாள்
கட் டூ.. காதலன் காதலி அகேய்ன்..
அவர்கள் இருவரும் வாழ்க்கை எனும் சந்திப்பில் (சந்திப்பு என்றால் பல சாலைகள் சந்திக்கும் இடம்) நிற்கிறார்கள். அவர்களின் முன்னால் நிறைய பாதைகள் இருக்கின்றன.. எந்த வழியே செல்வது என்பது அவர்கள் முன் நிற்கும் கேள்வி. காதலிக்கு தான் தேர்ந்தெடுக்கும் பாதை காதலனிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதும் காதலனுக்கு காதலியிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்...
Is mod se jaate hain - 2
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe - 2
சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை
- மேலே சொன்ன இரு பாதைகளில் ஒன்றினை வழியாக தேர்ந்து எடுக்க வேண்டும், அப்படி எடுத்து சென்றால் -
Patthar ki haveli ko
Shishe ke gharaundo mein
Tinko ke nasheman tak
கற்களாலான அரண்மனை
கண்ணாடியினாலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
-
'கற்களாலான அரண்மனை' என்பது பிரிந்து விடாத நிலையான வாழ்க்கை அதாவது நீடித்து நிற்கும் மணவாழ்வு
கண்ணாடி வீடு என்பது சிறிது காலம் தாங்கும் ஆனால் ரொம்ப பிரஸ்ஸரை தாங்க முடியாது, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடும் மணவாழ்வு
வைக்கோலாலான சிறு குடில் என்பது இந்த இடத்தில் ஊதி விட்டால் கூட பறந்து விடும்.. பவுண்டேஷன் இல்லாத அதாவது அடித்தளம் இல்லாத கொஞ்சம் நாள் கூட வாழாமல் பிரிந்து விடும் இந்த கால மண வாழ்க்கையை கூட உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்..
மேலே சொன்ன இந்த மூன்று சேரிடங்களும் உள்ளது. அந்த லவ் பேர்ட்ஸ் மிகவும் ஜாக்கிரதையாக தங்களது பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்..
Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..
ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..
Aandhi ki tarha ud kar ik raah guzarti hai - 2
Sharmaati huwi koyi qadmo se utarti hai
In reshmi raaho mein ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai
Is mod se jaati hai
புயலைப் போல்
கடுமையான
பாதைகளும்
உண்டு
வெட்கப்பட்டுவதை போல்
நழுவி செல்லும்
பாதைகளும்
உண்டு -
இத்தகைய
பட்டு போன்ற
பாதைகளில்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
உன்னிடம்
நிச்சயம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Ik door se aati hai paas aake palat-ti hai - 2
Ik raah akeli si rukti hai na chalti hai
Ye soch ke baithhi hu ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai is mod se jaati hai
சில பாதைகள்
தூரத்திலிருந்து வருகிறது
(உன்னிடம் அழைத்து செல்லும் என்று நினைத்த போது)
அந்த பாதை
திரும்பி (ஏமாற்றி விட்டு)
பக்கத்திலேயே ( பயணத்தை தொடங்கிய இடத்திற்கே)
வந்து சேர்த்துவிடுகிறது
ஒரு பாதை
நகராமல் (தவறான வழியைகாட்டுகிறது)
தனிமையில் உள்ளது
நான் யோசனையில்
உட்கார்ந்து விட்டேன்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
நிச்சயம்
உன்னிடம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Is mod se jaate hain - 2
Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe
Patthar ki haveli ko
shishe ke gharaundo mein
Tinko ke nasheman
tak (tak means all the above three)
Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை
கற்களாலான அரண்மனை
கண்ணாடியிலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
இந்த
மூன்றில் ஒன்றிற்கு
செல்ல
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
------------------------------------------------------------------------------------------------
குல்சார் சாப் பாகிஸ்தானில் உள்ள 'டினா' எனும் ஊரில் பிறந்ததினாலோ என்னவோ இவர் பாடல்களில் நிறைய உருது வார்த்தைகள் கல்ந்திருக்கும்,
ஆர்.டி.பர்மன் இந்த பாட்டிற்கு இசையமைத்து முடித்த பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாராம்.. திடீரென்று.. இந்த பாடலில் உள்ள ஒரு வார்த்தையான 'Tinko ke nasheman' வில் வரும் 'நஷேமனை' குறிப்பிட்டு இது எங்கே உள்ளது என்று கேட்டாராம்.
அதற்கு குல்சார் 'நஷேமன்' என்றால் 'குடிசை' என்று விளக்கினாராம்.
சஞ்சீவ் குமாரும் கூட இதே கேள்வியை கேட்டிருக்கிறார்.
குல்சார் சாபின் பாடல்களுக்கு சரியான விளக்கத்தை அவர் மட்டும் தான் விளக்க முடியும்..
1. இஸ் மோடு சே ஜாத்தே ஹெய்ன் - இந்த பதிவில் இதன் தோராயமான மொழிபெயர்ப்பை படிக்கலாம்
2. சலாம் கீஜியே ஆலி ஜனாப் ஆயிஹே - முஹம்மது ரஃபி சாப் அவர்கள் பாடிய கவாலி. ஐந்து வருடத்திற்கு மட்டும் ஓட்டு கேட்டு வரும் கட்சி தலைவர்/தலைவிகளை பார்த்து மக்கள் கிண்டலடித்து பாடுவது போல் அமைந்திருக்கும். இந்த பாடலின் மொழிபெயர்ப்பு பின்பு பதியப்படும் (தேர்தல் நேரத்தில்)
3. தும் ஆகயே நூர் ஆகயா ஹெய்ன் - நீ வந்தவுடன் தான் என் வாழ்வில் ஒளி வந்தது.. நீ மட்டும் வந்திரா விட்டால்.. இப்படி போகிறது அந்த பாடல்.
4. தேரே பினா ஜிந்தகி சே கோயி - இந்த அல்டிமேட் பாடலை பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
இப்போது இந்த 'இஸ் மோடு சே ஜாதே ஹெய்ன்' என தொடங்கும் இந்த பாடல் தொடங்கும் சூழலுக்குள் செல்ல வேண்டியதாகிறது.
காதலன் அவன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். பெரிய தங்கும்விடுதியில் துணை மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காதலியானவள் பெரிய வியாபாரியின் மகள். அந்த வியாபாரியோ தனது மகளை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அந்த காதலனும் காதலியும் தங்கள் காதலையும் வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சத்தையும் இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த பாடல் அந்த காதலனும் காதலியும் கணவன் மனைவியாகி கருத்து வேறுபாடுகளால் 9 வருடங்களாக பிரிந்து தற்போது மனைவி பெரிய அரசியல் கட்சியின் தலைவியாகி கனவன் மேலாளராக இருக்கும் அந்த ஹோட்டலில் வந்து தங்க நேரிடுகிறது.
தனது மனைவி வந்து ஹோட்டலில் தங்கியிருப்பது கணவருக்கு தெரியும். தனது கணவர் தான் அந்த ஹோட்டலின் மேலாளர் என்பதை தன்னை தூக்கி வளர்த்த பிந்தா காக்கா என்பவர் மூலமாக தெரிந்து கொள்கிறாள். பிந்தா காக்கா என்பவர் இருவருக்கும் பிறந்த குழந்தையை கவனித்து கொள்வதற்காக கணவருடனேயே தங்கியிருந்திருப்பார்.
தான் தூக்கி வளர்த்த பிள்ளையை 9 வருடங்கள் கழித்து அவளுக்கு பிடித்த கீரை செய்து கொண்டு கொடுத்து அவளின் கணவருடனேயே தங்கி விட்டதாக சொல்லி விட்டு விடைபெறும் போது இந்த பாடல் தொடங்குகிறது.
இந்த பாடலின் முடிவில் மனைவி 9 வருடங்களுக்கு பிறகு தனது கணவனை சந்திக்கிறாள்
கட் டூ.. காதலன் காதலி அகேய்ன்..
அவர்கள் இருவரும் வாழ்க்கை எனும் சந்திப்பில் (சந்திப்பு என்றால் பல சாலைகள் சந்திக்கும் இடம்) நிற்கிறார்கள். அவர்களின் முன்னால் நிறைய பாதைகள் இருக்கின்றன.. எந்த வழியே செல்வது என்பது அவர்கள் முன் நிற்கும் கேள்வி. காதலிக்கு தான் தேர்ந்தெடுக்கும் பாதை காதலனிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதும் காதலனுக்கு காதலியிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்...
Is mod se jaate hain - 2
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe - 2
சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை
- மேலே சொன்ன இரு பாதைகளில் ஒன்றினை வழியாக தேர்ந்து எடுக்க வேண்டும், அப்படி எடுத்து சென்றால் -
Patthar ki haveli ko
Shishe ke gharaundo mein
Tinko ke nasheman tak
கற்களாலான அரண்மனை
கண்ணாடியினாலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
-
'கற்களாலான அரண்மனை' என்பது பிரிந்து விடாத நிலையான வாழ்க்கை அதாவது நீடித்து நிற்கும் மணவாழ்வு
கண்ணாடி வீடு என்பது சிறிது காலம் தாங்கும் ஆனால் ரொம்ப பிரஸ்ஸரை தாங்க முடியாது, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடும் மணவாழ்வு
வைக்கோலாலான சிறு குடில் என்பது இந்த இடத்தில் ஊதி விட்டால் கூட பறந்து விடும்.. பவுண்டேஷன் இல்லாத அதாவது அடித்தளம் இல்லாத கொஞ்சம் நாள் கூட வாழாமல் பிரிந்து விடும் இந்த கால மண வாழ்க்கையை கூட உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்..
மேலே சொன்ன இந்த மூன்று சேரிடங்களும் உள்ளது. அந்த லவ் பேர்ட்ஸ் மிகவும் ஜாக்கிரதையாக தங்களது பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்..
Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..
ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்..
Aandhi ki tarha ud kar ik raah guzarti hai - 2
Sharmaati huwi koyi qadmo se utarti hai
In reshmi raaho mein ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai
Is mod se jaati hai
புயலைப் போல்
கடுமையான
பாதைகளும்
உண்டு
வெட்கப்பட்டுவதை போல்
நழுவி செல்லும்
பாதைகளும்
உண்டு -
இத்தகைய
பட்டு போன்ற
பாதைகளில்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
உன்னிடம்
நிச்சயம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Ik door se aati hai paas aake palat-ti hai - 2
Ik raah akeli si rukti hai na chalti hai
Ye soch ke baithhi hu ik raah to woh hogi
Tum tak jo pahonchti hai is mod se jaati hai
சில பாதைகள்
தூரத்திலிருந்து வருகிறது
(உன்னிடம் அழைத்து செல்லும் என்று நினைத்த போது)
அந்த பாதை
திரும்பி (ஏமாற்றி விட்டு)
பக்கத்திலேயே ( பயணத்தை தொடங்கிய இடத்திற்கே)
வந்து சேர்த்துவிடுகிறது
ஒரு பாதை
நகராமல் (தவறான வழியைகாட்டுகிறது)
தனிமையில் உள்ளது
நான் யோசனையில்
உட்கார்ந்து விட்டேன்
ஒரு பாதை
உள்ளது
அது
என்னை
நிச்சயம்
உன்னிடம்
கொண்டு சேர்க்கும்
பாதை -
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
Is mod se jaate hain - 2
Kuchh sust qadam raste
kuchh tez qadam raahe
Patthar ki haveli ko
shishe ke gharaundo mein
Tinko ke nasheman
tak (tak means all the above three)
Is mod se jaate hain
Aa…Is mod se jaate hain
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை
தொடங்க வேண்டும்
சற்று
மெதுவாக செல்லும்
பாதை
சற்று
துரிதமாக செல்லும்
பாதை
கற்களாலான அரண்மனை
கண்ணாடியிலான வீடு
வைக்கோலிலான சிறு குடில்
இந்த
மூன்றில் ஒன்றிற்கு
செல்ல
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
ஆமாம்..
இந்த சந்திப்பிலிருந்து
பயணத்தை தொடங்க
வேண்டும்
------------------------------------------------------------------------------------------------
குல்சார் சாப் பாகிஸ்தானில் உள்ள 'டினா' எனும் ஊரில் பிறந்ததினாலோ என்னவோ இவர் பாடல்களில் நிறைய உருது வார்த்தைகள் கல்ந்திருக்கும்,
ஆர்.டி.பர்மன் இந்த பாட்டிற்கு இசையமைத்து முடித்த பிறகு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டாராம்.. திடீரென்று.. இந்த பாடலில் உள்ள ஒரு வார்த்தையான 'Tinko ke nasheman' வில் வரும் 'நஷேமனை' குறிப்பிட்டு இது எங்கே உள்ளது என்று கேட்டாராம்.
அதற்கு குல்சார் 'நஷேமன்' என்றால் 'குடிசை' என்று விளக்கினாராம்.
சஞ்சீவ் குமாரும் கூட இதே கேள்வியை கேட்டிருக்கிறார்.
குல்சார் சாபின் பாடல்களுக்கு சரியான விளக்கத்தை அவர் மட்டும் தான் விளக்க முடியும்..
Labels:
இந்தி பாடல்,
குல்ஜார் சாப் பாடல்கள்
Friday, May 21, 2010
இரண்டு பித்தர்கள் பகலிலும், இரவிலும் வாழ்க்கையை, வசிப்பிடத்தை தேடி -
இந்த பதிவில் இதே படத்தில் வரும் 'ஏக் அகேலா இஸ் ஷெஹர் மெய்ன்' என்ற பாடலை சோக அலைவரிசையில் கேட்டு லயித்திருக்கலாம். இதே பாடலை மகிழ்ச்சியின் அலைவரிசையில் இங்கே பாடப்படுகிறது அல்லது பதியப்படுகிறது.
படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர் (கோல் மால் (தமிழில் தில்லுமுல்லு) எனும் படத்தில் நடித்தவர் தான்), ஜரினா வஹ்ஹாப் (மை நேம் இஸ் கானில் ஷாருக்கானின் - அம்மிஜானாக - அம்மாவாக வருபவர்)
பாடியவர்கள்: பூபிந்தர், ரூனா லைலா (- இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்)
இந்த பாடலுக்காக குல்ஜார் சாபுக்கு பிலிம்பேர் 'சிறந்த பாடலாசிரியர்' விருதை வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது..
கட்டுமானம் நடைபெறும் ஓர் கட்டடத்தின் இடையே ஒரு நடுத்தர வர்க்க இளஞ்சோடிகள் தங்களுக்கு ஓர் இல்லம் வேண்டும் என்ற கற்பனையில் கவிஞர்களாகவோ அல்லது பித்தர்களாகவோ மாறிய போது.. என்னையும் இசையின் காதலானாக மாற்றி விட்டார்கள்..
Bhupinder: Do diwaane shaher mein, raat mein aur dopahar mein
Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
(repeated by Runa)
இரு பித்தர்கள்
இந்த நகரத்தில்
இரவும்
பகலும்
வாழ்வாதாரம் தேடுகின்றனர்.. (ஆபோ தானா என்றால் நீரும் உணவும் என்று அர்த்தம்)
ஓர்
வசிப்பிடம் தேடுகின்றனர்..
Runa: In bhoolbhulaiya galiyo mein, apna bhi koyi ghar hoga
Ambar pe khulegi khidki ya, khidki pe khula ambar hoga
(repeated by Bhupinder)
இந்த
சிக்கல் நிறைந்த
குழப்பமான
வழிதடங்களுள்
நமக்கென்று
ஒரு
இல்லம்
இருக்கும்..
விண்ணில்
சாளரம்
திறக்கும்
அல்லது
சாளரம் வழி
தெளிவான வானமது
தெரியும்
Asmaani rang ki aankho mein
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
R: Asmaani ya aasmaani?
ஒப்பிடமுடியாதவா அல்லது நீல நிறமா? (வானத்தின் நிறமா?)
B: Asmaani rang ki aankho mein
Basne ka bahaana dhhundhhte hain, dhhundhhte hain
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
நாம்
குடியேற
காரணம்
தேடுவோம்
நாம்
தேடுவோம்
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம் தேடுவோம்
B: Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்R: Taare, aur zameen par?
பூமியில் இறங்கி
நடக்கும் போது
நட்சத்திரம், அதுவும் பூமியில்..?
B: of course
சந்தேகமே இல்லை..
Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
நடக்கும் போது
R: Hmmm hmmm
ஹும்.. ஹூம்..
B: Aakaash zameen ho jaata hai
வானம்
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
R: A aa aa
ஆ..
B: Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
அந்த இரவானது
மீண்டும்
இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி
விடும்..
R: Jab taare zameen par chalte hain
Aakaash zameen ho jaata hai
Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
விளையாடும் போது
வானமானது
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
அந்த இரவானது
மீண்டும்
தனது இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி விடும்
B: Pal bhar ke liye
R: Pal bhar ke liye
சில நொடிகளுக்கு மட்டிலும்
சில நொடிகளுக்கு மட்டிலும்
B: Pal bhar ke liye in aankho mein
சில நொடிகளுக்கு மட்டிலும் இந்த கண்களில்
Ham ek zamaana dhhundhhte hain, dhhundhhte hain
நாம் ஓர் உலகை தேடுவோம், தேடுவோம்..
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம்
தேடுவோம்
படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர் (கோல் மால் (தமிழில் தில்லுமுல்லு) எனும் படத்தில் நடித்தவர் தான்), ஜரினா வஹ்ஹாப் (மை நேம் இஸ் கானில் ஷாருக்கானின் - அம்மிஜானாக - அம்மாவாக வருபவர்)
பாடியவர்கள்: பூபிந்தர், ரூனா லைலா (- இவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்)
இந்த பாடலுக்காக குல்ஜார் சாபுக்கு பிலிம்பேர் 'சிறந்த பாடலாசிரியர்' விருதை வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துக் கொண்டது..
கட்டுமானம் நடைபெறும் ஓர் கட்டடத்தின் இடையே ஒரு நடுத்தர வர்க்க இளஞ்சோடிகள் தங்களுக்கு ஓர் இல்லம் வேண்டும் என்ற கற்பனையில் கவிஞர்களாகவோ அல்லது பித்தர்களாகவோ மாறிய போது.. என்னையும் இசையின் காதலானாக மாற்றி விட்டார்கள்..
Bhupinder: Do diwaane shaher mein, raat mein aur dopahar mein
Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
(repeated by Runa)
இரு பித்தர்கள்
இந்த நகரத்தில்
இரவும்
பகலும்
வாழ்வாதாரம் தேடுகின்றனர்.. (ஆபோ தானா என்றால் நீரும் உணவும் என்று அர்த்தம்)
ஓர்
வசிப்பிடம் தேடுகின்றனர்..
Runa: In bhoolbhulaiya galiyo mein, apna bhi koyi ghar hoga
Ambar pe khulegi khidki ya, khidki pe khula ambar hoga
(repeated by Bhupinder)
இந்த
சிக்கல் நிறைந்த
குழப்பமான
வழிதடங்களுள்
நமக்கென்று
ஒரு
இல்லம்
இருக்கும்..
விண்ணில்
சாளரம்
திறக்கும்
அல்லது
சாளரம் வழி
தெளிவான வானமது
தெரியும்
Asmaani rang ki aankho mein
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
R: Asmaani ya aasmaani?
ஒப்பிடமுடியாதவா அல்லது நீல நிறமா? (வானத்தின் நிறமா?)
B: Asmaani rang ki aankho mein
Basne ka bahaana dhhundhhte hain, dhhundhhte hain
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
கண்களில்
ஒப்பிடமுடியாத
வண்ணம்
நாம்
குடியேற
காரணம்
தேடுவோம்
நாம்
தேடுவோம்
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம் தேடுவோம்
B: Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்R: Taare, aur zameen par?
பூமியில் இறங்கி
நடக்கும் போது
நட்சத்திரம், அதுவும் பூமியில்..?
B: of course
சந்தேகமே இல்லை..
Jab taare zameen par chalte hain
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
நடக்கும் போது
R: Hmmm hmmm
ஹும்.. ஹூம்..
B: Aakaash zameen ho jaata hai
வானம்
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
R: A aa aa
ஆ..
B: Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
அந்த இரவானது
மீண்டும்
இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி
விடும்..
R: Jab taare zameen par chalte hain
Aakaash zameen ho jaata hai
Us raat nahi phir ghar jaata, woh chaand yahi so jaata hai
விண்மீன்கள்
பூமியில் இறங்கி
விளையாடும் போது
வானமானது
பூமியாகி
நிலங்களாக
காட்சி தரும்
அந்த இரவானது
மீண்டும்
தனது இல்லம்
திரும்பாது
அந்த நிலவானது
இங்கேயே
உறங்கி விடும்
B: Pal bhar ke liye
R: Pal bhar ke liye
சில நொடிகளுக்கு மட்டிலும்
சில நொடிகளுக்கு மட்டிலும்
B: Pal bhar ke liye in aankho mein
சில நொடிகளுக்கு மட்டிலும் இந்த கண்களில்
Ham ek zamaana dhhundhhte hain, dhhundhhte hain
நாம் ஓர் உலகை தேடுவோம், தேடுவோம்..
R: Aab-o-daana dhhundhhte hain ek aashiyaana dhhundhhte hain
வாழ்வாதாரம்
தேடுவோம்
ஓர்
வசிப்பிடம்
தேடுவோம்
Labels:
இந்தி பாடல்,
குல்ஜார் சாப் பாடல்கள்
Thursday, May 20, 2010
இந்த நகரத்தில் தனிமையில் ஒருவன் - குல்சார் சாப் எழுதிய இந்தி பாடல்
படம்: கரோண்டா (கூடு)
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர்
படம் வெளியான ஆண்டு: 1977
இசை: ஜெய் தேவ்
இயக்கம்: பீம்செய்ன்
கதை: டாக்டர் சங்கர் சேஷ்
குருவி சேர்ப்பது போல் காசை சேர்த்து காதலியோடு சேர்ந்து வாழ வீடு கட்ட ஆசைப்பட்டான் ஒருவன். வீட்டை கட்டி கொடுப்பவர் பாதி வீடு கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள வீடும் பணமும் காணாமல் போகிறது.
அந்த கட்டத்தில் எடுத்த சில தவறான முடிவுகளால் காதலியும் கை விட்டு போகிறாள்.
வாழ்க்கையை தொலைத்து விட்டு இனி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாத தனிமையில் அவன்.
அறிமுகமானவர் என்று யாருமில்லாத மும்பை போன்ற பெரிய நகரத்துக்கு வந்து தனிமை எனும் கொடுமையில் விழி பிதுங்கி நின்றால்...
இதோ குல்சாரின் பேனாவின் இலக்கிய'மை' இசையோடு கலக்கிறது..
Ek Akela is Seher Mein
Raat mein aur do-pehar mein
Aab-o-daana dhoondta hain...
Aashiyaanaa dhoondth hain...
இந்த நகரத்திலே
தனிமையிலே ஒருவன்..
இரவும் பகலும்
வாழ்வாதாரம் தேடுகிறான்...
வசிப்பிடம் தேடுகிறான்...
Din Khaali Khaali Bartan Hai
Aur raat hai jayse Andhaa Kuaan
In sooni andheri aankhon mein....
Aansoo ki jagah aata hai dhuaan
Jeene ki wajaah to koi nahin...
Marne ka bahaana dhoondta hai..
பகல் இங்கே
காலியான பாத்திரம்
(அதாவது பசித்தவனுக்கு காலியான பாத்திரம் என்ன பயன்படுமோ அதுவே இங்கே பகல் வாழ்க்கை)
இரவு இங்கே
ஆழமான கிணறு
(அதாவது பக்கத்தில் இருப்பவர் கூட யாரென்று தெரியாத மிகவும் ஆழமான இருள் நிறைந்த பள்ளத்தாக்கு)
தனித்துவிடப்பட்ட
கருமைநிற கண்களில்
கண்ணீரும்
வெறும் புகையானது..!
(அதாவது வைரமுத்து 'வெள்ளை புறா ஒன்று' பாடலில் அருமையாக எழுதியிருப்பாரே 'நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழையானதே' என்று அதே போல் தனிமையில் அழுதழுது கண்கள் ஏழையாகி இனி அவன் அழும் போது கூட வெறும் புகை மட்டுமே வருகிறதாம்)
இனி அவன்
வாழ்வதெற்கென்று
ஒரு காரணமும்
இல்லை..!
அதனால்
சாவதற்கு
ஒரு சாக்கு
(அதாவது காரணம்)
தேடுகிறான்..!
In umr se lambi sarhkon ko
Humne to Theherte dekha nahin
Bas Daurhti phirti rehti hain..
Manzil tak pahunchte dekha nahin
Is ajnabi se shehar mein..
Jaana Pehchaana dhoondta hai
இங்கே சாலைகள்
கூட
வாழ்க்கையை
விட
நீளமாக இருக்கிறது..!
அதை பயன்படுத்துபவர்கள்
ஓரிடத்தில் நிற்பதை
நான் பார்த்ததே
இல்லை..!
மாறாக
ஒடிக் கொண்டே
இருக்கிறார்கள்..!
அவர்கள் சேரிடம்
சேர்ந்ததையும்
பார்த்ததே
இல்லை..!
(அதாவது நகரத்து வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் சாலையிலே பாதி வாழ்க்கையை கழித்து வருவதோடு அவர்கள் போய் சேர வேண்டிய எல்லையையும் அடையாமல் 'ஏதோ ஓடுகிறது' என்பது போல் வாழும் வாழ்க்கையை பற்றி பேசுகிறது)
இத்தகைய
அறிமுகமில்லாத
விநோதமான ஊரில்
தெரிந்தவரையும்
அறிந்தவரையும்
தேடுகிறேன்..!
பாடலில் நடிப்பு: அமோல் பலேகர்
படம் வெளியான ஆண்டு: 1977
இசை: ஜெய் தேவ்
இயக்கம்: பீம்செய்ன்
கதை: டாக்டர் சங்கர் சேஷ்
குருவி சேர்ப்பது போல் காசை சேர்த்து காதலியோடு சேர்ந்து வாழ வீடு கட்ட ஆசைப்பட்டான் ஒருவன். வீட்டை கட்டி கொடுப்பவர் பாதி வீடு கட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள வீடும் பணமும் காணாமல் போகிறது.
அந்த கட்டத்தில் எடுத்த சில தவறான முடிவுகளால் காதலியும் கை விட்டு போகிறாள்.
வாழ்க்கையை தொலைத்து விட்டு இனி எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாத தனிமையில் அவன்.
அறிமுகமானவர் என்று யாருமில்லாத மும்பை போன்ற பெரிய நகரத்துக்கு வந்து தனிமை எனும் கொடுமையில் விழி பிதுங்கி நின்றால்...
இதோ குல்சாரின் பேனாவின் இலக்கிய'மை' இசையோடு கலக்கிறது..
Ek Akela is Seher Mein
Raat mein aur do-pehar mein
Aab-o-daana dhoondta hain...
Aashiyaanaa dhoondth hain...
இந்த நகரத்திலே
தனிமையிலே ஒருவன்..
இரவும் பகலும்
வாழ்வாதாரம் தேடுகிறான்...
வசிப்பிடம் தேடுகிறான்...
Din Khaali Khaali Bartan Hai
Aur raat hai jayse Andhaa Kuaan
In sooni andheri aankhon mein....
Aansoo ki jagah aata hai dhuaan
Jeene ki wajaah to koi nahin...
Marne ka bahaana dhoondta hai..
பகல் இங்கே
காலியான பாத்திரம்
(அதாவது பசித்தவனுக்கு காலியான பாத்திரம் என்ன பயன்படுமோ அதுவே இங்கே பகல் வாழ்க்கை)
இரவு இங்கே
ஆழமான கிணறு
(அதாவது பக்கத்தில் இருப்பவர் கூட யாரென்று தெரியாத மிகவும் ஆழமான இருள் நிறைந்த பள்ளத்தாக்கு)
தனித்துவிடப்பட்ட
கருமைநிற கண்களில்
கண்ணீரும்
வெறும் புகையானது..!
(அதாவது வைரமுத்து 'வெள்ளை புறா ஒன்று' பாடலில் அருமையாக எழுதியிருப்பாரே 'நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழையானதே' என்று அதே போல் தனிமையில் அழுதழுது கண்கள் ஏழையாகி இனி அவன் அழும் போது கூட வெறும் புகை மட்டுமே வருகிறதாம்)
இனி அவன்
வாழ்வதெற்கென்று
ஒரு காரணமும்
இல்லை..!
அதனால்
சாவதற்கு
ஒரு சாக்கு
(அதாவது காரணம்)
தேடுகிறான்..!
In umr se lambi sarhkon ko
Humne to Theherte dekha nahin
Bas Daurhti phirti rehti hain..
Manzil tak pahunchte dekha nahin
Is ajnabi se shehar mein..
Jaana Pehchaana dhoondta hai
இங்கே சாலைகள்
கூட
வாழ்க்கையை
விட
நீளமாக இருக்கிறது..!
அதை பயன்படுத்துபவர்கள்
ஓரிடத்தில் நிற்பதை
நான் பார்த்ததே
இல்லை..!
மாறாக
ஒடிக் கொண்டே
இருக்கிறார்கள்..!
அவர்கள் சேரிடம்
சேர்ந்ததையும்
பார்த்ததே
இல்லை..!
(அதாவது நகரத்து வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் சாலையிலே பாதி வாழ்க்கையை கழித்து வருவதோடு அவர்கள் போய் சேர வேண்டிய எல்லையையும் அடையாமல் 'ஏதோ ஓடுகிறது' என்பது போல் வாழும் வாழ்க்கையை பற்றி பேசுகிறது)
இத்தகைய
அறிமுகமில்லாத
விநோதமான ஊரில்
தெரிந்தவரையும்
அறிந்தவரையும்
தேடுகிறேன்..!
Subscribe to:
Posts (Atom)