அப்படி தான் என்னை என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் தன்னோட மகன் வெளிநாட்டிலிருந்து வருவதாக கூறி பஸ்ஸில் டிக்கெட் எடுத்துகிட்டு கூட்டிட்டு போனார். அவரு கிட்டே இருக்கிற காசுக்கும் பணத்துக்கும் அவர் கார அல்லது வேன புடிச்சேஎன்னய கூட்டிட்டு போவலாம். ஆனா அவருக்கு இருக்கிற மனசுக்கும் மூளைக்கும் பொடி நடையா கூட்டிட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..!
என்னய கூட்டிட்டு போய் அவரோட சொந்தகாரங்க எடத்துல தங்க வைச்சார். நான் தங்கியது அவரோட சொந்தக்காரரின் வீடு எல்லாம் கிடையாது. அது ஏதோ குடோன் மாதிரின்னு வச்சுக்குங்களேன். அங்கே தான் தரையில் பழைய பாயில் என்னை படுக்க சொன்னார். இரவு சாப்பாடு.. அந்த சொந்தகாரர் கொடுத்த ரொட்டி எனும் புண்ணியத்துல கால் வயித்த ரொப்பியாச்சு.. அல்ஹம்துலில்லாஹ்..!
அடுத்த நாள் காலைல.. தேத்தணி குடிச்சதோட என்னய பஸ்ஸுல ஏத்தி ஏர்போர்ட்டுக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சார். நம்ம ஊர் விமானம் என்னக்கி சொன்ன நேரத்துக்கு வந்திருக்கு. அது எப்போதுமே விழாவுக்கு வர்ர விஐபி ங்க மாதிரி லேட்டா தான் வரும். டிவில போட்டுட்டான், ஃபிளைட் 4 மணி நேரம்.. லேட்..
10 30 அல்லது 11 மணிக்கு வர வேண்டிய பிளைட் 3 மணியாகியும் இன்னும் தரையிரங்கலை..
இது இப்படியே இருக்கட்டும்.. ஒரு சின்ன பிளேஷ் பேக்..
சின்ன வயசுல நாகூரிலிருந்து காரைக்காலுக்கு போற வழியில இருக்கிற மேலப்பள்ளியில எனக்கு பூட்டியா முறை வேண்டும் அவர் தங்கியிருந்த போது, காரைக்கால் வாசியான அவர்களை போய் பார்த்து விட்டு காரைக்காலில் உள்ள சாந்தி தியேட்டர்ல சிவாஜி நடிச்ச ‘என் மகன்’ படம் பார்க்க போவதாக பிளேன்.
எங்க பூட்டியா மேலபள்ளியில நேந்துகிட்டு வந்து தங்கியிருக்காஹா.. ஆனாலும் நாங்க போனோம்னு சொல்லி உடனே அங்கே இருந்த புள்ளைங்கள வுட்டு கடைல போய் காரம் வகைலேந்து இனிப்பு வகைலேந்து இன்னும் என்னென்னமோ வாங்கிட்டு வந்து நாளாம் நீருக்கு மாப்பிள்ளைக்கு பரத்துர மாதிரி பரத்திட்டாஹா..
நான் என்னா செய்யணும், என் தட்டுல வச்சிருக்கிறத பாதி மட்டும் சாப்டுட்டு மீதிய அப்டியே வச்சிருந்தா எனக்கும் விஜயகாந்த நடிச்ச மரியாதையும் சிவாஜி நடிச்ச கவுரவமும் கெடைச்சிருக்கும்
நான் என்னா செஞ்சேன், என் தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. எங்க ம்மா தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. ‘ம்மா இன்னும் கொஞ்சம்..’ என்று சொல்லியிருக்கேன்..
எங்க பூட்டியா, ‘புள்ள என்னா சொல்றாரும்மா..’ என்று கேட்டு வைக்க..
எங்க ம்மா ‘ஒண்ணுமில்லம்மா..’ என்று சொல்லி விட்டு தேத்தணிய கொடுத்து ‘இத குடி’ ண்டாஹா
நான் அதையும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ என்று கேட்ட வாசி எங்க ம்மா அஹ குடிக்க வச்சிருந்த டீயையும் கொஞ்சம் ஊத்தி கொடுத்திருக்காஹா.. நான் அதுலயும் சொட்டு கூட வுட்டு வைக்காம குடிச்சி முடிச்சிட்டு ‘ம்மா.. இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டதற்கு தேத்தணி கிளாஸ்ல கடைசில இருக்கும்ல ‘மண்டி’ன்னு சொல்வாஹா எங்க ஊர்ல, அத ஊத்தி கொடுத்து ‘குடி’ண்டாஹா..
புள்ள அதயும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ண்டு கேட்டிருக்கு.. ம்மாக்கு வந்துச்சு ஆத்திரம்.. தொடையை புடிச்சு ஒரு திருவு.. வச்சேன் அழுவை(கை)ய..
எங்க பூட்டியா, ‘ஏன்.. ஏன்’னு ஓடி வந்து என்னய சமாதானப்படுத்தி ஒரு வழியா அழுகையை நிறுத்தினாஹா..
அதன் பிறகு ஏன்னே தெரியல.. கார்ல வச்சு.. எனக்கு சரி ஏச்சு.. சரி கில்லு.. சரி அடி..
அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன், ‘சீக்கிரமா வாங்க.. படம் போட்டுற போறான்..’ ண்டு தானே சொன்னேன்.. இதுக்கு போய் ஏன் என்னய அந்த ரேஞ்சுக்கு அடிக்கணும்.. ஏசணும்..
சரி.. சரி..
விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்..
இப்படியா பட்ட நான், காலைலேந்து பல்லு வெளக்குன போது வாய்ல பட்ட பச்ச தண்ணியோட உட்காந்து இருக்கேன்.. என் வயிறு கடுமையா கூவ ஆரம்பிச்சுடிச்சு..
அந்த சொந்தக்காரர் ’சாப்பிடலாமா’ன்னு வந்து கேட்டாக்கா.. உடனே ‘பசிக்கிது’ன்னு சொல்லி நல்லா ஒரு புடி புடிக்கணும்னு நெனைச்சிகிட்டு அந்த சொந்தகாரரை தேட ஆரம்பிச்சேன்..
தேடுனப்போ வராம ஃபிளைட்ட மாதிரியே லேட்டா தான் வந்தார்.. வந்து என் பக்கத்துல ஒக்காந்தார், ஒக்காந்தவர் வாய தொறந்தார், ‘பெரிய ஆச்சர்யம் தம்பி.. கொஞ்சம் கூட பசிக்கவே இல்ல பாருங்களேன்..’ என்றாரே பார்க்கலாம்
நான் மனசுக்குள், ‘யோவ்.. யோவ்.. பசியே இல்லையா.. இப்போ எனக்கு இருக்கிற கொல பசிக்கி பழைய சோற கொடுத்தாலே மறு சோறு வாங்கி கேட்டு வெறும் மொளவு தண்ணிய (ரசம்) மட்டுமே ஊத்திகிட்டு ஒரு மரவ நெறயா உண்பேனய்யா.. யோவ்.. இதுலாம் அநியாயம்யா.. காசு பணம் இல்லேன்னா சரிங்கலாம்.. நீயெல்லாம் இப்படி பண்றியேய்யா..’
நான் நேரில், ‘ஆமா.. பசியே இல்ல.. ஆனா இதுல ஆச்சர்யம் ஒண்ணுமில்ல..’ என்றேன்..
அதனை தொடர்ந்து அவர் மகனார் வந்து அவர்ட சாமானெல்லாம் நானும் சேர்ந்து தூக்கி ஆட்டோ புடிச்சு நேரா ஏர்போர்ட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாச்சு..
அன்னாரின் மகனார், ‘மதியானம் என்னா சாப்டீங்க..?’ என்று கேட்டார். சத்தியமா சொல்றேன்.. அது அவரா கேக்கலங்க.. அல்லா தான் அவர அப்படி கேக்க வச்சான்..மாஷா அல்லாஹ்..
‘நான் ஒண்ணுமே சாப்டலே..’ என்றதும் அவர் பதறிப் போய் ஓடிப் போய் டீ ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட கொடுத்தார்
வாப்பாக்கு மகனார் தப்பி தான் பொறந்திருக்கார்..
தேத்தணி குடிச்சேன்.. ரொட்டிய கடிச்சேன்..
ஒட்டகத்துக்கு ஓமப்பொடி..
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம்..
வாப்பாவும் மகனாரும் மொதோ சீட்ல ஒக்காந்துட்டாஹா
நான் தனியா நடுவுல உள்ள ஒரு சீட்டுக்கு போயிட்டேன்..
என் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார்..
நான் புன்னகைத்தேன்..
அவர் கை கொடுத்தார்..
இருவரும் பேசிக் கொண்டோம்.. கொஞ்ச நேரம் பேசிய போதே ‘நைஸ் மீட்டிங்..’ என்றார்.
நானாவது பரவாயில்லை.. நேத்து ஒரு ராத்திரி தான் புது எடங்கறதாலயும் கொசு கடிங்கறதாலயும் தூங்கலை..
அவர் பாவம்.. ஏதோ வேலையா அலைஞ்சு ஒரு வாரமாவே சரியா தூங்கலயாம்..
பஸ்ஸில் ஒரு சீட் கூட காலியில்லாமல் எல்லா இடமும் நிரப்பப்பட்டது..
பீயமானில்லாஹ்..
பஸ் கெளம்பிடிச்சு..
சற்று நேரத்தில் தூக்கமின்மையோட பசி மயக்கமும் பஸ்ஸின் ஆட்டமும் இப்படி எல்லாமா சேந்து ஒரு தாலாட்டு பாட தூக்கம் கண்களை தழுவிக் கொண்டது
திடீர்ன்னு நல்லா ‘நங்’குன்னு ஒரு சத்தம்.. ஒண்ணுமில்லை.. நான் தான் தூக்கத்துல என் பக்கத்துல ஒக்காந்திருந்த அவர நல்லா முட்டிட்டேன்..
திடுக்கிட்டு முழுச்சி, ‘சாரி.. சார்..’ என்றேன்.. அவர் தலையை தடவிக் கொண்டே ‘பரவாயில்ல.. பரவாயில்ல.. ரோட்ட பாருங்க.. பள்ளமும் படுகுழியுமா இருக்கு..’ என்று கவர்மெண்ட்டின் கரப்சனை திட்டிகிட்டே தூங்கி போனார்..
அவர் முடிக்கிறதுக்கு முன்னாடியே நான் தூங்கியிருந்தேன்..
கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா இந்த முறை ‘நச்’சுன்னு ஒரு சத்தம்..
அதே தலை..
தலையில அதே இடம்..
கொஞ்சம் கடுப்பா தான் ஆயிட்டார்..
நான் எந்திரிச்சிட்டேன்.. ‘சாரி சார்.. நான் வேணும்னு இடிக்கல..’ என்றேன்..
அவர் வாயே தொறக்கல.. அப்படியே சைகைலேயே ‘உட்காரு..’ என்பது போல் கையை கீழே ஆட்டினார்..
அந்த நேரத்துல இவ்வளவு வெபரமா எல்லாம் புரியல.. என்னய தான் பக்கத்துல கூப்ட்டு ஏதோ ரகசியம் மாதிரி சொல்ல போறாரு போலருக்குன்னு நெனைச்சுகிட்டு கிட்டே போனேன்.. என்ன புடிச்சு தள்ளி ‘உட்காருய்யா..’ என்றார் கோவமாக..
‘இப்படிங்கறேன்..’ ண்டு கையை மறுபடியும் ஆட்டி காண்பித்து ‘இது புரியலை..’ என்றார்..
நான் மறுபேச்சு பேசாம ஒக்காந்தேன்..
இனிமே தூங்கவே கூடாது.. கங்கணம் கட்டிக் கொண்டு நான்..
நானா தூக்கமா இன்னைக்கு யாருன்னு பார்க்கலாம்..?
கடைசில தூக்கம் தான் ஜாலியா ஜெயிக்கலாம்னு ஜெயிச்சிடிச்சு..
யெஸ்.. தூங்கி விட்டேன்..
இந்த முறை முன்னாடி ரெண்டு முறை உள்ள ‘நங்’கையும் ‘நச்’சையும் சேர்த்து ஒரு ‘நங்ச்’ன்னு இடிச்சா எப்படி இருக்கும்..
எவ்வளவு தான் பொறுப்பார் மனுஷன்..
“யோவ் நீயெல்லாம்.. எதுக்குய்யா பஸ்ஸ எடுக்குறே.. இப்படி தூங்குற ஆளு கார்ல வேன்ல போவ வேண்டியது தானே..” என்று காட்டமாய் கத்தினார்.
முன்னாடி சீட்டிலிருந்து ஒரு குரல், ‘ம்.. போருமே.. அதுக்கு (எதுக்கு..? காருக்கும் வேனுக்கும்..) நீம்பரா காசு கொடுப்பீயோம்..’ என்று
பக்கத்துல ஒக்காந்திருந்தவர் ‘அது யார்டா அது?’ என்று முழிக்க நான் சொன்னேன்..
அது என் சொந்தக்காரர் தான்
10 30 அல்லது 11 மணிக்கு வர வேண்டிய பிளைட் 3 மணியாகியும் இன்னும் தரையிரங்கலை..
இது இப்படியே இருக்கட்டும்.. ஒரு சின்ன பிளேஷ் பேக்..
சின்ன வயசுல நாகூரிலிருந்து காரைக்காலுக்கு போற வழியில இருக்கிற மேலப்பள்ளியில எனக்கு பூட்டியா முறை வேண்டும் அவர் தங்கியிருந்த போது, காரைக்கால் வாசியான அவர்களை போய் பார்த்து விட்டு காரைக்காலில் உள்ள சாந்தி தியேட்டர்ல சிவாஜி நடிச்ச ‘என் மகன்’ படம் பார்க்க போவதாக பிளேன்.
எங்க பூட்டியா மேலபள்ளியில நேந்துகிட்டு வந்து தங்கியிருக்காஹா.. ஆனாலும் நாங்க போனோம்னு சொல்லி உடனே அங்கே இருந்த புள்ளைங்கள வுட்டு கடைல போய் காரம் வகைலேந்து இனிப்பு வகைலேந்து இன்னும் என்னென்னமோ வாங்கிட்டு வந்து நாளாம் நீருக்கு மாப்பிள்ளைக்கு பரத்துர மாதிரி பரத்திட்டாஹா..
நான் என்னா செய்யணும், என் தட்டுல வச்சிருக்கிறத பாதி மட்டும் சாப்டுட்டு மீதிய அப்டியே வச்சிருந்தா எனக்கும் விஜயகாந்த நடிச்ச மரியாதையும் சிவாஜி நடிச்ச கவுரவமும் கெடைச்சிருக்கும்
நான் என்னா செஞ்சேன், என் தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. எங்க ம்மா தட்டுல உள்ளதயும் திண்டுட்டு.. ‘ம்மா இன்னும் கொஞ்சம்..’ என்று சொல்லியிருக்கேன்..
எங்க பூட்டியா, ‘புள்ள என்னா சொல்றாரும்மா..’ என்று கேட்டு வைக்க..
எங்க ம்மா ‘ஒண்ணுமில்லம்மா..’ என்று சொல்லி விட்டு தேத்தணிய கொடுத்து ‘இத குடி’ ண்டாஹா
நான் அதையும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ என்று கேட்ட வாசி எங்க ம்மா அஹ குடிக்க வச்சிருந்த டீயையும் கொஞ்சம் ஊத்தி கொடுத்திருக்காஹா.. நான் அதுலயும் சொட்டு கூட வுட்டு வைக்காம குடிச்சி முடிச்சிட்டு ‘ம்மா.. இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டதற்கு தேத்தணி கிளாஸ்ல கடைசில இருக்கும்ல ‘மண்டி’ன்னு சொல்வாஹா எங்க ஊர்ல, அத ஊத்தி கொடுத்து ‘குடி’ண்டாஹா..
புள்ள அதயும் குடிச்சிட்டு ‘இன்னும் கொஞ்சம்’ண்டு கேட்டிருக்கு.. ம்மாக்கு வந்துச்சு ஆத்திரம்.. தொடையை புடிச்சு ஒரு திருவு.. வச்சேன் அழுவை(கை)ய..
எங்க பூட்டியா, ‘ஏன்.. ஏன்’னு ஓடி வந்து என்னய சமாதானப்படுத்தி ஒரு வழியா அழுகையை நிறுத்தினாஹா..
அதன் பிறகு ஏன்னே தெரியல.. கார்ல வச்சு.. எனக்கு சரி ஏச்சு.. சரி கில்லு.. சரி அடி..
அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன், ‘சீக்கிரமா வாங்க.. படம் போட்டுற போறான்..’ ண்டு தானே சொன்னேன்.. இதுக்கு போய் ஏன் என்னய அந்த ரேஞ்சுக்கு அடிக்கணும்.. ஏசணும்..
சரி.. சரி..
விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்..
இப்படியா பட்ட நான், காலைலேந்து பல்லு வெளக்குன போது வாய்ல பட்ட பச்ச தண்ணியோட உட்காந்து இருக்கேன்.. என் வயிறு கடுமையா கூவ ஆரம்பிச்சுடிச்சு..
அந்த சொந்தக்காரர் ’சாப்பிடலாமா’ன்னு வந்து கேட்டாக்கா.. உடனே ‘பசிக்கிது’ன்னு சொல்லி நல்லா ஒரு புடி புடிக்கணும்னு நெனைச்சிகிட்டு அந்த சொந்தகாரரை தேட ஆரம்பிச்சேன்..
தேடுனப்போ வராம ஃபிளைட்ட மாதிரியே லேட்டா தான் வந்தார்.. வந்து என் பக்கத்துல ஒக்காந்தார், ஒக்காந்தவர் வாய தொறந்தார், ‘பெரிய ஆச்சர்யம் தம்பி.. கொஞ்சம் கூட பசிக்கவே இல்ல பாருங்களேன்..’ என்றாரே பார்க்கலாம்
நான் மனசுக்குள், ‘யோவ்.. யோவ்.. பசியே இல்லையா.. இப்போ எனக்கு இருக்கிற கொல பசிக்கி பழைய சோற கொடுத்தாலே மறு சோறு வாங்கி கேட்டு வெறும் மொளவு தண்ணிய (ரசம்) மட்டுமே ஊத்திகிட்டு ஒரு மரவ நெறயா உண்பேனய்யா.. யோவ்.. இதுலாம் அநியாயம்யா.. காசு பணம் இல்லேன்னா சரிங்கலாம்.. நீயெல்லாம் இப்படி பண்றியேய்யா..’
நான் நேரில், ‘ஆமா.. பசியே இல்ல.. ஆனா இதுல ஆச்சர்யம் ஒண்ணுமில்ல..’ என்றேன்..
அதனை தொடர்ந்து அவர் மகனார் வந்து அவர்ட சாமானெல்லாம் நானும் சேர்ந்து தூக்கி ஆட்டோ புடிச்சு நேரா ஏர்போர்ட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாச்சு..
அன்னாரின் மகனார், ‘மதியானம் என்னா சாப்டீங்க..?’ என்று கேட்டார். சத்தியமா சொல்றேன்.. அது அவரா கேக்கலங்க.. அல்லா தான் அவர அப்படி கேக்க வச்சான்..மாஷா அல்லாஹ்..
‘நான் ஒண்ணுமே சாப்டலே..’ என்றதும் அவர் பதறிப் போய் ஓடிப் போய் டீ ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வந்து சாப்பிட கொடுத்தார்
வாப்பாக்கு மகனார் தப்பி தான் பொறந்திருக்கார்..
தேத்தணி குடிச்சேன்.. ரொட்டிய கடிச்சேன்..
ஒட்டகத்துக்கு ஓமப்பொடி..
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம்..
வாப்பாவும் மகனாரும் மொதோ சீட்ல ஒக்காந்துட்டாஹா
நான் தனியா நடுவுல உள்ள ஒரு சீட்டுக்கு போயிட்டேன்..
என் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார்..
நான் புன்னகைத்தேன்..
அவர் கை கொடுத்தார்..
இருவரும் பேசிக் கொண்டோம்.. கொஞ்ச நேரம் பேசிய போதே ‘நைஸ் மீட்டிங்..’ என்றார்.
நானாவது பரவாயில்லை.. நேத்து ஒரு ராத்திரி தான் புது எடங்கறதாலயும் கொசு கடிங்கறதாலயும் தூங்கலை..
அவர் பாவம்.. ஏதோ வேலையா அலைஞ்சு ஒரு வாரமாவே சரியா தூங்கலயாம்..
பஸ்ஸில் ஒரு சீட் கூட காலியில்லாமல் எல்லா இடமும் நிரப்பப்பட்டது..
பீயமானில்லாஹ்..
பஸ் கெளம்பிடிச்சு..
சற்று நேரத்தில் தூக்கமின்மையோட பசி மயக்கமும் பஸ்ஸின் ஆட்டமும் இப்படி எல்லாமா சேந்து ஒரு தாலாட்டு பாட தூக்கம் கண்களை தழுவிக் கொண்டது
திடீர்ன்னு நல்லா ‘நங்’குன்னு ஒரு சத்தம்.. ஒண்ணுமில்லை.. நான் தான் தூக்கத்துல என் பக்கத்துல ஒக்காந்திருந்த அவர நல்லா முட்டிட்டேன்..
திடுக்கிட்டு முழுச்சி, ‘சாரி.. சார்..’ என்றேன்.. அவர் தலையை தடவிக் கொண்டே ‘பரவாயில்ல.. பரவாயில்ல.. ரோட்ட பாருங்க.. பள்ளமும் படுகுழியுமா இருக்கு..’ என்று கவர்மெண்ட்டின் கரப்சனை திட்டிகிட்டே தூங்கி போனார்..
அவர் முடிக்கிறதுக்கு முன்னாடியே நான் தூங்கியிருந்தேன்..
கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா இந்த முறை ‘நச்’சுன்னு ஒரு சத்தம்..
அதே தலை..
தலையில அதே இடம்..
கொஞ்சம் கடுப்பா தான் ஆயிட்டார்..
நான் எந்திரிச்சிட்டேன்.. ‘சாரி சார்.. நான் வேணும்னு இடிக்கல..’ என்றேன்..
அவர் வாயே தொறக்கல.. அப்படியே சைகைலேயே ‘உட்காரு..’ என்பது போல் கையை கீழே ஆட்டினார்..
அந்த நேரத்துல இவ்வளவு வெபரமா எல்லாம் புரியல.. என்னய தான் பக்கத்துல கூப்ட்டு ஏதோ ரகசியம் மாதிரி சொல்ல போறாரு போலருக்குன்னு நெனைச்சுகிட்டு கிட்டே போனேன்.. என்ன புடிச்சு தள்ளி ‘உட்காருய்யா..’ என்றார் கோவமாக..
‘இப்படிங்கறேன்..’ ண்டு கையை மறுபடியும் ஆட்டி காண்பித்து ‘இது புரியலை..’ என்றார்..
நான் மறுபேச்சு பேசாம ஒக்காந்தேன்..
இனிமே தூங்கவே கூடாது.. கங்கணம் கட்டிக் கொண்டு நான்..
நானா தூக்கமா இன்னைக்கு யாருன்னு பார்க்கலாம்..?
கடைசில தூக்கம் தான் ஜாலியா ஜெயிக்கலாம்னு ஜெயிச்சிடிச்சு..
யெஸ்.. தூங்கி விட்டேன்..
இந்த முறை முன்னாடி ரெண்டு முறை உள்ள ‘நங்’கையும் ‘நச்’சையும் சேர்த்து ஒரு ‘நங்ச்’ன்னு இடிச்சா எப்படி இருக்கும்..
எவ்வளவு தான் பொறுப்பார் மனுஷன்..
“யோவ் நீயெல்லாம்.. எதுக்குய்யா பஸ்ஸ எடுக்குறே.. இப்படி தூங்குற ஆளு கார்ல வேன்ல போவ வேண்டியது தானே..” என்று காட்டமாய் கத்தினார்.
முன்னாடி சீட்டிலிருந்து ஒரு குரல், ‘ம்.. போருமே.. அதுக்கு (எதுக்கு..? காருக்கும் வேனுக்கும்..) நீம்பரா காசு கொடுப்பீயோம்..’ என்று
பக்கத்துல ஒக்காந்திருந்தவர் ‘அது யார்டா அது?’ என்று முழிக்க நான் சொன்னேன்..
அது என் சொந்தக்காரர் தான்



