Saturday, July 31, 2010

கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 4/4)

கற்காலம்


நாகூர் ரூமி



பகுதி 1 - http://nagoreismail786.blogspot.com/2010/07/14.html

பகுதி 2 - http://nagoreismail786.blogspot.com/2010/07/24.html


பகுதி 3 - http://nagoreismail786.blogspot.com/2010/07/34.html 

உமரும் அலீயும்

இப்போது ஹதீது நான்கும் ஐந்தும் நம் கவனத்திற்குரியன. நான்கில், கல்லால் அடித்துக் கொல்வது சம்பந்தமாக அருளப்பட்ட வசனம் இழக்கப்பட்டது என்று உமர் சொல்வதாகவும், அது பற்றி எதுவுமே பேசாதவராக அலீயின் கூற்றும் உள்ளது. அதாவது நேர்வழி காட்டப்பட்ட இரண்டு கலீ·பாக்கள் முரண்பாடாகப் பேசுவதாக வருகிறது. ஏனெனில், உமரின் காலத்தில் ஒரு வசனம் அருளப்பட்டிருந்தால், அது அலீக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.

அதோடு, முதல் கலீ·பாவான அபூபக்கர் அவர்களின் காலத்தில்தான் திருக்குர்ஆன் முதன் முதலாகத் தொகுக்கப்பட்டது. திருக்குர்ஆனை ஒரு நூலாகத் தொகுக்கும் கருத்தை அபூபக்கரிடம் முதன் முதலாக முன்வைத்ததே உமர்தான். அப்படியிருக்கும்போது, அந்த 'இழக்கப்பட்ட' வசனத்தையும் ஏன் சேர்த்துத் தொகுக்கவில்லை?

மூன்றாவது கலீ·பாவான உஸ்மான் அவர்களுடைய காலத்தில் பரிபூரணப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் தொகுப்பு வேலையின் போதும் அப்படியொரு வசனம் சேர்க்கப்படவில்லை. எந்த நபித்தோழரின் வசமும் அப்படியொரு வசனம் இருந்ததாக எங்குமே வரலாற்றுக் குறிப்பு கிடையாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனே சொல்கின்ற ஒரு உண்மை, இந்த மாதிரியான 'ஹதீது'களெல்லாம் 'லஹ்வல் ஹதீஸ்'தான் என்று நிரூபிக்கிறது :

நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். ஆகவே அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு நிச்சயமாக நாமே அதனை ரட்சித்துக் கொள்வோம் (சூரா அல் ஹிஜ்ர், 15 : 09)

இறைவனே என் வேதத்தைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு, அதில் ஒன்று விடுபட்டுப் போய்விட்டது என்று உமர் அவர்கள் சொன்னதாக ஹதீது உள்ளது என்று சொல்வது, எனக்குப் பின்னால் ஒரு நபி உண்டென்று சொன்னால், அதற்கு உமரே மிகவும் தகுதியானவர் என்று பெருமானாரால் புகழப்பட்ட உமரின் குணாம்சத்துக்கும் ஆளுமைக்கும் எதிரான சதித்திட்டம் அது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

கசையடி பற்றி

விருப்பத்தின் பேரில் இருவர் செய்யும் ஒரு பாலியல் சமாச்சாரத்துக்குத் தண்டனையாக நூறு கசையடிகள் தேவைதானா என்ற கேள்வியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இறைவனின் செய்தி என்பது மொழியை மீறியது என்பதாகத்தான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் மனிதர்களுக்கு வாழ் நெறியை வகுத்துக் கொடுப்பதற்காக இறைவன் மனிதனோடு பேச முடிவு செய்துவிட்ட பிறகு, ஒரு மனிதமொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. மொழி என்று வந்துவிட்டாலே, அர்த்தங்கள் சம்பந்தமான விவாதங்களும் வரத்தான் செய்யும்.

அப்போ என்னதான் செய்வது? நூறு கசையடிகள் கொடுக்கச் சொல்லும் இறைவனை கருணையாளன் என்று சொல்லமுடியுமா என்ற கேள்வி சில அதி மென்மையான உள்ளங்களில் எழத்தான் செய்கிறது.

திருக்குர்ஆன் முழுவதையுமே ஒரு குறியீட்டுத் தன்மை -- symbolic -- கொண்ட வேதமாகத்தான் நான் பார்க்கிறேன். பூடகமான வசனங்களையும் தெளிவான வசனங்களையும் நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இன்றளவும் புரியாத வசனங்கள் நிச்சயமாக நாளை புரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவனின் கோபம் கொப்பளிக்கும் வசனங்களிலும் அவனுடைய கருணையைத்தான் நான் பார்க்கிறேன்.

எனவே கசையடியையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். என்ன வணங்குங்கள் என்றுதான் இறைவன் கூறுகிறான். எல்&டி சிமெண்ட் போட்டு கட்டப்பட்டு, மின்விசிறிகள் சுழல, மொசைக் தரை போடப்பட்ட பள்ளிவாசலில் என்னை வணங்குங்கள் என்றா சொன்னான்? இன்றைய வளர்ச்சிக்கும் வசதிக்கும் ஏற்ப, அதையெல்லாம் நாம் செய்துகொள்ளவில்லையா?

அந்தக் காலத்தில் போலீஸோ, சிறைச்சாலைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ கிடையாது. அந்தக்கால கடுமையான தண்டனைக்கு வழி என்று அவர்கள் புரிந்துகொள்கின்ற மொழியும் வழியும் சாட்டையாக இருந்திருக்கலாம். இந்தக் காலத்திலும் சாட்டை எதற்கு?

ஈரான் ஈராக் யுத்தம் நடந்ததே, அதில் இரு நாடுகளும் அந்தக் காலத்தைப் போல, குதிரைகளையும் குத்தீட்டிகளையும் வைத்துக்கொண்டா சண்டை போட்டன? யுத்தத்தை நவீனப்படுத்துவது போல எல்லாவற்றையும் செய்வதுதான் அறிவுடைமை.

உடம்பைக் காயப்படுத்துவதால் மனித உள்ளம் மாறிவிடப்போவதில்லை என்பது இறைவனுக்குத் தெரியாதா என்ன?

கசையடி என்பதும் அதைப்போலத்தான். தண்டியுங்கள், அவமானமான, கேவலமான காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் அதை நான் அர்த்தப் படுத்திக்கொள்கிறேன். ஆனால் எந்த விதமான தண்டனையும் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு அல்ல.

என்னைப் பொறுத்தவரை கசையடி என்பதும் தண்டனைக்கான ஒரு குறியீடுதான்.

பெண்களுக்கு எதிரான சதி

இந்த கல்லாலடிப்பு தண்டனைகளில் பெரும்பாலானவற்றைப் பார்க்கும்போது அவை பெண்களுக்கு எதிரான ஒரு சதியாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு சில உதாரணங்கள் :

1. ஆ·ப்கனிஸ்தானில் நெருங்கிய குடும்ப உறுப்பினரைத் தவிர வேறு ஆண்களோடு ஒரு பெண் பார்க்கப்படுவாளானால், அது அவளுக்கு மரணதண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்பட்டது. 1996 மார்ச் 28ல் ஜமீலா என்ற பெண் அப்படித்தான் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.

2. நூர் பீபி என்ற 40 வயதுப் பெண்ணும் 38 வயது துர்லய் என்பவரும் இப்படிக் கொல்லப்பட்டது 1996 நவம்பரில். அவர்களைக் கொல்ல பனம்பழ அளவுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன! "இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்" என்று இந்த கொலைபற்றிச்சொன்னார் வலீ என்ற அதிகாரி!

3. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு வேலை பார்த்த கர்தினி என்ற இந்தோனேஷியப் பெண்ணை ஒரு இந்தியன் கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டான். குற்றம் சாட்டப்பட்ட அவளுக்கு ஒரு வழக்கறிஞரோ, மொழிபெயர்ப்பாளரோ இன்றி அவள் வழக்கு அவளுக்கு புரியாத மொழியில் நடத்தப்பட்டது. இறையருளால், ஓராண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டாள்.

4. 2001 அக்டோபர். ச·பியா ஹ¤ஸைனி என்ற நைஜீரியப் பெண், கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானதற்காக, கல்லாலடித்துச் சாகவேண்டும் என்று நைஜீரிய இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இறையருளால், கடைசியில் அவள் தப்பித்தாள். அவள் நீதிமன்றத்தில் அமர்ந்து தன் குழந்தைக்கு பால்கொடுத்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள் யாருடைய மனசாட்சியையும் உலுக்குபவை :

"நான் மட்டும்தான் தண்டிக்கப்படுவேன். ஏனென்றால், சட்டத்தின் அநீதி என்னவெனில், பெண்களை கர்ப்பிணிகளாக்குவதற்காக ஆண்களை சட்டம் தண்டிப்பதில்லை. என் குற்றம் அடல்ட்ரி அல்ல. என் குற்றம் கர்ப்பமானதுதான். ஏனெனில், பெண்கள் மட்டும்தானே கர்ப்பவதியாக முடியும்? எனவே, என் உண்மையான குற்றம் நான் பெண்ணாக இருப்பதுதான். ஆண் எப்போதுமே கர்ப்பமாக்கிவிட்டுத் தப்பித்துவிடுவான். துரோகியின் விந்தைச் சுமப்பதுதான் நாங்கள் செய்த பாவம்"

5. 2001 டிசம்பர். சூடான். தன் 18 வயது கர்ப்பிணி மனைவி அகோக் ஒழுக்கம் கெட்டவள் என்று அவள் கணவன் சொன்னான். தான் கற்பழிக்கப்பட்டதாக அவள் சொன்னாள். அவள்தான் விசாரிக்கப்பட்டான். அவளைக் கற்பழித்தவன் விசாரிக்கப்படவில்லை. (நிறைய வழக்குகள் இந்த மாதிரி ஒருதலைப் பட்சமாகவே இருக்கின்றன). அவளுக்கு 75 கசையடிகள் கொடுக்கப்பட்டன.

6. 2003 செப்டம்பர் 25. கடைசியாக தப்பித்தவள் நைஜீரியாவைச் சேர்ந்த ஆமினா லவால் குராமி என்ற பெண்தான் (நிழல்படம்). விவாகரத்து செய்யப்பட்ட இவள் கருவுற்றிருந்தாள் என்று நைஜீரிய ஷரியத் நீதி மன்றத்தினால் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டாள். ஆனால் குழந்தை பிறந்து பால் குடிப்பருவம் மறக்கடிக்கப்படும் வர அவகாசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஈ மெயில்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டது. நைஜீரிய அரசின்மீதான சர்வதேச அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனது.

நைஜீரிய அரசு, இனிமேல் கல்லாலடித்துக் கொல்லும் தண்டனையை வலியுறுத்தமாட்டோம் என்று வெளிப்படையான பொது அறிவிப்பு ஒன்றை அக்டோபர் 29, 2002 அன்று வெளியிட்டது.

முடிவுரை

எனக்குத் தெரிந்த இஸ்லாம் அன்பு மயமானது. வன்முறைக்கு எதிரானது. எனக்குத் தெரிந்த முஹம்மது நபி (ஸல்) அன்பு மயமானவர். மன்னிக்கும் குணம் கொண்டவர். எனக்குத் தெரிந்த அல்லாஹ் கருணையாளன்.

ஆனால் சில நாடுகளில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளும், சில இஸ்லாமிய அரசுகளும் செய்யும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் இஸ்லாத்துக்கும் முஹம்மது நபி அவர்களுக்கும் இல்லாத நிறத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களை பெரிதுபடுத்தி பிரபலப்படுத்த உலக மீடியாக்களும் சளைப்பதில்லை.

எந்தப் பெயரில் கொடுமை நிகழ்த்தப்பட்டாலும் அதை கண்டிக்க வேண்டியது மனசாட்சி உள்ள மனிதர்களின் கடமை. நம்மால் செய்ய முடிவது இப்படி எழுதி ஆறுதல் தேடிக்கொள்வதுதான். என் மன அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவே இதை உங்கள் முன் வைத்தேன்.

தற்காலத்தில் ஆங்காங்கு முளைவிட்டிருக்கின்ற இந்த கற்காலத்திலிருந்து விடுபட்டு, எல்லா நாடுகளும் மனித நேயத்தை நோக்கி முன்னேற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

தகவல் கொடுத்த இணையத்தளங்கள் :



01. : http://www.irfi.org/
02. : http://www.muttaqun.com/
03. : http://www.boloji.com/
04. : http://www.amnesty.org.uk/
05. : http://www.metonai.org/
06. : http://www.oprah.com/
07. : http://www.bharatvani.org/
08. : http://www.bpnews.net/
09. : http://www.foxnews.com/
10. : http://www.pbs.org/
11. : http://www.guardian.co.uk/
12. : http://www.islamreview.com/
13. : http://www.ccadp.org/
14. : http://www.mertonai.org/amina/
15. : http://www.religioustolerance.org/
16. : http://www.hindunet.org/
17. : http://www.answering-islam.org.uk/
18. : http://www.milligazette.com/
19. : http://www.faithfreedom.org/
20. : http://www.understanding-islam.com/
21. : http://www.iran-e-azad.org/
22. : http://www.vibrani.com/
23. : http://www.mostmerciful.com/
24. : http://www.englishforums.com/
25. : http://www.iran-press-service.com/

No comments: